Friday, December 18, 2009

360. WHY I AM NOT A MUSLIM ... 2

*


ஏனைய பதிவுகள்:


*


Chapter I

THE RUSHDIE AFFAIR

*
14 பிப். 1989-க்கு முன்னால் ..

1280-ல் பாக்தாத்தில் ஒரு யூத மருத்துவரும் தத்துவஞானியுமான Ibn Kammuna என்பவர் எழுதிய Examinations of the Three Faiths என்ற நூலில் மூன்று யூத மதங்களைப் பற்றி எழுதியவர் முகமது நபியை எவ்வாறாக ஒரு தூதராகக் கொள்வது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவரை தீயில் எரிக்கப்பட வேண்டும் என்று எமிர் ஒரு தீர்ப்பளிக்க, ஆனால் அவர் எப்படியோ அந்த தண்டனையிலிருந்து தப்பி விட்டார். (4)

இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நாம் நிறைய காண முடியும்.

1961-63-ல் இந்திய தூதுவராக இருந்த அமெரிக்கர் John Kenneth Galbraith தன் செல்ல பூனைக்கு 'அஹமது' என்று பெயரிட்டு வைத்திருந்தார். அதுவும் முகமதின் மற்றொரு பெயர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வந்த Deccan Herald 'முகமது என்ற முட்டாள்' என்று ஒரு சிறுகதை எழுத, அதனால் அந்த தினசரி அலுவலகம் எரிக்கப் பட்டது. 'சமீபத்தில்' ஷார்ஜாவில் 'The Ants That Eat Corpses' என்ற மலையாள நாடகம் முகமது பற்றிய வசனம் வந்ததால் அதை நடத்தியவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

Daniel Pipes என்பவர் எழுதிய The Rushdie Affair என்ற நூலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் - இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் நேர்ந்தவைகள் - கொடுக்கப்பட்டுள்ளன.(4)

*

359. இப்படி ஒருவர் ...

எனக்கு வந்த மெயில் ஒன்று. என் ஆச்சரியத்தை, மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.

-----------------------------

Came across nice article.
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
------------------------------------------------------------------------------
?ui=2&view=att&th=1256765dae601cbc&attid=0.1&disp=attd&realattid=ii_1256765dae601cbc&zw
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

Sunday, December 13, 2009

358. நீயா .. நானா ..?

*

வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 – 10 என்பதற்குப் பதிலாக 9 – 10.45 என்று நீண்டாலும் தொடர்ந்து பார்க்க என்னை இறுத்தியது. மிக நன்றாக இருந்த ஒரு நிகழ்ச்சி.

கல்விக் கடனுக்கு அலைந்த மாணவர்கள் ஒரு புறம்; கல்விக்கடன் தரும் வங்கி அதிகாரிகள் என்று ஒரு புறம். நான் முதல் இருபது நிமிடங்கள் பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் மாணவர்கள் தங்கள் சோகங்களைக் கொட்டித் தீர்த்திருப்பார்கள் போலும். மாணவர்கள் என்ன பேசினார்களோ தெரியவில்லை; ஆனால் நான் பார்க்கும்போது பேசிய வங்கி அதிகாரிகள் யாரும் உருப்படியாகப் பேசியதாகத் தெரியவில்லை.

மிக ஏழைக்குடும்பத்து மாணவி தன் பொறியியல் படிப்புக்குக் கடன் கிடைக்காத சோகத்தைச் சொல்லும்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். தனக்கு கடன் கிடைக்காததைப் பற்றிப் பேசும்போது ஒரு வங்கி அதிகாரி சட்டென்று, நாளைக்கே இந்த பெண்ணுக்குக் கடன் தருகிறேன் என்று சொன்ன பிறகு, அந்தக் குழந்தை அழுது பேசியது மனதைத் தொட்டது. நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் அந்த வங்கி அதிகாரிக்கு ஒரு தொலைப்பெட்டி பரிசளித்த போது நிச்சயமாக அவர் அந்த தொலைப்பெட்டியைக்கூட அந்த பெண்ணுக்கே கொடுத்து விடுவார் என்று நினைத்தேன். மனுஷன் அதையும் தாண்டி விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை தன் வங்கி மூலம் ஏதாவது ஒரு அநாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பிற்கு கொடுக்கப் போவதாகக் கூறினார். நன்றாக இருந்தது. அந்த அதிகாரிக்கு என் வணக்கங்கள்.

