Thursday, July 30, 2015

852. JIHADI COLLECTION ... 17




*************************

30.7.2015

பயம்மாதான் இருக்கு ...........

Islamic State Wants Major Attack in India to Trigger 'End of the World': Report

WASHINGTON:  The ISIS is preparing to "to trigger a war in India" to provoke an "Armageddon-like 'end of the world'" according to a recruitment document of the terrorist group that was found in Pakistan
*****


The American Media Institute and USA Today newspaper here reported on Wednesday that the 32-page Urdu document obtained from a Pakistani citizen..........

 “Accept the fact that this caliphate will survive and prosper until it takes over the entire world and beheads every last person that rebels against Allah…

The AMI said that the document, which was translated from Urdu by Harvard researcher Mustafa Samdani, includes a “never-before-seen history of the Islamic State, details chilling future battle plans, urges al-Qaeda to join the group and says IS’ leader should be recognised as the sole ruler of the world’s one billion Muslims under a religious empire called a ‘caliphate.’”

******************

28.7.15

10 dead as terror returns to Punjab


A top Intelligence Bureau (IB) official said the attack had the modus operandi of the banned Lashkar-e-Taiba (LeT) which operates from Pakistan.

Seven persons were killed — one SP, three police officers and three civilians — in Monday’s “fidayeen” attack, the worst in Punjab in over a decade.


***************

https://othisaivu.wordpress.com/2015/04/26/post-491/


மேலே இருக்கும் படம், ஸிரியாவில் உள்ள அலெப்பொ நகரத்தில் (இது ஐஎஸ் வசத்தில் தற்போதைக்கு இருக்கிறது) எடுக்கப்பட்டு அந்த வெறியர்களால் இணையத்தில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. நல்லவேளை, இது ஒருஸுன்னிக் குழந்தை.

*

21.7.15






Friday, July 24, 2015

851. மதங்களும் ... சில விவாதங்களும் -- ஈரோட்டில் புத்தக வெளியீடு






*


எதிர் வெளியீடு
2015 ஈரோடு புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு :




மதங்களும் சில விவாதங்களும்


*



*


ஈரோடு புத்தகக்  கண்காட்சியில் 

ஆகஸ்ட் 3ம் தேதி 
திங்கள் கிழமை,  மாலை 2 மணிக்கு 

இந்நூல் எதிர் வெளியீடு பதிப்பகத்தாரால் 

வெளியிடப்படுகிறது.


அன்போடு அனைவரையும் அழைக்கிறேன். 









*














Tuesday, July 21, 2015

850. சின்னச் சின்ன கேள்விகள்










*

 


நமது அரசுகளும் சட்டங்களும் எதற்கும் லாயக்கில்லை என்று எனக்கு அடிக்கடி தோன்றும். வருஷக் கணக்கா ஆச்சு ... இன்னும் கூட மக்களை ஒரு ஹெல்மட் போட வைக்க அரசுக்கும் காவல் துறைக்கும் வக்கில்லை. சட்டம் போடும் போது யோசித்து சரியான சட்டம் கொண்டு வரணும். சட்டம் போட்ட பிறகு சரியாக அதை நிறைவேற்ற வேண்டும். நம் அரசு போடும் சட்டமும் சரியாக இருப்பதில்லை. எதையோ அரை குறையாக ஒரு சட்டம் போடுவார்கள். அவர்களே அதைப் பின்பற்ற மாட்டார்கள். மக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாட்டின் சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு நமக்கோ சுத்தமாகக் கிடையாது. அடிப்பேன், உதைப்பேன் என்றால் நம் மக்கள் கொஞ்சம் பயப்படலாம். அதற்கு நம் நாட்டில் வழியே கிடையாது.

எனக்கு தெரிந்த வரையில் அரசும் ஹெல்மட்டும், அரசும் ஆட்டோ மீட்டரும், என்றும் தொடரும் பெருங்கதை ... நீண்ட கதை. இன்னும் வண்டி ஓட்டிக் கொண்டே செல் பேசும் மூடர்களை மாற்ற முடியவில்லை. நாம் தான் அவ்வளவு மோசமா? இல்லை ... இல்லை நமது அரசுகள் தான் அந்த அளவு திறனற்றதா?

