Monday, March 31, 2014

738. இந்து மதம் எங்கே போகிறது? --- 8






***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

******



இவ்வளவு விஷயங்களை பார்த்த நாம் எங்கேயாவது ஒரு இடத்திலாவது ‘ஹிந்து’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோமா?

இந்தக் கேள்வி வரும்போது தான் இந்தப் பதம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டியதுள்ளது.

மனித இனங்களை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்:

Semetic ... யூதர்கள், அரேபியர்கள்

Hemetic .... இவர்கள் இன்று இல்லை என்கிறார்கள்

Negroes ... ஆப்ரிக்கா மக்கள்

Mangolis ... சீனா தேசத்தவர்

Aryans ... ஐரோப்பியர்கள், இந்திய பிராமணர்கள்(317)

உலகின் மிக இருட்டான பழைய காலத்தை புரட்டிப் பார்த்தால் அங்கே இரண்டு கலாச்சார வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது. ஒன்று பபிலோனியா; மற்றொன்று எகிப்து. (318)

பபிலோனியர்களிடம் Totemism worship விலங்கு உருக்களை வழிபடும் வழக்கம் இருந்தது. (319)

கடவுளிடம் அறிவைக் கேட்டார்கள் பபிலோனியர்கள்.(321) மத குருவிற்கு ‘சேங்கு’ என்று பெயர். தலைவர் என்று அர்த்தம். இவரை விட உயர்ந்தவர் ‘சேங்கு ரேபு’.இவருக்கு மேல் ’சேக்கு டேனு’. - Mighty priest. கடைசியாக supreme priest – ‘சேங்கு மேஹூ’.

மன்னர்கள், பாமரர்கள், அடிமைகள் அனைவரும் ஒன்றாக கூட்டு வழிபாடு நடத்துவர். ஒரே ஒரு தகுதி – வரி கட்ட வேண்டும், இல்லாவிடில் கோயில் காரியங்களை சிலவற்றைச் செய்ய வேண்டும். உடல் உழைப்பை அர்ப்பணிக்க வேண்டும். பெண்களும் கலந்து கொள்வார்கள். மதகுருமார்கள் பக்தி, ஆன்மீகம், வழிபாடு இவற்றில் மட்டுமல்ல; பல்வேறு நிர்வாகப் பணிகளையும் செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த நாடு மீது பக்கத்து நாட்டு மன்னனுக்கு ஒரு கண்.

2600 ஆண்டுகளுக்கு முன் ...பபிலோனிய நாட்டுக்குப் பக்கத்து நாடான பாரசீக நாட்டின் மன்னன் Cambysis I என்பவனின் மகன் . இந்த அரசு மிடீய நாட்டு அரசனான Astyages என்பவரின் கீழ் அடிமைகளாக - vassals - இருந்தனர். (323) அப்போது பாரசீக நாட்டிற்கு அன்சன் என்று பெயர். Cambysis-ன் மகன் சைரஸ் தன் தந்தையை விட பழங்குடி மக்களிடம் அதிகமாகத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவர்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். மிடீயன் அரசனும் இவனைக் கட்டுப்படுத்த தன் படையை ஏவினான். ஆனால் மிடீயனின் படையை சைரஸ் வென்று விரட்டினான். தனது vassal என்ற நிலையை மாற்றி சுதந்திர மன்னனாகினான்.

இதில் ஒரு ரகசியம் என்கிறார் வரலாற்றாசிரியர் ஹெரடாடஸ். மன்னன் Cambysis மிடீய நாட்டு மன்னன் மகளைத் திருமணம் செய்து தன் அந்தப்புரத்தில் வைத்திருந்தான். ஆனால் மிடீய நாட்டு மன்ன்னின் இன்னொரு மகளை மகனான சைரஸ் திருமணம் செய்து கொண்டான். இதனால் சைரஸ் தன் நாட்டோடு சேர்த்து மிடீய நாட்டையும் இணைத்து ஆண்டு கொண்டான்,

பபிலோனிய நாட்டின் மீது கண் வைத்த சைரஸ் அதை வெற்றி கொள்ள அதிக ராணுவம் வேண்டியதிருந்தது. (325) கொஞ்ச தூரம் தள்ளிச் செல். அங்கே சிந்து தேசம் உள்ளது. அவனிடம் உதவி கேள் என்று சைரஸிற்கு அறிவுரை வந்தது.

வரலாற்றாசிரியர் Arrian தன் குறிப்பில் சைரஸ் சிந்து பகுதிக்கு வந்திருக்கிறான். ஆனால் அதை அவன் படையெடுத்து வென்றதாக கல்வெட்டுகளோ, ஆதாரங்களோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

சிந்து தேசம் என்றால் இன்றைய சிந்து நதியில் கரைப்பகுதியை உள்ளடக்கிய பிரம்மாண்ட தேசம். இன்றைய திபெத்தில் உள்ள மானசரோவரில் பிறந்து, ஓடி ஓடி பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் போய் கலக்கிறது.

சிந்து நதி அரசன் கொடுத்த யானைப் படை, குதிரைப்படை மூலம் சைரஸ் பாபிலோனியாவை வென்றான்.(326) இந்த சைரஸ், சிந்து தேச ராஜா நட்பின் மூலம் சிற்சில வார்த்தைகளாவது பரிமாறப்பட்டிருக்காதா?

உலக பிலாலஜி அதாவது மொழியியல் வல்லுனர்களின் முடிவுப்படி சமஸ்கிருதப் பாஷைக்கும், பாரசீக பாஷைக்கும் இடையிலான சில ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன. அதாவது இங்கே ‘ஸ’ என்பதை அவர்கள் ‘ஹ’ என உச்சரித்தார்கள். அதாவது சரஸ்வதியை ஹரக்வதி என்றார்கள். நாம் ‘அசுர்ஹா’ என்று சொவதைப் போல் அவர்கள் ‘அஹூரமஸ்தா’ என்ற கடவுளை வணங்கினார்கள்.

இந்த வகையில் தான் அவர்கள் சிந்து தேசம் என்பதை ஹிந்து தேசம் என தப்பாக உச்சரித்தார்கள்.(327)

வேதங்களில் ஆயிரம் இடங்களில் சிந்து என்ற வார்த்தை தான் உள்ளதே தவிர ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை; கிடையவே கிடையாது.

ஆபஸ்தம்ப சூத்திரம்: 
நதேவாஹா நகந்தர்வாஹா 
நபிததீ ஆஜக்‌ஷதே 
அயந்தர்மோ ஆயந்தமேதீ 
யந்தா ஆர்ய க்ருமாணம் சம்சந்தி நதமஹா’

மக்கள் செய்ய வேண்டிய இந்த மந்த்ர கர்மாக்களுக்கு தேஸாச்சாரம் என்று பெயர். இந்த ஆச்சாரத்தை ஆர்ய மதம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர். (328)

அதாவது சிந்து நதிக்கரை மக்களின் பழக்கத்துக்கு சிந்து மதம் என்று கூட அவர் பெயர் வைக்கவில்லை. ஆர்ய மதம் என்றுதான் பெயர் வைத்தார்.

ஆனால் சிந்து நதியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வாழும் நம்மூர் பையனின் பள்ளி சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ... ஏன்?

சிந்து தேசம் என்று பாரசீகக்காரன் சொன்னானே தவிர, அந்த தேசத்தை வேதக்காரன் ’பாரதம்’ என்று தான் அழைத்தான். ரிக் வேதத்தில் விஸ்வாமித்ரர் என்ற பிரபலமான முனிவர் பெயர் அடங்கிய மந்தரம் எழுந்து வருகிறது.

’விஸ்வாமித்ரஸ்ய ரக்‌ஷதீ 
ப்ரம்மே இதம் 
பாரதஞ்ஜனம்’

விஸ்வாமித்ரர் சொல்கிறார்: என்னுடைய ஞான தேஜஸினால் நான் கற்ற சாஸ்திரங்களின் பலனால், நான் உபதேஸிக்கும் மந்த்ரங்கள் இந்த பாரத தேசத்தின் ஜனங்களையெல்லாம் வாழவைக்கும்; பாதுகாக்கும். (329)

இன்னொரு உதாரணம்.
ப்ராமணர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. சங்கல்பம் – அதாவது ஒவ்வொரு கர்மாக்கள் செய்யும் போதும் இதை இந்த கர்மாவை சிறப்பாக சிரத்தையுடன் பூர்த்தி செய்வேன் என்ற சபதம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரம் தானிது.

’விஷ்ணோ ... ஆக்ஞாய
........ 
........
பாரத வர்ஷே பரத கண்டே ... சகாப்ஹே ..’

 பாரத வர்ஷே என்றால் ‘பாரத தேசத்தில் வாழும்’ என்று அர்த்தம். பாரத கண்டே என்றால் ‘பரதன் ஆண்ட தேசம்’ என்று அர்த்தம்.

விஷ்ணு புராணம், பாகவதம் போன்ற பழம்பெரும் பக்தி இலக்கியங்களில் ‘பாரத தேசம்’ என்று தான் சொல்லியிருக்கிறார்கள். (331)

பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதல் ‘Zindoo’ என்று குறிப்பிட்டான். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமெண்டை பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். (332)

காலப் போக்கில் ‘Zindoo’ என்பதை Hindu என்று உச்சரித்தான். நமது மதத்தின் பெயரான ’ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். (333)

வேத மதம், ஆரிய மதம். பிராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வைதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. சமணம் தோன்றியது. வைணவத்தில் கூட தென்கலை, வடகலை என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.(334)

நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம். காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி .... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் எல்லாவற்றிற்கும் மொத்தமாக சேர்த்து, இந்த தேசத்தில் வாழ்பவர்களையெல்லாம் மொத்தமாக ‘ஹிந்து’ என்று அழைத்தான்.

**********







*

Thursday, March 27, 2014

737. கிறித்துவர்களின் கண்களுக்கு .... 4 (ஏழாம் நாள் அட்வென்ட்டிஸ்ட் சபை)








*


ஏழாம் நாள் அட்வென்ட்டிஸ்ட் சபை பிறந்த கதை



advent = Arrival that has been awaited 

கிறித்துவின் இரண்டாம் வருகை கிறித்துவர்களால் எதிரிபார்க்கப்படும் ஒரு நம்பிக்கை சார்ந்த நிகழ்வு. இப்பிரிவினர் ‘ஏசு இதோ வருகிறார்’ என்ற நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் இருப்பவர்கள்.


