tag:blogger.com,1999:blog-12236223.post175842630835358990..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 594. என்னிடம் மட்டும் ஏன் கடவுள் வருவதேயில்லை ??!!!தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-12236223.post-68583662340508523682012-10-23T21:32:23.847+05:302012-10-23T21:32:23.847+05:30// அந்த தத்துவத்தின் தொடர்ச்சியாக "கடவுள் இல்...// அந்த தத்துவத்தின் தொடர்ச்சியாக "கடவுள் இல்லை" என்றும் சொல்ல முடியாது.//<br />அப்படியானால் உங்களால் கடவுள் உண்டு என்றும் சொல்ல முடியாதல்லவா?<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28820269975733433902012-10-23T21:24:10.355+05:302012-10-23T21:24:10.355+05:30// அமானுட சக்தி பற்றிய சாட்சியங்கள்// இதற்கு எதற்க...// அமானுட சக்தி பற்றிய சாட்சியங்கள்// இதற்கு எதற்கு பால முரளி கிருஷ்ணா, ஆர்.கே. நாராயணன் போன்றவர்களிடம் போக வேண்டும் என்று தான் என் கதை கூறினேன். (ஏ.ஆர். ரஹ்மான் இந்த ‘குரூப்பில்’ வரவில்லை, அவருக்கு வயிற்று வலி சரியாகப் போனதாம். காட்சிகள், தரிசன்ங்கள் ஏதுமில்லை.) எல்லா அமானுட விஷயங்களுக்கும் விளக்கம் இல்லைதான். விளக்கம் கொடுக்க முடியவில்லை என்பதாலேயே அது ’கடவுளின் விஷயமாக்’ இருக்க வேண்டியதில்லை. அதிலும் இன்னொரு சந்தேகம். நீங்கள் ஒரு கிறித்துவர் என்கிறீர்கள். ஆனால் பாலமுரளி கிருஷ்ணாவிற்கு இந்துக் கடவுள் அடையாளம் காட்டியதை நம்புகிறீர்கள். நீங்கள் ‘அந்தக் கட்வுளை’யும் நம்புகிறீர்களா .. என்ன? ஒரே கடவுளா? இல்லை .. அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி பல கடவுள்களா?<br /><br />// ஏதோ ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு சமாதானம் அடைந்து விடுகிறீர்கள். அது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு சம்பவமாக இருக்கலாமே என்று மீண்டும், மீண்டும் ஆராய்வதில்லை.// இதென்ன்ங்க .. அநியாயமா இருக்கு. எனக்குக் கிடைக்கும் விளக்கத்தையும் தாண்டி நான் இன்னும் என்ன தேட வேண்டும் என்கிறீர்கள்? விளக்கம் கிடைத்த பின் எதற்காக மீண்டும் மீண்டும் ஆராய வேண்டும்? அப்படி ஆராய்ந்தால் //கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகிறது.// என்கிறீர்கள்! விளக்கம் கிடைத்த பின்னும் ஆராயணும் .. அதில் கடவுளுக்கான சாத்தியங்கள் தெரியும். Some logic … but I don’t get it!<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-381158943049398042012-10-23T21:23:51.380+05:302012-10-23T21:23:51.380+05:30// .. அவற்றிற்கான ஆதார விதிகளை அறிவியல் இது வரை ஆண...// .. அவற்றிற்கான ஆதார விதிகளை அறிவியல் இது வரை ஆணித்தரமாக நிறுவியதில்லை.// இதைச் சொல்லும் போதே பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அனுமான்ங்கள் இன்று பல உண்மையாகி விட்டன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் சொன்ன hypothesis .. ஆய்வுகள் என்று வளர்ந்து கொண்டுவருவது உண்மையில்லையா?<br />// இவை தாமாகவே உருவாகின என்று நிலவப்படும் வரையில், ஒரு படைப்புச் சக்தி இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.// <br />இது கொஞ்சம் வேடிக்கையாக உள்ளது. அறிவியலின் எல்லை விரிந்தால் நாத்திகத்தை நம்புவேன் என்கிறீர்கள். என் காலத்தில் அது நடக்கப் போவதில்லை. ஆனால் உங்கள் காலத்தில் இன்னும் பல அறிவியல் உண்மைகள் வெளிவரும். அப்போதாவது மாறலாமா என யோசித்துக் கொள்ளுங்கள்!<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67167344808668573972012-10-23T21:23:16.372+05:302012-10-23T21:23:16.372+05:30
// ஆய்வு மூலமாக அணுகுவதே அறிவியல்//