சில நாள் அமெரிக்க அனுபவத்திலும், ஒரு வார சிங்கை தங்கலிலும் நான் பார்த்த civic sense ஏன் இன்று வரை நம் நாட்டில் கொண்டு வர முடியவில்லை என்பது ஒரு பெருங்கேள்வியாக மனதில் நிற்கின்றது . அமெரிக்காவில் ஒரு நள்ளிரவு.  நடந்து வந்து கொண்டிருக்கிறேன். சிறு கிராமம் தான். நாற்சந்தி. சிகப்பு விளக்கு எரிவதால் தனியாக வந்த ஒரு வண்டி பச்சைக்காகக் காத்திருக்கின்றது. ஆச்சரியமாக இருந்தது. ஒரு மாலின் வெளியே parking lotலிருந்து காரை எடுக்கும் போது STOP என்று ஒரு போர்ட் இருந்தது. எங்கள் காரை ஓட்டி வந்தது ஒரு கல்லூரி மாணவன். ஓடும் கார்கள் அந்தப் பக்கத்திலேயே இல்லை, இருந்தும் அவன் காரை அந்த மஞ்சள் கோட்டில் நிறுத்தி, பின்  வண்டியை எடுத்தான். கார் ஏதும் இல்லையே... அப்போதும் நிறுத்த வேண்டுமா என்று கேட்டேன். அவன் சொன்ன பதில்: STOP MEANS STOP! விதிகளுக்கு பணியும் இந்த புத்தி நமக்கு எப்படி வரும்? வருமா ...?

இங்கே ஹெல்மட்டை பெட்ரோல் டாங்க் மேலே வைத்து ஓட்டினால் தான் மரியாதை. சட்டைத்தை மீறினால் நீ ஹீரோ ... இந்த உணர்வு நமக்குள் பொதிந்து இருக்கிறது. ஏன்? எப்படி? பதில் தெரியவில்லை.

 ஹெல்மட் போடு என்று ஒரு சட்டம் போட்டாகி விட்டது. போடுவது தான் முறை. இதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. வழக்கறிஞர்களே ஹெல்மட்டை எரித்தாலும் (யார் ஹெல்மட்டை எடுத்து எரித்திருப்பார்கள்? யாராவது அவர்களிடம் கேஸ் கொண்டுவந்த அப்பாவி யாராவது ஒருவரின் ஹெல்மட்டாகத்தான் இருக்கும்!) சட்டம் போட்டான பின் அதனை மதிக்கப் பழக வேண்டும். சட்டங்களை, விதிகளை மதிக்கும் நிலை வர வேண்டும்.

‘அவர்களுக்கு’ ingrained ஆக இருப்பது நமக்கு ஏன் வரவே மாட்டேனென்கிறது?

****************

2
 சாலைகள் படு மோசம் ... வீதிக்கு நாலு டாஸ்மாக் ... குடிவெறியோடு வண்டி ஓட்டிக் கொண்டு வருவது “நார்மல்” ... காருக்குள் உட்கார்ந்து செல்லும் நீதிபதிக்கு இரு சக்கர வண்டிக்காரர்களின் லாப நட்டம் எப்படிப் புரியும்? உச்ச கோடைகாலத்து வெயிலில் ஹெல்மட் போடுவது எளிதா? ... பின்னால் இருப்பவரும் ஹெல்மட் போட வேண்டும் என்பது இரட்டைத் தாழ்ப்பாள். எதற்கு இது? ...

வழக்கமாக நம் நாட்டில் விதிகள் போடப்படும்; நாம் அதை வழக்கம் போல் மீறுவோம். அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இது தான் இங்கு நியதி. ஆனால் இந்த முறை ஹெல்மட்டை எதிர்த்து பொது மக்களும் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர். ஆச்சரியம் தான். 

வழக்கமாக நம் மக்களுக்கு எதிர்க்கேள்விகள் கேட்பதே தெரியாது. குச்சி எடுத்தால் குனிந்து போய்க்கொண்டிருக்கும் வர்க்கம் நாம்; ஆனால் இம்முறை ஹெல்மட்டுக்கு எதிர்க்குரல் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

இதில் எனக்கு ஒரு சந்தோஷம். நம் நாட்டில் 'புரட்சி’ என்ற வார்த்தைக்கே பொருள் தெரியாது. சே குவாரா பனியன் போட்டுக் கொள்வார்கள், அவர் யாரென்று கேட்டால் அவரைப் பற்றி ஏதும் தெரியாது என்பார்கள். அப்படி வளர்ந்த நமக்குள் இப்படி ஒரு ஹெல்மட் புரட்சி நடப்பது பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம் - மக்களுக்கும் கொஞ்சம் புரட்சிக் கருத்துகள் இருக்கிறதே என்று.

****************

3

1ம் 2ம் எதிர் எதிர் கருத்துகளாக தோன்றுகிறதோ....?

ஹெல்மட் போட வேண்டும் என்று சட்டம் வந்தால் மதித்து ஹெல்மட் போடு.

அது தவறு என்று நினைத்தால் ஹெல்மட் போட்டுக் கொண்டு சண்டை போடு.

