Thursday, June 25, 2015

844. கடைசிப் பெஞ்சுதான்.. ஆனாலும்.. - (தருமி பக்கம் - 30)








*




1961

ஓராண்டிற்குப் பிறகு  ... மீண்டும் மதுரை.

இனி எங்கே, எந்த கல்லூரியில் இடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பா இடம் பிடித்து விட்டார்கள். தியாகராஜர் கல்லூரியில் விலங்கியல் துறையில் அப்பாவின் ஆணையின் படி சேர்ந்தாயிற்று. வேறு துறைகளில் இடம் இல்லை.  வேறு துறைகளில் இடம் நல்லவேளை இல்லாமல் போயிற்று. கிடைத்திருந்தால் அதோ கதியாக ஆயிருந்திருக்கலாம். அதிலும் ஒரு வேளை கணக்குப் பாடத்தில் மட்டும் இடம் என்று என்னை அதில் சேர்த்திருந்தால் .... .அம்பேல்! நட்டத்திலும் ஒரு லாபம்.  என்னை மாதிரி மக்கு பசங்களுக்கு ஏத்த துறையில் இடம் கிடைத்தது என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வதுண்டு. சத்தமாகச் சொல்வதில்லை - மற்ற விலங்கியல் புத்திசாலிகள் கோபம் கொள்ளக் கூடாதே .. அதற்காக இதை நான் வெளியில் சொல்வதேயில்லை. இப்பவும் நீங்களும் இதை வெளியே சொல்லி விடாதீர்கள்.

பல்கலையில் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்காகக் கொடுத்த கடைசி நாட்களில் தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன். ஆகவே என் வகுப்பிலேயே பழைய மாணவர்களுக்கு நடுவே புத்தம் புது முகமாகப் போய்ச் சேர்ந்தேன். ஏனெனில் கல்லூரி ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டு மாதம் கழிந்த பின் தான் சேர்ந்திருந்தேன். தமிழ், ஆங்கிலம் வகுப்புகளுக்கு combined classes.  Physics, Chemistry and Zoology - மூன்று வகுப்புகளும் ஒன்று சேர இருப்போம். இந்த இரு பாடங்களிலும் பெரிய தகராறு இல்லை. ஆனால் விலங்கியலில்  பாடங்கள் புரிந்தன. ஆனால்,  செய்முறை வகுப்புகள் என்னைப் பார்த்து முறைத்தன.

இந்த நிலையில் முதல் பருவம் முடிந்து அப்பருவத் தேர்வுகளும் வந்தன. படித்தேன் .. எழுதினேன். இதுவரை எனக்கு அதிக நண்பர்களும் வாய்க்கவில்லை. இன்னும் ஒரு வகையில் புது முகமாகத்தான் இருந்தேன். ஆனால் பாருங்கள் ... தேர்வு மதிப்பெண்கள் வந்ததும் பெயர் கன்னா பின்னா என்று ’பறக்க’ ஆரம்பித்து விட்டது.

மொழிகளுக்கான எங்கள் combined classesகளிலேயே நாங்கள் உட்கார்ந்திருக்கும் பாணியிலேயே எங்களின் ‘படிப்பின் தரம்’ புரிவது மாதிரி இருக்கும். மூன்று வரிசைகளில் பெஞ்சுகள். ஒவ்வொரு வரிசையிலும் 10 பெஞ்சுகளாவது இருக்கும். வகுப்பில் நுழைந்ததும் இருக்கும் முதல் வரிசையில்  Physics பசங்க முதல் வரிசையிலிருந்து நான்கைந்து வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். அடுத்து நடுவில் உள்ள வரிசைகளில் முதல் மூன்று பெஞ்சுகளில் யாரும் அமர்ந்திருக்க மாட்டார்கள். அதன் பின்   Chemistry பசங்க உட்கார்ந்திருப்பாங்க. கடைசி வரிசை. அதில் நாங்கள் உட்கார்ந்திருப்போம் -- கடைசி நாலைந்து  பெஞ்சுகளில் மட்டும் உட்கார்ந்திருப்போம். முந்திய வரிசைகளில் ஏனோ நாங்கள் அமர்வதில்லை. அம்புட்டு தன்னடக்கம்!

