tag:blogger.com,1999:blog-12236223.post3504710565639873809..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 1தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-12236223.post-27049253937534255292009-02-26T22:26:00.000+05:302009-02-26T22:26:00.000+05:30தொல்காப்பிய செய்யுளில், ஐ வருதே..{4. ஆ ஈ ஊ ஏ ஐஓ ஔ ...தொல்காப்பிய செய்யுளில், ஐ வருதே..<BR/><BR/>{<BR/>4. ஆ ஈ ஊ ஏ ஐ<BR/>ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்<BR/>ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.}<BR/><BR/><A HREF="தொல்காப்பியம்%20-%20எழுத்ததிகாரம்%20-%2002" REL="nofollow">http://kaduveli.blogspot.com/2006/06/02.html</A><BR/><BR/><A HREF="தொல்காப்பியமும்,%20குறியேற்றங்களும்%20-%203" REL="nofollow">http://valavu.blogspot.com/2006/10/3.html</A><BR/><BR/>ஒருவேளை தொல்காப்பியமே 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று சொல்லுறாங்களோ..<BR/><BR/>தொல்காப்பியம் கி.மு700க்கு முற்பட்டது என்று சொல்லப்படுது.<BR/><BR/>"ஐ" ஆதியிலே இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால், தொல்காப்பிய காலத்திலே இருந்திருக்கிறது...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66345652017363178582009-02-26T21:45:00.000+05:302009-02-26T21:45:00.000+05:30//உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல...//உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல்லை. கிபி 9ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. ‘ஔ’ மற்றும் ‘ஃ’ வெகு பின்னர் சேர்ந்திருக்க வேண்டும்.//<BR/><BR/>ஸ்ரீதர்,<BR/>இராம.கி அய்யாவின் இந்தப்பதிவைப் பாருங்கள்.<BR/>http://valavu.blogspot.com/2006/10/1.html<BR/><BR/>(ஸ்ரீதரை ஆங்கிலத்தில் sridhar என்று எழுதுவது சரிதானா என்பதை உறுதிப்படுத்துங்கள்.)சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75405435360306353672009-02-25T14:35:00.000+05:302009-02-25T14:35:00.000+05:30நானும் தருமி கட்சி என்பதை சொல்லத்தேவையில்லை ..இல்ல...நானும் தருமி கட்சி என்பதை சொல்லத்தேவையில்லை ..இல்லையென்றால் நான் 'சோ' ஆகிவிடுவேன் என்பதற்காக அல்ல :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19447080461294632192009-02-25T13:52:00.000+05:302009-02-25T13:52:00.000+05:30//இந்த வரிசையோடு 'இசுகூல்-isukul' என்று இடம் பெறுவ...//இந்த வரிசையோடு 'இசுகூல்-isukul' என்று இடம் பெறுவது என்ன தவறு?//<BR/><BR/>என்னைப் பொறுத்தவரை அது <B>தவறுதான். </B>.<BR/>தமிழில் பள்ளி/ பாடசாலை என்று சொல்லுவோம். இசுகூல் என்றால் தமிழும் அசிங்கப்படுகிறது. அதுபோலவே ஆங்கிலமும்.<BR/><BR/><B>ஜா</B>லி <B>ஜ</B>ம்பர்,<BR/>//தமிழன்னைக்கு chastitiy belt கட்டாயம் போட்டு விடுவது என்று முடிவு செய்து விட்டீர்கள்; இல்லையா?/<BR/>இதன் பொருளைப் புரிந்து கொண்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84386484205128129662009-02-25T11:57:00.000+05:302009-02-25T11:57:00.000+05:30//உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல...//உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல்லை. கிபி 9ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. ‘ஔ’ மற்றும் ‘ஃ’ வெகு பின்னர் சேர்ந்திருக்க வேண்டும்.//<BR/><BR/>இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வாதம் சரியானது தான்.ஆனால் இது தவறான செய்தி.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2315280962213201312009-02-24T21:24:00.000+05:302009-02-24T21:24:00.000+05:30//உங்க பள்ளியில் நீங்க இப்படித்தான் 'இசுகூல்' என்ற...//உங்க பள்ளியில் நீங்க இப்படித்தான் 'இசுகூல்' என்றா சொன்னீர்கள்?//<BR/><BR/>Czech: škola<BR/>Danish: skole<BR/>Dutch: school<BR/>Estonian: kool<BR/>Finnish: koulu<BR/>French: école<BR/>German: die Schule<BR/>Hungarian: iskola<BR/>Icelandic: (barna)skóli<BR/>Indonesian: sekolah<BR/>Italian: scuola<BR/>Latvian: skola<BR/>Lithuanian: mokykla<BR/>Norwegian: skole<BR/>Polish: szkoła<BR/>Portuguese (Brazil): escola<BR/>Portuguese (Portugal): escola<BR/>Romanian: şcoală<BR/>Slovak: škola<BR/>Slovenian: šola<BR/>Spanish: escuela, colegio<BR/>Swedish: skola<BR/>Turkish: okul<BR/><BR/>இந்த வரிசையோடு 'இசுகூல்-isukul' என்று இடம் பெறுவது என்ன தவறு?<BR/><BR/>ஆங்கிலத்தில் 'ஸ்கூல்' என்று உச்சரிக்கத்தெரிந்ததனால் , தமிழிலும் அதே உச்சரிப்பைக் கொண்டு வரவேண்டும் என முனையும் போது தமிழின் இயல்பை நாம் மாற்றுகிறோம்.ஆங்கில உச்சரிப்பைக் கற்காத ஒரு தமிழன் 'இசுகூல்' என்றே உச்சரிக்கிறான்.<BR/><BR/>'Z' என்ற ஆங்கில எழுத்தை 'இசட்' என்று பெரும்பாலானோர் உச்சரிக்கவும்,எழுதவும் செய்கிறோம்.'zed' என்று உச்சரிக்க,எழுத சிரமம் என்பதால் 'இசட்' என்று பயன்படுத்துகிறோம்.இதில் என்ன தவறு இருக்கிறது?சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63328010673939625042009-02-22T21:17:00.000+05:302009-02-22T21:17:00.000+05:30தமிழ் விடுதலை ஆகட்டும் !சி. ஜெயபாரதன், கனடாhttp://...தமிழ் விடுதலை ஆகட்டும் !<BR/><BR/>சி. ஜெயபாரதன், கனடா<BR/><BR/>http://jayabarathan.wordpress.com/<BR/><BR/>புத்தம் புதிய கலைகள், பஞ்சப்<BR/>பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;<BR/>மெத்த வளருது மேற்கே, அந்த<BR/>மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …<BR/><BR/>சொல்லவும் கூடுவ தில்லை! அவை<BR/>சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….<BR/><BR/>என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!<BR/>இந்த வசையெனக் கெய்திட லாமோ ?<BR/>சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்<BR/>செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!<BR/><BR/>மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)<BR/><BR/>தலைமுறை ஒரு கோடி கண்ட, என்<BR/>தமிழ் விடுதலை ஆகட்டும்! ….<BR/>தேனால் செய்த என் செந்தமிழ்தான்<BR/>திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!<BR/><BR/>பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)<BR/><BR/><BR/>மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்<BR/><BR/>உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.<BR/><BR/>தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.