****************

4


நிறைய விளம்பரப் படங்கள் மிக அழகாக எடுக்கப்படுகின்றன. 30 35 வினாடிகளில் அழகான ஒரு கதை சொல்லி விடுகிறார்கள். சமீபத்தில் வந்த Tanshq 20% விலைக்குறைப்பு விளம்பரம் அழகாக அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இந்த விளம்பரம் ஒரு short period advertisement தான். 20% கழிவு இருப்பது வரை மட்டும் போடப்படும்,

Air tell video விளம்பரங்களும்... சுருக். ஆனால் நறுக்!

ஆனால் முட்டாள் தனமான சில விளம்பரங்கள் ஆண்டுக்கணக்காகத் தொடர்ந்து வருகின்றன. நம்ம அண்ணன் சரத்குமார் சட்டையைக் கழற்றி வீசி ஒரு நாய் பிடிக்கிற பொண்ணைக் காப்பாற்றுவாரே .... இந்த விளம்பரம் மகாக் கேவலம் என்பது எடுத்தவர்களுக்குத் தெரியாதா? இத்தனை நாள் அதை ஓட விட்ட பின்னும் அந்த கம்பெனியாருக்கு எந்த வித negative feed back கிடைத்திருக்காதா ....? எப்படி இன்னும் தொடர்கிறது?

ஒரு இந்தி நடிகர் ’பாஸ்’ என்று ஒரு பனியனுக்கு வருவாரே .... கடவுளே எங்களைக் காப்பாத்தப்பா ......

அப்படியே இந்த ஆச்சி மசாலாவிற்கு வரும் தேவயானி டீச்சர் விளம்பரத்தையும் தூக்குங்க’ப்பா. போரடிக்குது. அந்த ஆளு மீசை வேறு ரொம்பவே உறுத்துகிறது ....!





*





 

Monday, July 13, 2015

849. புத்தக வெளியீடு









*

எதிர் வெளியீடு


2015 ஈரோடு புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு










மதங்களும் சில விவாதங்களும்

தருமி

பக்கம் 240
ரூ. 220


மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மத்த்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே “கண்ணாடி” வழியே பார்த்து தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே “பாவம்” என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள்  ஏதேனும் எழலாம். அவ்வப்போது தலை காட்டும் இந்த ஐயங்களை அவர்களது நம்பிக்கைகள் பொதுவாக ஆழப் புதைத்து விடும். இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.

இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர்பண்பு, அறிஞர்களுக்கே உரித்தான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.




*





Thursday, July 09, 2015

848. பதினாறு ஆண்டுகள் வாழ்ந்த ராஜ மாளிகை (தருமி பக்கம் 31)







*



ஒரேயடியாக படிப்பைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டே போகிறோமோ… வாழ்க்கையின் மற்ற சில பக்கங்களையும் கட்டாயம் புரட்டியாக வேண்டுமே …

பள்ளிப் படிப்பு முழுவதும் மதுரையில் அப்போதிருந்த இரு பெரும் பள்ளிகளில் ஒன்றான புனித மரியன்னை பள்ளியில் தான் முடிந்தது. அப்பாவும் இதே உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். பள்ளி வளாகத்திலேயே புனித மரியன்னை கோவில் இரு பெரும் உயரக் கோபுரங்களோடு நின்றது. அல்லது … இப்படியும் சொல்லலாம் புனித மரியன்னை கோவில் இருந்த வளாகத்தில் எங்கள் பள்ளி இருந்தது. நாங்கள் பதினாறு ஆண்டுகளாக இருந்த வாடகை வீடும் இதற்கு அருகிலேயே இருந்தது., பக்தி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை பற்றியெல்லாம் சொல்வதற்கு முன் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையும் மிக முக்கியமல்லவா? அதைப் பற்றிக் கொஞ்சூண்டு சொல்லவா?

அப்பாவின் இரண்டாம் திருமணம் முடிந்ததும் அதுவரை கிராமத்திலிருந்த நானும், புது அம்மாவும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். எனக்குப் புதிதாக பள்ளி வாழ்க்கை ஆரம்பித்தது. அம்மாவுக்குத் திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. வாடகை வீட்டில் வந்து இறங்கினோம். எனக்கு அப்போது எப்படி இருந்தது என்று நினைவில்லை. ஆனால் கிராமத்தில் பெரிய வீட்டில் வசித்திருந்த அம்மாவிற்கு இந்த புதிய வீடு எப்படி இருந்ததோ தெரியவில்லை.




