Sunday, September 28, 2014

789. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....






*
என் பழையபதிவொன்று ..........

TUESDAY, APRIL 26, 2005  

4.அரசியல் பற்றி... 


அரசியல் பற்றி எதுவுமே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கிறேன் - அது எதுக்கு? நாமளும் திருந்தப்போறதில்லை; நம்ம அரசியல்வாதிகளும் மாறப்போவதில்லை. பிறகு எதுக்கு அதைப்பற்றி எழுதிக்கிட்டு.

ஆனாலும், ஒரே ஒரு ஆசை. அது மட்டும் நடந்துவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும். ஒரு வீண் ஆசைதான்.

ஏதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது நமது "மதிப்பிற்குரிய" நீதித்துறையால் கொஞ்சமாவது தண்டிக்கப்படவேண்டும். 

நடக்கிற காரியமான்னு கேக்றீங்களா? எனக்கும் இது நடக்கப் போறதில்லைன்னு தெரியும்.

இருந்தும் ஒரு கனவுதான்.

 இது ஏங்க...?

=========================================================

 *
பதிவுலகிற்கு வந்ததும் நான் எழுதிய நான்காவது பதிவு இது.  கனவு சிறிதே பலித்திருக்கிறது.  ஆனாலும் எத்தனை நாளைக்கு இந்தக் கனவு இருக்குமென்பதே தெரியவில்லை. ஏதோ ஒரு நீதிபதிக்காவது இந்த அளவு மனசாட்சியும், தைரியமும், நேர்மையும் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

நிச்சயம் மேல் நீதி மன்றங்களில் உள்ள நீதிபதிகளுக்கு இத்தகைய நேர்மை இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் இரண்டு மாதிரிகள் தருகிறேன்  --

இரண்டு மாடி ஹோட்டல் ஒன்றை கொடைக்கானலில் உத்தரவின்றி முதலமைச்சரே கட்டுகிறார். ஒரு மாடியை இடிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னும் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று அடுத்த வழக்குப் போடும் “திறமை’ நம் அரசியல்வாதிகளுக்கு உண்டு.

டான்ஸி வழக்கு ஒரு open and shut case என்று சொல்லுமளவிற்கு ஆதாரங்களோடு இருந்த வழக்கு. மகா நீதிபதி ஒருவர் குற்றம் நடந்தது உண்மைதான். ஆனால் நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார். இப்படி  தீர்ப்பளிக்கும் ’வல்லமை’ ஒரு நீதிபதிக்கு இருந்தது என்பதை நினைக்கும் போது மயிர்க் கூச்செறிகிறது!!

இப்படிப்பட்ட நிலை  இருந்தும் டி குன்ஹா இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததும் மிகவும் அதிசயமான ஒன்று.

X  Y  Z என்று எல்லா அரசியல்வியாதிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் ஒரு தொழில்; ஒரு வியாபாரம் என்றாகிப் போனது. இன்னும் மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வருகிறோம் என்று சொல்பவர்களை எதை வைத்தும் ..... ம்ம் ... ம்.. அதெல்லாம் வேண்டாம்... ..என்ன செய்தாலும் தகும். இந்த நிலையில் Xக்குத் தண்டனை என்றால் முதலில் அதற்கு சந்தோஷப்பட வேண்டும். உடனே, ‘ஆஹா... Y,   Zக்குத் தண்டனை இல்லையா’? என்று கேட்பதை விட, ஆஹா...அடுத்து Y  Z க்கும் வந்து விடும் என்று எதிர்பார்ப்பதே மேல்; மகிழ்ச்சி. Y,  Zக்கு வராமல் Xக்கு வந்து விட்டதே என்று வருந்துவதை நமது பதிவர்கள் மத்தியில் பார்க்கும் போது  கொஞ்சம் வேடிக்கையாகவும். நிறைய வேதனையாகவும் உள்ளது.


