Wednesday, September 29, 2010

443. THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ...1

*

முதல் பதிவு: 1


இரண்டாம் பதிவு: 2


மூன்றாம் பதிவு: 3




இது இப்போது வாசித்து முடித்த புத்தகம்.

பெயரைக்  கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல். வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி, கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன்.

Wednesday, September 22, 2010

442. சிங்கப்பூர் -- முடிவுரை மாதிரி ...

*

சிங்கையில் இருந்தது என்னவொ ஏழெட்டு  நாட்கள் தான். இருந்தாலும் யாரும் வாசிச்சாலும் வாசிக்கட்டாலும் சும்மா சகட்டு மேனிக்கு இடுகைகளை எழுதித் தள்ளிடுவோம்னு நினைத்தேன்.

Tuesday, September 21, 2010

441. சிங்கப்பூர் -- ஆடைகளில் ஒரு தத்துவம்

*

 சிங்கையில் இறங்கியதும் சில cultural shocks இருந்தது. எல்லாம் நம் கீழை நாடுதானே ... நம்மவர் பலரும் இருக்குமிடந்தானே என்று நினைத்து வந்தால் இங்கே அமெரிக்காவின் சாயலை அப்படியே பார்க்க முடிந்தது. சாலைகள், விரையும் வண்டிகள், சாலை விதிகள், அப்பழுக்கற்று அவைகளைப் பின்பற்றும் மக்கள், நடைபாதைகளின் அழகு, பராமரிப்பு, ரயில், பேருந்துகளின் அழகான நிலை, விரைந்து வரும் மக்களிடமும் காணப்படும் நாகரீகம்  -- இப்படி அந்த லிஸ்ட் மிக மிக நீளம்.



ஆச்சரியங்களை அளித்த இந்த வேற்றுமைகளோடு, ஷாக் கொடுத்த இன்னொரு விஷயம் -- மக்களின் ஆடைகள். பலரும், பொதுவாக அனைத்து சீனப் பெண் மக்களும் வயது வேற்றுமையின்றி அணிந்திருந்த ஆடைகள் முதல் இரு நாளில் என்னை  வாயைப் பிளக்க வைத்தன. மிக மிகச்சிறிய கால் சராய்கள். மேலே போட்டிருக்கும் ஆடைகளும் எந்த வித fixed style என்றில்லாமல் 'என்னத்தையோ' போட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளாடைகளின் நாடாவும், வெளியாடையின் நாடாவும் ஆளுக்கொரு பக்கம் நிற்கும். (நம்மூரில் அதற்கு sunday is longer than monday  என்றெல்லாம் குழூக்குறிகள் உண்டு; அந்த மக்களுக்கு அந்தக் கவலையே இல்லை.) Wondering whether it was all a "calculated carelessness"?!





இப்படி அரை குறையாக ஆடை அணிந்து செல்கிறார்களே என்று ஆண்கள் யாரும் வாய்பிளந்து நிற்கிறார்களா என்றால் யாரும் இல்லை. முதல் இரு நாளில் எனக்கு இது வேடிக்கையாகவும், விநோதமாகவும் தெரிந்தது - மூன்றாவது நாளிலிருந்து அப்படியில்லை. என்னைப் போலவே ஒரு தமிழ் இளந்தாரி ஒரு நாளில் வாய்பிளந்து பார்ப்பதைப் பார்த்தேன். ஒரு வேளை அவனும் இப்போதுதான் சிங்கைக்கு வந்திருக்க வேண்டும்.

தொலைக் காட்சியில் ஒரு முறை நடிகைகள் ஷ்ரேயா (மிகச்சின்ன கால் சராயைப் போட்டுக் கொண்டு கால் மேல் கால் மாற்றி உட்கார்ந்திருந்தார்.), ரீமா சென்  மேலே பட்டை ஏதுமில்லாமல் 'எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கும்' மேல்சட்டையுடன் இருந்தவைகளைப் பார்க்கும்போது எனக்கே 'என்னடா இப்படி இதுக எல்லாம் சட்டை போடுதுகள்' அப்டின்னு நினைத்தேன். நாலு இடம் பார்த்தாதான் 'இதெல்லாம் சகஜமப்பா' அப்டின்ற நினைப்பு வரும் போலும்.

நம்மூர்ல நடிகைகள் போடும் ஆடைகளை சர்வ சாதாரணமாக இங்கே எல்லா மக்களும் போட்டுக் கொண்டு போவதைப் பார்த்த பின்தான் நாம் தான் காலத்தால் மிகவும் பின் தங்கி விட்டோம் அப்டின்னு தோன்றியது.