நாங்கள் வந்திறங்கிய வீடுஅத்தனை சிறியது. அது மட்டுமல்லாமல் ஒண்டுக் குடித்தனம். மூன்று குடிகளில் நாங்களும் ஒன்று. சிறிது நீண்டு செல்லும் வீட்டின் கடைசியில் எங்கள் பகுதி. வீட்டின் நடுவில் இருந்த நாழிக்கிணறு அல்லது உரைக் கிணறு வீட்டை இரண்டாகப் பிரிக்கும். நாழிக்கிணறு என்றால் என்னவென உங்களில் பலருக்கும் தெரிந்திருக்காதே! இந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு போர் போட்டு ஒரு குழாய் வைத்துக் கொள்வோமே … அப்போது அது மாதிரி வீட்டுக்கு வீடு ஒரு கிணறு இருக்கும். மூன்று நாலடி விட்டத்தில் சிமெண்ட் உரைகளை ஒன்றின் மீது ஒன்றாக கிணறைத் தோண்டி இறக்கியிருப்பார்கள். பத்துப் பதினைந்து உரை ஆழத்தில் தண்ணீர் இருக்கும். இப்போது மாதிரி நானூறு அறுநூறு அடி ஆழத்திற்கு போர் போட்டு தண்ணீர் இல்லை என்ற நிலை அப்போதில்லை. ‘நாழி’ என்றால் அளக்கும் படி என்று அர்த்தமாக்கும். இந்தக்கிணறுகள் குறுகலாக, ’படி’ மாதிரி இருப்பதால் அந்தப் பெயர்.

வெளிப்பக்கம் நான்கு பக்கம் கற் சுவர்கள் வைத்துக் கட்டியிருப்பார்கள். தலைக்கு மேல் இரும்பு உருளை இருக்கும். சாதாரணமாக கயிறும் வாளியும் இருக்கும். நீர் இரைத்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் கயிறுக்குப் பதில் டயரை வெட்டி கயிறு மாதிரி நீளமாக விற்பார்கள். இது அதிகமாக உழைக்கும் என்று இதனை வாங்கிப் பயன்படுத்தினார்கள். இதில் இரைப்பது கஷ்டம் என்பதால் கயிறுக்கே மவுசு அதிகம் ஆச்சு.

நான் சின்னப் பையனாக இருந்த போதே எனக்கு ஒரு முக்கிய வீட்டு வேலை வந்து விட்டது. ஏறத்தாழ குடும்பம் முழுமைக்கும் கிணற்றுக்குப் பக்கத்திலிருக்கும் இரண்டு ட்ரம்களில் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். சின்ன வயதில் சுற்றியிருக்கும் காவல் சுவரை விட கொஞ்சூண்டு என் உயரம் கூட இருக்கும். இதில் ஒரு வாளித்தண்ணீர் இரைக்க வேண்டுமென்றால் கஷ்டம் தான். ஓரு இயற்பியல் விதியை follow செய்து கடமையாற்றுவேன்! இடது முழங்காலை அந்தச் சுவற்றின் ஒரு பாய்ண்டில் வைத்து அழுத்திக் கொண்டு, வலது காலை பின்னால் வளைத்து வைத்துக் கொண்டு முக்கி, முக்கி கயிற்றை இழுத்து வாளியை மேலே கொண்டு வர வேண்டும். நான் கால் அழுத்தி வைக்கும் இடம் அந்தச் சுவற்றில் தடமாகப் பதிந்திருக்கும்.

அப்போது நான் தினமும் தவறாமல் கோவிலுக்குப் போய் விடுவேன். அங்கே முழங்கால் போட்டு ஜெபம் செய்வதால் இரு முழங்கால்களிலும் கருப்பாக முட்டி காய்ந்து போயிருக்கும். ஆக எனக்கு இப்போது இரு கால்களிலும் அந்தத் தடங்கள் இருக்கும். இப்போது பல இஸ்லாமியரின் நெற்றியில் தொடர்ந்த தொழுகையால் ஒரு கருப்பு காய்ப்பு இருக்குமே அதே போல் எனக்கு இரு கால்களிலும் இருக்கும். இடது காலில் கொஞ்சம் அதிகமாக, அகலமாக, கருப்பாக இருக்கும்!

வீட்டுக்கு நடுவில் இந்தக் கிணறு இருப்பதால் அந்தப் பகுதியே எப்போதும் ஈரத்தோடு இருக்கும். அதனால் வழியெல்லாம் பாசி படர்ந்திருக்கும். வீட்டிலிருக்கும் அனுபவசாலிகளுக்கு எங்கெங்கே கால் வைத்தால் வழுக்காது என்பது தெரியும். புதிதாக வருபவர்களுக்கு அது பெரும் ரிஸ்க் தான். அந்தப் பாதையில் வழுக்கி விழிந்தோர் நிறைய. சின்னப் பயலா … யார் விழுந்தாலும் விழுந்து விழுந்து நான் சிரிப்பேன். கொஞ்சம் வயதான பின் தான் புதிதாக வருபவர்களைப் பத்திரமாக வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் பழக்கம் வந்தது. ஏறத்தாழ கல்லூரி செல்லும் வயதில் நண்பர்களை இதனாலேயே வீட்டுக்கு அழைப்பதற்கு சங்கடமாக இருக்கும். முடிந்தவரை தவிர்த்து விடுவேன்.