அமெரிக்காவில் 1798-1820 ஆண்டுகளில் பல சமய மாற்றங்கள் நடந்தன. பல சிறுபான்மை சமய குழுக்கள் பிறந்தன. இவைகளில் பல குழுக்களின் கருத்துக்கள் பின்னாளில் ஏழாம் நாள் அட்வென்ட்டினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.


விவிலியத்தில் ’தீர்க்கதரிசனம்’ என்ற பகுதியில் உள்ள தானியேல் என்ற பகுதியில் சொல்லப்பட்ட சில தீர்க்க தரிசனங்கள் இம்மதக் குழுவின் பிறப்பிற்குக் காரணமாக உள்ளது. அப்புத்தகத்தில் 8:14ல் உள்ள கூற்றுப்படி சிலர் உலகம் இன்னும் 2300 நாட்களுக்குப் பின் முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். வில்லியம் மில்லர் என்பவர் உலகத்தின் இந்த முடிவு மார்ச் 1843 – மார்ச் 1844 என்ற காலகட்டத்தில் நடக்கும் என்று கணக்கிட்டார். இவரைப் பின்பற்றியோர் ’மில்லரைற்’ என்றழைக்கப்பட்டனர். இவரது கூற்றை நம்பி பலரும் மெத்தாடிஸ்ட் சபை, பிரிஸ்பைடீரியன் சபை, லூத்ரன் சபை, வெஸ்லியன் சபை, பாப்டிஸ்ட் சபை (Lutheran, Wesleyan/Arminian, and Anabaptist, Baptist, Methodist, Presbyterian) போன்ற கிறித்துவப் பிரிவினைச் சபைகளிலிருந்து இவரின் வழி வந்தார்கள்.  

மில்லரின் குழுவில் சிலர் 1844-ல் அக்டோபர் 22ம் தேதி உலகத்தின் இறுதி நாளென்று நம்பியிருந்தனர்.  அன்றிரவு முழுவதும் விழித்திருந்து காத்திருந்தனர். உலகம் முடிவுக்கு வரவில்லை. அவர்கள் ஏமாந்த அந்த இரவு ’Great Disappointmentஎன்றழைக்கப்படுகிறது. 

ஏமாந்த இந்த இரவிற்குப் பிறகு மில்லரின் குழுவினர் கிறித்து மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையை இழந்து நின்றனர். சிலர் தவறாக இந்த நாள் கணக்கிடப்பட்டது என்று நினைத்தனர். வேறு சிலர் நாள் சரியாகவே கணக்கிடப்பட்டது; ஆனால் எதிர்பார்த்த நிகழ்வு மட்டும் தவறு என்று நினைத்தனர்.  இந்த இரண்டாம் குழுவினர் இணைந்து ஏழாம் நாள் அட்வென்ட்டிஸ்ட் என்ற குழுவினர்களானார்கள். இவர்களில் சிலர் - Hiram Edson, O.R.L. Crosier and Franklin B. Hahn – என்பவர்கள் அவர்களது குழுவினர் ஏற்கெனவே எதிர்பார்த்த 2300ம் நாள் என்பது மோட்சத்தில் இருக்கும் ஓரிடத்தை தூய்மைப் படுத்தும் நாள் என்றனர்.


Rachel Oakes Preston என்பவர் Sabbath – ஓய்வு நாள் – என்பதை மில்லரைற் குழுவினருக்கு அறிமுகப்படுத்தினார். 1860ம் ஆண்டு இறுதியாக இக்குழுவினர் தங்களை ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர். இவர்களுள் James White, and Joseph Bates என்ற இருவரும் முக்கியமானவர்கள். James White-ன் மனைவி Ellen G. White (1827–1915) எப்பதவியிலும் இல்லாவிட்டாலும் தன் முழு ஆளுமையை இக்குழுவின் மேல் கொண்டிருந்தார். 

1870 ஆண்டிலிருந்து வெகு வேகமாக இக்குழு வளர ஆரம்பித்தது. 1880ல் 16,000 என்றிருந்த எண்ணிக்கை வேகமாக வளர்ந்து 1901ல் 75,000 ஆயிற்று’ இரு கல்லூரிகள், ஒரு மருத்துவக் கல்லூரி, பல பள்ளிக்கூடங்கள், 27 மருத்துவ சாலைகள் என்றும் வளர்ந்தன. 1945ல் அமெரிக்காவிலும், கனடாவிலும் மட்டும் 2,26,000; வெளி நாடுகளில் 3,80,000 என்றானது. 1960ல் உலகம் முழுவதிலும் 12,45,125, 2000ல் 1,16,87,229 என்று வளர்ந்துள்ளது> 2008ல் 1,59,921,408 என்ற எண்ணிக்கையிலும், $ 457,89,067,340 என்பது ஓராண்டின் பட்ஜெட்; அவர்களது கல்விச்சாலைகளில் பயிலுவோரின் எண்ணிக்கை: 15,38,607.


Seventh-Day Adventist சபை பைபிளை முழுமையாக சொல்லுக்கு சொல் நம்புகிறது. தங்கள் ரட்சிப்பு அவர்களதுஏசுவின் மேலுள்ள நம்பிக்கையை மட்டுமே பொறுத்திருக்கிறது. இவர்களுடைய அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளின் எண்ணிக்கை 28. விவிலிய வார்த்தைகளுக்குப் புதுப் பொருள் கொடுப்பதோ, புதிய அர்த்தங்கள் கண்டுபிடிப்பதோ முற்றிலும் இவர்களுக்கு எதிரானது.

எலன் ஒய்ட்டின் பங்களிப்பு:
இவருக்கு தீர்க்க தரிசனம் கொடுக்கக்கூடிய திறமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது இக்குழுவினரின் நம்பிக்கை. தனது 12வது வயதில் இவர் தன் குடும்பத்தோடு மில்லிரைற் குழுவினில் இணைந்தார். தன் பாவங்களுக்காக மிகவும் மனம் நொந்தார். (அந்தக் ‘குழந்தை’ தன் பன்னிரண்டாவது வயதில் இப்படி நொந்து கொள்ளும் அளவிற்கு என்ன  பாவம் புரிந்து விட்டாரோ?) இரவும் பகலும் அழுது பல மாதங்கள் பிரார்த்தித்தாராம். 1842ல் ஞானஸ்நானம் பெற்றார். 1845ல் தன் எதிர்காலக் கணவரைச் சந்தித்தார். இவர் எலன் கடவுளைக் காணுவதாகச் சொன்னதை முழுவதுமாக நம்பினார். 1846ல் இவர்கள் மணந்து கொண்டார்கள்.   

எலன் ஒயிட் தனது வாழ்நாளில் மிக அதிகமான நூல்கள் எழுதினார். 5000 கட்டுரைகள், 40 நூல்கள், 2000 முறை தான் ‘கடவுளைப் பார்த்த’ அனுபவங்கள் பற்றி எழுதியுள்ளார். Steps to Christ  என்ற அவரது நூல் இதுவரை 140 மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

எலன் 1844 முதல் 1863 வரை 100 முதல் 200 வரை பல இடங்களில், பொது இடங்களில், கூட்டம் நடக்கும் இடங்களில் கடவுளைத் தரிசித்தாகக் கூறியுள்ளார். அவரது வீட்டில் நடக்கும் தரிசனங்கள் எல்லாம் இரவில் நடந்ததாகக் கூறியுள்ளார். ( எங்கெங்கு வசதியோ அங்கங்கு தரிசனங்களை அல்லது கடவுளை வரச் சொல்லி விடுவார் போலும்!)


அட்வென்டிஸ்ட்களின் 28முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று எலன் ஒய்ட் கடவுளின் உண்மையான தூதர் என்பது. இந்த அளவு அவர் மேலும், இவரது தரிசனங்கள் மீதும்  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையும் விட  அட்வென்டிஸ்டாக ஆவதற்கு முன், ஞானஸ்நானம் பெறும் முன் அவர்கள் எல்லன் ஒய்ட் கடவுளின் திருத்தூதர் என்பதை நம்பி, உறுதி மொழி எடுக்க வேண்டும். (இஸ்லாமியத்தில் சேர நபியைக் கடைசி நபி என்ற நம்பிக்கை வேண்டும் என்பது போலுள்ளது இது.)
வெள்ளி மாலை ஆரம்பித்து, அடுத்த நாள் சனிக்கிழமை மாலைவரை கடவுளின் நாளாக - Lord's Day - ஓய்வு நாளாகக் கருதப்படுகிறது.இது மிக முக்கிய நாளாகவும், இதனைக் கடைப்பிடிப்பது பெரும் கட்டாயமாகவும் கருதப்படுகிறது. ஒய்ட் தனது தரிசனம் ஒன்றில் மோட்சத்துக்கு அழைத்துப் போகப்படுகிறார். ஏசுவின் கையால் எழுதப்பட்டிருக்கும் பத்து கட்டளைகளை ஏசு இவருக்குக் காண்பிக்கிறார்.பத்து கட்டளைகளில் நான்கு ஒரு மேசையிலும், அடுத்த 6 வேறொரு மேசையிலும் உள்ளன. நான்கு கட்டளைகளில் மிகப் பிரகாசமாக ஓய்வு நாள் பற்றிய குறிப்பு உள்ளது.

ஒய்ட் தன் குழுவினருக்குக் கற்றுத் தந்ததும், அட்வென்டிஸ்ட்களின் நம்பிக்கையும் தமதிருத்துவத்தின் மேல் இல்லை; ஒய்ட்  Semi-Arianism என்ற தத்துவத்தின் மீதே நம்பிக்கை வைத்திருந்தார். Gnostic Gospel, Gospel of Judas  என்ற பகுதிகளில் Arianism பற்றிய விளக்கங்கள் காணலாம்.   

தரிசனங்களின் வரலாறு:
தனது ஒன்பது வயதில் உடன் பயிலுபவர் எறிந்த ஒரு கல் எலனின் மூக்கை உடைத்து, அதன் விளைவாக மூன்று வாரங்களுக்கு கோமா நிலைக்குப் போய் விட்டார். நரம்பியல் நிபுணர்கள் இதனால் எலனிற்கு வலிப்பு, பிரம்மை போன்றவை நிகழக்கூடும் என்றனர். இவைகளை அவர் கடவுளின் தரிசனம் என்று நம்பிக்கொண்டார்.  எலனின் மறைவிற்குப் பின் அவரை 1981-ல் ஆராய்ந்த மருத்துவர் Delbert H. Hodder  இவருக்கு symptoms of temporal lobe epilepsy இருந்தது என்றும், Molleurus Couperus என்ற தோலியல் நிபுணர்
1984-ல் இதனை உறுதிப்படுத்தினார்.


