Thursday, June 26, 2014

768. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 4






*

அசோகரின் கல்வெட்டுகளில் நாம் காணக்கூடிய சில ஆச்சரியங்கள் .....

தன்னை ஒறுத்து, தன் பழம் வழிகளிலிருந்து முற்றிலும் மாறி தன் மக்களுக்கு முன் தானே ஒரு முன் மாதிரியாகி நிற்கும் மன்னனின்  ஓர் அரசாணை….

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி எழுதிய தர்ம அரசாணைஎன் நாட்டில் எந்த உயிரினமும் கொல்லப்படவோ, பலி கொடுக்கப் படவோ கூடாது.
முன்பெல்லாம் கடவுள்களின் அன்பிற்குரிய பியாதாசின் அடுப்பங்கரையில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் உணவிற்காகக் கொல்லப்பட்டனஆனால் இந்த அரசாணை எழுதப்படும் போது மூன்றே மூன்று மிருகங்கள் - இரண்டு மயில்களும், ஒரு மானும் மட்டுமே - கொல்லப்படுகின்றனமான் தினமும் கொல்லப்படுவதில்லைகாலப்போக்கில் இந்த மூன்று உயிர்களும் கூட கொல்லப்படாது.

----------------------


நம் நாட்டுக் கலாச்சாரத்தில் தொன்மையான பொருட்களுக்கு எந்த வித தனி மரியாதையையும் நாமோ, நம் அரசுகளோ கொடுப்பதில்லை என்பது ஆகி வந்த ஒரு விதி. இங்கே நம் நாட்டின் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் தடயம் யாருக்கும் தெரியாமல் “காணாமல் போய்விட்டது” என்ற உண்மை நம்மைச் சுடுகிறது; வெட்கப்பட வைக்கிறது.

1892ல் டாக்டர் வில்லியம் ஹோயி  வடக்கு பீகாரில் உள்ள கோரக்பூர் பகுதியின் கமிஷனராக இருந்து வந்தார்ரப்தி நதி அருகில் பல மண் மூடிப் போன திண்டுகளை அவர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் சோஹ்கவுரா  என்ற கிராமத்திலிருந்து ஒரு வயதான பெரியவரிடம் பேசியுள்ளார்அப்பெரியவர் ஒரு சின்ன தாமிரத் தகடு ஒன்றினை இந்த ஆற்றுப் படுகையில் கண்டெடுத்ததாகவும், அதனை அங்கிருந்த ஜமீன்தாரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து அந்த ஜமீன்தாரின் மகன் ஹோயியின் அலுவலகத்திற்கே வந்து அந்தத் தகட்டினை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்.

 அந்த சோஹ்கவுரா தகடு" தாமிரத்தால் ஆனதல்ல, பித்தளையால் செய்யப்பட்ட தகடுபித்தளை என்பதே ஆச்சரியத்திற்குரிய ஒன்று. அத்தகடுஇஞ்ச் நீளத்திலும் 1’ 3/4  இஞ்ச் அகலத்திலும் இருந்தது. தகடு மிகவும் நல்ல நிலையில் இருந்தது. அதையும் விட அந்தகட்டில் இருந்த எழுத்துகளும், குறியீடுகளும் மிகவும் சிறப்பான, சீரான புடைப்பு எழுத்துகளோடு இருந்தன.


 அசோகரது ப்ராமி எழுத்துகளில் நான்கு வரிகளில் எழுத்துகள் இருந்தன. அதற்குமேல் முதல் வரிசையில் ஏழு குறியீடுகள் இருந்தன. இரண்டு வேறு வேறு வகைச் செடிகள், சுற்றுச் சுவடுக்குள் தூண்களோடும், கூரைகளோடும்  மூன்று மாடிக் கட்டிடங்கள், இரண்டு ஈட்டி போன்ற ஓர் ஆயுதம், உலக உருண்டையும், அதன் மேல் காளைபோன்ற உருவமும், நடுவில் பிரமிட் போன்ற ஸ்தூபியும், மூன்று அரைவட்டக் கூம்புகளும், அதற்குமேல் ஒரு கொம்பு வைத்த நிலவும் இருந்தனஅந்த இரு கட்டிடங்களைத் தவிர ஏனைய குறியீடுகள் பழைய நாணயங்களின் புடைப்புகளில் பார்க்க முடியும்.

 ஹோயி, ஸ்மித் இருவரும் இணைந்து வங்காள ஆசியக் கழகத்தின் பதிவுகளில் சோஹ்கவுரா பித்தளைத் தகடு பற்றிய தங்கள் ஆய்வுகளைப் பதிப்பித்தார்கள். ஆனால் அவர்கள் அத்தகடு மௌரியன் காலத்துத் தகடு என்பதை மட்டுமே உறுதியாகக் கூறினார்கள்அதற்கு மேல் எந்த விவரமும் தர இயலவில்லை.

ஆனாலும் அந்தத் தகட்டில் உள்ள எழுத்துக்களைப் புகைப்படம் எடுத்து, பேராசிரியர் புஹ்லெருக்கு அனுப்பினார்அவர் தகட்டில் உள்ள எழுத்துகள் ப்ரகிரிதி எழுத்துகள் என்றும், மேலும் அதில் உள்ள செய்திகளின் பொருளும் கூறினார். இத்தகடு ஸ்ரவஸ்தியில் உள்ள சமய அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு அது.  ’வம்சகிரஹா என்ற இடத்தில் உள்ள இரு கிட்டங்கிகளில் தானியங்கள், பருப்புகள், உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், விரைந்து அவர்கள் தேவைகளைத் தாமதமின்றி அனுப்ப வேண்டும்என்ற ஆணை அதுவாசகங்கள் புரிந்து கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு விட்டாலும், முதல் வரிசையில் உள்ள குறியீடுகள் பற்றிய விளக்கங்கள்அன்றும் தெரியவில்லை;  இன்றும் தெரியவில்லை.

 சோஹ்கவுரா தகடுகள் ஒரு புதிய, பெருமைக்குரிய சான்று. வெறும் படங்கள் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொண்ட நம் முன்னோர் முதல் முறையாக எழுத்துகள் மூலம் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றார்கள் என்பதற்கான சான்றாக இது இருந்தது.   
       
  சோஹ்கவுரா பித்தளைத் தகடும், மஹாஸ்தான கல்தகடும் ஒரே காலத்திய ஆவணங்கள்இரண்டுமே மௌரிய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவைஇவை அக்காலத்திய சிறப்பான ஆட்சி முறைக்குச் சான்றுகளாக நிற்கின்றனஆட்சிமுறையின் தகவல் மாற்றங்களுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு

டாக்டர் கோயி சோஹ்கவுரா தகட்டினை வங்காள ஆசிய ஆய்வுக் கழகத்திடம் ஒப்படைத்தார். ஆய்வுக்கழகத்தில் அப்போதிருந்த நிலையில் பொருட்கள் முறையாகப் பேணப்படாமல் இருந்தனஇந்த வரலாற்று முக்கியமான சான்றும், சில ஆண்டுகள் கழித்து காணாமல் போய் விட்டதாகச் சொல்லப்பட்டது. ஒரு வேளை இன்னும் பல ஆண்டுகள் கழித்து அத்தகடு, ஆய்வுக்கழகத்தின் தலைமைச் செயலகம்  கல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் உள்ள கட்டிடத்தின் உள்ன ஏதோ ஒரு பழைய அலமாரிக்குள் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்படலாம்! ஆயினும் தற்போது காணாமல் போய்விட்டது என்று சொல்லப்படுவது மிகவும் பெரிய சோகத்திற்குரியதுஏனெனில் முதன் முதல் இந்திய வரலாற்றில் இது போன்ற பித்தளைத் தகடு அதுவரை மட்டுமல்ல, இன்று வரை வேறெங்கும் கண்டெடுக்கப்பட்டதேயில்லை என்ற உண்மை சோகத்தைப் பெரிதாக்குகிறது


___________________


’Living together’ என்பது இன்று நமக்கு மிகவும் புதியதானது. இன்னமும் இதற்கு சமுதாய சம்மதம் கிடைக்கவில்லை. ஆயினும் இந்தப் ‘புரட்சிகர’ செயலை இரண்டாயிரத்திச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பே அசோகர் தன் வாழ்நாளில் கடைப்பிடித்துள்ளார் என்பது இன்னொரு பெரிய வரலாற்று ஆச்சரியம்.