Thanks for th...<br />// ஆய்வு மூலமாக அணுகுவதே அறிவியல்//<br />Thanks for the methodology – the whole paragraph.<br /><br />// ஆத்திகன் திறந்த சிந்தனையாளன், நாத்திகன் குறுகிட சிந்தனையாளன், அல்லது வைஸ் வெர்சா என்று வரையறுப்பது தவறான அணுகுமுறை. //<br /><br />இங்கே நீங்கள் சொன்ன methodology-யைப் பயன்படுத்திப் பாருங்களேன். சிலவற்றை நான் திரும்ப சொல்ல வேண்டியதுள்ளது. பிறக்கும்போது நாமெல்லோரும் ஆத்திகர்களே. கற்றுக் கொடுத்தவற்றை வார்த்தை பிறழாமல் இப்போதும், எப்போதும் நம்பிக்கொண்டிருந்தால் அவர் இன்னும் ஆத்திகரே. ஆனால் நாத்திகர்களாக மாறுபவர்கள் அப்படியில்லை. கிடைத்தவற்றில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடியவர்கள். (பதிலுக்காக அலைந்தவர்கள் என்பதே அவர்கள் ஆத்திகர்களை விட ஒரு படி மேல்.) கிறித்துவத்தில் பிறந்த நம்மிருவரில் எனக்கு வந்த ஐயங்கள் உங்களுக்கு வராமலா இருந்திருக்கும். தமதிரித்துவம், ஏசுவின் பிறப்பு, அநித்திய நரகம், பாப்பானவரின் தவறா வரம் ... இது போன்ற பலவற்றில் எனக்கு எழுந்த ஐயங்கள் உங்களுக்கும் வந்திருக்கும். பிறந்த்திலிருந்து வளர்ந்து வந்த பக்தி மார்க்கம் உங்களைத் தடுக்கும். அவ்வளவே ..! நாத்திகம் ஒரு தொடர் தேடல். அது அறிவியல் போல் வளர்கிறதேயொழிய அப்படியே ஆத்திகனின் நம்பிக்கை போல் முற்றுப் புள்ளியோடு முடிந்து நிற்பதில்லை. இப்படிப்பட்ட இருவரில் யார் சிந்தனையாளன் / திறந்த சிந்தனையாளன் என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88134967058888100362012-10-23T04:24:03.524+05:302012-10-23T04:24:03.524+05:30//அப்ப கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு தெரியாது...//அப்ப கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் உண்டு "என்பது உறுதிப்படுத்திய பின் கூறுங்கள் ஏனெனில் உண்டு என்பது உறுதிபடுத்தப்பட்டது,தெரியாது என்பது நம்பிக்கை சார்ந்தது. எனவே நம்பிக்கையே கடவுள். நம்பிக்கை என்பது அறிவியலுக்கு உடன்பாடில்லாதது. கடவுள் உண்டா இல்லையா என்பதை அறாய்வது அறிவியலின் வேலை இல்லை. அறிவியலுக்கு கடவுளின் அவசியம் இல்லை//<br /><br />உங்களின் புரிதல் மிக, மிகச் சரி. அந்த தத்துவத்தின் தொடர்ச்சியாக "கடவுள் இல்லை" என்றும் சொல்ல முடியாது. அறிவியலின் அடிப்படையில் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இதுதான் நான் சொல்ல வந்தது. <br />Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89496046241568917522012-10-21T12:35:52.072+05:302012-10-21T12:35:52.072+05:30// "நான் தருமி என்பவரைத் தேடிப் போனேன். நான் ...// "நான் தருமி என்பவரைத் தேடிப் போனேன். நான் பார்த்த இடங்களில் இல்லை. வேறெங்கோ இருக்கிறாரோ இல்லையோ, தெரியாது" என்றுதான் சொல்ல முடியும். "தருமி" என்று ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. இதே தத்துவத்தையே அறிவியலும் பின்பற்றுகிறது.//<br /><br />அப்ப கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் உண்டு என்பது உறுதிப்படுத்திய பின் கூறுங்கள் ஏனெனில் உண்டு என்பது உறுதிபடுத்தப்பட்டது,தெரியாது என்பது நம்பிக்கை சார்ந்தது. எனவே நம்பிக்கையே கடவுள். நம்பிக்கை என்பது அறிவியலுக்கு உடன்பாடில்லாதது. கடவுள் உண்டா இல்லையா என்பதை அறாய்வது அறிவியலின் வேலை இல்லை. அறிவியலுக்கு கடவுளின் அவசியம் இல்லை<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53765608896607469772012-10-20T20:35:10.155+05:302012-10-20T20:35:10.155+05:30நீங்கள் என்னிடம் கேட்டுள்ள மூன்று வினாக்களுக்குமான...நீங்கள் என்னிடம் கேட்டுள்ள மூன்று வினாக்களுக்குமான விடைகளை கீழ்க்கண்ட விளக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்:<br /><br />ஒரு கேள்வியை, அல்லது சந்தேகத்தை ஆய்வு மூலமாக அணுகுவதே அறிவியல். முதலில் கேள்வி ஒரு அனுமான (ஹைப்பாதிஸிஸ்) வடிவத்தில் அமைக்கப்படுகிறது. பிறகு அக் கேள்வியை சரியான முறையில் பதிலளிக்க என்ன விதமான ஆய்வு நடத்த வேண்டும்; அதற்கு என்ன உபகரணங்கள் வேண்டும்; எவற்றை அளக்க வேண்டும்; அப்படி அளப்பது சரியா என்று எப்படி நிர்ணயிக்க வேண்டும்; கிடைக்கும் தகவல்களை எப்படி மதிப்பிட வேண்டும் என்று வரிசையாக பல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு, இதற்கு முன்னர் இது தொடர்பான கேள்விகளை ஆய்ந்தவர்கள் கண்டறிந்தனவற்றிற்கும், தற்போதைய ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் தகவல்களுக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இறுதியாக, நாம் முதலில் முன் வைத்த அனுமானம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா, அல்லது