வழக்கமாக கல்லூரிகளில் ஆங்கில, தமிழ் வகுப்புகளில்  சில ஆசிரியர்களிடம் மட்டும்  கொஞ்சம் வாலாட்டுவது உண்டு. ஆனால் எங்களுக்கு வந்த ஆசிரியர்களிடம் அதெல்லாம் முடியாது. தமிழுக்கு வந்த ஆசிரியர்களில் ஒருவரைத் தவிர ஒவ்வொருவரும் இசையறிவு மிக்கவர்கள். இசையோடு தமிழ்ப்பாடல்கள் கற்பிப்பார்கள். ஆங்கிலத்தில் ஒரு ஆசிரியர் தவிர மற்றவர்கள் வகுப்பில் அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கும்.

அப்போது தான் படித்து முடித்து ஆசிரியராக வந்த ஒரு ஆசிரியர் non-detailed வகுப்பில் Thomas Hardy எழுதிய Woodlanders  என்ற புதினத்தின் கதாநாயகன் Winterbone-ன்(?) காதல் தோல்விக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த போது வருத்தத்தில் எங்களில் சிலர் கண்களில் கண்ணீர் வந்தது - நிஜமாகவே! இன்னொரு பேராசிரியர்  -  ஆங்கிலத்தில் பேராசிரியர் சக்தி வேல் எனக்குப் பல வகையில் ஒரு மாடலாகவே இருந்தார். அவரை என் மாணவப் பருவம் முடிந்து கால் நூற்றாண்டுகள் கழித்துப் பார்த்த போது அவர் என் பெயரை நினைவில் வைத்து அழைத்த போது மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

எங்கெங்கேயோ போய் விட்டோமோ... முதல் பருவ தேர்தலின் மதிப்பெண்கள் வருவதைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தேனோ...  தமிழில் என்ன மதிப்பெண்கள் வாங்கினேன் என்று நினைவில் இல்லை. ஆங்கிலத்தில் என்ன மதிப்பெண்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் மூன்று வகுப்புகளிலும் நான் இரண்டாவது மதிப்பெண் வாங்கியிருந்தேன். முதல் மதிப்பெண் ஒரு  Physics பையனுக்கு. என் வகுப்பு பசங்களுக்குப் பல ஆச்சரியம். முதல் மதிப்பெண் ஒரு  Physics பையனுக்கு. அட... அது நார்மல். நல்லா படிக்கிற பசங்க அங்க இருப்பாங்க. போகுது. ஆனா இன்னும் பல  Physics, Chemistry பசங்க இருக்கும் போது  நம்ம பய எப்படி இரண்டாவது மார்க் வாங்கிட்டான்னு ஆச்சரியம். அட ... ஆச்சரியம் அதோடு மட்டுமில்லை ... இம்புட்டு லேட்டா வந்துட்டு செகண்ட் மார்க் வாங்கிட்டானேன்னு நம்ம க்ளாஸ் பசங்க நினச்சதில கொஞ்சம் உயரமா போய்ட்டேன்.

