Sunday, October 29, 2006

185. அமெரிக்கத் துளிகள்

இதெல்லாம் எழுதட்டா சிலர் மாதிரியெல்லாம் எப்படித்தான் நாங்கெல்லாம் அமெரிக்க போய்வந்த கதையை அரங்கேற்றுகிறது?

நியூயார்க் பக்கம்; நியூபோர்ட் என்ற இடத்திற்குப் பக்கத்தில பலமாடிக் குடியிருப்பில் மாணவ-நண்பன் - அவன் இன்னும் சின்னாளில் 'காட்டான்' என்ற பெயரில் பதிவுலகத்தில் நுழைவதாகத் திட்டம் - அவனது விருந்தாளியாக ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஒரு நாள் அவனது ஃப்ளாட்டில் நுழையப்போகும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்மணியும், அவரது குட்டிக் குழந்தையொன்றும் வெளியே வந்தார்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்து சிரித்து, 'டாடா'காண்பித்து என் 'அயலானை அன்பு செய்' என்ற தத்துவத்தை நிலைநாட்டினேன். காட்டான் ஒண்ணுமே கண்டுக்கவில்லை. ஏன்'பா என்று கேட்டேன். இதெல்லாம் எதுக்கு; நம்ம ஜோலிய நாம பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றான். சரி இது ஒரு அமெரிக்கத்தனம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு ஒரு நாள் மாலை ஸ்டார் பக்ஸ் போனோமா, அங்கே காஃபி குடித்துவிட்டு, அப்போதுதான் முதல் முறையாக நம்ம ஊரில் பச்சைப் பழம், மோரிஸ் பழம் என்றெல்லாம் சொல்லுவோமே அதே பழம், ஆனால் அழகு மஞ்சள் கலரில் வழுவழுன்னு இருந்தது. அதுக்கு முந்தி அந்த மாதிரி பழம் நம்ம ஊர்ல பார்த்ததில்லை. ஆனா அதுக்குப் பிறகு முதலில் பெங்களூரில் பார்த்தேன். அன்று அத வாங்கலாமான்னு நானும் காட்டானும் பேசினோம். அப்போ கவுண்டரிலிருந்து 'fresh பழம்தான் ,வாங்குங்க' அப்டின்னு தமிழில் ஒரு குரல். 'ஆ'ன்னு வாயப் பொழந்து பேசினவரைப் பார்த்தேன். தமிழ் மூஞ்சி; ரொம்ப friendly-ஆ எங்களைப் பார்த்தார். ஆனால் நம்ம காட்டானோ கண்டுக்கவேயில்லை. கடையை விட்டு வெளியே வந்ததும் 'ஏன்'பா, கண்டுக்கவேயில்லை' என்றேன். ஆமா, இவன் இன்னைக்கி இங்க; நாளைக்கி எங்கேயோ; இதில் என்ன பெரிசா கண்டுக்கிறது' அப்டின்னான். அடுத்த அமெரிக்கத்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் Midway Mall அப்டின்னு ஒரு இடம். சனி ஞாயிறுகளில் நானும் நம்ம சைனா நண்பரும் அங்கு சும்மாவாவது போவதுண்டு. அங்கே போய் ஒவ்வொரு சாமான்களாக எடுத்துப் பார்ப்போம். Made in China என்றுதான் நூத்துக்கு தொண்ணூரு பொருட்களில் இருக்கும் (இப்போ நம்ம ஊர்லயும் அப்படி ஆகிப் போச்சு; அப்போ அது ஒரு பிரமிப்பு) அவர் பெருமையாக அதை எனக்குக் காண்பிப்பார். அதன்பிறகு நம்ம ஊர் காசிலேயும், அவரது காசிலேயும் டாலரின் மதிப்புக்கு ஈடாக எவ்வளவு என்று பார்ப்போம். அதற்கு அவர் அவரது palmtop எடுத்து on செய்வதற்குள் நான் அவரது சைனா காசுக்கு (எட்டால் பெருக்க வேண்டியதிருந்தது - நமக்கு எட்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஜுஜுபியா) டக்குன்னு சொல்லிடுவேன். அவருக்கோ அப்படி ஒரு ஆச்சரியமா இருக்கும். உங்க காசில எவ்வளவு என்பார். அப்போ டாலுருக்கு 48 ரூபாய் என்று நினைக்கிறேன். 50-ஆல் பெருக்கி விட வேண்டியதுதானே; அடுத்த ஜுஜுபி வேலை.ஆனால் நண்பருக்கு பயங்கர ஆச்சரியமா இருக்கும்; இதலாலதான் இந்தியர்கள் software-ல் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பார். அது ஒரு கதை. நம்ம கதைக்கு இப்போ வருவோம். அந்த மாதிரி மால் ஒன்றுக்குள் நுழைந்து கடை கடையாய் சுற்றிக்கிட்டு இருந்தப்போ, ஒரு 45-50 வயது அம்மா ஒருவர் - சேலையில்; காரில் இறங்கி கடைக்குள் வந்தார்; என் மூஞ்சைப் பார்த்ததும் நான் அவர்கள் உடையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டோம். எனக்கு அவர்களைப் பார்த்து ஒரு பிரமிப்பு. இங்க பார்ரா, வெள்ளைக்காரன் ஊரில் நம்ம ஊர் அம்மா...கார்ல வந்து... ஒரு மாதிரியாக மூக்கின் மேல் விரல் வைக்காமல் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அவர்கள் ஒரு ராயல் லுக் விட்டார்கள். ஆனாலும் அப்பப்போ திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். ஏதாவது சிரிச்சி வச்சா பேசலாம்னு நினச்சேன். ஆனால் அம்மணி அப்படி கெத்தாக இருந்துவிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த அமெரிக்கத்தனம்...

சிக்காகோவிலும் இதே போல்தான். சிக்காக்கோவிலிருந்து நம்ம சென்னை எலக்ட்ரிக் ரயில் மாதிரி ஒன்றில் - ஆனால் கூட்டமே கிடையாது - பக்கத்து suburb-க்குச் சென்றேன் இன்னொரு நண்பரோடு. முதல் வார்னிங்காக அவர் சொன்னது - ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருக்கும்போது எந்தக் காரணம் கொண்டும் black என்ற சொல்லை ஆங்கிலத்தில் சொல்லிவிடவேண்ட்டாம் என்றார். அடுத்தது - நம்ம ஊர் ஆளுக யாரும் இருந்தாலும் கண்டுக்க வேண்டாம்; ஏன்னா அவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க என்றார். அதே போல் எங்கள் சீட்டுக்கு சில இடம் தள்ளி நம்ம தமிழ் மூஞ்சி ஒன்று ஆங்கில நாவலைக் கையில் வைத்துக்கொண்டு, சீரியஸாக வாசித்துக் கொண்டு இருந்தது. ஓரக் கண்ணால் பார்த்தேன். அந்தக் கேசு எங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ரெகுலராக ரயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார். நான் தங்கியிருந்த இடத்தில் தமிழில் பேச ஆள் கிடைக்காமல், வாடி வதங்கி இருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. ஒன்றுமில்லையென்றாலும் ஒரு மணி நேரப் பயணத்தில் பேச்சுத் துணையாகக் கூட ஒரு தமிழனை இன்னொரு தமிழன் கண்டு கொள்வதில்லையென்பது விநோதமாயிருந்தது; இருக்கிறது.