அறுபது எழுபதுகளில் 'வாலிப வயசில்' இருந்த அப்போதைய இளைஞர்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்கள்; அவர்கள் ஆடைகளுக்குக் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். அப்போதெல்லாம் ரெடிமேட்  ஆடைகள் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கென்றுதான் நாங்கள் சொல்வோம் -- விலை அப்படி இருக்கும். எல்லோரும் போடுவதெல்லாம் tailored ஆடைகள்தான். அப்போதெல்லாம் அமெரிக்காவில்  பணக்காரர்கள் மட்டுமே tailored ஆடைகள் போடுவார்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியாக இருக்கும்.

சட்டை போட்டு 'டக்' பண்ணினால், சட்டையின் பின் பக்கம் தோள்பட்டை பக்கம் உள்ள இரு மடிப்புகள் மடிப்பு மாறாமல் நெடுக இருந்து, அதை டக் செய்யணும். ஒரு வேளை ஸ்லாக் சட்டை போட்டால் அதன் முன் மடிப்பு அப்படியே நேராக pants-ன் முன் மடிப்பில் சரியாகப் பொருந்தணும். pants-ன் pleats - மடிப்புகள் நன்றாக தைக்கப்பட்டு, சரியாக iron  செய்யப்பட்டு கத்தி மாதிரி இருக்கணும். அட ... ஷூ கூட அவ்வப்போது டிசைன் மாறும். ஒரு தடவை ஊசி மாதிரி .. கொஞ்ச நாளில் ஷூவின் முனை தட்டையாக இருக்கணும். லேடிஸ் ஹை ஹீல்ஸ் செருப்பு மாதிரி கொஞ்ச நாள் ஆண்கள் ஷூவும் உயர்ந்த ஹீல்ஸோடு போட்டோம். (மோகன் - அதாங்க .. மைக் பிடிச்சிக்கிட்டு பாடிக்கிட்டே ஒரு நடிகர் இருப்பாரே, அவரது ட்ரேட் மார்க்கே அந்த டைப் ஷூ தான்!) இந்த பெல்ட் இல்லை ... அது பட்ட பாடு. 65-ம் வருடத்தில் பெல்ட் நம் அரை ஞாண் கயிறு சைசில் இருக்கும். அதிலிருந்து நாலைந்து ஆண்டுகள் கழித்து சரியான பட்டை சைசில் ஆயிரிச்சி. உரித்தெடுக்கும் டைட் pants அறுபதுகளின் கடைசியில். ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் படா பெல் பாட்டம்ஸ்.

எழுபது வரை இப்படி இருந்த 'ஸ்டைல்' தொன்னூறுகளில் முற்றிலும் மாறி விட்டது. ரெடிமேட் ஆடைகளின் காலம் ஆரம்பித்தது. அதுவரை தனித்தனியாக தைத்து போட்ட ஆடைகளில் நாங்கள் காட்டிய நுணுக்கங்கள் காணாமல் போனது. ஜீன்ஸுகள் வந்தன. casual wear என்ற காலம் பிறந்து விட்டது. அறுபதிலிருந்து எண்பதுகளின் கடைசி வரை டைட்ஸ், பெல் பாட்டம்ஸ் என்றெல்லாம் மாறி மாறி வந்த pants அனேகமாக ஒரே "ரூபத்தைப்" பெற்றன. அதன்பிறகு ஆண்களின் ஆடையில் மாற்றங்கள் மிகக் கம்மி.

ஆண்கள் ஆடையில்தான் இந்த மாற்றங்களா என்றால் பெண்களின் ஆடையிலும் தான். தாவணிகள் போய் சூரிதார் வரும்போது மிகவும் அவை மிக மெல்ல மெல்லவே வந்தன. பெண்களுக்கும் தடுமாற்றம். சமூகத்திற்கும் அதை ஒத்துக் கொள்ள காலம் எடுத்தது. ஒரு மாணவி சூரிதார் போட்டு என வகுப்பிற்கு வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்ற கல்லூரி ஆசிரியர்களும் இருந்தார்கள். தாவணி --> சூரிதார் -- இதற்கெடுத்த காலத்தையும் விட குறைவாகவே சூரிதார் --> pants  எடுத்தது. அதிலும் மதுரையை விட சென்னையில் இந்த வேகம் கொஞ்சம் அதிகம். சென்னையை விட பெண்களூரில் இன்னும் வேகம். அதையும் தாண்டி அடுத்த நாடுகளில் வேகம் இன்னும் அதிகம். நமது நாட்டில் pants வரை பெண்கள் வந்து விட்டார்கள். அரைக்கால் சட்டையும் மெல்ல எட்டிப் பார்க்கிறது. சிங்கையில் முழுமையாக வந்து விட்டது.