இப்போதிருக்கும் மனநிலையில் அந்த வீட்டை நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியாகவும், வினோதமாகவும் இருக்கும். அத்தனை சின்ன வீடு. இன்றைய நிலையோடு கணக்கிட்டுப் பார்த்தால் அது ஒரு எலி வளை. பதினாறு ஆண்டுகள்; மூன்று பேராக ஆரம்பித்து, ஏழெட்டு பேராகப் பெருகிப் போன பின் அந்த வீட்டை விட்டு விட்டு ஒரு பெரிய சொந்த வீட்டுக்குக் குடியேறினோம். வீடு மாறும் போது முதுகலை இரண்டாமாண்டின் ஆரம்பம். குடிசையிலிருந்து ஒரு கோபுரத்துக்குப் போனது போலிருந்தது. வாழ்க்கையின் தத்துவமே அது தானோ?

திரும்பிப் பார்க்கும் போது பல விஷயங்கள் ஆச்சரியப் படுத்துகின்றன. வீட்டுக்கார அண்ணன் தம்பிகள் வீட்டின் முன் பகுதியில் குடியிருப்பு. பின் பகுதியில் நாங்கள். எங்கள் பகுதியில் அனேகமாக ஒரு அறை; 15 x 12 ஆக இருக்கலாம். அது மட்டுமே நான்கு பக்கமும் சுவரும், மேல் தட்டும் இருந்த அறை. இந்த அறைக்கு மேல் தான் நம் சாம்ராஜ்யம். மொட்டை மெத்தை. அங்கே இரண்டு மூன்று தென்னந்தட்டி போட்டு சின்ன கூரை. (ஜெயகாந்தனின் சாம்ராஜ்யம் எனக்கு டக்குன்னு நினைவுக்கு வருகிறது!) உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் மழைக்காலம் தவிர மற்ற மாதங்களில் நான் படிக்கும், தூங்கும் இடமாக இது இருந்தது.

கீழே ஒரே ஒரு அறை சொன்னேனே … அதை ஒட்டி ஒரு நாட்டு ஓடு போட்ட கூரை கொண்ட சின்ன தட்டடி / வெராண்டா …. அல்லது அது மாதிரி ஒண்ணு. மழை பெஞ்சா ஒழுகும். அங்கங்கே சில பாத்திரங்கள் வைத்தால் போதும். மழைக்காலத்தில் ஜலதரங்கம் வாசிக்கும் போது அங்கேயே படுக்கையைப் போட்டு, ராஜாக்கள் மாதிரி பின்னணி இசையோடு தூங்கலாம்.

கிணற்றை ஒட்டிப் பின்புறம் மூங்கில் பாய்கள் வைத்து ஒரு சமையலறை. விதவிதமான அடுப்புகள் இருக்கும். விறகு வைத்து எரிக்கும் நார்மலான அடுப்பு; கரி அடுப்பு; உமி அடுப்பு; மண்ணெண்ணெய் அடுப்பு … இப்படி வகைவகையாக அடுப்புகள் இருக்கும். கால தேச வர்த்தமான வித்தியாசங்களுக்கு ஏற்றது மாதிரி அடுப்புகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவோம்.

 What a space management? கிச்சனுக்குள் ஒரே ஒரு அலமாரி உண்டு. அலமாரிகள் என்றால் அந்த வீட்டில் எல்லாமே ஓப்பனாக, மரத்தட்டு வைத்த சாதி அலமாரிகள் தான்.  சமையல் சாமான்கள் – அரிசி தவிர – எல்லாம் அங்கே அடக்கம். கடைசி ஓரத்தில் இரண்டு மூங்கில்களை வைத்து படுக்கை வசத்தில் உயரமாக ஓரமைப்பு. அதன் மேல் விறகும், எருவாட்டியும் இடம் பெறும். கீழே உள்ள இடத்தில் பலவகை movable அடுப்புகள் இருக்கும். இன்னொரு ஓரத்தில் தண்ணீர்ப் பானைகள்.