அதுவும் இரண்டாம் வருஷத்தில இரண்டாம் பருவத்து மதிப்பெண்கள் எங்கள் எல்லோருக்கும் மிக முக்கியம்.  அந்தக் காலத்தில ‘பெரிய’ பரிட்சைக்குப் போவதற்கு முன்னால் உள்ள இரண்டாம் பருவத் தேர்வுகள் எங்களுக்கு ஒரு விஷப் பரிட்சை. அந்த தேர்வுகளுக்குப் பெயர் selection exams!  நல்லாவே வடி கட்டி விடுவார்கள். முதலாண்டில் பல்கலைத் தேர்வுகளே கிடையாது. இரண்டாவது வருஷத்தில் இருந்து தான் பல்கலைத் தேர்வுகள். அதில் எழுதுவதற்கு தான் இந்த selection exams. இரண்டாமாண்டு இரண்டாம் பருவம். எங்கள் செட்டுக்கு முந்திய வகுப்பில் தேர்வு முடிவுகள் அவ்வளவு நன்கில்லை என்று பேராசிரியர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த தடவை selection exams ரொம்ப சீரியஸாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலத்தில் பயங்கரமாக வடி கட்டி விட்டார்கள். எங்கள் வகுப்பில் பலருக்கும் ஆங்கிலத்தில் பயங்கர அடி. அது பத்தாது என்பது போல் மேஜர் சப்ஜெக்ட்களிலும் இன்னொரு அடி காத்திருந்தது. இந்த இரண்டிலும் எங்கள் வகுப்பில் இருவரைத் தவிர - நானும் இன்னொரு ”பையனும்”! தப்பிப் பிழைத்தோம். அவர் இன்னொரு ’பையன்’ இல்லை! எங்களை விட ஐந்தாறு வயது மூத்தவர்; இலங்கையிலிருந்து படிக்க வந்திருந்தார்.  ஜாலியான பேர்வழி. அதோடு முதலாண்டில் எனக்கு பிறகு அட்மிஷன் வாங்கி சேர்ந்திருந்தார். பெயர் யோகேந்திரன். அவர் கடைசி நம்பர். எனக்கு அதற்கு முந்திய நம்பர். ஆங்கிலம் நன்கு பேசுவார்; எழுதுவார். தமிழ் சுத்தமாக வராது. எழுத்துக் கூட்டிதான் வாசிப்பார். சரோஜா தேவியின் பரமாத்ம விசிறி. அதிலும் சரோஜா தேவியின் நடைக்கு அவர் அப்படியே சரணாகதி அடைந்து விடுவார். பாவம்... அவர் ஒருவரை மட்டும் தமிழில் ‘போட்டுப் பார்த்து விட்டார்கள்”. அதாவது அவருக்கு தமிழ்த் தேர்வு ஆண்டிறுதியில் பல்கலையில் எழுத செலக்‌ஷன் கிடைக்கவில்லை. ஆக இரண்டாமாண்டில் எங்கள் வகுப்பில் எனக்கு மட்டுமே தமிழ், ஆங்கிலம், மேஜர், ஆன்சிலரி என்று எல்லாத் தேர்வுகளுக்கும் செலக்‌ஷன் கிடைத்திருந்தது. இதுனால இன்னும் கொஞ்சம் உயரத்திற்குப் போய்ட்டோம்லா ...!

ஆனாலும் ஆங்கிலத்தில் செலக்‌ஷன் அதிகமாக இருந்ததால் ஒரு ஸ்ட்ரைக் நடந்தது. அந்தக் காலத்தில் இல்லாத ஒரு பெயர் - cut off marks! அதை மிகவும் குறைத்து பலருக்கும் செலக்‌ஷன் அந்தப் போராட்டத்தால் கிடைத்தது. இந்தப் போராட்டத்தோடு மேஜர் தேர்வுகளுக்கும் செலக்‌ஷன் எளிதாகி விட்டது.

ஆனா... அதுக்குள்ள நம்ம நல்ல பெயர் வாங்கிட்டோம்ல ....






 *





Tuesday, June 16, 2015

843. ஆண்டவனால் அல்ல ... அப்பாவால் எழுதப்பட்ட “தலைவிதி” (தருமி பக்கம் 29)









*



யாகப்பன் சாரின் குட்டுகிற கையும், மனப்பாட சக்தி இல்லாமையும்  கணக்கிலிருந்து என்னை ஓட.... ஓட விரட்டின. ஏறத்தாழ வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி விட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. மார்க் எல்லாம் இந்தக் காலத்தில் வெளியே சொல்ல முடியாத அளவில் தான் இருந்தது. இந்த ‘டோட்டல் மார்க்’ அப்டின்ற விஷயத்திலும் எனக்கு ஒரு குறை உண்டு.வாழ்க்கை முழுவதும் இந்த மதிப்பெண்கள் தொடர்ந்து வரும் என்ற நினைப்பெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. படிக்கணும் ... பாஸ் பண்ணணும் அப்டின்னு படிச்சது தான். நிறைய மார்க் வாங்க வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் .... படித்தேன் .... தேர்ச்சி பெற்றேன் ... அவ்வளவு தான். வாத்தியார் பிள்ளைகளெல்லாம் மக்கு என்பதை நிரூபித்தேன். இதில் உள்ள ஒரு விஷயம் என்னன்னா ... அப்பாவும் ஒரு ஆசிரியர். நிறைய மார்க் எடுக்கணும் .. அதுதான் உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றெல்லாம் ஒரு ஆசிரியரோ, என் அப்பாவோ என்னிடம் ஒரு தடவை கூட சொன்னதில்லை. சித்தன் போக்கு ... சிவன் போக்கு என்பார்களே அது மாதிரி ஏதோ படித்து .. எதேதோ எழுதி .. எப்படியோ தேர்ச்சி பெற்றேன். ‘டோட்டல் மார்க்’, அதன் முக்கியத்துவம் எல்லாம் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு தான் தெரிய வந்தது. ஏன் அப்பாவும், மற்ற ஆசிரியர்களும் அப்போது வழிகாட்டவில்லை என்று தெரியவில்லை.


