Thursday, October 27, 2011

532. WHY I AM NOT A CHRISTIAN ... 1




*
அடுத்த 2-ம் பதிவு ...

WHY I AM NOT A CHRISTIAN 
and other essays on religion and related subjects

First published in 1957

*


பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  - 1872 - 1970


* போர்களுக்கும் காலனியாதிக்கத்திற்கும்  எதிராகக் குரல் கொடுத்தவர். 
* ஹிட்லருக்கு எதிரான கருத்துப் போராட்டத்தை நடத்தியவர். 
* அமெரிக்காவின் வியட்நாம் யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்; 
* அணுகுண்டு அழிப்புக்கும்  குரலெழுப்பியவர்.

மனிதப் பண்பாடுகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் அவர் எழுதிய இலக்கியத்திற்காக 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.  

*
Richard Dawkins  நூலில் பார்த்தது போலவே இந்நூலிலும் கிறித்துவத்திற்கு என்று சொல்லப்படும் பல கருத்துக்கள் ஆப்ரஹாமிய மதங்களுக்கும் பொதுவானது என்றே கொள்ள வேண்டும்.


CHAPTER I
WHY I AM NOT A CHRISTIAN

மக்கள்  பலரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதற்கான காரணம் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு அந்த நம்பிக்கை கற்றுக் கொடுக்கப்படுகிறது.

‘வலது கன்னத்தில்  அடித்தால் அடுத்த கன்னத்தைக் காண்பி’ - இது ஒன்றும் புதியதல்ல.கிறிஸ்துவிற்கு ஐந்து, ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தரும், Lao-Tze-வும் சொன்னவைகளே. (20)

’உன் சொத்துகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விடு’  - நல்ல கோட்பாடு; ஆனால் வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத ஒன்று. (21)

கிறிஸ்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் எனக்கொரு ஐயம். அவர் நரகத்தை நம்பினார். ஆனால் மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு கால வரையற்ற தண்டனையை நம்ப முடியாது. 

அவருடைய போதனைகளுக்கு எதிராகச் செல்லும் எவருக்கும் இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இருக்கிறது. (22)

பாவங்களுக்கான சம்பளம் நரகம் என்பது கொடூரத்தின் உச்சம். கிறிஸ்துவின் இந்தக் கோட்பாடு உலகத்தின் வரலாற்றில்  நடந்த பல வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அத்தி மரத்தை நோக்கிப் பசியோடு வந்த ஏசு அங்கே வெறும் இலைகளே இருப்பதைக் காண்கிறார். கோபமுற்று ‘இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்; உன் கனியை இனி யாரும் உண்ணவே கூடாது’ என்று சாபமளிக்கிறார். பின்னால் வந்த சீடர்கள் அம்மரம் அவரது சாபத்தால் பட்டுப் போனதை அவரிடம் சொல்கிறார்கள். (மத் : 21; 19;  மாற் : 11 : 14)  விநோதமான கதை இது. தவறான கால கட்டத்தில் கனி கொடுக்கவில்லையென்று மரத்தைக் கோவிப்பதா?

அறிவு சார்ந்த விஷயத்திலோ, பண்பாட்டு விஷயத்திலோ வரலாற்றில் வரும் பலரோடு சேர்த்து வைத்துப் பார்க்கும்போது கிறித்துவிற்கு உயர்ந்த இடம் கொடுக்க முடியவில்லை; புத்தரையும் சாக்ரட்டீஸையும் இதைவிட உயர்ந்த இடத்தில் வைக்கலாம். (24)

நம்பிக்கையோடு இருப்பவர்கள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; ஏனெனில் அவர்களது நம்பிக்கைகள் எல்லாமே உணர்ச்சி வசப்பட்டவை. (emotional)
ஆசிரியர் Samuel Butler எழுதிய Erewhon Revisited என்ற அங்கத நாவலின் கதையைக் கூறுகிறார். நல்ல கதை. குட்டிக் கதையாக, இங்கே இருப்பதை வாசித்துப் பாருங்கள். நமது நம்பிக்கைகளின் பிறப்பிடத்தின் ‘ரகசியம்’ புரியும்!

கிறித்துவ நம்பிக்கைகள் இல்லாதவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் மத  நம்பிக்கையுடையவர்கள்தான் அனேகமாக அப்படிப்பட்ட கெட்டவர்களாக இருப்பார்களென நினைக்கிறேன்.

