Friday, March 29, 2013

648. ஒரு புது தமிழாக்க நூலுக்கான திறனாய்வு







*

பல பதிப்பாளர்களால் வேண்டாமென்று ஒதுக்கப்பட்டு, இறுதியில் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல்  - அதன் பின் விற்பனையில் மிக உயரத்திற்குச் சென்றது. உலக அளவிலும் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தத்துவ நூல் இது. புதிய பதிப்பாக இப்போது தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலைப் பற்றிய ஒரு திறனாய்வை இங்குப் பதிவிடுகிறேன்.



*



A Review on the  Tamil translation of 


Robert M. Pirsig’s  


Zen and the Art of Motorcycle Maintenance 


Pirsig’s Zen and the Art of Motorcycle Maintenance is a philosophical novel published in 1974. It is a bestseller translated into several languages. But ironically it has also found a place in the Guinness Book of Records as a best selling book rejected by the largest number of publishers. The novel describes the experiences of the persona’s seventeen day journey with his son Chris from Minnesota to Dakota on a motorcycle. While the landscape and the climate form the background, the narrator undergoes a transformation resolving his personal psychological crisis. If the journey provides one stream of the narrative, the philosophical debate of Phaedrus, the other side of the narrator’s split personality explores the theme of Quality explicating its relevance to the modern age.

The novel is autobiographical in a sense because the psychological crisis undergone by the narrator is the author’s also. One could observe the modern canon of catatonic schizophrenia and Zen Buddhist hard enlightenment getting expressed for an enquiry into values, which is the subtitle of the novel.

This book has been translated into Tamil by Sidharthan Sundaram and 
Prof. Dr. Vincent. It is indeed a stupendous task and the collaborative effort, one must admit, has paid   rich dividends. The translators have captured the tone of the novel and the philosophical debates and discourses involving Phaedrus have been made lucid and simple. The conflict between romanticism and classicism, rhetoric and dialectics, Quality and reason has been brought out in a style which can be understood even by a layman. 

The translation published by Ethir veliyedu runs to 582 pages and is indeed a valuable contribution to Tamil.


Published by : 
Ethirveliyedu, 
New Scheme Road, 
Pollachi -2. 
04259-226012. Also mobile 9442125697. 
Price Rs. 400.
                                                                                     

*
Reviewed by SARAVANAN

*




Monday, March 25, 2013

647. காணாமல் போன நண்பர்கள் - 16 - பயந்தான்கொள்ளி பிரபாகரன்







*  
தீதம் இணைய இதழில் வெளிவந்த என் கட்டுரையின் மறுபதிப்பு .....

1966 - 70-ம் ஆண்டுகளில் ....


முதுகலை முடிச்சாச்சி. ஒரு விஷயத்தைப் பல தடவை நானும் சொல்லியாச்சி .. அது என்னன்னா, படிச்சி முடிச்சிட்டோமே அடுத்த என்னென்ன வழி வகைகள் வாழ்க்கையில் இருக்கு; எந்த வழியில் போனால் நல்லது; இல்லை, நமக்குன்னு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தேடல் ... ஆசை இருக்கிறதா? வேறு போட்டித் தேர்வுகள் எழுத முடியுமா? ... இந்த மாதிரி சிந்தனைகள் ஏதுமில்லாமல் மொட்டையாக குடும்பத் தொழிலே ஆசிரியர் தொழில் என்பது போல் அது ஒன்றை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு கல்லூரி ஆசிரியர் தொழிலை மட்டுமே பற்றி யோசித்துக் கொண்டு, அந்த வேலையை மட்டும் தேடிக்கொண்டு இருந்து தொலைத்தேன். மற்ற வழிகள், முயற்சிகள் பற்றி எனக்கும் ஏதும் தெரியவில்லை. ஆசிரியராக இருந்தும் என் தந்தைக்கும் அதில் என்னை வழிப்படுத்தத் தெரியவில்லை. இதுவரை சொல்லிக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களில் யாரேனும் ஒருவர்கூட வாழ்க்கையின் பல பக்கங்களை எடுத்துச் சொல்லி வழிப்படுத்தவேயில்லை. இந்த சோகம் என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருந்தது. என் மாணவர்கள் என்னைக் குறை சொல்லாமலிருக்க சில முயற்சிகளை என் தொழிலில் எடுத்து வந்திருக்கிறேன்.

 எப்படியும் மதுரையில் வேலை வேண்டாமென ஒரு ஆசை. குறைந்தது ஒரு 100 மைல் தாண்டி வேலை கிடைக்க வேண்டுமென நினைத்தேன். அதே போல் தஞ்சையில் ஒரு காலியிடம் என்றறிந்து விரைந்தேன். மிக நல்ல துறைத் தலைவர். பார்த்ததுமே வந்திருங்க துறைக்கு என்றார். கல்லூரி முதல்வரிடம் போகச் சொன்னார். அவர் பெயர் பேராசிரியர் முருகன் என்று நினைக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். என் மதிப்பெண் பட்டியல்களைக் கொடுத்தேன். முதலில் என் இளங்கலைப் பட்டியலைப் பார்த்தார். தமிழில் முதல் வகுப்பு என்பதைப் பார்த்ததும் வேறு மதிப்பெண்களையே பார்க்கவில்லை. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். இருந்தும் இன்னொரு படியும் இருந்தது. வீரைய்யா வாண்டையார் என்பவர் தான் கல்லூரியின் தாளாளர்; உரிமையாளர். கல்லூரியிலிருந்து சிறிது தொலைவில் அவர் வீடு. அவரைப் பார்த்து வர ஒரு துணையோடு என்னை அனுப்பினார்கள். அதற்கு முன் விலங்கியல் பேராசிரியர் அவரது ‘டை’ ஒன்றைக் கொடுத்து கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அன்றுதான் பழைய ஜமீன் தோரணைகளைப் பார்த்தேன். தாளாளரைப் பார்க்கப் போனால் .. அங்கே பெரும் அமைதி. யாரும் பேசாமல் சைகைகளினாலேயே அதிகம் பேசுவதாகப் பட்ட்து. அவருக்காக்க் காத்திருந்து அவரைப் பார்க்கப் போனேன். சீரியஸாகச் சில கேள்விகள். பதில் சொன்னேன். மீண்டும் கல்லூரி. துறை தலைமைப் பேராசிரியர் எனக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறினார். அப்பாடா ... ஆனால் only as demonstrator. இந்த வருடத்திற்கு மட்டும் என்றார்கள். ஆனால் இந்தக் கதை பல ஆண்டுகள் தொடர்ந்தன என்பது ஒரு தனிக் கவலைப் படலம். ஆனால் அன்று அதைப் பற்றிக் கவலைப்படக்கூட எனக்குத் தெரியவில்லையோ??!!