 பள்ளியில் கணக்குப் பாடம் பயமுறுத்தி விட்டதா. அதனால் கல்லூரியில் கணக்குப் பக்கமே போகக் கூடாதுன்னு நினச்சேன். அதற்கு ஏற்றது மாதிரி என் அப்பா தனித் தேர்வுகள் மூலம் பி.ஏ. பட்டம் முடித்து, அதே கையோடு பி.எட். படிக்க சில மாதங்கள் சென்னைக்குச் சென்றார்கள். குறுகிய காலப் படிப்பாம். என்னை பாளையங்கோட்டைக்கு அனுப்பி அங்கிருந்த சித்தப்பா பொறுப்பில் என்னை விட்டு விட்டார்கள். சித்தப்பா சேவியர் கல்லூரியில் இடம் வாங்கக் கூட்டிக் கொண்டு போனார். என்ன பாடம் படிக்கப் போகிறாய் என்றார். முன்பே யோசித்ததை வைத்து, கணக்குப் பாடம் இல்லாமல் natural science group எடுத்தேன். அதில் தமிழ், ஆங்கிலம் அடுத்து மூன்றாம் கோர்வையில் 4 பாடங்கள் இருக்கும். natural sciences (zoology + botany), physical sciences (chemistry + physics), economics and advanced Tamil- இந்த கோர்ஸைத் தேர்ந்தெடுத்தேன். இதை எடுத்து வகுப்பில் சேர்ந்த பிறகு அப்பா தாம் ..தூம் என்று குதித்தார். கணக்கெடுத்திருந்தால் என்னென்னமோ ஆக்கியிருப்பேன்/ ஆகியிருப்பாய் என்றார். நான் மனதுக்குள் சந்தோஷமாகக் குதித்துக் கொண்டேன்.

P.U.C. 'E' section. அப்போது என் வகுப்பில் படித்த ஒருவரை பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்தேன்.  வகுப்பு, அதில் நானிருந்த இடம், பாடம் எடுத்த ஆசிரியர்கள் என்று இருவரும் பரிமாறிக் கொண்டோம். படிக்கும் போது எனக்கு  கணக்கில் இருந்த வெறுப்பு விஞ்ஞானப் படிப்புகள் மேலும் தொற்றிக் கொண்டது. ஆங்கிலமும், அதை விட பொருளாதாரமும் மிகவும் பிடித்துப் போய் விட்டது.  பொருளாதார விற்பன்னர் ஆக வேண்டிய நான் வேறு வழியில் அடுத்த ஆண்டு தள்ளி விடப்பட்டேன் - அப்பாவினால்.

பழைய பதிவிலிருந்து இரு பத்திகள்:    P.U.C. இரண்டாம் term முடிந்ததும் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம். அரையாண்டு மதிப்பெண்கள் வந்ததும் கல்லூரி முதல்வர் Father சூசை வகுப்பிலிருந்து சிலரைக் கூப்பிட்டனுப்பினார். முதல் term-ல் சாதா மாணவனாக இருந்தவன் இப்போது  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ’இப்படியே படி,  இரண்டாம் வகுப்பு கட்டாயம் கிடைக்கும் என்று ஆசி கொடுத்தார். (இரண்டாம் வகுப்பே அப்போ அப்படி கஷ்டம்!)