சிங்கையில் ஒரு வாரம் இருந்து விட்டு விமான நிலையத்தில் கூட்டமாய் காத்திருந்த போது சுற்றிலும் நம்மூர் பெண்கள். எல்லா பெண்களிடமும், சேலை கட்டியோர் தங்கள் முந்தானைகளிலும், சூரிதார் பெண்கள் தங்கள் துப்பட்டாவிலும் மட்டுமே தங்கள் கற்பு 'தொங்கிக் கொண்டிருப்பது' போல் இருந்ததைக் காண முடிந்தது. அது எனக்கு இப்போது வேடிக்கையாக இருந்தது.

நாங்கள் எழுபதுகளில் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் இப்போது பெண்கள் தங்கள் உடைகளோடு ஒன்றிப் போய் விட்டார்கள். ஆனால் சிங்கைப் பெண்கள் அதையும் தாண்டி வந்து விட்டார்கள். அந்த உடைகளில் அவர்களைப் பார்க்கும் போது working women என்ற ஒரு நினைப்பு உடனே வந்து விடுகின்றது. அதில் முதலில் தோன்றிய so called  கவர்ச்சி என்று ஏதுமில்லை. மிக சாதாரணமாகத் தோன்றியது. அந்த பெண்கள் ஆடைகளைத் துறந்து விட்டார்கள். ஆடைகளுக்குரிய அதீத முக்கியத்துவத்தைத் துறந்து விட்டார்கள்.
ALVIN TOFFLER  ஆடைகளின் fashions மாறி மாறி வரும் என்பது நிதர்சனமான உண்மை என்று தனது நூல் FUTURE SHOCK-ல் கூறுவார். முப்பது வருடங்களுக்கு ஒரு cycle  என்பார் அவர். ஆனாலும் அவர் சொன்னதை விடவே இன்னும் வேகமாகவே மாறி வருகின்றன. அந்த மாற்றங்களை எதிர் நோக்குவதும் அதை ஏற்றுக் கொள்வதுமே நமது தகவுடைத்தன்மை என்பார். நாளை நம்மிடத்தில் மெல்ல வரப்போகும் ஒரு மாற்றத்தை திடீரென்று சிங்கை போனதால் பார்த்தேன்.அதனால் முதலில் சிறிதே FUTURE SHOCK !




*
ஒரு வேளை யாராவது இந்த இடுகையை வாசிக்க நேர்ந்து, ஒரு பின்னூட்டமும் போட நினைத்தல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
'தமிழ்ப்பண்பாடு' என்ற வார்த்தை அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அப்படி ஒன்றுமே, எதுவுமே இல்லை. என்னைப் பொறுத்த வரை 'தமிழ்ப்பண்பாடு' என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை.









Monday, September 20, 2010

440. சிங்கப்பூர் -- SINGAPORE FLYER

*


சிங்கப்பூர் சுழல் குடை ... ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஒரு பெரும் சக்கரம். 40 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமான இரும்பு அதிசயம். உலகத்தில் இதுபோல் உள்ள பெரும் சக்கரங்களில் இதுவே மிகப் பெரியதாம்.

Sunday, September 19, 2010

439. சிங்கப்பூர் -- கண்காட்சியகம்



சென்ற பதிவில் சொன்ன 'தண்ணிக்கடைகள்' இருந்த தெருவைப் பார்த்து விட்டு இயல்பாக நடந்து வந்து கொண்டிருந்த போது  இன்னொரு கட்டிடம் எங்கள் கவனைத்தைக் கவர்ந்தது.

Saturday, September 18, 2010

438. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*

கெட்ட வார்த்தை எதுவும் இல்லாமல் இந்த இடுகையை இட வேண்டுமென்ற முழு முயற்சியோடுதான் ஆரம்பித்துள்ளேன். ஒரு வேளை ஏதாவது வார்த்தை வந்து விழுந்து தொலைத்தால் அது 'காலத்தின் கட்டாயம்'!

Wednesday, September 15, 2010

437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், பேருந்துகள், டெக்ஸி ...






*

சிங்கையில் இறங்கி வெளியே சாலைகளுக்கு வந்ததுமே தெரிந்த முதல் உண்மை - நாம் மூன்றாம் உலகத்தில் இருந்து முதலாம் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான்.

Tuesday, September 14, 2010

436. சிங்கப்பூர் -- வீடுகள்

  






*
'ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க' என்று சொல்லுவது போல் இந்த நாட்டை முன்னோக்கி நடத்த யோசித்தவர்கள் வாழ்க்கையின், பொருளாதாரத்தின், சமூகத்தில் பல படிகளையும் நன்கு யோசித்து நல்ல பல முடிவுகளை எடுத்துள்ளனர். எடுத்த முடிவுகளைச் சட்டங்களாக்கி, அவைகளை முறையாகவும் செயல்படுத்தி வருகின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நம்ம ஊர்ல ஆட்டோக்களுக்கு மீட்டர் போட ஒரு அரசாலும் முடியவில்லை!
கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டே போகும் உத்தமர்களை நிறுத்த காவல் துறையால் முடியவில்லை!
தலைக்கவசம் போட அரசின் கருணை இடம் கொடுக்கவில்லை!
ஒரு அரசியல்வாதியின் ஊழலை நீதிமன்றத்தில் நம் C.B.I.-ஆல் நிறுவ முடியவில்லை!
தப்பு செய்தாலும் தண்டனை கொடுக்க நீதியரசர்களுக்கு மனமில்லை!

