Tuesday, February 28, 2006

135.நிலா காயுது…

ஹலோ நிலா மேடம்,

ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில தலைவர் பாடற பாட்டைமட்டும் போட்டுட்டோம். படத்துக்கே முழு விளம்பரத்தை எங்க மல்லிகைக் குழுவிடம்தான் சங்கர் ஒப்படைக்கப் போறார். அப்படிப்பட்ட எங்க டீமின் படங்களை நீங்கள் ஆட்டைக்குச் சேத்துக்கக் கூடாதுங்களா? யேய்..சேத்துக்குங்க’ப்பா; யேய்..யேய்…please’ப்பா…


முதல் படம்: நம்ம தலை அங்க இறங்கின உடனே (இப்போ, ஏற்கெனவே என் பார்ட்னர் ஏற்றியுள்ள பாட்டைப் பாடிப் பார்த்துக் கொள்ளுங்கள்) அந்தப் பாட்டைப் பாடினாரா.. கிரகவாசிகளுக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு. போதாததுக்கு நம்ம டி.ஆர். வேற தாளிச்சிட்டாரா..கேக்க வேணாம். தலைவருக்கு அங்க உடனே ஒரு fan club ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு தலைவரா இருக்க நான் நீன்னு ஒரே சண்டையாப் போச்சு. பாத்தாரு…அந்த்க் கிரகத்து president. நானே தலைவரா இருக்கப்போறேன்; அதோடு தன் மனைவியையே பொருளாளராகவும் போட்டுக்கிட்டாரு. அந்த பொறுப்பை ஏத்துக்கிட்ட போது எடுத்த படம்தான் இது.



அடுத்த படம்: President & Vice-President இப்போ நம்ம தலைவரின் பாக்கெட்டுக்குள். பிறகு என்ன உடனே ஷூட்டிங்க் ஆரம்பிச்சாச்சு. சங்கர் கேக்கவா வேணும். சும்மாவே ரோடு, பாலம், லாரி, சந்து பொந்துன்னு எல்லா இடத்திலயும் paint அடிக்கிற ஆளு. இங்க உடுவாரா..? கொஞ்சம் டெக்னிக்கை மாத்திட்டார். பெயிண்ட்டுக்குப் பதில் ஒரே தீவட்டி மயம்தான் இங்கே. அதோடு, நம்ம சுஜாதா வேறு வெளுத்துக்கட்டியிருக்காரு. ஒரு இடத்தில பாரு்ங்க…வசனம் எழுதியிருக்காரு…ச்சே..என்ன வசனங்க …படம் வெளிவந்ததும் ஆ.வி.யில் இருந்து எல்லாப் பத்திரிகையும் எப்படி சீச்சீன்னு சொல்லப் போறாங்கன்ன பாத்துக்கிட்டே இருங்க..


இந்தக் கடைசிப் படம்: இது நம்ம தலைவர் ஜுலி ப்ளாண்ட்டில இருக்கிற மக்களோடு சேர்ந்து எடுத்துக்கிட்ட படம். ஷூட்டிங் நடக்கிறப்போவே நம்ம தலையின் புகழ் கன்னா பின்னான்னு பரவுனதால, அந்த நாட்டுப் பொறுப்பை ஏத்துக்கணும்னு அந்த நாட்டு மக்கள் எல்லோரும் ரொம்பவே தலைவர கேட்டுக்க ஆரம்பிச்சிட்டாங்க; தலைவர் நான் ‘பூமி’க்குப்

போயிட்டு, சத்யநாராயணா, ஜில்லு எல்லார்கிட்டயும் கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டு ‘டபாச்சுட்டு’ வந்திருக்கார். அனேகமா இது பற்றி முடிவெடுக்க இமய மலைக்கு ஒரு ஷண்டிங்க் அடிக்க ஆலோசனையில் இருக்கிறார்.

பின் குறிப்பு: உண்மையில பாத்தீங்கன்னா, ஜுலியன்ஸ் உசரமா பெருசா இருப்பாங்க…முதல் படத்தில பாக்றீங்கல்லா, அது மாதிரி. ஆனா தலைவர சிறுசா பாத்தா நம்ம ரஜினி ராம்கி மாதிரி ஆளுகளுக்குப் பிடிக்காதில்லையா, அதனால நம்ம சங்கர் பயங்கர graphics பண்ணி, உல்டாவா தலைவர பெருசாவும் ஜுலியன்ஸை சிறுசாகவும் காண்பிக்க முடிவு பண்ணிட்டார். AVMகாரங்களும் காச காசுன்னு பாக்காம சரின்னுட்டாங்க. அதத்தான் இரண்டாம், மூன்றாம் படத்தில பாக்றீங்க…







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Feb 28 2006 09:06 pm | Uncategorized | | edit this
7 Responses
selvan Says:
February 28th, 2006 at 11:28 pm e
கலக்கல்ஸ் பார்ட்னர்.சூப்பர்

பொற்கிழி தருமிக்கே

தருமி Says:
March 1st, 2006 at 10:10 am e
ஆமப்பா, நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; நீங்க எனக்குக் கொடுங்க…அட, ஓட்டுதான் போடல; காமிக்கிற படத்த கூடவா மனுசங்க வந்து பாக்க மாட்டாங்க…என்ன (ப்திவு)உலகமப்பா இது ரொம்ப cry பண்றேனோ

கோ.இராகவன் Says:
March 1st, 2006 at 10:28 am e
நல்லா செஞ்சிருக்கீங்க தருமி…ஆனா கமல் பாட்டை ரஜினி படத்துக்கு வெச்சிட்டீங்க……….