ஒரு கல்வெட்டு பங்குரேரியா என்ற ஒரு சின்னகிராமத்தில் கிடைத்ததுஇது நர்மதா நதியின் வடக்குக் கரையில் உள்ளதுஏறத்தாழ எண்ணூறு மைல் நீளத்திற்கு இந்தியாவின் அகலமான நடுப்பகுதியில் மேற்கு நோக்கி ஓடுகிறதுநாட்டின் குறுக்கே இப்படி ஓடுவதால் இந்நதி இந்தியாவை வட இந்தியா, தென்னிந்தியா என்று இரு பகுதிகளாகப் பிரிக்கின்றதுஇந்நதி ஒரு பள்ளத்தாக்கில் பாய்ந்து செல்கிறதுஇதன் வடக்கே விந்திய மலைத் தொடரும்,தெற்கே சாத்புரா மலைத்தொடர்களும் உள்ளன. பங்குரேரியா கிராமம் இப்பள்ளத்தாக்கில் உள்ளதுஒரு புறம் நதிக்கரை; இன்னொரு புறம் விந்திய மலைத் தொடரிலிருந்து தனித்து நீட்டிக் கொண்டுவரும் ஒரு மலை என்ற இரண்டிற்கும் நடுவில் நிற்கிறது இக்கிராமம்.  இம்மலைத் தொடரில் பல இயற்கைக் குகைகள், மலைக் குடியிருப்புகள் உள்ளனநாக்பூர் பகுதியின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் குழுவினர் மிகப் பழங்காலத்து  மக்கள் குடியேற்றத்திற்கான சான்றுகளை இந்த மலையில் தேடிவரும்போது இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தனர்.

  இக்குழுவினர் பங்குரேரியாவின் அருகில் பள்ளத்தாக்கிற்குள் சரிந்து நிற்கும் மலைத்தொடர் இருக்கும் பகுதியில் ஒன்பது சிறிய ஸ்தூபிகளைக் கண்டனர்இந்த ஒன்பதில் மிகப் பெரிய ஸ்தூபி இருப்பதிலேயே உயரமான ஸ்தூபியாகவும் இருந்ததுஇதன் உச்சிக்கு மேலே ஒரு கல்லால் ஆன குடியிருப்பு ஒன்று இருந்ததுஇப்பகுதியில்தான் அக்கல்வெட்டு இருந்ததுஇக்கல்வெட்டு  MRE - சிறு மலைக் கல்வெட்டு - சீரில்லாமல் பொறிக்கப்பட்டிருந்ததுஇக்கல்வெட்டின் ஆரம்ப வரிகள் வாசிக்கக் கூடியவைகளாக இல்லைஆயினும் முடிந்த அளவு வாசிக்கப் படும்போது அது  MREs -களில் இருக்கும் வழக்கமான வரிகளாக இல்லை. அதற்குப் பதிலாக சம்வா என்ற இளவரசருக்கு  அசோகர் எழுதியது போன்ற வரிகளாக அவை இருந்தனசம்வா என்ற சொல் சமஸ்கிருதத்தில் உடன் செல்பவன் அல்லது நட்பு கொண்டவன்என்ற பொருள் கொண்டதுஇந்த இளவரசர் அசோகரின் மகன்தானா என்பது ஆய்வுக்குட்பட்ட ஒன்று. ஏனெனில் இப் பெயர் வேறெங்கும் இதுவரை காணப்படவில்லைஇருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்குபோது இம்மலைக் குடியேற்றத்தில் புத்தக் குருமடம் ஒன்று இளவரசர் சம்வாவின் தலைமையின் கீழ் இயங்கி வந்துள்ளதுஇந்தக் குருமடத்தில் இருந்த சந்நியாசிகள் தனித்தனி அறைகளில் தங்காமல், முதலில் இருந்த வழக்கம் போல், இம்மலையின் பொதுவான இடங்களைத் தூங்குவதற்குப் பயன்படுத்தினர்.   இந்தக் குகைக் குடியிருப்பிற்கு அருகில், அதன் இடதுபக்கம் இன்னொரு குகைக் குடித்தன இடம் இருந்ததுஇது அதே தாழ்ந்த பாறையில் இருந்தது. இக்குகையின் வாயிலருகே பாறையின் முகப்பில் மிகப் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தனஇந்த எழுத்துக்கள் வழக்கமாக உளி, சுத்தியலால் கொத்தப்பட்டு எழுதப்படாமல், அதற்குப் பதிலாக மிகவும் செப்பனின்றி எழுதப்பட்டிருந்தன. எழுத்தைச் செதுக்கியவர் வெறும் உளியை, ஒரு குச்சியின் உச்சியில் செருகிக் கொண்டு எழுத்துக்களை முரட்டுத்தனமாகக் கொத்தி எழுதியதுபோல் இருந்ததுஇதில் இருந்த வாசகங்கள் மற்ற கல்வெட்டுகளில் உள்ளவைபோல் திருத்தமாக எழுதப்பட்டவை அல்லஆயினும் ஆட்சி செலுத்தும் மன்னரின் உத்தரவின் பேரில் எழுதப்பட்டது அதுஎழுத்தியலில் மிகவும் பெயர் வாங்கிய பேராசிரியர் ஹாரி ஃபாலிக் இந்த வாசகங்களை மொழி பெயர்த்துள்ளார்.
         
  ப்யாதாசி நாமா
    ராஜகுமாரா வா
    சம்வாசிமானே
            இமாம் தேசம் பாபுனித
            விகார(யா) அத்தய்(யி)

ஃபால்க்கின் மொழிபெயர்ப்பில் . . . .

   ”மன்னன் (பட்டமளிப்புக்குப் பின்) ப்யாதாசி என்றழைக்கப்படுகிறார்.அவர்  (முன்பு) இந்த இடத்திற்கு ஒரு மகிழ்ச்சி சுற்றுலாவில் ஓர் இளவரசனாக வந்திருந்தார்அவரோடு திருமணம் ஆகாமல்  உடன் வாழ்ந்த பெண்ணுடன் வந்திருந்தார்”.

 பங்குரேரியா விந்திய மலைத் தொடரிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் தொலைவில் உள்ளதுபுத்த புனித இடங்களும், சாஞ்சியும் இருக்கும் மாவட்டம் இதுதான்இது தான் அசோகரின் முதல் மனைவி பிறந்த இடம். பங்குரேரியாவில் இருந்த செப்பனில்லாத சாதாரணக் குறிப்புகள் தன் வாலிபப் பருவத்தில் வருகை தந்த இடங்களைத் தன் ஆட்சிகாலத்தில் பேரரசர் மீண்டும் வந்தபோது அவரின் ஆணையின் பேரில் பொறிக்கப்பட்ட வாசகங்களே அவை. உஜ்ஜயினின் அரசு அதிகாரியாக, தன் தோழியோடு இளம்வயதில் வந்து பார்த்த இடங்களே இவைஇந்த தோழி அவர் மனைவியாக ஆகி, அசோகரின் மூத்த மகனும், மகளுமான மஹிந்தா, சங்கமித்ராவைப் பெற்றெடுத்தார்

மலையில் இருந்த அந்தச் சாதாரணக் கல்வெட்டு தனி மனிதன் ஒருவனின் மனிதத் தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதுஅது வெறுமனே மனதைத் தொடும் கல்வெட்டு மட்டுமல்லஒரு பெரும் மன்னன் தன் உயர் நிலையிலிருந்து கீழிறங்கி, சாதாரணன் போல் தன்னை உணர்ந்து, வாழ்ந்த நேரம் அது.














*


Monday, June 23, 2014

767. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 3






*

மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே என் முழு நேரத் தொழில் என்று ஒரு மன்னன் பறை சாற்றுவது மிகவும் அதிசயமான விஷயமே. அதனை எப்படி சாத்தியப்படுத்து என்பதையும் அதன் வழி முறைகளையும் வகுத்தது அவனது முழு ஈடுபாட்டையே காண்பிக்கிறது.

மக்களைக் காப்பாற்றுவது என்று சொல்வதே ஒரு அரசனின் பெரும் மாண்பு என்கிறோம். ஆனால் அசோகர் அதையும் தாண்டி தன் நாட்டிலுள்ள விலங்குகளின் மீதும் இத்தனை கரிசனம் கொள்வது, அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவனுக்கு ஏற்பட்ட முனைப்பு இன்றும் ஆச்சரியான விஷயமே!

என் நாட்டு மக்களுக்கு சேவை செய்வேன் என்பதை விட அருகிலுள்ள பக்கத்து நாட்டு மக்களின் ந்லனையும் ஏற்றுக் கொள்வது பெரும் ஆச்சரியமே.

அத்தனை காலத்திற்கு முன்பே மருந்துச் செடிகள் வைத்துப் பேணுவதும் அவைகளை நாடெங்கிலும் பரப்பி மக்கள் நலனுக்கு முனைந்த அவனது ஆர்வம் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகும்,

*****

மக்களின் மன்னன் ……

கடவுளின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு கூறுகிறார்:

முன்பு அரசியல் விவகாரங்கள் பகிரப்படவில்லைஅரசனிடம் எந்த நேரத்திலும் அறிக்கைகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது நான் இந்த ஆணையை அறிவிக்கிறேன்எந்த நேரமாயினும், நான் உணவு உண்டு கொண்டிருக்கும்போதோ, அந்தப் புரத்தில் இருக்கும்போதோ, படுக்கையறையில் இருக்கும்போதோ, ரதத்திலோ பல்லக்கிலோ, தோட்டத்திலோ இருக்கும்போதோ, எங்கே நான் இருந்தாலும் எந்த செய்தியும் எனக்கு உடனே தரும்படி அதிகாரிகளை நியமித்து மக்களின் நிலைமை எனக்கு உடனே வரும்படியும், நான்  எங்கிருந்தாலும் உடனே ஆவன செய்யவும் முடியும்

எப்போது நான் கொடுக்கும் நன்கொடையோ, பொது அறிவிப்புகளோ அல்லது எப்போது எந்த அவசரவேலையும் மஹாமத்திரர்கள் மேல் சுமத்தப்படும்போது ஏதேனும் அதிருப்தியோ, வாக்குவாதமோ ஏற்பட்டால் அது உடனே எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்இதற்காகவே நான் ஆணையிட்டிருக்கிறேன்எந்த வேலையையும் உடனே முடிக்கவும், என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வதிலும் எனக்கு எப்போதுமே திருப்திவராது.  