இது போல் நிறைய இருக்கு அழுது கொண்டே சொல்ல ... 
............. என்னமோ போங்க! நம் தலையெழுத்து!!

பரப்பளவு பற்றாக் குறையினால் அடுக்கு மாடி வீடுகளையே நிறைய கட்டியுள்ளார்கள். அறுபதுகளில் ஊரில் அங்கங்கே வெறும் கூரை வீடுகளாக இருந்தனவாம். அன்றைய குப்பங்கள் .. இன்றைய கான்க்ரீட் காடுகள். எங்கும் பல மாடிக்கட்டிடங்கள். 15 முதல் 50 வரையிலான மாடிக் கட்டிடங்கள். அவ்வாறு கட்டும்போதே அங்கே யார் யாரைக் குடி வைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளார்கள்.  இருக்கும் மக்கள் நால்வகை மக்கள்: மலாய், சீனா, இந்திய, மற்றையவர் என நான்கு பிரிவு மக்கள்; வெவ்வேறு விழுக்காட்டில் உள்ளார்கள். சாதாரணமான, திட்டமில்லாத குடியேற்றம் என்றால் அந்தந்த வகை மக்கள் மொத்தமாக வீடுகளில் குடியேறியிருக்கலாம். அப்படியிருந்திருந்தால்  ஒரு புறம் மலாய், மறுபுறம் சீனாக்காரர்கள்; இன்னொரு பக்கம் தமிழர்கள் என்றெல்லாம் இருந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பகுதிகளிலும் நாட்டில் இருக்கும் மக்களின் விழுக்காட்டின்படி மட்டுமே வீடுகள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. 'அந்த லொக்காலிட்டி, இந்த லொக்காலிட்டி' என்ற பேச்சுக்கே இடமில்லை.  எல்லோரும் எங்கும் ....நம்ம ஊர் சமத்துவபுரம் போல் அங்கு சரியாக நடந்து வருகிறது.

வீட்டுத் தொகுதிகள் எண்களால் குறிக்கப்பட எங்கிருந்தும் வாடகைக்காரில் போய் வருவது எளிதாகி விடுகிறது. எண்களைச் சொன்னால் காரிலுள்ள G.P.S. மூலம் எளிதாகக் கண்டு பிடிக்க முடிகிறது. வீடுகளில் எந்தக் குழாயைத் திருப்பினாலும் வருவது நல்ல தண்ணீர் மட்டுமே. அமெரிக்காவிலும் முன்பு இதே நிலையைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. சிங்கையில் தண்ணீரும் இறக்குமதிதானாம். மலேஷியா நாட்டிலிருந்து தண்ணீரைப் பெற்று அதை நல்ல நீராக்கி அவர்களுக்கே திரும்ப கொடுத்து லாப வியாபாரம். அதோடு தங்களுக்கும் தண்ணீரை இறக்குமதி செய்து கொள்கிறார்கள். வீட்டைச் சுத்த பத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். அவ்வப்போது வீடுகளின் நிலையை அரசு  கண்காணிக்கிறது.  கொசு போன்றவைகளை உருவாக்கும் வழியாக தண்ணீர் எங்கும் கட்டிக் கிடந்தால் அதற்கு தண்டம் உண்டு. நம்ம ஊர்ல மாதிரி அங்கங்க எச்சி துப்புறது, கண்ட இடத்தில் குப்பை போடுவது இவைகளைச் சிறு வயதிலிருந்தே தடை செய்யப்பட்ட விஷயமாக ஊட்டி விட்டிருக்கிறார்கள். எங்கும் எதிலும் குப்பையில்லை; அழுக்கில்லை. அட .. சாலைகள் கூட எவ்வளவு சுத்தம்.வீடுகளில் கூட நம் குப்பைகளை அந்தந்த மாடியில் உள்ள  ஒரு பொந்தில் கொட்டி விடுகிறார்கள். குழாய் வழியாக அது 'மறைந்தே' விடுகிறது.