எப்படியோ 2005ல் இருந்த ஒரு ஆசை இன்று சிறிதாவது நிறைவேறியதே என்ற மகிழ்ச்சி எனக்கு. இந்த மகிழ்ச்சி வாரக் கணக்கில் இருக்குமா ... மாதக் கணக்கில் இருக்குமா என்று தெரியவில்லை. மேல் கோர்ட்டுகள் எப்போதும் அரசியல்வியாதிகளின் பக்கம் தான். நிச்சயமாக செயலலிதாவின் மீதுள்ள அத்தனை தண்டனைகளையும் பெரும் நீதிபதிகள் துடைத்துப் போடுவார்கள் அல்லவா ... அதுவரை இந்த மகிழ்ச்சியோடு இருந்து விட்டுப் போகிறேன்.

X  Y  Z -- “இதுகளை’ விட்டால் நமக்கு வேறு வழியே இல்லையா ...?



இன்னும் சில பழைய பதிவுகளை வாசித்துப் பாருங்களேன் .......

http://dharumi.blogspot.in/2006/08/170.html

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20112102&format=print&edition_id=20011210



788.. செயலலிதா வழக்கு - முன்னும் பின்னும்





*


ஜெயலலிதா வழக்கு இப்படி ஒரு தண்டனையோடு முடிந்தது சந்தோஷம் தான்.ஒரு வேளை இது ஒரு படிப்பினையாக இருக்கலாம் என்ற ஆசை வருகிறது. ஆனாலும் இந்த வழக்கு இப்படியே முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நீதியரசர் டீ குன்ஹாவிற்கு என் வாழ்த்துகளும், வணக்கமும்.

இப்படி யோசித்த போது தர்மபுரி வழக்கு முடிந்து மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்த போது நம் பதிவர்களில் பலர் மிகவும் சந்தோஷப்பட்டு பதிவிட்டிருந்தார்கள். எனக்குஅப்படி ஒன்றும் பெரிய மகிழ்ச்சி வரவில்லை. இது ஒரு தொடர்கதை. மறுபடியும் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள் என்றே நினைத்தேன். அதைப் பற்றி நான் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவை மீள் பதிவாக இடுகிறேன்.

பழைய கதையே தொடரும் என்றே நினைக்கிறேன். ஜெயலலிதா வழக்கும் மேல்முறையீடு ... அது .. இது என்று இழுத்தடிக்கப்பட்டு விரைவில் வெளியே வந்து விடுவார் ... அவரது வெற்றி ஊர்வலமும் தொடரும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.


*

மீள் பதிவு - சில பகுதிகள்

 $செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும் நம் பதிவர்களில் பலருக்கு ரொம்ப சந்தோஷம். அந்த மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை என்றதும், 'ஆஹா! சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது' என்று சந்தோஷப்பட்டோர்களையும், செல்வனையும் பார்த்து 'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' அவங்களைப் பார்த்து எனக்குத் தோணிச்சி. ஏன்னா, நான் இப்போ சமீபத்தில தான் வெண்மணியைப் பற்றிய குறும் படம் "ராமையாவின் குடிசை"யைப் பார்த்து வயிறெரிந்திருந்தேன்.

எனக்கு என்ன நினைப்பு வந்ததென்றால், இன்னும் பதினைந்து இருவது வருஷம் கழிச்சி ஒரு செய்திப் படமோ, குறும்படமோ எடுக்கப் படலாம். 'தர்மபுரி பஸ் எரிப்பு - நடந்தது என்ன?' என்ற தலைப்பிலோ, பார்ட்னர் செல்வன் சொன்னது போல் 'பஸ் எரித்த பகத்சிங்குகள்' என்றோ தலைப்பு இருக்கலாம். அதில வயசாயிப் போனாலும், முறுக்கு விடாத 3 ஆட்கள் அவங்க அரண்மனை மாதிரி வீட்ல உக்காந்து கிட்டு படம் எடுக்கிறவரிடம் ஒரு நேர்காணல் கொடுத்திட்டு இருப்பங்களாயிருக்கும். (வெண்மணி பற்றிய குறும்படத்தில் இப்படி ஒரு காட்சியோடு படம் உள்ளது.)