இந்த அனுபவத்திற்கு முன் தங்கை ஒருத்தி குடும்பத்தோடு இரண்டு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலிருந்து வந்த போது, எடுத்திருந்த வீடியோ, போட்டோ எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எல்லாம் அவர்கள் கம்பெனியில் இங்கிருந்து சென்று வேலை பார்க்கும் கூட்டத்தைத் தவிர ஒரு ஆள் கூட வேறு மாநிலத்து நண்பர்களாகவோ, அமெரிக்க நண்பர்களாகவோ இல்லாது இருந்ததைப் பார்த்த போதும் மிக்க ஆச்சரியமாக இருந்தது.

இப்போ 20 நாளைக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த சின்ன மகள் அப்பப்போ தொலைபேசியில் பேசுவாளா...அவள் சொன்னது: பார்க்கிலோ, கடைகளிலோ, அவ்வளவு ஏன் கிறித்துவக் கோயில்களிலோ எதிர்த்தாற்போல் அமெரிக்கர்கள் வந்தால் ஒரு ஹலோ, அல்லது ஒரு புன்சிரிப்பு. ஆனால் நம்ம ஊர் ஆட்கள் நம்மை நேருக்கு நேர் - கண்ணோடு கண் - தற்செயலாகப் பார்த்து விட்டாலும் கூட ஒரு ஜடப்பொருளைப் பார்க்கும் reaction-ஓடு கடந்து சென்று விடுகிறார்கள்; ஏன் இப்படி என்றாள். அதுதான் அமெரிக்கத்தனம் என்றுதான் சொல்ல முடிந்தது.

அமெரிக்கக்காரர்களுக்கு ஒரு வேளை பதில் தெரியலாமேவென இங்கே இதைப் பதிவு செய்கிறேன். தருமியல்லவா...அதனால் ஒரு கேள்வி. வழக்கமாக எனக்கு யாரும் மதுரைக்காரர் ஒருவர் பதிவரெனத் தெரிந்தால் ஒரு பாசம்; அட, நெல்லைக்காரர் என்றால் கூட பிறந்த மண் பாசம் பெருக்கெடுக்கிறது. அடுத்த மாநிலத்தில் நம் மாநிலத்தவரைப் பார்க்கும்போதும் ஒரு பாச ஊற்று பொங்கிவிடுகிறது; பொங்கியிருக்கிறது. அப்படியானால் அடுத்த நாட்டில் நம் நாட்டினர் என்றாலே அந்தப் பாசம் வராதா? அதுவும் தமிழ்நாட்டுக்காரன்/ர்/ரி என்று தெரிந்தாலும் எப்படி, ஏன் கண்டுக்காமல் போகி(றீ)றார்களாம்? கண்டுக்கிட்டா அத ஒரு மாதிரி தப்பாதான் எடுத்துக்கொள்கி(றீ)றார்களாமே ஏன்?


.
.

Wednesday, October 25, 2006

184. BLOGGERS' MEET AT MADURAI - 4

பலவும் பேசினோம். ஞான வெட்டியான் தன் பெயர்க்காரணம் பற்றி விளக்கினார். தான் எழுதிவரும் விஷயங்களின் lowdown ஒன்று கொடுத்தார்.பிபுரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள் என்று அவர் சொன்னது என் மரமண்டைக்கு ஏறவில்லை. அந்த மாதிரி விஷயங்கள் பற்றி அக்கு வேறு ஆணி வேறு என்று பேசியவருக்கு 'உள்குத்து', 'வெளிக்குத்து', 'நேர்குத்து' போன்ற நம்முடைய bloggers' parlance பற்றி ராம் பாடம் எடுக்கும்படியாயிற்று. கற்றது கைமண் அளவு...! அதையொட்டி,வரவனையானின் ப்ளாக்கர்களுக்கான பங்களிப்பான 'சொ.செ.சூ.' க்காக ஒரு சிறப்பு நன்றி கூறப்பட்டது. வரவனையான் அந்தச் சொற்றொடரை patent / copyright எடுக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தார்.

From L to R:





ராம் & ஞானவெட்டியான்



பிரபு ராஜதுரை தான் மரத்தடியில் எழுதிய 'அந்தக் காலத்தில...' நினைவுகளைத் தொகுத்தளித்தார். அவர் சொல்லச் சொல்ல நம் தமிழ் பதிவர்களின் எழுத்திலும், எண்ணங்களிலும் ஏற்பட்டு வரும் பரிணாமம் (is it retrogressive..?) கண்முன் விரிந்தது. தனிமனித சாடல், உள்குத்து வைத்து எழுதுதல், குழு மனப்பான்மை இவை எல்லாம் அப்போது இந்த அளவு இல்லை என்று தெரிந்தது. எனக்கு 'மணிக்கொடி காலம்' என்று பழைய பெரிய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசும்போது சொல்வார்களே அதேபோல இந்த 'மரத்தடி'காலம் என்று ஒன்று வலைப்பதிவுலகத்தில் இருந்ததாகத் தோன்றியது.







முத்து(தமிழினி) & ராஜதுரை



அப்சல் விவகாரம் தலைதூக்கியது. பிரபு ராஜதுரையின் அலசலை அடுத்து நீண்ட விவாதம். நண்பர் சைலஸும் சேர்ந்து தீவிரமாகப் பேசினோம். சைலஸின் 'தீவிரத்தை'ப் பார்த்து அவருக்கு வரவனையான் 'ப்ரொபசர் ரமணா' என்று ஒரு பட்டப் பெயர் வைத்ததாகக் கடைசியில் சொன்னார். முடிவு என்று எடுப்பதற்காகவா நாம் விவாதிப்போம். இப்போதும் அது போலவே, முடிவுக்கு வராத நீள் விவாதமாக நடந்து முடிந்தது.