வலிப்புகளுக்குப் பிறகு ஏற்படும் பல வித நோய்க்கூறுபாடுகள் இவரிடம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. எலினைப் பின்பற்றுவோர்கள், ‘அவர் தனக்குக் கிடைத்த தரிசனத்திற்குப் பின் அது இரவோ பகலோ எப்படியிருப்பினும் எலினுக்கு அது ஒரு இருண்ட இடமாகவே முதலில் தோன்றும். அதன் பின் நீண்டு இழுத்து ஒரு பெருமூச்சு விடுவார். உதடுகள் இ..ரு..ட்...டு என்று முணுமுணுக்கும். அதன் பின் அவரது உடல் வலுவிழந்து போயிருக்கும்’ என்று சொல்வார்கள்.

ஒய்ட் கண்ட பல தரிசனங்களின் பட்டியல் கீழே. நீங்களே இவைகளில் உண்மை இருக்கிறதா என்று முடிவு செய்து கொள்ளுங்கள் ....

பலமுறை கிறித்து வந்து விடுவார் என்று இவர் சொன்ன தீர்க்க தரிசனங்கள் எதுவும் நடைபெறவேயில்லை.


அடிமைகளைப் பயன்படுத்துவது மீண்டும் வரும்.

கத்தோலிக்க போப் உலகத்தைத் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து விடுவார்.

இரண்டு உலக யுத்தங்களைக் காட்சிகளில் கண்டார்.

1864ம் ஆண்டு அவர் கண்ட தரிசனத்தில்  மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பிறந்த ஒரு தனி மனிதக் குழு ஒன்றைக் கண்டதாகக் கூறியுள்ளார்.  எப்படி இது போல் ஒரு மனித-விலங்குக் குழு உண்டாயிருக்க முடியும்? ஒய்ட் சொன்ன ‘தீர்க்க தரிசனங்களில்’ மிகவும் வேடிக்கையான, தவறான தீர்க்க தரிசனம் இதுவே!

சுய மைதுனத்தால் கண்கள் குருடாகி, மனநோய்க்குள்ளாகி, பின் மரணம் நடக்கும் என்பதுவும் ஒய்ட்டின் ஒரு கண்டுபிடிப்பு!

டார்வினுக்கு முந்திய Lamark  என்ற பரிணாமக் கொள்கையாளர் சொன்ன ஒரு தோல்வியுற்ற கொள்கையான use and disuse theoryயை இவரும் முன் மொழிந்தார்.

1846-ம் ஆண்டு எலனுக்கு ஒரு ‘காட்சி’ கிடைத்தது. அப்போது Mrs. Truesdail என்பவர் உடனிருந்திருக்கிறார். அவர் இக்காட்சியைனை விளக்குகிறார். “ஒயிட் உடல் நலமில்லாமல் இருந்த ஒரு நாள் .. கடவுளின் பிரசன்னம் அவரிடம் இறங்கியது. அப்போது ஒயிட்டுக்கு இந்த உலகின் தொடர்பு ஏதுமில்லை. ஒயிட் பிரபஞ்சத்தை தன் காட்சியில் காணுவது இதுவே முதன் முறை. ஜூபிடரின் நிலவுகளை எண்ணுகிறார்; அதன் பின் சனிக் கிரகத்தின் நிலவுகளை எண்ணுகிறார்.  இவைகளைப் பற்றிய அழகிய வர்ணனைகளைக் கொடுத்தார்.  அதன்பின் அங்கு வாழ்பவர்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்கள் மனிதர்கள் போலின்றி, மிகவும் உயரமாகவும் கம்பீரத்துடன் இருந்ததாகவும், பாவங்கள் அவர்களைத் தொட்டதில்லையென்றும்’ கூறினார்.

இவைகளெல்லாம் உண்மைகளாக இருக்க முடியுமா? 

1846ம் ஆண்டில்  இதற்கான விளக்கங்கள் ஏதுமில்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று உண்மை தெரியும். இந்த இரு கிரகங்களும் மனித வாழ்க்கைக்குக் கொஞ்சமும் ஒத்து வராதவை.
1.    இந்த இரு கிரகங்களும் நம் உலகத்தைப் போல் கடினப் பரப்பு இல்லாதவை. அங்கு ஹைட்ரஜன் திரவ வடிவில் பல மைல் ஆழத்திற்கு இருக்கிறது.
2.    இங்கு அழுத்தம் பல மடங்கு உலகத்தை விட அதிகம்.
3.    பல ஆய்வுகள் நடத்தியும் இங்கு எந்த உயிரினம் இருப்பதற்கான அறிகுறிகளே கிடையாது.


இன்னொரு காட்சி விளக்கம் ஒன்றையும் காணலாம்:

ஒயிட்டிற்கு ஓரியன் என்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றிய ஒரு காட்சி கிடைத்துள்ளது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் 7 நட்சத்திரங்கள் உண்டு. அதில் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளன. 1845-ல் ஒரு அட்வென் டிஸ்டான Joseph Bates  என்பவர் இந்த அமைப்பினை விளக்கியுள்ளார். அவர் இந்த நெருங்கி நிற்கும் இந்த மூன்று நட்சத்திரங்களின் நடுவே விவிலியத்தில் சொல்லியுள்ள ஒரு வாசல் – STARGATE - இருக்கிறது என்றார்.  

இவரோடு தொடர்பு ஏற்பட்ட பின் ஒயிட் சூரியக் குடும்பத்தைப் பற்றிய வேடிக்கையான தன் காட்சிகளைப் பற்றிக் கூறியுள்ளார்.

‘இந்த நட்சத்திரக் கூட்டத்தில்  உள்ள STARGATE மோட்சத்தோடு தொடர்புடைய கதவு என்றார். பின் 1848-ம் ஆண்டு மேலும் ஒன்றைச் சொல்லி STARGATE பற்றிய மேலதிக விவரங்கள் கொடுத்துள்ளார். “இருளடர்ந்த கருமையான மேகங்கள் எழுந்து ஒன்றோடு ஒன்று மோதின;  வளி மண்டலம் சுருண்டு வழி விட்டது. அப்போது ஓரியனின் ஊடே உள்ள இடைவெளி நன்கு தெரிந்தது. அப்போது கடவுளின் ஒலி கேட்டது. மோட்சம் இந்த இடைவெளி வழியே இறங்கி வந்தது.

இக்காட்சியின் பின்னணி:
பழைய எகிப்திய புறச் சமயங்களில் ஓரியானைப் பற்றிய கதைகள் பலவுண்டு. ஓரியானில் ஒரு ‘கதவு’ ஒன்று உண்டு; அதன் வழியே பெரும் ஒளி வரும் என்பதெல்லாம் அதிலுள்ளவை.

ஓரியானில் ஒரு கதவு உள்ளது என்றெல்லாம் விவிலியத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. பழைய மதங்களில் ஓரியானைப் பற்றிய பல கதைகள் உண்டு. ஆனால் (pagan) பகனிச – புறச்சமயங்களை – மதத்தை எதிர்க்கும் ஒயிட் ஏன் இந்தப் பழைய மதக் கதைகளை இப்போது வெளிக் கொணர்கிறார்? 

ஏனிந்த காட்சி அவருக்கு வந்தது? 

கடவுள் பழைய எகிப்தியருக்குக் காண்பித்த உண்மையை மறுபடி இவருக்கும் காண்பித்தாரா? 

உண்மையிலேயே ஓரியனில் STARGATE இருக்கிறதா? 

அல்லது பேட்ஸ் என்ற பெரிய அட்வென்டிஸ்ட் சொன்னதை உண்மையாக்க இப்படி சொன்னாரா?  

அல்லது எல்லாமே  மாயப் பிரம்மைகள் தானா? 

இது போல் பல தரிசனங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கங்கள். இப்படிப்பட்ட ‘தரிசனங்கள்’ மூலமாகவே இத்திருச்சபைக் குழு செழித்தோங்கி வளர்ந்து வருகிறது. 

இவைகளில் உண்மை எவ்வளவு? 
கண்மூடித்தனமான நம்பிக்கை எவ்வளவு?

எல்லாவற்றையும்  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!



http://wiki.answers.com/Q/Who_started_the_Seventh-day_Adventist_Church
http://www.ellenwhiteexposed.com/orion.htm
http://www.bible.ca/7-White-halo.htm
http://www.whiteestate.org/issues/visions.html#2





 *









Tuesday, March 25, 2014

736. தருமி பக்கம் (16) -- அந்தக் காலத்தில ...




*

அதீதம் இணைய இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு


*


சின்ன வயதில் அவ்வப்போது நடந்த ஆச்சரிய நிகழ்ச்சி இப்போதெல்லாம் நடப்பதேயில்லை; ஏன் என்றும் புரியவில்லை. ஒரு மழை – கொஞ்சம் பெரிய மழையாக- பெய்து விட்டால் போதும். ஊரில் எங்கள் வீட்டு முன்னே உள்ள அந்த குறுகிய தெருவில் தண்ணீர் வெள்ளமாக ஓடும். ஓடும் அந்த நீரில் இறங்க கஷ்டப்பட்டு பெரியவர்களிடம் அனுமதி வாங்கணும். மழை பெய்யும் போது இரண்டாவது மொட்டை மெத்தையிலிருந்தும் நீர் அருவியாகக் கொட்டும். ஓடும் தண்ணீர் ... தலையில் சட சடவென இறங்கும் ‘நீர் வீழ்ச்சி’ .. ஆஹா இரண்டும் சேர்ந்து ஒவ்வொரு மழையையும் ஒரு பெரிய அனுபவமாக ஆக்கி விடும்.


எங்கிருந்து அவ்வளவு வெள்ளம் வருமோ! எங்கள் தெருவில் அது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வெள்ளமாகப் போகும். எல்லாம் நூறடி நீளத்திற்குப் போகும். அங்கே திசை மாறி கிழக்கு நோக்கி வெள்ளம் திரும்பும். வடக்கில் நேரே போனால் ஆலடிப்பட்டி கோவில் இருக்கும். அங்கிருந்தும் நீர் விழுந்து கிழக்கே திரும்பும் வழியில் பெரும் வெள்ளமாக போகும். அங்கிருந்து ஊரை விட்டு விலகி தென்வடலாகப் போகும் ஒரு பெரிய கால்வாயில் போய் சேரும். மழை முடிந்து ‘வெள்ளம்’ வடிந்த பின் நீரோடு சேர்ந்து அந்தக் கால்வாய் போய் வருவது எங்களுக்கு பெருங் கொண்டாட்டம்.

