tag:blogger.com,1999:blog-12236223.post7929196186891124737..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 725. இந்து மதம் எங்கே போகிறது ? --- 2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-12236223.post-57211382942048353612014-03-11T14:33:29.912+05:302014-03-11T14:33:29.912+05:30தருமிய்யா,
அக்னிஹோத்திரம் புக்கை முழுசா நான் படிச...தருமிய்யா,<br /><br />அக்னிஹோத்திரம் புக்கை முழுசா நான் படிச்சதில்லை, நக்கீரனில் வந்த போது அங்கொன்றும் ,இங்கொன்றும்னு படிச்சது தான் ,இந்து வைதீக மதத்தினை விமர்சிக்கிறார் என்ற வகையில் தான் கவனிச்சது,மற்றபடி அவரும் "அக்குத்தா" தான் கருத்துக்களை முன் வைத்துள்ளார்.<br /><br />#//சங்கரம் – சபிக்கப்பட்ட உறவுகள் என்று பொருள்.//<br /><br />சங்கரம் என்றால் சபிக்கப்பட்ட என்ற "ஸ்ட்ரிக்ட்டா" கூட சொல்ல இயலாது ,கலப்பது,கடப்பது என்று தான் பொருள், உ.ம்: மகர சங்கராந்தி ,மகர ரேகையை தொட்டு கடந்து ,கலந்து வருவது என அப்படி சொல்கிறார்கள்.<br /><br />//புத்தர் சங்கருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார். புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய். அதுதான் எனக்குக் கிடைத்த ஞானம்//<br /><br />புத்த மடங்களை அபகரித்து , அதனை சைவ மடமாக்கினார் என பல வரலாற்று ,சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள்.<br /><br />ரவிக்குமார் (எம்.எல்.ஏவும் கூட) ஒரு கட்டுரை இதைப்பற்றி எழுதியுள்ளார்.<br /><br />புத்தமடங்கள் ,விகாரைகளை ,சைவ ,வைணவ மடங்களாக அக்காலத்தில் மாற்றியதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.<br /><br />காஞ்சியில் உள்ள பலக்கோயில்கள் புத்த மடங்களாக இருந்து , சைவ,வைணவ கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன.<br /><br />//ய்க்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். இந்த இரண்டும் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. (61)//<br /><br />அவரது அம்மா இறந்த போது , பிராமணர்கள் சடங்கு செய்ய வரவில்லை என்ற கோபத்தில், கோயிலில் உழுவாரம், இசைக்கருவி வாசிக்கும் இனத்தினருக்கு பூநூல் அணிவித்து ,இவர்களும் பிராமணர்கள் தான் என சொல்லி சடங்கு செய்ய வைத்தார், எனவே இன்றும் அவ்வழக்கம் கேரளாவில் தொடர்கிறது.<br /><br />அவ்வாறு சங்கரர் பூநூல் அணிவிக்கப்பட்டவர்களே கேரளாவில் மாரர் ஜாதியாக அழைக்கப்படுகிறார்கள், அதில் ஒரு முடி மாரர், இரு முடி மாரர் என ரெண்டு பிரிவு இருக்கு, இவர்கள் ,நாயர்கள்,நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலை , கோயிலில் இசை வாத்தியங்களை வாசிக்கலாம், உழவாரப்பணி செய்யலாம்,ஆனால் கருவறைக்குள் செல்ல கூடாது. கேரள இசைவேளாளர்கள் என கருதப்படுபவர்கள்.<br /><br />நாயர்கள் திருமணத்தில் கூட மாரர்கள் தான் சடங்கு செய்யணும்னு அப்போ சங்கரர் சாபம் விட்டதாகவும், இப்பவும் தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,இம்முறை இப்பவும் இருக்கானு தெரியலை.<br /><br />எனவே சங்கரர் பூநூலுக்கு எதிரான முற்போக்கு வாதினு சொல்லிக்க முடியாது.<br /><br />#//ஆகவே அவரே இந்த மடங்களை ஏற்படுத்தினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்க வேண்டும். (70)//<br /><br />//இதனால் புதியதாக கும்பகோணத்தில் ஒரு மடம் ஆரம்பிக்கப்பட்டது. இது நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டது. அம்மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆனார். (79)<br /><br />பின்னால் இந்த மடம் மதராஸிற்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டது. (81)//<br /><br />சங்கரரே எல்லா மடத்தினையும் உருவாக்கினாரானு சொல்ல முடியாவிட்டாலும் ,அவரது காலத்தில் உருவானவை எனலாம்.<br /><br />ஆனால் கும்பகோண மடமோ ,காஞ்சி மடமோ சங்கரர் காலத்தில் உருவாகவேயில்லை.<br /><br />நாயக்கர் காலம் என்ன ,சங்கரர் காலமா? கிருஷ்ண தேவராயர் காலத்தில் தான் நாயக்கர்கள் தமிழகம் வந்தார்கள்.<br /><br />மேலும் கும்பகோண மடம் தான் ஒரிஜினல், கும்பகோண மடாதிபதி காஞ்சிபுரம் பக்கம் வந்தால் தங்கி இளைப்பார என காஞ்சி மடம் கட்டப்பட்டது.<br /><br />மேலும் ,ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமி ஒன்னும் மடாதிபதியே கிடையாது, அவருக்கு முன்னரே காஞ்சியில் இருந்து கவனிக்க பலர் நியமிக்கப்பட்டார்கள்,அது மடாதிபதிப்பதவியாக அல்ல ,வெறும் நிர்வாகியாக, கும்பகோண மடாதிபதி இறந்த பின் அடுத்து யார் என நியமிப்பதில் பிரச்சினை உருவாகவே சில காலம் மடாதிபதியாக யாருமே இல்லாமல் இருந்த சூழலில் ,காஞ்சியில் இருந்த சந்திரசேகரா தன்னைத்தானே "மடாதிபதி" அறிவித்து காஞ்சி மடத்தினை கைப்பற்றிக்கொண்டார்.<br /><br />இதுப்பற்றி ,கும்பகோண மடத்துக்கும், காஞ்சி மடத்துக்கும் வழக்கே நடந்துள்ளது. காஞ்சி சந்திரசேகரர் ,அப்போதைய வெள்ளைக்கார ஆட்சி முடிவில் இருந்த சூழலில் , தமிழக முதல்வராக இருந்த இருந்தவர்களை வளைத்து(ராஜாஜி செய்தார் என பேச்சு) "காஞ்சி" மடத்தினை தனக்கு வரும்படி செய்துவிட்டார்.<br /><br />காஞ்சியில் சங்கரராமன் என்பவரை கொல்லக்காரணமே இந்த பழைய விவகாரத்தினை எல்லாம் தோண்டியதால் தான் அவ்வ்!<br /><br />இதெல்லாம் அப்போ படிச்சது நினைவில் இருந்து சொல்கிறேன், ராஜாஜியாக இல்லாமல் கூட இருக்கலாம்,ஆனால் அப்போதைய தமிழக முதல்வரை வளைத்து தான் காஞ்சியை கைப்பற்றினார்கள், அது உண்மையான சங்கர மடமும் அல்ல, அதில் இருப்பவர்கள் மடாதிபதியாக யாராலும் பட்டமும் கட்டப்படவேயில்லை. எல்லாமே கோல்மால் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com