உண்மையிலேயே, எல்லோரின் நலனுமே எனது கடமை, இதற்காக என்னை வருத்திக் கொள்வதிலும், வேலைகளை உடனே முடிக்கவும் தவறமாட்டேன்மக்களின் நலனை மேம்படுத்துவதைத் தவிர வேறு எந்த வேலையும் பெரிதல்லநான் எடுக்கும் முயற்சிகள் எதுவாயினும் அவை எல்லோருக்கும் வாழக்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரவும், எல்லோரையும்  சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதுமே என் கடமையாகத் தானிருக்கும்.

            ஆகவே இந்தக் கல்வெட்டு ஆணை நிலைத்து நிற்க இங்கு எழுதப்படுகிறதுஎனது மகன்களும், பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் இதை மக்களின் நலனுக்காக நிலை நிறுத்தவே இந்த ஆணை. ஆயினும்  இவைகளை பெரும் முயற்சியோடு மட்டுமே செய்யமுடியும்.


*****

                  மக்களை மட்டுமல்ல மாக்களையும் காப்பாற்றிய மன்னன்                                                                                                                                                                 கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பியாதாசி இவ்வாறு பேசுகிறார்:                                                                                                                                                                     எனது பட்டமளிப்பிற்குப் பிறகு இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்த பிறகு  பல விலங்குகள் பாதுகாக்கப்படவேண்டுமென்று ஆணையிடப்பட்டதுகிளி, மைனா , அருணா, சிகப்பு வாத்து, நாட்டுவாத்து, நந்திமுக்கா, ஜெலாட்டா, வவ்வால், பெண் எறும்பு, நன்னீர் ஆமை, எலும்பில்லா மீன், வேதராயக்கா கங்காபுபுதாகா, சங்கியா மீன், ஆமை, முள்ளம்பன்றி, அணில், மான், காளைமாடு, ஓகபிந்தா, காட்டுக்கழுதை, காட்டுப் புறா, மாடப்புறா, உண்ணமுடியாத, பயன்படுத்த முடியாத நான்கு கால் விலங்குகள்  இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள்குட்டியிட்டு பால்கொடுக்கும் ஆடுகள், பெண் பன்றிகள், அதேபோல் ஆறு மாதம் தாண்டாத குட்டிகள் பாதுகாக்கப்பட்டவை. சேவல்களின் ஆண்மை மாற்றப்படக்கூடாதுஉயிரினங்களை மூடி நிற்கும் உமி எரிக்கப்படக் கூடாதுகாடுகளில் மரங்கள் காரணமின்றியோ, அல்லது காட்டுப் பிராணிகளைக் கொல்லவோ, எரிக்கவோ கூடாது. மிருக இனத்தின் உணவிற்காக மாற்று உயிர் கொல்லப்படக் கூடாது. மூன்று காட்டூர்பாசிகள் சமயத்திலும் (மழைக்காலம்) மூன்று திசாக்களிலும் பதினான்காம் பதினைந்தாம் உபோசத்துகளில் மீன்கள் கொல்லப்படவோ விற்கப்படவோ கூடாதுஇதே நாட்களில் யானையும், மீன்களும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் அவைகள் கொல்லப்படாமல் காக்கப்பட வேண்டும்ஒவ்வொரு பதினான்கு நாட்களில் எட்டாவது நாளும், மற்றும் பதினான்காவது பதினைந்தாவது திகா, புனர்வாசு மூன்று கட்டுர்மாசிகளும் மற்ற நல்ல நாட்களிலும், காளை மாடுகளை விதையடி செய்யக்கூடாதுஅதேபோல் வழக்கமாக விதையடி செய்யப்படும் ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்கினங்களும் விதையடிக்கப்படக் கூடாது.   திசா நாட்கள் புனர்வாசு, காட்டுர்மாசிஸிக் நாட்களில் குதிரையும் காளைகளும் குறியிடப்படக்  கூடாது.                                                                                                                                                                                                                          கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி சொல்கிறார்சாலைகளில் அரச மரங்களை நட்டு மக்களுக்கும விலங்குகளுக்கும் நிழல் கிடைக்கும்படி செய்துள்ளேன்இவைகளோடு மாமரங்களையும் நட்டு வளர்த்துள்ளேன். எட்டு குரோசாவிற்கு ஒரு முறை கிணறுகள் வெட்டி பயணிகள் தங்குமிடங்கள் கட்டி, மேலும் பல இடங்களில் மனிதர்க்கும், விலங்குகளுக்கும் நீர்த் தொட்டிகள் அமைத்துள்ளேன்ஆனால் இவையெல்லாம் மிகச் சின்ன விஷயங்கள். மக்களை மகிழ்ச்சிப்படுத்த முந்திய மன்னர்கள் பலரும் இதைச் செய்துள்ளனர்ஆனால் மக்கள் தர்மத்தைக் கடைப்படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இச்செயல்களைச் செய்துள்ளேன்


 HERBAL GARDEN

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசியின் நாட்டிலும், எல்லையைத் தாண்டியுள்ள சோழர்கள், பாண்டியர்கள், சத்தியப் புத்திரர்கள், கேரளா புத்திரர்கள் போன்ற மக்களும், தாமிரபரணி பகுதியும், கிரேக்க மன்னன் அன்டியோக்கஸ் அரசாளும் மக்களும், அன்டியோக்கஸிற்கு அருகிலுள்ள மன்னர்களின் மக்களும் கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி தரும் இரு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்குமான மருத்துவம் தரப்படுகிறதுஎங்கெங்கு மனிதர்களும் விலங்குகளுக்கும் தேவையான மருத்துவச்  செடிகள் இல்லையோ அவை அங்கே தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். எங்கெங்கு மருத்துவ வேர்களும், பழங்களும் கிடைக்கவில்லையோ அவைகளும் தருவிக்கப்பட்டு வளர்க்கப்படும். மனிதர்க்கும் விலங்குகளுக்கும் உதவ சாலைகள் தோறும் பல கிணறுகளை வெட்டி, மரங்கள் வைத்துள்ளோம்.   







*

766. FIFA 14 - அய்யா ... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ... !










*
ரஷ்யா  -   பெல்ஜியம்

இரண்டு நாடுகளும் ஆட ஆரம்பித்தன. எந்த நாட்டை நாம் தூக்கிப் பிடிக்கலாம் என்று யோசித்தேன். இந்த யோசனை பல நாடுகள் விளையாடும்போது வருவது தான். அது என்னமோ தெரியவில்லை .. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விடும்.

அட ..ப்ரேசில்லா ... ’நம்ம’ பீலே நாடாச்சே .. இப்படி ஒரு அன்பு வந்து விடும். இந்த நாட்டிற்குத்தான் எப்போதும் முதலிடம். 
சரியா .. தப்பா..? தெரியாது!

அட அர்ஜென்டினாவா?  இது நம்ம குண்டு மரடோனா நாடாச்சே. இப்படி ஒரு அன்பு வந்து விடும். இந்த நாட்டிற்குத்தான் எப்போதும் இரண்டாமிடம். 
சரியா .. தப்பா..? தெரியாது!

மூன்றே மூன்று அணிகள் - ஜப்பான், கொரியா, ஈரான். நம்ம ‘திசை’யைச் சேர்ந்த நாடுகளா? இதில் ஒரு பாசம் வந்து விடுகிறது.
சரியா .. தப்பா..? தெரியாது!

எந்த நாட்டு அணியில் கருப்புக் கலர் அதிகமோ ... அவங்க மேலேயும் ஒரு ’இது’ வந்துருது.
சரியா .. தப்பா..? தெரியாது!

ரஷ்யா - பெல்ஜியம்  ஒரு காலத்தில் கம்யூ. நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசாகி விட்டதே என்று ரஷ்யா பற்றி எண்ணியதுண்டு. இப்போது அது இல்லை. பெல்ஜியம் - நிறைய கருப்புக் கலர் கண்ணில் பட்டது. அதைவிட ஒரிஜி - பெல்ஜியத்திற்கு கோல் அடித்த ’சின்னப் பையன்’ substitute ஆக இருந்து மைதானத்திற்குள் நுழையும் போது பார்த்ததுமே குழந்தைப் பையனைப் பார்த்ததும் பிடித்தது. hair style-ம் வித்தியாசமாக இருந்தது.அதோடு பெல்ஜியம் நம்ம புகைப்பட நண்பர் ஒச்சப்பன் என்ற HENK -ன் ஊராச்சே அப்டின்னும் ஒரு நினைப்பு. அதனால் பெல்ஜியம் நம்ம கட்சியானது.
இது சரியா .. தப்பா..? தெரியாது!