இன்னும் இந்த கால இடைவெளிக்குள் ஒரே ஒருதடவை 'ஜெ' ஆட்சி வந்திருந்தாலும் போதும்; பெயர் தெரியாத இந்த மூன்று பேருமே பதினைந்து வருஷத்தில் பெரிய 'பிஸ்தா' ஆயிருப்பார்கள். ஏன்னா, ஜெ இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார். அது போதாதா? அப்போ ரொம்ப தெனாவட்டாகவே அவர்களின் பேச்சு அந்த குறும்படத்தில் இருக்கும். எப்படி தாங்கள் தங்கள் தங்கத் தலைவியிடம் விசுவாசத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகவும், இந்தக் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்ததாலேயே தங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததாகவும், அதனால் அந்த வருத்தத்தில்தான் பஸ்ஸுக்குத் தீவைத்தோம்; அதில் என்ன தவறு? என்றும் பேட்டியளிப்பார்கள்

ஆகவே மக்களே 'சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும் இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை. இனி இந்த 'பகத்சிங்குகள்' மேல் முறையீடு செய்வார்கள். சட்டம் அடிக்கடி சட்டையை மாத்த வேண்டியதிருக்கும். இந்த கேஸ் விஷயத்தில் - ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தினாலும், இது rarest of rare case என்று கொள்ள முடியாததாலும் நம் நீதியரசர்கள் இந்தக் கேஸை ஒட்டுமொத்தமாக மேல் முறையீட்டில் தள்ளிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

அப்படியெல்லாம் நடந்து விடாது என்று சொல்லி விடாதீர்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல் பாதியை மட்டுமாவது நம் நீதி மன்றங்கள் முழுமையாகக் கடைப் பிடித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன?

====================== 888888888888888888888 ===================

 இன்னொரு விஷயத்தில் எனக்குத் தெளிவில்லை; தெரிந்தவர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும். இந்த வழக்கின் ஆரம்பமே ப்ள்சண்ட் டே ஹோட்டல் விதி முறைகளை மீறி இரண்டு அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விட்டன; அதனால் ஜெ ஒரு குற்றவாளி என்பதோடு, இரண்டு மாடிகளில் ஒன்றை இடித்து விட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வேடிக்கையான ஒரு வழக்கு குற்றவாளிகள் பக்கத்திலிருந்து போடப்பட்டதாம். எந்த மாடியை இடிக்க வேண்டுமென்று அந்த நீதி மன்றம் குறிக்காததால், அது எந்த மாடியை இடிக்கவேண்டுமெனக் கேட்டு இன்னொரு வழக்கு போடப்பட்டதாக அறிந்தேன். (நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! திமிர்த்தனமாக வழக்குப் போட்டால், நீதிபதிக்குக் கோபம் வரவேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.) 

அப்படி போடப்பட்ட வழக்கு பின் என்னாயிற்று? விதிமீறலோடு கட்டப்பட்ட இரண்டு தளங்களோடுதான் இன்னும் இருக்கிறது என்று கேள்விப் படுகிறேன். அப்படியானால், அந்த வழக்கு, தீர்ப்பை நிறைவேற்றாததால் நடந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, இதை இன்னும் கண்டு கொள்ளாத அடுத்த கட்சியின் அரசு, அப்படி கண்டு கொள்ளாமைக்குரிய காரணங்கள் - இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே!