உயரமான ஜூலியங்கள குள்ளமாக் காட்டுற கமெண்ட்டு சூப்பரு.

nila Says:
March 1st, 2006 at 11:15 am e
dharumi

graphics nalla irukku…
upa thozilaa?

sarah Says:
March 1st, 2006 at 11:47 am e
தேர்தல் நடக்கப் போகுதுன்னு கொஞ்சம் முன்னால சொல்லியிருக்கணும், ம்ம்ம்ம்ம்ம்……………… அப்ப ஜனங்க வர , வோட்டுப் போட ஏதுவா இருக்கும். லேட்டா தேர்தல் வேலைகளை ஆரம்பிச்சுட்டு இப்படி அலுத்துக்காதீங்க சார்.
சரி, ஏதோ என்னால் முடிந்த வோட்டையும், பின்னூட்டத்தையும் இட்டாச்சு.

சாரா.

மணியன் Says:
March 1st, 2006 at 12:23 pm e
பாட்டு எழுத ஒருவர்; பாட்டுக்கு படம் போட என்றே ஒருவர். இதில் நீர் யார் என்பதை (பதிவு)உலகமே அறிந்து கொள்ளும்
அட்டகாசம் தருமி சார்.
எல்லோருடைய திறமைகளையும் வெளிச்சத்திற்கு கொணர்ந்த முழு நிலவுக்கு நன்றி.

என்ன தேர்தல் இது ? ஒருநாளாவது பிரச்சாரத்திற்கு விட்டிருக்க வேண்டாமா

தாணு Says:
March 1st, 2006 at 1:21 pm e
சகலகலா வல்லவர் தருமி வாழ்க! வாழ்க! எங்கள் ஓட்டு தருமிக்கே!!!!

Thursday, February 23, 2006

134. சங்கிலித்தொடர்…




'அவ எடுத்த வாந்தியில கருகப்பிலை இருந்திச்சாம்’ அப்டின்னு கோடி வீட்ல ஒருத்தி சொல்ல, அதே தெருவின் அடுத்த கோடிக்கு இதே நியூஸ் கொஞ்சம் கொஞ்சம் மாறி மாறி, கடைசியில் ‘ அவ காக்காவா வாந்தி எடுத்தாளாம்’ அப்டின்னு மாறிடுச்சாம் அப்டின்னு ஒரு கதை சொல்லுவாங்க.

இந்த சங்கிலிக் கதையும் அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உருமாறுதுன்னு நினைக்கிறேன். முதல்ல ஆரம்பிச்ச புண்ணியவான் / ..வதி யாருன்னு தெரியலை. தாணுதான் trace பண்ண ஆரம்பிச்சிருக்காங்க…நதிமூலம் கண்டுபிடிச்சு சொன்னாங்கன்னா நல்லது. ஆரம்பிச்சவங்க கொடுத்த அந்த ‘நாலு’ என்னன்னு தெரியாது. நானும் ‘பின்னாடியே’ போய் ஒரு நாலைந்து ஆட்களைப் பிடிச்சு, (ராசபார்வை கொங்கு ராசா, டி. ராஜ்,ஞான்ஸ், டோண்டு, ஜோசஃப், ஜோ ) அவங்க சொன்னதையெல்லாம் ஒரு 'லுக்’ உட்டுட்டு வந்தால் கூடக் கொஞ்சம் தான் தலைசுற்றல். ஜோ ஒரு பின்னூட்டத்தில தான் செய்ததை ரகசியமா சொன்னாரா..’டக்’குன்னு அத பிடிச்சிக்கிட்டேன்.