யோவ்! அப்ப நீ விளையாடுற விளையாட்டை வைத்து ஏதாவது ஒரு டீமை தூக்கிப் பிடிக்காமல், இது மாதிரி சின்னச் சின்ன காரணங்களுக்காக - தோலின் நிறம், எந்த திசைக்காரன். நண்பன் இருக்கும் ஊர் ... இப்படி காரணங்களுக்காகவா ஒரு நாட்டை விரும்புவது. அவங்க விளையாடுற விளையாட்டை வைத்து மதிப்பீடு செய்வதில்லையா?  -- இப்படி நீங்கள் கேட்டால் ‘ஙே’ என்று தான் முழிக்க வேண்டும்; இல்லையானால் இன்னொரு பதில் சொல்லிக் கொள்ளலாம்.

உலகக் கோப்பைக்கு வர்ர அளவிற்கு விளையாட்டுத் திறன் உள்ள நாடுகள் தான் வருகின்றன. ஆகவே எல்லா நாடுகளும் நன்றாகவே விளையாடுகிறார்கள். முதல் ஆட்டத்தில் கூட நம்ம ப்ரேசில் விளையடினாலும் க்ரோஷியா முதல் கால் மணி நேரம் நன்றாக ஆடியதால் அந்தக் கட்சியைத்தான் பிடித்தது. அதே போல் அர்ஜென்டினா - .Bosnia and Herzegovina ஆட்டத்தில் சின்ன நாடு தான் பிடிச்சிது. இது மாதிரி ஆட்டம் பார்த்தும் ‘சைடு’ எடுக்கலாம். அந்த மாதிரி காரணம் இல்லைன்னா மேற்சொன்ன காரணங்களில் ஏதாவது ஒன்றைப் பிடிச்சுக்க வேண்டியது தான்
இது சரியா .. தப்பா..? தெரியாது!

சரி... பெல்ஜியம் ஆட்டம் ரஷ்யாவை விட நன்றாகவே இருந்தது. ஆனாலும் ரஷ்யா அடித்த ஒரு கோல் விழாமல் போஸ்ட்டில் பட்டுப் போனது பாவம் தான். ஆயினும் நிறைய முயற்சிகள் பெல்ஜியத்திடமிருந்து வந்தன. அதில் சின்னப் பையன் ஒரிஜி அழகான ஒரு பந்தை வாங்கி, அழகாக கோலுக்குள் தட்டினான். ரஷ்யா ஆட்டம் முடிந்தது.

*****

அய்யா ... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ... !


நிறைய கேள்விகள் இருக்கு. ஒண்ணிரண்டு இப்போ ...

ஆட்ட வீரர்களை மாற்றும் போது அரைக் கடிகாரம் மாதிரி ஒன்று - புதிய டிசைன் - காண்பிக்கிறார்கள். அதில் வெளியே / உள்ளே வர வேண்டியவர்களின் எண்களைக் காண்பிக்கிறார்கள்.

இதில் வரும் எண்கள் எந்த ஆட்டக் குழுவினருக்கானது என்று எப்படி கண்டு பிடிப்பது? அக்’கடிகாரத்தில்’ எவ்வித பெயரும் இருப்பதில்லை. பின் எப்படி வீர்ர்களும், நடுவர்களும் அதனைக் கண்டு பிடிப்பார்கள்?


அடுத்து ...
அந்த போர்டின் தலைப்பில் 12 என்ற எண்ணும் அதற்கு முன்னும் பின்னும் கடிகாரத்தில் இருப்பது போல் (11 & 1)  எண்கள் உள்ளன. அவை வெறும் அழகிற்குத்தானே?


 *

Sunday, June 22, 2014

765. FIFA 14 - ARGENTINA - IRAN





*




 நேற்று இந்துவில் மெஸ்ஸியின் நேர்காணல். அதில் ஒரு கேள்வி: இறுதிப் பந்தயத்தில் அர்ஜென்டினா - ப்ரேசில் வந்தால் எப்படி இருக்கும்? கேள்வி நன்றாகத்தான் இருந்தது. அந்த இரு நாடுகளும் மோதினால் கால் பந்து ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாகத்தான் இருக்கும். A dream competition!!

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாதது போல் மெஸ்ஸி நேற்று இரவு விளையாடினார். அவரும் சரி, அவரது அணியும் ஏன் இப்படி ஆடினார்கள் என்று தெரியவில்லை. இந்த நேர்காணலைப் படித்த பின், இன்று சனிக்கிழமை - வார இறுதி நாள் - ஆகவே நல்ல இரு அணிகள் மோதும் என்று நினைத்து பட்டியலைப் பார்த்தேன். அர்ஜென்டினா - ஈரான் என்று பார்த்ததும் அடடா .. ஒரு பெரிய அணியும் சின்ன அணியும் அல்லவா மோதுகிறது; ஈரானுக்கு பல கோல்கள் அடித்து அர்ஜென்டினா வெல்லுமே என்று நினைத்தேன். ஆகவே ஆட்டம் அப்படியா பெரிதாக இருந்து விடப் போகிறது என்று நினைத்தேன்.

ஆனால் அர்ஜென்டினா இப்படியா விளையாடும்? இன்னும் ஈரானுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அந்த அணி வென்றிருந்திருக்கும். மெஸ்ஸி கோல் பக்கம் நிறைய அடித்தார். அனைத்தும் கோலிலிருந்து மைல் கணக்கில் தள்ளி அடித்து முழக்கினார். ஆனால் ஈரான் நன்று தற்காத்துக் கொண்டது. அதிலும் இரண்டாம் பகுதியில் 55வது நிமிடத்திலிருந்து 80வது நிமிடம் வரை ஈராக் அடித்த சில நல்ல பந்துகள் கோலாகாமல் போய் விட்டன.

அர்ஜென்டினா மேல் வந்த எரிச்சலில் ஈரான் ஒரு கோலாவது போட்டுவிடக் கூடாதா என்று ஆசைப்பட்டேன். என்ன நேரமோ... அர்ஜென்டினா பிழைத்தது. காலம் போன காலத்தில் என்பது போல் 91வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் போட்டு அணிக்கு வெற்றியளித்தார்.

 ஆனால் நேற்று விளையாடியது போல் விளையாடினால் அர்ஜென்டினா பாடு ரொம்பவே கஷ்டம் தான்.






764. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 2




*

 நமக்குத் தெரிந்த வரையில் பெரும் மன்னர்களின் வரலாற்றில் வெற்றி முழக்கங்களைக் கேட்டு வந்துள்ளோம். ஆனால் பெற்ற ஒரு பெரும் வெற்றிக்குப் பின் ஒரு மன்னன் எவ்வாறு அந்த வெற்றியைப் பெற்றோம் என்று நினைத்துப் பார்த்ததையோ, அப்படிப் பார்க்கும் போது அவன் மனம் வெம்பி வேதனையடைந்ததையோ நாம் பார்த்திருக்க முடியாது. அசோகர் மட்டுமே வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரே மனிதராக, நெடிதுயர்ந்த உயர்ந்த மனிதராக, நின்று கொண்டிருக்கிறார். தன் வெற்றியினால் தான் அனுபவித்த மனத் துயரங்களைக் கல்லிலே செதுக்கி வைத்து வரலாற்று ஏடுகளில் ஒரு புதுமையான பக்கம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார். 

அம்மன்னனின் சில ஏடுகள் இங்கே சான்றாக ….. 


 கலிங்க வெற்றிக்குப் பிறகு கடவுள்களின் அன்பிற்குரிய மன்னனுக்கு தர்மத்தின் மீது பெரும் ஈர்ப்பு வந்தது. 

 உண்மையிலேயே, கடவுளின் அன்பிற்குரியவர், கொல்லப்பட்டமைக்காக மிக வேதனையடைகிறார். தோல்வி காணாத ஒரு நாட்டை வெற்றி பெற்று அதனால் பலர் இறந்ததும், இடம் மாறியதும் வேதனையளிப்பவை. ஆனால் இதையெல்லாம் விட பிராமணர்களும், துறவிகளும், நாட்டில் வாழும் பல சமயத்தினரும், மரியாதைக்குரிய பெரியவர்களும், தாய்,தந்தை, பெரும் மூத்தவர்களும், நன்னடத்தை உடையோரும், நண்பர்களோடு மிகுந்த நாணயம் கொண்டோரும், துணைவர்களும், உறவினர்களும் பணியாளர்களும், உதவியாளர்களும் கடும் காயம் பட்டதாலும், கொல்லப்பட்டதாலும், தங்கள் வாழுமிடங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டதாலும் கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பெரும் வேதனையடைந்தார். 

இவ்வாறு நேரடியாகத் துன்பம் பெறாதவர்கள் கூட தங்கள் நண்பர்கள், துணைவர்கள், உறவினர்கள் படும் துன்பங்களால் வேதனையடைவார்கள். இதுபோன்ற துன்பங்கள் நடந்த போரினால் விளைந்தது என்பதை அறியும்போது கடவுள்களின் அன்பிற்குரிய மன்னர் பெரும் வேதனையடைகிறார். 