நிராகரிக்கப்பட வேண்டுமா என்ற முடிவு எட்டப்பட வேண்டும். அறிவியல் தத்துவப்படி இந்த முடிவு சர்வ நிச்சயமான முடிவு அல்ல. குறிப்பிட்ட முடிவை எட்டுவதற்கு இத்தனை சதவீத சாத்தியக்கூறு இருக்கிறது என்று சொல்வதுதான். எனவே, அறிவியல் என்பது அனுமானங்களை, நிரூபணங்கள் மூலமாக அணுகி, சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிராகரிப்பதோ, ஏற்றுக் கொள்ளுவதோதான். எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நிரந்தரமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மீண்டும், மீண்டும் கேள்விகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டு, புடமிடப்படுவதே அறிவியல். <br /><br />"ஒரு நாத்திகன், உங்களைப் போன்ற ஒரு ஆத்திகன் - இருவரில் யாருடைய சித்தனை திறந்த சிந்தனையாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்" என்ற உங்களுடைய சின்ன கேள்விக்கு விடை: யார் தன்னுடைய நம்பிக்கை பொய்யாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டு மாற்று நம்பிக்கைகளையும் பரிசீலித்து, ஆய்வுக்குட்படுத்துகிறானோ, அவனே திறந்த சிந்தனையாளன். யார் நான் திட்டவட்டமாக அறிந்து கொண்டேன் என்று எண்ணி மாற்று நம்பிக்கைகளை முற்றிலும் புறக்கணிக்கிறானோ அவனே குறுகிய சிந்தனையாளன். ஆத்திகன் திறந்த சிந்தனையாளன், நாத்திகன் குறுகிட சிந்தனையாளன், அல்லது வைஸ் வெர்சா என்று வரையறுப்பது தவறான அணுகுமுறை. <br /><br />மீண்டும் சாத்தியக்கூறுகளுக்கு வருவோம். "இன்று கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவர் இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை விட அதிகம் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்" என்று சொன்னேனில்லையா. முதலாவது, நாம் வாழும் அகிலம் தொடங்கி, நமது உயிர் வாழ்வு வரைக்கும் தாமாகவே தோன்றின என்ற சாத்தியக்கூறு குறைவாகவே தோன்றுகிறது. அகிலத்தின் தொடக்கமாக இருக்கட்டும், உயிர்வாழ்வின் தொடக்கமாக இருக்கட்டும், அவற்றிற்கான ஆதார விதிகளை அறிவியல் இது வரை ஆணித்தரமாக நிறுவியதில்லை. அனுமானங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றனவே. எனவே, இவை தாமாகவே உருவாகின என்று நிலவப்படும் வரையில், ஒரு படைப்புச் சக்தி இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நம் சக மனிதர்கள் ஏற்படுத்தும் அமானுட சக்தி பற்றிய சாட்சியங்கள். ஆர்.கே. நாராயணனின், பாலமுரளி கிருஷ்ணாவின், ஏ.ஆர். ரகுமானின் அனுபவங்கள். அவர்கள் அளவில் உண்மையைச் சொல்கிறார்களா, இல்லையா என்று சந்தேகிக்கத் தேவையில்லாத சாட்சியங்கள். இவற்றை உங்கள் தரப்பில், அசிமாவ் தரப்பில் சொல்லும் விளக்கங்களோடு ஒப்பிட வேண்டியுள்ளது. நீங்கள் அசாதாரண அனுபவங்களைப் பெறும் போது, அதற்கு உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதோ ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு சமாதானம் அடைந்து விடுகிறீர்கள். அது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு சம்பவமாக இருக்கலாமே என்று மீண்டும், மீண்டும் ஆராய்வதில்லை. எனவேதான், இரண்டு தரப்பு சாட்சியங்களையும் ஆராயும் போது, கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகிறது. <br /><br />"//கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை...அறிவியல் சிந்தனைகளுக்குப் புறம்பாக இருக்கிறது // என்கிறீர்கள். எப்படியென்று கூறலாமா?" இந்தக் கேள்விக்கான பதிலை முன்னரே அளித்திருக்கிறேன். ஒருவர் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதை விட ஒருவர் இல்லை என்று நிரூபிப்பது கடினம். உங்களைத் தேடி, உங்களைப் பார்த்து விட்டால்,"இதோ தருமி இருக்கிறார்" என்று சொல்லி விடலாம். உங்களைப் பார்க்க முடியா விட்டால், "நான் தருமி என்பவரைத் தேடிப் போனேன். நான் பார்த்த இடங்களில் இல்லை. வேறெங்கோ இருக்கிறாரோ இல்லையோ, தெரியாது" என்றுதான் சொல்ல முடியும். "தருமி" என்று ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. இதே தத்துவத்தையே அறிவியலும் பின்பற்றுகிறது. <br /><br /> Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46066720482100883672012-10-07T13:50:23.384+05:302012-10-07T13:50:23.384+05:30நாத்திகர்களின் நம்பிக்கை, மதவாதிகளின் உறுதி - இந்த...