Wednesday, October 26, 2022

1190. I SALUTE BRAHMINS ……



*

I SALUTE BRAHMINS ……

“இந்துக்களின் அறிவாளி வர்க்கமாக பார்ப்பனர்களே இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்பன சாதி. … மற்ற சாதியினர் மத்தியில் பெரும் மதிப்புக்குரிய வர்க்கமாகவும் இருக்கிறது. மற்ற சாதியினரைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் இது போன்ற ஓர் அறிவாளி வர்க்கம், சாதி சீர்திருத்தத்திற்கு எதிரியாக இருக்கும் போது, சாதி அமைப்பைத் தகர்த்தெறிவதற்கான இயக்கத்தில் வெற்றி வாய்ப்புகள் எட்டாக்கனி என்றே எனக்குத் தோன்றுகிறது.”
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்,
சாதியை அழித்தொழிக்கும் வழி)
வேற்றுமைகளை அங்கீகரிக்காமல், ஒற்றுமையைக் கடுகளவும் விரும்பாத தனித்த இனமாக தன்னை அது உச்சாணிக் கொம்பில் வைத்துக் கொள்கிறது. அப்படியான அடைப்பட்ட சமூகமாக (CLOSED COMMUNITY) பார்ப்பனர்கள் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்வதுதான் வியப்பளிக்கிறது.
----------------
பார்ப்பனியம் என்பது ஒரு வகையான தீவிர சக மனித வெறுப்பு மனநிலை. அந்த மனப்பிறழ்வு இங்கே ஓர் ஆதிக்க சித்தாந்தமாக இயங்கி நாட்டையே வதைக்கிறது.
----------------------
பிறப்பின் அடிப்படையில் தகுதிப்படுத்தும் சாதி எனும் கொடூர வழக்கத்தை உருவாக்கியது பார்ப்பனர்களே! அவ்வழக்கம் அழிந்து விடாதவாறு காலங்காலமாகக் கண்காணித்தும் காப்பாற்றியும் நியாயப்படுத்தியும் வருவதும் பார்ப்பனர்களே!
-----------------------
பார்ப்பனியம் என்பதற்கான நேரடிப் பொருள் பிரித்தாளும் சூழ்ச்சி. ... நாட்டின் பெரும்பான்மை தொல்குடிகளை படிநிலையில் கீழான, இழிவான இடத்திற்குத் தள்ளிய கொடுங்கோன்மைக்குப் பெயர்தான் பார்ப்பனியம். இந்தப் படிநிலை சமத்துவமின்மை கோட்பாட்டிற்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் பார்ப்பனர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒரே வேலை.
-------------------------
காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர் என்ற போதும், பார்ப்பனத் தீவிரவாதியாக அவர் என்றுமே அடையாளப்படுத்தப்படுவதில்லை.
------------------------
மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே அறிவாளி / முதலாளி வர்க்கமாக உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு இந்நாட்டின் அத்தனை அதிகாரங்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனால், வலுவான இந்த ஆளும் வகுப்பினரை இங்கே நடக்கும் பிரச்சனைகளோடும் தொடர்புபடுத்தாமல் அவர்களை பொறுப்புடைமியிலிருந்து நழுவ விடுகிறோம்.
-----------------------
பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் இந்துத்துவம், இந்துத்துவம் என கூச்சல் போட பழகிக் கொண்டோம்.
-------------------------
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆண்ட இடத்திலெல்லாம் பார்ப்பனர்களே முதல்வர்களாக்கப் பட்டனர்; அமைச்சர் பதவிகளைப் பிடித்தனர்.
----------------------
பார்ப்பனியம் சாதிகளால் உயிர் வாழ்கிறது. இந்து மதத்தின் பெயரால் காப்பாற்றப்படுகிறது.
--------------------
ஒரு பார்ப்பனர் முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக இருந்தால் கூட அதை ஊற்றும் ‘privilege’ மற்றொரு பார்ப்பனருக்குத்தான் உண்டு!!
-----------------------
INDIAN PENAL CODE என்பதை எல்லாம் தாண்டி, எப்பேர்ப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டாலும் பார்ப்பனர்களைத் தப்பிக்க வைக்கும் INDIAN பூணூல் CODE என்ற ஒன்று இங்கே இருக்கத்தான் செய்கிறது.
-------






*



Thursday, October 20, 2022

1189. இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம் - 1




                                                      