******

 எல்லோரும் என் குழந்தைகளே. என் குழந்தைகளுக்கு நான் என்ன விரும்புகிறேனோ அவர்களின் நலமும் மகிழ்ச்சியும் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறு வாழ்விலும் வேண்டியது போல் எல்லோருக்கும் அவை கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். 

எனது இந்த ஆசை எவ்வளவு பெரியதென்று உங்களுக்குத் தெரியாது, அப்படியே யாருக்கும் தெரிந்திருந்தாலும் என் ஆசையின் தீவிரமும் முழுமையும் உயிர்களுக்குப் புரியாது. 

******

தர்மம்


கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு பேசுகிறார்:  

தர்மம் மிக மிக நல்லது. ஆனால் தர்மம் என்பது என்னஅதில் சிறிது தீமைநிறைய நல்லவைகள்அன்புதாராளம்உண்மைபுனிதம் உள்ளன.  நான் பல வெகுமதிகளைப் பல வழிகளில் தந்துள்ளேன்.  இரண்டு கால் பிராணிகள்நான்கு கால் பிராணிகள்பறவைகள்நீர்வாழ் பிராணிகள் அனைத்துக்கும் இந்த வாழ்க்கையின் வெகுமதிகளைத் தந்துள்ளேன்.  மேலும் பல நல்ல செயல்களைச் செய்துள்ளேன்.

இப்போது கடவுள்களின் அன்பிற்குரியவர் தனது வெற்றிகளிலேயே தர்மம் தன்னை ஆட்கொண்டதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறார்.  தர்மம் தன்னை வெற்றிகொண்டது தன் நாடாகிய இங்கு மட்டுமல்ல,  நாட்டின் எல்லைகளைத் தாண்டிஅறுநூறு யோஜன தூரத்தையும் தாண்டிகிரேக்க மன்னர் அன்டியோக்கஸ் ஆளும் நாடுஅந்த நாட்டையும் தாண்டி தாலமிஅன்டிகோனாஸ்மஹாஸ்அலெக்சாண்டர் என்ற நான்கு மன்னர்கள் ஆளும் நாடுகள்மேலும் தெற்குப் பகுதியில் சோழர்கள்பாண்டியர்கள் மேலும் தாம்பிரபரணி நதி வரையுள்ள நாடுகள் போன்ற எல்லைகள் வரை நீண்டது.  ஆகவே அரசனின் நாடும் கிரேக்கர்கள்சம்போஜகர்கள்நபக்கர்கள்நபா பம்கித்தவர்கள்போஜகர்கள்பித்நிக்கர்கள்ஆந்திரக்காரர்கள்பாளிதாக்கரர்கள் என்ற இடமெட்டும் கடவுள்களின் அன்பிற்குரியவர் போதித்த தர்மமே மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.  கடவுள்களின் அன்பிற்குரியவரின் தூதர்கள் இன்னும் செல்லாத இடங்களிலுள்ள மக்களும்தர்மத்தினைப்பற்றிக் கேள்விப்பட்டும்கடவுள்களின் அன்பிற்குரியவர் கொடுத்த கட்டளைகளையும்போதனைகளையும் கேட்டு அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்இனிமேலும் தொடர்ந்து அதே போல் வாழ்ந்து வருவார்கள்.  இந்த வெற்றி எங்கும் பரவிவிட்டது

*****

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி கூறுகிறார்எல்லா சமயங்களும் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்.  ஏனெனில் எல்லா சமயங்களும் சுயக் கட்டுப்பாடுதூய இதயம் இவைகளையே விரும்புகிறது.

*****

கடவுள்களின் அன்பிற்குரிய மன்னன் பியாதாசி இவ்வாறு கூறுகிறார்:   

தர்மத்தினைப் போன்ற வெகுமதி வேறெந்த வெகுமதியும் இல்லை.  தர்மத்தினைப் போன்ற அறிமுகம் போல் வேறொன்றும் அறிமுகமல்லபகிர்வதற்கு தர்மத்தினைப் போல் வெறெதுவும் பகிர்வதற்கில்லைஉறவுகளில் தர்மத்தைப் போல் வேறொரு உறவுமில்லை


எந்தத் தவறு செய்தவரையும் எப்போதெல்லாம் மன்னிக்க முடியுமோ அப்போதெல்லாம் மன்னிக்க வேண்டும்.





*

Saturday, June 21, 2014

763. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 1





*


 நான் மொழி பெயர்த்துள்ள அசோகரின் வரலாற்று நூலைப் பற்றி எனக்கு ஏதும் தெரிவதற்கு முன்பே இன்னொரு புதினத்தை வாசிக்கும் போது அந்த நாவலில் அசோகரைப் பற்றிய சில செய்திகளைப் படித்த போது மிக ஆச்சரியமாக இருந்தது. அவர் சொல்லிச் சென்ற சில உண்மைகள், இன்று நான் பதிவுகளில் மதங்களைப் பற்றி எழுதும் போது, எதிர்த்துக் குமுறும் சில மதத் தீவிரவாதிகளை நோக்கி அசோகரே சொல்வது போல் சில வாசகங்கள் இருந்தன.

அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அவர் சொன்னது இன்றும் அப்படியே இன்றுள்ள மதத் தீவிரவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் மிக மிகப் பொருத்தமாக இருப்பது கண்டு வியந்தேன்.

 கண்ணதாசன் பாவமன்னிப்பு என்ற படத்திற்காக எழுதிய பாடலில் சில வரிகள் நினைவுக்கு வந்தன.
  மனிதன் மாறி விட்டான் 
 மதத்தில் ஏறி விட்டான்

 அவன் இதிலிருந்து இறங்க மாட்டான் என்பது போல்தான் தெரிகிறது; இது அன்றே அசோகருக்கும் தெரிந்தது தான் விந்தையிலும் விந்தை.

அந்த விந்தையைக் கண்டதும், அந்த புனைவை வாசித்ததும் வலைப்பூ வாசகர்களுக்காக அசோகரது வார்த்தைகளை ஆறு ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் ஏற்றினேன். அசோகரது வரலாற்று நூலை வாசித்ததும் அவரது இன்னும் பல அறிவுரைகள் அற்றைய நாளுக்கு மட்டுமின்றி இன்றைக்கும் மிகப் பொருளுள்ளதாகவும், பொருத்தமுள்ளதாகவும் இருப்பது அறிந்து ஆச்சரியம்.

அதில் சில ஆச்சரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 கீழேயுள்ள பதிவு ஒரு மீள் பதிவு:


SATURDAY, NOVEMBER 22, 2008


283. நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல்

*

*
நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல் ... அசோகச் சக்கரவர்த்தியிடமிருந்து,


The House of Blue Mangoes நூலை எழுதி, அந்த முதல் புத்தகத்திலேயே புகழ் பெற்ற David Davidar எழுதிய THE SOLITUDE OF EMPERORS புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அவரது முதல் புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசித்துவிட்டு அப்படியே விட்டு விட்டேன். ஆனால் இது நம் இப்போதைய நாட்டு நடப்போடு, அதுவும் அரசியல் - மதங்கள் என்பவைகளோடு தொடர்புள்ளது என்று பின்னட்டையில் இருந்ததைப் பார்த்து, ஆஹா, நம்ம விஷயமாச்சேன்னு எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை.

நவீனம்தான்; ஆனால் தன்மையில் தன் சுயசரிதை போல் எழுதியிருப்பதால் உண்மையிலேயே அவரது வாழ்க்கைச் சரிதம் தானோ என்றுதான் நினைத்தேன். அந்த அளவு இயற்கையாக விறு விறுப்புடன் ஒரு personal touch-ஓடு நன்றாக இருந்தது. நான் அந்தக் கதையையெல்லாம் இங்கே சொல்லப்போவதில்லை. மூன்று பேரரசர்கள் - அசோகர், பாபர்,காந்தி - இம்மூவர்களின் வாழ்க்கையில் சில பகுதிகளை நம் சிந்தனைக்குத் தருகிறார். அதில் அசோகர் பற்றியுள்ள பகுதி எனக்குப் பிடித்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.


அசோகப் பேரரசர்

அவருடைய காலத்தில் உலகத்திலேயே பெரும் பேரரசை ஆண்டிருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் மிகவும் குறைவே. 1837ல் ஜேம்ஸ் ப்ரின்செப் (James Prinsep) என்ற ஆங்கிலேயர் ப்ராமி((Brahmi) எழுத்துக்களைப் பற்றிய தன் ஆராய்ச்சியின் நடுவே பியா பியதாசி (Piya Piyadassi) (கடவுளுக்கு மிகப் பிரியமானவன்) என்ற ஒரு அரசரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற அதிலிருந்து அசோகரைப் பற்றிய முழு வரலாற்றுச் சித்திரம் உருவாக ஆரம்பித்தது.