ராஜ்வனஜ்; ராம் & ஞானவெட்டியான்



அடுத்து, இடப்பங்கீடு பற்றிய விவாதமாக அமைந்தது. நான் அங்கே சொன்னதைப் பொதுவில் வைக்க விரும்புகிறேன். reservation-க்கு ஆதரவாக இருப்பவர்களாவது இனி இட ஒதுக்கீடு என்பதற்குப் பதில் "இடப்பங்கீடு" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுகிறேன். காரணம் தெரியவேண்டுவோர் அங்கே பார்க்கவும். மறுபடியும் ball was in the court of prabu rajadurai. அடித்து ஆடினார். புதிதாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு முடிந்தபின் அதன் முடிவு பற்றி தன் பதிவொன்றில் விளக்கம் தர இசைந்தார். இடப்பங்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பும், அவர்களது உள்மன எண்ணங்களும், காரணங்களும் பற்றி சிறிதே விவாதித்தோம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்ற ஏற்கெனவே தெரிந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.








லி.ஸ்.வித்யா, ஜிரா & மஹேஷ்


வாங்கி வைத்திருந்த மதுரை மண்ணுக்குரிய பாட்டில் பானமான Bovonto சுற்றில் வர, புத்திசாலித்தனத்தோடு முன்னேற்பாட்டோடு வந்திருந்த மஹேஷ் அதிரசம், முறுக்கு என்று அசத்திவிட்டார். அதிரசம் டாப்! அவ்ளோ soft!

வரவனையான் சுற்றி சுற்றி வந்து எங்களை எல்லாம் க்ளிக்கினார்; நீள் படமும் எடுத்தார் - அதாங்க வீடியோ. அவர் பதிவில் வரும் என்று நினைக்கிறேன். அவரையும், சுகுணாவையும் நான் எடுத்த படம் என்னவாயிற்றென்று தெரியாமல் போச்சு.அவர்கள் இருவரின் படம் வர என் பதிவுகள் கொடுப்பினை இல்லாமல் போச்சு.ஜிரா கூட்டம் ஆரம்பித்து 40-45 நிமிடங்களில் புறப்பட்டு விட்டார். விரைவில் கிளம்புவேன் என்று சொன்ன வித்யா கடைசிவரை இருந்ததே கூட்டம் சென்ற போக்கையும், சிறப்பையும் - it was so binding - உங்களுக்குச் சொல்லாதா என்ன?

ஒரு வழியாக 3 மணிக்குச் சரியாக ஆரம்பித்து 6 மணிக்கு கூட்டத்தை முடித்து, இருந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். அங்கிருந்து, ஞானவெட்டியான், வித்யா, ராஜதுரை, ராம், மஹேஷ் விடைபெற்றுச் செல்ல மற்றவர்கள் இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் முத்துவின் 'மேலிடத்திலிருந்து' அவர் அன்றைய மாலை ரயிலில் செல்லவேண்டியதிருப்பது பற்றிய நினைவூட்டலும், இன்ன பிற கட்டளைகளும் வந்ததால் எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டோம். முத்துவை அவர் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, நான்,ராஜ்வனஜ்,வரவனையான், அவரது கவிஞ நண்பர் சுகுணாவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் ஒரு 'மண்டகப்படி' (இது ஒரு மதுரை வார்த்தை. விளக்கம் கேட்டு பின்னூட்டமிடுபவர்களுக்குப் பதில் விளக்கம் கொடுக்கப்படும்). நிஜ டீ குடித்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் பதிவுகள், பதிவர்கள், பதிவரசியல் எல்லாமுமாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எட்டரை மணிக்கு விடைபெற்றொம்.

நான் கூட்டத்தில் சொல்ல நினைத்து வைத்திருந்ததைச் சொல்லாமலே விட்டு விட்டேன். அது என்னவென்று பொதுவில் வைத்து விடுகிறேனே. உண்மையிலேயே பதிவர்கள் நீங்கள் பலரும் இளைஞர்கள்; நல்ல சிந்தனா சக்தியும், தங்களூக்கென்று ஒரு கருத்தும், அந்தக் கருத்தைத் தாங்க நிரம்ப விஷய ஞானமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதில் வயதில் மட்டும் நம் பதிவுலகத்திலேயே மூத்த எனக்கு நிரம்ப திருப்தி. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நிம்மதிப் பெருமூச்சு. அதனாலேயே இந்தப் பதிவருலகம் ஒரு think tank ஆக உருவெடுக்க வேண்டும். நம் தமிழ் நாட்டு அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு வழிகாட்டியாக இப்பதிவுலகம் இருக்க வேண்டுமென எனக்கொரு ஆசை. ஆனால், அப்சல் விஷயம் அலசப்படும்போது என் ஆசை நிராசையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் என்று ஒரு கருத்து இருப்பதால் நாம் எல்லோரும் எல்லா விஷயத்திலுமே பலதரப்பட்டக் கருத்துக்களோடுதான் இருப்போம்; ஒருமித்த கருத்து என்பது வருவதறிது என்ற நிஜம் புரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி பதிவுலகம் ஒரு think tank ஆக முடியும் என்ற வினா என் மனதில் எழுந்தது. அதனால் அக்கூட்டத்தில் நான் பேச நினைத்ததை பேசாமல் விடுத்தேன்.

உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது?


ஏனைய பதிவர் கூட்ட பதிவுகள்:

*வரவனையானின் பதிவு & வீடியோ: மதுரை...மதுரை.....மதுரோய்ய்ய்ய்ய்

*முத்து(தமிழினி): மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

*ராம் : மதுரை வலைப்பதிவர் சந்திப்பு



.
.

Monday, October 23, 2006

183. BLOGGERS' MEET AT MADURAI - 3

வந்திருந்தோர்:

லிவிங் ஸ்மைல் வித்யா
பிரபு ராஜதுரை
ராம்

முத்து(தமிழினி)
மஹேஷ்

ஞானவெட்டியான்
வரவனையான்
சுகுணா திவாகர்

ராஜ்வனஜ்
ஜீரா

Dr.சைலஸ்

யார் யாரென நீங்களே கொஞ்சம் மனக்கணக்கு போட்டு வையுங்களேன்!