வேலைக்குச் சேர்ந்து ஓரிரு நாட்கள். மதியச் சாப்பாடு அங்குள்ள மாணவர் விடுதியில். முதல் நாள் துறை நண்பர்கள் கூட்டிச் சென்றார்கள். சாப்பிட்டு முடிந்த்தும் விடுதியின் மேற்பார்வையாளர்கள் அறைக்குச் சென்றோம். பெரிய அறை. மூன்று கட்டில்கள். மூன்று மேற்பார்வையாளர்கள் என்றார்கள். அதில் எங்கள் துறையின் ஜகச்சந்திரன் என்பவனும் ஒருவன். அவன்தான் என்னை அவன் அறைக்குக் கூட்டிச் சென்றான். அந்த அறையில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப ரிக்கார்ட் பிளேயர், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கும். . அப்போவெல்லாம எல்லாம் அகலமான ரிக்கார்டுகள். மாலையில் சிறிது நேரம் பாடல்கள் போடுவார்கள். காலையும் மாலையும் ஆங்கிலச் செய்திகள் ரேடியோவிலிருந்து போட்டு விடுவார்கள். யார் கேட்பாளர்களோ ... யாருக்குப் புரியுமோ!? அதைப் போட்டால் விடுதியில் இரு இடங்களில் உள்ள ஸ்பீக்கர்களில் அலரும். பத்துப் பதினைந்து ரிக்கார்டுகள் இருக்கும். ஆனால் மதியம் உணவு வேளையில் பாட்டுகளைப் போட்டு அந்த அறைக்குள் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு நாள் மதியம் சாப்பிடத் தனியாக விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தேன். பின்னாலில் இருந்து ஒரு அழைப்பு. M.A. Economics முடித்து விட்டு ஆங்கிலத் துறையில் சித்தாள் வேலை பார்ப்பது அப்போதெல்லாம் ஒரு வழக்கம். அதாவது ஆங்கிலம் எம்.ஏ. முடித்தால் சட்டென்று அப்போது ஆங்கிலத்துறையில் வேலை கிடைக்கும். எக்கச் சக்க டிமாண்ட். ஆனால் M.A. Economics முடித்தால் அவ்வளவு எளிதில் வேலை கிடைக்காது. அதனால் ஆங்கிலத்துறையில் சித்தாள் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். ஆஹா.. சித்தாள் வேலைன்னா என்னன்னு சொல்லவில்லையே. P.G. முடித்திருந்தாலும் lecturer வேலை கிடைக்காத்தால் அறிவியல் துறைகளில் demonstrator வேலைக்கோ, மொழித் துறைகளில் tutor வேலையோ கிடைக்கும். இவர்கள் எல்லோரும் lecturer வேலைக்குத் தகுதி படைத்திருந்தாலும், அந்த வேலை கிடைக்காததால் tutor அல்லது demonstrator வேலைக்குச் சேர்ந்திருப்போம். ஆனால் துறைகளில் lecturer ஆக இருப்பவர்கள் இவர்களைக் கீழ்த் தரத்தில் வைத்து நடத்துவார்கள். அவர்களெல்லாம் கொத்தனார்கள் என்றால், tutor, demonstrator எல்லோரும் சித்தாள்களாக நடத்த்ப்படும் பரிதாபம் தொடர்ந்து நடக்கும். நானும் lecturer பதவிக்கு வந்திருந்தாலும் அப்போது காலியாக இருந்த சித்தாள் வேலையில் தான் சேர்ந்தேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோமா? பிரபாகரன் என்று ஒருவன். ஒல்லியாக, ஜாலியாக இருக்கும் ஒருவன். அன்றுதான் அவனை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவன் என்னைப் பற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்துள்ளான். ’எங்கே போகிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டான். ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆங்கிலம் தான்! பதில் சொன்னேன். பின் எங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டோம். தான் விடுதியில் மேற்பார்வையாளராகவும் இருப்பதாகக் கூறினான். ஓரிரு நிமிடங்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். பயங்கர ‘A’ கேள்வி. யாரும் பழகிய நாலைந்து நிமிடங்களில் கேட்கக்கூடாத கேள்வி என்று வைத்துக் கொள்வோமே! அப்படி ஒரு கேள்வி. ஒரு சில வினாடிகள் கழித்து அவன் கேள்விக்கு straight forward பதில் ஒன்றை சட்டென்று கொடுத்தேன். என் பதில் அவன் கேள்வியை விட ரொம்ப வெளிப்படை. பயல் ஆடி விட்டான். ’தலைவா .. நீ எங்கேயோ போய்ட்ட...’ என்று தமிழில் ஒற்றைப்படை மரியாதையுடன் பேச ஆரம்பித்தான். பயல் வழக்கமாக புதிதாக வரும் என்னை மாதிரி இளம் வயசு ஆளுகட்ட பழக ஆரம்பித்ததும் இந்தக் கேள்வியைக் கேட்பானாம். வழக்கமாக அவர்கள் அனைவரும் வெருண்டு ஒதுங்கி விடுவார்களாம். அவனைப் பார்த்தாலே பயத்துடன் ஒதுங்கி விடுவார்களாம். என்னைக் கேட்ட்தும் நான் பட்டென்று பதில் சொன்னது அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்ட்து என்றான்.same vibes ...!

அதன் பின் நல்ல நட்பு. அக்கல்லூரியில் அப்போது இருந்து வந்த வழக்கம் நண்பர்கள் ஒரு டீம் போட்டுக்கிட்டு மத்தவங்களைச் சதாய்க்கிறது. இதில் பயங்கர தீவிரவாதி இவன். அதோடு 1965-ல் தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக மாணவர்கள் மத்தியில் நடந்தது. அதில் மதுரையில் கொஞ்சம் அதிகமாகவே நடந்தது. ஜீப்பெல்லாம் எரிச்சோம்ல ... அதிலும் எங்கள் தியாகராசர் கல்லூரியின் மாணவர்களான காமராசர், காளிமுத்து என்ற இருவரும் தான் இந்தியச் சட்ட்த்தை எறித்து, கைதாகி ... பின்னாளில் அதனாலேயே பெரும் இடங்களுக்கு வந்தார்கள். முன்னவர் ஒரு கவிஞராகவும், அடுத்தவர் அமைச்சர், சட்டசபைத் தலைவர் என்றும் ‘முன்னேறி’ விட்டார்கள். அதனால் நான் சேர்ந்த அக்கல்லூரியில் மதுரைக்காரர்களுக்கு ஒரு ‘தனி இடம்’ – அதைப் பயம் என்றும் சொல்லலாம் - உண்டு; அதிலும் நான் தியாகராசர் கல்லூரி மாணவனா .. எனக்கு இரட்டை கிரீடம் சூட்டி விட்டது போலாயிற்று.

இந்தப் பின்னணியில் பிரபாகரன் என்னிடம் ரொம்பவே ஒட்டி விட்டான். ஆனால் பின்னால் தான் தெரிந்தது இந்தப் பயல் வாய்ப்பேச்சில் வீரன். ஆனால் சரியான பயந்த பயல் என்று. என்னடாவென்றால் அவனுக்குத் திருமணம் சொந்தத்திலேயே முடிந்திருந்தது. பெண் படிப்பை முடிக்கவும், இவன் சித்தாள் வேலையிலிருந்து கொத்தனார் வேலைக்கு உயரவும் பெற்றோர்கள் முடிவு செய்து இருவரையும் பிரித்தே வைத்திருந்தனர். பயலுக்கு சாந்தி முகூர்த்தம்னா என்னன்னு தெரியாம உக்காந்துகிட்டிருந்தான். அவன்  விடுமுறைக்கு வீடு போகும் முன் நாங்கள் அவனை கொஞ்சம் திரியேத்தி அனுப்புவோம். பெரும் வெற்றி முழக்கத்தோடு திரும்பி வருவான். என்னடான்னு கேட்டால், ஒரு தடவை ‘எப்படி படிக்கிற?’ அப்டின்னு கேள்வி கேட்டு, அது என்னமோ பெரிய இமய மலையைத் தொட்ட மகிழ்ச்சியோடு சொல்வான். அடுத்த தடவை கைவிரல்களை லேசாகத் தொட்டுட்டேன் என்பான். பாவப்பட்டபயல் தான்.

அவன் விடைத்தாள் திருத்துவதும் வேடிக்கையாக இருக்கும். அங்கங்கே விடைத்தாளிலோ, கட்டுரை நோட்டிலோ ஒரு பெரிய வட்டம் போடுவான். என்னடான்னு கேட்டா .. இந்தப் பெரிய ரவுண்டுக்குள் எப்படியும் ஒரு தப்பு இருக்கும்’டா... கேட்டா அதைக் காண்பிப்பேன். ஆனாலும் ஒரு பயலும் எங்கிட்ட வரமாட்டான்’டா என்பான்.

மதியம் சாப்பாடு முடித்து அவர்கள் அறைக்குச் செல்லும் மக்களை ஏதாவது கலாட்டா பண்ணுவது அல்வா சாப்பிடுறது மாதிரி. இந்த மாதிரி வேடிக்கை வேலைகளுக்காகவே என்னை மாதிரி ஆட்களோடு ஜோடி சேர்ந்துக்குவான். அவனோடு இருந்தால் நேரம் போறதே தெரியாத மாதிரி அரட்டை அடிப்பான். ஆனாலும் clean guy. அடுத்த இரண்டு வருடம் கழித்து கொத்தனார் வேலையும் மனைவியும் அவனுக்குக் கிடைத்தார்கள்!!



*


Tuesday, March 19, 2013

646. நியாயமாரே.... மன்னிச்சிக்குங்க




*


எனக்கும் பரதேசி படத்திற்கு ஒரு “திறனாய்வு” எழுதிடணும்னுதான் ஆசை. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் படங்களின் இறுதியில் ‘பொளேர்’னு மூஞ்சில அறைந்து பாலா ஆட்களைத் தியேட்டரை விட்டு வெளியே அனுப்பினார். இப்படத்தில் அந்த ‘அறை’ இல்லை என்று நினைக்கிறேன்.