நாத்திகர்களின் நம்பிக்கை, மதவாதிகளின் உறுதி - இந்த இரண்டையும் ஒப்பிட்டுள்ளீர்கள். இதில் இரண்டாமவரின் உறுதி நம்பிக்கையின்பாற் பட்டது. ’புத்தக’அறிவு. தங்கள் வேதப் புத்தகத்தில் உள்ளதை ஆழமாக நம்புவதால் வரும் உறுதி. ஓவ்வொரு வார்த்தையும் கடவுளின்/அல்லாவின்/ பரிசுத்த ஆவியின் வார்த்தை என்ற உறுதி.<br /><br />ஆனால் நாதிகர்களின் நம்பிக்கை பொதுவாக அடுத்தவர் “ஊட்டி’ வருவதல்ல. என்னைப் பொறுத்த வரை நான் நாத்திகனாக ஆனதற்கு முழுப்பொறுப்பு நானே. யார் சொல்லியும் நான் கடவுளைக் ‘கைவிடவில்லை’. கைவிட்டதும் மெல்ல நடந்த மாற்றங்களால். அது ஒரு அறிவுத் தேடலில் கிடைத்தது. <br /><br />இப்படி அறிவுத் தேடலில் எடுக்கும் நம்பிக்கை புத்தக அறிவால் எடுக்கும் உறுதியை விட கூடுதலாகவே இருக்க வேண்டுமல்லவா? அதுதானே நியாயம். கிளிப்பிள்ளையை விட நம் வீட்டு மழலை பேசும் பிள்ளை மேலல்லவா?<br /><br />யார் உறுதி/நம்பிக்கை என்பது பெரிது என்ற பட்டிமனறத்தை விட்டு விட்டு, நீங்கள் சொல்லும் // இன்று கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவர் இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை விட அதிகம் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.// என்று நீங்கள் சொல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கூறுங்கள். அதைப் பற்றி விவாதிப்போம். அதுவே சரியான முறையாகவும் இருக்கும்.<br /><br />//அவர்கள் சிந்தனைகளுக்கு மாற்று சிந்தனை இல்லை என்று அவர்கள் மனதை மூடி வைத்து விட்டார்கள். // ஒரு சின்ன கேள்வி. ஒரு நாத்திகன், உங்களைப் போன்ற ஒரு ஆத்திகன் - இருவரில் யாருடைய சித்தனை திறந்த சிந்தனையாக இருக்குமென்று நினைக்கிறீர்கள். நீங்கள் இரண்டில் எதைச் சொன்னாலும் நான் கேள்வியின்றி ஒத்துக் கொள்கிறேன். சொல்லுங்கள். <br /><br />//கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை...அறிவியல் சிந்தனைகளுக்குப் புறம்பாக இருக்கிறது // என்கிறீர்கள். எப்படியென்று கூறலாமா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10807551114287794512012-10-07T05:45:40.331+05:302012-10-07T05:45:40.331+05:30//அப்படியானால் இன்னொன்றைய்ம் நம்புங்களேன்.//
அய்ய...//அப்படியானால் இன்னொன்றைய்ம் நம்புங்களேன்.//<br /><br />அய்யா, உங்களைப் பாராட்ட வேண்டும். நாத்திகர்களின் நம்பிக்கையின் உறுதியும், அவர்கள் மற்றவர்களைத் தங்கள் நம்பிக்கையின்பால் திருப்ப எடுக்கும் முனைப்பும், தீவிர மதவாதிகளின் உறுதிக்கும், முனைப்பிற்கும் சற்றும் குறைந்ததல்ல என்று நினைத்திருந்தேன். நீங்கள் நிருபித்து விட்டீர்கள். <br /><br />நீங்கள் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை உடையவராக இருந்து, படிப்படியாக அந்த நம்பிக்கையில் சந்தேகம் கொண்டு, கடவுள் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவராக மாறியது போல, நான் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகத்தில் நீண்ட காலத்தைச் செலவழித்து விட்டு, இன்று கடவுள் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவர் இல்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை விட அதிகம் என்ற நிலைக்கு வந்திருக்கிறேன். <br /><br />//எப்படி பால்முரளி கிருஷ்ணாவின் அனுபவத்தை உண்மையென்கிறீர்கள்?// டாக்கின்ஸ் முதலான கடவுள் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்களின் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிந்தனைகளுக்கு மாற்று சிந்தனை இல்லை என்று அவர்கள் மனதை மூடி வைத்து விட்டார்கள். அவர்கள் முன்வைத்த சித்தாந்தங்களுக்கு வெளியே எதுவும் நடக்க முடியாது; அதற்கான வாய்ப்பே இல்லை. உங்களது சந்தேகமும் அதே வகையே. கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை, மதவாதிகளின் நம்பிக்கையைப் போலவே அறிவியல் சிந்தனைகளுக்குப் புறம்பாக இருக்கிறது என்று நான் கருதுவது இதனாலும் கூட. <br /> Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26034675791573721072012-10-03T15:44:51.307+05:302012-10-03T15:44:51.307+05:30@ இக்பால்
//எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம், பேஸ்...@ இக்பால்<br />//எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம், பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாமே//<br />கடவுளுக்கு இது எல்லாம் தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி எல்லாம் தெரிந்து இருந்தால், உலகத்தை படைக்கும் பொது இப்போது உள்ள டெக்னாலஜி எல்லாம் அப்போதே படைத்தது இருப்பாரே! அவர் படைத்தது வெறும் கல்லும் மண்ணும் ஆனா உலகத்தை தானே! அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29598777602795413992012-10-02T21:41:28.723+05:302012-10-02T21:41:28.723+05:30ஏ.வி.எஸ்.,
//அதை கிறிஸ்தவனாகிய நான் நம்பினதால்தான...ஏ.வி.எஸ்.,<br /><br />//அதை கிறிஸ்தவனாகிய நான் நம்பினதால்தான் ..//<br /><br />இது கொஞ்சம் உதைக்கிறதே. ஒரு கிறிஸ்துவன் (பத்துக் கற்பனையில் முதல் கற்பனையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.) எப்படி ஒரு இந்துக் கடவுள் தன் இருப்பை இப்படி ஒரு பக்தனுக்குக் காட்டியிருக்க முடியும் என்பதை நீங்கள் நம்ப முடியும்னு தெரியலை!!!<br /><br />டாக்கின்ஸ் நூலில் எப்படி சில miracles அந்தந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் நம்பிக்கைகளை ஒட்டிய கடவுளர்களே வருகை தருகிறார்கள் என்றும் கூறியிருபபார். உங்களுக்கு எப்படி பால்முரளி கிருஷ்ணாவின் அனுபவத்தை உண்மையென்கிறீர்கள்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5713162661261013332012-10-02T21:36:50.260+05:302012-10-02T21:36:50.260+05:30இப்பதிவையும் பாருங்கள் ...
BERTRAND RUSSELL: வான...<a href="http://dharumi.blogspot.in/2009/04/302-3.html" rel="nofollow">இப்பதிவையும் பாருங்கள் ... </a><br /><br />BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !<br /><br />நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு.<br /><br />நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?<br /><br />அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.<br /><br />ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)<br /><br />ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது.<br />---------<br /><br />விஞ்ஞானத்தில் பதில் தரமுடியாத கேள்விகள் பலவும் உண்டு. ஆனால் மதங்கள் அவைகளுக்குப் பதில் தந்துவிடும் என்பது என்னவிதமான நம்பிக்கை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34145272465327392042012-09-30T21:30:06.103+05:302012-09-30T21:30:06.103+05:30//அசிமாவ் போல ஊகிக்கிறீர்களே ஒழிய சர்வ நிச்சயமாக ந...//அசிமாவ் போல ஊகிக்கிறீர்களே ஒழிய சர்வ நிச்சயமாக நிரூபிக்கவில்லை.//<br /><br />இந்த விஷயங்கள் நிரூபிக்க முடியாதவை என்றே நினைக்கிறேன்.அசிமாவ் கொடுத்ததும் ஒரு ஊகம் தானே!<br /><br />314 பதிவில் கடவுள் என்ற நினைவுகள், miracles பற்றிய அறிவியல் காரணங்கள் கொடுக்கப்ப்ட்டுள்ளன. அறிவியல் மூலம் நிரூபித்தவைகள் தானே அவை. தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43745247352846128002012-09-30T21:22:15.436+05:302012-09-30T21:22:15.436+05:30// பரிபூரணமாக நம்புவதால்தான் உங்களோடு உரையாடிக் கொ...// பரிபூரணமாக நம்புவதால்தான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். //<br /><br />அப்படியானால் இன்னொன்றைய்ம் நம்புங்களேன். //இன்றைய அறிவியலுக்கு அப்பால், இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமுள்ள அமானுட சக்தி ஒன்றுள்ளது என நம்புகிறேன்// -- இந்த நினைவுகள் எனக்கும் வந்தது. எப்போது தெரியுமா? கடவுள் என்ற சித்தாந்தம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது புரிந்து, மதங்களை மறுக்கும் முதல் நிலையில், கடவுள் என்று ஏதுமில்லை என்று சொல்லும் முன் (அப்படி சொல்ல பயம் வந்தது.)இந்த நிலைக்கு வந்தேன். நீங்களும் அந்த நிலைக்கு வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் எனக்கு இந்த நிலையிலிருந்து முழு மறுப்பிற்கு சில வருடங்கள் ஆனது.