Saturday, June 27, 2009

319. "CLASHES START WHEN RELIGION IS EXPLOITED FOR POLITICAL PURPOSES

*


*
ராம் புனியானி் - இவரைப் பற்றியும், மதுரை காந்தி நினைவகத்தில் அவர் பேசியது பற்றியும் எழுதணும்னு நினத்திருந்தேன். ஆனால், இப்போ அவரது பேச்சை இந்து தினசரியில் வந்ததால் அதையே இங்கே போட்டிட நினைத்தேன். இதோ ...

Real agenda of communal groups in India is to eliminate democracy, says activist


Date:27/06/2009 URL: http://www.thehindu.com/2009/06/27/stories/2009062756220600.htm Back


INSIGHT: Ram Punyani, former Professor of Indian Institute of Technology, Bombay, delivering a lecture in Madurai.

MADURAI: Terrorism is not a product or an outcome of religion but the socio-politico-economic conditions related to the religion, said Ram Punyani, an anti-communal activist and former Professor of Indian Institute of Technology, Bombay.

Delivering a special lecture, ‘Religious Fundamentalism- The Bane of Future India,’ here on Wednesday, Mr. Punyani went back to the days of freedom movement and recalled that it was in Madurai that the Mahatma decided to stop wearing modern clothes and adorned the attire of the peasantry class and the downtrodden of the nation, thus symbolising the conditions of the poor. It was Gandhi’s genius that made the nation come together.

It was highly ironical to find that Gandhi, being a supporter of Sanatan Dharma, was against the idea of a Hindu nation whereas Mohammed Ali Jinnah, a non-practicing Muslim, asked for an Islamic republic. He said that religion remained a multi-factorial phenomenon, and homogeneity the life pattern of members of different religious groups. Religious values did not clash with each other but supplemented one another. Clashes started when religion was exploited for political purposes.

During the freedom movement, the rising classes, which comprised the Indian National Congress, Republican Party of India and Bhagat Singh’s Hindustan Socialist Republic Association, functioned on the commonality that they had no basis on religion but on nation. However, on the other hand, declining classes, which had Muslim League and Hindu Maha Sabha, had its basis on religion and nation, he said.

The rising classes had every section of the social order represented but on the other hand the declining classes had a few section of the elites and religious groups in mind.

Prof. Puniyani opined that problems of fundamentalism had decreased to some extent and the defeat of the Bharatiya Janata Party in the elections would not end the communal problems of India.

The real agenda of the communal groups in India was to eliminate democracy. Secular forces must bring back the social agenda where a condition was attained, making the Dalits, adivasis, minorities, women and workers get fully represented.

© Copyright 2000 - 2009 The Hindu



*

*

Tuesday, June 23, 2009

318. பெயரில்லாத பதிவர்களுக்கு ....

*

http://www.hindu.com/2009/06/23/stories/2009062354030900.htm

Bloggers ordered to drop cloak of secrecy

Hasan Suroor

Critics say it is a blow to whistle-blowers who will now be deterred from speaking out.



...........anonymous blogs and “tweets” bloggers in Britain were stripped of their right to anonymity after a shock court verdict.

In a judgment that, many believe, strikes at the heart of free speech and sets a dangerous precedent, the High Court ruled that bloggers could not expect to operate behind a cloak of secrecy because blogging was not a “private activity.”

Bloggers are furious and some have gone as far as to liken the ruling to a form of covert censorship arguing that it would “kill off” independent voices and take the fun out of blogging as people would be careful about what they write.

..........

Meanwhile, it is true — as some have argued — that anonymity is often abused by bloggers and there is need to regulate them. But is a ban really the answer? For, aren’t all freedoms, ultimately, open to abuse?

..............................

ஆக, லண்டனில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இது. பதிவர்கள் தங்கள் சொந்தப் பெயரில்தான் பதிவிட வேண்டும்.

எதிர்ப்பு, அது இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். யார் எந்தப் பெயரில் எழுதுகிறார்கள் என்றெல்லாமா யாரும் சோதனை செய்துவிட முடியும்?

................................