உங்களைச் சுற்றிப் பார்த்தால் உலகத்தில் ஒவ்வொரு மனித உணர்வுகளின்  முன்னேற்றத்திற்கும், குற்றத்தடைச் சட்டம் ஒவ்வொன்றின் முன்னேற்றத்திற்கும், நமக்குள் நடக்கும் யுத்தங்களைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், நிறவெறிகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கும்,   அடிமைத்தனத்தை ஒழிக்க எடுக்கப் படும் செயல்களுக்கும், பண்பாட்டு முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கும் கிறித்துவ மதம் எதிர்ப்பாகவே இருந்து வந்துள்ளது. கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்பொதும் எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன்.

மதங்களின் முதல் முக்கியமான அடிப்படையே அச்சம் தான். புரியாதவைகளின் மேலுள்ள அச்சம் பாதியென்றால், அடுத்த பாதி நம் ‘பெரிய அண்ணன்’ ஒருவர் நமக்குத் தோள் கொடுக்க இருக்கிறார் என்ற நினைப்பும் ஒரு காரணமாயுள்ளது. (25)

*

CHAPTER II

HAS RELIGION MADE USEFUL CONTRIBUTIONS TO CIVILIZATIONS?

சமயங்களைப் பற்றிய என் கருத்துக்கள் Lucretius என்ற ரோமானிய தத்துவ ஞானியின் கருத்தோடு ஒன்றிப் போகிறது. சமயங்கள் பயத்தின் அடிப்படையில் பிறந்து மனித  குலத்திற்கு சொல்ல முடியாத மிகுந்த சோகங்களைத் தந்துள்ளன. ஆனாலும் மனித நாகரீகத்திற்கு அவைகள் பங்களித்திருக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. (27)

கிறித்துவம் பெண்களின் சமூக நிலையை மேலேற்றியதாகக் கூறுவதுண்டு; ஆனால் இது வரலாற்றை மிகவும் திரிக்கும் செயலாகும். (29)

ஏறத்தாழ ஒவ்வொரு கிறித்துவனும் சிறு வயதில் பாலியல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட தடைகளால் முதிய வயதில் மனக் கோளாறுகளோடு இருப்பதுண்டு. பாலியலைப் பற்றிய செயற்கையான கருத்துக்கள்  மனித மனத்தில் கடுமை, அச்சம், மடத்தனம் போன்றவைகளை முதிய வயதில் ஏற்படுத்துகின்றன. (30)

ஒரு மனிதன் என்ன தவறு செய்வான் என்பது கடவுளுக்கு முன்பே தெரியுமென்றால்,  அப்படி ஒருவனைப் படைத்ததற்கும், அந்த மனிதன் செய்யும் எல்லா தவறுகளுக்கும் கடவுள் தானே பொறுப்பு. 

உலகத்தில் மனிதனுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே அவனை தூய்மைப்படுத்துவதற்காக; ஆகவே துன்பங்கள் நல்லதே என்பது ஒரு கிறித்துவ விவாதம். ஆனால் இது ஒரு கொடுமையை அறிவுக்குப் பொருத்தமாக்கும்  (rationalization of sadism) முயற்சியேயொழிய வேறில்லை.


சமயங்களுக்கு எதிராக இரு வாதங்கள் உண்டு: ஒன்று அறிவு சார்ந்தது; மற்றொன்று பண்பாடு சார்ந்தது. அறிவு சார்ந்த எதிர்ப்பில் சமயங்கள் உண்மையென்று சொல்ல  சான்றுகள் ஏதும் இல்லை. பண்பாடு சார்ந்து எழும் விவாதத்தில்,  இப்போதிருக்கும் மனிதனை விட மிகவும் கொடூரமாக மனிதக் கூட்டம் இருந்த போது சமயங்கள் ஆரம்பித்தன. அப்போதிருந்த மனிதத் தன்மையற்றவைகளையும், இப்போதைய மனசாட்சிக்கு எதிரானவைகளையும் சமயங்கள் தொகுத்துக் காத்து வருகின்றன. (31)

மெக்ஸிகோவிலும்,. பெருவிலும் ஸ்பானியர்கள்  செவ்விந்தியர்களின் இளம் கைக்குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (கிறித்துவத்திற்குள் கொண்டு வருதல்) கொடுத்து, உடனே அந்தக் குழந்தைகளைத் தரையிலடித்துக் கொன்று விடுவார்கள். அவர்கள் கொல்லும் குழந்தைகளுக்கு நேரே மோட்சம் ! அப்போதிருந்த அடிப்படை கிறித்துவனுக்கு அது தவறாகப் படவில்லை. ஆனால் இன்றைய நிலையில் எல்லோருக்கும் இது தவறு.