அந்த மழையெல்லாம் என்ன ஆயிற்று? எங்கே போனது அந்த வெள்ளம்? அந்தக் கால்வாய் எல்லாம் மூடிப் போனது. எப்படி எந்தச் சின்ன மழைக்கும் அவ்வளவு நீர் திரண்டது. ஊருக்குப் போய், அங்கே எப்போதாவது மழை பெய்தால் அந்த பழைய வெள்ள நினைவுகளும், மழைக் கால அனுபவங்களும் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் இதே கேள்விகள் மனதிற்குள் எழும். ஆனால் இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு ஓடு கால்வாயில் போய் தான் இந்த வெள்ளம் எல்லாம் போய்ச்சேரும் என்று சொன்னேனே .. அந்த ஓடு கால்வாய் எங்கள் குடியிருப்பையும் பக்கத்தில் ஊருக்கு சற்றே வெளியே இருந்த குடியிருப்பையும் பிரித்து வைக்கும். அங்கே வீடுகள் அனேகமாக கூரை வீடுகளாகத் தானிருக்கும். அப்போதெல்லாம் சாதிப் பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியாது. இருந்தும் கால்வாய் இரு பகுதிகளையும் பிரித்து நிற்பது ஏதோ ஒரு மறைந்த தகவல் ஒன்றைச் சொல்வது போல் இருக்கும். புரிய நாளாயிற்று.

ஏழெட்டு வயதில் ஊருக்கு வரும்போதெல்லாம் எங்கள் பள்ளிக்கும் சென்று வருவதுண்டு. நான் எந்த வகுப்பு படிக்கிறேனோ அந்த வகுப்பிற்கு நான் போவேன். நம்ம ‘சிட்டி லைஃப்’பை அங்கே கொஞ்சம் ‘படம்’ காண்பிப்போமல்லவா! அப்படி நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்குப் போகும் போது ராஜம்மாள் என்றொரு பெண் தெரியும். அவள் ஒரு தனிப் பிறவி மாதிரி இருப்பாள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். தனியாகவே இருப்பாள். என்னிடம் கொஞ்சம் பேசுவாள். எனக்கு அவளைப் பிடிக்கும்.

இவளது வீடு அந்தக் கால்வாய் இரு குடியிருப்பையும் பிரிக்குமே அந்த இடத்தில் இருந்தது. எங்கள் குடியிருப்பின் அடுத்த பகுதிக்குப் பக்கத்தில் அவர்கள் வீடு இருந்தது. நல்ல பெரிய காரைக் கட்டிடம். மெத்தையெல்லாம் வைத்துக் கட்டியிருந்தார்கள். ஆனால் அந்த வீடு மட்டும் தனியாக இருக்கும். கால்வாய்க்கு ஒரு புறம் அந்த அடுத்த குடியிருப்பு. அதற்கு எதிர்ப்புறம் இந்த வீடு. அதாவது எங்கள் குடியிருப்பிலிருந்து விலகியும், அடுத்த குடியிருப்பிற்குப் பக்கத்திலும் இருந்தது. ஆனால் அந்தக் குடியிருப்போடு ஒட்டாமல் கால்வாயின் எதிர்ப்பக்கத்தில் இருந்தது.

இந்த விசேஷங்கள் எல்லாம் எனக்கு பள்ளியிறுதி வகுப்புகளுக்கு வந்த பின்பு தான் ஏனென்று அரை குறையாகப் புரிந்தது. இந்த வயதில் எனக்கு மூன்று நான்கு வயது மூத்த, சித்தப்பா முறையில் இருந்த தேவதாஸ் என் நண்பரானார். ஊரில் இருக்கும் போதெல்லாம் பொதுவாக அவரோடு சுற்றுவது வழக்கம். பள்ளியிறுதி ஆண்டுகளில் தான் ராஜம்மாள் வீடு தனியாக இருந்ததற்கான காரணம் புரிந்தது. ராஜம்மாவின் அப்பா எங்க பகுதிக்காரராம். ஆனால் அப்பகுதிப் பெண்ணை மணந்து கொண்டதால் அப்படி ஒரு தனியாளாக, ஒரு தனி வீட்டில் இருந்திருப்பார் போலும். ராஜம்மாள் தனியாகவே இருந்ததற்கான காரணம் அப்போது தான் புரிந்தது. சாதியின் அழுத்தங்கள்....

இதே போன்ற இன்னொரு சாதித் தகராறையும் ஊரில் பார்த்தேன். அப்போது நான் சின்னப் பயல் தான். எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற் போல் ஒரு சின்ன சந்து மாதிரி ஓரிடத்தில், அதாவது இப்போது எங்கள் கிறித்துவக் கோயில் உள்ளதே அதற்கு நேர் பின்னால் ஒரு சின்னக் கோவில் இருந்தது. நயினார் கோவில். வருஷத்துக்கு ஒரு விழா நடக்கும். ஊரில் அதிகமாக மின்சார விளக்குகள் இல்லாத காலம் அது. ஆனாலும் கோயில் விழாவிற்காக ஜெனரேட்டர் வைத்து விளக்கெல்லாம் போட்டு விழா நடந்தது. விழா முடிந்து

நாங்களெல்லோரும் அதைச் சுற்றி விளையாடி முடித்து தூங்கப் போய் விட்டோம். திடீரென்று குழாய் விளக்குகள் உடைகிற சத்தம் கேட்டது. அடிதடி சத்தம், கல் வீச்சு என்று ஒரே குழப்பம். எங்கள் வீடு ’வேதக்கார்ர்கள் வீடு’ இல்லையா? அதனால் எங்கள் வீட்டுப் பக்கம் கல் ஏதும் விழவில்லை. இருப்பினும் மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தோம்.

சிலர் வந்து ஒரே கலாட்டா பண்ணினார்கள். குழல் விளக்குகள் அத்தனையும் நொறுங்கிக் கிடந்தன. காலையில் எழுந்ததும் காரணம் சொன்னார்கள். விழாவில் பாட்டு வைத்த போது ஒரு பாட்டு: ‘ஆனந்தக் கோனாரே ... அறிவு கெட்டு தான் போனாரே’ன்னு ஒரு சினிமாப் பாட்டு. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் அந்த சாதியினராம். அவர்கள் அந்தப் பாட்டுக் கேட்டு விட்டு அதனால் தகராறு செய்து விட்டுப் போனார்கள்.

என்ன வித்தியாசம்.... அன்று அந்தப் பாட்டுக்கு சண்டை; இன்று ‘தேவரய்யா காலடி மண்ணே...’ பாட்டுக்கு சண்டை.

காலம் அப்படி ஒன்றும் மாறவேயில்லையோ? வெள்ளம் எங்கே போனது என்று தெரியவில்லை. ஆனால் ‘சாதி’ மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது !!





 *

735. இந்து மதம் எங்கே போகிறது? --- 7







***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

**********


*



 தெய்வம் யார்?

வேதம் கர்மாக்களை வகுத்தது. அடுத்து வந்த உபநிஷத்துக்காரர்கள் கர்மாக்களை தியாகம் செய்து விடுங்கள்; அது தான் மோட்சம் என்றன.

வேத, உபநிஷத்துக்காரர்களின் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வேறு வேறாய் இருக்க, இதன் அடிப்படையில் ஆறு தத்துவக்காரர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். (296)

அந்த ஆறு பேர்: கனாதர், அக்ஷபாதர், வ்யாஸர், கபிலர், பதஞ்சலி, ஜெய்மினி

கனாதர் உபதேசித்தது – வைஷேஷிகம்.  அக்ஷபாதர் – நியாயம். நியாம் என்றால் தர்க்கம் பண்ணுவது; தர்க்கிகம் என்று பெயர் இதற்கு. கபிலர் – சாங்க்யம் செய்தார்.கடவுளைப் பற்றிக் கேள்வி கேட்பது தான் சாங்க்யம். (297) பதஞ்சலி – யோகம் என்ற தத்துவம் சொன்னார்.

வ்யாஸரைப் பற்றியும், ஜெய்மினி பற்றியும் சிறிது விளக்கம்.

முனிவர்கள் தவம் செய்யும் போது காம்ய ஆசையை மறுத்து ஆசையை அடக்க வேண்டும். ஆனால் தவத்திற்கு இடையூறு வந்தால் முனிவர்கள் அப்பெண்களை நெருங்கி தங்களது காம ஆசையைத் தீர்த்துக் கொள்வார்கள். ஸ்தீரிகளும் மறுக்க முடியாத நிலையில் இருந்தனர்.

கங்கைக் கரையில் புராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருக்கும்போது ஒர் பெண்ணைப் பார்த்துக் காமுறுகிறார். யாரென்று கேட்கிறார். அவள் மச்சகந்தி என்ற சத்தியவதி; ஒரு செம்படவப் பெண்.(298)

ஆற்றைக் கடக்க முனிவர் அவளிடம் உதவி கேட்கிறார். கடக்கும் போது ஆசையைக் கடக்க முடியவில்லை; நெருக்கமாக அணைக்கிறார். ‘இது பஹவத் முகூர்த்தம். என்னோடு சம்மதித்து இணைந்துவிடு. ஒரு மாமுனிவனை எனக்குப் பெற்றுக் கொடு. யாருக்கும் இது தெரியப்போவதில்லை. நீ கன்னியாகவே இருப்பாய்’ என்கிறார்.

அவளது மேனியில் மீன் வாசம் போய் ஆண் வாசம் வந்தது.

’ரிஷி கர்ப்பம் ராத்தங்காது என்பார்கள். அதாவது ரிஷிகள் தங்கள் காமத்தை ஒரு அவஸ்யத்துக்காக, தங்கள் ஞானத்தின் இன்னொரு பலனுக்காக அனுபவிக்கிறார்கள். (299)

ரகசியம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகி விடுகிறது. அவன் மீனவப் பையன். அவனுக்கு சாஸ்த்ரம் சொல்லித் தரக்கூடாது என்கிறார்கள். ஆனால் அவனோ சாஸ்திரம் கற்றான்; சம்ப்ரதாயம் கற்றான். எல்லாம் கற்றான்

அப்பையன். வளர்ந்தான்; தாடி வளர்ந்தது; ரிஷியானான். வேதம் தொகுத்தான். 18 புராணங்களைத் தொகுத்தான். பிராமணர்களின் முது பெரும் நூலான ‘ப்ரம்ம சூத்திரம்’ எழுதினார். அவர் தான் வ்யாஸர் வேதவ்யாஸர்.