முதலில் ஆரம்பிச்சவங்க எந்த நாலு சொன்னாங்களோ, மற்றவங்க அதை மாற்றி, கூட்டி, குறைத்து நிறைய ஆயிருச்சி. அதனால நான் என் பங்குக்கு கொஞ்சம் மாற்றி இருக்கேன். இந்த 4 கேள்விகள் நிறைய பேருடையதில் இருந்தது. ஆனால் அவைகளை நான் விட்டு விடப் போகிறேன். ஏனெனில், Four Jobs I have had: - இதுக்கு நான் என்ன பதில் சொல்ல? ஆரம்பிச்சது கல்லூரி ஆசிரியர் வேலை…அதுவே கடைசி வரை. ஆகவே எனக்குத் தேவையில்லாத கேள்வி. அடுத்து: Four Places I have lived - எங்கங்க…பிறந்து அஞ்சு வயசு வரை சொந்த ஊர்ல இருந்திட்டு, பிறகு எல்லாமே - எல்லாமேன்னா எல்லாமே ! - மதுரதான். நாலு இடஞ்சொல்லுன்னா நான் எங்க போறது? அதுக்கு அடுத்து: Four Places I have been on vacation - நாங்க என்ன software ஆளுகளா? இன்னைக்கி அந்த நாடு, அதுக்கு அடுத்து இன்னொரு நாடுன்னு சுத்துறதுக்கு. நாம உண்டு நம்ம மதுர உண்டுன்னு இருக்கிறவைய்ங்க. Four places I’d rather be now: - அப்டின்னு ஒரு கேள்வி. ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு தருமியா இருக்க! இதுல அங்க போகணும் இங்க போணும்னு நாம ஆசப்பட்டா மட்டும் போதுமா…விடுங்க..அதெல்லாம் பகற்கனவுகள்தானே. இன்னொரு கேள்வி - Four sites I visit Daily - சொல்லி வச்ச மாதிரி ஜி-மெயில், தமிழ்மணம், தேன்கூடு, கூகுள் அப்டின்னு டிட்டோ போட்டு எல்லாரும் இதுக்குப் பதில் சொல்றாங்க. நம்ம ஆளுக எல்லாரும் அனேகமா addicts தான; அதனால இப்படித்தான் பதில் வரும். அதனால அந்த கேள்வியையும் தவிர்த்திட்டேன். அப்போ மீதியிருந்த அந்த 4 கேள்விகளுக்கு பதில் சொல்லிடலாம்னு நினைக்கிறேன். கேள்விகளுக்குப் போவோமா?

Four movies I would watch over and over again:
அடுத்த வீட்டுப் பெண்; காதலிக்க நேரமில்லை; மைக்கிள் மதன காம ராஜன்; சலங்கை ஒலி

Four TV shows I love to watch:
கால்பந்து; டென்னிஸ்; Bio-graphy; மற்ற தமிழ்க் குப்பைகள(தெரிஞ்சே தப்பு செய்றதில்லையா - அது மாதிரி; அட, சிகரெட் பிடிக்கிறது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்.

Four of my favourite books
Exodus - 3 தடவை; பொன்னியின் செல்வன் - 3 தடவை; Root: - 2தடவை; ‘பழைய’ ஜெயகாந்தன்.

Four of my favourite foods:
அம்மாவின் குருமாக் குழம்பு; வீட்டுக்கார அம்மாவின் பருப்பு-ரசம்; பெரிய மகளின் காஃபி; சின்ன மகளின் டீ.

ஆச்சா, இப்போ அடுத்த கட்டம்: நம்ம மாட்டினது மாதிரி நாம நாலு பேத்த மாட்டணுமாமே. ஒரு ஆளு தப்பிச்சிக்கிட்டாங்க. துளசி, ஊர் - இல்ல - உலகம் சுத்திக்கிட்டு இருக்கிறதால அவங்கள மாட்ட முடியாது. மற்றபடி …

Four People I would like to tag:

1. பெனாத்தல் சுரேஷ்: - முதல் முதல் தருமிக்குப் பின்னூட்டம் இட்டவரில்லையா? அந்த செய்நன்றிக்கடன்

2. இளவஞ்சி: - நல்ல எழுத்துக்கார(ர)னல்லவா? அதற்கு என் மரியாதை.

3. தாணு: - இந்த ‘விளையாட்டு’ என்னென்னு தெரிஞ்சிக்கிறதுக்காக எடுத்த முயற்சிக்கு ஒரு appreciation!

4. பத்மா அர்விந்த்: - உழைப்பால் உயர்ந்தவருக்கு என் மரியாதை.

Tagged மக்களே…இனி உங்க பாடு; மத்தவங்க பாடு. நான் வர்ட்டா..?




Feb 23 2006 10:54 pm | Uncategorized | | edit this
9 Responses
சிங். செயகுமார் Says:
February 23rd, 2006 at 11:22 pm e
தருமி அய்யா ஆட்டத்துல எறங்கியாச்சா?அதுக்குள்ளகெளம்பிடீங்க!

சோம்பேறி பையன் Says:
February 24th, 2006 at 8:06 pm e
என்ன தருமி, நீங்களும் களத்துல இறங்கீட்டீங்களா !!! நான் எனது சங்கிலித்தொடர் பதிவில் உங்களை பற்றி எழுதியிருக்கிறேன்.. பார்க்கவும்..

உங்களுக்கு பிடித்ததில் எனக்கு பிடித்தது : சலங்கை ஒலி..

pot"tea"kadai Says:
February 24th, 2006 at 10:08 pm e
தருமி,
என்னவோ நடக்குது, மர்மமா இருக்குது…ஒன்னுமே புரியல ஒலகத்துல…சங்கிலி…tag…

மைக்கேல் மதன காமராஜன் - உங்களுக்கு பிடித்ததில் எனக்கு பிடித்தது…

ஜோ Says:
February 24th, 2006 at 10:21 pm e
தருமி,
சங்கிலியில உங்கள இழுத்து விட்டேண்ணு கோபத்துல ,சில இடங்கள்ல என்னை வாருன மாதிரி இருக்கு..ம்ம்..கோபம் தணிஞ்சதா?