<br /><br />good luck to you .<br /><br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46485326220434744892012-09-30T21:00:28.177+05:302012-09-30T21:00:28.177+05:30இரு பதிவுகளையுமே படித்தேன். மிக நெகிழ்ச்சியான பதிவ...இரு பதிவுகளையுமே படித்தேன். மிக நெகிழ்ச்சியான பதிவுகள். அழகாக எழுதியிருக்கிறீர்கள். என்னை நம்பு என்று நீங்கள் கேட்கத் தேவையில்லை. உங்களைப் பரிபூரணமாக நம்புவதால்தான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். <br /><br />நீங்களே சொன்னது போல், இரண்டாவது நிகழ்வுக்கான காரணத்தை அசிமாவ் போல ஊகிக்கிறீர்களே ஒழிய சர்வ நிச்சயமாக நிரூபிக்கவில்லை. அசிமாவின் விளக்கத்தில் என்ன பிரச்சினை என்று சுட்டிக் காட்டியிருந்தேனோ அது உங்கள் விளக்கத்திற்கும் பொருந்தும். <br /><br />"காரணம் சொல்ல முடியாததால் மட்டுமே அங்கே நான் கடவுளை உட்காரவைக்கத் தயாரில்லை" என்கிறீர்கள். நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். நான் கூட அப்படித்தான் செய்வேன். அது அறிவியல் இல்லை என்பதும் எனக்கு உகந்த கருத்தே. அதே நேரத்தில் கடவுள் இல்லை என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்ற வாதத்தை ஏற்றுக் கொள்கிறீர்களே (பதிவு 314), அது முரணாகத் தெரியவில்லையா? <br /><br />"பாலமுரளி கிருஷ்ணாவிற்கு நடந்தததை ஒரு இந்து நம்புவார். ஆனால் மற்ற மதத்தினர் நம்ப மாட்டார்கள்." என்கிறீர்கள். அதை கிறிஸ்தவனாகிய நான் நம்பினதால்தான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். மதங்களுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், இன்றைய அறிவியலுக்கு அப்பால், இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமுள்ள அமானுட சக்தி ஒன்றுள்ளது என நம்புகிறேன். அதை அறிந்து கொள்ள வேண்டுமானால் என் அறிவையும், மத நம்பிக்கைகளையும் நான் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. <br />Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37065387740190143972012-09-30T16:13:03.227+05:302012-09-30T16:13:03.227+05:30//கடவுள் என்னைப்பார்க்க வந்திருந்தப்போ, "ஏன் ...//கடவுள் என்னைப்பார்க்க வந்திருந்தப்போ, "ஏன் தருமி அவர்களைப் பார்ப்பதில்லை" என்று கேட்டேன். அவர் சொன்னார். அவநம்பிக்கைக்காரர்களை நான் பார்ப்பதில்லை என்றார்//<br /><br />எந்த கடவுள் வந்திருந்தார் என்று சொல்லுங்களேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39346347900394010862012-09-30T15:09:54.823+05:302012-09-30T15:09:54.823+05:30பதிவில் தர்க்கரீதியாக ஒரு தவறு இருக்கிறது. சிவபெரு...பதிவில் தர்க்கரீதியாக ஒரு தவறு இருக்கிறது. சிவபெருமானே நித்தியானந்தா, நித்தியானந்தாவே சிவபெருமான் என்றிருக்கும்போது, பாவம் சிவன் ஏன் மெனக்கெட்டு கனவில் தோன்றனும், நித்யானந்தாவே போன்போட்டு பேசியிருக்கலாமே.<br /><br />இல்லை கடவுள் தருமியாக்..மன்னிக்கவும்...கருமியாக இருப்பார் போல. ஏன் சில்ப்பேருக்குத்தான் காட்சி தருவார்.<br /><br />பாஸ்னியா, சிக்காகோ என்று ஏன் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் கடவுளிடம் பேச குத்தகைக்கு எடுத்திருக்கும் மதிப்பிற்குரிய டி.ஜி.எஸ் குடும்பத்தாரை பார்த்தாலே புர்ந்துவிடும்.<br /><br />குரான் ஒலியாக வந்தது என்றால் எழுத்து வடிவம் பெற்றால் கடவுளின் ஒலிக்கு இணைவைப்பதாக ஆகிவிடாதா. அல்லா கனவில் வந்தார் பேசினார் என்றால், அல்லா கனவில் உருவம் பெற்று விடுவார் அது இணை வைப்பதாக ஆகிவிடுமே. இல்லை கடவுளை கனவுகாணக்கூடாது, இறைதூதரை கனவில் காண வேண்டும் என்றால், இறைதூதருக்கும் ஒரு வடிவம் பெற்று கனவில் மனிதன் வணங்கிவிட்டால்?????<br /><br />சு.பி.யாரிடம் ஒரு மறுமொழி போட்டு ஐயங்களை தீர்க்க வேண்டும்.)))narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65842553277504258802012-09-30T11:24:31.806+05:302012-09-30T11:24:31.806+05:30வணக்கம் அய்யா,
//கடவுள் நம்பிக்கை, பக்தி பரவசம், ...வணக்கம் அய்யா,<br /><br />//கடவுள் நம்பிக்கை, பக்தி பரவசம், apparitions போன்றவைகள் வருவதற்கான ஆதாரங்கள் அறிவியலில் கொடுக்கப்படுகின்றன. வாசிக்க ...//<br /><br />திருட்டுப் பதிவை வாசித்தேன்..தேன்..தேன் தான்...அருமையாக இருந்தது.லேட்டாக வாசித்தாலும் லேட்டஸ்டாகத்தான் இப்பவும் இருக்கிறது.<br /><br />இனியவன்...<br /><br /> Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7272321165855155332012-09-29T23:10:53.115+05:302012-09-29T23:10:53.115+05:30//நோய் உள்ளவனிடம் தான் டாக்டர் போவார்////!‘தவறிய’ ...//நோய் உள்ளவனிடம் தான் டாக்டர் போவார்////!‘தவறிய’ ஆட்டைத் தேடித்தான் மேய்ப்பன் போவான்.//<br /><br />இரண்டுமே பைபிளின் வாசகங்கள்.<br /><br />சைத்தான் வேதம் ஓதுகிறது!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5248520908814098452012-09-29T23:07:36.468+05:302012-09-29T23:07:36.468+05:30//கடவுள் இல்லை என்று 100க்கு 100 சர்வநிச்சயமாக சொல...//கடவுள் இல்லை என்று 100க்கு 100 சர்வநிச்சயமாக சொல்வது அறிவியலுக்கு உகந்த சிந்தனை அல்ல//<br /><br />கொஞ்சம் மாற்றி விடுகிறேன்.கடவுள் உண்டு, இல்லை என்று சொல்வது அறிவியலின் வேலை இல்லை. <br /><br />கடவுள் நம்பிக்கை, பக்தி பரவசம், apparitions போன்றவைகள் வருவதற்கான ஆதாரங்கள் அறிவியலில் கொடுக்கப்படுகின்றன. <a href="http://dharumi.blogspot.in/2009/05/308_27.html" rel="nofollow">வாசிக்க ... </a><br /><br />முந்திய பின்னூட்டத்தில் ஐன்ஸ்டீன் சொன்னதை இங்கு மீண்டும் குறிப்பிடுகிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19757706829901708372012-09-29T22:59:58.285+05:302012-09-29T22:59:58.285+05:30//நீங்களோ எந்த விவாதமோ, விளக்கமோ இல்லாமல்...//
என...//நீங்களோ எந்த விவாதமோ, விளக்கமோ இல்லாமல்...//<br /><br /><a href="http://dharumi.blogspot.in/2005/10/81.html" rel="nofollow">என் பதிவு ஒன்றில்</a> ”ஊருக்குப் போன ஓரிரு மாதங்களில் அம்மா இறந்து போனார்கள். ’’ -- என்று ஆரம்பிக்கும் நான்காவது பத்தியில் ”என் வாழ்வில் நடந்த இரண்டு supernatural incidents-ல்..” இதைப் பற்றி எழுதியுள்ளேன். இன்னொரு நிகழ்வு <a href="http://sixth-finger.blogspot.in/2007/02/41-when-i-look-back-7.html" rel="nofollow">இப்பதிவில் உள்ளது. </a><br /><br />என்னை நீங்கள் நம்பலாம்! ஏனெனில் இரண்டிலுமே நடந்தது உண்மை. அசிமோவ் சொன்னது போல் இரண்டாவது நிகழ்வுக்குக் காரணம் சொல்லி விட்டேன். முதல் நிகழ்விற்கு இந்த நிமிடம் வரை எனக்கு காரணம் தெரியவில்லை. ஆனால், <b>காரணம் சொல்ல முடியாததால் மட்டுமே </b>அங்கே நான் கடவுளை உட்காரவைக்கத் தயாரில்லை.<br /><br />ஐன்ஸ்டீன் சொல்வது போல் கடவுள் உண்டு என்பவ்ர்கள் அவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காரணம் கண்டுபிடிக்க முடியாத ஒன்றிற்காக அங்கு கடவுள் உண்டு என்று கூறுவது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அதைத்தான் நான் கூறினேன்.<br /><br />பாலமுரளி கிருஷ்ணாவிற்கு நடந்தததை ஒரு இந்து நம்புவார். ஆனால் மற்ற மதத்தினர் நம்ப மாட்டார்கள். இதற்கு இன்னொரு சான்று காண <a href="http://dharumi.blogspot.in/2006/04/154.html" rel="nofollow">இங்கே வாருங்கள்.</a> இரண்டு நிகழ்வுகள். ஒன்றை ஒருவர் நம்புகிறார்; இன்னொன்றை நம்ப மாட்டார்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19041577960892433452012-09-29T21:34:26.574+05:302012-09-29T21:34:26.574+05:30தவறிய ஆடும் மேய்ப்பனைத் தேடிக் கொண்டுதான் இருக்கும...தவறிய ஆடும் மேய்ப்பனைத் தேடிக் கொண்டுதான் இருக்கும். இந்த இரண்டு பக்க தேடலின் விளைவாகவே ஆடு கண்டுபிடிக்கப்படும். <br /><br />நாராயணன் ஆங்கிலத்தில் எழுதுகிறார் என்பதற்காக அல்ல அவரை நம்பத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களின் மூலம் அவர் ஒரு எளிமையான, சிக்கலில்லாத நபராகத் தோன்றுகிறார். அவர் உண்மையல்லாத ஒன்றை தனது சுயசரிதையில் சொல்ல மாட்டார் என்று தோன்றுகிறது. அப்படிச் சொல்வதால் அவருக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று படுகிறது. இப்படி ஒருவர் தமிழில் எழுதினாலும் அவரையும் நம்பத்தான் தோன்றும். உதாரணமாக இந்தக் காணொளியைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=0z5fqBbRCH8. (5:03 