அமெரிக்கன் கல்லூரிக்கு நான் வந்து சேர்வதற்குள் முதல் ஆளாய் முத்து(தமிழினி) வந்து சேர்ந்திருந்தார். வெளியில் மரத்தடி பெஞ்சுகளில் கூட முடிவு செய்திருந்தும், மழை கொஞ்சம் விளையாட்டு காட்டியது - வந்தாலும் வருவேன்; வராமல் போனாலும் போயிருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று அறைச்சாவி ஒன்றும் தயாராக வைத்திருந்தோம். துணிந்து வெளியிலேயே அமரலாம் என்று முடிவு கட்டி முடிப்பதற்குள் ஒவ்வொரு பதிவராக வந்து சேர்ந்தார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னையோ, முத்துவையோ முன்பின் பார்த்திராத பதிவர்களே அதிகம் என்பதால் நாங்கள் வாயிலுக்கு அடுத்தே நின்றாலும், வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே வாயில்காப்போரைத்தாண்டி உள்ளே வந்து, கைத்தொலிபேசியில் அழைப்பார்கள். நான் தொலைபேசியை எடுத்துப் பேசினால் அவர்கள் அனேகமாக எதிர்த்தாற்போல் நிற்பார்கள்.

எங்களுக்கு அடுத்தபடியாக ஞானவெட்டியான் தன் வாடிக்கையான ஐய்யப்பனின் கால் டாக்சியில் வந்து இறங்கினார். முத்துவுக்கு அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடத்திலிருந்து அந்த இடத்தை கலகலப்பாக்கிக் கொண்டு இருந்தார் ஞானவெட்டியான்.

கூட்டம் மாலை 3 மணியென்று குறிப்பிட்டிருந்திருந்தேன்; ஆனால் காலையில் 11 மணிக்கே ஒரு போன் வீட்டுக்கு. பேசியது யாரென்றேன். "பாகு" என்று 'ஒரு சொல்'. அவ்வளவு எளிதில் மொடாக்கு எனக்குப் புரியுமா என்ன? நோட்ஸ் கேட்டேன்; பாகு அப்டிங்கிறதுக்கு ஜீரா அப்படின்னும் சொல்லலாம் என்றது மறுமுனை. பிடிபட்டது. ஆஹா! சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஆள் புதுசா சேருகிறாரென்று நினைத்து, எப்போ வந்தீங்க; மாலையில வந்துருவீங்கல்ல என்று கேட்டதும் மறுமுனைக்குத் தடுமாற்றம். பிறகுதான் தான் தற்செயலாக மதுரை வந்திருப்பதாகவும், பதிவர் கூட்டம் பற்றித் தெரியாது என்றும் சொல்ல, நான் மாலை வந்து விடுங்கள் என்றேன். தலைகாட்டுவேன் என்றார். அதேபோல் 3 மணிக்கு முன்பே ஞானவெட்டியானுக்கு அடுத்து வந்து இறங்கினார் ஜி.ராகவன்.


அடுத்து ஒரு போன். ராஜா என்று ஒரு குரல்; புரியவில்லை. பிறகு ராஜ்வனஜ் என்றதும்தான் புரிந்தது. எனக்கு நேரே நின்று கொண்டுதான் பேசிக்கொண்டிருந்தார். தில்லியில் வேலை செய்யும் இவர், ஓராண்டு கழித்து வீட்டுக்கு இருவார விடுமுறையில் வரும் இவர் அதில் ஒரு நாளை பதிவர் கூட்டத்திற்காக ஒதுக்கி கோவையிலிருந்து வந்தது எனக்கு மிகவும் பிரமிப்பாயிருந்தது. முன்பதிவில் சொன்ன the mystery of that chemistry தான் நினைவுக்கு வருகிறது. அவரை அடுத்து ஒவ்வொருவராக வர, கல்பெஞ்சுகளுக்குப் போய் சேர்ந்தோம்.அங்கே நண்பரும், உடன்வேலை பார்த்தவரும் இப்போது ஒரு விடுதி காப்பாளராகவும் இருக்கும் முனைவர் சைலஸ் எங்களோடு சேர்ந்து கொண்டார். அதைப் போலவே வரவனையானோடு அவரது நண்பர் ;மிதக்கும் வெளி' கவிஞர் சுகுணாவும் வந்திருந்தார்.

Sunday, October 22, 2006

182. BLOGGERS' MEET AT MADURAI - 2

எப்படிங்க இப்படி..? எப்படி நமக்குள் இப்படி ஒரு உறவு? புரியவேயில்லை...The chemistry of our relationship is a mystery.

பின் எப்படி இந்த கீழ்க்கண்ட நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது...நீங்களே சொல்லுங்கள்.

1. 3 மணிக்கு சந்திப்பதாகக் கூறியிருந்தோம். சரியாக 3 மணிக்கு நாங்கள் நால்வர் மட்டுமே சேர்ந்திருந்தோம். அப்போது ஒரு தொலை பேசி அழைப்பு எனக்கு. அடுத்த முனையிலிருந்து - சென்னையிலிருந்து சிவஞானம்ஜி. எங்கள் கூட்டம் இனிது நடந்தேற வாழ்த்துக்கள் கூறினார். the mysterious chemistry?!

2. 8 பேர் வந்துவிட கல்பெஞ்சுகளில் போய் உட்காருகிறோம்... அடுத்த அழைப்பு முத்து(தமிழினி)யின் கைத்தொலைபேசிக்கு. அழைத்தவர் ஓகை. முத்துவிடம் மட்டும் பேசாது, முத்துவின் தொலைபேசி வலம் வர, வந்துள்ள ஓவ்வொருவரிடமும் சில நிமிடங்கள் பேசி வாழ்த்து கூறி விடை பெற்றார் ஓகை
- the mysterious chemistry?!

3. நாங்கள் மொத்தம் 10 பதிவர்கள் சேர்ந்து கூட்டம் களை கட்டுகிறது... இன்னொரு overseas call..from Australia..பொட்டீக்கடையிடமிருந்து வரவனையானுக்கு . நானும் அவரிடம் பேசுகிறேன். வரலாறு படம் பார்த்துக்கொண்டே இந்த அழைப்பைக் கொடுத்து எங்கள் கூட்டத்திற்கு வாழ்த்து கூறுகிறார். - the mysterious chemistry works again ?!

4. இதுவரை எனக்கு மட்டுமே வெகு சில பின்னூட்டங்கள் இட்டுள்ள non-பதிவர் நாராயணசாமி என்னும் சின்னக் கடப்பரை சென்னையிலிருந்து என்னை அழைக்கிறார் - மதுரையில் இருந்திருந்தால் எப்படி தானும் கலந்து கொண்டிருக்க முடியும் என்று சொல்லி வாழ்த்து சொல்லுகிறார் - the mysterious chemistry works again and agian ?!



ஒரு பின்குறிப்பு:
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!

Saturday, October 21, 2006

181. MADURAI BLOGGERS' MEET - INVITATION

அன்புடையீர்,

தயவு செய்து இந்த belated அழைப்பிற்காக மன்னித்து தவறாது

நாளை 22.10.06 ஞாயிற்றுக் கிழமையன்று

மாலை 3 மணிக்கு

மதுரை அமெரிக்கன் கல்லூரி - canteen முன்னாலுள்ள கல்பெஞ்சுகளுக்கு


வந்துவிடுங்கள்.