<BR/><BR/>தூய தமிழரும், தூய தமிழும்<BR/><BR/>ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?<BR/><BR/>அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.<BR/><BR/>2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!<BR/><BR/>தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!<BR/><BR/>நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.<BR/><BR/>தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!<BR/><BR/>பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.<BR/><BR/>புத்தம் புதிய கலைகள், பஞ்சப்<BR/>பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;<BR/>மெத்த வளருது மேற்கே, அந்த<BR/>மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை<BR/><BR/>சொல்லவும் கூடுவ தில்லை! அவை<BR/>சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!<BR/>மெல்லத் தமிழினிச் சாகும், அந்த<BR/>மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!<BR/><BR/>என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!<BR/>இந்த வசையெனக் கெய்திட லாமோ ?<BR/>சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்<BR/>செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!<BR/><BR/>ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!<BR/><BR/>இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!<BR/><BR/>போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !<BR/><BR/>தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !<BR/><BR/>தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!<BR/><BR/>ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.<BR/><BR/>சலுகை போனால் போகட்டும்! என்<BR/>அலுவல் போனால் போகட்டும்!<BR/>தலைமுறை ஒருகோடி கண்ட, என்<BR/>தமிழ் விடுதலை ஆகட்டும்!<BR/><BR/>என் உயிர் போனால் போகட்டும்!<BR/>என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!<BR/>தேனால் செய்த என் செந்தமிழ்தான்<BR/>திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!<BR/><BR/>என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.<BR/><BR/>***********<BR/><BR/>தகவல்:<BR/><BR/>1. http://www.geotamil.com/pathivukal/jeyabarathan_on_buhari_oct2005.html<BR/><BR/>2. http://www.geotamil.com/pathivukal/response2_on_jeyabarathan.html<BR/><BR/>3. http://www.geotamil.com/pathivukal/response3_by_jeyabarathan.html<BR/><BR/>4.http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html<BR/><BR/>********<BR/><BR/>S. Jayabarathan <BR/><BR/>http://jayabarathan.wordpress.com/<BR/><BR/>[jayabarat@tnt21.com (April 14, 2008)]Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5425792819514266262009-02-02T11:13:00.000+05:302009-02-02T11:13:00.000+05:30பிறமொழிச் சொற் கலப்பு ஒரு மொழிக்குப் புறத்தே ஏற்பட...பிறமொழிச் சொற் கலப்பு ஒரு மொழிக்குப் புறத்தே ஏற்படும் மாற்றம் போன்றது; ஒலிக்கலப்பு அகத்தே ஏற்படும் மாற்றமாகும். பிற சொற்களை தமிழ்ப்படுத்தி , தமிழ்மயமாக்கி ஆள்வதன் மூலம் தமிழ் வளரும்; பிறமொழி ஒலிப்புக்களைப் புகுத்தப்புகுத்த ஒரு மொழி வேறொரு மொழி போல் மாறித் தோன்றத் தொடங்கும்.