அதேபோல் பாலுமகேந்திரா என்ற மாணவனுக்கும் 4 லட்ச ரூபாய் கடன் தொகையை அனுமதித்தார் இன்னொரு வங்கி அதிகார். ஒரு break முடிந்து வந்ததும் கோபிநாத் அந்த மாணவன் ஏதோ சொல்ல விரும்புவதாகக் கூறி அழைத்தார். அந்த மாணவன் தான் கடனுக்காக அலைந்து கிடைக்காமல் போனதால் இவ்வருட படிப்பு படிக்க முடியாது போயிற்று. அந்தக் கடனை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு ஏழை மாணவனுக்கு அவர் பரிந்துரைக்க வங்கி அதிகாரி அந்தப் புதிய மாணவனுக்குக் கடனைத் தர சம்மதித்தார். தனக்கு வந்த கடனை அடுத்த மாணவனுக்கு – அந்த மாணவனை இந்த நிகழ்ச்சியில்தான் முதலில் சந்தித்துள்ளான்; break சமயத்தில் வேறு எந்த ஏழை மாணவனுக்கு உதவி தேவை என்று கேட்டறிந்து, அதன்பின் தனக்குக் கிடைத்ததை அடுத்த மாணவனுக்குத் தந்த அந்த மாணவன் … simply great!
He humbled me.


முக்கிய விருந்தாளியாக வந்ததில் மாணவர்கள் தரப்பில் பேசிய ஒரு வழக்குரைஞர் பேசியது கொஞ்சமேயாயினும் மிகத் தெளிவாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவர் கருத்துக்கு வங்கி அதிகாரிகளோ மற்ற விருந்தினரோ பதில் கொடுக்க முடியாதபடி தன் கருத்தைத் தந்த அந்தப் பெண்மணியும் பாராட்டப் பட வேண்டியவரே.

கோபிநாத் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளில் பல எனக்குப் பிடிக்கும். இன்று கோபிநாத் was on the top! Hats off to him. Emotional ஆன விஷயங்களை மிக ஆழமாக மனதில் பதியும்படி பேசி இந்த நிகழ்ச்சியை மிக அழகாகக் கையாண்டார். நிச்சயமாக இதை வங்கி அதிகாரிகள் பார்த்திருந்தால் சென்ற சில மாதங்களில் அவர்கள் மறுத்த சில கல்விக் கடன் பத்திரங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

வாழ்க .. வளர்க .. நீயா .. நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

விஜய் டிவிக்கும் என் வாழ்த்துக்கள்.



*

*

Wednesday, December 09, 2009

357. WHY I AM NOT A MUSLIM ... 1

*

ஏனைய பதிவுகள்:

*







*

WHY I AM NOT A MUSLIM

நூலாசிரியர்: IBN WARRAQ
PROMETHEUS BOOKS
59. John Glenn Drive
Amherst,
New York

1995




*
R. JOSEPH HOFFMANN
WESTMINISTER COLLEGE, OXFORD
என்பவர் எழுதிய முன்னுரையிலிருந்து ....


*

இந்த நூல் ஒரு நீண்ட பயணம் பற்றியது; அந்தப் பயணம், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து அதன் நம்பிக்கைகளில் ஊறி, அதன்பின் ஒரு சிலரால் 'வெள்ளைக்காரத்தனம்' என்று சொல்லப்படும் மேற்கத்திய 'திறந்த மதம்' என்ற அமைப்பில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையால் பிறந்த ஐயங்களின் ஊடே பயணித்து, இறுதியில் மத மறுப்பு என்னும் புள்ளியைப் பெற்ற பயணம்.

