tag:blogger.com,1999:blog-12236223.post113414981795479432..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 89. ஜெயிலுக்கு போகலாம்…வாரீகளா…?…2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-12236223.post-10440869528424505002012-07-06T20:02:42.714+05:302012-07-06T20:02:42.714+05:30பொது நிகழ்ச்சி இருக்கும். டி.எம். செளந்திரராஜன் கு...பொது நிகழ்ச்சி இருக்கும். டி.எம். செளந்திரராஜன் குரலில் பாட ஒரு ஆசிரியர் - அவரது ‘புல்லாங்குழல் தந்த மூங்கில்களே’ என்னும் கிருஷ்ணன் மேல் பாடும் தனிப்பாடலுக்கு நான் உட்பட பலர் விசிறிகள்; சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினார்கள்; பட்டிமன்றம் நடந்தேறும். பேரா.சாலமன் பாப்பையாவும் , மற்றொரு பேராசிரியரும் பட்டி மன்றம் நடத்தினார்கள். பாப்பையா வழக்கம்போல் பேசுவார் என நினைத்து மற்ற ஆசிரியர்கள் ஜோக் வெடிகளாக வெடிக்க, பாப்பையா தன் ஸ்டைலை முழுவதுமாக மாற்றி மிக மிக ஆழமான, அர்த்தமுள்ள சமூகப்பிரச்சனைகளைத் தொட்ட பேச்சு நன்றாக இருந்தது. அதன்பின் நான் பலதடவை அவரிடம் அந்த ‘ஜெயில் பேச்சு’ போல எதுவும் அமையவில்லை என்று கூறியதுண்டு.<br /><br />ஜெயிலில் நல்ல விஷயங்களையும், இசையையும் நிதானமாய் கேட்க முடிந்தது பெரிய விஷயம்.<br /><br /><br /><br /><br /><br />மனைவி இரண்டு மகள்களோடு வந்தார்கள். சில நிமிஷங்கள். சின்னவளுக்கு ஒரு வயதும், சில மாதங்களும். தூக்கி வைத்துக்கொள்ள ஆசை. எப்படி முடியும். குழந்தைகள் அழுகையோடு விடைபெற்றார்கள். அகநானூரில் ஒரு பாடல் வருமே: கிணற்றுக்குள் தண்ணீர் மேலே மிதக்கும் பாசி, மேலிருந்து தண்ணீர் மொள்ள வரும் குடம் பட்டவுடன் விலகி, வாளி மேலே போனவுடன் மீண்டும் வந்து மூடிக்கொள்ளும் - தலைவன் தொட்டதும் பசலை விலகி, அவன் பிரிந்ததும் மீண்டும் வரும் பசலை போல். அந்தக் கதைதான். குடும்பத்தினரைப் பார்த்த பிறகு ஜெயில் ஜெயிலாகவே ஆனது. பற்றாக்குறைக்கு அடுத்த நாள் பார்க்க வந்த குடும்ப நண்பர்கள் ‘உங்களைப் பார்த்துவிட்டு வந்தவுடன் சின்னவளுக்கு இரவெல்லாம் காய்ச்சல்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஐந்தாறு நாட்கள் கழித்து விடுதலையான நாள் வரை மருந்தில்லாத மனக்காய்ச்சல் எனக்கு.//<br /><br />குழந்தை, குடும்பத்தை பிரிந்து இருப்பது வேதனையான விஷயம், என் கணவர் 81லில் சிறை செனற போது என் இரு குழந்தைகளும் சிறுவயதுதான். அப்பவை பார்க்க வேண்டும் என்று என் மகன் அழுவான் நாங்கள் மாமனார் ஊரில் இருந்தோம்.<br /><br />இப்போது மாதிரி அலை பேசி வசதிகள அப்போது கிடையாது.<br /><br />நீங்கள் பட்ட கஷ்டத்தை உங்கள் பதிவின் மூலம் உணர முடிகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com