*

Tuesday, June 16, 2009

317. கடவுள் என்றொரு மாயை ... 7

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================


Chapter V. THE ROOTS OF RELIGION

*
நாமும் டார்வினியனின் பரிணாமக் கொள்கைகளின் இறுதிப்படைப்பே என்பதன் மூலம், நாம் ஏன் அல்லது எந்த அழுத்தங்களுக்கு உட்பட்டு, (natural selection) இயற்கையின் தேர்வின் உந்துதலால் இந்த மதம் என்பது எப்படி ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

*
இப்பகுதியில், டார்வினின் கொள்கைப்படி எப்படி மதங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்பதெல்லாம் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. Direct Advantages of Religion; Group Selection, Religion as a by-product of something else - போன்ற தலைப்புகள் இதில் வருபவையே. விட்டில் பூச்சிகள் விளக்கொளியில் விழுவது எதற்கு? என்பது போன்றவைகளும், மீமீ-களும் ..., genes, DNA, ... இன்னும் பல.

*
மக்களுக்குள்ளே இருக்கும் மாறு்பட்ட இனச்சேர்க்கை ஈர்ப்பு போலவே, மத நம்பிக்கைகள் மக்க்ளுக்குள்ளே இருக்கும் ஒரு பரவலான விஷயம். ஆயினும், இரு வித நம்பிக்கைகளுமே பலவித மாறுபட்ட விஷயங்களுக்கு உட்பட்டதாயிருக்கும்.

*
மத நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது நம்பிக்கை மன அழுத்தத்தால் ஏற்படும் பல வாழ்வுச் சிக்கல்களிடமிருந்து விடுபட உதவுகின்றது.

*
George Bernard Shaw: ஒரு மத நம்பிக்கையற்றவனை விடவும் மத நம்பிக்கையுள்ளவன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறானென்றால், அது ஒரு குடிகாரன் சாதாரணமாக இருப்பவனை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறானென்று பொருள்.

*
கண்முன்னால் தெரிந்த சில மதத்தொடர்பான செயல்கள், ஆச்சரியங்கள் எல்லாமே மனித மூளையின் (temporal lobe epilepsy) பிறழ்வே.

*


நூலின் இந்தப் பகுதியே டார்வினின் கோட்பாடே இயற்கையின் தேர்தல் விதிகளில் (Natural Selection) தேவையற்றவைகளுக்கு இடமேயில்லை என்ற தொடர் விதியை வலியுறுத்தும். அப்படியானால் மதங்களால் ஏதோ ஒரு நன்மை இருப்பதால்தான் அது இத்துணை காலமும் இருந்து வந்துள்ளது. மதம் எப்படியோ எதனோ ஒன்றின் பகுதிப் பொருளாக (by-product) இருந்து வந்துள்ளது. மதங்களினால் எந்த நேரடிப் பயனுமின்றி இருப்பினும், அதன்பகுதிப் பொருள் ஏதேனும் ஒரு பயனோடு இருக்க வேண்டும்.

*

டாக்கின்ஸ் இந்த நிலையை விளக்கில் விழும் விட்டில் பூச்சியின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு விளக்குகிறார். வான்வழி விளக்குகளோடு பலகாலமாய் பழகிய விட்டில் பூச்சிகள் சாதாரண காலங்களில் இன்றும் அந்த விளக்கொளிகோடுகளோதான் தங்களது இன்றைய இடமாற்றங்களைச் செய்து கொள்கின்றன. இருப்பினும் நாம் காணும் சூழலில் அவைகள் நம் முன் உள்ள விளக்கொளியைப் புரிந்து கொள்ளாது, ஈர்க்கப் பட்டு மாய்ந்து விடுகின்றன.

இவைகள் ஒன்றும் தற்கொலைகளல்ல; அவைகள் எல்லாமே அவைகள் உடம்பிலுள்ள காந்த சக்தியின் தவறுதலான வழிகாட்டல்கள் ஆகும். (It never was right to call it suicide. It is misfiring by-product of a normally useful compass.)

*

விளக்கில் விழுந்து சாகும் இந்தப் பூச்சிகளைப் போலவே, ஆயிரக்கணக்கான மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்காகவே சாகிறார்கள், சாகடிக்கிறார்கள். அதைப் பார்த்து ஆச்சரியப் படுவதோடு தவறான கேள்விகளையும் எழுப்பிக் கொண்டுள்ளோம்.

*

மதங்கள் மற்றொன்றின் பகுதிப் பொருள் என்றால் எதனுடைய பகுதிப் பொருளாக இருக்க வேண்டும்?