<BR/><BR/>ஒரு மொழியின் இலக்கண மரபுகள் அதன் வாழ்வாகும். அடிப்படை இலக்கண மரபுகளை மாற்றுவது, இனம் மாறிப் பிறிதொரு இனத்திற்கு ஆட்படுவதாகும்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72751216061146008752009-02-02T10:55:00.000+05:302009-02-02T10:55:00.000+05:30கம்பர் தம் பல்லாயிரம் பாடல்களில் இராமன் கதையையே கூ...கம்பர் தம் பல்லாயிரம் பாடல்களில் இராமன் கதையையே கூறுகின்றாராயினும் ஓரிடத்தில்கூட இராமனை ராமனென்று குறிக்கவில்லை.அவர் வடமொழிப் பெயர்களைத் தமிழ் ஒலிப்படுத்தியும் மொழிப்படுத்தியும் ஆக்கும் பெயரமைப்புகள் குறிப்பிடத்தக்கன. அவற்றை நம் இளைய தலைமுறையினர் அறியவேண்டாமா?<BR/>ரிஷபம் இடபமாய், லட்சியம் இலட்சியமாய், பைபிள் விவிலியமாய்,ஜாக்கப் ஆக்கோபு ஆய் ஆக்கம் பெற்ற பழம் மரபுகளை என்ன செய்வது? இவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்ற பழந்தமிழிலக்கியங்களை எதிர்கால இளம்தலைமுறையினர் விளங்கிக் கொள்ள வேண்டாமா?<BR/><BR/>பழைய மரபையும் விட்டுவிடாமல், இன்றைய புதிய சொல்லாட்சிகட்கும்<BR/>இடம் கொடுத்துத் தமிழின் இனிமையும் எளிமையும் இளமையும் கெடாமல் வரம்புகட்ட வேண்டி நேரம் இது. இதில் தமிழர்கள் ஓற்றுமையுடன்<BR/>கூட்டுணர்வுடன் செயற்பட வேண்டும்.<BR/>வெறும் விவாதங்கட்கு இடம் தந்து தமிழை இழந்துவிடக் கூடாது.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60447465015318079482009-02-02T01:28:00.000+05:302009-02-02T01:28:00.000+05:30சுவாரசியமாகத்தான் இருக்கிறது விவாதம்.- எந்த ஒரு மொ...சுவாரசியமாகத்தான் இருக்கிறது விவாதம்.<BR/><BR/>- எந்த ஒரு மொழியுமே தோன்றிய காலந்தொட்டு ஒரே வடிவத்தையோ, லிபியையோ, சொற்களையோ கொண்டிருப்பதில்லை. தமிழ் மொழியின் எழுத்து வடிவம் பல்வேறு காலத்திலும் மாறுபட்டு வந்திருக்கிறது. <A HREF="http://pkp.blogspot.com/2008/12/blog-post_30.html" REL="nofollow">எழுத்துருக்களின் பயனம்</A> என்ற தலைப்பில் பதிவர் பிகேபி பதிவிட்டிருக்கிறார். உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல்லை. கிபி 9ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. ‘ஔ’ மற்றும் ‘ஃ’ வெகு பின்னர் சேர்ந்திருக்க வேண்டும்.<BR/><BR/>அதுபோல் ஜ, ஷ, ஹ, கஷ போன்ற எழுத்துகளும் பின்னர் சேர்ந்திருக்க வேண்டும். தமிழ் மொழி பல்வேறு எழுத்துருக்களை சேர்த்து கொண்டிருப்பது அது மொழியின் வளர்ச்சிக்குத்தானே வழி வகுக்கும்? இல்லை நமது மக்கள் உச்சரிக்கும் முறையில்தான் மொழியும் இருக்க வேண்டும் என்றால் சிறப்பு ‘ழ’கரம் தமிழில் இருந்திருக்கவே முடியாது. மலையாளிகள் உச்சரிக்கும் அளவிற்கு கூட தமிழர்களில் பெரும்பாலோனோர் ‘ழ’கரத்தை உச்சரிப்பது கிடையாது. <BR/><BR/>எழுத்துருக்களின் வடிவ மாறுதலை பார்க்கும்போது கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு இந்திய மொழிகளின் (தமிழ் உட்பட) எழுத்துரு ஒன்றாகவே இருக்கிறது. பின்னர் சற்று வேறு வடிவத்தில் (தற்போதைய தென்னிந்திய எழுத்துருக்களின் வகை போன்று) சேர்ந்து எழுதும் அளவிற்கு மாறியிருக்கிறது. இது அன்றைய தேவைக்கு ஏற்ப மாறியிருந்திருக்கலாம். இல்லை நான் இப்பொழுதும் 14-ம் நூற்றாண்டு முறைதான் ‘க’ எழுதுவேன் என்று அடம்பிடிக்கமுடியுமா என்ன?