கிறித்துவத்தில் ஆன்மாவையும் உடலையும் பிரித்துப் பார்க்கும் முறையால் மிகவும் மோசமான விளைவுகள் நிகழ்ந்தன. (34)

யூதர்கள் தங்களின் நேர்மைத்தனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைகளும், தங்கள் யூதக் கடவுளே சரியான கடவுள் என்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகின்றன. கிறித்துவ மதம் பரவிய காலந்தொட்டு மற்ற சமயங்கள் உண்மையல்ல என்ற சமய அடிப்படைவாதம் உலகந்தொட்டு வளர ஆரம்பித்தன. 

யூதர்களும் அதிலும் முக்கியமாக  தூதர்களும் தங்கள் நேர்மைத்தனத்தின் மீதான கடும் பிடிப்போடும், தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தாங்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள்.

நம் உலகம் உருவானது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்றால் இப்போது யாரும் நம்புவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இதை நம்பாதது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. (35)

FREE-WILL - சுயாதீனம்:
இயற்கை நியதிகளின் மீதான கிறித்துவர்களின் எண்ணங்கள் நிச்சயமற்றதாகவும், பெரிதும் உறுதியற்றதாகவும் இருந்தன. சுயாதீனம் (free-will) என்பதையே பெரும்பாலான கிறித்துவர்கள் நம்பினார்கள்.  இந்த சுயாதீனத்தால் மனித குலம் இயற்கை நியதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. (36)

சுயாதீனத்தைப் பற்றிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே நிற்கின்றன. யாரும் நடப்பியல் வாழ்க்கையில் அதை நம்புவதாக இல்லை. (37)

கார் ஒன்று கோளாறாகி நின்றால் அதை ஒரு பாவமாகப் பார்ப்பதில்லை; அதில் என்ன தகராறு என்று பார்ப்பதே இயல்பு. அதை விட்டு விட்டு ’இந்த கார் பாவம் செய்து விட்டது’ என்று கூறுவதில்லை. அதைப் போலவே ஒரு மனிதனையும் பார்க்க வேண்டும் என்பது சமயங்களுக்கு எதிரான ஒரு கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. (38)

ஆபிரஹாமிய மதத் தூதுவர்கள் சொல்வதெல்லாம் உண்மை; ஜெஹோவாவின் எண்ணமும் அதுவே என்று சொல்வதுண்டு. (’இது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நல்லது என்று தெரியும்’. நடவடிக்கை: 25:28) இன்னொரு தூதுவர் வந்ததும் முந்திய தூதர்களின் வார்த்தைகளை விட என் வார்த்தைகளே சரியானவை என்று சொல்வதும் கண்கூடு. (40)

கிறித்துவத்தில் அறிவு பாவமாக முந்திய காலத்தில் பார்த்தைப் போல் இப்போது பார்க்கப்படுவதில்லை. ஆனாலும் அது பாவமில்லாவிட்டாலும் அது ஆபத்தானது; ஏனெனில், அறிவு ஒருவனைப் புத்திசாலியாக்குகிறது; அதன் மூலம் அவன் கிறித்துவக் கொள்கைகளை கேள்வி கேட்கலாம்.(41)

சமயங்கள் பகுத்தறிவான படிப்பினையைக் குழந்தைகளுக்கு மறுக்கின்றன; சமயங்கள் பழைய பழக்க வழக்கங்களை, பாவம் தொடர்பான கருத்துக்களை,  தண்டனைகளைவிடாது பிடித்துக் கொண்டு, புதிய, அறிவியலோடு தொடர்புள்ளவைகளைத் தெரிந்து கொள்ள விடாது தடுக்கின்றன. 

மனித குலம் ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் நுழை வாயிலில் நிற்கிறது. ஆனால் அதில் நுழைவதற்கு முன் ஒரு பெரிய ராட்சத மிருகத்தைக் கொல்ல வேண்டியதுள்ளது. அந்தக் கொடிய மிருகம் நமது சமயங்களே.


*



Friday, October 14, 2011

531. விளம்பரங்கள்

*

சமீபத்தில் பார்த்த பாட்டு & நடனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது -- விஜய் தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படம் தான் --

“காலு கிலோ கறுப்புப் புளி
மஞ்சத் தூளு’டா ...