மெளரிய பரம்பரையின் மூன்றாவது அரசனான அசோகன் (290 -232 B.C.)சண்டாள அசோகன் என்று அழைக்கப்படுமளவிற்கு பல கொடுமைகளைச் செய்ததாக அறியப்படுகிறார். நம்ம சிவாஜி நடித்த சாம்ராட் அசோகன் பார்த்திருப்பீர்களே, அதே போலவே கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்ற பின் புத்த பிக்குவால் மனம் மாறி 'அன்பே மகா சக்தி' என்பதைப் புரிந்து இனி வாழ்நாளில் வாளெடுக்க மாட்டேன் என்று சூளுரைத்து, மக்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்று பிரகடனப்படுத்தி சண்டாள அசோகன் என்றிருந்தவர் தர்ம அசோகர் என்றாகினார். புத்த மதத்தைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட அசோகர் கல்வெட்டுக்களில் சமயங்கள் சார்ந்த தன் கருத்துக்களைப் பதிந்துள்ளார். அது எப்போதைக்கும் அதிலும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும் / எல்லா சமயத்தினருக்கும் பொருத்தமானதாக இருப்பதால் அதை உங்களுக்குத் தர விரும்பினேன். இதோ …

கடவுளுக்கு மிகப் பிடித்தமானவனான ப்யாதாசி மதிப்பது …. எல்லா சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதே.

இந்த வளர்ச்சியை பல வழிகளில் செய்ய முடியும்; ஆனாலும் அப்படி செய்யும்போது ஒவ்வொருவரும் தங்கள் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும். விமர்சனங்கள் உண்டென்றாலும் அவைகளை மென்மையாக அந்த மதத்தினர் வருந்தாத அளவு செய்தல் வேண்டும். ஆனால் அதை விடவும் மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் மதத்தின் மேல் மற்றவருக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இல்லாவிடில் உங்கள் மதம் அடுத்தவர் மதம் என இரண்டுக்குமே நீங்கள் கேடு விளைவிக்கிறீர்கள்.

தங்கள் மதத்தின் மேல் உள்ள அளப்பரிய ஈடுபாட்டால் தன் மதத்தை உயர்த்திப் பிடித்து, ‘என் மதத்தை மகிமைப் படுத்த வேண்டும்’ என்ற நினைப்பில் அடுத்த மதங்களைச் சாடும்போது நீங்கள் உங்கள் மதங்களுக்கே கேடு விளைவிக்கிறீர்கள்.  மதங்களுக்குள் சீரான, ஆரோக்கியமான உறவு தேவை. அடுத்த மதத்தினரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காதுகொடுத்துக் கேட்கும் மனமும், அவைகளுக்கு மனமார்ந்த மரியாதை அளிக்கும் மாண்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

மக்கள் எல்லோரும் தங்களின் மாற்று மதங்களின் அடிப்படைக் கொள்கைகளையும், அறிவுரைகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதே ப்யாதாசியின் விருப்பம்.




*












 *



762. "பேரரசன் அசோகன் " மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு




ஈரோடு புத்தக கண்காட்சி சிறப்பு வெளியீடு:

கால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு ...
இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்...

"பேரரசன் அசோகன் "
மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு 


சார்ல்ஸ் ஆலென்

தமிழில் : தருமி

அட்டை வடிவமைப்பு : சந்தோஷ்

பக்கம் : 484

விலை : 400











Friday, June 20, 2014

761. மெளன வசந்தம் - ஒரு நூலாய்வு








*



 நண்பரும், பேராசிரியருமான முனைவர் வின்சென்ட் அவர்களால் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட, ரெய்ச்சல் கார்சன் என்பவரால் எழுதப்பட்ட SILENT SPRING என்ற நூலைப் பற்றி 'தினமணி’ யில் வந்த ஆய்வுக் கட்டுரை.





 *




Thursday, June 19, 2014

760. பொறி பறந்தது …







*


  NEDERLAND 3 - 2 AUSTRALIA 



 இது விளையாட்டு … என்ன வேகம் .. என்ன தீர்மானம் … பார்க்கவே மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு வினாடியும் எந்த மந்திரம் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு. விளையாட்டின் தீவிரம் ஒவ்வொருவரையும் கட்டி வைத்தது. சென்ற உலகக் கோப்பையில் எனக்குப் பிடித்த ஆட்டக்காரர் ராபன் என்ற நெதர்லாந்துக்காரர் தான். இந்த வருடமும் அவரோ, அல்லது அவரோடு உடன் விளையாடும் பெர்ஸியோ அதே போல் வந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன் முதல் கோலைப் போட்டார். அதிலிருந்து சரியாக இரண்டே நிமிடங்களில் ஆஸ்த்ரேலியா மறு கோலைப் போட்டு சமன் செய்தது. ஏகவே மிக வேகமாக இருந்த விளையாட்டின் தீவிரம் இன்னும் அதிகரித்தது. முதல் பகுதி ஆட்டம் முடிந்தது.

இரண்டாவது பகுதி ஆரம்பித்த பின் ஆஸ்த்ரேலியாவிற்கு hand ballக்காக ஒரு பெனல்டி கிடைத்தது. ஆசி தலைவர் அடித்த பந்து ஆசியின் இரண்டாவது கோலாக ஆனது. . அழுத்தம் அதிகமானது, அடுத்த எட்டாவது நிமிடத்தில் நெதர்லாந்து பதிலளித்தது. இந்த கோலை பெர்ஸி அடித்தார்.

இந்த சமன்நிலை சிறிது நேரமே இருந்தது. அடுத்த கோலும் நெதர்லாந்து அடுத்த பத்து நிமிடத்திற்குள் போட்டு 3-2 என்றானது. மீதி நேரமும் யார் கோல் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் அளவிற்கு பந்து அங்குமிங்கும் என்று இரு பக்கமும் பறந்தது. ஆயினும் இந்த கோல் கணக்கிலேயே ஆட்டம் இறுதிக்கு வந்தது.

நடுவரின் தீர்ப்பும் மிகவும் சரியாக இருந்தது.

ஆயினும் பெர்ஸி இரு மஞ்சள் கார்டுகள் வாங்கியதால் அடுத்த ஆட்டம் அவர் ஆட முடியாது. நெதர்லாந்து இன்னும் நீண்ட தூரம் இப்போட்டியில் கலந்திருக்கும் என்பது வெகு நிச்சயம்.



 மூன்று வினாடி முத்தம்
 (தலைப்புக்காக சுஜாதாவிற்கு நன்றி) 


எப்படி எட்டி எட்டிப் பார்த்தாலும் தொலைக் காட்சியில் பார்வையாளர்கள் மிஞ்சிப் போனால் மூன்று வினாடிகள் வர முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் எங்த வித்தியாசமும் இல்லாமல் பார்வையாளர்கள் தாங்கள் தொலைக்காட்சியில் தெரிகிறோம் என்றதும் என்ன மகிழ்ச்சி. எட்டி எட்டிப் பார்த்து தங்கள் முகம் ஒளிக்காட்சியில் அந்தச் சின்ன மூன்று வினாடிகள் விழ எவ்வளவு ஆரவம் காட்டுகிறார்கள்!


 நம்ம ஊரிலும் செய்தித் தொகுப்பில் இது போல் தலைகாட்டும் மக்களை நிறைய பார்க்கலாம். அதுவும் ஏதாவது ஒரு கோர்ட் சம்பந்தமான விஷயத்தை ஒரு பெரிய வக்கீல் சொல்லும் போது, பக்கத்திலிருக்கும் சின்ன வக்கீல்கள் எட்டிப்பார்ப்பதைப் பார்க்கும் போது நிறைய வேடிக்கையாக இருக்கும்.




 *

Wednesday, June 18, 2014

759. FIFA 14 - BRASIL - MEXICO






*


  BRASIL 0 - 0 MEXICO 

*


முதல் ஆட்டத்திலேயே ஒன்றைப் புதிதாகப் பார்த்தேன். வழக்கமாக foul shot கொடுக்கும் போது நடுவர் தடுப்புச் சுவராக நிற்பவர்களைச் சரியான தூரத்தில் நிற்க வைத்துத் திரும்புவார். அவர் முதுகைக் காண்பித்ததும் தடுப்புச் சுவரில் நிற்பவர்கள் சில அடிகள் முன்னே எடுத்து வைத்து விடுவார்கள். பிறகு மீண்டும் அவர்களை ஒழுங்கு படுத்த வேண்டும். இதற்குள் பந்தடிப்பவர்கள் பந்தை சிறிது முன்னோக்கி நகர்த்தி விடுவார்கள்.  கால்பந்து ‘சேஷ்டை’களில் இதுவும் ஒன்று.