<BR/><BR/>வங்காள மொழியில் ‘ர’கர ஒலி கிடையாது. அதனால் அந்த மாநிலத்தில் பலருக்கும் ‘ர’கர ஒலிக்கவே வராது. எண்ணற்ற இலக்கியம் இயற்றப்பட்டாலும், ‘சக்ரபர்த்தி’ என்றுதான் அவர்கள் சொல்ல பழக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் பெரும்பாலும் எல்லா ஒலிகளுமே உண்டு. 19-ம் நூற்றாண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட எழுத்துகள் மட்டும் என்ன பாவம் பண்ணியதோ (ஔ மற்றும் ஃ தவிர).<BR/><BR/>லை, னை, போன்ற எழுத்துகளில் துணையெழுத்து மாற்றம் போன 40 ஆண்டுகளில்தான் நடந்தது. தற்போதைய unicode-ல் அப்படித்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதே சமயம் கூ, சூ, லூ போன்ற வெவ்வேறு விதமான முறையில் நெடில் எழுதும் வழக்கம் இன்றும் தொடரத்தான் செய்கிறது. <BR/><BR/>ஆகவே எழுத்துரு மாற்றங்களோ, புதிய எழுத்துகளோ மொழிக்கு சிறப்பு தருபவையாகவே இருக்கின்றன என்பது எனது எண்ணம்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43070883469537369682009-01-13T22:05:00.000+05:302009-01-13T22:05:00.000+05:30தமிழ் மேல என் இந்த (கொலை) வெறி? விடங்கப்பு தமிழ் ம...தமிழ் மேல என் இந்த (கொலை) வெறி? விடங்கப்பு தமிழ் மேல ஆர்வம் இருக்குறது தப்பு இல்லை. பேச்சு வழக்குல தூய தமிழ் பயன்படாது முடியாதுன்றத எல்லாரும் ஒத்துகுறீங்கள.. அது போதும். எழுத்து வழக்குல தூய தமிழ் பயன்படுத்த எல்லாரும் கொஞ்சம் சிரம பட்டாவது பயன்படுத்துவோம்.வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15183376228072699492009-01-13T21:36:00.000+05:302009-01-13T21:36:00.000+05:30///TBCD,ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட...///<BR/>TBCD,<BR/>ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டும் இல்லை. மற்ற சங்க இலக்கியங்களையும் தமிழார்வம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.<BR/>/// <BR/>கற்றுணரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..<BR/><BR/><BR/>///<BR/>எத்தனை நாளுக்குத் தான் அடுத்தவர்கள் சொல்வதையே தமிழர் வரலாறு என்று படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறோம்? நேரடியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தே தெரிந்து கொள்ளலாமே. <BR/>///<BR/>இயல்பாக தமிழிலேயே எழுதுங்க என்றுச் சொன்னால், எல்லாரும், எட்டுத்தொகைப் படிச்சிட்டு தான் இயல்பான தமிழில் எழுதனும் என்பதாக நீங்க சொல்லவில்லை என்று புரிந்துக்கொள்ளலாமா.. :P<BR/><BR/><BR/>///<BR/>உங்களுக்கு வேறுபட்ட தமிழர் வரலாறு தென்படத் தொடங்கும்.<BR/>/// <BR/><BR/>தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதிய குமரன் என்று சொல்லாமா... :))<BR/><BR/>TBCD,<BR/>(முன்னும் பின்னுமாக) இப்படி பதிவிட்டால் வாசிப்பவர்களுக்கு எளிதாயிருக்காதா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29830904313559443112009-01-13T21:33:00.000+05:302009-01-13T21:33:00.000+05:30TBCD,கிண்டல்களைக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைத்துவிட்...TBCD,<BR/><BR/>கிண்டல்களைக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொள்ள முயல்வோம். சரியா?