வெராண்டாவில் ஒரு பக்கம் ஒரு சின்ன அலமாரி.அதன் எதிர்ப்பக்கம் மாடிப்படியின் வளைந்த கீழ்ப்பகுதி. அந்தப் பகுதியில் தரையில் பதித்த ஒரு ஆட்டுக்கல். மீதி உள்ள இடத்தில் ஒரு நார்க்கட்டில். அது அப்பாவின் அரியணை. மழைக்காலத்தில் அந்தக் கட்டிலின் கீழே என் படுக்கை. Very cozy! மழை பெஞ்சாலும் தண்ணீர் என் மேல் ஒழுகாதுல்லா ….! குளிருக்கும் அடக்கமா இருக்கும்.

15 x 12 அறை ஒண்ணு சொன்னேனே … அதில் உயரத்தில் ஒரு ஜன்னல். அது வழியாகப் பார்த்தால் அடுத்த வீட்டு மெத்தை வீடு தெரியும். அவுங்க பார்த்தால் நம்ம வீடு அனைத்தும் தெரியும். அப்படி ஒரு வசதி. அங்கே ஒரு பெண்ணும் இருந்தது என்பது டபுள் விசேஷம்! ரெண்டு பக்கமும் கட்டை போட்ட சேந்தி (loft) இருக்கும். கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது பெருசா இருக்கும். பெட்டிகள் எல்லாம் அதன் மேல். இதுக்குக் கீழே எப்போதும் பத்துப் பன்னிரண்டு நெல் மூட்டைகள் இருக்கும். மூட்டைகளுக்கும் சேந்திக்கும் நடுவில் உள்ள இடத்தில் படுக்கிற படுக்கை … தலையணை…

இதை ஒட்டி ஒரு அலமாரி. அதில் மேல் தட்டு எனக்கே எனக்கு மட்டும். புத்தகம் வைத்திருக்கிற இடம். இதுக்குள்ள தான் தெரியாமல் கதைப் புத்தகங்களை செட்டப் செஞ்சி ஒளிச்சி வச்சி அப்பா அம்மாவுக்குத் தெரியாம படிக்கணும். என் தட்டின் ஒரு ஓரத்தில் சீப்புகள் வைக்கிற இடம், இதை ஒட்டி ஒரு பெல்ஜியம் கண்ணாடி. இதுக்கு அப்பா ஒரு கதை சொல்வாங்க. அவருக்குத் தெரிஞ்ச சலூனில் பெரிய கண்ணாடி ஒண்ணு இருந்துச்சாம். சுதந்திரத்துக்கு முன்னால் இது நடந்தது. சலூன்காரர் காந்திக்காரர். அது தெரிஞ்ச போலீஸ்காரங்க இவரு கடையில நுழைஞ்சி எல்லாத்தையும் உடச்சிட்டுப் போய்ட்டாங்களாம். உடஞ்சதில சில துண்டுகளை எடுத்து வாடிக்கையாளருக்கு அன்பளிப்பா கொடுத்திருக்கார். ஆனால் நல்ல கண்ணாடி… no aberrations at all! எல்லாம் கிளியரா காமிக்கும். அதுக்காக அப்பா ஸ்பெஷலா போட்ட கட்டை பிரேமும் நல்லா இருக்கும் – கலரே மங்காமல் அப்படியே இருந்திச்சி.

நெல்மூட்டைகளைத் தாண்டி ஒரு மேசை .. ஒரு நாற்காலி. தெருவில் விற்றுக் கொண்டு போனதை வாங்கியதாக அப்பா சொல்வார்கள். செம ஸ்ட்ராங்க். நல்ல வெய்ட்டாக இருக்கும். புது வீட்டுக்கு அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாம்; புதுசு வாங்குவோம்னு அப்பாட்ட சொன்னேன். ‘போடா இவனே… பழச மறக்கக் கூடாது’டா’ன்னு சொல்லி புது வீட்டுக்கும் கொண்டு வந்துட்டார். நான் அந்த வீட்ல இருக்கிற வரைக்கும் ஒரே இடத்தில இருந்து ’தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது’!

மேஜையை அடுத்து ஒரு சின்ன மாடக்குழி. அதில் ரொம்ப வருஷத்துக்கு ரெண்டே ரெண்டு விஷயம் இருக்கும். ஒண்ணு பெத்த அம்மாவின் முதல் நினைவு நாளன்று அடித்த ஒரு சிறு அட்டை. அம்மாவின் படம் சிறிதாக இருக்கும். ப்ரேம் போட்டிருக்கும். அது ஒன்று; இன்னொன்று ஒரு மிக அழகான கண்ணாடித் தட்டு. வெளிநாட்டு சரக்காம்! நிறைய பூ வேலகள் செய்த சின்னக் கண்ணாடித் தட்டு. அதில் தான் வீட்டுச் செலவுக்கான சில்லறைக் காசுகள் கிடக்கும். அப்பா வாட்ச் வைக்கிறதும் இங்கே தான்.