இந்த முறை முதல் தடவை பார்க்கும் போது நடுவர் இடுப்பிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து தடுப்பு சுவர்க்காரகள் முன்னால் வெள்ளையாக ஒருகோடு போட்டார். வீரர்கள் அங்கேயே நின்றாக வேண்டியதாயிற்று. அட நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று நினைத்தேன். கோலப்பொடி மாதிரி போட்டதும் ஆட்கள் ஒழுங்காக நிற்க வேண்டியதிருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் கோலப்பொடி அங்கே இருந்தால் குழப்பமாகி விடாதா என்று நினைத்தேன். ஆனால் கோலப்பொடி கொஞ்ச நேரத்தில் காணாமல் போய் விட்டது! என்ன மாயம் என்று நினைத்தேன். பிறகு பார்த்த போது தான் அது கோலப்பொடி இல்லை .. shaving cream என்று தெரிந்தது. இந்த மாதிரி நல்ல ஒரு ஐடியா வருவதற்கு ஏன் இத்தனை காலம் ஆனது என்று அடுத்த ஒரு கேள்வி வந்தது.

பிரேசில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விளையாட்டில் விளையாடியது போல் விளையாடக் கூடாது.முனைப்பு அதிகம் தேவை. விளையாட்டில் தொய்வு அதிகமாக இருந்தது. இரு அணிகளுமே முனைந்து விளையாடியும் பயன் ஏதும் இல்லை.  இரு அணிகளுமே கோலை நோக்கி அடித்த அடிகள் நிறைய. ஆனால் பயன் ஏதுமில்லை; அதுவும் இரு அணிகளுமே அடித்த கோல் ஷாட்கள் எப்படி என்றே தெரியவில்லை ... சரியாக கோலி மீது ப்ந்து அடித்து திரும்பி வந்தன. அது கோலியின் திறமையா... இல்லை .. அவர்களின் நல்ல நேரமா என்று தெரியவில்லை. அடிக்கடி பந்து விரைந்து அவர்களின் உடம்பில் அடித்து மீண்டும் விளையாட்டுத் தளத்திற்குள் போய் விடும். இப்படி பல தடவை இரு தரப்பிலும் நடந்தது. நெய்மரின் விளையாட்டு முதல் போட்டியில் பார்த்த அளவு தரத்தில் இல்லை. இன்னும் மெருகேற வேண்டும்.

மெக்ஸிகோவின் கோச் ஒரு நல்ல comic relief மாதிரி இருந்தார். ஒரு ஹாலிவுட் காமெடி நடிகர் மாதிரி இருந்தார். அவரது உடல் மொழியும் வேடிக்கையாக இருந்தது, அது ஒன்று தான் விடிய விடிய பார்த்த விளையாட்டில் இருந்த ஒரு நல்ல அம்சம்!




*



 *


Tuesday, June 17, 2014

758. FIFA 14 .... ARGENTINA - BOSNIA AND HERZEGOVINA





*

Argentina   2 : 1  Bosnia and Herzegovina



*

இத்துனூண்டு நாடு. மக்கள் தொகை எங்க மதுரையை விட கொஞ்சம் பெரிது. ஆனா என்ன போடு போடுது ...!

*

அர்ஜெண்டினா விளையாடுதுன்னா உடனே பாத்திற வேண்டியது தானேன்னு உட்கார்ந்தேன். எதிரி நாடு பற்றி ஒன்றும் தெரியாது.சின்ன நாடுன்னு நினச்சு உட்கார்ந்தால், கடுகு சிறுசு; காரம் பெருசு அப்டின்ற மாதிரி இருந்தது. என்னை அறியாமலே ஆட்டம் நடக்க நடக்க நான் அந்த நாட்டின் அனுதாபியாக மாறியிருந்தேன்!

விளையாட்டு ஆரம்பத்திலேயே மெஸ்ஸி அடித்த பந்தைக் காப்பதில் நடந்த குழப்பத்தில் ரோஜோ என்ற போஸ்னிய வீரரின் கால்பட்டு சேம் சைட் கோல் ஒன்று போஸ்னியாவிற்கு விழுந்தது. அது என்ன இந்த உலகக் கோப்பையில் சேம் சைட் கோல் நிறைய விழுகிறதே என்று நினைத்துக் கொண்டேன். இந்த கோலினாலோ என்னவோ போஸ்னியா மிகத் தீவிரமாக விளையாடியது.

ஆட்டத்தின் இறுதியில் ball possession இரு நாடுகளுக்கும் நடுவில் 60-40 என்று இருந்ததாகப் போட்டிருந்தது. அர்ஜெண்டினா 60% என்றால் போஸ்னியா 40%. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் நிச்சயமாக இது அப்படியே மாறி இருந்திருக்க வேண்டும்; அப்பாதியில் பந்து அர்ஜெண்டினாவின் கோல் பக்கமே இருந்தது. விளையாட்டும் தீவிரமாக இருந்தது.

65வது நிமிடத்தில் மெஸ்ஸி தன் பக்கம் இருந்த பந்தை எடுத்து நேரே ஒரு கோல் அடித்தார். அதன் பின் ஆட்டம் இரு பக்கமும் மாறி மாறி நடந்தன. அர்ஜெண்டினா தீவிரமாக விளையாடியும் பயனின்றி, விளையாட்டு முடியும் நேரத்தில் போஸ்னியா ஒரு கோல் போட்டது. 

2 : 1 என்ற கணக்கில் போஸ்னியா தோற்றது. என்றாலும் அது அடுத்து தன் குழுவில் உள்ள ஈராக், நைஜீரியாவுடன் மோதுவதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை விதைத்துள்ளது.


*
போஸ்னியா பற்றி சில விவரங்கள்: 

area  51,197 km2  ;    
population 3,871,643 ... அட ... எங்க மதுரையை விட இரண்டரை மடங்கு அதிகம் (madruai - 1,462,420)!!!

 Bordered by Croatia to the north, west and south, Serbia to the east, The Ottomans brought Islam to the region. 48%
After World War II, the country was granted full republic status in a newly formed Yugoslav Federation.

Today, the country maintains high literacy, life expectancy and education levels and is one of the most frequently visited countries in the region, It is projected to have the third highest tourism growth rate in the world between 1995 and 2020.

On 4 February 2014, the anti-government protests dubbed the Bosnian Spring, name taken from the Arab Spring


*


757. இரண்டாம் நாள் - SPAIN vs HOLLAND





*




 Spain 1–5 Netherlands 






 *
சென்ற உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம் வந்த இரு நாடுகளேச்சே ... அதனால் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். எதற்கும் இருக்கட்டுமென்று போன தடவை அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கு என்ன எழுதியிருப்போம் என்றும் பார்த்து வைத்தேன். இருவரும் அவ்வளவு சரியாக விளையாடாமலிருந்ததையும், நடுவர் ‘கண்டமேனிக்கு’ மஞ்சள் கார்டுகளை அள்ளி வீசியதையும் எழுதியிருந்தேன். 4 வருடத்திற்கு முன் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து கோப்பையை வென்றிருந்தது. ஆனால் இந்த வருஷம் .... ?

விளையாட்டு ஆரம்பித்தது. நெதர்லேந்தின் அணியின் வேகமே அதிகமாக இருந்தது. ஆனாலும் 27 வது நிமிடம் ஸ்பெயினுக்கு ஒரு பெனல்டி கிடைத்தது. போன தடவை இறுதி கோல் off-side கோல் மாதிரி தெரிந்தது என்று எழுதியிருந்தேன். இப்போது கிடைத்த பெனல்டியும் அது மாதிரியே இருந்தது. உண்மையில் பந்து கொண்டு வந்த ஸ்பெயின் வீரர் வழுக்கிக் கீழே விழுந்தது போல் தான் தெரிந்தது. ஆனால் நடுவர் பெளல் என்று விசில் கொடுத்து விட்டார். கோலும் நெதர்லாந்திற்கு விழுந்தது.

அதன்பின் நெதர்லாந்திற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. மின்னல்கள் பாய்ந்தன. நெதர்லாந்தின் கை ஓங்கியது. அதிலும் முதல் கோல் பெர்ஸ் மூலம் கிடைத்தது. எங்கிருந்தோ பறந்து வந்த பந்தை பெர்ஸியும் பறந்து போய் தலையால் மோதி கோலாக்கினார்.



அதே வேகத்தில் அடுத்தடுத்து கோல்கள் விழுந்தன. மொத்தம் 5 கோல்கள். நிச்சயமாக ஆட்டத்தின் இரண்டாம் பாகம் கட்டாயம் பார்க்க வேண்டிய விளையாட்டு. ஒவ்வொரு கோலும் ஒரு magic touch மாதிரி தான் இருந்தது. பெர்ஸி கணக்கில் இரண்டு கோல்; சென்ற கோப்பையில் நான் விரும்பிய ஆட்டக்காரர் ராபன் இரு கோல்.

பார்க்க வேண்டிய ஒரு ஆட்டம். பார்த்த திருப்தி எனக்கு ...