விக்ரமும், சூர்யாவும் பாலாவினால் புதிய அவதாரமெடுத்தார்கள்.  பாலா தன் படத்திற்குத் தேர்ந்தெடுத்ததால் ஆர்யா, விஷாலுக்கு பட உலகில் மரியாதை உயர்ந்தது. அனேகமாக அதர்வா இதில் இரண்டாவது லிஸ்ட்டில் வருவார் என நினைக்கிறேன்.. அதர்வா மக்குப் பையன் என்று படத்தின் முந்திய பாதியில் இருந்து, சோகராசா ஆகிறார் இரண்டாம் பாகத்தில்.நன்றாகவே செய்துள்ளார்.

படம் பார்த்த போது ......

ஒருசின்ன வருத்தம்.  முதல் நாள் தியேட்டரில், எனக்கு முன்னால் இருந்தவர்களின் பின் தலைகளைப் பார்த்தேன். வழுக்கைத் தலைகளே மிகவும் கொஞ்சம். வெள்ளைத் தலை ஏதுமில்லை. I was the only old odd  man out !

 கதாநாயகன்  ராசாவுக்கு  costume இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ரோம சாம்ராஜ்ய அடிமைக் கதாநாயகன் போடுற சட்டை மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

பஞ்சகச்சம் மாதிரி வேட்டி இல்லாமல் ஒரு மூணு முழம் வேட்டியைக் கட்டி உட்ருக்கலாமேன்னு நினச்சேன்.

வேதிகாவிற்கு முரட்டுத்தனமா போட்டிருந்த கண்மை நல்லாயிருந்தது.

முதல் பாதியில் எல்லோரும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள் - வறுமையில் செம்மை.

கதாநாயகன் நாள் முழுவதும் விறகு வெட்டி கூலி இல்லாமல் அழுகும் ஒரு சீனைத் தவிர அவனது கிராம மக்களுக்கு வேறு ஏதும் பெரிய சோகம் இல்லை. அவர்கள் வறுமையால் அவதியுறுவதாகக் காட்டியிருந்தால் தங்கள் வேர்களைப் பிடுங்கிக் கொண்டு ஊரோடு கங்காணி பின்னே போவதற்கான பொருள் முழுமையாகத் தெரிந்திருக்குமோ? பின் பாதியின் சோகமும் இன்னும் வலுவாக இருந்திருக்குமோ?

இரு முறை ராசா தன் சாதியால் தாழ்த்தப்பட்டவன் என்பது படத்தில் குறியீடுகளாகக் காண்பிக்கப்படுகின்றன.  (சொல்ல வருவதை வார்த்தைகளால் இல்லாமல் காட்சி மயமாக்குவதில் பாலா சமர்த்தர் என்பது என் எண்ணம். நந்தாவில் ராஜ்கிரண் சொல்லும் வசனமில்லாத ஒரு காட்சி மிக பயங்கரமாக இருக்கும்.) சாதிய வன்முறைகள் முதல் பாதியில் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் அவர்களின் வலி இன்னும் நமக்குப் புரிந்திருக்குமோ?

இறுதிக் காட்சியில் படத்தை ஒரு பாடலோடு முடிக்காது, ராசாவின் அவலக்குரலும் அழுகையும் பின்னணியாக ஒலிக்க, நாற்புறமும் உள்ள மலைகளை காமிரா காண்பித்ததும் இந்த நான்கு மலைகளுக்கு நடுவே தான் இந்த நால்வரின் வாழ்க்கையும், விதியும் என்று காட்சிகளாக  முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?

பாடல்கள் நன்றாக இருந்தன. ஆனால் பின்னிசைக் கோர்வை - RR - படத்திலிருந்து என்னைப் பிரிக்கவே செய்தன. தன் மாமா பம்பாய் படத்தின் கலவரத்தில் நம்மை ஒன்ற விடாமல் இசைக் கோர்வை அமைத்தது போல்வே இந்தப் படத்தில் மருமகன் செய்ததாகத் தோன்றியது.

ராசா தேயிலைக்காட்டை விட்டு ஓடும் அந்த இரவு வேளையில் கொடுத்த இசை இம்சைசெய்தது. படத்தின்  இறுதியிலும் அதுவே நிகழ்ந்தது. பல இடங்களில் இசை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

சென்ற சனிக்கிழமை மாலை விஜய் டிவியில் இப்படத்திற்காக விளம்பர ஒளிப்பதிவு ஒன்று நடந்தது. கதாநாயகன், நாயகிகள் இருவர் தங்கள் இயக்குனருக்குச் சில கேள்விகள் தொடுத்தார்கள். வழக்கமாக இது போன்ற நிகழ்வில் இயக்குனரும் அங்கே அவர்களோடு இருப்பார். ஆனால் இங்கே பாலா தன் அலுவலகத்தில் இருந்திருப்பார் போலும். கேட்ட கேள்விகளுக்கு அவர் அங்கிருந்து பதில் சொல்வதாக இருந்தது. இதில் ஒரு கேள்வி - தன்ஷிகா கேட்ட ஒரு கேள்வி - பாலாவைச் சுற்றியிருக்கும் ஒரு halo - ஒளிவட்டம் - பாலா தன்னைச் சுற்றிப் போட்டிருக்கும் வேலி பற்றிய கேள்வி அது.   பாலா அரங்கில் இல்லாமல இருந்த ஒன்றே இக்கேள்விக்கான அவரது பதிலாக இருந்தது. அதோடு அவரது பதில்களிலும் ஒரு தெளிவான நேர்மை இருந்தது.

தன்ஷிகாவை இந்த நிகழ்ச்சியில் பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் she looks just good.  ஆனால் கருப்பு வண்ணம் பூசிக்கொண்டு படத்தில் அவ்ரைப் பார்த்த போது அப்படி ஒரு அழகு. எப்படி ?

இது போன்ற ஒரு கருக்களத்தை எடுக்க தனி தைரியமும் தன்னம்பிக்கையும் மிக அதிகமாகத் தேவை. அவை இரண்டும் பாலாவிடம் கொட்டிக் கிடப்பதில் மகிழ்ச்சி.

---- இப்படியெல்லாம எனக்குப் பல கேள்விகள் .. கருத்துகள். இவைகளை எல்லாம் வைத்து ஒரு திறனாய்வு எழுதிவிடலாமாவென நினைத்தேன். ஆனால் புயலென, மாபெரும் வெள்ளமென வந்திருந்த திறனாய்வுகளைப் பார்த்ததும் வேறு ஒரு முக்கியமான கோரிக்கைகளை நமது பதிவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலே அதிகமாகப் போய்விட்டது. மக்கள் என் கோரிக்கையை வாசித்து என் மீது பெரும் கோபம் கொள்ளலாம். கோவம் கொண்டு விட்டு போகட்டும் என்ற எண்ணமே மீதியாக நின்றது. அவர்களது கோபம் எத்தகையது என்பது எனக்குத் தெரியாதா என்ன? இந்தப் பதிவிலேயே எல்லோரின் கோவமும், பயமும் நன்கு புரிந்து விட்டதே!

வாசித்த திறனாய்வுகளில் மிகச் சிறந்த திறனாய்வு என்று ஏதாவது ஒன்றை நான் கருதியிருந்தால் இங்கே அதனை மேற்கோள் காட்டியிருப்பேன். அதற்காகவே கண்ணில் பட்டவை அனைத்தையும் வாசித்தேன். அப்படி ஏதும் என் கண்ணில் படவேயில்லை. ஒரே ஒரு பதிவில் //சாமிக்கு முன் கங்காணி இருப்பார் சாமியை அதர்வா நிமிர்ந்து நின்றுவணங்குவார் கங்காணியை காலில்தொட்டு முதுகைவளைத்து கூனி வணங்குவார். இப்படி ஒரு சில சீன் இருக்கின்றது.// என்று வெங்காயம் என்று ஒரு பதிவில் பார்த்தேன். 
அதன் ஆசிரியர் யாரென்று தெரியாது.  இன்னொரு திறனாய்வு. இப்பதிவை இட்ட பின் இன்று - 24.3.13 - வாசித்த ஒரு திறனாய்வு பிடித்தது. தேவா எழுதியது. தன் வாழ்வியலோடு இப்படத்தின் கருக்களத்தை ஒத்து எழுதியுள்ளார். அப்பதிவை இங்கே காண்க


இப்படிப் பட்ட நல்ல திறனாய்வுகள் ஏதுமின்றி,  மிக மட்டமான திறனாய்வுகளே நிறைந்து கிடந்தன. ஒரு படத்திற்குத் திறனாய்வு - அதுவும் கொஞ்சம் ஆழமான, சீரியசான படத்திற்கு திறனாய்வு எழுதத் தெரிந்து எழுதினால் தான் அது அந்தப் படத்திற்கும் மதிப்பு; எழுதுவோருக்கும் மரியாதை. ஆனால் யாருக்கும் திறனாய்வு எழுதத் தெரியவில்லை என்பதே நான் வாசித்த அனேக திறனாய்வுகளின் தகுதி. (எனக்கும் எழுதத் தெரியாது என்பதால் தான் நான் அதிகமாக திரைப்படத் திறனாய்வுகள் எழுதுவதில்லை!)