வீட்டுத் தொகுதிகளைச் சுற்றி நல்ல புல்வெளி; இரவில் உண்டு களிக்க திறந்த இடங்கள்; உடற்பயிற்சிக்கான இடங்கள்; வயதானவர்களுக்கான கீழ்த்தளத்தில் ஓரிடம்; வீட்டில்  நல்லது கெட்டது எதற்கும் ஒரு பொதுவிடம் - கல்யாணமோ, கடைசிப் பயணமோ அங்கே நடத்திக் கொள்ள வசதி -- self contained complexes.

பதினேழரை வயதில் ஆண்கள் இரண்டரை ஆண்டு கட்டாய ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும். இளைஞர்கள் அதன்பின் வேலைக்குச் சேரும்போது இந்த இரண்டரை ஆண்டுகளும் அவர்களின்  தொழில் வரலாற்றுப் பதிவில் இடம் பெறுகிறது.இளைஞர்கள் அந்த ஆண்டுகளில் முழு மன வளர்ச்சி பெறுவது இயல்பாக நடந்து வருகிறது.  வாழ்க்கையில் அவர்கள் முறையான பழக்க வழக்கங்களைக் கைக் கொள்ள இந்தப் பயிற்சி உதவுகிறது. குடும்பத்திலிருந்தும் சிறிது விலகல்  வந்து விடுகிறது. அதன்பின் அவர்கள் ஒரு வளர்ந்த தனித்த மனிதனாக இருப்பதே நடைமுறை போலும்.

ஒவ்வொரு வீட்டுத் தொகுதிகள் பெரும்பாலும் ஒரு M.R.T. நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அதோடு  ஒரு பெரிய Mall ஒன்றும் பக்கத்திலேயே. இன்னொன்றும் உண்டு. ஒரு பெரிய food court.  பாதி கால்பந்து மைதான சைஸில் ஒரு சாப்பாட்டு இடம். அதைச் சுற்றிலும் பல கடைகள். உங்களுக்கு வேண்டியதை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வரலாம். ஒரு சனி மாலை அந்தப் பக்கம் போனேன். எங்கும் எதிலும் காலி பியர் பாட்டில்கள். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து மக்கள் சோம பானம் குடிக்கலாமாம். ஒரு நாள் இரவு 12 மணிக்கு ஒரு food court-க்குப் போனோம். இரண்டு மணியளவில் கிளம்பி போனால் பக்கத்திலிருந்த சாலையின் நடை மேடையில் ஒரு கச்சேரி - நம்ம ஊரு பசங்கதான் - நடந்துகிட்டு இருந்திச்சி. food court-ல் அம்புட்டு கூட்டம். ஜமாய்க்கிறாங்க'பா!

ஏற்கெனவே சொன்னது போல் underground bunkers நிறைய கட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். மக்களின் எல்லா தேவைகளுக்கும் சிங்கை அயல்நாட்டு இறக்குமதிகளை நம்பித்தான் உள்ளது - தண்ணீர் கூட. ஆனாலும் எப்போதும்  தேவையான பொருட்களை அரசு சேமித்து வைத்துள்ளது என்றும், இரு முழு ஆண்டுகள் வெளிநாட்டு இறக்குமதி இல்லாவிட்டாலுமே நாடு அதை சமாளிக்கும் அளவிற்கு தேவையான எல்லா பொருட்களையும்  சேமித்து வைத்திருக்குமாம். ரூம் போட்டு அல்ல .. ஒரு பெரிய ஹால் பிடித்துப் போட்டு யோசித்து வைத்திருக்கிறார்கள்.

இரும்புக் கதவு
இதையெல்லாம் விட என்னை மிகக் கவர்ந்த விஷயம் - ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இரும்பறை உள்ளது. கதவும் தடிமனான இரும்புக் கதவு. அந்த அறை நம் தமிழ் மக்களால் பூசை அறையாகவும், மற்றவர்களால் store room-ஆகவும் பயன் படுத்தப் படுகிறதாம். அந்த அறையில் எந்த வித மாற்றமும் செய்யப்படக் கூடாதாம். இந்த அறை ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடத்திலும் ஒரே இடத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாக வரும்படி கட்டியுள்ளனர். எந்த வகை மனித, இயற்கை சீர்கேடுகள் நடந்தாலும் இந்த அறைகள் பாதுகாப்பானதாக இருக்கும். அடுக்குமாடிக் கட்டிடங்கள் நொறுங்கினாலும் இந்த அறைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டியுள்ளார்கள்.

மக்கள் பழகும் எல்லா மொழிகளிலும் ஒரு அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது, தேவையான பொழுது இந்த அறைக்குள் மக்கள் ஒரு ரேடியோவும் சாப்பாட்டுடனும் இந்த அறைக்குள் நுழைந்து கொள்ள வேண்டுமாம்.
எப்ப்டியெல்லாம் யோசிச்சிருக்காங்க ... நாட்டுத் தலைவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருந்தால் இரு ஆண்டுகளுக்கு தேவையானதை சேமித்து வைத்தல், இது போன்ற இரும்பறை கட்டுதல் என்று பல விதயங்களை யோசித்து செய்திருப்பார்கள்!! ஆச்சரியமில்லையா?






