*


ஸ்மார்த்தா பிராமணர்களின் வழக்கு பற்றிய செய்தி ஒன்றினை ஓரிரு வரிகளுடன் என் முகநூலில் இரு நாட்களுக்கு முன்பு போட்டிருந்தேன். அது எதற்காகப் போட்டேன் என்று நிச்சயமாக உங்களில் யாருக்கும் புரியவில்லை. அதைப் பார்த்த நாலைந்து பேரில் ஒருத்தரு திட்டுனாரு... இன்னொருத்தர் அது யாருங்க smarta Brahmins அப்டின்னு கேள்வி கேட்கிறாரு.
வாத்தியாரா இருக்கும் போது புரியாத பசங்களுக்கு notes கொடுப்போம்ல ... அது மாதிரி உங்களுக்கும் நீளமா ஒரு விளக்கத்தை ஒரு நூலிலிருந்து மேற்கோளாகக் கொடுக்கிறேன். (யாரும் வாசிக்க மாட்டீங்க... இருந்தாலும் என் பணியைச் செய்து விடுகிறேன். அப்படித்தானே கீதையில சொல்லி இருக்காம்!)
படம் போட்டிருக்கிறேனே .. அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அது என்னைக் கெட்டியாகக் கட்டிப் போட்டது. அதில் வரும் முதல் சில பக்கங்களை உங்களுக்கு ஒரு விளக்கமாகத் தந்திருக்கிறேன், அதுவும் ஏன் நான் அதை இந்தக் கால கட்டத்தில் தந்திருக்கிறேனென்று புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்....புரிந்தாலும் என்ன கிழித்து விடப் போகிறீர்கள்!!!)
1850களில் தான் ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக ... அனைத்து ஜாதி மக்கள் கூட்டத்தையும் மொத்தமாக ஒரே பெயரால் அழைப்பதற்கு “இந்து” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. .. இப்போது ஆங்கிலேயர்கள், ‘மிலேச்சர்களையும்’ தங்களோடு ‘இந்துக்கள்’ என்று அழைப்பதைப் பார்ப்பனத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பெயர் தங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையை எடுத்தார்கள்.
விஷ்ணுபுவா பிரம்மச்சாரி போன்றவர்கள் “இனி ‘இந்து தர்மம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. ‘வேதோக்த தர்மம்’ என்பதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றார். தயனாந்த சரஸ்வதி, ‘ஆரிய தர்மம் அல்லது சனாதன சர்மம்’ என்று அழைக்க வேண்டுமென்றார்.
பார்ப்பனர் அல்லாத மக்களும் தங்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப் படுவதை ஏற்க மறுத்தார்கள்.
1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக கமிஷனர் எட்வர்ட் ஆல்பர்ட் கெய்ட் இதை முடிவு செய்ய முயற்சியெடுத்தார் . ... இந்தியா முழுக்க இருந்த பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. மற்றவர்கள் அவ்வாறு பொருந்திப் போகவில்லை. அவர்கள் அனைவரையும் எவ்வாறு ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடைப்பது என்ற நியாயமான கேள்வியை கெய்ட் எழுப்பினார்.
அதுவரை “மிலேச்சர்களை இந்துக்களாக சேர்த்துக் கொள்ள முடியாது” என்று சொல்லிக் கொண்டிருந்த பார்ப்பனத் தலைவர்களுக்கு ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருந்த சட்ட சபைகளும் பதவிகளும் சில கணக்குகளைப் புரிய வைத்தன. அனைத்து ஜாதிகளையும் இணைத்து ‘இந்து’ என்ற அடையாளச் சொல்லுக்குள் கொண்டு வருவது தான் இனி வரும் நாட்களில் தங்களுக்கான அரசிய்ல் சலுகைக்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். மக்கள் தொகையில் மூன்று சதவிகிதத்திற்குள் மட்டுமே இருக்கும் தங்களை மட்டும் ‘இந்து’ என்று ஒதுக்கிக் கொண்டால் மற்ற ஜாதியினர் ஒன்று சேர்ந்து பெரும்பான்மை ஆகிவிடுவார்கள். .... அவர்களை இந்துக்களாக அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கும் சேர்த்து தாங்களே தலைமை வகிக்கக் கூடிய ‘இந்துப் பெரும்பான்மை’ (Hindu Majoritarianism) உருவாகிவிடும் என்று முடிவு செய்கிறார்கள். அதுவரை நாட்டின் தலைவர்களாக அறியப்பட்டவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! .. எனவே காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபை இரண்டையும் சேர்த்து அனைவரும் இந்துக்களாகி விடுகின்றனர்.
இதற்காகக் கடுமையாக உழைத்தவர் திலகர். அவரைக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா பூலே. இப்போது காங்கிரஸ் சார்பாக அந்தச் செயலை ‘சுதந்திரப் போராட்டம்;, ‘தேச ஒற்றுமை’ என்ற பெயர்களில் கச்சிதமாக ச் செய்து முடித்தவர் மோகந்தாஸ் காந்தி.
காந்தியின் இத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் டாக்டர் அம்பேத்கரும், பெரியாரும் தான். அதனால தான் வட்ட மேசை மாநாட்டில் ‘தீண்டத்தகாத மக்கள் இந்துக்கள் அல்லர்’ என்று அறிவித்த டாக்டர் அம்பேத்கரை, எந்த ஓர் அரசியல் அறமும் அற்று, தனக்கு ‘ம்காத்மா’ என்று ஒரு பெயர் இருப்பதையும் மறந்து, முரட்டுத்தனமாக எதிர்த்தார் காந்தி.
டாக்டர் அம்பேத்கரின் தனித்தொகுதி கோரிக்கை பற்றி பிரதமர் ராம்சே மெக்டோனால்டுக்கு எழுதிய கடிதத்தில் “இதனை இந்து மதத்தை சீர்குலைக்க வந்த நஞ்சாகவே பார்க்கிறேன்” என்று காந்தி எழுதுகிறார்.
..... 1932ஆம் ஆண்டு தீண்டத்தகாத மக்கள் தனித் தொகுதி கேட்பது பற்றிய தன் கருத்தை வல்லபாய் பட்டேலிடம் அவர் சொன்னதைக் கேட்க வேண்டும்: “தனித்தொகுதியை அனுமதித்தோம் என்றால் இந்த தீண்டத்தகாத போக்கிரிகள் (untouchable hoolgans) சேர்ந்து கொண்டு கலகம் செய்து, ஜாதி இந்துக்களைக் கொன்று குவித்து ரத்த காடாக்கி விடுவார்கள்”.
இதுதான் இந்த நாட்டின் அரசியல் வரலாறு. ‘இந்து’ என்பதற்கு பார்ப்பனர்களைப் பொறுத்தவரை “அரசியலில் பெரும்பான்மை” என்பதைத் தவிர வேறு அர்த்தம் கிடையாது.