நம்ம பெரிய அறைக்கு ஒரு பெரிய கதவு. உட்பக்கமாகத் திறக்கணும். கதவின் நடுவில் ஒரு மரப்பட்டி இருக்கும். அது எனக்கு நல்ல வசதி. இந்தக் கதவை ஒட்டி மேலே ஒரு சேந்திக் கட்டை இருக்கும். அம்மா நிறைய பலகாரம் செய்வாங்க. முருக்கு முக்கிய பண்டம். அதுக்கு மேல லட்டு, அதிரசம் .. இப்படியானவைகளைச் செய்து பத்திரமாக இருக்கணுமேன்னு ஒரு டப்பாவில போட்டு அந்த சேந்தியில வச்சிருப்பாங்க. முருக்கு இருக்கிறப்போ அம்மா லேசா வீட்டுக்கு வெளிய போனாக்கூட நான் கதவில் அந்தப் பட்டியில கால் வச்சி ஏறி இருக்கிறதில்ல கொஞ்சம் எடுத்து கால்சட்டைப் பைக்குள் போட்டு ஒரு தட்டு தட்டினால் எல்லாம் உடைந்து இருக்கும். அப்பப்போ எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இப்படி சாப்பிடுவதில் ஒரு பிரச்சனை உண்டு. அனேகமாக உங்களில் மிகப் பலருக்கும் அது தெரியாது.அது என்னன்னா …. இப்போவெல்லாம் துணி துவைக்கிறது வீட்ல மட்டும் தான். Hand wash … machine wash…. ஆனா அப்போவெல்லாம் வீட்டுக்கு வீடு வண்ணார்கள் வருவார்கள். துணியெடுத்துட்டு, வெளுத்து, பெட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். துவைப்பது காய வைப்பது எல்லாம் ஏதாவது ஒரு ஆத்தோரம். வெளுக்கிறதுக்கு முன்னால் வெள்ளாய் வைப்பார்கள். அப்டின்னா …. துணிகளை பெரிய மூட்டையா கட்டி ஒரு அடுப்பு மேல வச்சி கீழே நெருப்பு வச்சி சூடாக்குவாங்க. அட … அதுக்கு முன்னால துணிகளை உவர் மண்ணில் தோய்த்து எடுப்பார்கள். உவர் மண்ணுன்னா … உப்பு மண்ணு. இப்படி துவைத்தால் தான் துணிமணி நல்லா இருக்கும். அழுக்கு போகும். இதில் எனக்கு என்ன பிரச்சனைன்னா … உவர் மண்ணு போட்டு துவைப்பாங்களா… கால்சட்டைப் பையில் எப்போதும் பொடி மணல் இருக்கும். அது நம்ம ஆட்டை போட்ட கடைசி முருக்கில் ஒட்டிக் கொள்ளும். ஆகவே நம்ம முருகப் பெருமான் ஒளவைப் பாட்டிக்கு சொன்னது மாதிரி முருக்கை ஊதி ஊதி சாப்பிடணும். இப்பவும் கால்சட்டைக்குள் கையை விட்டு ஏதும் எடுக்கும் போது அப்பப்போ அந்த மண் நினைவு வருவதுண்டு.

கதவு சொன்னேனே … அதை முழுவதுமாகத் திறக்க முடியாது. ஏன்னா கதவுக்குப் பின்னால் அம்மா தைக்கிற தையல் மெஷினும், அரிசி ட்ரம் ஒண்ணும் இருக்கும். அரிசி ட்ரம் தான் அம்மா தைக்கும் போது நாற்காலியாக மாறி விடும்.

இந்த இங்கல் இடுக்கலில் அப்பா சைக்கிள், நான் கல்லூரி போன பின் என் சைக்கிள்; ஆக இரண்டு சைக்கிள்களுக்கும் எப்படியோ இடம் பிடித்து விடுவோம். முன்னால் உள்ள போர்ஷனிலேயே வைத்து விடுவோம். எல்லாத்தையும் சொன்னேன். ‘கக்கூஸ்’ பத்தி மட்டும் சொல்லவேயில்லை. அவ்வளவு பேருக்கும் ஒண்ணே ஒண்ணு. எப்படி .. என்னன்னு இப்போ யோசிச்சா …. பயமா இருக்கு. அதப் பத்தி மட்டும் சொல்ல வேணாம். Choice-ல விட்டுருவோம்!!! Let it be a completely forgotten page ……







*



Tuesday, July 07, 2015

847. JIHADI COLLECTION 16







*

8.7.15

THE HINDU 



A blend of military experience and jihadist ideological vigour is what makes IS the most formidable terror machinery of our time. Needless to say, the geopolitical situation in West Asia is clearly in its favour


Abu Bakr al-Baghdadi, leader of the Islamic State of Iraq and Syria, declared himself as the new “caliph” of the world’s Muslims. In his first public appearance, Baghdadi, standing on the balcony of Mosul’s Great Mosque, demanded the loyalty of Muslims and urged them to “obey” him and “make jihad” for the sake of Allah.