இளவஞ்சி Says:
February 24th, 2006 at 10:33 pm e
//அம்மாவின் குருமாக் குழம்பு; வீட்டுக்கார அம்மாவின் பருப்பு-ரசம்; பெரிய மகளின் காஃபி; சின்ன மகளின் டீ.// ஆஹா! What a Balanced LIFE!!!

TAG க்கு நன்றி தருமி சார்! 3 நாளைக்கு வெளியூருக்ரு போறேன்! வந்தவுடன் செய்யறேன்…

தாணு Says:
February 24th, 2006 at 10:37 pm e
just saw ur mail. I will write 2morrow

கோ.இராகவன் Says:
February 24th, 2006 at 10:57 pm e
நல்ல பட்டியலுதான்…நீங்களம் இளவஞ்சியைக் கூப்பிட்டிருக்கீங்களா…நானும் கூப்பிட்டிருக்கேன்.

தருமி Says:
February 25th, 2006 at 2:30 pm e
என்ன ஜோ,
இப்படி சொல்லியிருக்கீங்க நானாவது உங்கள வார்ரதாவது. எப்படி எதை வச்சி அப்படி நினைச்சீங்க, ஜோ
ஒருவேளை இதச் சொல்றீங்களோ? - “நாங்க என்ன software ஆளுகளா? இன்னைக்கி அந்த நாடு, அதுக்கு அடுத்து இன்னொரு நாடுன்னு சுத்துறதுக்கு..”// - ஆனா இது வார்ரது இல்லையே…

Snegethy Says:
March 9th, 2006 at 10:38 pm e
Vanakam Tharumi aiya,
nalama?
intha sangili thodar endal enna? ennaum oral kalathila iraki vididaru……anal enna naalu poda endu theriyeleye….yaru thodanginanga….ethavathu rules iruka endu kandu pidichengela?

Ammanta tea akkanta coffee mitcha 2 peruku nan enga poga

Wednesday, February 22, 2006

133. I DON’T BELIEVE IN THE GOD …

NO, I DON’T BELIEVE IN …

….the God who condemns man by surprise in a sin of weakness,
….the God who always demands 100% in all examinations,
….the God who says and feels nothing about the agonsing problems of
suffering humanity,
…. the God who, to make us happy, offers us a happiness divorced from
our human nature,
….the God who can give a verdict only with rule book in his hands,
….the God incapable of smiling at many of man’s awkward mistakes,
….the God who “plays at” condemning,
….the God who “sends” people to hell,
….the God who says, “you will pay for that”,
and above all
the God who makes himself feared.-
-
-
-
-
-

- Taken from Juan Arias’ “THE GOD I DON’T BELIEVE IN”





Feb 22 2006 02:44 pm | மதங்கள் | | edit this
6 Responses
Geetha Sambasivam Says:
February 22nd, 2006 at 4:07 pm e
you had been frightened by your elders in the small age. God is full of love and affection only. No God is punishing anybody. Only people saying like this to show atleast some moralfear.

சுதர்சன் Says:
February 22nd, 2006 at 4:08 pm e
Excellent!

partha Says:
February 22nd, 2006 at 11:49 pm e
படம் போடாம உட்டுட்டீகளே

ஜோ Says:
February 23rd, 2006 at 2:24 pm e


வசந்தன் Says:
February 23rd, 2006 at 2:32 pm e
கடவுளின் முதல் தோல்வி பற்றி ஒரு பதிவு போடப்போகிறேன். (சுட்ட சிந்தனை தான்.)
வந்து பார்த்துப் போங்கள்.

Najee Says:
February 23rd, 2006 at 3:58 pm e
You cannot use electricity only with the positive power. It needs negative as well.
similarly, The Merciest God’s other side of punishment also need to run the lives of creatures.

If no dark, how would u distinguish Light?

Saturday, February 18, 2006

131. ஒரு திடீர் அவசரப் பதிவு

இது ஓர் அவசரமான, rather an unplanned, emotional and spurting பதிவு. ஊர் சுத்திட்டு 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்து டி.வி.யை ஆன் பண்ணிய பிறகுதான் இன்று ‘அன்பே சிவம்’ படம் என்று நினைவுக்கு வந்தது. ஏற்கெனவே இரண்டு முறை பார்த்திருந்தாலும், இன்று என்னவோ அந்த கடைசி 25 நிமிடங்கள் பார்க்கும்போது கண்ணீருக்குள் நடுவேதான் படம் பார்க்க முடிந்தது.

What I wanted to say was this: We, the Tamilians have a great character of not recognizing great talents when the talents are quite amongst us. We are good in erecting statues posthumously.
This guy KAMAL is really great and he has not got the recognition that he deserves, not even 10% of his worth. Need to say more…? வேண்டாம் வேறு ஏதாவது சொல்லிடப் போறேன். இங்கே தகுதிகளுக்கு மரியாதை இல்லை..குப்பைகள் கோபுரம் ஏறுகின்றன. ஏன் இப்படி…?

Friday, February 17, 2006

130. ஜோதிடம்...5: நாடி ஜோதிடம்

ஜோதிடம் தொடர்
மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.