 *

Wednesday, September 17, 2014

787. JIHADI COLLECTION (10)




*


 * JUST A PERSONAL COLLECTION *


***
JIHADI COLLECTION .... (10)
*
பழைய தொடர்புள்ள பதிவுகள்  -


மதங்களைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தேன். கிறித்துவ மதத்தைப் பற்றி முதலில் எழுதிய போது அதிக எதிர்ப்புகள் எதையும் நான் சந்திக்கவில்லை. அடுத்து இந்து மதம் பற்றி எழுதிய போது சில எதிர்ப்புகளைச்சந்தித்தேன்.  இஸ்லாம் பற்றி எழுத ஆரம்பித்த போது பலத்த எதிர்ப்புகள் வந்தன. ஆனால் சின்னாளில் அத்தகைய எதிர்ப்புகள் யாராவது ஒரு பதிவரிடமிருந்து மட்டுமே வந்தன. அது அவர்களின் கட்டுக்கோப்பையும்உள் தொடர்பையும் காண்பித்தது. வரிசையாக சில இஸ்லாம் பதிவர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து சந்தித்தேன்அதற்குப் பதில் சொல்ல நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயமும் வந்தது.

இப்படி வந்த  பதிவர்களில் பலர் மிகுந்த ஆவேசத்துடனும்கோபத்துடனும் விவாதித்தார்கள். ஆனால் முதலில் வந்த பதிவர்களில் ஒருவரான சுல்தான் மிகுந்த பொறுப்புடனும்பொறுமையுடன் விவாதங்களில் ஈடுபட்டார். மற்றவர்கள் அப்படியில்லை. 

இறுதியில் விவாதத்தை மேற்கொள்ளும் பொறுப்பை சுவனப் பிரியன் ஏற்றுக் கொண்டார். இவரும் சுல்தான் போலவே விவாதங்களை மரியாதையோடு நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் எனது முந்திய பதிவில் அவர் தன் “சுய ரூபத்தைக்” காண்பித்தார். அப்பதிவின்பின்னூட்டத்தைப் பாருங்கள்.  உங்களுக்கே அது தெள்ளெனத் தெரியும். அவரது வார்த்தைகள்  எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்அச்சத்தையும் கொடுத்தன. ஆச்சரியம் - இதுவரை  அவர் கட்டிக் காத்த பொறுமை காணாமல் போனதுஅச்சம் - நாளை நம் இந்திய சமுதாயம் பற்றியது.

இதற்கு மேல் நான் என்ன சொல்ல ....



ஆனந்த விகடன் -17.8.14
இந்தியாவில் அல் கொய்தா
பாரதி தம்பி

 ***ஐ எஸ்  எஸ் அமைப்பு  தனது இஸ்லாமியப் பேரரசின் வரைபடத்தில்  இந்தியாவையும் கொண்டு வந்துள்ளதுஇப்போது அல் கொய்தாவும் அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்திருக்கிறது.எஸ்.எஸ்அமைப்பு உலகளாவிய அளவில் கொடூரமான தீவிரவாத அமைப்பாக வளர்ந்து வருகிறதுஅல்கொய்தாவின் புகழை அது விஞ்சிவிட்ட்துஇந்த நிலையில் தனக்கும் பலம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக அல் கொய்தாவும் போட்டிக்கு வெளியிட்ட அறிவிப்பு தான்இந்தியாவில் கிளை தொடங்கியுள்ளதாக வெளியான செய்தி என்கிறார்கள் போர் செய்தியாளர்கள்.

***எழுத்தாளர் எச்பீர் முகமதுஅல் கொய்தா – அரபிப் பெயரைக் கொண்டிருப்பதால் அப்பாவித்தனமாக அதன் விபரீதம் புரியாமல் அரபு அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாதிரியான ஆயுதக் குழுக்கள் மீது அனுதாபம் கொள்கின்றனர்அந்தத் தாக்கம் இந்தியாவிலும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறதுகுறிப்பாக தூய்மைவாத சிந்தனையைக் 
கொண்டவர்கள் பலரும் அதற்குப் பலியாகி விடுகின்றனர்.