Monday, September 13, 2010

435. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

?????

இன்றைய இந்துவில் Forbes பத்திரிகையின் சில எதிர்கால நிகழ்வுகளாகச் சொல்லப்படுவதில் முதன்மையானது அம்பானி விரைவில் உலகின் முதல் பணக்காரராக உருவாகிவிடுவார் என்பது. நானும் அப்பத்திரிகையின் பணக்கார லிஸ்டுகளைப் பார்ப்பதுண்டு. அதில் எனக்கு பெரிய ஆச்சரியம் எப்படி நம்மூர்  அரசியல்வாதிகள் பெயர் வருவதேயில்லையே என்பதுதான். அதெல்லாம் கருப்பு - வெள்ளை என்பதைப் பொருத்ததோ என்னவோ? நம்மூர் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் என்ன வெளியேவா தெரியப் போகிறது. ஆனால் அப்பப்போ மூட்டை மூட்டையாக பணம் கிடைத்தது என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வருகிறது. என்ன ஆகும்?  அதோடு, எத்தனையோ லட்சம் கோடிகள் நம்மூர் ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் கிடக்கிறதாமே. அதையெல்லாம் சேர்த்தால் இந்த லிஸ்டுகள் எல்லாம் மாறிடாது?

?????

அமைச்சரின் பிள்ளைகள் பல கோடிகளில் தொழில் செய்தாலும், சினிமா எடுத்தாலும் இவர்களுக்கு ஏது இவ்வளவு சொத்து என்றோ, இல்லது அவர்களின் அப்பாமார்களின் சொத்தையோ யாரு பார்க்கப்போகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நிறைய தெரிந்தவர் ஒருவர் கேட்டார். அப்படியா?

?????



ராதிகா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திக்கைப் பார்த்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு வாலையும் ஒட்ட வைத்தார். தமிழ்சினிமாவில் ஆண் நடிகர்களைப் பற்றிப் பேசும்போது 'அழகு' என்ற வார்த்தையையே பொதுவாகப் பயன்படுத்த முடியாதில்லையா என்றார். முழு உண்மையைச் சொல்லி விட்டார்.
ஆனாலும் நமக்கெல்லாருக்குமே 'அழகுணர்ச்சி' ரொம்ப கம்மியோ?

?????

மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அங்குள்ள கலை மன்றத்தின் ஓரத்தில் கண்காட்சியாளர்களின் படங்கள்,  விளம்பரங்கள் எல்லாம் flex board-ல் இருந்தன. இவைகளை வைக்க போர்டு ஒன்றுக்கு அந்தப் பத்து நாட்களுக்கு தலா 2000 ரூபாய் வாங்கினார்களாம். ஞாநி சொன்னார்.

நடுவில் ஒரு நாள் அந்த போர்டுகள் காணாமல் போயின. எங்கள் ஊர் அரசியல்வாதி ஒரு காது குத்து விழாவிற்காக வருகிறார் என்று அந்த போர்டுகளை எடுத்து விட்டு அவர் படங்கள் அணி வகுத்தன. கொடுத்த காசுக்கு எங்க படத்தை மாட்டாம எதுக்கு அவைகளை எடுக்கணும் அப்டின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா பாருங்க .. அந்த ஒரு நாள் முடிஞ்சதும் மறுபடி பழைய போர்டுகள் வந்து விட்டன. என்ன நேர்மை??

?????

flex board என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது.  வீட்டு விழாக்களுக்கு
flex board அடிப்பது ஒரு fashion என்றாகி விட்டது. ஆனாலும் எங்கள் மதுரையில் அதுவும் செல்லூரில் இந்த 'வியாதி' அளவுக்கு மீறிக்கொண்டிருப்பதாக அப்பகுதியை நித்தமும் கடக்கும் எனக்குத் தோன்றுகிறது.

வேடிக்கையான மனிதர்கள், செல்போனை காதில் வைத்து ஒரு போஸ் கட்டாயம் இருக்கணும். அதோடு படங்களை எடுக்கும் பயங்கரமான காமிரா பொட்டிக்காரர்கள் படத்தில் இருப்பவர்களை பயங்கர போஸ் கொடுக்கச் சொல்லி விடுகிறார்கள். கடவுளே .. அதில் நாலைந்து படங்களை எடுத்து இங்கு போடலாமா என்று கூட நினைத்தேன். என்ன ஒரு பயங்கரமான போஸ்கள். எல்லோருக்கும் '***' மாதிரி தான் அழகா இருக்கிறது மாதிரி ஒரு நினைப்பு போலும்.