வ்யாஸர் வியாக்கியானம் என்ன? ‘நீங்களெல்லாம் ப்ரம்மத்தை, அதாவது கடவுளை காரணத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்கள் (based on reason). ஆனால் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டவர். தர்க்கங்களைத் தாண்டியவர். உலகத்தைக் கடவுள் தான் படைத்தார். அவரை அறிவு, காரணம், தர்க்கம் போன்றவற்றின் அடைப்படையில் அணுகாதீர்கள். கடவுள் காரணங்களைக் கடந்தவன் (God is above logic.)(301)

இந்த வ்யாஸருக்கு ஒரு சீடர். அவர் ஓர் இயற்கை வாதி – naturalist. அவர் தான் ஜெய்மினி. இவர் வ்யாஸரோடு நிகழ்த்திய விவாதங்கள் சுவாரஸ்யமானவை.

‘ஸ்வாமி, அவனை இங்கே கூட்டி வாருங்களேன்.’ என்றார் ஜெய்மினி.

‘யாரையப்பா?’

 ‘அவன் தான் உலகத்தையெல்லாம் ஒருத்தனே பொசுக்கென படைத்து முடித்து விட்டான் என்கிறீர்களே! … அந்தக் கடவுளைத்தான்’ என்றார் ஜெய்மினி.

 ‘அவன் பரலோகத்தில் இருக்கிறான். அவனை இங்கே இருந்து பார்க்க முடியாது’.

ஜெய்மினி சிரிக்கிறார். ‘அது எப்படி இருக்கும்?’

‘இங்கே யாகத்தில் புகை அதிகமாக வந்தால் புகை மூட்டமாக இருக்குமே … அது போல இருக்கும்.’

‘நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பரலோகம் உங்களுக்குத் தெரியுமா? அப்படி தெரிந்தால் காட்டுங்கள். இல்லையென்றால் தெரிந்தவர்களைக் கூப்பிடுங்கள். அடியேன் பார்த்து பரவசப்பட்டுக் கொள்கிறேன்’.

வ்யாஸர் பதிலின்றி மெளனித்த போது (302)… ஜெய்மினி சொன்னார்:

’கோஹி தஸ்வேத யத்ய முஷ்பின் லோகே 
அஸ்தீ வாரவேதீ …’ யஜூர் வேதத்தில் வருகிற மந்த்ரம் இது.

‘பரலோகம் யாருக்குத் தெரியும்? அதைப் பார்த்தவர்கள் யார்? இருந்தால் வரச்சொல். அது எப்படியிருக்கும்?’

வ்யாஸரோ … ‘அவன் பரலோகத்தில் இருக்கிறான். உனக்கும் எனக்கும் இந்த செடிக்கும் கொடிக்கும் உயிர் கொடுத்தவன் .. உடல் கொடுத்தவன்.’

ஜெய்மினி இதைக் கேட்டதும் டக்கென ஒரு கொடியை பிடித்தார். இந்த கொடிக்கும் பிராணன் உள்ளது; வளர்கிறது; அசைகிறது; பூக்கிறது; காய் கொடுக்கிறது; கனி கொடுக்கிறது. இதற்கு இத்தனையும் கொடுப்பது தண்ணீர். அந்த தண்ணீர் தான் கொடிக்குச சோறு. ’இப்போது இந்தக் கொடியை வாழ வைப்பது கடவுள் என்றால் … தண்ணீர் தான் கடவுளா? அல்லது கடவுள் தண்ணீர் தானா?” ’

’அந்தக் கொடிக்கு உள்சக்தி ஒன்று உண்டு. அதற்கொரு வளரும் சக்தி உண்டு. அது தண்ணீரால் கிடைக்கிறது. அதை ஏன் கடவுள் என்கிறாய்?’ இது தான் ஜெய்மினியின் மீமாம்ஸ. அதாவது கடவுளைப் பற்றிய விசாரணை. (303)

ஜெய்மினி இப்படியாக இயற்கையை முதன்மைப்படுத்தினார்.

தம் கர்மாக்களை நாம் செய்து கொண்டிருந்தால் கடவுளுக்கு என்ன அவஸ்யம்? என்பது தான் ஜெய்மினியின் கேள்வி.(ஆஹா! ...அழகு!)

வ்யாஸர் பிரம்ம சூத்திரம் என்ற நூலை இயற்றினார். அதற்கு ’உத்தர மீமாம்ஸா’ என்று பெயர். ராமானுஜர். சங்கரர் போன்றோர் இதற்கு உரையெழுதியுள்ளனர்.

ஆனால் ஜெய்மினி ‘பூர்வ மீமாம்ஸ’ என்ற சித்தாந்தத்தைக் கொடுத்தார். வ்யாஸரின் மீமாம்ஸத்தைத் தொட்டவர்கள் ஜெய்மினியின் மீமாம்ஸவைத் தொடவில்லை. ஏனென்றால் ஜெய்மினியை நாஸ்திகர் என்று அழைத்தவர்கள் பலர் அன்று உண்டு.(304)

வ்யாஸர் பிறந்த கதை பார்த்தோம். இந்த வ்யாஸருக்குப் பிறந்தவர் எப்படி இருந்தார்? (305) ரிஷிகள் காம்ய சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள். அப்படியோர் பொழுதில் வ்யாஸரின் ரேதஸ் – உயிர்த் திரவியம் கீழே சிந்தி விட்டது. அதை ஒரு கிளி கொத்தித் தின்று விட்டது அல்லது அப்படி கிளியாக வந்த அழகியுடன் அவர் கூடினார் என்றும் கூறுவார்கள். . கர்ப்பமான கிளி ஒரு ‘குட்டி’ போட்டு விட்டது! தலையெல்லாம் கிளி போல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவனையாக அமைந்ததாம். சுகஹா என்றால் வட மொழியில் கிளி என்று பெயர். அதனால் அந்தக் கிளிப் பிள்ளைக்கு ’சுகர்’ என்று பெயர். சுகப்பிரம்மம் என்றும் சொல்வார்கள். (306)

வ்யாஸர் வேதங்களை பிரித்து வகைப்படுத்தி, உபநிஷத்துக்கு பிரம்ம சூத்திரம் பண்ணிய போதும், 18 புராணங்களை தொகுத்த போதும் திருப்தி இல்லை; ‘பாகவதம்’ என்ற மகா காவ்யத்தைப் படைத்தார். இதைக் கேட்டாலோ, உபதேசம் பெற்றாலோ மோட்சம் பெற்று பகவான் நாராயணனின் வைகுண்டத்தை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை. (307)

சுகர், பரீட்சித்து என்னும் ராஜாவிற்கு பாகவதத்தை உபதேசிக்கிறார். பரீட்சித்து ராஜா ஒரு வாரத்திற்குள் உபதேசம் பெற்றால் தான் அவன் மோட்சம் பெற முடியும். உபதேசம் பெற்று அவன் மோட்சம் பெற்றான்.

மோட்சம் பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே … மோட்சம் என்றால் என்ன? வைகுண்டம் என்றால் என்ன?

இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது. வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா? அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா? இங்கு போல் அங்கும் காம ஸுகத்தை அனுபவிக்கிறார்களா? மகப் பேறுகளைப் பெறுகிறார்களா? அங்கேயும் திருடர்கள் இருக்கிறார்களா? ஸ்ந்யாஸிகள் இருப்பார்களா? ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?

… இந்தக் கேள்விகளையெல்லாம் மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள்.

விரஜா என்றொரு நதி. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம். எங்கு பார்த்தாலும் ஆண்கள் பெண்கள் ரொம்ப சந்தோஷமாக கூடிக் கலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு மண்டபம் ஒன்று உள்ளதாம். அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம் தான். (309) அங்கே ஒரு கட்டில் இருக்கிறது. அதிலே பாம்புப் படுக்கையில் பெருமாள் இருக்கிறார்.

அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸத்ரி லோகம், முதலியவற்றை படைத்துக் கொள்கிறான். அனுபவித்துக் கொள்கிறான். மோட்ச ஸ்வரூபம் என்ற தலைப்பில் சக்கரவர்த்தி ஆச்சார்யார் இதனை விளக்குகிறார். ‘இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது. ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது. எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள். அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை. அனைவருக்கும் சமமான போகம். இதைத் தான் ஸாயுஜ்யம் என்பர். எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படும்.

அவர்களுக்குள் ஏதும் வேற்றுமை ஏற்பட்டு விடாதா என்கிற ஐயம் சிலருக்கு வரலாம். இதற்குப் பதில் ; இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸூரிகள் (நித்யஸூரிகள் என்றால் … என்றென்றும் ஜீவித்து வைகுண்டத்தில் பகவானுக்கு கைங்கர்யம் செய்வார்கள்.) ஆண் பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும் எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை.

(அட … இஸ்லாமிய மறுமை மாதிரி இங்கேயும்!! சொல்லப்போனால் அங்கே இருப்பதை விட இங்கே ஜாதி, பால்வேறுபாடு எதுவும் இல்லையாமே! இஸ்லாமிய மறுமை மாதிரி ஆண்களுக்கு மட்டும் special treatment இங்கே இல்லையே! Good! Well done !!) (310)

ஒரு முத்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக் கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம். அல்லது மற்றொரு முத்தாத்மாவை உதவியாக வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம். இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால் அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே.(311)

கிருஷ்ணன் கோப ஸ்த்ரிகளுடன் ஏன் காமபோகத்தை அனுபவிக்க வேண்டும்?  ஸ்ரீரங்கநாதன் தனது ஆன்ந்த நாடிகளைக் கொண்டு ஸ்ரீரங்கநாயகியுடன் ஆனந்தமாக கலவியை அனுபவிக்கிறான் என பராசுரபட்டர் ஸ்ரீகுணரத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்க வேண்டுமா? படைத்துக் கொள். உன் அப்பாவை பார்க்க வேண்டுமா? படைத்துக் கொள். சரி... குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது. உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள். உன்னைப் பார்த்து சிரிப்பாள். நெருங்குவாள். அணைப்பாள். ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். அங்கே அது பேரின்பமாக மாறும். ( சுவன்ம் - modified here !!)

இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம். அங்கே பகவத் ஆனந்தம். இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல் அங்கேயும் ஜாலியாக சுற்றலாம். அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம். அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. (312)

இந்த உலகத்திற்கு போக வேண்டும் என்றால் எப்படி போவது? (இங்கும் போக ‘சுவனப் பிரியன்’ ஆகலாம் போலும்!!) இதற்குப் பல வித்யையைகள் ஓதப் பட்டிருக்கின்றன.

அதில் இருக்கும் one line – ஆத்மாவை அறிகிறவன் மோட்சம் பெறுகிறான்.

தேவர்களும், அசுரர்களும் மோட்சம் பெறுவது எப்படி என்று ப்ரஜாபதியிடம் கேட்கிறார்கள். அசுரர்கள் தேகத்தை தான் ஆத்மா என்று தப்பாக நினைத்தவர்களாகி விட்டார்கள். (313) இந்திரன் காத்திருந்து ஆத்மா என்ன என்பதைக் கண்டு பின் கடைசியில் மோட்சம் போனான்.

இந்த உலகத்தில் நல்லவனாக வாழ வேண்டும். வாழ்ந்தால் இதை விட இன்பம் மிகுந்த உலகம் உனக்கென காத்திருக்கிறது என ஆசை காட்டும் வேலைதான் மோட்சம்.( the same carrot and stick story - ஆப்ரஹாமிய மதங்களின் அதே கதை தான் இங்கும். !)(316)






*

Monday, March 24, 2014

734. பரிசுத்த ஆவி vs மாரியாத்தா




பரிசுத்த ஆவி   vs  மாரியாத்தா












பாவிகளே!  உங்கள் பாவங்களை இது போல் தூக்கியெறியுங்கள் ... 

ஆமென்

Sunday, March 23, 2014

733. கிறிஸ்துவர்களின் கண்களுக்கு ... 3










*


 போப்பாண்டவரின் தவறா வரம் என்று ஒன்றுண்டு. அவர் கூறுபவை அனைத்தும் மிகச் சரியானவை; அவரிடும் கட்டளைகள் என்றும் தவறாக இருக்காது என்பது கத்தோலிக்க மக்களின் நம்பிக்கை. ஆனாலும் போப் சொல்லும் கருத்துகள் என்பதற்குப் பதில் திருச்சபையின் magisterium – கர்தினால்கள் அடங்கிய உயர்ப் பெருங்குழு – கொடுக்கும் கட்டளைகள் மட்டுமே அப்படிப்பட்டவை.

இந்த தவறா வரம் முதல் வத்திக்கான் பேரவையில் 1869-1870 ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. முக்கியமாக ஒன்பதாம் பயஸ் என்ற போப் 1854-ம் ஆண்டு இயற்றிய மேரி மாதாவின் கன்னித் தன்மை, பன்னிரண்டாம் பயஸ் 1950-ம் ஆண்டில் மேரி மாதா பரலோகத்திற்கு ஆரோகணம் செய்தது என்ற இரு கொள்கைகளை நிலை நாட்டியது இந்த கட்டளை.

 பல கேள்விகள் இதைப் பற்றி எழுந்துள்ளன. வரலாற்று நிகழ்ச்சிகளில் திருச்சபையின் நிலைப்பாடுகள் இவைகளையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்த தவறா வரம் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே.

 http://en.wikipedia.org/wiki/Papal_infallibility
http://www.catholic.com/tracts/papal-infallibility

*************


 கடவுள் எனக்குக் காட்சி தந்தார் ... என்னோடு பேசினார் ... என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது கடவுள்களின் பிரசன்னத்தை உணர்த்த அல்ல; தங்களை உலகிற்குக் காட்டிக் கொள்வதற்காகவே இத்தகைய காட்சிகள் “உருவாகின்றன”. அதிலும் இது கிறித்துவ மதத்தில் கொஞ்சம் அளவிற்கு அதிகமாகவே காணப்படுகிறது. இங்கேயும் ஒரு கத்தோலிக்க கிறித்துவருக்கு மாதாவோ அல்லது வேறு யாரும் புனிதர்களோ தரிசனம் தருவார்கள். ஏனைய கிறித்துவர்களுக்கு ஏசுவே வருகிறார். அல்லது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சம்மனசு – தேவ தூதர் - வருகிறார் - அதுவும் ஏனென்றே தெரியவில்லை; தேவ தூதர் என்றால் அனேகமாக அது காப்ரியல்/ ஜிப்ரேல் தான் !

சில சான்றுகள்: 

Our Lady of Medjugorje 

முன்பு யூகோஸ்லோவிய நாடாக இருந்த நாட்டின் இப்போதைய போஸ்னியாவிற்கும் மேற்கேயுள்ள ஹெர்ஸ்கோவினா பகுதியிலுள்ள மெட்ஜுகோர்ஜே என்ற ஊரில் மேரி மாதா ஆறு பேருக்குக் காட்சி தந்ததாகவும், அவர்களுக்கு அவர் பத்து ரகசியங்களைச் சொல்லப் போவதாகவும் சொல்லியுள்ளார். இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் மாதா அவர்களைத் தேடிச் சென்று ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆறில் நால்வருக்குப் பத்து ரகசியங்களும் சொல்லி முடித்தாயிற்றாம்; ஆனால் இன்னும் இருவருக்கு மீதி ரகசியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைப் பற்றிய காணொளி இங்கே -

 //என்ன மெசேஜ் .. எதும் . .. .அதிசயமான விஷயம் சொல்றாங்களா அப்டின்னு கேட்டேன். போற போக்குல CERN .. NEUTRINO ... இப்படி பெரிய அறிவியல் விஷயங்கள் சொன்னா கேட்டுக்கலாமேன்னு நினச்சேன். ஆனா .. ”எப்படி ஏசுவிடம் பிரியமா இருக்கணும்னு என்பதை மட்டும் மாதா சொல்றாங்க .. அடுத்தவங்களுக்காக எப்போதும் ஜெபம் பண்ணணும் .. உங்களுக்காக கடவுளிடம் ஒண்ணும் கேக்க கூடாதுன்னு’’ அதில சொன்னதாகச் சொன்னார்கள்.

இந்த ரகசியப் பரிமாற்றம் 1991ம் ஆண்டு ஆரம்பித்தது; இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏன் இத்தனை வருஷமாக நடந்த்து என்பதற்கு எனக்குத் தோன்றிய காரணம் என்னவெனில், //ஒரு வேளை முகமதுவுக்கு 23 வருஷமா தொடர்ந்து ஜிப்ரேல் வந்து ‘சேதி’ சொல்லியிருக்கார். அதை ‘பீட்’ பண்றதுக்காக மாதா இன்னும் இழுத்து இத்தனை வருசம் தாண்டியிருப்பாங்களோன்னு தோணிச்சி!//

இந்த புதுமைகள் மீது வத்திகானின் Vatican’s Congregation for the Doctrine of the Faith-ன் the apostolic nuncio அமெரிக்க பிஷப்புகளுக்கு ஒரு அறிக்கை விடுத்துள்ளார். ”இதில் கத்தோலிக்க மக்கள் இந்த புதுமைகளை நோக்கிச் செல்லக் கூடாது என்று தடுத்துள்ளது. மெட்ஜுகோர்ஜேவில் நடக்கும் மாதாவின் அற்புதத் தோற்றங்கள் நம்ப முடியாதவை”.

2014ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மாதா மெட்ஜுகோர்ஜேவில் கொடுத்த காட்சியின் போது உலகிற்குக் கொடுத்த செய்தி:

அன்பான குழந்தைகளே! பலரின் உள்ளங்களிலே கடவுள் இல்லை என்ற எண்ணமே உள்ளது. அவர்களுக்கு கடவுள் தேவையில்லாமல் போயிற்று; அவர்கள் ஜெபிப்பதில்லை; அவர்களிடம் சமாதானமுமில்லை. ஆனால், நீங்கள் ஜெபிக்க வேண்டும்; கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். முதலில் இருந்தே நீங்கள் என் அழைத்தலுக்குச் செவி சாய்த்தீர்கள். கடவுளின் இருப்பையும், என் பிரசன்னத்தையும் நீங்கள் சாட்சி சொன்னீர்கள்.

குழந்தைகளே! நான் உங்களுடனேயே இருக்கிறேன்; உங்கள் நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களை நான் அனுதினமும் என் மகனாகிய ஏசுவிடம் ஒப்படைக்கிறேன். என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி மிர்ஜானா என்ற இடத்தில் விசுவாசமில்லாதவர்களுக்காகக் கொடுத்த செய்தி : 

அன்புக்குரிய குழந்தைகளே! நான் உங்களிடம் ஒரு தாயாக வருகிறேன்; நீங்கள் என்னிடம் அமைதியையும், ஆறுதலையும் பெற முடியும். ஆகவே என் குழந்தைகளே! நீங்களே என் அன்பை எடுத்துச் செல்லும் சீடர்கள்; ஜெபியுங்கள்; மிகுந்த தாழ்ச்சியான பக்தியோடு ஜெபியுங்கள். விண்ணகத்திலிருக்கும் தந்தையிடம் நம்பிக்கை வைத்து ஜெபியுங்கள். நான் உலகத்திற்கு ஆசீரைக் கொண்டு வருவேன் என்பதை நான் நம்பியது போல நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து, உதடுகளிலிருந்து, ‘உமது சித்தம் நடந்தேறட்டும்’ என்ற வார்த்தைகள் எதிரொலிக்கட்டும். நம்பிக்கையோடு நீங்கள் ஜெபிக்கும் போது நான் உங்களுக்காக கடவுளிடம் உங்களுக்கு மோட்ச பாக்கியம் தரவும், உங்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்பவும் வேண்டிக் கொள்வேன். கடவுளை அறியாதவர்களுக்கு உதவ அப்போது தான் முடியும். நீங்களும் அன்பின் சீடர்களாக கடவுளை ‘தந்தாய்’ என்று நம்பிக்கையோடு அழைத்து உங்கள் மேய்ப்பரின் புனிதக் கரங்களில் உங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுங்கள். நன்றி. 


http://en.wikipedia.org/wiki/Medjugorje
http://www.ncregister.com/daily-news/vatican-advises-u.s.-bishops-about-medjugorje-apparitions/#ixzz2veBf5Ey8
http://www.ncregister.com/daily-news/vatican-advises-u.s.-bishops-about-medjugorje-apparitions/#ixzz2veBf5Ey8
http://www.ncregister.com/daily-news/vatican-advises-u.s.-bishops-about-medjugorje-apparitions/#ixzz2vlxW3y1j



***********

குடலூபே கன்னி மேரி 

குடலூபே கன்னி மேரி மெக்ஸிகோ அருகில் குடலூபே என்ற இடத்தில் 1531-ம் ஆண்டு ஒரு சிறு பெண்ணாக ஜுவான் டியகோ என்பவருக்குக் காட்சி கொடுத்து, தனக்கு இங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கேட்டதாக ஒரு நிகழ்வு கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நிகழ்ந்ததற்கு நிரூபணம் கேட்ட போது, அந்த ஜுவான் டியகோ அருகிலிருந்து மலையின் உச்சியில் சில மலர்களைக் கொய்ய மாதாவினால் உத்தரவிடப்பட்டாராம். 