பலரையும் போல நானும் நாடி ஜோதிடம் என்றால் நாடி பார்த்து ஜோதிடம் சொல்லுவார்கள் போலும் என்றுதான் நினைத்திருந்தேன். நாடி பார்த்து வியாதிகள், உடல் நலம் பற்றி கூற முடியும்; இதை வைத்து எப்படி வருங்காலம் உரைப்பார்கள் என்று நினைத்ததுண்டு. பிறகுதான் தெரிந்தது நாடி வந்து ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு, ஏடுகளிலிருந்து பலன் சொல்லுவார்கள் என்று. எது எப்படியோ? நடந்தது எப்படி என்னவென்று கூறிவிட்டு பிறகு மற்ற விஷயங்களுக்கு வருவோம்.

என் நண்பர்கள் இருவர்; வைத்தி, ரவி. இருவருமே ஏறத்தாழ என் கேசு. அதாவது கடவுள் நம்பிக்கை என்று பெரிதாக ஏதுமில்லை. அதற்காக என்னைப் போல எல்லாரிடமும் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பெரிதாகத் தண்டோரா போடுவதும் இல்லை. ரெண்டு பேரும் என்னை மாதிரி இல்லாம, ரொம்பவே நல்ல பசங்க; ஆனால் கடவுள், கோயில், சாமி, பூச்சாண்டி என்று ஈடுபாடு எதுவும் கிடையாது. இந்த இரண்டு பேரில் வைத்தி பேரில் உறவினர்கள் நாடி ஜோதிடம் - இதற்குப் பெயர் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் - பார்த்து, ஒலிப்பேழையில் பலன்கள் பதிந்து கொண்டுவந்து கொடுத்தார்களாம். அதை எனக்குப் போட்டுக் காட்டினான். ஆச்சர்யமாயிருந்தது. கொடுக்கப்பட்டது அவனது பிறந்த நாளும் நேரமும் மட்டுமேதானாம். அவனது குடும்பம், உடன் பிறப்புகள், தாய் தந்தையர் பெயர்கள் என்று 'புட்டு புட்டு' வைத்திருந்தது. இதை பார்த்த பிறகு ரவி தன்னோட கட்டை விரல் கைநாட்டு கொடுத்துப் பார்த்தான். அவனுக்கும் மிகச் சரியான தகவல்கள் தரப் பட்டன. இருவருமே 'பொதுக்காண்டம்' மட்டுமே பார்த்தார்கள். பார்த்தவரை, சொன்னவரை சரியாக இருந்தன. ஆச்சரியம்!!

இது எப்படி? சிலருக்கு இங்கே ஏடு இல்லை; அங்கே போங்கள் என்று கூறிவிடுவார்களாம். அப்படிச் சொல்லப்படும் இடங்களில் இருப்பதாகக் கூறுகிறார்கள். எது எப்படியோ பார்த்த இரண்டு பேருக்கும் ஜோதிடம் சரியாக இருந்தது.

இதுவரை கூறியுள்ளவைகளில், இரண்டாம் பதிவில் நடந்த அந்த 'கண்கட்டு மாயம்' எப்படி நடந்தது? மூன்றாம் பதிவில் சொன்னது போல, 'குரு உத்தியோகம்' என்பதை மட்டுமே சரியாக அந்த ஜோஸ்யர் சொன்னாரே, அது என்ன குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது மாதிரிதானா? இந்தப் பதிவில் சொல்லியுள்ள நாடி ஜோதிடம் எந்த அளவு சரியாக இருக்கின்றது? sampling error என்பது போல தெரிந்த இரண்டு கேசுகளில் மட்டும் சரியாக வந்த விஷயமா?

இப்படி எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பழக்க தோஷத்தில் தமிழ்மணம் பக்கம் போனால் அங்கே 'தமிழினி முத்து' இந்த நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவைப் போட்டிருக்கிறார். ஏன்யா, மதுரக்காரவுகளுக்குள்ள இந்த போட்டின்னு சொல்லலாம்னு அவர் பின்னூட்டப் பெட்டிக்குப் போனால், அங்கே ஹரி ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவுக்கு லின்க் கொடுத்திருக்கார். இதில் ஹரியின் பதிவில் என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவர் சொல்லும் புத்தகத்தைப் படித்தால் ஒரு வேளை தெளிவு கிடைக்கலாம். தமிழினி முத்துவோ தன் சொந்த அனுபவத்தைப் பேசுகிறார். ஆக, எப்படியோ என் கேள்விகளுக்கு தமிழினி முத்து பதிலளித்து விட்டாரெனவே எண்ணுகிறேன்.

மற்றபடி இந்த நாடி ஜோதிடத்தை நம்புகிறவர்களிடம் கேட்டால், மயிர் கூச்செறியும் கதைகள் சொல்கிறார்கள். படிப்பறிவில்லாமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏற்கெனவே நாடி ஜோதிடம் பார்த்த ஒருவரால் தேர்ந்தெடுக்கப் பட்டு, சிக்ஷை பெற்று, அப்படியே ராமாயணத்தை மனப் பாடமாக ஒப்புவித்தார் என்று ஒரு கதை. அகத்தியர் எழுதி, பின் தஞ்சை சரஸ்வதி மஹாலுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து பலருக்கு டிஸ்ட்ரிப்யூட் ஆனதாக இன்னொரு கதை. எனக்குத் தெரிந்த இன்னொருவருக்குக் கல்யாணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த போது அவர் நாடி ஜோதிடம் பார்க்க, அதில் சொன்ன விஷயங்கள் பின்னால் தவறாக ஆனது. இப்படியே முரண்களோடும், ஒருவித ஈர்ப்புடனும் நாடிஜோதிடம் இருந்து வருகிறது.