Britto Hostel-ல் தங்கியிருந்தேன். Warden, Father ஜார்ஜுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி திட்டு வாங்குவேன்; பைன் வேறு போடுவார்.  ஆனால் இரண்டாம் term முடிந்து ஜனவரியில் விடுதிக்கு வந்ததும் என் மேல் ஒரே அன்பைப் பொழிந்தார். இரண்டு நாள் கழித்து தன் அறைக்கு வரச்சொல்லியனுப்பினார். ஏதோ வாங்கிக் கட்டப் போகிறோமென நினைத்து பயந்து கொண்டே போனேன். மறுபடியும் ஒரே அன்பு. என்ன ஆச்ச்சுன்னா ... அவர்தான் எங்களுக்கு economics பாடம் எடுத்தார். எங்கள் வகுப்பில் முதல் மார்க் 58; எனக்கு 56. வகுப்பில் இரண்டாவது மார்க். 50க்கு மேல் வாங்கியது நானும் இன்னொருவனும் மட்டும் தான். அட .. நம்ம ஹாஸ்டல் பையன் நல்ல மார்க் எடுத்துட்டானேன்னு ஒரே அன்பாகிப் போச்சு. வருடம் இறுதி வரை அது நீடித்தது.  அது மட்டுமல்லாமல், எனக்கும் economics மேலே ஒரே லவ்வாகிப் போச்சு. கல்லூரியில் டெஸ்ட் எல்லாம் சீரியசாக நடக்கும். என் பக்கத்திலிருந்த மூன்றாமாண்டு economics அண்ணனை விடவும் நான் நிறைய additional sheets வேகமாக நிறைய வாங்கி எழுதியதை அண்ணன் ஹாஸ்டல் முழுவதும் பரப்பிட்டார்லா ..!



 P.U.C. முடிந்தது. பிரின்சிபல் கொடுத்த ஆசீர்வாதம் பயனில்லாமல் போயிற்று. மூன்றாம் வகுப்பு தான். ரிசல்ட் வந்தது... பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. பெருத்த ஏமாற்றம்.

அடுத்து பொருளாதாரம் B.A.வில் சேர்ந்து ஏறத்தாழ 30 நாளும் முடிந்தது. பாடமும் பிடித்து, இனி  ‘பின்னிடலாம்னு’ நினச்சிக்கிட்டு இருந்த போது அப்பா shortened B.Ed. கோர்ஸ் முடிச்சிட்டு மதுரைக்கு வந்தாங்க. நான் B.A.வில் சேர்ந்தது தெரிந்ததும் அந்த படிப்பு வேண்டாம். மதுரையில் B.Sc. கோர்ஸில் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி மதுரை வரச் சொல்லி விட்டார்கள். காலங்கடந்த முயற்சி. வேறு எதிலும் இடம் இல்லை... விலங்கியலில் ஒரே ஒரு சீட் என்றிருக்க அதை வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

தலைவிதி ...  அங்கே, அப்போது ஆழமாக எழுதப்பட்டு விட்டது   :(





*

Friday, June 12, 2015

842. நாங்களும் எங்கள் ’கனம்’ மாண்புகளும்






*
தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்


*



 ஒரு காலத்தில பொருளாதாரம் படிக்கணும்னு ஆசை ... முடியாம போச்சு. இப்போ அது பற்றி ஒண்ணும் தெரியாது. பட்ஜெட் வரும்போது அதைப் படிக்கிறது கூட கிடையாது - என்னத்த புரியப் போகுதுன்னு. அப்பல்லாம் ஒரு ஆச்சரியம் வரும் - ஒரு டீக்கடை நடத்துற ஆளு எப்படி நிதியமைச்சராக ஆகி, பட்ஜெட்டை வெளியிட்டு, அதைப் பத்தியும் பேசுறாரேன்னு ஆச்சரியப்பட்டு போயிருக்கிறேன்.  இதப் பத்திக் கேட்டா நண்பர்கள் எல்லோரும் ‘அதான் அதிகாரிகள் இருக்காங்கல்லா ... அவுக பாத்துக்குவாவல்லா’ அப்டின்னு சொல்லுவாங்க. இருந்தாலும் கொஞ்சமாவது சட்டியில இருக்கணுமேன்னு யோசிப்பேன்.

இது இப்படி போய்க்கிட்டு இருக்கிறப்போ .... நேத்து ஆ.வி.யில் அமைச்சர்கள் பற்றி ஒரு கட்டுரை இப்போ தொடர்ச்சியா வருதே ... அதப் பார்த்தேன்.  இந்தக் கட்டுரைகள் - பயங்கரமா இருக்கே... ஒவ்வொரு அமைச்சரின் ஜாதகம் எழுதியிருக்காங்க. போன வாரம் எங்க ஊரு அமைச்சர் பத்தி எழுதியிருந்தாங்க. எல்லாமே ஓப்பனா தான் எழுதியிருக்காங்க. மம்மி    ஜெயலலிதா இதையெல்லாம் வாசிப்பாங்களா ... மாட்டாங்களா ...?