அது டிசம்பர் மாதம். அந்த மாதத்தில் வழக்கமாக பூக்காத Castilian roses-களைப் பறித்தாராம். தன் மேலாடைக்குள் வைத்து அவைகளைக் கீழே கொண்டு வந்து பிஷப்பிடம் காட்ட தன் மேலாடையைத் திறந்த போது மலர்கள் கீழே விழுந்தன. மேலாடைக்குள் மாதாவின் உருவம் பதிப்பிக்கப் பட்டிருந்ததாம். 

http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_Guadalupe#Pontifical_pronouncements http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_Guadalupe 

*************


 ‘சோகங்களின் மாதா’ 


 ருவாண்டாவில் கிபிஹோ என்ற இடத்தில் கருப்பு மாதா காட்சி கொடுத்தார். அங்குள்ள பிஷப் 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதியும் அதன் பின் பல சனிக்கிழமைகளிலும் காட்சியளித்தார். இந்த மாதாவிற்கு ‘சோகங்களின் மாதா’ என்ற பெயரிடப்பட்டது. 

1984-ம் ஆண்டு மாதா 1994ம் ஆண்டு பெரும் போர் ஒன்று நடக்கும் என்று தீர்க்க தரிசனம் அளித்தார். 1980-81 ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள். பல இடங்களில் மாதாவின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாதாவை மக்கள் எல்லோரும் மறந்திருந்த காலம் இது. 

முதல் காட்சி அல்போன்சைன் மும்ரெகே என்ற 17 வயது பள்ளி மாணவிக்கு நடந்தது. படங்களில் பார்ப்பது போல் மாதா வெள்ளையாக இல்லை; கருப்பாக இருந்தார். அழகாக இருந்தார். 

ஒரு முறை சில ஜெபமாலைகளை மாதாவின் முன் வைத்து ஆசீர் வாங்க முயற்சித்த போது அதில் சில ஜெபமாலைகள் மிகுந்த கனமாக இருந்தன. அந்த கனமான ஜெபமாலைகள்  இந்தக் காட்சிகளை நம்பாதவரின் ஜெபமாலையாக இருந்ததாம். 

 மாதா தன் காட்சி ஒன்றில் மோட்சம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் போன்றவைகளைக் காட்டினாராம். முக்கியமான காட்சி: கிபிஹோவில் நடந்த பல காட்சிகளில் சில சமயங்களில் மிக விநோதமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. சூரியன் மேலும் கீழுமாய், அங்குமிங்குமாய் சில வினாடிகளுக்கு நடனமாடியது. சூரியன் மறைந்து பச்சை வண்ணத்தில் நிலவு காட்சி கொடுத்தது. பிரகாசமான வானத்தில் நட்சத்திரங்கள் நடனமாடின. 


1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 19ம் தேதி அளித்த ஒரு காட்சியில் ’ரத்த ஆறு ஓடியது; மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தனர்; எங்கும் சிதறிக் கிடந்த பிணக்குவியல்; மரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன; தலையற்ற உடல்கள் குவிந்துகிடந்தன’. 1994ம் ஆண்டு இந்நாட்டில் நடந்த பெரும் போரைப் பற்றிய தீர்க்க தரிசனமாக இது இருந்தது. இந்த தீர்க்க தரிசனம் முதலில் நம்ப முடியாததாக இருந்தது. ஆனால் 12 ஆண்டுகள் கழித்து வந்த உள்நாட்டுப் போராட்டத்தில் இவை எல்லாம் நிகழ்ந்தன. மூன்றே மாதத்தில் ஐந்து லட்சம் பேர் மாண்டனர். தலையற்ற உடல்கள் க்கியா என்ற ரத்த ஆற்றில் – Kagea River (river of blood) வீசியெறியப்பட்டன. 

 மாதா கிபிஹோவில் நடக்கும் பாலின முறை கேடுகள் பற்றி எச்சரித்தார். அப்போது AIDS என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 1994ல் உலகத்தின் AIDS நோயாளிகளில் 75 விழுக்காடு இந்த நாட்டில் மட்டும் இருந்தது. இரண்டரைக் கோடி ஆப்ரிக்க மக்கள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு இருந்தனர். 


http://www.michaeljournal.org/kibeho.htm 


இன்னும் இது போல் மிகப் பல காட்சிகளைப் பற்றியவிவரங்கள் youtube-ல் நிறைய காணக் கிடைக்கின்றன. நம்புக்கையுள்ளோருக்கே இவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நம்புவது கொஞ்சம் சிரமமான செயல் என்றே நினைக்கிறேன். ! 

அதே போல் ஏற்கெனவே மேற்கோள் காட்டிய ஒன்றை மறுபடியும் நினைவு படுத்துகிறேன்: 

"If you talk to God, you are praying; 
If God talks to you, you have schizophrenia”. ...... Thomas Szasz (இம்மேற்கோளை  பயன்படுத்த வேண்டிய அவசியமும், கட்டாயமும்  அடிக்கடி வாய்க்கிறது !!!)




*



Friday, March 21, 2014

732. இந்து மதம் எங்கே போகிறது? --- 6






*


***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****


பிராமணர்களின் வாழும் பகுதியாக வேதத்தில் கூறப்பட்ட இடங்கள் எல்லாம் இமயமலைச்சாரல் பகுதிகள். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானமாக இருக்கிறது. (250)


காவிரிக் கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால் ... அந்த மந்திரத்தை மாற்ற வேண்டும். சென்னையில் இருக்கும் பிராமணர்கள் ..

’நமோ அடையாறு கூவம் யோஹே 
மத்யேயே வசந்தீ ... என்றல்லவா வணங்க வேண்டும். (252)

சம்ஸ்கிருத பாஷையைத்தான் போற்றுவோம்; சமஸ்கிருதம் சொன்னால் தான் கேட்போம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்களுக்கு நானும் ‘ஒற்றை ஸ்லோகம்’ ஒன்று சொல்கிறேன்.

 ’வேத ப்ராமாண்யம் கஸ்ய மிது 
கர்த்ரு வாதஹா ஸ்நானே 
தர்மேச்சா ஜாதிவாத அவலேயஹ 
சந்த பாரம்பஹா பாபஹான யசைநீ 
ஸ்தவஸ்த ப்ரக்ஞாநாம் சஞ்சலிங்கானீ ஜாம்யே ....’

’மனிதன் உயிருள்ளவன். ஜீவன் உள்வன். சிந்திக்க வேண்டிய கடமை கொண்டவன்.(’சிந்திக்க மாட்டீர்களா?’ - இதை எங்கேயோ கேட்டது போல் உள்ளதே!! இப்படி சிந்தனையாளனாக இருக்க வேண்டிய மனிதன் இன்று
வெறும் ஜடமாகி விட்டான். அதாவது குட்டிச் சுவர் போலவும் சாலையில் கிடக்கும் கல்லைப் போலவும் பயனற்ற ஜடமாகி விட்டான்.’

இதற்குப் பல காரணங்கள்.
அவைகளின் பட்டியல்:
1. எதற்கெடுத்தாலும் வேதம் சொன்னதையே நம்பிக்கொண்டு அதில் நல்லவை கெட்டவை எது என்பதை அறியாமல் அப்படியே பின்பற்றுவது – வேத ப்ராமாண்யம்.

2. நம் எல்லோரையும் ஒருத்தன் படைத்தான்; அவன்தான் நமக்கு கர்த்தன்; அதாவது காப்பாளன் என்று சும்மா நம்பிக்கொண்டிருப்பதால் மனிதன் ஜடமாகிறான்.

3. ஸ்நானே ... குளியல். இதனோடு மதத்தைச் சம்பந்தப்படுத்தி ஜடமாகிப் போனான்.

4. ஜாதிவாதம் (254)

5. சந்தாபாரம் – உடல் ரீதியாக தன்னையே வருத்திக் கொண்டு ஜடமாகிறான்.

இவைகள் தான் சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள். (255)

மலை மக்கள் வணங்கிய காளி மாதாவை பிராமணர்கள் காலப்போக்கில் ஆகம விதிக்குள் அடக்கி அவளை ஒரு ஆண் தெய்வமாக்கி விட்டார்கள்.

பிராமணர்கள் தங்கள் அடிமடியை அவிழ்த்துக் கொண்டிருப்பதை மலை மக்கள் உணர்ந்தார்கள். போராடத் துவங்கினார்கள். அவர்களின் ஆயுதங்களை பிராமணர்களின் அறிவு தோற்கடித்தது.

இதன் மூலம் ஒரு உடன்படிக்கை. பிராமணர்கள் உள்ளே போய் கடவுளை சேவிக்க, மலை மக்கள் அம்பட்டர்களாய் வெளியே அம்ர்ந்து பக்தர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்பதே அது! இருவருக்கும் தட்சணை கிடைக்கும்!(269)

திருப்பதி மலைக்காளியை பரம சிவனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றிவிட்ட நிலையில் தான் இந்தத் தகவல் வைணவர்களுக்குக் கிடைத்தது. கொதித்தெழுந்தனர் வைணவர்கள்.

மலை மீது அடுத்ததாக வைணவப் படை ஏறியது. ஸ்ரீராமானுஜர் 11-ம் நூற்றாண்டு தன்னுடைய மாமா திருமலை நம்பியிடம் ராமாயாணம் கேட்பதற்காக திருப்பதிக்குப் போனார்..(270)

இந்த வைணவ – சைவ போரில் ராமானுஜர் ஈடுபட்டதைப் பற்றி குரு பரம்பரை என்ற புனித நூல் விளக்குகிறது. (271)

இரண்டு தரப்பிலும் வாதப் பிரதிவாதங்கள் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

அம்மலைக்கே உரிய மலை மக்கள் இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் முழித்தனர்.