தயவு செய்து  பல தமிழ், ஆங்கில தினசரிகளிலும், நூல்களிலும் வரும் ஏதாவது சில நல்ல  திறனாய்வுகளை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் புரியும். தமிழில் பொது ஊடகங்களில் எழுதுவோரும் நம் பதிவர்கள் மாதிரிதான்.

இந்த விஷயத்தில் பதிவர்களிடம் இருக்கும் மிக மட்டமான இயல்பு அவர்களது கதைச் சுருக்கம் தான். முக்காலே மூணு வீசம் எழுதிவிட்டு மீதியை வெண்திரையில் காண்க என்று எழுதும் பதிவர் பெருமக்களே அதிகம். This is nothing but atrocious stupidity.  அதாவது தமிழில் - இது மகா மட்டமான முட்டாள்தனம். வார்த்தைகள் முரட்டுத் தனமாக உள்ளது. தெரிந்து தான் பயன்படுத்தியுள்ளேன். பலருக்கும் கோபம் வரலாம். வரட்டுமே ....!  அதிகமான திறனாய்வுகள் இந்த வகையின் உள்ளே தான் வருகின்றன இப்படி எழுதி வாசிப்பாளர்களுக்குக் கதை தெரிந்து விடுகிறது. பிறகு படம் பார்க்கும் ஆர்வம் குறையாதா? அதைக் கூட புரிந்து கொள்ள முடியாதா உங்களால்! .அதிலும் வரும் படத்துற்கெல்லாம் யாருங்க கேட்டா திறனாய்வுகள்? எல்லாக் குப்பைகளுக்கும் திறனாய்வுகள்! இப்படி எழுதி பவர் ஸ்டார்களைத் தான் உற்பத்தி செய்கிறீர்கள்.

இன்னொரு வகை திறனாய்வாளர்கள் - கதையில் வரும் அத்தனை பாத்திரங்களின் கதைப் பெயர்கள், டெக்னிஷியன்களின் பெயர் என்று  அத்தனையையும் அவர்கள் திறனாய்வில் கொட்டித் தீர்த்து விடுவார்கள். அப்போது தான் அவர்கள் படத்தை அப்படி  உன்னிப்பாகப் பார்த்திருக்கிறார்கள் என்று வாசகர்கள் நினைப்பார்களாம். ஆட்களின் பட்டியல் எதற்கு?

இதில் இன்னொரு மட்டமான ரகம் - Cinema is just for recreation என்று ஒரு கூட்டம். இவர்கள் பேசாமல் எம்.ஜி.ஆர். படங்களும், பவர் ஸ்டார் படங்களும் மட்டும் பார்த்திருந்தால் போதுமே. எதற்கு பாலா மாதிரிஆட்கள் எடுக்கும் படங்களைப் பார்த்துத் தொலைக்க வேண்டுமென்று தெரியவில்லை. இவர்களும் திறனாய்வு என்று கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போடுவார்கள்.

நல்ல படங்களுக்கு எழுதுங்கள். கதையெல்லாம் வேண்டுமென்றால் நாங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறோம். நல்லவைகளைப் போற்றுங்கள்; தவறுகளைச் சொல்லுங்கள்.சாமி சத்தியமா கதைகளை நீட்டி முழக்கி வசனமெல்லாம் எழுதி தரமிறங்காதீர்கள்.

திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணுமுங்க.  It should be brief but still it never exposes the vital parts! -இப்படித்தான் சொல்வாங்க. உங்கள் திறனாய்வுகளைப் படித்து, அதன் பின் படம் பார்த்து உங்கள் பார்வையோடு நாங்கள் இணையவோ, மாறுபடவோ வேண்டும். படம் பார்க்கும் போது தான் உங்கள் திறனாய்வின் தரம் எங்களுக்குப் புரிய வேண்டும். இப்படி எழுதப் பழக ஆரம்பியுங்கள். வராவிட்டால் எழுத வேண்டாம். யார் குடியும் முழுகி விடாது!

எட்டு வருஷத்துக்கு முன் நான் எழுதிய இடுகை இன்றும் என்றும் நாம் மாறவே போவதில்லை என்பதற்கான ஒரு சின்ன சான்று.


*

பின்னூட்டங்களில் இதுபோன்ற வழமையான சில பின்னூட்ட்ங்களைத் தவிர்த்து விடலாமே!

1.  நான் என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று எவனும் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை.

2.  உனக்கு எழுத வரவில்லையென்றால் ........ .... கிட்டு போ. ஆனால் நான் எழுத வேண்டாம் என்று சொல்ல நீ யார்?

3.  கருத்துக்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. அதை இங்கே மறுக்க நீ யார்?

4.  எனக்குத் தோணுவதை நான் எழுதுவேன். உனக்கு வேண்டாமா ..? படிக்காமல் போ.

5.  இங்கே என்ன இலக்கியமா படைக்கிறோம். உட்டுட்டு போ.

*


*

Friday, March 15, 2013

643. காணாமல் போன நண்பர்கள் - 15 - அவனுக்கென்னப்பா ...





*

அதீதம் இணையப் பத்திரிகையில் வந்த பதிவின் மீள் பதிவு: 



 அது என்னமோ .. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே .. என் விஷயத்தில் ரொம்ப சரி. இளங்கலை முடிந்தது. அடுத்து என்னன்னு ஏதாவது யோசிக்கணுமே. ஒண்ணும் கிடையாது. புதுசா வந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சின்ன முட்டு முட்டி கிடைக்காம போச்சா... அதற்கு முந்தியே நினைத்தது மாதிரி பிடிக்காமல் படித்து முடித்த விலங்கியலை முதுகலையில் தொடர்ந்தாச்சு. அடுத்து வேற ஏதாவது செய்யலாமா என்பது மாதிரியான சிந்தனைகள் சுத்தமாக இல்லை. ஏதோ யாரோ கோடு போட்டுக் கொடுத்து அந்தக் கோட்டிலேயே நடந்து போனது மாதிரி போயாச்சு. மாற்று முனைப்பு என்பதே இல்லாத வாழ்க்கை!

முதுகலை சேர்ந்தாச்சு. முதுகலைப் பேராசிரியர் எங்களுக்கு இளங்கலையில் வகுப்பெடுக்கவில்லை. அதனால் அவர் மட்டும் தெரியாது. இளங்கலையிலிருந்து நான் மட்டுமே முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தேன். ஆக நான் மட்டும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவன். எல்லோரும் இளங்கலையில் என்னிடம் அன்போடு இருந்த ஆசிரியர்களே. முதுகலைப் பேராசிரியரிடம் இரண்டு மூன்று முறை மாட்டிக் கொண்டேன். படிக்கட்டுக்கு கீழே முதுகலை மாணவர்கள் தம்மடிக்கிற இடம். அதில் ஒரு முறை வசதியாக மாட்டிக் கொண்டேன். வகுப்பு மாணவிகளிடம் சண்டை போட்டு, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் உட்கார்கிற பெஞ்சு மேசைகளில் என் அம்பாசிடர் ஷூவை நன்றாக அழுக்காக்கி அவர்கள் உட்காரும் மேசை மேல் தடம் பதிய நடந்து கொண்டிருக்கும் போது தானா அவர் எங்கள் வகுப்பைக் கடக்க வேண்டும். இப்படியாக அவரிடம் மாட்டிக் கெட்ட பெயர் வாங்கி, அவரும் எல்லோரிடமும் என்னைப் பற்றி புகார் கூறியிருந்தார். இரண்டாம் ஆண்டுதான் அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க வருவார். அதற்குள் முதலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்து என்னிடம் பயங்கர பிரியமாகி விட்டார். அதன் பின் அவரது ஏகோபித்த செல்ல மாணவன் ஆனேன்.