*

Tuesday, October 18, 2022

1188. ஒரு முக்கோணக் காதல் கதை










ஒரு முக்கோணக் காதல் கதை

 

பல வருஷமாகவே பாஸ்போர்ட் படம் எடுத்தாலும் அதிலயும் பல்லைக் காமிச்சிக்கிட்டே படம் எடுக்கிற பழக்கம் வந்து போச்சு. சிரிச்ச மூஞ்சுன்னு நாலு பேரு சொல்லணுமாம். அதுக்காக அப்படி. கடவாய்ப் பல்லு போச்சா .. இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே இருந்தேன். சைடில் இருந்த இரண்டு பல் கழண்டுகிட்டு எங்கேயோ ஓடிப்போச்சு. சிரிச்சா ஓட்டைப் பல் தெரிந்தது. நான் சிரிச்சா ஓட்டைப் பல் ஓவரா சிரிச்சிதா ... அதான் ஓரங்கட்டிட்டேன் நம்ம சிரிப்பை.

அப்படி சிரிப்புத் துறவறம் பூண்ட என்னை மீண்டும் தைரியமாக போட்டோவுக்கு மட்டுமல்லாமல் எப்போதும் சிரிக்க வைத்த பல் வைத்தியருக்கு நன்றி.

இதுக்கும் முக்கோணக் காதலுக்கும் என்ன தொடர்புன்னு கேக்குறீங்களா? பல் வச்ச பிறகு வந்த பிரச்சனைகள் சில இன்னும் தீராமல் இருக்கு. இன்னும் மூன்று characters, அதாவது மூன்று கதாபாத்திரங்கள் அவர்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். யார் யாருன்னு கேக்குறீங்களா? என் பற்கள், நாக்கு, மூளை ...மூன்றும் இன்னும் ஒட்டியும், வெட்டியும் தங்களுக்குள் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். 

பற்கள் நல்ல ஷேப்போடு பொருந்தியாச்சு. சிரிச்சா முழுசா பல்லு தெரிஞ்சாலும் நல்லாவே இருக்கு.  வீட்டில் பாஸ், பிள்ளைகளுக்கும் திருப்தி தான். ஆனா மூளை இன்னும் செட்டில் ஆகலை. ஏன்னா முந்தி எப்படி கடவாய்ப் பற்கள் வேலை செய்தது என்பது மூளைக்கு சுத்தமா மறந்தே போச்சு. இப்போவும் சோற்றைக் கடிக்கும் போது பல்லோடு பல் மோதுவது புதுசாகத் தெரிகிறது. ஏதாவது கடலை மாதிரி கடித்துச் சாப்பிடும்போது பல்லின் பள்ளங்களில் ஒட்டியிருப்பது போல் ஓர் உணர்வு. கண்ணாடியில் பார்த்தால் அப்படி ஒன்றும் ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் தொட்ட குறை .. விட்ட குறை என்று அங்கே ஏதேதோ இருப்பது போல் மூளைக்குக் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இதுபோல் பல காட்சிப் பிழைகள். இதெல்லாம் பழக இன்னும் சில நாள் ஆகலாம் என்கிறார் நம் மருத்துவர்.