<BR/><BR/>கட்டாயம் தமிழில் எழுதுபவர்கள் எல்லாம் சங்க இலக்கியங்களைப் படித்துவிட்டுத் தான் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. சொன்னது, சொல்ல வருவது எல்லாம் தமிழார்வம் இருக்கிறது என்று சொல்லிக் கொள்பவர்களாவது சங்க இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்பதே. அவர்கள் கூட 'ஆர்வம் இல்லை' என்று ஒதுங்கினால் பின்னர் அவர்கள் பேசும் தமிழார்வம், தமிழ்ப்பற்று என்பதெல்லாம் வெறும் வெளிவேடம் என்று தான் புரிந்து கொள்ளப்படும். தமிழார்வமும் தமிழ்ப்பற்றும் பாராட்டப்படவேண்டியவை. அந்த ஆர்வமும் பற்றும் சங்க இலக்கியங்களைக் கற்றுணர்வதால் இன்னும் நன்கு வளரும் - அவ்வளவு தான் சொல்ல வந்தேன். அதற்கு மேல் எதையும் உய்த்துணராதீர்கள். :-) <BR/><BR/>தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத இந்த குமரன் யார்? தரவுகளை வரிசையாகத் தந்து வருகிறேன். அதற்கு என்னுடைய விளக்கங்களையும் உய்த்துணர்வுகளையும் தருகிறேன். வெறும் இடைபரட்டுகளை (Interpretation) மட்டும் தந்து சென்றால் அது முழுமையாக இருக்காது என்பதால் தரவுகளோடு தருகிறேன் - அத்தரவுகளை மற்றவர் இன்னும் நன்கு உரசிக் கற்று என்னுடைய இடைபரட்டுகள் சரியா இல்லையா என்று சொல்லலாம் என்றே. தமிழார்வமும் பற்றும் உடையவர்களேனும் அவற்றைப் படிக்க வேண்டும் இல்லையா? எவ்வளவு நாட்கள் தான் வெறும் இடைபரட்டுகளை மட்டுமே அதுவும் வெளியாட்கள் சொன்னதையே படித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நேரடியாக நாமே தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே? இதைத் தான் சொன்னேன். தமிழர் வரலாறு பலவித இடைபரட்டுகளுடன் பலவித தவறுகளுடன் எழுதப்பட்டிருப்பதாகவே சங்க இலக்கியத்தை நேரடியாகப் படிக்கும் போது தோன்றுகிறது. அவற்றை எடுத்து வைப்பதால் 'வரலாற்றை மாற்றி எழுதியவன்' ஆகிவிடமாட்டேன். அந்த அளவிற்குத் தமிழ்ப்புலமையும் பயிற்சியும் இன்னும் ஏற்படவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28048923568252766082009-01-13T21:11:00.000+05:302009-01-13T21:11:00.000+05:30கற்றுணரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இ...கற்றுணரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..<BR/><BR/>///<BR/>TBCD,<BR/><BR/>ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டும் இல்லை. மற்ற சங்க இலக்கியங்களையும் தமிழார்வம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.<BR/>/// <BR/><BR/>இயல்பாக தமிழிலேயே எழுதுங்க என்றுச் சொன்னால், எல்லாரும், எட்டுத்தொகைப் படிச்சிட்டு தான் இயல்பான தமிழில் எழுதனும் என்பதாக நீங்க சொல்லவில்லை என்று புரிந்துக்கொள்ளலாமா.. :P<BR/><BR/>///<BR/>எத்தனை நாளுக்குத் தான் அடுத்தவர்கள் சொல்வதையே தமிழர் வரலாறு என்று படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறோம்? நேரடியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தே தெரிந்து கொள்ளலாமே. <BR/>///<BR/><BR/>தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதிய குமரன் என்று சொல்லாமா... :))<BR/><BR/>///<BR/>உங்களுக்கு வேறுபட்ட தமிழர் வரலாறு தென்படத் தொடங்கும்.