*

அதே நாளில் நடந்த வேறு ஆட்டங்களின் முடிவுகள்:

  Mexico 1–0 Cameroon

 -------------- 

 Chile 3–1 Australia 

------------- 

 Colombia 3–0 Greece

 ---------------- 



Friday, June 13, 2014

756. FIFA 14 - முதல் நாள்





*

எட்டு மணிக்கே ஆரம்பிக்கும்னு போட்டாங்களேன்னு அப்பவே பொட்டிக்கு முன்னால உக்காந்தாச்சு. ரெண்டு துரை மார்கள், அயல் நாட்டு உதைபந்து வீர்ர்கள் வந்தார்கள். ஜான் ஆப்ரஹாம் வந்து உக்காந்தார். நீள வாயோடு ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு. காட்சி நடத்துபவரும் உக்காந்து அஞ்சு பேரும் என்னமோ பேச ஆரம்பித்தார்கள். பிரேசிலில் உலகக் கோப்பையின் ஆரம்பக் காட்சி வருமேன்னு உக்காந்தேன். அது ஒண்ணையும் காணோம். துரைகளும், துரைச்சாணியும் இங்கிலிபீசில் பேசினார்களா ... ஒண்ணும் புரியலை.

நல்ல வேளை .. போன FIFA 10ன் கடைசி ஆட்டத்தைக் காண்பித்தார்கள். ஸ்பெயினும் நெதர்லேண்டும் ஆடுச்சி. நடு நடுவில வேறு சில காட்சிகள் அப்டின்னு ஒரு படம் மாதிரி ஓடுச்சி. நல்ல எடிட்டிங். கடைசியில் கோல் விழுந்தப்போ கோல் அடிச்ச இனியஸ்டா  கொஞ்சம் ஆப் சைட் மாதிரி நேத்து தோணுச்சு!



நடுவில பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பைக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றியும் சில செய்திகள். போட்ட எஸ்டிமேட்டை விட மிகப் பல மடங்கு செலவாயிருச்சாம். நினச்சேன் ... நம்ம ஊரு கல்மாதி மாதிரியான ஆளுகள் அங்கேயும் நிறைய இருப்பாங்க போல... ஆமா.. கல்மாதி என்ன ஆனாரு? அவரு அடிச்ச காசு அவரே வச்சுக்கிட்டாரோ ... அதையெல்லாம் அவர்ட்ட இருந்து புடுங்கவே மாட்டாங்களா? சேன்னு ஆகிப் போயிருது. அத்தனை கோடி.. இத்தனை கோடி அப்டிங்கிறாங்க... ஆனா யார்ட்ட இருந்தும் பைசா வசூல் கிடையாது போலும்.

அப்புறம் ஒரு வழியா 11 மணிக்கு ஆரம்பக் காட்சிகள் அப்டின்னு ஆரம்பிச்சாங்க. ஒண்ணும் நல்லா இல்லை. என்னமோ சின்னப் பிள்ளைங்கள வச்சு ஏதோ சின்னச் சின்ன வித்தை காண்பிச்சது மாதிரி இருந்தது. நல்லாவே இல்லை. சீக்கிரமும் முடிஞ்சிது. ஒரு பாட்டு போட்டங்க... போன உலகக் கோப்பை பாட்டு மாதிரி இல்லை. அதோடு பாடுறவங்க பாடுறாங்க... பார்வையாளர்கள் சத்தம் எல்லாம் சேர்ந்து ஒரே ‘இரைச்சல்’ தான். என்னடா ... நம்ம ஊர் கலாட்டா மாதிரி இருக்கேன்னு தோணுச்சு... சரி, பிரேசிலும் BRIC-ல் உள்ள நம்மளோடு சேர்ந்த நாடு தானேன்னு நினச்சுக்கிட்டேன்.

குட்டித் தூக்கம் போட்டுட்டு மறுபடி 1.30க்கு எழுந்தேன்.

பிரேசில்  -  க்ரோஷியா

முதல்  பத்து நிமிஷம் பார்த்ததும் என்னடா நம்ம ஆளுக -பிரேசில் - சரியா ஆடலைன்னு நினச்சேன். ஆனா பிரேசில் ஆளுக பூரா க்ரோஷியா இடத்தில் கோலைச் சுத்தி நிக்கிறாங்க. ஆனால் பந்தை பாஸ் பண்றது சரியா இல்லைன்னு தோணுச்சு. மக்கள் கொஞ்சம் இன்னும் ‘சூடாகணுமோ’ அப்டின்னு நினச்சேன். இந்தப் பத்து நிமிஷத்தில இரண்டு மூணு தடவை பந்து பிரேசில் பக்கம் வந்தது. மூணு தடவையுமே க்ரோஷியாவின் லெப்ட் விங்கர் பந்து கிடச்சதும் அம்பு மாதிரித ங்கள் கோலில் இருந்து பாய்ந்து   பிரேசில் கோயிலுக்கு வந்தார். அதிலும் ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் அப்படி வந்து ஓங்கி அடிச்சார். பிரேசில் கோலின் வலது பக்கம் அரையடி விலகிச் சென்றது.

பிரேசில் மேல கொஞ்சம் கோபத்தில் இருந்தேனா... அதுனால .. ‘அடடா... இது ஒரு கோலாக இருந்திருந்தா இனிமேலாவது பிரேசில் ஒழுங்கா விளையாட ஆரம்பித்து விடாதான்னு நினச்சேன். என்ன நினப்போ ...! பதினோராவது நிமிடத்தில் அதே மாதிரி லெப்ட் விங்கர் பாலை அடிச்சி, பிரேசில் கோல் கிட்ட கொஞ்சம் களேபரம். அதில் பிரேசிலின்  மொசில்லா காலைத் தட்டித் தாண்டி கோலுக்குள் விழுந்தது. நினச்சது மாதிரி அதன் பின் பிரேசில்லுக்கு இன்னும் கொஞ்சம் சூடு பிடித்தது.

பிரேசில் மேல் அப்படி என்ன ஆர்வமோ. இருந்தாலும் உலகக் கோப்பையில் பல தடவை கோபம் தான் வரும். ரொனால்டே பற்றி நிறையச் சொன்னாங்க. மொத்தம் மூணு தடவை உலகக் கோப்பையில் விளையாடினார். ரொம்ப எதிர்பார்ப்போடு நான் இருந்தப்போ அவர் விளையாட்டு நல்லா இல்லை. அதன்பின் ரோடின்ஹோ பிடிச்சிது. அதன் பின் வந்த உலகக் கோப்பையில் அவர் சோபிக்கவில்லை. நெய்மர் கதையும் அப்படி ஆகிவிடுமோன்னு  நினச்சேன். ஆனால் நெய்மர்  நன்றாகவே விளையாடினார். ஆனாலும் கோச் ஸ்கோலார் நெய்மர் மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்துள்ளார் போலும். கார்னர் ஷாட், பெளல் ஷாட், பெனல்டி ஷாட் என்று எல்லாமே நெய்மர் தான் அடித்தார். நேற்று ஒரே ஒரு கார்னர் ஷாட் மட்டும் வேறு ஒருவர். மற்றதெல்லாம் நெய்மர் என்று நினைக்கிறேன்.

பிரேசில் மூன்று கோல் போட்டு வென்றது. நெய்மர்,  பெனல்ட்டியில் நெய்மரின் இரண்டாவது கோல், ஆஸ்கர்.

இரண்டாவது நாளின் இரண்டாம் போட்டி - போன ஆண்டு பைனலில் மோதிய ஸ்பெயினும், நெதர்லேண்டும். ஆக அதைக் கட்டாயம் பார்க்கணும் இன்று.


*
இன்னொரு பெரிய சந்தேகம். க்ரோஷியா எங்க இருக்குன்னே தெரியாது. 
இந்த வருஷம் விளையாடுற ஒவ்வொரு நாட்டுப் படத்தை மட்டுமாவது  
பார்க்கவாவது செய்யணும்னு நினச்சிருந்தேன். இந்த நாட்டைப் பார்த்தா ...

        நம்ம தமிழ் நாடு மாநிலம்………………….. ஆனால் க்ரோஷியா ...


கி.மு. 500க்கும் முன்பே தமிழர்கள்  ……… நாட்டின் ஆரம்பம் – 7ம் நூற்றாண்டு
நமது மொழியோ ஒரு செம்மொழி…           நாட்டின் விடுதலை - June 1991
மக்கட்தொகை 7 கோடி ………………………  மக்கட்தொகை நாலே கால் கோடி, 
 130,058 சதுர கி.மீ.   ……………………….   56,594 சதுர கி.மீ.
(50216 சதுர மைல்)


என்ன சொல்ல வர்ரேன் தெரியுதா? இதில் இன்னொன்று கேள்விப்பட்டேன். பல ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து விளையாடும் அளவிற்கு வெப்ப நிலை ஆண்டிற்கு சில மாதங்கள் மட்டுமே. மற்ற நாளில் எங்கும் பனி. அந்த நாடுகளும் விளையாட்டில் உயர் நிலைக்கு
வந்திருக்கின்றன. ஒரே விளையாட்டு என்றில்லாமல் பல விளையாட்டிலும்  ஆர்வமும், தரமும் இருக்கு.

ஆனா .... நாம் மட்டும் ஏன் இப்படி?








இவங்களுக்கும் உலகக் கோப்பைக்கும் என்ன தொடர்பு? இங்கே வாசித்துக் கொள்ளுங்கள்!

இங்க என்னடான்னா ... தூக்கம் முழிச்சி தொலைக்காட்சி பார்க்கிறதுக்கே தங்ஸிடம் ரொம்ப வாங்கிக் கட்ட வேண்டியதிருக்கு... !