*
நிர்மல் சேகர் அப்டின்னு ஒருத்தர் இந்து தினசரியில் விளையாட்டுப் பகுதியில் எழுதுவார். தொடர்ந்து விம்பிள்டன்னுக்கு நேரே சென்று எழுதுவார். ஒவ்வொரு முறையும் அவர் எழுத்தை வாசிப்பது மிகவும் ரசிக்கும்படி இருக்கும்; அந்த அளவு அவரது ஆங்கிலம் எனக்குப் பிடிக்கும். ஆங்கில இலக்கியம் கற்றவராக இருக்க வேண்டும் - ஏனெனில், அவர் எழுதுவது என்னவோ டென்னிஸாக இருந்தாலும் பழைய ஆங்கில இலக்கிய பாத்திரங்கள் நடு நடுவே வந்து தலைகாட்டும். அதுவும் ஒரு பெரிய விளையாட்டுக்காரர் வென்றாலும், தோற்றாலும் அவரது ஆங்கில நடை தீவிரமாகி விடும். மொழி இழைந்தோடும். வாசிப்பதே பேரின்பம்.
இதை என் வகுப்புகளில் சொன்னதுண்டு. நேற்று திடீரென ஒரு sms வந்தது:
sir you said about articles written in Hindu after tennis matches. when read it today thought of you ....
வந்தது வெறும் எண்ணோடு வந்ததால் யாரென்று தெரியவில்லை. இருப்பினும் ...
some good seeds on some good ground!
Good.
Thanks.
but still not sure who u r ...
பதில் வந்தது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் முந்திய ஒரு மாணவியின் எண்.
ம்ம்..ம்.. சில நல்ல விதைகள் நானும் விதைத்து, அதுவும் சில நல்ல நிலங்களில் விழுந்து முளைத்திருப்பதைப் பார்த்து சந்தோஷமாயிருந்தது.
****** ****** ******* *******
விம்பிள்டன் பார்க்க ஆரம்பிக்கும்போது பெடரர் பக்கம்தானிருந்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்ததும் service தவிர மற்றவற்றில் ராடிக்கின் ஆட்டம் அழகாயிருந்தது. அதுவும் கடைசி ஆட்டம் தவிர எந்த ஒரு game-லும் அவர் தோற்கவில்லை. முதல் செட் வென்றது, இரண்டாவது செட் tie breaker-ல் தோற்றது - இரண்டுமே எதிர்பார்க்காமல் நடந்தது போலிருந்தது.
****** ******* ******** *********
நாடல் அடுத்து வந்து பெடரரோடு இறுதியாட்டத்தில் மோதும் காட்சியைக் காண இப்போதே தயாராக இருக்க வேண்டும்.
நிச்சயம் நன்றாக இருக்கும் அந்தப் பந்தயம்.
****** ******** ******** ********
*
Tuesday, July 07, 2009
323. BLOWING MY OWN TRUMPET ...
Posted by
தருமி
at
Tuesday, July 07, 2009
11
comments
Links to this post
Labels: சொந்தக் கதை, பலசரக்கு
Friday, July 03, 2009
322. WIMBLEDON ' 09 -- 2
*
*
பெடரர் -ஹாஸ் அரையிறுதி ஆட்டம் முடிந்தது. ஆட்டத்தில் காரமே இல்லை. பெடரருக்கு எளிதான வெற்றி.
*
அடுத்து இரட்டையர் மகளிர் ஆட்டத்தில் வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி.
*
அடுத்த இரட்டையர் ஆட்டம். ராடிக் - முர்ரே. முர்ரேவுக்கு பலத்த ஆதரவு. அதே அளவு அந்த ஆளும் "சும்மா" பயங்கர body language விஷயங்கள் செஞ்சிக்கிட்டு இருந்தார். 4 செட் ஆட்டம் ஆனது. இரண்டாம் செட் தவிர மற்றவைகளில் வென்று, ராடிக் இறுதிப் போட்டிக்குள் வந்திருக்கிறார். மகிழ்ச்சி. அதென்னவோ இந்த இங்கிலீசுகாரங்கன்னாலே அப்படி ஒரு லயிப்பு எனக்கு!