<BR/>///TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29046484191601150482009-01-13T20:03:00.000+05:302009-01-13T20:03:00.000+05:30TBCD,ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டு...TBCD,<BR/><BR/>ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டும் இல்லை. மற்ற சங்க இலக்கியங்களையும் தமிழார்வம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை நாளுக்குத் தான் அடுத்தவர்கள் சொல்வதையே தமிழர் வரலாறு என்று படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறோம்? நேரடியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தே தெரிந்து கொள்ளலாமே. தொடக்கமாக எனது 'கூடல்' வலைப்பதிவில் 'இலக்கியம்', 'இலக்கியத்தில் இறை' என்ற வகைகளைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு வேறுபட்ட தமிழர் வரலாறு தென்படத் தொடங்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20678417463692543712009-01-13T19:22:00.000+05:302009-01-13T19:22:00.000+05:30அடடா...அட டட..டா...சாலிக்கு ஒரு ஓ போடுவோம்..இப்போத...அடடா...அட டட..டா...<BR/><BR/>சாலிக்கு ஒரு ஓ போடுவோம்..<BR/><BR/>இப்போதைக்கு உள்ளேன் ஐயா...<BR/><BR/>பொறுமையாக நாளை நானும் கலந்துக்கிறேன்.<BR/><BR/>ஃஃஃஃஃஃஃஃஃ<BR/><BR/>நடுவில் நம்ம நிழற்பட வித்தகர் ஐயப்பன் (சீவ்சு என்று எழுதினால் அடிப்பாரோ என்ற பயம்), ஏன் தமிழில் பொய்யார்வம் காட்டுறீங்க..ஆர்வம் இருந்தால் தொல்காப்பியம் கற்க வந்திருக்கனும் என்று குட்டிவிட்டுப் போய்விட்டார்..<BR/><BR/>அதனால்..மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு, உங்கள் கேள்விகளுக்கு பதில்..போடுறேன் :PTBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15854736043620141292009-01-13T14:41:00.000+05:302009-01-13T14:41:00.000+05:30//BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said... சாலிசம்பர் ச...//BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said... <BR/>சாலிசம்பர் சொல்வது சரி!!!!//<BR/><BR/>அதாவது,<BR/>ப்ளுச்பேசு அறிவுமணி செர்மனியில இருந்து சாலி சம்பர் சொல்றது சரின்னு சொல்றார்.<BR/>சரிதானே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34216918758361016032009-01-13T07:21:00.000+05:302009-01-13T07:21:00.000+05:30சாலிசம்பர் சொல்வது சரி!!!!சாலிசம்பர் சொல்வது சரி!!!!ARIVUMANI, LISBONhttps://www.blogger.com/profile/03089729441561456912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25588914339492321462009-01-12T20:26:00.000+05:302009-01-12T20:26:00.000+05:30ஜாலி ஜம்பர்,//அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்...ஜாலி ஜம்பர்,<BR/>//அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்று நேர்மையாகவே நம்பும்போது அதில் தவறேதும் இல்லை தான். //<BR/>நல்லது.<BR/><BR/>//ஆனால் வேற்று மொழி வார்த்தைகளை தமிழ்மயப்படுத்தினால் சிறப்பாக இருக்குமே என்பது தான் என் எண்ணம்.//<BR/>அதாவது நமது மொழியையும், எந்த மொழியிலிருந்து சொற்களை எடுக்கிறீர்களோ அந்த மொழியையும் 'உண்டு இல்லை என்று பார்த்து விடுவது' என்கிறீர்கள்; இல்லையா? அதாவது 'இசுடாலின்', 'சேக்குப்பியர்' என்பது மாதிரி.<BR/><BR/>வாழ்க உங்கள் தமிழார்வம் - வேறென்ன சொல்வது!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70754884775342093092009-01-12T20:22:00.000+05:302009-01-12T20:22:00.000+05:30உ.