மேலும் என்னையோ, முத்து(தமிழினி)யையோ தொலைபேசியில் அழைக்க:

என் எண்: 94438 31320
முத்து எண்: 98459 83065

Monday, October 16, 2006

180. (கொஞ்சம்) நேரடியாக ஒரு ELECTION REPORT***

நேற்று எங்கள் ஊர் மதுரையில் மாநகராட்சி ஓட்டுப் பதிவு. துணைவியாருக்கு PO1 பொறுப்பு ஒரு பூத்தில். கொஞ்சம் பதட்டத்தோடுதான் எல்லோருமே இருந்தார்கள் - சென்னை பற்றிய சேதி பரவியிருந்ததால். மதியம் உணவுக்கு ஏற்பாடு செய்யப் போகும்போதே பக்கத்து பூத்தில்தால் பிரச்சனை; எங்கள் பூத்தில் பிரச்சனையேதும் இதுவரை இல்லை என்றார்கள். மாலை கூப்பிடச் சென்றால் பூத் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு தேர்தல் தளவாடங்களோடு தளவாடங்களாக மக்களும் பூத்துக்குள் பத்திரமாக வைக்கப்பட்ட்டிருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் 'ரிலீசா'னார்கள். அதன்பின் அருகாமையிலிலிருந்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு இரண்டரை மணி நேரம், செய்த வேலைக்குரிய பணப் பட்டுவாடாவிற்காகத் தேவுடு காக்க வேண்டியதாப் போச்சு. அவர்களோடு நானும் அந்த அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்த ஏரியாவிலுள்ள 20 பூத்துகளில் தேர்தல் வேலை செய்தவர்கள் யாவரும் குழுமினர்.

பலரிடமும் பகல் நேரத்தில் நடந்தவைகளின் தாக்கம் என்னவோ குறையாமலிருந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் தப்பிப் பிழைத்தது பற்றியும், தங்கள் பூத்துகளில் நடந்தவை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் துணைவியார் இருந்த பூத்தில் - பெண்களுக்கான பூத் என்பதலா என்னவோ - கலாட்டா கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கும் போலும். நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து 'இப்போ ஒரு 25 பேர் வருவாங்க; எந்த கேள்வியுமில்லாமல் ஓட்டுப் போட விடுங்க 'என்ற ஒரு தெளிவான உத்தரவு தேர்தல் ஆபிசருக்கு. அந்தக் கட்டளை நல்லபடியாக நிறைவேற்றணுமே; அதுக்காக மட்டும் அங்கிருந்த நாற்காலி, மேசை எல்லாவற்றையும் கொஞ்சம் போல் உதைத்து, தள்ளி விட்டு, அடையாள மை வைத்திருந்தவரிடமிருந்து மையைக் கீழே தட்டிவிட்டு அவருக்குக் கொஞ்சம் போல அந்த மையால் அபிஷேகம் பண்ணிவிட்டுப் போனார்களாம். இதில் PO4 PO5 இருவரும் பெண்கள். முதல்வர் இவ்வளவு கலாட்டாவிலும் ஓட்டளிக்கக் கொடுக்கப்பட்டிருந்த முத்திரையைப் பாதுகாப்பாக முந்தானைக்குள் எடுத்து வைத்துக் கொள்ள, அடுத்தவரோ இந்தக் களேபர நேரத்திலும் வாக்குப் பெட்டியை அணைத்துப் பாதுகாத்தார்களாம். என் துணைவியாரிடம் 'உனக்கு என்னவாயிற்று' என்று கேட்டேன். 'என்னமோ, என்னைப் பார்த்து என்ன பரிதாபமோ, என் மேசையை தட்டி விடவில்லை; நானும் உட்கார்ந்த இடத்திலே ஆணி அடித்ததுமாதிரி இருந்திட்டேன்; பத்து நிமிஷம்னாலும் வேர்த்து விறு விறுத்துப் போச்சு' என்றார்கள். அதைச் சொல்லும்போதுவரையும் கூட அந்த ஆசுவாசம் நீடித்தது; தணிய இன்னொரு மணி நேரம் ஆச்சு.

ஏறக்குறைய அங்கு குழுமியிருந்தவர்கள் பலரும் ஆசிரியர்களே; அதுவும் இரண்டே இரண்டு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஆகவே, இப்படி காத்திருந்த போதும் எல்லோரும் ஒருவரை ஒருவர் 'நலம்' விசாரிக்கவும், பகலில் நடந்தது பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பூத்தில் PO மட்டும் - அவர் ஒரு தலைமைஆசிரியர் - ஆண்; மற்றவர்கள் அனைவரும் பெண்கள். அவர் கதைதான் இருப்பதில் பயங்கரமா இருந்தது.ஒரு பெரிய கூட்டம் உள்ளே நுழைய, எல்லா பெண் தேர்தல் ஊழியர்களும் அவருக்குப் பின்னால் பதுங்க, வந்த கூட்டத்தில் ஒருவன் அவர் கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள 50 ஓட்டுகள் போல அந்தக் கூட்டம் போட்டுவிட்டுச் சென்றதாம். இன்னொருவர் பூத்தில் கத்தியெல்லாம் ஒன்றுமில்லையாம்...! ஆனால் உள்ளே நுழைந்து அதே வேகத்தில் பூத்தில் இருந்த இரண்டு குழல் விளக்குகளை உடைக்க, அதன் சத்தமும்,தெறித்த கண்ணாடி தலையில் விழவும்...அதற்கு மேல் கூட்டத்தின் அராஜகம்தானாம்.

இந்த பூத்துகள் இருந்த தொகுதியின் தி.மு.க. ஒரு பெண் உறுப்பினர்; இம்முறை மதுரைக்குப் பெண் மேயர் என்பதால், இந்த வேட்பாளர் வென்றால் அவர்தான் எங்கள் "வணக்கத்துக்குரிய மேயராக" ஆகும் வாய்ப்புள்ளதாலேயே இப்பகுதியில் இந்த அளவு வன்முறை என்றார்கள். அதோடு இந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வின் போட்டி வேட்பாளராக இன்னொருவர் - கட்சி வேட்பாளரை விடவும் கட்சித் தொண்டர்களிடம் நல்ல பெயர் பெற்றவர் - போட்டியிட்டதும் இன்னொரு காரணமாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் 'கதை' சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு post-election commotion நடந்தது. எல்லாம் அந்தப் பெண் வேட்பாளரும் அவரது தொண்டர்கள் செய்யும் கலாட்டா என்று சேதி வந்தது.