Thursday, February 16, 2006

129. ஜோஸ்யம்..4: தேடி வந்த ஜோஸ்யர்.



மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.



2001-02-ஆக இருக்கலாம். கல்லூரியில் எனது அறையில் இருந்தேன். அப்போது ஒருவர் என் நண்பரும், உடன் வேலைபார்க்கும் முனைவர் சைலஸைப் பார்க்க வந்தார். நண்பர் அப்போது Studetns Services Committee-ன் convenor. ஒரு டி.வி. ஷோவுக்கு மாணவர்கள் தேவைப்படுவதாக கல்லூரி அலுவலகத்தில் சொன்னதின் பேரில் அவரை அது போன்ற விஷயங்களுக்கு in charge ஆக இருந்த என் நண்பரிடம் அனுப்பியதாகக் கூறினார். சிறிது காத்திருக்கும்படி சொல்லி அவரை அமரச் செய்தேன். உட்கார்ந்திருந்த அவரது தலை எனக்கு மிகவும் பிடித்தது. அதைப்பார்த்து எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவ்வளவு பள பளன்னு, வழு வழுன்னு இருந்திச்சு.

அவர் காத்திருக்க, நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் பையிலிருந்து சின்னப் பசங்க ஜியோமெட்ரி பாக்ஸில் இருக்குமே டிவைடர் அது மாதிரி, ஆனால் கொஞ்சம் பெரிய சைஸில் ஒன்றை எடுத்தார். அதைக் கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் 'ஜுஜா' வேலை காண்பித்தார். எனக்கு ஒரு curiosity வர வைக்கவே அவர் அப்படி செய்தார் என்று நன்றாகவே தெரிந்தது. எனக்கும் வந்தே விட்டது. ஆகவே அவரைப் பார்த்து 'என்னங்க பண்றீங்க'ன்னு கேட்டுட்டேன். மனுஷன் ஆரம்பிச்சிட்டார். மனுஷ உடம்பைச் சுத்தி எனெர்ஜி இருக்கு; அத நான் இதால அளந்து அதை வச்சி நோயக் குணப்படுத்தி விடுவேன்...அது இதுன்னு ஒரே உதார்! இப்போ எதுக்கு வந்திருக்கிறார் என்றும் கூறினார். பெயர் ராசி பற்றி ஒரு டி.வி.ஷோ நடத்துவதாகவும், அதற்கு audience-ஆக மாணவர்கள் வேண்டும் என்றும் கூறினார். அப்போது தற்செயலாக அறைக்கு ஒரு மாணவன் வந்தான். அவன் சமீபத்தில்தான் சுரேஷ் என்ற தன் பெயரை பெயர் ராசி பார்த்து மாற்றி இருந்தான்; அதோடு ஒரு புதிய கல் மோதிரம் ஒன்றும் அணிந்திருந்தான். ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அவனிடம் இந்த நம்பிக்கைகள் பற்றிப் பேசியிருந்தேன் - (உண்மையில அவனை அதற்காகத் திட்டியிருந்தேன்). அவரிடம் உங்களுக்கு ஏற்ற ஆள் இவன்தான்; பேசிக்கொள்ளுங்கள் என்று அவனை அவரிடம் மாட்டி விட்டேன். அவன் மோதிரத்தை வாங்கி அதையும் தன் 'கருவி'மூலம் பரிசோதித்து, அவன் எனெர்ஜியையும் 'அளந்து' மோதிரத்தில் நிறைய எனர்ஜி இருக்கு என்றார். எனக்கு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நீங்கள் அளக்கும் எனெர்ஜியின் unit - அளவுகோல் - என்ன என்றேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாதவர், நான் கேள்வியை விளக்கிய பிறகு ஏதோ சொன்னார். யாரும் கேள்விப்பட்டிருக்க முடியாத பெயர். மாணவனிடம் microgram அளவுக்கு நிறுக்கப் பயன்படும் monobalance எவ்வளவு நுண்ணியதாக, sophisticated and intricate ஆக இருக்கிறது; ஆனால் இந்த மிக மிக நுண்ணிய அளவில் இருப்பதாக இவர் கூறும் அந்த எனெர்ஜியை இந்த ordinary looking (நானே கையில் வாங்கிப் பார்த்தேன். It was not at all any instrument, worth its name)கருவியால் அளக்கிறேன் என்கிறார் என்றேன். மனுஷனுக்கு கோபம் வந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தூபம் போட்டேன்.