குரு பரம்பரையில் ராமானுஜர் ஒரு வழி சொல்கிறார். பகவானே நேரில் வந்து சொல்லட்டும் என்று ஒரு பதில் தருகிறார். (272)

பெருமாளின் சங்கு சக்கரம், சிவனின் மான், மழு என்ற ஆயுதங்களையும் சன்னதியில் விக்கிரகத்துக்கு அருகே வைத்து விட்டு ராத்திரி சன்னதியை இழுத்துப் பூட்டி விடுவோம். காலையில் வந்து பார்ப்போம். விக்கிரம் எந்த ஆயுதத்தைச் சூடி நிற்கிறது என்று பார்த்து முடிவு கட்டுவோம் என்றார்.(273)

எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

இரவு ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷன் அம்சம். ஆகவே அவர் பாம்பு உருவம் எடுத்து, கோமுகம் / நீர்மம் / தூம்பு வழியாக உள் நுழைந்து சங்கையும் சக்கரத்தையும் எடுத்து விக்கிரகத்திற்கு சூட்டி விட்டு, மான், மழு இரண்டையும் சிதைத்து விட்டு வந்து விடுகிறார். (276)

இதைப் பற்றிப் பேச நீர் யார் என்று என்னிடம் கேள்வி கேட்கின்றார்கள்?

இதற்குப் பதிலாக இன்னொரு நிகழ்வு பற்றிக் கூறுகிறேன். திருப்பதி மலையில் செய்யக்கூடிய பெரிய கைங்கர்யம் பெருமாளுக்கு நித்யப்படி தீர்த்தம் கொண்டு வருவது தான். (277)

ஒரு முறை திருமலை நம்பி தீர்த்தம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு நீர் எடுத்து வரும்போது வழியில் ஒருவர் இவரை, ‘தாத்தா’ என்று கூப்பிட்டு நீர் கேட்கிறார். நம்பி மறுக்கும் போது அவர் ‘எனக்குத் தண்ணீர் தந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றின புண்ணியம் கிடைக்கும். அந்தக் கல்லூக்கு ஊற்றி என்ன பண்ணப் போறே?” என்று கேட்கிறார். நம்பி மறுத்து நடக்கும் போது மீண்டும் அதே குரல். நம்பி திரும்பிப் பார்க்கும் போது பெருமாளே தண்ணீர் கேட்டு சோதித்திருக்கிறார் என்பது நம்பிக்குத் தெரிகிறது. (278)

 ‘தாத’ என்றால் அப்பா என்று ஒரு அர்த்தம் உண்டு. பெருமாளை பிரம்மனுக்கு அப்பா என்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவான பெருமாளே நம்பியை ‘தாத…’ என்றழைத்ததால் திருமலை நம்பி அடியார்க்கு தாத்தா ஆனார். அவரது வம்சத்தினர் தாத்தாச்சாரியார்கள் ஆனார்கள். அடியேனும் அப்படி வந்தவன் தான்.(279)

திருப்பதி மலையோடு ஒன்றியவர் இன்னொருவர். அவர் ஹத்தியராம் பாபுஜி.

வட இந்தியரான இவர் கோயிலில் சேவகம் செய்ய ஆரம்பித்து, பின் கோயிலின் நிர்வாகியாக ஆகி விடுகிறார்.(280)

திருப்பதி கோயிலில் உள்ள தெய்வம் மலை மக்களது காளி என்பதற்கான இன்னொரு தடயத்தை ஆசிரியர் தருகிறார். திருப்பதி கோயிலைப் பிரபல்யமாக்க மொட்டை போடுவதை பாபாஜி தீவிரமாகக் கடைப்பிடித்தார். அப்போது சில பிராமணர்கள் அவரிடம், ‘விக்ரஹத்தின் கைகளில் பாம்பு இருக்கிறது. அதை எடுத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல் .. பின்னாலுள்ள பின்னலையும் நீக்கி விட்டால் ...’ என்றனர். பாபாஜி மறுத்து விட்டார். பின்னால் என்ன பின்னல்? (281)

ஜெருசலேமில் உள்ள ஒரு பெண்மணி இசையரசி எம். எஸ். அம்மா அவர்களுக்குத் தெரியும். இந்து மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியவருக்கு எனது தொடர்பு கிடைக்கிறது. அவரை அழைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வெங்கடாஜலபதியை முழுமையாகப் பார்க்கும் போது தான்  திருப்பதி பெருமாளுக்கு அழகான தலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள் என்பதைப் பார்க்கிறார்.(283)

வர்த்தகக் கடவுளாக மாறி விட்ட வேங்கடாஜலபதியின் முந்தைய நிலைமையைச் சொன்னேன். மலையின் மைந்தர்கள், முதலில் காளியை வழிபட்டார்கள். இன்று வெளியே உட்கார்ந்து மொட்டையடிக்கிறார்கள். இதை பெரிய பிஸினஸ்ஸாகவும் ஆக்கி விட்டார்களே ... அந்த ஆதங்கத்தில் தான்... திருப்பதி பற்றிய இத்தனை திருப்பங்களையும் சொன்னேன்.

இதற்கு மேலும் இன்னும் சில ஆதாரங்களைக் கூட நாம் சேகரிக்க முடியும். திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கைகளில் சங்கு சக்கரமும் இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாக இருக்கும். ஆனால் திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். சங்கு சக்கரம் தோள்பட்டையில் தான் தொற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்து, பெருமாளின் பக்கத்தில் பிராட்டியைப் பார்த்ததுண்டோ? (284)

பிராட்டியார் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறார். மலை மக்களின் காளியை மலையேறியவர்கள் மாற்றி விட்டார்களே ... அந்த உரிமைப் பிரச்சனைக்குத் தான் இப்படிச் சொன்னேன். (285)

அடுத்து …

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமம். அது பாண்டிய ராஜாவிடமிருந்த மலை தேசம். வளங்கொழித்துக் கிடந்தது. திடீரென்று குதிரைகளில் வந்த ஒரு சிப்பாய்க் கொள்ளைக்காரர்கள் சுழன்றடித்தார்கள். கொள்ளையடித்ததும் சுற்றும் பார்த்தார்கள். சுற்றிலும் 5 குன்றுகள். கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள். காந்த மலை என்ற அந்தக் குன்றை அடைந்ததும் அங்கே மலைவாழ் மக்கள் வைத்திருந்த தங்கச் சிலை அவர்கள் கண்ணைப் பறித்த்து. (286)

அங்கே நடந்தது பற்றி இரு கருத்துகள் உள்ளன. கொள்ளையடித்தார்கள் என்பது ஒரு கருத்து. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கினார்கள் என்ற செய்தி.

தங்கள் சிலை கொள்ளையடிக்கப்பட்டதும் காந்த மலையிலிருந்து இறங்கி 5 குன்றுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்னொரு அய்யனார் காவல் சிலையை உருவாக்கினர். பின்னால் இதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. முதலில் பொன் விக்கிரகம் இருந்த இடம் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. இப்படி எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலை மக்களின் சிலை தான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (287)

அய்யனாருக்கு வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்போதைய கேரளா (ஆந்திரப் பிரதேசம் என்று நூலில் உள்ளது??) நம்பூதிரிகள் பூணூலை முறுக்கிக் கொண்டு வந்தனர்.

அவர்கள் புது ஐதீகத்தைக் கிளப்பினார்கள்.(288) இது உங்க அய்யனார் இல்லை; எங்க அய்யப்பன் இவன் என்றார்கள். (289)

பத்மாசுரன் என்ற ஓர் அசுரன் பயங்கர தவம் இருந்தான். சிவனும் காட்சி கொடுத்தார்; என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார். ‘நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் பஸ்பமாக வேண்டும்’ என்றான். அதை சேங்ஷன் பண்ணி விட்டார் சிவன். எல்லார் தலையிலும் கைவைத்த பத்மாசுரன் கடைசியில் சிவனிடமே வந்தான். தன் வரமே தன்னை அழிக்க வந்ததை அறிந்த சிவன் திருமாலிடம் ஓடினார்.

பெருமாள் மோகினியானார். (290) மோகினி பார்த்த பத்மாசுரனுக்கு எல்லாம் மறந்து போனது.

மோகினியும் ஆட ஆரம்பித்தாள், என்னைப் போல் ஆடினால் நான் கிடைப்பேன்; தயாரா என்றாள். பத்மாசுரனும் போட்டிக்குள் இறங்கினான். ஆட்டத்தில் மோகினி தலையில் கை வைக்க, பத்மாசுரனும் தன் தலையில் கை வைத்து எரிந்து போனான்.(291)

ஆஹா.. பத்மாசுரன் இறந்து விட்டான் என்று நினைத்துத் திரும்பிய சிவனின் கண்ணில் மோகினியின் அழகிய உருவம் தெரிய, அவளை அவர் பிரேமிக்க … இந்த சம்பவத்தால் மோகினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த தெய்வக் குழந்தை தான் அய்யப்பன். இந்த அய்யப்பன் கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல, (293) அவர்களும் நம்பினார்கள்.

இரண்டு மூர்த்திகளால் அவதரித்த அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள் என்றார்கள்.

 மலை மக்கள் பூக்கள் போட சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள். அவைகளை சாதாரண படிகள் அல்ல; 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்த்தவை; 6 திருப்படிகள் முருகன் அம்சம் கொண்டவை; 6 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பனின் அம்சங்கள். மண்டலம் இருந்து.

மாம்ஸம் விலக்கி, சுத்தமாக இருந்தால் தான் இங்கே ஏறமுடியும் என்றார்கள். அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது.

பிராமணர்கள் மேலே சென்றனர். அவர்களின் கண்களில் ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. (294)

நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அது தான் அந்தக் காந்த மலையில் ஜொலிக்கிறது என்றார்கள் மலை மக்கள். அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டு வாசி பக்தை இருந்தாள். அவளை புஷ்பம் இறைத்து, தேவர்கள் வாழ்த்த ஒரு பெரிய ஜோதி தோன்றியது. அதில் சபரி கலந்து மோட்சம் அடைந்தாள் என்றார்கள் நம்பூதிரிகள். அந்த மோட்ச ஜோதி அது என்றார்கள்.

இப்போது நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு செய்து அங்கே தீமூட்டி வருகிறார்கள்.

இதை பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். (295)





*