*
இது போன்ற பயணங்கள் எல்லாமே மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பயணங்களே!

*
இந்த 'மதப் பயணங்களில்' செல்பவர்கள் தாங்கள் சொல்வதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு தன்னைச் செவி மடுப்பதாகவும், புரிந்து கொள்வதாகவும் நம்புகிறார்கள்.



*
DEDICATION

மதப் பாசிஸத்தையும் மீறி
நான் பெற்ற
என் தாய், மனைவி, சகோதரி, என் மகள்கள்
அவர்களுக்காக ...

*

ஆசிரியரின்
முன்னுரையிலிருந்து ...


*

இன்று தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன்.


356. AMERICAN COLLEGE CELEBRATES CENTENARY

College celebrates centenary D. Karthikeyan


American College plans a light-and-sound show to mark celebration
— Photo: G. Moorthy

Standing tall: The main building of The American College.


MADURAI: Education is the key to unlock the golden door of freedom- George Washington Carver

Fin de siècle to the close of 19th century and start of 20th century saw the emergence of missionary education spreading across the wider parts of erstwhile Madras Presidency taking education to the unreached spaces.

One such defining moment was the establishment of The American College, in Madurai, started initially as ‘Pasumalai College’ in the year 1881 at Pasumalai.

Rev. Zumbro who had his formal education at University of Michigan, Columbia and Yale, made a proposal in the year 1903 to the Missionary bound in the United States to shift the college to Madurai.

New vision

The idea behind this shifting was to give a new vision to Christian higher education.

By this, Rev. Zumbro meant that education should be made available to the common man despite divisions based on caste, creed and religion, said Joseph Chinnaraj Jaikumar, Principal, The American College.

Rev. Zumbro envisaged that once Christian education goes public, people of Madurai would acquire a character which would be beneficial for the city in the long term.

In his words, “Madurai should grow with American College and American College should grow with Madurai.”

The century old American College main building symbolizes this slogan as it was this grandiose structure built by adopting the Indo Saracenic style rather than Gothic or Victorian that signified the arrival of modernity in Madurai.

Mr. Chinnaraj Jaikumar, said that this synthesis of Indo Aryan style also represents secularism as it possesses the minarets and arches of Islamic structure, corridors of Hindu temple and the grandness of gothic style.

Construction

The construction of the building was started in the year 1905 and was completed in 1909.

The main hall of the building was indeed a central element in the major intellectual shift that took place then in the form of public lectures to the citizens of the city.

Eminent literary scholars and international figures like Rabindranath Tagore, French Premiere Georges Clemenceau visited the college and delivered lectures in the hall.

In fact, Tagore gave public lectures in the year 1919 and collected Rs. 2,365 out of which he took Rs.2, 000 for Visva Bharati, Shantiniketan and gave Rs.365 for starting an endowment in American College.

The building was constructed by Henry Irving, who built the Mysore Palace and the then Principal G. T. Washburn was influential in getting funds from the U.S.

The building to the surprise of people of this generation was constructed at a cost of Rs.52, 000, said Mr. Chinnaraj Jaikumar.

The College will be holding a ‘light and sound’ show to mark the centenary celebration.

Mr. Chinnaraj who has done a good amount of research on Rev. Zumbro’s contribution to higher education is to come out with a book aiming to highlight his contributions to the dissemination of knowledge in this part of the world.

Citizens of Madurai owe a great deal of respect and gratitude for Rev. Zumbro who was instrumental in spreading inclusive education based on science.

Zumbropuram

Apart from his contributions in the field of education, Rev. Zumbro was a socially conscious individual who saw the resettlement of palm tree workers and the place was now remembered by his name Zumbropuram.

© Copyright 2000 - 2009 The Hindu

Thursday, December 03, 2009

355. 2 + 2 = ???????