***இந்தியர்கள் ஆகிய நமது அச்சம் எல்லாம்மத்திய கிழக்கு அமைதியற்ற பிரதேசம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது போலஇந்தியாவை இவர்கள் மாற்றிவிடக் கூடாது என்பது தான்.


THE HINDU - 15.8.14 

***Mufti Abul Qasim Nomani, director of the seminary said, ‘இஸ்லாம் வன்முறையற்ற ஒரு மதம்உலகெங்கும் அமைதி தழைக்க உழைக்கும் மதம்அமைதியை நாடும் இம்மதத்தினர் ஒரு போதும் தீவிரவாதிகளின் கைப்பொம்மையாக மாற மாட்டார்கள்.

***மத்திய உள்துறை அமைச்சர் நாடு முழுவதும் விழிப்போடு இருக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்ச நிலையில் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார்.


 THE HINDU -  15.8.14



This image taken from a video 
released by the Islamic State (IS) purportedly shows footage of
 British aid worker David Haines.

பிரித்தானிய David Haines .எஸ்..எஸ்கொடூரமாகக் கழுத்தை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்இதைக் காண்பித்த தொலைபேசிக் காட்சியில் இதே போல் இன்னொரு பிரித்தானியரும் விரைவில் கொல்லப்படுவார் என்ற செய்தியும் வந்துள்ளது.

THE HINDU  -  13.8.14

ஜிகாதி தீவிரவாதிகளின் வளர்ச்சியினை இந்தியா கண்டும் காணாமலும் இருந்து விட முடியாதுநம் நாட்டின் அமைத்திக்கு அது எந்த பங்கமும் கொண்டு வராமல் இருக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
 ***.எஸ்..எஸ்அல்கொய்தாவிலிருந்து பிரிந்த சில ஆண்டுகளிலேயே மிகவும் கொடூரமான ஒரு குழுவாகவும்மிகவும் தீவிரவாத அடிப்படைத் தன்மையோடு இருப்பதாகவும் வளர்ந்து விட்டதுஇஸ்லாமியப் பேரரசு – அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் – ஒன்றினை வளர்த்தெடுக்க இக்குழு முழு முயற்சியோடு முனைந்துள்ளதுஇந்த முயற்சியில் ஐ.எஸ்..எஸ்பல இளைஞர்களைத் தன் பக்கம் இழுத்திருப்பதும் கண்கூடுபின் லேடன் கொல்லப்பட்ட 2011க்குப் பிறகு வீழ்ந்த இயக்க வெறி மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.
***கல்யாணியில் உள்ள மருத்துவரின் மகனும்மகாராஷ்ட்ராவில் பொறியாளனாகப் படித்துக் கொண்டிருந்த அரீப் மஜ்ஜீத் ஈராக்கில் நடந்த போர்க்களத்தில் மாண்டு போனான் என்ற செய்தி நமக்கு மிகவும் ஆச்சரியமான,அதிர்ச்சியான ஒரு செய்தி.
***இந்திய முஜாகெதீன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தால் கடந்த சில ஆண்டுகளில் கர்நாடகாதமிழ்நாடுமகாராஷ்ட்ரா.பிமாநிலங்களில் இருந்து பல இளைஞர்கள் வெளி நாட்டுத் தொடர்புகளோடு இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறதுஇந்தக் குழு லஸ்கர்--தொய்பாவோடும்பாகிஸ்தானின் I.S.O.வோடும் தொடர்புடையது என்பதும் தெரிந்ததே.
***மத்திய கிழக்குப் பகுதிக்கு அடிக்கடி பயணம் செய்வோர்கள் மிகுந்த கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.
***நமது மாநிலக் காவல் துறைகளின் ஆளுமை இதுவரை ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளதுபெரும் தீவிரவாதச் செயல்களை விரைந்து கண்டுப் பிடிப்பதிலோஅவைகளை முறியடிப்பதிலோ அவைகளின் திறமைகள் கேள்விக்குரியதே!
***நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைக்கும் பல செய்திகள் நம் இளைஞர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளின் போதனைப்பிடிக்குள் இருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது.
 (Dr. R.K. Raghavan is a former CBI Director, and D. Sivanandhan, a former Commissioner of Police, Mumbai, and former DGP, Maharashtra.)