நம்ம வீட்டு பெண்கள் படத்தை பதிவுகளில் போடக்கூட அச்சப்படும் காலத்தில் இந்த மக்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் படங்களை பெரிய சைஸில் போடுகிறார்கள். அதுவும் நிஜ நகைகளா இல்லை வேற ஏதுமா என்று தெரியாத அளவில் 'பயங்கரமான' நகை நட்டுகளோடு படங்கள். (income tax காரங்களுக்கு இதெல்லாம் தெரிந்தால் பரவாயில்லையான்னு தெரியலை.) காது குத்து என்று ஒரு போஸ்டர். அதில் உள்ள பிள்ளைகளுக்கு ஏற்கெனவே காது குத்தியிருந்தது. அப்போ .. இப்போ யாருக்கு "காது குத்து?"  படத்தை ரோட்டில் இப்படி போடுவதால் எல்லோரும் அவர்களைப் பற்றி என்ன பேசுவார்கள்; எப்படி கேலி செய்வார்கள் என்பது கூட இவர்களுக்கு எப்படி தெரியாமல் போய்விட்டது?

யாராவது இதை மாற்ற முயலலாம். யார் சொன்னா கேப்பாங்க? ஒருவேளை நம் காமெடி நடிகர் விவேக் சொன்னா ஒருவேளை கேட்கலாம். ஆனாலும் அவராலும் முடியாமல் அவர் நம் அப்துல் கலாமிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.

?????

பிறந்த நாள் வரும் ஒரு மாதத்திற்கு முன்புதான் flex board போட வேண்டும்.  வரப்போகும் பிறந்த நாளுக்கு ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பே வாழ்த்துகள் போடக்கூடாதுன்னு மதுரைக்காரர்களுக்கு ஒரு தடை போட்டால் என்ன? அல்லது யாராவது சொல்லியாவது கொடுத்தால் என்ன?
:)

?????













Thursday, September 09, 2010

434. சிங்கப்பூர் -- ஒரு அதிசயமான வரலாறு

*

Lee Kuan Yew

*


கால் நூற்றாண்டுக்குள் ஒரு நாட்டை - அது எவ்வளவு சிறிதாக, மூலப்பொருளேதும் இல்லாது இருந்தும் கூட - வளமாக்க முடியும் என்பதற்கு சிங்கை ஒரு நல்ல உதாரணம்.

Monday, September 06, 2010

433. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்

*
இதன் முந்திய பதிவு இங்கே ...

*

2010ஏப்ரல் மாதம் கூட தேர்தல் கமிசன் தலைவர் தொழில் நுட்ப மேம்பாடு தேவை இல்லை. எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்று சாதிக்கிறார். விவாதிக்கத் தயாரில்லாத மன நிலையில் தான் அவருடைய பேச்சு உள்ளது. .

432. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்




*மின்னணு ஓட்டளிப்பு எந்திரங்களின் திறன், பாதுகாப்புத் தன்மை பற்றிய நிறைய கேள்விகள் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. வரும் கேள்விகளுக்கு விடை அளிப்பதே அரசின், தேர்தல் கமிஷனனின் வேலை. ஆனால் கேள்வி கேட்ட ஹரி ப்ரசாத் என்பவரை சமீபத்தில் ஒரு 'நொண்டிச்சாக்கோடு' அரசு அவரை கைது செய்தது.

இந்த EVM- களின் பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி என் கல்லூரி மாணவரும், நண்பருமான இளங்கோ ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.


Saturday, September 04, 2010

431. ஜெய மோகனும், ஞாநியும் ...

*

ஐந்தாம் புத்தகக் கண்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்திற்கும் எங்கள் கல்லூரிக்கும் நடுவிலே ஒரே ஒரு ரோடு. நல்ல வசதியாகப் போய்விட்டது. கண்காட்சிக்கு வரும் படைப்புலகத்தாரை எங்கள் கல்லூரிக்குப் பேச அழைப்பது எளிதாகிவிடுகிறது. இரு தினங்களுக்கு முன் - வியாழனன்று ஜெய மோகன், வெள்ளியன்று ஞாநி ... இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஜெயமோகன்:

காட்சிப் பிழை என்ற புதிய திரைப்படம் தொடர்பான திரு. சுப குணராஜன பதிப்பிக்கும் இந்த நூலை அறிமுகப்படுத்தும் விழாவிற்கு கல்லூரியின் குளு குளு அறையில் கூட்டம்.  பேரா. பிரபாகர் வரவேற்புரைக்குப் பின் பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் முதல் பதிவின் கட்டுரைகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையை அளித்தார்.குணம், குற்றம் எல்லாம் பகிரப்பட்டன. முனைவர் ராஜன் குறை திரைப்படங்களைப் பற்றிய தன் ஆய்வுபற்றி கூறினார். ஜெயமோகன் தன் திரைப்பட அனுபவங்களை வைத்தே தன் கருத்துக்களைக் கூறினார்; அதனால்தானோ என்னவோ அவை ஒரு பக்க வாதமாக எனக்குத் தோன்றியது.