பையனுடைய entry, பாடுகின்ற பாட்டு, ஆடுகிற ஆட்டம், படப்பிடிப்பு எல்லாமே  மிக அழகு.  அந்தப் படம் எடுத்தவங்களுக்கு hats off !

பய புள்ள டான்சும் ரொம்பவே நல்லா இருக்கு ... கட்டாயம் பாருங்க.





*

ST கைப்பேசி விளம்பரத்தில் வருகிற நால்வருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நால்வரில் யார் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்? வேலைக்கார அம்மா நன்கு பேசுகிறார். ஆனாலும் பேசாமலே நடித்த குண்டு பையன் கைப்புள்ளைக்குத் தான் முதலிடம்.


*
புரு காபி விளம்பரத்தில் வரும் அழகான பையன், ‘அம்மா சொன்னாங்க .. காபியில் ஸ்வீட்  இல்லாட்டா என்னடா; பொண்ணுதான் ஸ்வீட்டா இருக்கிறாளே’ என்று சொன்னதும் அந்தப் பெண் சிரிக்குமே பார்த்திருக்கிறீர்களா ...? என்ன ‘அழகு’!!



அடடா .. அந்த சீன் வரும்போது நான் வேறு பக்கம் பார்த்துக் கொள்வேன். தங்க்ஸ் ரொம்ப ஆசையா அந்த பொண்ணை, அதன் “சிரிப்பை” (!) பார்த்து ரசிப்பார்கள்.ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தம்: ஏன் இவ்வளவு அழகான பையனுக்கு இப்படியொரு ‘அழகான’ பெண் கிடைக்க வேண்டும்?

*

Raymonds விளம்பரப் படங்களில் வரும் மேல்நாட்டு இசை எங்கிருந்தெல்லாம் எடுக்கிறார்கள் என்று அப்படங்களைப் பார்க்கும் போதேல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ... முழுதாகக் கேட்க ஆசை.


*

Sunday, October 02, 2011

530. சின்னச் சின்ன கேள்விகள்

*

எங்கள் பகுதி புதிதாக மதுரை பெருநகரப் பகுதியில் இணைந்து விட்டது. தேர்தலும் வந்து விட்டது. வேகமாகத் தான் வேட்பாளர்கள் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை நான்கு வேட்பாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ஓட்டு கேட்டார்கள். ஏதோ புது வழக்கம் போலும். ஒவ்வொருவரும் ஒரு துண்டு எடுத்து வந்து தோளில் போர்த்தி ஓட்டு கேட்டார்கள். (பக்கத்தில் செல்லூர் பகுதி தறித் துண்டுகளுக்குப் பெயர் போன இடம். செல்லூர் கடைகளில் துண்டு விற்பதற்காக அட்சய திருதி மாதிரி ஏதோ பொய் சொல்லி துண்டு போடச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும். ) எல்லோரின் துண்டையும் அந்த வேட்பாளர்களுக்குத் திருப்பி தோளில் போட்டு வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டேன்.

பக்கத்து வீட்டுக்காரங்க துண்டை வாங்கிக்கிட்டாங்கல்லா என்று தங்க்ஸுக்கு வருத்தம்.

*** *** *** *** ***

புதுவை மாநில கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் 10-ம் வகுப்புகூட முடிக்கவில்லையாம். என்னே நமது ஜனநாயகம்! ’விவஸ்தை’ அப்டின்னு ஒரு வார்த்தை உண்டு. அது நினைவுக்கு வந்தது. யாருக்கு விவஸ்தை இல்லை - பதவி கொடுத்தவருக்கா?; வாங்கியவருக்கா?; இதெயெல்லாம் கண்டுக்காமல் தலைவிதியேன்னு போகிறவர்களுக்கா?

ஆனால் அமைச்சர் 10 படிச்சி, தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, அடுத்து ஒரு ‘டிகிரி’ வாங்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதினார் அப்டின்னு தினசரியில் வாசிச்சதும் மனசு அப்படியே எங்கேயோ போய்ட்டுது.

ஆனால் அடுத்த நாளே அவர் தேர்வு எழுதாம, அதுக்கு ஒரு ஆளை அனுப்பிச்சிட்டார் அப்டின்னு செய்தி. மந்திரின்னா அதுகூட இல்லைன்னா எப்படி?