We, the seniors with our Juniors - 1965-66


இது ஆசிரியர்கள் பாகம். எங்கள் மாணவர் பாகம் சொல்லணும்னு தான் ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள். எட்டு பசங்க .. ஏழு பொண்ணுங்க. எட்டு பசங்கன்னு சொல்லக்கூடாது. ஏன்னா எங்க வகுப்பில் ஒரு அண்ணன், அவருக்கு கல்யாணம் ஆகி பையனும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்தான். அவரும் சில ஆண்டுகள் வேலை பார்த்து இங்கே மீண்டும் படிக்க வந்திருந்தார். எட்டு பசங்களில் நாலு நாலு பேரா கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சிட்டோம். எல்லாரும் பேசிக்கொள்வோம். ஆனா அந்நியோன்யம் எங்க நாலு பேரு .. அவங்க நாலு பேரு என்றானது. எஙக குரூப்ல ஒருத்தன் நாகர்கோவில்; இன்னொருவன் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த மலையாளி. ஆனாலும் தமிழ் பேசுவான். இந்த ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பொண்ணுக எங்களைப் பாவமா பார்ப்பாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் இந்த மக்களுக்குக் கொஞ்சம் கூட புரியாது. நாளான பிறகு கொஞ்சம் மாறியது.’சினிமாய்க்கி போயி சாடி, சவட்டி டிக்கெட் எடுத்தோம்’னு நாகர்கோவில்கார கண்ணன் பேசினது அவங்களுக்குப் புரிய ரொம்ப நாளாச்சு.இவனும், நானும் முதலிலிருந்தே ஒட்டிக்கிட்டோம். இந்த நண்பன் காணாமல் போகவில்லை. படித்து முடித்த பிறகு அவ்வப்போது என்று சில முறை இவனைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த நண்பனின் நட்பு முதுகலையோடு நின்று போனது. படித்த பின் இவனைப் பார்க்கவே இல்லை. அவன் நம்ம மலையாளிப் பயல் - மணிகொண்டான் தம்பி. Manikondan Thampi என்றுதான் எழுதுவான்.


பொண்ணுகளோடு படிக்கிறது நிறைய பேருக்கு இதான் முதல் தடவை. அதுனால கொஞ்ச நாள் பலருக்கும் ஒரே ஜிவ்வு! அதன் பின் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பிரச்சனைகள். அப்போ தம்பிக்கு - முதலிலிருந்தே co-ed படிச்சவனாம் - எங்களைப் பார்த்தால் ஒரே வேடிக்கையாக இருக்கும். அவன் தான் பெண்களோடு சாதாரணமாகப் பழகணும்னு ட்யூஷன் எடுத்தான். பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தான். அவன் முதலில் பெண்களோடு சாதாரணமாகப் பேசுவதே எங்களில் பலருக்கு பயமா, ஆச்சரியமா இருக்கும். தல எப்பவுமே ஒய்ட் & ஒய்ட் தான்.




 தம்பி ஒழுங்காக மலையாள மனோரமா வாராந்தரி வாங்கிடுவான். ஒரு நாள் ஒரு மனோரமாவையும், குமுதத்தையும் எடுத்து வைத்தான். அட்டை டூ அட்டை விமர்சனம் செய்தான். வாராந்தரியில் உள்ளூர், வெளியூர் அரசியல், அறிவியல் அது இதுன்னு இருந்தது. நம்ம ஊர் நூலில் கொஞ்சூண்டு லோக்கல் அரசியல், அடுத்து அனைத்தும் சினிமா என்றிருந்தது. ’ஏண்டா உங்க ஊர் பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா இருக்கு? எங்க ஊர் இதழில் எம்புட்டு விஷயம் இருக்கு?’ அப்டின்னான். அன்றும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை; இன்றும் இல்லை.




வகுப்பில் நான், இவன், கண்ணன், வரதன் நால்வரும் ஒரு செட். ஆனாலும் வரதன் எங்களுக்கு அண்ணனாகி கொஞ்சம் விலகியிருந்தார்.மீதி நாங்க மூணு பேரும் ஒண்ணா சுத்துவோம்.
படிப்பிலும் நல்ல பெயர் வாங்கினோம்.



ஒரு நாள் நானும் தம்பியும் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அரசமரத்து பிள்ளையார் கோவில் இருக்குமே அதுக்குப் பக்கத்தில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் கார். வெள்ளை வெளேர்னு பளிச்சின்னு ரோட்ல நின்னது.

‘புது கார்’டா’ என்றேன்.

‘நல்லா இருக்கு’ அப்டின்னான்.

’இது மாதிரி ஒரு கார் நம்ம லைப்ல வாங்க முடியுமா’டா?” என்று கேட்டேன். கேட்ட என் குரலிலேயே என்னால அது முடியாது அப்டின்ற அர்த்தம் நிறைய இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா அந்த நம்பிக்கையே இல்லை. ஆனால் தம்பியிடமிருந்து ரொம்ப நம்பிக்கையான, அதைவிட ஒரு matter of fact தொனியில்,

‘ஏண்டா .. இம்புட்டு படிச்சிட்டு இதுகூட வாங்காமலா போவோம்’ அப்டின்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போனான்.

இது என் மனசுக்குள்ள ரொம்ப வருஷம் ஒரு நிறைவேறா ஆசையாக அப்ப்டியே நின்னுது. நாம எல்லாம் கார் வாங்கிறதாவது என்ற நப்பாசைதான் மனதில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது.  ஒரு வழியாக அந்த ஆசை கனவாக மாறுவதற்குள் ஏறக்குறைய ஓய்வு பெரும் வயது நெருங்கியிருந்தது. ஆனால் இந்தப் பயல் நிச்சயமாக ரொம்ப சீக்கிரமே கட்டாயம் ஒரு கார் வாங்கியிருந்திருப்பான். அவன் குரலில் ஒலித்த நிச்சயமும் தன்னம்பிக்கையும் இன்றும் என் நினைவில் நன்கிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவன் பெயரில் ஒரு பாடப்புத்தகம் வெளியாயிருந்தது. திருவனந்தபுரம் பல்கலையில் வேலை பார்த்திருந்திருப்பான் போலும் அவன் பெயரில் Marine Ecology என்று ஒரு நல்ல புத்தகம் வெளியாகி இருந்தது.




அவனுக்கென்னப்பா ... புத்தகம் எல்லாம் போட்டவன்.  எப்பவோ கார் வாங்கமலா இருந்திருப்பான்?



*


Thursday, March 14, 2013

645. இதையெல்லாமா ப்ளாக்ல எழுதுவாங்க ...?




*



 ரெண்டு நாளா ஒரே போராட்டம்.


1997-ல் புது வீட்டுக்கு வந்தோம். அந்த ஏரியாவில எங்க வீடுதான் கட்டக் கடைசி. எதுத்தாப்ல ஒரு ப்ளாட். அதைத் தாண்டினா நெல் வயல். நாங்க போன நேரம் டிசம்பர் 27ம் தேதி. கொஞ்சம் மழை பெஞ்சிருந்தது. பத்தாதா ... எங்க ஏரியா முழுவதும் ஒரே சகதி. வீட்டுக்கு வரணும்னா 30 அல்லது 40 மீட்டருக்கு முன்னாலேயே செருப்பைக் கழட்டி, கால் சட்டையை முழங்காலுக்கு மேல மடிச்சி விட்டுக்கிட்டு, சர்க்கஸ் சாகசக்காரன் கயித்து மேல நடக்கிறது மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டே வரணும். இந்த லட்சணத்தில சில சமயம் தண்ணிப் பாம்பு, தவக்காளை எல்லாம் நம்ம பக்கத்தில் ஜாலியா வரும். தங்க்ஸ் கூட வந்தா இன்னொரு பெரிய சர்க்கஸ். அவங்க செருப்பு, என் செருப்பு, அவங்க பை, என் பை அப்டின்னு ஒரு நீள பட்டியல். எல்லாத்தையும் நான் தூக்கிக்கிட்டு நான் முன்னாலே போறேன் ... நீ பின்னாலே வாயேன் .. அப்டின்னு ஒருத்தர் பின்னால இன்னொருத்தரா போவோம். அதுலயும் டேஞ்சர் இருந்ததாலே அவங்கள முன்னால உட்டுக்கிட்டு நான் பின்னால, பாதுகாவலா போவோம். வண்டி வீட்டைத் தாண்டி ஒருத்தர் வீட்ல நிக்கும். காலையில் வீட்டை விட்டுப் போகும்போதே ரப்பர் செருப்பு ஒண்ணு போட்டுக்கிட்டு போய் கல்லூரியில் போய் அங்க வச்சிருகிற ஷூவை எடுத்துப் போட்டுக்கணும்.