*

குழந்தைகள் மனது போல் Casabianca கதை போலவும், இன்னும் சில கதைகள் போலவும் சொல்லிச் சொல்லியே இளம் வயதில் நம் குழந்தைகள் எப்படி 'கீழ்ப்படிதலுள்ள" பிள்ளைகளாக இருக்க வேண்டுமெனச் சொல்லித் தருகிறோம். இயல்பிலேயே உள்ள அடிமைத்தனமான கீழ்ப்படிதலை (slavish gullibility) அவர்களிடம் ஊட்டி விடுகிறோம். குழந்தைகளும் அவைகளை அப்படியே எடுத்துக் கொள்கின்றன. 'முதலை இருக்கும் நீரில் விளையாடப் போகக் கூடாது என்பதற்கும், ஒரு ஆடு வெட்டி பலி கொடுக்கவில்லையென்றால் இந்த ஆண்டு மாரியாத்தா மழை தராது' என்ற இரண்டிற்கும் அந்தக் குழந்தைக்கு எப்படி வேற்றுமை காண முடியும்? இரண்டுமே மரியாதைக்குரிய ஒரே வழியிலிருந்துதானே வருகின்றன.

*

ஒரு வேடிக்கையான கதை:
Religion Explained என்ற நூலை எழுதிய Pascal Boyer Cameroon-ல் உள்ள Fang என்ற மக்களைப் பற்றி ஆராய்ந்தவர். அவரு ஒரு முறை தன் நண்பர்கள் குழாமில், எப்படி அவர்கள் மத்தியில் மந்திரவாதிகள் பல கேடுகளை விளைவிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு கிறித்துவ மதக்காரர், 'எப்படித்தான் இப்படி மூடத்தனமான விஷயங்களை மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களோ?' என்று வியந்த போது டாக்கின்ஸுக்கு நினைவுக்கு் வந்த சில விஷயங்கள்:

* தகப்பன் இல்லாமல் கன்னிக்கு ஒரு குழந்தை பிறந்தது. நம்ம ஐயப்பன், ஆறுமுகம், கர்ணன் பிறந்த கதைகள் மாதிரி ...
* செத்துப் போன லாசரை உயிர்ப்பிப்பது ...
* செத்து மூணு நாள் கழிச்சி உயிரோடு வந்தது.
*** இப்படியாக .....

*
"பெரியவர்களை நம்புங்கள்". இது குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் ஒரு மதிப்பான வாதம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இது பயனற்ற ஒன்றாகலாம்.

*
கண்கள் பார்ப்பதற்கும், காதுகள் கேட்பதற்கும் என்பது போல் மூளை என்பதும் பல உறுப்புக்களின் ஒரு தொகுதி; இது, பல - specialist in data-processing needs. உறவுகளுக்கும், எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கவும் ... இப்படி பல காரியங்களுக்கானது.

*
Paul Bloom, ஒரு மனோதத்துவர்; இவர் குழந்தைகள் "இரட்டை மனக்காரர்கள்" (dualistic mind) என்ற தத்துவக்காரர்.

மதத்தைக் கட்டிப் பிடிக்க வல்லது நம் மனது என்பாரிவர்..

நம் இரட்டை மனதால் நாம் 'ஆன்மா' என்பது நம்முடம்பில் தங்கியுள்ளது என்பதை நம்புவோம்.

*
ஒரு குழந்தை எந்த அடிப்படைக் குணங்களோடு வளர்கிறதோ, அதே குணங்களை அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துச் செல்லும்.

*
அழியா பிறவி என்பது நம் ஆழ்ந்த மனத்தின் ஒரு வெளிப்பாடு.

*
Martin Luther: காரண காரியங்கள் மதங்களின் நேர் எதிரி. "காரணம் (reason) என்பது நம்பிக்கைக்கு நேர் எதிரானது. அவைகள் நம்பிக்கைக்கான ஆன்மாவுக்குரிய விஷயங்களில் நேர் எதிரி; கடவுளிடமிருந்து வரும் எல்லா விஷயங்களுக்கும் அவைகள் நேர் எதிர். ... ஒரு நல்ல கிறித்துவனாக இருக்க வேண்டியவன் தன் கண்களை இந்த காரணங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வெண்டும். .. காரணங்கள் எல்லா கிறித்துவர்களாலும் அழித்துப் போட வேண்டிய விஷயம்.

*
Cargo cults என்பதிலிருந்து சில சான்றுகள் தருகிறார். அதில் ஒன்று John Frum என்ற ஒரு 'தேவமகனை"ப் பற்றியது. நடந்தது Tanna in New Hebries. அவருக்காக 19 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஒருவரை அதைப் பற்றிக் கேட்ட போது, 'நீங்கள் இரண்டாயிரம் வருடங்களாகக் காத்திருக்கும்போது 19 வருஷம் என்பது பெரிதா?' என்று கேட்டிருக்கிறார்.