ராடிக் ரொம்ப சென்டி ஆகிவிட்டார். மைதானத்தில், பின் உள்ளே நுழைந்து படியில் ஏறும்போதும் மிகவும் அழுதுட்டார். ஏற்கெனவே பெடரரிடம் விம்பிள்டன்னிலேயே இருமுறை இறுதிப் போட்டியில் தோற்றிருக்கிறார்.
*
லியான்டர் இறுதி கலப்பாட்டத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு ஸ்லாம் அவருக்கு? பார்க்கணும்...
*
Posted by
தருமி
at
Friday, July 03, 2009
6
comments
Links to this post
Labels: பலசரக்கு
Thursday, July 02, 2009
321. WIMBLEDON '09
*
*
இப்போதான் செமி பைனல்ஸ் - பெண்கள் முடிந்தது, முதல் செமி செரீனாவுக்கும் ரஷ்யப் பெண் டெமென்டிவாவுக்கும் நடுவில் நடந்தது. செரீனா வெல்லவேண்டுமென்று நினைத்தாலும் ஆடும் ஆட்டம் இருக்கே .. அட .. சாமி .. வென்றபோது கோபம்தான் வந்தது. இவ்வளவு மோசமாக செரீனா விளையாடி என்றும் பார்த்ததில்லை. முதல் செட் பார்க்கவில்லை. கடைசி இரு செட்களிலும் ஆடிய ஆட்டம் இருக்கிறதே .. நானே நாலைந்து 'சிக்ஸ்ர்' பார்த்தேன். மகா மட்டமான ஆட்டம். ஏதோ கடைசி மூன்று ஆட்டத்தில் ஆடிய இரண்டு மூன்று 'ஷாட்'கள் ஒப்பேத்தியது. 6-7;7-5;8-6 என்று வென்றாயிற்று. ஆனால் ஆடிய ஆட்டத்துக்கு இதுவே பெருசுதான்!
அடுத்து சாபினாவோடு வீனஸ் ஆடிய ஆட்டம். ஆகா .. என்ன அழகு! 6-1; 6-0 ஸ்கோர். வீனஸ் - வந்தார்; ஆடினார்; வென்றார். அவ்வளவே ... மிக அழகான ஆட்டம். சாபினாவைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாகவே இருந்தது.
அடுத்து இறுதி ஆட்டத்தில் அக்காவும் தங்கையும். செமியில் பார்த்த அளவில் அக்கா நிச்சயமாக 6=0; 6-0-ல் வெல்ல வேண்டும். போனால் போகுது 6-2; 6-3-ல் வீனஸ் வெல்லட்டும். வீனஸுக்கு வாழ்த்துக்களுடன் ... காத்திருப்போம்.
ஆண்கள் ஆட்டம். Haas-யை பெடரர் வென்று விடுவார். இறுதிப் போட்டிக்கு Andy Murray vs Andy Roddick. என் கணிப்பு & ஆசை - Roddick வெல்லணும். ஆனால், இறுதி பெடரருக்குத்தான். I miss you, Rafa! 15வது வெற்றிக் கோப்பை வெல்லும் முதல் வீரரைப் பார்ப்போம்.
*
Posted by
தருமி
at
Thursday, July 02, 2009
6
comments
Links to this post
Labels: பலசரக்கு
320. ஒரு சின்ன அச்சம்
ஒரு வழியாக எங்கள் ஊரில் (மதுரை) பல ஆண்டுகளாகக் கட்டுமானமின்றி இருந்த தொடர்வண்டிப் பாதைக்கு மேலான சாலைப் பாலம் ஒன்று இப்போது தீவிரக் கட்டுமானத்தில் உள்ளது; மகிழ்ச்சிதான். சீக்கிரமாக இந்த செல்லூர்ப் பாலம் முடிந்தால் என்னைப் போல் நித்தமும் இருமுறையோ நான்கு முறையோ இந்தப் பாலத்தைக் கடக்கும் என் போன்றோருக்கு நிம்மதிதான்.
வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆற்றின் ஓரத்தில் சாலை ஓரத்தில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று தோண்டி வேலை நடந்து வருகிறது. அதை வேடிக்கைப் பார்க்கவே முதலில் சில நாட்களாகப் பெருங்கூட்டம் கூடி இருந்தது. நான் சிகப்புக் கோடிட்டிருக்கும் இடத்தில் ஒரு வெடிப்பு கூட உள்ளது.
அதோடு சாலையில் மேல் பகுதியில் எந்தவித தடுப்போ, எச்சரிக்கைகளோ இல்லாமல் "பா" வென்று சாலை இருக்கிறது. நான் மஞ்சள் வண்ணத்தில் வட்டமிட்டுள்ள இடம் எந்த வித பாதுகாப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் திறந்த சாலையாகவே உள்ளது. அதைத் தாண்டும்போது சின்ன அச்சம்தான். அதில் ஏதேனும் தற்காப்பு ஏற்பாடுகள் இருந்தாலே நல்லது. ஆனால் வேலை நடத்துவோருக்கோ, காவல் துறைக்கோ, மாநகராட்சிக்கோ அது தோன்றாதது கொஞ்சம் வேதனைதான்.
என்னால் முடிந்த அளவு இரு முறை இதற்காக முயற்சித்தேன். இதுவரை பயனேதுமில்லை. யாராவது கண் திறந்தால் நல்லது ....
Posted by
தருமி
at
Thursday, July 02, 2009
10
comments
Links to this post
Labels: பலசரக்கு
Saturday, June 27, 2009
319. "CLASHES START WHEN RELIGION IS EXPLOITED FOR POLITICAL PURPOSES
*
*
ராம் புனியானி் - இவரைப் பற்றியும், மதுரை காந்தி நினைவகத்தில் அவர் பேசியது பற்றியும் எழுதணும்னு நினத்திருந்தேன். ஆனால், இப்போ அவரது பேச்சை இந்து தினசரியில் வந்ததால் அதையே இங்கே போட்டிட நினைத்தேன். இதோ ...
Real agenda of communal groups in India is to eliminate democracy, says activist
Date:27/06/2009 URL: http://www.thehindu.com/2009/06/27/stories/2009062756220600.htm Back
INSIGHT: Ram Punyani, former Professor of Indian Institute of Technology, Bombay, delivering a lecture in Madurai.
MADURAI: Terrorism is not a product or an outcome of religion but the socio-politico-economic conditions related to the religion, said Ram Punyani, an anti-communal activist and former Professor of Indian Institute of Technology, Bombay.
Delivering a special lecture, ‘Religious Fundamentalism- The Bane of Future India,’ here on Wednesday, Mr. Punyani went back to the days of freedom movement and recalled that it was in Madurai that the Mahatma decided to stop wearing modern clothes and adorned the attire of the peasantry class and the downtrodden of the nation, thus symbolising the conditions of the poor. It was Gandhi’s genius that made the nation come together.
It was highly ironical to find that Gandhi, being a supporter of Sanatan Dharma, was against the idea of a Hindu nation whereas Mohammed Ali Jinnah, a non-practicing Muslim, asked for an Islamic republic. He said that religion remained a multi-factorial phenomenon, and homogeneity the life pattern of members of different religious groups. Religious values did not clash with each other but supplemented one another. Clashes started when religion was exploited for political purposes.
During the freedom movement, the rising classes, which comprised the Indian National Congress, Republican Party of India and Bhagat Singh’s Hindustan Socialist Republic Association, functioned on the commonality that they had no basis on religion but on nation. However, on the other hand, declining classes, which had Muslim League and Hindu Maha Sabha, had its basis on religion and nation, he said.
The rising classes had every section of the social order represented but on the other hand the declining classes had a few section of the elites and religious groups in mind.
Prof. Puniyani opined that problems of fundamentalism had decreased to some extent and the defeat of the Bharatiya Janata Party in the elections would not end the communal problems of India.
The real agenda of the communal groups in India was to eliminate democracy. Secular forces must bring back the social agenda where a condition was attained, making the Dalits, adivasis, minorities, women and workers get fully represented.
© Copyright 2000 - 2009 The Hindu
*
*
Posted by
தருமி
at
Saturday, June 27, 2009
3
comments
Links to this post