ஒரு மழை பெஞ்சா வீடு பூரா வித விதமான பூச்சிகள் வந்திரும். ஒரு பூச்சி .. நம்ம மேல உக்காந்திருக்கேன்னு கையால தட்டி விட்டா ... அம்மாடி .. அப்படி ஒரு நாத்தம் கையில இருக்கும். கழுவினாலும் உடனே போகாது. முதல் நாள் வீட்டுக்கு வந்து சாமான்களை அடுக்கும்போது இந்தப் பூச்சிகளின் பயத்தில் கதவை சாத்தி வைத்து விட்டு அடுக்கிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க மெல்ல வெளியே வந்தேன். நம்ம த்ரில்லர் கதை எழுதுறவங்க எல்லோரும் சொல்வாங்களே .. கும் இருட்டு அப்டின்னு. அது மாதிரி வெளியே இருந்தது. அடடா மணி எட்டு ஆயிருக்கும்னு நினச்சி, டைம் பார்த்தா அப்போதான் ஆறு மணி ஆகியிருந்தது. அட ஆறு மணிக்கே இப்படி உலகம் இருட்டிடுமான்னு இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சுது. நாலு மழைத்துளி விழுந்தால் போதும் ஆரம்பிச்சுடும் இசைக் கச்சேரி. எங்கிருந்து தான் இத்தனை தவக்காளைகளோ ... பெரும் சங்கீதப் போட்டி நடக்க ஆரம்பிச்சிடும்.

இப்படி ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருந்தோமா ... வீட்டுக்கு சுற்றுச் சுவர் கிடையாது. எல்லா இயற்கைகளும், அதாவது பாம்பு, பல்லின்னு நிறைய வீட்டுக்குப் பக்கம் வரும் ... போகும். நண்பர்களிடமிருந்து எதற்கும் பாதுகாப்பிற்காக ஒரு நாய் வளர்த்துக் கொள் என்ற ஞான பாடம் வந்தது. வீட்டில் நால்வருக்கும் நாயென்றால் பிடிக்காது. அதையும் அப்படி கொஞ்சுவார்களே அதைப் பார்த்தால் சுத்தமாக ஆகாது. அதுவும் என் பெண்கள் உற்வினர்கள் வீட்டுக்குப் போகும் போது அவர்கள் வீட்டு நாயைப் பார்த்து பக்கத்தில் வந்தால் நாற்காலிக்கு மேல் நின்று கொள்ளும் ஆட்கள். இருந்தாலும் ஒரு நாய் இருக்கட்டுமே என்று நினைத்து நண்பர் ஒருவரிடம் கேட்டேன். நாலைந்து நாளில் ஒரு டாபர்மேன் க்ராஸ் இருக்கு .. வேணுமான்னு கேட்டார். நானும் போய் பார்த்தேன். காதெல்லாம் தொங்கிக் கொண்டு டாபர் லுக்கில் ஒரு நாய் இருந்தது. சரின்னு எடுத்து வந்தேன். நாய் நல்ல கருப்பு. நீளமாகவும் இல்லாம கொஞ்சூண்டு முடி. கருப்பு வண்டு அப்டின்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தோம். பின்னால் குட்டையா ஒரு பெயர் வேணுமேன்னு யோசிச்சி ஒரு பெயரை வச்சோம். Minky அப்டின்னு பெயர் வச்சோம். Mink coat கோட் மாதிரி எங்க ஆளு வழு வழுன்னு இருக்காம்! டாபர் மேன் அப்டின்னா வாலை குட்டையா வெட்டியாகணும்னு அமெரிக்காகாரன் சொல்லிட்டானாம். ரவி நாயைத் தூக்கிக்க வண்டியில போய் வாலையும் வெட்டிட்டி வந்திட்டோம். வாலை வெட்டியதும் அது ரேன்க் ரொம்ப கூடிப் போச்சு. பாக்குறவங்க எல்லாம் வாலை வெட்டிட்டா ரொம்ப கோவமா இருக்குமாம்; அதான் வெட்டியிருக்காங்க; தள்ளிப் போங்க அப்டின்னு சொல்ற அளவுக்கு எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சாங்க.

அதென்னமோ தெரியலை. நம்ம ஆளு ‘பைரவ குலமே’ இல்லை போலும். வளர்க்கிறவங்க கிட்ட எல்லா நாயும் எப்ப்டி அந்நியோன்யமா இருக்கும். இது சுத்தமா அப்படியில்லை. தெரியாம கால் கீல் அதுமேல பட்டிருச்சின்னு வச்சுக்குவோம். ஒரு சவுண்டு கொடுக்கும். அரட்டியா போய்டும். கழுத்தில செயினை மாட்டணும்னா அதோடு ஏதாவது பேசிக்கிட்டே ரொம்ப ஜாக்ரதையா போடணும். எங்க எல்லாத்திட்ட இருந்தும் ரொம்ப் அந்நியமா இருக்கும். யாராவது வீட்டுக்கு வந்து முன் கதவைத் திறந்தா தல உள்ளே வந்தவங்களை ஒரு கை பார்க்கும்னு நினச்சீங்கன்னா ரொம்ப தப்பு. முதல் வேலையா சுதந்திரக் காத்தை சுவாசிக்கணும்னு வெளியே போய்டும். கூப்பிட்டாலும் ஓடிடும். பக்கத்தில போனா கொஞ்சம் உருமும். பயத்தில வந்திருவோம். முதலில் வெளியே போனா திரும்பி வர அரை நாள் ஆகும். வயசு ஆக ஆக ரொம்ப சீக்கிரமே வீட்டுக்குள்ள வந்திரும். அதிலும் ஒரு விசேஷம் என்னன்னா .. இப்போ கடைசி சில மாதங்களில் வெளியே போனா திரும்பி எங்க வீட்டுக்குள்ள வர்ரதுக்குப் பதிலா பக்கத்து வீடு ரெண்டு வீடு இருக்கு. அங்க போய் அவங்க வீட்டுக் கதவை திறந்து வச்சா சீக்கிரம் அவங்க வீட்டுக்குப் போயிரும். என்னா நன்றி விசுவாசம்!

நாய்ன்னா பிடிக்காதுன்னு சொன்ன தங்க்ஸிற்கு நாள் ஆக ஆக ரொம்ப பாசமா போச்சு. இத்தனை வருசத்தில பிரிட்ஜ் ப்ரீசர்ல கட்டாயம் கோழிச் சில்லறை இருக்கணும் - வாயில்லாத ஜீவன் வயித்துக்கு! அது இல்லைன்னா தங்க்ஸ் என்ன மேஞ்சிருவாங்க. கொஞ்சம் கூட மிங்கி மேல பாசமே இல்லாம போய்ட்டேனாம். அதனால் தான் அதையெல்லாம் ஒழுங்கா வாங்கி வைக்கிறதில்லைன்னு ஒரு பெரிய ரிப்போர்ட் வரும். பயந்து போய் தொடர்ந்து அதையெல்லாம் வாங்கிக் குடுத்திர்ரது தான். கோழிக்கடைக்கு எங்களுக்காகப் போனதை விட மிங்கிக்காக போனது தான் அதிகம். அட .. கோழிக்கடைக்கார பாண்டியே, ‘என்ன சார்.. மிங்கி எப்படி இருக்கு?’ன்னு கேக்கிற அளவுக்கு ஆகிப் போச்சு.

இதில இன்னொரு பெரிய விஷயம் என்னன்னா தங்க்ஸ் தவிர வீட்ல நாங்க மூணு பேரும் தலைட்ட கடி வாங்கி ஊசியெல்லாம் போட்டுக்கிட்டோம். வெளிய யாரையும் தொட்டது கூட கிடையாது; ஆனா எங்கள் கடிச்சாச்சி ... தங்க்ஸ் மட்டும் தப்பிச்சிட்டாங்க. அதுனால் பாசம் ரொம்ப ஓவர். ஆனால் குரைக்கிற காலத்தில் அது சவுண்டுக்கு எல்லோரும் நல்லா பயப்படுவாங்க. அது ஒரு பெரிய நன்மை. அதே மாதிரி எங்க ஏரியாவின் முன்னாள் குடிமக்களான பாம்பு மவராசாக்கள் வரும் போது வேறு மாதிரி குலைக்கும். தங்க்ஸ் கண்டு பிடிச்சிடுவாங்க. மூணு தடவை நல்ல பாம்போடு சாருக்கு போட்டி நடந்திருக்கு. அதெப்படி அதுகளுக்குத் தெரியுமோ .. வேறு சில பாம்புகளை கவ்வி மொட்டை மெத்தைக்குத் தூக்கிட்டு போய்டும். ஆனால் நல்ல பாம்புன்னா தூரத்தில இருந்து குரைக்கும். அதைப் போகவும் விடாது. ரெண்டும் தூரத்தில் நின்னு மாத்தி மாத்தி ஆட்டம் காமிக்கும்.