இதற்கும் எங்கள் கல்லூரி மாண்வர்களுக்கும் என்ன தொடர்பு என்றேன். என்ன ஷோ? மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்றேன். மாணவர்கள் ஆடியன்ஸாக இருந்து கேள்விகள் கேட்கலாம்; அவர்களுக்கு பெயர் மாற்ற இலவச ஆலோசனைகள் கூறுவோம் என்றார். ஸ்வரூப்பா என்று நினைக்கிறேன். வெற்றிகரமாக இன்னும் டி.வி.யில் ஷோ நடத்தும் அந்த அழகான பெண்மணியின் ஷோவுக்குத்தான் இவர் ஆள் பிடிப்பதாகக் கூறினார்.live show என்றால் நான்கூட வந்து கேள்வி கேட்கலாம் என்றேன். ஏற்கெனவே கோபத்தில் இருந்த மனிதர் உங்கள மாதிரி ஆளையெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அதற்குள் நண்பர் வரவே, அவரிடம் தன் வேண்டுகோளை வைத்தார். நண்பர் பாவம்..டி.வி. எல்லாம் பார்க்காத மனுஷர். இவர் வேறு சரியென்று சொல்லிவிடக் கூடாதே என்று நானே, 'இந்த மாதிரி மூட நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி ரோட்டில் போகும் ஆட்களை வைத்து நடத்திக் கொள்ளுங்கள்; ஏன் மாணவர்களைக் கெடுக்கிறீர்கள்' என்றேன். மனுஷனுக்கு ரொம்ப கோபம் ஆகிப் போச்சு. 'உங்கள் மாதிரி ஆட்களெல்லாம்.....என்று ஏதோ சொல்லி அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனார். இந்த மனிதர்தான் இப்போது அதே டி.வி.யில் எனெர்ஜி மருத்துவம் என்று ஒரு ஷோ நடத்துகிறார். பெயரென்ன...Dr. (?!)சத்திய மூர்த்தியோ என்னவோ...?

Wednesday, February 15, 2006

120. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…3

originally posted on jan 1st, '06

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.

1990-களின் ஆரம்பம் வரை வேறு மறுபடி ஜோஸ்ய அனுபவம் வர வாய்ப்பில்லாமல் போச்சுது. ஏதோ நாம் உண்டு நம்ம வேலை உண்டு என்று போச்சுதுன்னு வச்சுக்கோங்களேன். 90 / 91-ல் நண்பன் ஒருவனது திருமணத்தில் தலையிட வேண்டியதாச்சு.


பெண் வீட்டுக்காரர்களுக்கும் வேண்டியவனாகி விட்டேன். இரண்டு பேர் வீட்டுக்கும் நடுவில் பாலம் போடற வேலை -அது அனுமான் வேலையா, இல்லை அணில் வேலையா என்று தெரியாது.

ஆரம்ப வேலைகளை ஆரம்பிச்சதும், அடுத்த கட்டத்தில் ஜாதகப் பொருத்தம் என்ற கட்டம் வந்தது. இரு வீட்டாரும் தங்கள் தங்கள் ஜாதகக்கட்டோடு கிளம்பிப் போய் வேறு வேறு ரிசல்ட்களோடு வந்தார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் என்ற கண்டுபிடிப்போடு வர, மாப்பிள்ளை வீட்டார் ஒன்றுக்கு இரண்டு ஜோஸ்யர்களைக் கேட்க, அவர்கள் இரண்டு பேருமே, சூடம் அடிச்சி சொல்லாத குறையாக மாப்பிள்ளைக்கு clean chit கொடுத்தார்கள். பெண் வீட்டாருக்கு நம்பிக்கையில்லை; அவர்களைக் குறை சொல்ல முடியுமா என்ன?

இப்போது நம்ம தலை உருள ஆரம்பிச்சது. கட்டப் பஞ்சாயத்துதான். தோள்ல துண்டுமட்டும் இல்லை; மற்றபடி நாம சொன்ன தீர்ப்பு: பொதுவா ஒரு ஜோஸ்யரிடம் செல்வது என்பது. அதேபோல இரண்டு வீட்டுக்காரர்களும் ஒரு வழியாக ஒரு ஜோஸ்யரைத் தேர்ந்தெடுக்க, அவரிடம் நானும் (பெண் வீட்டு சார்பில்..) இன்னொருவரும் (மாப்பிள்ளை வீட்டு சார்பில்..)போய் ஜோஸ்யம் கேட்டு வருவது என்று முடிவாச்சி.

தேர்ந்தெடுத்த ஜோஸ்யர் அலங்கா(ர)நல்லூரில் இருந்தார். அங்கே இருக்கும் சர்க்கரை ஆலையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, ஜோஸ்யராக உருவெடுத்தவர் என்று கேள்விப் பட்டேன். அங்கேபோனதும் உள்ளே அழைக்கப்பட்டோம். ஏற்கெனவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். மோடி மஸ்தான் அவனது ஆட்களையே கூட்டத்தில் உட்காரவைத்து சில வித்தைகள் காண்பிப்பானாமே அது மாதிரிதான் அந்த ஆட்கள்போலும். ஜோஸ்யர் சொன்னதெற்கெல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவதற்காகவே அவர்கள் அங்கே இருப்பார்கள் போலும். அப்பப்போ ஏதாவது சொல்லி நன்றாகவே பில்ட்-அப் கொடுத்தார்கள்.