இப்போ தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் இதை புலன் விசாரணை செய்யப்போகிறாராம். ஏற்கெனவே பாண்டி முதலமைச்சர் தன் ”வழக்கத்தை” காப்பி அடிச்சிட்டார்னு ’மம்மி’ கோபத்தில் இருக்கிறாராம். கூட்டணிக் கட்சிகளைக் கேட்காமலேயே பாண்டி முதலமைச்சர் தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்குக் கோபம். இப்போ ஒரு அமைச்சர் கிடைத்திருக்கிறார். கஞ்சா வைத்து கைது செய்வது பழைய பழக்கம். இப்போது என்ன நடக்குமோ?

*** *** *** *** ***

19 ஆண்டுகளுக்கு முன்னால் வாச்சாத்தி பாலியல் குற்றங்கள் நடந்தன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னால் குற்றம் செய்தவர்கள் ஒரு நீதியரசரால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். (இனி அடுத்த உயர்நிலைக்குத் தண்டனை பெற்றவர்கள் போகலாம்.)

எப்படியோ 19 ஆண்டுகள் ஆனாலும் செய்த குற்றம் தொடர்ந்து போய் அவர்களைத் தண்டித்திருக்கிறது.

இப்படி ஒரு நீதியரசர். ’மம்மி’யின் பிறந்த நாள் பரிசளிப்பு வழக்கில் C.B.I வழக்குப் பதிய பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டதால் குற்றத்தையே விட்டு விட்டார் இன்னொரு பெரிய நீதியரசர். வழக்கு போடாததால், செய்த குற்றம் இப்போது குற்றமில்லாமல் போய்விட்டது என்றொரு புதிய தத்துவத்தைப் பிறப்பித்து விட்டார்.

முன்பொரு நீதியரசர் டான்ஸி வழக்கில் குற்றம் செய்தவரை ‘தியானம்’ செய்யச் சொல்லி உத்தரவிட்டார். எப்படியெல்லாம் தப்பிக்கிறாங்கப்பா ...!

பொறந்தா ஒரு அரசியல்வாதியா பொறக்கணுங்க ... யாருக்கும், எதற்கும், எந்தக் குற்றத்திற்கும் தண்டனை இல்லை!

*** *** *** *** ***

நில அபகரிப்பிற்காகத் தனியமைப்பு எல்லாம் வைத்து பழைய அமைச்சர்களை (சிறிது நாட்களுக்காவது) சிறையில் போடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அப்படியே கொஞ்சம் பழைய கதைகளையும் எடுக்க சொல்லுங்க’ப்பா! அந்த ஊரு என்ன .. சிறுதாவூரில் தலித்துகள் நிலத்தை எடுத்ததையும் சேர்த்து எடுங்க ... ஆமா, ஏன் அந்த நிலைத்தை இழந்தவர்கள் இதுவ்ரை எந்த நியாயமும் தேடலை.

நம்ம கம்யூ. ஆளுங்க இதுவரை கூட்டணியில் இருந்தவங்க. இப்போ வெளியே தூக்கிப் போடப்பட்டவங்க .. இப்போவாவது அவர்களுக்கு சிறுதாவூரும் நினைவுக்கு வருமா?

*** *** *** *** ***

ஒரு பதிவு இப்போது தான் பார்த்தான். தொடுப்பு எடுக்க மறந்து போனது. ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்டிருக்கும் நம்ம ஊர் ஆட்கள் - ராஜீவ் காந்தி, ப. சிதம்பரம், கருணாநிதி, ஸ்டாலின், ஆ. ராசா பெயர்களும் உண்டு - பற்றி விக்கிலீக்ஸ் கொடுத்த பட்டியல் கொடுத்திருந்தது.

அது ஒன்றுமே நடக்காதா?????

நாமும் பேசாமல் அந்த லிஸ்டை அடிக்கடி பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதானா???

*** *** *** *** ***

நாமளும் தான் காலங்காலமாய் இணையப் பதிவர்களாக இருக்கிறோம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களேன்னு தோணுச்சு. எப்போன்னு கேட்கிறீங்களா? இன்றைய Times of India -ன் Madurai Times-ல் ஒரு கட்டுரை. அனுஷா வின்சென்ட் என்பவர் எழுதியிருக்கிறார். யாரைப் பற்றி தெரியுமா? Tam-Bram பதிவர்களைப் பற்றி மட்டும் ஒரு கட்டுரை. special category!!??

அதன் தொடுப்பைக் கொடுக்க முயற்சித்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கட்டுரையாசிரியருக்கே ஒரு மயில் போட்டிருக்கிறேன் - தொடுப்பு கொடுக்கச் சொல்லி!

*** *** *** ***