எப்படி ஆளும் கட்சிக்கு எதிர்த்து இந்த மாதிரி ஓப்பனா எழுதுறாங்களேன்னு ஒரு ஆச்சரியம். இப்படி எழுதுறது பார்த்து ஒருத்தரும் ஒண்ணும் பண்ணலையேன்னும் ஒரு ஆச்சரியம்.

சரி ... அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த வாரம் வந்த தகவல்கள்:

முக்கூர் என். சுப்ரமணியன்  -  தகவல் தொழில்நுட்பவியல் துறை.

ஐந்தாம் வகுப்பு பெயில்.
சின்ன வயதில் அப்பாவுக்கு உதவியாக வாத்து மேய்ச்சார்.
சைக்கிளில் கூடை வைத்து காய்கறி வியாபாரம்.
காய்கறி காண்ட்ராக்டர்
ஒன்றிய துணைச் செயலர்
செய்யாறு யூனியன் சேர்மன்
மாவட்டச் செயலாளர்

இப்போ.....

ஐ.டி. (தகவல் தொழில் நுட்பம்) துறை அமைச்சர்!!

என்ன வளர்ச்சி ... மனுஷனா பொறந்தா இந்த மாதிரி தான் வளரணும்!

அமைச்சர்களுக்கு ஒண்ணும் தெரிய தேவையில்லை. எல்லாமே அதிகாரிகள் பார்த்துக்கலாம்னா எதுக்கு அமைச்சர்கள் அப்டின்னு ஒரு கேள்வி வந்தது. ஒரு வேளை அமைச்சர்கள் எல்லோரும் வெறும் collection counters தானா?

டச் ஸ்கீரின் பயன்படுத்த இப்போது தான் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருக்கு அவரது மகன் சொல்லிக் கொடுத்தார் என்றால் இவருக்கு அதிகாரிகள் சொல்வது என்ன புரியும்?

நம் அரசாங்கமும், அமைச்சர்களும் இப்படித்தான் நடக்கிறதா? ஆச்சரியம் ஒரு பக்கம் என்றாலும் இது அக்கிரமாக இல்லையா? இது தான் மக்களாட்சியா? கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு ஹை-டெக் துறைக்கு இப்படி ஒருத்தரை அமைச்சராகப் போடுவது ஆளும் கட்சிக்கும் கேவலமில்லையா?

**********


ஆர்.கே. புரத்தில் இருந்திருந்தால் ட்ராபிக் ராமசாமிக்கு வதக்குன்னு ஒரு ஓட்டு குத்தியிருப்பேன். ம்ம்...ம்....

இது மாதிரி மந்திரிகள் வேணும்னா யாருக்கு அல்லது எதுக்கு வேணும்னாலும் குத்துங்கப்பா ... குத்துங்க ....








 *

Wednesday, June 03, 2015

841. இடப் பங்கீட்டு மோசடிகளில் சில ....







*





 I.I.T.-M 

 A NEO-AGRAHARAM ? 





 Information got through RTI by activist Mahendra Pratap singh. Similar is the case with other IITs as well. 


                                  FC             OBC          SC                  S                      TOTAL
PROFESSOR           209                0                3                   0                         212
                             (98.59%)                         1.41%)
----------------------------------------------------------------------------------------------------------
ASSOCIATE                                                                                                                          
 PROFESSOR              88                 0                3                0                      91 
                              (96.7%)                       (3.95%)            
-----------------------------------------------------------------------------------------------------------
ASST. PROF.            165                7               4                  1                        177
                               (93.22%)      (3.95%)    (2.25%)        (0.56%)
-----------------------------------------------------------------------------------------------------------------
TOTAL          462           7            10               1           480
                  (96.25%)  (1.46%)   (2.08%)    (0.21%)


96 லிருந்து 99 விழுக்காடு ‘அவாளே”  இருக்கிற இடத்தில் அம்பேத்காரையும், பெரியாரையும் பற்றிப் பேசும்பொது அவாளுக்கு அதில் கோபம் வராதா? என்ன சொல்றேள்?




another example from Delhi University


the following FB page has a load of such info ........... visit........