வினவு - 12.8.14

***தங்களை உண்மையான இஸ்லாமிய விடுதலை இயக்கமாகச் சித்தரித்துக் கொண்டு தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற பிரச்சாரத்துடன் இணையத்தின் மூலமாக சன்னி முஸ்லிம்களை இவ்வியக்கத்தினர் ஈர்க்கின்றனர்.
***இராக்கிலிருந்து மீண்டு வந்த இந்தியச் செவிலியர்கள் அளித்த பேட்டியைக் குறிப்பிட்டுஇஸ்லாத்தின் நெறிப்படி நடப்பவர்கள்தான் பெண்களைக் கண்ணியமாக நடத்துவார்கள் என்றும்.எஸ்இயக்கத்தினர் இஸ்லாமிய மார்க்க நெறிப்படி நடக்கும் புனிதப் போராளிகள் என்றும் சில சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்த இயக்கத்தினரை ஆதரிக்கின்றனர்
***அல் கய்தாவைவிட இன்னும் மூர்க்கமாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு இப்போது புதிதாக ஐ.எஸ்என்ற சன்னி மார்க்க இயக்கம் முளைத்துள்ளது. 
***யார் இந்து என்று இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்கும்பல் கூறுவதைப் போலத்தான்யார் முஸ்லிம் என்பதை இந்த ஐ.எஸ்பயங்கரவாத இயக்கத்தினரும் வரையறுக்கின்றனர்ஷியாசன்னிசுஃபி என வேறுபட்ட இஸ்லாமிய மார்க்கங்கள் இருந்த போதிலும்வாஹாபி சன்னி மார்க்கம் மட்டும்தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கம் என்று கூறிஇதர இஸ்லாமிய மார்க்கத்தினரின் மசூதிகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி அவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர். 


 THE HINDU  -  11.8.14

A jihadi battle of brands

***
 ***ராணுவ வெற்றிகளைக் கணக்கிடும்போது ஐ.எஸ்..எஸ்உச்சத்தில் இன்று நிற்கிறதுஆனால் அல்கொய்தா இன்னும் தன் பழைய வெளிச்சத்தில் தான் நிற்க வேண்டியதுள்ளதுசமீபத்திய தொலக்காட்சியில் வந்த செய்தி அல்கொய்தாவின் தலைமையின் ஆதங்கத்தைத் தெளிவாகக் காண்பிக்கிறதுஉலக ஜிகாதிய அமைப்பில் தான் பின் தங்கி விட்டதையும்அதை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்கிற அதன் அவசரத்தையுமே இது காட்டுகிறதுஜிகாதியர்களுக்கு நடுவே உள்ள போட்டிபுதிய ஜிகாதிகளைச் சேர்க்கும் அவசரம்பணம் திரட்டுவதில் தீவிரம் என்ற எல்லாவற்றிற்கும் இது ஒரு அவசர விளம்பரம்.

***இரு ஜிகாதி குழுக்களுக்கும் நடுவே உள்ள போட்டியை இது மிகத் தெளிவாகக் காண்பிக்கிறதுபெரும் தீவிரத்தோடு தங்களுக்கு எதிரான இஸ்லாமியர்களையும் தாக்கி அழிக்கும் ஐ.எஸ்..எஸ்ஒரு புறம்இன்னொரு பக்கத்தில் இஸ்லாம் அல்லாத காபிர்களை மட்டும் தாக்கி அழிக்கும் அல் கொய்தாஇப்போட்டி ஒன்றும் புதிதல்ல. 2005லேயே  மெசபொட்டோமையாவில்  இப்போட்டி ஆரம்பித்து விட்டது.