இரவு பனிரெண்டு மணிக்குக் கூட சர்வாலங்காரத்தோடும், பள பளக்கும் பட்டு சேலையுடனும் ஒரு கூடைப்பூவைத் தலையில் வைத்துக்கொண்டிருக்கும் பண்க்கார நாயகிகளைக் காண்பிப்பதும் படம் பார்க்க வருபவனின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யவே என்று சொன்னது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது. 30 பைசா செலவில் எண்பதுகளில் அவன் புக முடியாத பணக்கார வீடுகளை சினிமா அவனுக்குக் காட்சிப்படுத்தியது என்றார். அது ஏன் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு மட்டும் அப்படி ஒரு அபிலாஷை! பார்வையாளனின் எதிர்பார்ப்பில்தான் படம் எடுக்கப்படுகிறது என்றார். அதைவிடவும் மிக முக்கியமான செய்தி: இந்தியாவிலேயே 200 கோடி முதலீட்டில் எடுக்கப்படும் ஒரு படத்திலும்,
உலகத்தரத்தில் எடுக்கப்படும் மாற்றுப்படமொன்றிலும் தான் இப்போது ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். அது எப்படி .. நம்ம சூப்பர் இஸ்டார் இல்லாமல் 200 கோடியில் ஒரு படம் என்ற வியப்பு எனக்கு!

பேரா.முனைவர் சுந்தர் காளி ஏற்புரை அளித்தார்.



ஞாநி:

வெள்ளி மாலை ஒரு மரத்தடியில் வழக்கமாகத் தாங்கள் கூடுவது போல் சங்கம் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. மரத்தடியில் வட்டமாக பாய் விரித்து மாலை நேர வெயிலின் தாக்கம் இன்னும் இருந்த அந்த மாலை வேளைக் கூட்டத்தை பேரா. ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிமுகத்தின் பின் ஞாநியின் கூட்டம் ஆரம்பித்தது.கொடுக்கப்பட்ட தலைப்பு:   கருத்துச் சுதந்திரமும், ஜனநாயகமும்.

வட்டம் /சைபர் என்ற உருவ அமைப்பிலிருந்து ஆரம்பித்து, மீடியாக்களின் தோற்றம், வரலாறு, கட்டமைப்பு, அக்கட்டமைப்பால் வரும் இறுக்கம் பற்றிக் கூறினார். சொல்லிவரும் கருத்துக்களுக்கு வரும் எதிர்வினைகளால் மக்கள் ஒரு வித பயத்தில் இருப்பதாகவும், ஆனாலும் நேர்முகமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மக்கள் தங்கள் சமூக ஆர்வத்தை வெளிக்கொணர்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணமாக தெகல்கா பத்திரிகை ஆரம்பமான முறை பற்றிக் கூறினார். ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக வைத்து இன்று 5 கோடி சேர்த்து அப்பத்திரிகை இப்போது ஒரு strong base  வைத்திருப்பதாகக் கூறினார். இது  நல்லது நடந்து விடாதா என்ற மக்களின் ஏக்கத்தின் வெளிப்பாடே என்று கூறினார்.

திறந்த வெளிக் கூட்டம் என்பதால் மாணவர்களின் பங்களிப்பு நன்கிருந்தது. சமூக வன்முறைகளுக்கு எதிர் வன்முறையல்ல கல்வியே என்ற ஞாநியின் கூற்று நன்கு சென்றடைந்தது என்றே நினைக்கிறேன்.

எதுவும் பேசலாம் என்ற கூறியும் ஞாநி கொஞ்சம் 'அடக்கியே' பேசினார் என்றே நான் நினைக்கிறேன். அவரது வெளிப்படையான எழுத்து போலன்றி சிறிது 'காரம்'  குறைத்தே பேசினார். கல்லூரி என்பதால் வந்த தயக்கமோ என்னவோ ....


=============

கூட்டம் முடிந்தது பல மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சிக்குச் சென்றோம். அங்கே கா.பா.வையும் ஸ்ரீயையும் பார்த்தேன். ஞாநியின் கடை முன் நின்று சிறிது பேசிக்கொண்டிருந்தோம். வரும் வியாழனன்று மாலை 6 மணியளவில் மதுரைப் பதிவர்களைச் சந்திக்கலாமே என்று ஞாநி கூறினார். சந்திக்க வேண்டும்.







Friday, September 03, 2010

430. உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து



*

தினமலரில் .........


ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து