 IS has steadily extended its influence across West Asia and North Africa.

What makes IS so powerful?

 the roots of IS lie in Wahhabism, a stricter, puritanical stream. 


(நமது தமிழ்ப் பதிவர்களில் மிகப் பலர் இந்த 

க்ரூப்பைச் சேர்ந்தவர்கள் தானே!? ஐஎஸ்ஸிற்கு 

இங்கிருந்து போவது சரிதானே என்று கூட 

ஒரு பதிவர் சொன்னார் ...... !  


இந்த அச்சம் நீங்கி 

நாமெல்லோரும் ஒன்றாய், சமாதானமாய் 

இருக்கணும் ... (அவர்கள் சொல்வது போல்)இன்ஷா 

அல்லா....)

Wahhabism, which is derived from the preaching of Muhammad Ibn Abd al-Wahhab, an 18th century religious scholar, 

Wahhab rejected Muslims worshipping the dead or having any saints and making pilgrimages to tombs or special mosques. He asked his followers to return to the “fundamentals” of Islam, condemned practices of Shia, Sufi and other Muslims as invalid interpretations of the religion, 


When it bombs a Shia mosque, its point is that it is “not Islamic”. 

The ideology

 While the likes of the Muslim Brotherhood represent a refined version of political Islam that accommodates Western political institutions such as parliamentary democracy and is tolerant of different forms of worship within Islam, the roots of IS lie in Wahhabism, a stricter, puritanical stream. 

While the likes of the Muslim Brotherhood represent a refined version of political Islam that accommodates Western political institutions such as parliamentary democracy and is tolerant of different forms of worship within Islam, the roots of IS lie in Wahhabism, a stricter, puritanical stream. 

Wahhab’s interpretation actually stands in contrast with several 

Koranic verses. [There shall be no compulsion in (acceptance of) the religion (2:256); 

But Wahhabism gained prominence in Arabia after it became a tool to expand political power.


IS’s obscene savagery has several parallels in history. It was Muhammad Ibn Saud, a tribal chieftain in central Arabia, who first used Wahhab’s ideas to mobilise sociopolitical power in 18th century

 He asked his followers to return to the “fundamentals” of Islam, condemned practices of Shia, Sufi and other Muslims as invalid interpretations of the religion, and emphasised that his version of Islam alone had validity. 

 The modern-day Islamic State uses Wahhabi ideals to explain its barbarism. 


Brutality is a part of IS’s strategy.


it sends suicide jihadists to the countries that are part of the international coalition to gain asymmetric superiority.

Can IS be defeated?


 without a cohesive strategy, how are the world powers going to defeat a monstrous outfit with advanced weapons, large territories under control and thousands of soldiers unified by a fanatic ideology under command? The answer lies within. Meanwhile, the Islamic State is here to stay, at least for now.


*******************************************


7.7.15

THE HINDU EDITORIAL 



In an abrupt surge of violence, Boko Haram insurgents killed around 200 people in Nigeria over the past week. 

The attacks have sent a deadly message to both the Nigerian government and the rest of the world:

Boko Haram ....has killed more than 23,000 people, mostly civilians. 

 But the recent attacks show that Nigeria is nowhere near defeating the jihadists.


**********************************


5.7.15



 Horrific moment ISIS child executioners brutally shoot dead 25 Syrian regime soldiers in front of bloodthirsty crowds at ancient Palmyra ruin


Behind each condemned man stands a child executioner, all wearing desert camouflage and brown bandanas, many of whom appear to be no older than 12 or 13 years old.



ISIS is known for using children – dubbed ‘caliphate cubs’ – as suicide bombers, soldiers and executioners in their attempts to instill fear across Iraq and Syria.

Authorities fear that the use of children as soldiers and suicide bombers will only increase in the coming months.



********************************



the hindu


‘No escape plans by Bhatkal’




outlawed terror outfit Indian Mujahideen, attempting to escape, 

Bhatkal had told his wife over phone that 
IS operatives would help him come out of prison,


*




*******************************



4.7.'15


A young female suicide bomber killed 12 worshippers when she blew herself up in a mosque in northeastern Nigeria, a witness and a vigilante aiding the military against Boko Haram said on Friday.

“The victims were well targeted because they were all residents of Gwargware village... who fled to Miringa some months ago to escape forced conscription by Boko Haram.”

 *