***இப்போது இந்த இரு குழுக்களும் புதிய ஜிகாதிகளைச் சேர்ப்பதிலும்பணம் திரட்டுதலிலும் போட்டியிடுகிறார்கள்இஸ்லாமியர்களை இழுப்பதிலும் போட்டி தான். 2011ல் ஒசாமா கொல்லப்பட்ட பின் அல் கொய்தா இப்போட்டியில் பின் தங்கியே உள்ளது.
***இந்தியாவில் வேரூன்றி நிற்கும் சூபியினரையும் தம்முள் இழுக்க அல் கொய்தா விரும்புவது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியதல்லசரியாகக் கையாளப்படாவிட்டால் இந்த ஜிகாதிப் போட்டியில் இந்தியா எதிர்வினையாற்றக் கூடும்.


*****
THE HINDU - 10.8.14

***அல்கொய்தாவின் இந்த அறிக்கை இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி.

*** தோல்வியடைந்த அல்கொய்தா இப்போதைக்கு ஒரு அடிபட்ட வேங்கைஅதனால் அதன் ஒவ்வொரு செயலும் அச்சுறுத்தும் பரிணாமத்தில் வளர்ந்துள்ளது.

***ஜிகாதி Sayed Zabiuddin Ansari கொடுத்த வாக்குமூலத்தின்படியும்ஒசாமாவிற்கும் Hafiz Saeedக்கும் நடுவில் இருந்த தொடர்பு மோலமும்  2008ல் நடந்த மும்பைக் கலவரத்தில் அல்கொய்தாவின் முக்கியப் பங்களிப்பு தெளிவாகத் தெரிகிறது. 2010ல் புனேவில் நடந்த குண்டு வெடிப்பிற்கு அல் கொய்தா உரிமை கொண்டாடினாலும் அங்கு வைத்த குண்டு ஒரு இந்திய முஜாஜிகிதியின் மூலம் தான் வைக்கப்பட்டது.

***Then there’s the fact that al-Qaeda views India as a ripe opportunity — both as a source of recruits and as a target in its own right. India has a large and marginalised Muslim population; a history of periodic communal violence; and a weak state along its periphery.
***இந்தியா புதிய ஜிகாதிகளை உருவாக்க தகுந்த இடம் என்றும்இங்கிருந்து இளைஞர்கள் பலரைத் தங்கள் பக்கம் எளிதாக இழுக்க முடியும் என்றும் அல்கொய்தா நம்புகிறது.
***இதுவரை  80 இந்திய இளைஞர்கள் ஜிகாதிகளாக சிரியாஈராக் சென்றுள்ளனர்பிரிட்டனிலும்பிரான்சிலும் இருந்து சென்றுள்ளவர்களோடு கணக்கிடும்போது இது மிகக் குறைவே.

*** இதுவரை ஈராக் செல்ல விசாவிற்காக 6000 இந்திய இஸ்லாமியர்கள் விண்ணப்பத்திள்ளுனர்ஆயினும் இதில் பெரும்பான்மையோர் ஷியா முஸ்லீம்கள்சன்னி ஜிகாதிகளுக்கு எதிராகப் போராடவே இவர்கள் விண்ணப்பத்திருக்கிறார்கள்.
***ஒஸாமா இருந்த காலத்தை விடவும் இப்போது இந்தியா பெரும் ஈர்ப்பைக் கொண்டுள்ளதுஇன்று உலகில் வளர்ந்து வரும் நாடுபொருளாதாரத்திலும்ராணுவ வளர்ச்சியிலும் பெரும் வளர்ச்சி கண்டு உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

***India is now a far more attractive target than it was when Osama bin Laden first appeared on the scene. It is a rising economic and military power with global resonance, a major partner of the United States, and an increasingly connected, porous nation.
***** 