இந்த அனுபவ பகிர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு பூத்தில் இருந்தவர்களும் சொன்ன ஒரு சேதி ஒரே மாதிரியாகவே இருந்தது: எல்லா பூத்துகளிலும் இந்தக் கலாட்டாக்கள் நடந்தேறும்போது, போலீஸ்காரர்கள் "பத்திரமாக" வெளியில் சென்று நின்று கொண்டார்களாம்.

சென்றைய ஆட்சியில் அரசு ஊழியர்களை - ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சுவர் ஏறிக்குதித்து உயிருக்குப் பயந்து ஓடிய அரசுப் பணியாளர்களைக் கூட - இதே போலீஸ் ஓடஓட விரட்டியக் காட்சிகளைக் கண்டது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. நம் காவல் துறையினரை வாட்டுவது என்ன? - a sick psychology and lousy philosophy?

முதல் நாள் பயமும்,பதட்டமும் முழுசாக விலகி, அடுத்த நாள் என் துணைவியார் என்னிடம் சொன்னது: 'நல்ல adventureதான், இல்ல? அந்தக் காலத்திலன்னு... பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லலாம்'. அதோடு இன்னும் அடுத்த தேர்தல் வருவதற்குள் ஓய்வு பெற்றுவிடலாமென - இன்னுமொரு ஆண்டுதானே - சொன்னார்கள். ஆனால் எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை; நடக்கிற நடப்பில அடுத்த தேர்தல் எப்போ வேண்ணாலும் வரலாமோ என்னவோ?!


*
*** இப்பதிவு 30.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (3)

*

Monday, October 09, 2006

179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***

நானும் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் நட்பு நிறைந்த பதிவர்கள் சிலரும் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் படித்ததும் என் பொறுமை எல்லை மீறியது. நாமும் ஜோதியில் கலந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் களத்தில் இறங்கி விட்டேன்.

எல்லாம் அப்சல் விஷயம்தான். பதிவர்கள் பலரின் மனித நேயம் இப்போதுதான் இந்த அளவு பீறிட்டு வருவதைப் பார்க்கிறேன். ஒருவனுக்கு மரண தண்டனை என்றதும் எவ்வளவு பச்சாதாபத்துடன் பரிந்து பரிந்து வரிந்து கட்டிக் கொண்டு பதிவர்கள் வரிசை கட்டி வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது ....

சரி, இவ்வள்வு பச்சாதாபத்தோடு வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இதுவரை இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதற்கு முன்பு வங்காளத்தில் கற்பழிப்புக் குற்றத்திற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்ததும் அரற்றிய கூட்டம்தானே இது. அப்போது கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடிய பாட்டை இப்போது இன்னும் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் அரற்றுகிறார்கள். நடுவில் ஏன் பாட்டை நிப்பாட்டியிருந்தார்களோ தெரியவில்லை. நிப்பாட்டாது தொடர்ந்து அந்தப் பாட்டை நடுவிலும் பாடிக்கொண்டிய்ருந்தாலாவது அவர்கள் பாட்டில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். அதையெல்லாம விட்டு விட்டு அந்தரத்தில் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது மிக முக்கியமான ஒரு மனித ஜீவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது நம் முன் உள்ள விஷயம் என்ன? நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன்? இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்?

இப்போதைக்கு நம் கண்முன்னால் நிற்பது அப்சலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையுமே. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics. ஒவ்வொருவரின் ஜீன்களின் பட்டியல் போட்டு aggression-க்கு உரிய gene இவனுக்கு இருப்பதால்தான் இப்படி செய்தான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்; அவன் ஜீன் அப்படி; ஆகவே அவனைக்கு எந்த தண்டனையும் விதிக்கக்கூடாது என்றுகூட விவாதிக்கலாம். சமூகமே அவனை இக்குற்றம் செய்யத் தூண்டியது. நாம்தான் அவன் குற்றங்களூக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லலாம். சீரியல் கொலைகாரனைக்கூட அவன் ஜீன்கள் செய்த வேலையென்று அவனை விட்டு விடலாமா? ஜீன்கள் வேண்டாமென்றால், இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பின்னால் நடக்கக்கூடியவைகள் என்று ஒரு பட்டியலும் பல பதிவர்கள் கொடுத்துள்ளார்கள். அவனைக் கொன்றால் அவன் சாவுக்குப் பிறகு அவன் ஒரு தியாகியாகக் கருதப்பட்டு மேலும் பலரும் அவன் வழியில் செல்லக்கூடும் என்றொரு வாதம். உண்மைதான். இது வெட்ட வெட்ட வளரும் ஹைட்ரா தான். பெருமளவில் இதை எதிர் கொள்ள நம் அரசு இதுவரை முயலவில்லை. அடுத்து, ஒரு குற்றவாளியைத் திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டுமாம்.அடித்துப் பிடித்து விளையாடும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். திட்டமிட்டு இது போன்ற வன்செயல்களில் இறங்குவோருக்கு இது ஏற்றதல்ல. அவர்களைக் கொன்றாலும் தீமைதான்; உயிரோடு சிறைக்குள் வைத்திருந்தாலும் தீமைதான். இதில் முதலாவதைச் செய்தால் கொஞ்சம் கூட நன்மை; வசதி. இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் இன்னும் பலர் அந்த ஒருவனுக்காக உயிரை இழக்கவேண்டி வரும்.

நீதிபதிகளின் தீர்ப்பில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களை வைத்தும் ஒரு விவாதம். பழிவாங்குதலுக்காக தண்டனை இருக்கக்கூடாது; திருத்தும் நோக்கோடு தண்டனை தரப்பட வேண்டுமாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா? இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள்? அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா?

விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில் ஒப்புதல் வாக்குமூலம் தருவதும், பின் அதை மறுதலிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. அவன் இக்குற்றத்தில் தொடர்புள்ளவன் என்பதற்கு நான் வாசித்த வரை சான்றுகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று கோர்ட்டுகள் அவனைக் குற்றவாளியாகவே முடிவெடுத்துள்ளன.

அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். அந்தப் பதிவாளர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன். நிச்சயம் உங்களில் பலரை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனாலும் ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.

கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதுவும் தினமலரில் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது ஆச்சரியமே. சரி, நம் பதிவாளர்களில் நாம் உண்மையான அறிவு ஜீவி என்று நினைக்கும் ஒருவர் தடாலென்று பொதுப்புத்திக்காரராக மாறிவிடுகிறாரல்லவா, அது போல இருக்கும். இதோ அந்தப் பின்னூட்டம்; அப்சலை தூக்கிலிட வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய ஒரு செய்தி இது:

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html


இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------


கீழே இந்த விஷயம் தொடர்பாக நான் வாசித்த சில பதிவுகளும், அவைகளில் நானிட்ட அல்லது பின்னூட்டமிட நினைத்த பின்னூட்டங்களும்:

kumaran ennam
http://kathalregai.blogspot.com/2006/10/blog-post_07.html

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக//

இதில் என்ன 'வெற்றி/ தோல்வி'. செய்த செயலுக்குக் கொடுக்கப்படும் தண்டனை; அவ்வளவே.
---------------

muthu thamizini
http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

திருத்தமாக எழுதவில்லைபோல் தெரிகிறதே!

---------------------
selvan
http://holyox.blogspot.com/2006/10/184.html

முழுமையாக நான் ஆமோதித்த பதிவு

------------------------
சமுத்ரா -
http://vettri.blogspot.com/2006/10/blog-post_05.html

ஆர்பாட்டங்களில் மிஞ்சி போனால் ஐநூறு கஷ்மீரிகள் கலந்து
கொண்டு 'போராடி' இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் தான்.//
=====================

meena
http://www.tamiloviam.com/unicode/09280601.asp
தூக்கில் போடுங்கள் அப்சலை

=============
நல்லடியார்
http://athusari.blogspot.com/2006/10/blog-post_07.html

முதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்.
அவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்
==========
ரோசா வசந்த்
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//

உங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:

மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
=====================

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.
so sad. never expected such a post from you.
i strongly suggest that you remove this post.


=====================

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_06.html

ஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம்.
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

//தேவை//
======================

http://ravisrinivas.blogspot.com/2006/10/blog-post.html
மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.

i fully endorse this view.
========================
prapuraajadurai
http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_07.html
தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன்
இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!//

உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

if my views on this is to be known, no other case could be more appropriate than this to have the culprit hanged.

=========================
சிறில்
http://theyn.blogspot.com/2006/10/blog-post_116017075313200990.html
===================

http://abumuhai.blogspot.com/

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!
===========================


http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html
திருத்தமாக எழுதவில்லை
=============================

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! //

ஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....?

=================

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post.html
அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!
=================

http://selvanayaki.blogspot.com/2006/10/blog-post_09.html


================
http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_09.html

அந்த தளம் இப்போது தேவைதானா என்பது என் கேள்வி.
================



***இப்பதிவு 16.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (2)


*

Thursday, October 05, 2006

178. இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் !

ஆபிரஹாமிய மதங்களின்படி இந்த அண்டம் அனைத்தும் ஆறு நாட்களில் கடவுளால் படைக்கப்பட்டதாகவும், ஆறாவது நாளில் ஆதாமும் அவனின் விலா எலும்பிலிருந்து (இன்னொரு ஆணாதிக்கக் கருத்து..?) ஏவாளும் படைக்கப்பட்டாள் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகவுள்ளது. இதை "இன்னுமா நம்புகிறார்கள்?" என்று மிக ஆச்சரியத்துடன் பதிவர் எழில் ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவும் இட்டுள்ளார். அவரது ஆச்சரியத்தைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். :) இதற்குப் பதில் சொல்லும் முகமாக அபு முஹை ஒரு பதில் பதிவிட்டுள்ளார். ஆகவே இந்தப் பதிவை "இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் ! " என்ற தலைப்பில் அங்கு கூறப்பட்டவைகளை வைத்து எழுத நினைக்கிறேன்.

லமார்க் சொன்ன use and disuse, inheritance of acquired characters என்ற தியரிகள் தோற்று விட்டன; தவறென நிரூபணமாகி நாளாகிவிட்டது. இன்னும் பல பாட நூல் ஆசிரியர்கள் மட்டும் 'பழைய நினைப்பில்' பரிணாமம் பற்றிய நூல்களில் இவருக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்து வருகிறார்கள்; அவ்வளவே.

அதே போல, டார்வின் சொன்ன பல hypotheses குறையுள்ளவை என்றும் நிரூபித்தாகி விட்டாயிற்று. உதாரணமாக, அவர் வெறுமே factors என்று மொட்டையாகச் சொன்ன விஷயம் பின்னால் ஜீன்கள் என ஆயிற்று; அவர் உயிரினங்கள் மாறக்கூடியவை என்று சொல்லிச் சென்றார்; பின்னால் mutation, அதன் விளைவுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் அவர் காலத்தில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத பல விஷயங்களையும் சேர்த்து, புதிய பரிணாமக் கொள்கையை பலரின் முயற்சிகளால் உருவாக்கி அதனை இப்போது Modern synthesis of Evolution' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

படைக்கப்பட்டதாகவும், எப்போதும் அதே படைக்கப்பட்ட நிலையில் இருந்துவருவதாகக் கருதப்பட்டு வந்த உயிரினங்கள் அவ்வாறின்றி மாறக்கூடியவை என்ற டார்வினின் முதல் கருத்தே இன்றுவரை பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்து வருகிறது. அதைத் தவிர மற்ற அவரது கருத்துக்கள் பின்னால் மறு உருவெடுத்தன. எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் survivial of the fittest என்பதுகூட பின்னாளில் மறுக்கப்பட்டு, மாற்றப் பட்டது.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நாம் கூறுவதும் எளிய புரிதலுக்காகச் சொல்லப்பட்ட ஒரு விஷயம். ஏதோ, நேற்று குரங்காக மரங்களில் ஊசலாடிக்கொண்டிருந்தது இன்று மாறி மனிதனாக நடமாடிக்கொண்டிருக்கிறான் என்றோ, குரங்கு போட்ட குட்டி மனிதக் குழந்தையாக இருந்தது போன்றோ மனப் பிம்பங்களை யாரேனும் ஏற்படுத்திக் கொண்டால் அது அவர்களின் தவறேயன்றி, பரிணாமக் கொள்கையின் தவறோ, குறைபாடோ இல்லை.

evolution என்ற சொல்லுக்கே blossoming என்பது பொருள். மாலையில் பார்க்கும் மொட்டு காலையில் பூவாக மலர்கிறது. மெல்ல மெல்ல இதழ் அவிழும் அந்த 'பூத்தலை'ப் போலவே உயிரினப் பரிமாணமும் மிக மிக மெல்ல - for millions of years - நடக்கும் ஒரு நிகழ்வு. இதில் ஆராய்ச்சிக் கூடத்தில் நடத்திக்காட்டக் கூடிய விஞ்ஞான சோதனைகளைப் போல என் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டு என்றால் அது கேட்பவர்களின் மன நிலையைத்தான் காண்பிக்கும்.