                              

சும்மா இருக்கும் போது மேற்பற்களும் கீழ்ப்பற்களும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன. இப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்பும் இருந்ததா என்று மூளை யோசிக்கிறது. அப்படித்தான் இருந்திருக்குமாம். எனக்குத் தெரியவில்லை.மூளையைப் போய் சுரண்டிப் பார்த்தேன். பதில் சொல்லத் தெரியவில்லை அதற்கு.

நாக்கு சும்மா இருன்னு சொன்னாலும் கேக்கிறதில்லை. பல்லைச் சுத்தி சுத்தி வருது. அப்படியே பல்லை ரொமான்டிக்காக  மெல்லத்  தடவுது.  பல்லின் உள்ளும் புறமும் வழு வழுன்னு இருக்கு. முந்தியெல்லாம் இப்படியெல்லாம் பல்லு வழுவழுன்னு இல்லையேன்னு நாக்குக்கு கவலை. ஆனாலும் விடாமல் பல்லைத் தடவிக்கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த தடவல் காதல்அவர்கள் இருவருக்குள்ளும் நடந்து கொண்டே இருக்குமோ தெரியவில்லை.  தடவித் தடவி மூளைக்குப் பலவித குழப்பங்களைத் தொடர்ந்து நாக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

 



*


Saturday, October 08, 2022

1187. பல்லு போய் .. பல்லு வந்துச்சு ... டும்.. டும் ..





*
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02W4FPRd1PpbUpDD7RWrutV3Jey6g9D5zqq4UydfKrR6eSCgzY38m551XKBXkLT2rul

*

ஏறத்தாழ ஒரு மாத காலமாக  பல் மருத்துவரிடம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஆகவே பலமுறை நினைவுகள் வாய், பல் என்று அப்பகுதிகளைப் பற்றியே சுற்றி வந்து கொண்டிருந்தன. இன்று எனக்குப் “புதிய” பல்லும் “வளர்ந்து” விட்டது.  விதியைப் பாருங்களேன் .. நான் தான் முதலில் பிறந்தேன். பிறந்ததிலிருந்து ஒரே நிறம் தான் எனக்கு. ஆனால் பாருங்கள் இந்தப் பற்களை! எனக்குப் பின்னால் தான் அவை பிறந்தன. வெள்ளையாக இருந்த பல் காலங்கடந்ததும் மஞ்சள் கலருக்கு வந்தது. நான் கலர் மாறாமல் இருக்கிறேன். அது கலர் மாறியது .. பிறகு ஏறக்குறைய அனைத்தும் பயனில்லாமல் விழுந்து தொலைத்தன. போனால் போகுது என்றும் இருக்க முடியாமல் வைத்தியரிடம் போனேன். அவர் புதிதாக பற்களை “முளைக்க” வைத்து விட்டார். ஆகவே என் பற்கள் மட்டும் – கிறித்துவ மொழியில் அல்லது christian  parlance-ல் சொல்வதென்றால் BORN AGAIN.  இந்துத்துவத்தில் சொல்வதென்றால் த்விஜாஸ் (dvijas)  - இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றேதான்!

அடேய் சாம்... பரவாயில்லைடா நீ! பல்லில் கூட மதத்தைக் கொண்டு வந்து சேர்த்திட்டியே!!  - இது என் மைண்ட் வாய்ஸ் சொன்னது!

சரி .. எங்கே ஆரம்பித்தேன். நினைவுகள் வாயையும் பல்லையும் சுற்றியே வந்து கொண்டிருந்ததல்லவா? பல் வேலை முடிந்ததும் பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும் புதிய பல்பற்றிய செய்திகளை அனுப்பி வைத்தேன்.  நண்பன் வைத்தி  உடனே தொலைபேசினான்.  பல்லைப் பற்றிக் கேட்டான். அப்போது நான் ஆச்சரியப்பட்ட ஒரு விசயத்தை அவனிடம் சொன்னேன்: 32 பல்களுக்கிடையே ஒரு நாக்கு. எப்படித்தான் பல்லின் கடியிலிருந்து எப்போதும் ஜாக்கிரதையாகத் தன்னைக் காத்துக் கொள்கிறது என்ற என் ஆச்சரியத்தை அவனிடம் சொன்னேன். அதோடு ... சுற்றி அத்தனை எதிரி நாடுகள் சூழ்ந்திருந்தாலும் நடுவே உள்ள சின்ன நாடு – இஸ்ரேல் – எப்படித் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறதல்லவா .. அது போல் என்றேன். உடனே ஒரு பதில் வந்தது அவனிடமிருந்து:

இஸ்ரேல் பலம் மிக்க நாடு. அதனால் தான் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. நாக்கும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது;, அது flexible-ஆக இருப்பதால் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

இரண்டும் சரிதான். இல்ல ?

பின்னிட்டான்ல .... !!!