The Hindu 6.8.14

***இதுவரை அல்கொய்தா தன் கரங்களை இந்தியாவிற்குள் நீட்டாமல் இருப்பதற்கான காரணம் இந்நாட்டின் ஜனநாயக அமைப்பும்மதச் சார்பின்மையும்பன்முகச் சமுதாய நிலையும் தான்.
***அல்கொய்தாவின் இவ்வறிக்கை போலியில்லை என்று அரசு கருதுகிறதுநம் நாட்டு இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கவே அல்கொய்தா இதன் மூலம் முயல்கிறதுஅல் கொய்தா இந்தியாவில் ஜிகாதி கொள்கைகளை எளிதாகப் பரப்ப முடியும் என்று கருதுகிறது.
***அல்கொய்தாஅல்கொய்தாவிலிருந்து கிளைத்த ஐ.எஸ்என்ற இரு குழுவினரின் பகைமை இதன் மூலம் வெளிப்படுகிறதுஅல்கொய்தா தன்னிலிருந்து வளர்ந்த ஐ.எஸ்ஸை ஒதுக்கி அதனோடு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறது.
***இஸ்லாமிய சமுகத்தில் அதிருப்தியோடு உள்ளவர்களின் நடுவே தன்னை வளர்த்துக் கொள்ள முடியுமென அல் கொய்தா நம்புகிறது.
****


https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEik4sLQ3kvdNADCvV03SFQCLojme8YU1M22W65eEorXcHGUCAUhJd1BhsjAyLhT42GlnsIwKr4GNhhkwuI_mfeNa8R0Rj0OD65IO-oiOQ_2slexjW8niXrngDRmOpbkNny5SI6Csu6ejTZ522VvxPpABzg7ZkdcSmY1Ip-trVaMH3Jb_iG6L_jrID8iaUGR


Friday, September 05, 2014

720 (a) JIHADI COLLECTION .... (9)








*




 * JUST A PERSONAL COLLECTION *


***
JIHADI COLLECTION .... (9)



5.9.2014

India now in al-Qaeda sights





al-Qaeda chief Ayman al-Zawahiri.
 al-Qaeda chief Ayman al-Zawahiri promised to spread Islamic rule and raise the flag of jihad across the Indian subcontinent.


***********

JIHADI COLLECTION .... (8)


 .....the breakaway faction formed a new organisation, calling itself the Ansar-ul-Tauheed, or Army of the One True Faith. In videotapes obtained by The Hindu , Ansar-ul-Tauheed operatives are seen training with assault weapons.

“The Muslims of India are not powerless,” the videotape featuring the group warns.“Their warriors are advancing towards you from Afghanistan, the blessed land of the one true faith. The same way we delivered carnage to you in times past, we will do so again.” 

 *****
JIHADI COLLECTION .... (7)



Although initially the Indian Mujahideen was thought to be directly involved in the blasts, the police are currently investigating if the person they are looking for, Abubacker Siddique, had formed an independent self-styled South Indian Mujahideen.. 


 *****

10.05.2014


*****

15. 04.’14



Boko Haram -- the nickname means "Western education is forbidden"
 -- has been attacking schools, villages, market places and military 
barracks and checkpoints this year in increasingly frequent and deadly 
attacks. Its mission is to force an Islamic state on Nigeria whose 170 million people are divided almost equally between Muslims living mainly in the north and Christians in the south.

*

11.4.2014

 *
3.4.'14


Nirban’s family and friends say the allegations are untrue but investigators insist he is the face of a disturbing new wave of jihadist recruitments.
For months now, the police have been stumbling on similar cells ...

*

1.4.14

"...the life of nations depends on martyrs. The national fields can be irrigated only with the blood of the best hearts”.




You who have ruled India for eight hundred years, you who lit the flame of the one true God in the darkness of polytheism: how can you remain in your slumber when the Muslims of the world are awakening?” the al-Qaeda ideologue Asim Umar asked India’s Muslims last summer.


*
 2.27.14 








 *****


*
24.3.14 






*


25.3.14 









*


VIEWERS - 166 +192+180 + 293 + 180






*