அதோடு, இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்ற நிலைதான் இருக்கிறதே என்பது பல விஞ்ஞான உண்மைகளைப் பொருத்தவரை முழு உண்மையே. பரிணாமம் மட்டுமல்ல பல விஞ்ஞான உண்மைகள் 'சாத்தியக் கூறுகளாகத்தான்' உள்ளன. அவைகள் மேலும் மேலும் புதிய பரிமாணங்களோடு வளரவும் செய்யலாம்; அல்லது தவறென நிரூபிக்கப்படவும் செய்யப்படலாம். அதுதான் விஞ்ஞானம். விஞ்ஞானம் எந்த ஒரு கண்டுபிடிப்பையுமே அறுதியாகச் சொல்லாது, வளர்ச்சி வேண்டி ஒரு கேள்விக்குறியுடனே முடிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் அந்த கேள்விக் குறிகளுக்குப் பதில் கண்டு அடுத்த கேள்விக்குறியை நோக்கி நம் அறிவை முன்னெடுத்துச் செல்கின்றன. அண்டத்தின் பிறப்பு பற்றிய புதுப் புது கருத்துக்களும் வளர்ச்சிகளும் இதற்கு இன்னொரு உதாரணம். ஆனால், மத நம்பிக்கைகளோ இதற்கு நேர் எதிர்மறை. முன்னதில் கேள்விக் குறி முக்கியமென்றால் இங்கே 'முற்றுப் புள்ளிகள்'தான் உண்டு. மாற்றங்கள் முன்னதில் முக்கியமென்றால், மற்றதில் மாற்றமே இல்லை என்பதில் தான் அதன் சிறப்பு. கேள்விகள் கேட்டுக்கொண்டே இரு என்கிறது விஞ்ஞானம்; கேள்விகள் கேட்டாலே blashphemy என்கிறது வேதங்கள். இன்றைய உண்மைகள் நாளைக்கு மாறலாம்; இன்னும் சிறப்பான, சரியான பதில்கள் மனிதனுக்குக் கிடைக்கும் என்கிறது விஞ்ஞானம்; இல்லையில்லை.. "அந்த உண்மைகள்" எக்காலத்துக்கும் உரியது; எப்போதைக்கும் சரியானது என்கின்றன வேதங்கள். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு சாரார் கண்ணை இறுக மூடிக் கொள்வதுதான்.

fossils, connecting links, carbon dating, extinction of living things, mutations causing changes in species, genes and their role; mutations and their role in evolution - இவைகளெல்லாமே நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான உண்மைகள். இவைகளை வைத்தே பரிணாமக் கொள்கை விளக்கங்கள் concepts-களாக தரப் படுகின்றன. இவைகளைப் பற்றிய தேடுதல், புரிதல் ஏதுமின்றி தங்கள் மதம் சொல்வதால் அதை மட்டுமே கண்டுகொள்ளும் நிலைப்பாடு இருப்பின், அவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதே உண்மை. இவைகள் வெறும் concepts தானே என்றும், இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பின்னும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதானே சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி:
எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் -
எந்தக் குரங்கிலிருந்து எந்த மனிதக் குழந்தை பிறக்கக் கண்டீர்கள்; 'உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது?'; அதைப் பார்த்தவர் யார்; குரங்கிலிருந்து மனிதன் வந்தானெனில் எதிலிருந்து குரங்கு வந்தது? பரிணாமக் கொள்கைகள் வெறும் தியரிதான் நிரூபிக்கப்பட்ட உண்மையில்லை; மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது?; - என்பது போன்ற கேள்விகள் வருகின்றன. தவறில்லை. ஆனால், இதற்கு மாற்றாக கேள்வியெழுப்புவர்கள் தரும் விடையென்ன?

மனிதன் களிமண்ணிலிருந்து (பைபிள்) / ரத்தத்திலிருந்து (குரான்?) கடவுளால் உண்டாக்கப்பட்டான் என்பதுதானே. இதற்கு என்ன ஆதாரம். உங்கள் வேத நூல்கள்தானே. விசுவாசம் / ஈமான் கொண்டவர்களுக்கு அந்த வேத / தேவ வார்த்தைகள் உண்மை. மற்றவர்களுக்கு...? அவர்களுக்கு நீங்கள் தரும் ஆதாரம் என்ன? வெறுமே அது ஆவியால் தரப்பட்டது என்பதோ, இறக்கப்பட்டதாக ஒருவர் சொன்னது என்பதாலோ உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள். மத மறுப்பாளனாகிய எனக்கு விஞ்ஞானம் தரும் உண்மைகளும், சான்றுகளும் ஆதாரங்கள் என்றால், உங்களிடம் (என்னையும் நம்ப வைக்க) என்ன ஆதாரங்கள்? பிறப்பால், வளர்ப்பால் ஊட்டிவிடப்பட்ட விஷயங்களை முழுமையாக நீங்கள் நம்பலாம். உங்கள் வேத புத்தகங்களின் வார்த்தைகள் உங்களுக்குக் கடவுளின் வார்த்தைகளாகவே இருக்கலாம்; இருக்கட்டும். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாத போது நீங்கள் தரும் மேற்கோள்கள் எங்களுக்குப் பொருளற்றவையே. மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டான் என்று சொன்னால் நம்பிக்கையாளர்கள் அப்படியே ஒப்புகொள்கிறீர்கள்; ஆனால், நீங்கள் பரிணாமத்திற்குரிய சான்றுகளைக் கண்முன்காண்பி என்று சொல்வது போல நானும் மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டதற்கு என்ன சான்று என்று கேட்கலாமல்லவா? கேட்டால் உங்கள் பதிலென்ன? "வார்த்தைகள்" சான்றுகளாகாது.

இதையே கிறித்துவத்தின் மேல் உள்ள கேள்விகளாக எனது முந்திய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். படைத்தலைப் பொருத்தவரை கிறித்துவ, இஸ்லாமிய நம்பிக்கைகள் ஏறத்தாழ ஒன்றாயிருப்பதால் எனது கேள்விகளும் இரண்டு மதங்களுக்கும் பொதுவானதாக இருக்குமென்பதால் அப் பதிவில் படைத்தலைப் பொருத்தவரை நான் எழுப்பியிருந்த ஐந்தாவது கேள்வியை மட்டும் மீண்டும் இங்கே தந்துள்ளேன். கொள்க:

5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஏதோ ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு ஒரு kid stuff போலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180


*

* * இப்பதிவு 09 அக். 2006 பூங்காவில் இடம் பெற்றது. (1)