* இந்த வித cultகளைப் பற்றிப் பேசும் டாக்கின்ஸ் இதிலிருந்து மதங்கள் எப்படி ஆரம்பித்திருக்க முடியும் என்பதற்குரிய நான்கு காரணங்களைக் கூறுகிறார்:
1. இந்த வித குழு அமைப்புகள் (cults)மிக மிக வேகமாக வளரக்கூடியவை.
2. இக்குழுக்களின் ஆரம்ப கால விஷயங்கள் எப்போதுமே பின் தள்ளப் படக்கூடியவை.
3. இதுபோன்ற பல குழுக்கள் ஆரம்பிப்பதை எப்போதும் காண முடியும்.
4. இதைப் போன்றே எல்லாவித மதங்களும் ஆரம்பித்து, வளர்ந்து வந்தன என்பதைக் காண முடிகிறது.

*

அடுத்த பதிவு:

THE ROOTS OF MORALITY;
WHY ARE WE GOOD?

241 - 267










*

Monday, June 08, 2009

316. இளைய தளபதி அரசியலுக்கு வர்ராராமே ... வரட்டும் ..

*
Roger Federer முந்தா நாள் ராத்திரி பார்த்தேன். யாரோ Mathiue அப்டின்னு ஒருத்தரோடு ஆடி முதல் செட் போச்சு; ஆனா ரெண்டாவது செட்டில் நல்லா அடிச்சி ஜெயிக்கிறது மாதிரி வந்ததும் நான் படுக்கப் போய்ட்டேன். தல ஆட்டம் முன்னால் போல இல்ல. கடைசிவரை தேறுவாரா? மாட்டார்னு நினைக்கிறேன். ஜோகோவிச் போயாச்சி ... இவரு எப்படியோ?

=========================================

எப்படியோ, Roger Federer அதுக்குப் பிறகு ஜெயிச்சிட்டார். ஆனா கடைசி வரை வருவாரான்னு நினச்சிக்கிட்டு உக்கார்ந்து பார்த்தா, நாடலும் ரொம்ப தடுமாறுகிறார். முதல் செட் அவுட். ரெண்டாவதில தேறி இருக்கார். ஆனாலும் முதல் இரு செட்டுலயும் lead-footed Nadal! பார்ப்போம்.

=========================================

நம்ம சினிமா சண்டைக்காட்சி எடுக்கிற ஆளுகளுக்கு மட்டும் ஒரே ஒரு வார்த்தை. அந்த matrix, crouching tiger மாதிரி படங்கள் வந்தாலும் வந்தாச்சு, நம்ம தமிழ்ப் படங்களில் நம்ம தலைகள் ஒரு அடி அடிச்சா எதிர்த்தரப்பு மக்கள் எல்லோரும் எப்படியும் காத்தில பறந்து போய் ஒரு முப்பது நாப்பது அடி தள்ளி்ப் போய் விழுகுறாங்க. என்ன ஸ்பீடு'ப்பா!

இந்த கயிறு கட்டி இழுக்குறதை நிப்பாட்டி நிஜமா சண்டைக் காட்சி மாதிரி எடுக்கப் படாதா?
ப்ளீஸ் ...!

==========================================


நம்ம இளைய தளபதி அரசியலுக்கு வர்ராராம்ல. இந்த மாதம் அவரது பிறந்த நாளில் புதுக் கட்சி ஆரம்பிக்குதாம். அப்டின்னா, அநேகமாக, 2011-ல் அவருதான் பிரதமரு .. அடச்சீ .. முதல்வரு்.

நல்லாத்தான் இருக்கும்.

இப்ப பாருங்க நெப்போலியன் மந்திரிப் பதவில இருக்கிறவரை நடிக்க மாட்டேன்னுட்டார். அதெல்லாம் ஒரு நெஞ்சழுத்தம்தான். அதுமாதிரி நம்ம ஈனா தானாவும் வந்திருவாரோன்னு சிலருக்குப் பயம். அந்தப் பயத்தில அவரு அரசியலுக்கு வரக்கூடாது என்றாங்க. ஆனா, பாருங்களேன் .. தலைவர் கட்சி ஆரம்பிக்கிறார்; பதவியைப் பிடிக்கிறார்; அதுக்குப் பிறகு பாருங்களேன். தமிழ்நாடு பூராவும் ஒரே 'கில்லி' ஆட்டம்தான். இவருக்கு ