செந்தில் வாழ்த்துரை
Thursday, September 03, 2026
1397. என். கதை - சியாம் சுந்தர்
சார், வணக்கம்.
தாங்கள் எழுதிய 'என் கதை' போன வாரம் வரப்பெற்று. இன்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். 'அப்பாவின் கல்யாண வைபோகமே ' படித்தேன். சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
போடி நாயக்கனூரில் பிறந்த என் தாய் எனக்கு தாயான பிறகு என் 2 வயதில் எனக்கு தங்கை பிறந்து சிறிது நாட்களிலேயே இருவரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். என் அய்யம்மா ( அப்பம்மா) அதன் பிறகு எனது 30 வயது வரை எனக்கு தாய்க்கு தாயாக என்னை சீராட்டி வளர்த்து விட்டு மறைந்தார்கள்.
எனது சித்தியுடன் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சுகமில்லை. எனது சித்தப்பாமார்கள், அத்தைமார்கள், என் அப்பப்பா மட்டுமே எனது உலகம். இன்று என் அப்பம்மாவின் இடத்தை விக்ரமசிங்கபுரத்திலிருந்து வந்த என் மனைவி பிடித்துக் கொண்டாள். ஆனாலும் என் தாய், தங்கையின் நினைவுகள் இன்றளவும், என்றளவும் இருக்கும். அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
Wednesday, September 02, 2026
1396. என் கதை - வேல்முருகன்
வணக்கம்!
காசியாபுரம், தற்போதைய தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகாவில், நல்லூர்–ஆலடிப்பட்டிக்கு அடுத்த தெருவிலுள்ள ஒரு சிறு கிராமம்.
எனக்கும் ஐயா தருமிக்கும் ஏற்பட்ட தொடர்பும், எங்கள் கிராமமான காசியாபுரத்தை Google தேடலும் ஏற்படுத்திக் கொடுத்ததுதான்.
11.09.2011 அன்று மின்னஞ்சல் மூலம் ஐயாவிடமிருந்து வந்தது: “தம்பி, இங்கே ஒரு காசியாபுரத்தான்” என.
2012-ல் மதுரையில் சந்தித்தோம்.
நெல்லைச் சீமையில் பிறந்தாலும், மதுரையம்பதியில் வளர்ந்ததாலும், கேள்விகள் கேட்கப்படும் என்பதால் “தருமி” என்பது புனைப்பெயராகாது; வினையோடு காரணப்பெயரானது.
“என்கதை” – வாழ்க்கை வரலாறு.
ஆம், அவரின் 80 ஆண்டு கால நினைவலைகள், 1940–1960 காலகட்டத்தின் வாழ்வியல் சூழலை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.
பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதால், (அரசியல், வரலாறு, மதம், ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் கடவுள் எனும் மாயை, மதங்களும் சில விவாதங்களும் அவரின் சொந்த படைப்புகளும் உண்டு)அவரின் தமிழ் நடை படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
இன்பமும் துன்பமும் தானே வாழ்வு!
சிறு வயதில் தாயை இழந்தது முதல், முதுமையில் கோவிட்-19 தாக்கியது வரை...
சின்னச் சின்ன ஆசைகள், ஜாவா பைக் முதல்...
80-ஐக் கடக்கும் போது, பழைய நினைவுகளை அசைபோடும் போது, நண்பர்களைத் தேடும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பித்தளை, செம்பு என்று புழங்கிய காலம்
கும்பா, சொளவு, அருங்காட்சியகங்களுக்குச் சென்றுவிட்ட பொருட்களை ஞாபகப்படுத்துகிறார்.
கடவுள் மறுப்பினால் குடும்பத்தினர், நண்பர்களிடம் எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு சாமானியனின் வாழ்க்கையை உங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளப் படியுங்கள்.










.jpg)


.jpg)







.jpg)