முதலாக). இதில் பாலமுரளிகிருஷ்ணா சொல்வதைக் கேட்கும் போது அவர் பொய் சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. <br /><br />பிரபல விஞ்ஞானக் கதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ் கடவுள் நம்பிக்கையில்லாதவர். அவரது சுய சரிதையில் ஓரிடத்தில் இப்படி வருகிறது. அவர் மருத்துவமனையில் படுத்திருக்கிறார் யாரோ அவரைத் தட்டி எழுப்புவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழுந்து கொள்கிறார். யாரும் இல்லை. கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை தன் மனைவிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அது உள்ளுணர்வில் பிரதிபலிக்கிறதோ என்று தோன்றுகிறது. மனைவியை தொலைபேசியில் அழைக்கிறார். பிரச்சினை ஒன்றுமில்லை. சிந்திக்கிறார். அவர் ஒரு கைகயை வளைத்து தன் மறு தோள்புறம் அணைத்துக் கொண்டு படுப்பவராம். தூக்கத்தில் தன் கையே விலகி தன் முதுகைத் தட்டியிருக்கும்; அது அநேகமாக அப்படித்தான் என்று சொல்லி தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார். கூடவே, ஒன்று சொல்கிறார்: "இதுவே, நான் என் மனைவியை அழைத்த நேரத்தில் அவருக்கு தற்செயலாக ஏதாவது நேர்ந்திருந்தது என்றால் என்ன ஆகியிருக்கும்? நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறதென்று நம்பிக்கை வந்திருக்கும் இல்லையா?" <br /><br />இதில் பாருங்கள் அசிமோவிற்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனது நம்பிக்கையின் அடிப்படையிலேயே பரிசீலித்துக் கொள்கிறார். வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட முறையில் தூங்கும் ஒருவர், ஒரு நாள் நடந்த வித்தியாசமான நிகழ்வு தான் தூங்கும் விதத்தால் நடந்தது; அசாதாரணமானது அன்று என்று முடிவு கட்டிக் கொள்கிறார். இதையேதான் கடவுள் நம்பிக்கை உள்ளவனும் செய்கிறான். தனது நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பரிசீலித்து இது தற்செயலாய் நிகழ்ந்திருக்கும் வாய்ப்பு குறைவு; கடவுளால்தான் நடந்திருக்கும் என்ற முடிவிற்கு வருகிறான். எனவே, இரண்டுமே ஒன்றுதான். நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த closed minded conclusions. அதைத்தான் நான் அறிவியல் இல்லை என்கிறேன். நீங்களோ எந்த விவாதமோ, விளக்கமோ இல்லாமல் கடவுள் இல்லை என்கிற நம்பிக்கை அறிவியல்தான் என்கிறீர்கள்.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55565044844909619562012-09-29T12:24:31.889+05:302012-09-29T12:24:31.889+05:30ஐயா,
நல்ல பதிவு, நல்ல பின்னூட்டங்கள்.
அது ஏன் இறை...ஐயா,<br />நல்ல பதிவு, நல்ல பின்னூட்டங்கள்.<br />அது ஏன் இறைவன் இந்தியாவிற்கு மட்டும் நேரா வரார் மத்த நாடுகளுக்கு தூதர்களை மட்டுமே அனுப்புகிறார் :)<br /> தவறான புரிதல் என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை.<br />நன்றி <br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67344494782718917212012-09-29T10:56:58.624+05:302012-09-29T10:56:58.624+05:30என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நாங்க இருக்க இடத்தில த...என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நாங்க இருக்க இடத்தில தினமும் மேல தாளத்தோட வர்றார்.. கொஞ்சம் தள்ளாடிகிட்டே வர்றார்.. தள்ளுகிறவர்கள் தள்ளாட்றதால.. இன்னும் விநாயகர் ஊர்வலங்கள் முடியல.. முடி..யல.<br /><br />அந்தக் காணொளி அருமை.. நாம எவ்ளோ வளர வேண்டியிருக்கு.. கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8502659091105623032012-09-29T09:40:47.954+05:302012-09-29T09:40:47.954+05:30வணக்கம் அய்யா,
// குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப...வணக்கம் அய்யா,<br /><br />// குர்ஆன் ஒலி வடிவமாகத்தான் அருளப்பட்டது.// அந்த ஒலிக்கும் சக்தி இல்லாமல் ஒருவருக்கு மட்டுமே கேட்கும்படியாக இருந்தது. சாதாரண ஒரு ரேடியோ பெட்டிக்கு இருக்கும் ஒலி ஆற்றல் கூட வல்ல இறைவன் (?)ஒலிக்கு இல்லை எனும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது என்ன செய்யா?Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.com