த.,//என்னை மட்டும் ஏன் இப்படி நட்டாத்துல விட்டுட...உ.த.,<BR/>//என்னை மட்டும் ஏன் இப்படி நட்டாத்துல விட்டுட்டீங்க..?//<BR/><BR/>என்ன சொல்றீங்க?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64114543204977835452009-01-12T20:16:00.000+05:302009-01-12T20:16:00.000+05:30ஜாலி சம்பர்,கீழே கொடுத்துள்ள உங்கள் கருத்துக்களோடு...ஜாலி சம்பர்,<BR/>கீழே கொடுத்துள்ள உங்கள் கருத்துக்களோடு முற்றிலுமாக முரண்படுகிறேன்.<BR/><BR/>//தமிழில் எழுதும் போது சென்னி என்று எழுதலாம் என்றும் முடிவுக்கு வந்துள்ளேன்.//<BR/><BR/>அதாவது தமிழன்னைக்கு chastitiy belt கட்டாயம் போட்டு விடுவது என்று முடிவு செய்து விட்டீர்கள்; இல்லையா?<BR/><BR/>//சேக்குப்பியரை [:-))] வெள்ளையர் போன்றே உச்சரிக்க அவசியம் இல்லை.//<BR/><BR/>அதாவது தமிழை மற்றவர்களும் அவர்களுக்குப் பிடித்தது மாதிரி சொல்லலாம். இல்லையா? 9Mஉடியாமல் பேசுவதைச் சொல்லவில்லை.)<BR/><BR/>//இ முன்னால் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இசுடாலின்.<BR/>இசுகூல் என்பது போல.//<BR/><BR/>உங்க பள்ளியில் நீங்க இப்படித்தான் 'இசுகூல்' என்றா சொன்னீர்கள்?<BR/><BR/>//மேற்கொண்டு நான் விளக்கங்கள் சொல்ல முற்படுவது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றுகிறது, //<BR/>இதில் ஏதுங்க அதிகப் பிரசங்கித்தனமெல்லாம்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47596110624823257772009-01-12T19:26:00.000+05:302009-01-12T19:26:00.000+05:30// //sam george" என்ற பெயரை தமிழில் எழுத முடியவ...// //sam george" என்ற பெயரை தமிழில் எழுத முடியவில்லை என்ற ஏக்கத்திலும் கோபத்திலும்..//<BR/><BR/>இருக்குமோ? என்னமோ ஆழ்மனது, உள்மனது அப்டிம்பாங்களே அதுமாதிரியோ?<BR/>அதே மாதிரி மேல ராஜ நடராஜனும் என் கட்சியில் சேருவதற்கு அதுதான் காரணமோ? :-) //<BR/><BR/>அய்யா,உங்களுடைய இந்தப்பதிலுக்குப் பின் , மேற்கொண்டு நான் விளக்கங்கள் சொல்ல முற்படுவது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றுகிறது, அதனால் நிறுத்திவிடுகிறேன்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68242160769849538052009-01-12T15:47:00.000+05:302009-01-12T15:47:00.000+05:30இண்ட்ரஸ்டிங் என்பதை நேரடி தமிழில் ஆர்வம் என எழுதலா...இண்ட்ரஸ்டிங் என்பதை நேரடி தமிழில் ஆர்வம் என எழுதலாம், அதற்காக இன்ரசுடிங் என்பது காமெடியாக(நகைச்சுவை)தான் இருக்கும்.<BR/><BR/>உங்களுடன் ஒத்து போகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62543580499570347392009-01-12T14:25:00.000+05:302009-01-12T14:25:00.000+05:30nouns (இதுக்கு தமிழ்ல பெயர்சொல்னு நெனைக்கிறேன்) தவ...nouns (இதுக்கு தமிழ்ல பெயர்சொல்னு நெனைக்கிறேன்) தவிர மற்ற எல்லா இடத்துலயும் தூய தமிழ்ல கொஞ்சம் சிரம பட்டாவது பயன்படுத்தலாம்வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5025855568047262432009-01-12T11:38:00.000+05:302009-01-12T11:38:00.000+05:30துளசியம்மா,இ முன்னால் சேர்த்துக்கொண்டால் நன்றாக இர...துளசியம்மா,<BR/>இ முன்னால் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இசுடாலின்.<BR/><BR/>இசுகூல் என்பது போல.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.com