https://www.facebook.com/ExtendReservationsToPrivateAndReligiousSectors



 *

Monday, June 01, 2015

840. தோரணம்







*


வழக்கமா வீட்டுக்கு கீரை விற்க வரும் அம்மாவின் இரண்டாம் பையனுக்குத் திருமணமாம்.இன்று பத்திரிகை கொடுக்க வந்தார்கள். பையன் பி.ஈ. முடித்து விட்டு, வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ, படிக்கிறாராம். பெண்ணும் பி.ஈ.முடித்துவிட்டு எம்.பி.ஏ.வும் முடித்து விட்டதாம். இது பெரிய ஆச்சரியமில்லை. அடுத்து, வீட்டையும் தென்னந்தோப்பையும் இன்னும் மகன்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லையாம். மற்றபடி ஆளாளுக்கு ஒவ்வொரு ஏக்கர் எழுதிக் கொடுத்தாச்சாம். இப்படி நிறைய குடும்பத்தைப் பத்தி சொன்னாங்க.

அவங்க போனதும் நானும் தங்க்ஸும் பேசிக்கொண்டோம். நம்மை விட வசதியான ஆளுக... அவங்க கிட்ட நாம் கீரை வாங்குறோம். அதிலும் நமக்கு ஒரு நினப்பு - நாம ரொம்ப பெரிய ஆளுக ... அவங்கல்லாம் படிக்காத லோயர் நிலை ஆளுக அப்டின்னு.

ஆனா இப்படி நினச்சப்போ அவர்கள் மேல் மரியாதை வந்தது. நிச்சயமாக சில மண்ணாந்தைகளுக்கு வரும் வயித்தெரிச்சல் எங்களுக்கு வரவில்லை.

இப்படித்தான் இன்னும் ஒரு ”பெரிய” உசந்த குரூப் நினச்சிக்கிட்டு இருக்கு - // ஐ. ஐ. டி மாதிரி ஒரு பிரிஸ்டீஜியஸ் காம்பஸில், கோஷம் போடுவது, கொடி பிடிப்பது, ஜாதி பேசுவது, ஹிந்து மதத்தை துவேஷமாகப் பேசுவது இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதே மனசுக்கு சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது//

இப்படிச் சொல்லிச் செல்லும் பெருந்தகைகளைப் பார்க்கும் போது கோபத்துக்கும் மீறி சிரிப்பும் வருகிறது.

பாவம் அவர்கள் .... நாமல்லாம் எங்கோ போய்டோம்னு தெரியாம நிக்கிதுகள்...!




*****


திண்டுக்கல் தலப்பாகட்டி விளம்பரப் பாடல்...

பிரியாணி எப்படியோ... இந்த பாடல் அம்புட்டு அழகு.

ஜிப்ரன் இசை; கார்த்திக் குரல் அப்டின்னாங்க.... செம டேஸ்ட்.

பாட்டு கேட்டதும் கஷ்டப்பட்டாவது தங்ஸ் டிவிக்கு ஒடி வந்திருவாங்க ...


*****


எப்படி சினிமாவை தியேட்டர்ல போய் பாக்குறது அப்படின்னு யாராவது ஒரு பாடம் எடுத்தா நல்லது. கட்டாயம் ஒரே வாரத்தில் பார்க்கணும் போல் இருக்கே. ஒரு வாரம் விட்டா படம் காணாமப் போகுது.

உத்தம வில்லன் பக்கத்தில நல்ல தியேட்டர்ல ஓடிச்சி. இந்தா அந்தான்னு உடனே பார்க்க முடியாமல் போச்சு.... சரி பார்க்கலாம்னு ஏழெட்டு நாள் கழிச்சிப் போனா அந்தப் படம் என்னைவிட வேகமாக ஓடிப்போயிரிச்சி.

புறம் போக்கு போகலாம்னு நினச்சா அது புறம்போக்காக ஆகிப் போச்சு.

36 வயதினிலே ... பார்க்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.

இந்த நிலைமையில திருட்டு டி.வி. பார்க்காதன்னு சவுண்டு உடுறாங்க.

அதுனால இப்போவெல்லாம் இணையத்திலேயே பார்க்கிறதை வளர்த்துக்கணும்.


 ******


 படம் கோடிக்கணக்குல எடுக்கிறதா சொல்றாங்க. ஓடுறதோ ஒரு வாரம் ... இல்லைன்னா ...கூட நாலைந்து நாள். போட்ட காசு எப்படி வரும்? நடிகர்களுக்கும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்குறாங்க.

என்னமோ நடக்குதே சாமி ...!



******* *