அப்போது ஒரு பிரபல நடிகரின் திருமணச் சேதிகள் காற்று வெளியில் பல வடிவங்களில், வண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தன. இவர்தான் அந்த நடிகரின் ஆஸ்தான ஜோஸ்யராம். அந்த நடிகரைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட நடிகையை, அவர் கல்யாணம் செய்யக்கூடாதென இவர்தான் தடை போட்டதாம். அந்த நடிகையின் தாய் லட்சக்கணக்கில் பணம் தர்ரேன்னு சொன்னாலும், இவர் தன் ஜோஸ்ய தர்மத்தின்படி அதை முற்றுமாக மறுத்துவிட்டாராம். கடைசியில் இவர் சொன்னது மாதிரிதான் அந்த நடிகர் வேறு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாராம். ‘பாருங்க ராஜா, இனிமே **** எப்படி ஆகப் போறார்; என்னவா ஆகப்போறார்னு பாருங்கன்னார். நம்ம ‘பில்ட்-அப்’ ஆட்களும் ‘ஐயா, சொன்னதெல்லாமே எப்பவுமே அப்படியப்படியேதான நடக்குது’என்றார்கள்.

பிறகு ஒரு வழியாக எங்கள் பக்கம் திரும்பினார். ஜாதகத்தைக் கொடுத்தோம். சும்மா சொல்லக்கூடாது; முதலடியே நெத்தியடிதான்! இந்த ஜாதகக்காரர் குரு ஸ்தானத்தில் இருப்பாரே என்றார். நண்பனும் கல்லூரி ஆசிரியர். அசந்து விட்டேன், போங்கள். கொஞ்சம் ஜோஸ்யத்தில் நம்பிக்கை துளிர்க்குமோ அப்டின்னு நானே நினச்சேன். ஆனால், அதுக்குப் பிறகு சொன்னவைகள் எல்லாமே ஏற்கெனவே சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானவையாகவோ,வித்தியாசமாகவோ இருந்தன. செவ்வாய் தோஷம் பற்றித்தான் கேட்க வந்திருந்தோம். அதைப் பற்றி ஏதும் அவர் கூறவில்லை. நாங்களாகவே நடந்த விஷயங்களைச் சொன்னோம். அதற்குப் பிறகு வேறு ஏதோ கணக்குகள் போட்டார்; கூட்டினார்; கழித்தார். பிறகு, குழந்தை பிறந்தா ஆணாக இருக்கும்; அப்படி ஒருவேளை இல்லாட்டி, பெண்ணாக இருக்கும்னு ஜோஸ்யம் சொல்லுவாங்களே அது மாதிரி ‘பொத்தாம் பொதுவாக’ செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்ல முடியாதுன்னாலும், அந்த ‘trace’ இருக்கிறது மாதிரி தெரியுது என்று அவரும் குழம்பி, எங்களையும் குழப்பி விட்டார். எதுக்கும் வாழை மரத்துக்கு முதல் தாலி கட்டி, பிறகு ‘உண்மைத் தாலியை’ பெண்ணுக்குக் கட்டுங்க என்றார். இதைத்தான் முதல்லேயே பெண்வீட்டுக்காரர்கள் சொல்லியிருந்தார்கள். நாங்க ‘பஞ்சாயத்துக்காரர்கள்’ வெளியே வந்து என்ன செய்வது என்று கொஞ்சம் குழம்பினோம். தோஷம் இருக்குன்னு சொன்னா, பெண்வீட்டார் சொன்னது சரின்னு ஆயிடும்; இல்லைன்னா, மாப்பிள்ளை வீட்டார் பக்கம் சாயும். ஜோஸ்யர் எங்கள குழப்பினதுமாதிரி நாங்களும் திருமண வீட்டாரைக் குழப்பிவிடுவது என்று முடிவெடுத்தோம்.
பெண்வீட்டாரின் ஜோஸ்யர் + நம்ம அலங்கா நல்லூர் ஜோஸ்யர் vs மாப்பிள்ளை வீட்டார் பார்த்த இரண்டு ஜோஸ்யர்கள் என்று கணக்கு என்னவோ 2:2 என்ற கணக்கில் சரிக்குச் சரியாக இருந்தாலும், ‘எதுக்கு வம்பு’ என்று ‘ரெட்டைக் கல்யாணத்திற்கு’
ஒருவழியா இரண்டு வீட்டாரையும் பார்த்துப் பேசி சம்மதிக்க வைத்து…இனிதே கல்யாணம் நடந்தது.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jan 01 2006 09:10 pm | சொந்தக்கதை.. and சமூகம் | | edit this
2 Responses
துளசி கோபால் Says:
January 2nd, 2006 at 1:40 am e
இப்ப அந்த ஜோடி நல்லாத்தானே இருக்காங்க?

ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கறதுன்றது பெரிய சேவை.

ஜெயிச்சுட்டீங்க தருமி.

கீதா Says:
January 4th, 2006 at 10:15 pm e
அந்த புகைப்படம் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப attractive.

அன்புடன்
கீதா