நாளாச்சு. வழக்கமா பைரவர்களின் ஆயுசு 12 வருஷம் தானாம். அதன் ஒரு வயசு நம்ம எட்டு வயசுக்கு ஒத்திருக்கும் அப்டின்னாங்க. ஆனால் நம்ம ஆளு 15 ஆண்டுகள். ரெண்டு மூணு வருஷத்திற்கு முந்தியே கண் பார்வை போச்சு. கண்ணைப் பார்த்தால் கறுப்பு கோலி குண்டு மாதிரி இருக்கும். cataract ஆகிப் போச்சு. வழக்கமா எது சொன்னாலும் கேட்காது. ஆனால் walk போகலாமான்னு சொன்னா உடனே தல கேட் பக்கம் வந்து நிற்கும். நம்மளை ரொம்ப ஆர்வத்தோடு சுத்தும். எல்லாம் ‘சுதந்திர வேட்கை’ தான் ! நான் நடையை விட்டு விளையாடிட்டு வந்தாலும் கொஞ்ச தூரமாவது கூட்டிட்டு போகணும். நான் வர்ர நேரம் சரியா வந்து கேட் பக்கத்தில நிக்கும்.

ஆனால் இப்போ ஒரு மாசமா அதால நடக்கவே முடியலை. no walk! நடக்கவே ரொம்ப கஷ்டப்பட்டது. அதிலும் முன்னறைக்கு வந்து வழியை மறிச்சி படித்துக்கும். அதைத் தாண்டவும் பயந்து போய் தாண்டுவோம். கடைசி பத்து நாளா ரொம்ப சிரமப்பட்டது. பின்னால ஏதோ ஒரு கட்டி. அப்பவே euthanasia செஞ்சிருவோம்னு சொன்னேன். தங்க்ஸிற்கு மனசு கேக்கலை. கட்டி உடைந்து ... ஒரே சோகம். நடக்கவும் முடியலை. கடைசி இரு நாளா மிகவும் பாவமாக இருந்தது. ஒரே அழுகை. ஒரு தடவை அழுகையில் ‘ம்மா’ அப்டின்னு ஒரு சவுண்டு வந்தது. தங்க்ஸிற்குத் தாங்க முடியவில்லை. vet doctors பலரை முயற்சித்துப் பார்த்து விட்டேன். எல்லோரும் தாங்கள் அதைச் செய்வதில்லை என்றோ மருந்து இல்லை என்றோ சொல்லி விட்டார்கள். இரண்டு நாளாக முயன்று ஒருவர் வந்தார். என்னைத் தலையைப் பிடிச்சுக்க சொல்லி ஒரு பழைய காலத்து பெரிய ப்ளாஸ்டிக் syringe வைத்து கருணைக் கொலை செய்தார். முதல் syringe போடும்போது கொஞ்சம் உடல் ஆடியது. அப்போது அதன் cataract கண் வழியே என்னைப் பாவமாகப் பார்த்தது போலிருந்தது.



முடிந்தது......



வீட்டின் பின்னால் தென்னைக்கு அடியில் வச்சிருங்க என்றார்கள். அதையே செய்தோம். படுத்திருந்த இடத்தைச் சுத்தம் செய்து, உடனே குளிப்போம் என்றேன். தங்க்ஸ் மெல்ல குளிப்போம் என்றார்கள். ‘தீட்டு .. உடனே குளிக்கணும்’ என்றேன். நான் தீட்டு சொன்னதும் அவர்களுக்குஆச்சரியம். ’என்ன புதுசா இருக்கு’ அப்டின்னாங்க. இந்த மாதிரி நோய்வாய்பட்டு இறந்தவங்களுக்காகத்தான் தீட்டுன்னு ஒண்ணு வச்சிருக்காங்க. நீங்க அதை சாஸ்திரமா பாக்றீங்க. இந்த மாதிரி சாவுக்குப் பிறகு இடம், ஆள் எல்லாம் சுத்தமாகணும்னு’ ஒரு லெக்சர் கொடுத்துட்டு குளிச்சேன்.

நாலு பேத்துக்கு உடனே நியூஸ் போயிரும்ல... நான் குளிச்சிட்டு வர்ரதுக்குள்ள சொந்தகாரங்க - தங்க்ஸ் அண்ணன் தான் - ஒருத்தங்க இரண்டு தடவை நாய் வளர்த்து கருணைக் கொலை செய்து, பெரும் அழுகையோடு தங்கள் தோட்டத்தில் புதைத்தவர்கள். அவர்களிடமிருந்து தங்க்ஸிற்கு புதைத்த பிறகு ஒரு தம்ளர் பால் ஊத்திடுங்க என்ற கட்டளை வந்தது. அதற்குள் இன்னொரு இடத்திலிருந்தும் இதே அட்வைஸ். தங்க்ஸ் என்னிடம் சொன்னாங்க. ’அட போமா’ன்னு சொல்லி, இதையெல்லாம் எதுக்கு அப்டின்னு போய்ட்டேன். சில மணிநேரம் கழித்த பின் தங்க்ஸ் மெல்ல சொன்னார்கள். ‘பால் ஊத்தணும் போல் இருந்தது. நானே போய் ஊத்திட்டேன். (அவ்வளவு எளிதாக் வீட்டின் பின் பக்கமெல்லாம் போகாத ஆள்!) அதோடு, ’மாதா எண்ணெய்’ இருந்தது, அதையும் ஊத்திட்டு வந்திட்டேன் என்றார்கள். ம் .. ம் .. வளர்த்த பாசம் ..! :(

இதையெல்லாம் எழுதப் போறேன்னு சொன்னேன்.


‘இதையெல்லாமா ப்ளாக்ல எழுதுவாங்க ...?’ என்றார்கள்.





*

Wednesday, March 13, 2013

644. பரதேசி - A GOOD TEASER



*

பாலான்னா பாலா தான்!


*




*




Anurag Kashyap’s Phantom Films will be releasing Paradesi nationally with subtitles.


*





*


*




*

642. காணாமல் போன நண்பர்கள் - 14 - டாக்டர் கேசவன்






*
அதீதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுபதிப்பு ....


1961 - 64-ல் ...........

 B.Sc. முடித்து விட்டு முதுகலை போக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் B.Sc. முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சில இடங்கள் என்று அறிவிப்பு ஒன்று வந்தது. அட .. இப்படி ஒரு சான்ஸா என்று நினைத்து நானும் எனது B.Sc. வகுப்பு நண்பர்கள் இருவரும் நேர்முகத் தேர்வுக்கெல்லாம் போனோம். சென்னைக்கு மூவரும் ஒன்றாகப் போனோம். அந்த இரு நண்பர்கள் - மாணிக்க வாசகம். மதுரையில் இவரது வீடு என் வீட்டுக்குப் பக்கத்தில். ஆகவே சைக்கிளில் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் போவோம். இவர் இளம் வயதிலேயே காலமாகி விட்ட செய்தி கிடைத்தது. இன்னொருவன் I. கேசவன். ஜாலியான பயல். வகுப்பில் இவனுக்கு dissection சரியாக வராது. இருவரும் செய்முறை வகுப்புகளில் அடுத்தடுத்த வரிசையில் இருப்போம். அந்தக் காலத்தில் அடிக்கடி தவளையை அறுத்து என்னென்னமோ பண்ணுவோம். அநேகமாக தலையில் உள்ள நரம்புகளை - cranial nerves - எடுத்து தொடர்புகளை அழகு படுத்தணும். கேசவன் திடீரென்று என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அப்படி அழைத்து விட்டால் அவன் எடுக்க வேண்டிய நரம்பை அறுத்து விட்டான் என்று அர்த்தம்.

மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவனும் ஒட்டிக் கொண்டோம். முக்கிய காரணம் ‘தம்’. இருவரும் வகுப்புகளுக்கு நடுவில், மாலையில் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஒன்றாகச் செல்வோம். நான் அதுவரை திருட்டுத் தம் மட்டும் அடித்தவன் மூன்றாமாண்டில் ‘ஓப்பன்’ டைப்பாகி விட்டேன். இருவரும் அங்கே போவோமா .. அங்கே எனக்கு ஒரு புதுப் பழக்கம் சொல்லிக் கொடுத்தான். டீ வாங்கணும் ... மெல்ல உறிஞ்சிக் குடிக்கணும் .. பாதி டீ குடித்ததும் ஒரு சிகரெட் பற்ற வைக்கணும் .. அடுத்த இரண்டு மூன்று உறிஞ்சில் டீ முடிஞ்சிடணும் .. பின் இன்னும் ரசித்து சிகரெட் இழுக்கணும். ஆஹா ... நல்லா இருந்தது. ஆனால் பிரச்சனை என்னடான்னா ... இதுவரை அப்பப்போ திருட்டு தம் அடிச்ச நான் இப்போ டீ + சிகரெட் இரண்டுக்கும் - ஒரு காம்போ எஃபெக்ட் - சேர்ந்து அடிமையாக ஆய்ட்டேன். பின்னாளில், அட மாபாவி கேசவா இப்படி பண்ணிட்டியேடா ... அப்டின்னு அடிக்கடி நினச்சிக்குவேன்.

 மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குப் போனோம். அங்கு எங்கள் ஆசிரியர் ஒருவரும் எங்களோடு நேர்முகத் தேர்வுக்கு வந்தார். அவர் B.Sc. முடித்து எங்களுக்கு தாவரயியலில் ஓராண்டு ஆசிரியராக - demonstrator - இருந்தார். மொத்த மதிப்பெண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது - B Grade. ஆனால் தமிழ் ஆங்கில மதிப்பெண்களும் சேர்த்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் எங்கள் நால்வரில் எனக்கு மதிப்பெண்கள் கொஞ்சம் பெட்டர்.

அதிக நம்பிக்கையில்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனோம். கேசவனுக்கு நேர்முகத் தேர்வை விட நாங்கள் அதிகம் அப்போது கேள்விப்பட்டிருந்த புகாரி ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று குறியாக இருந்தான். நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு அதற்கு முந்திய நாள் போய்விட்டு அதன் பின் புகாரி போக முடிவு செய்திருந்தோம். புகாரி ஹோட்டலைத் தேடி போனோம். சர்வர் மெனு கார்டை வந்து கொடுத்தார். இரு குருவிகள் BH என்ற எழுத்துகளைத் தூக்கி செல்வது போல் அட்டையில் ஒரு படம். நீளமான அந்த அட்டையைக் கொடுத்தார்.குருவிப்படம் அது இதெல்லாம் பார்த்தவுடன் கேசவனுக்குக் குழப்பம். இவர் எதற்கு எனக்கு ஏதோ அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கிறார் என்று முழித்தான். அவன் குழப்பம் எனக்குப் புரிந்தது. சர்வரை அனுப்பி விட்டு கேசவனிடம் ‘டேய் .. இது மெனு’டா’ என்றேன். அதுவும் அவனுக்குப் புரிபடவில்லை. திறந்து காண்பித்தேன். பட்டியல் என்று புரிந்தது. ‘ஓ .. இதுவா?’ என்று சொல்லி உள்ளே பார்த்தோம். ஒன்றும் புரியற மொழியில் இல்லை! ஏதோ சொல்லி எதையோ சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் கேசவன், ‘டேய் .. ஏதாவது ஒரு புரோட்டா கடைக்குப் போய் சாப்பிடுவோமா ... நல்லா பசிக்குது’ என்றான்.

நான் நேர்முகத் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே போய்விட்டேன். என் அப்பா நேர்முகத் தேர்வு அன்று சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடிந்த அன்று மாலை ஒரு உறவினர்  சுகாதார அமைச்சரின் (அப்போது ஜோதி வெங்கடாசலம் அமைச்சர் என்று நினைக்கிறேன்.) செயலர் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ ரொம்ப லேட் என்றார். சரி .. ரிசல்ட் பாத்து சொல்லுங்க என்றோம். அடுத்த நாள் கல்லூரிகளில் பட்டியல் போட்டிருவாங்க. ஆனால் அதற்கு முந்திய நாள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அவர் சொன்னார். ஆஹா .. மகனுக்கு மருத்துவ சீட் கிடச்சிருச்சி அப்டின்னு என்ற சந்தோஷத்தோடு அப்பா அன்றே மதுரைக்குப் பயணமானார். நான் போய் எல்லாம் தயார் பண்றேன்’டா அப்டின்னு சந்தோஷமா சொல்லிட்டு அப்பா மதுரைக்குப் புறப்பட்டாச்சு.

நான் அடுத்த நாள் நண்பர்களோடு ரிசல்ட் பார்க்கப் போனேன். நான் நமக்குத்தான் சீட் கிடைச்சாச்சேன்னு போய் பார்த்தேன். லிஸ்ட் இருந்துச்சி... ஆனா அதில் என் பெயரைத்தான் காணோம். தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து சீட் கிடச்சுதுன்னு சொன்னவருக்குப் பேசினோம். அவர் தம்பி பெயரை நான் முந்திய நாள் மாலை பார்த்தேன். ஆனால் ராத்திரி அமைச்சர் கடைசி நிமிட மாற்றல் சில செய்தாராம். அதில் எப்படியோ இப்படி ஆகிப் போச்சு என்றார். அதற்கு ஒரு கதையும் சொன்னார்.  சோகமாக மதுரை வந்தோம்.

 கேசவன் மிகவும் எளிதாக இந்த நேர்முகத் தேர்வை எடுத்துக் கொண்டது போல் தெரிந்தது. ஆனால் அடுத்த வருஷம் முதலிலேயே சில ஏற்பாடுகளைச் செய்தான். அந்த வருஷம் அவனுக்கு மருத்துவ சீட் கிடச்சிது. மதுரையில் சேர்ந்தான். அதற்குள் நான் முதுகலை முதலாண்டு முடித்திருந்தேன். சில தடவை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கேசவனைப் பார்த்து விட்டு வந்தேன். ‘நீ மெடிக்கல் முடிப்பதற்குள் நான் முதுகலை முடித்து Ph.D. முடிச்சிர்ரேண்டா. ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் பட்டம் வாங்கிருவோம்’ என்றேன். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே போச்சு. எங்களுக்குள் தொடர்பும் அதன் பிறகு விட்டுப் போச்சு ...


*

Friday, March 01, 2013

641. பாலச்சந்திரன் பிரபாகரின் கொலைச் செய்தி




*  
 சமீபத்தில் இலங்கை சென்ற போது dbsjeyaraj என்ற சிறந்த பத்திரிகையாளரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இப்போது எனது நண்பர் அனுப்பிய மயிலிலும் அதே பத்திரிகையாளரின் செய்தி ஒன்று வந்துள்ளது. முழுப்பதிவையும் இங்கு வாசித்துக் கொள்ளுங்கள். 

தமிழில் சில தந்துள்ளேன்: 



Was LTTE Leader Prabhakaran’s son Balachandran Killed by Maj-Gen Kamal Gunaratne on the Orders of Defence Secretary Gotabhaya Rajapaksa who had been Advised by Ex-Tiger “Col”Karuna to do so? 


 முன்பு புலிப்படையில் இருந்த கர்னல் கருணாவின் அறிவுரையின் மேல், பாதுகாப்புச் செயலர் கோத்பயா ராஜபக்சே கொடுத்த உத்தரவின் பேரில், மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே பிரபாகரனின் மகன் பாலசந்திரனைக் கொன்றாரா?









குணரத்னே பாலச்சந்திரனை நேர்முக விசாரணை செய்துள்ளார்.


விசாரணையில் பாலச்சந்திரன் தன் தந்தை முந்திய நாள் இரவில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமான போரில் சிக்கிக்
கொண்டார்.

பாலச்சந்திரன் தானும் தன் தந்தையும் ஒரு படகில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்தோம். அப்போது இன்னொரு படகில் தன் தாயும் சகோதரியும் இருந்ததாகக் கூறியுள்ளான். அப்போது என் அப்பா சுடப்பட்டார். அம்மாவும் சகோதரியும் என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளான்.

கருணா அம்மான் பாதுகாப்புச் செயலரிடம் பாலச்சந்திரன் கொல்லப்பட வேண்டும்; ஏனெனில், அவன் தப்பித்தால் அவனே அடுத்த புலிகளின் தலைவனாகலாம். சிறு வயது காரணமாக நீதி மன்றங்கள் மூலம் அவன் விடுவிக்கவும் படலாம்.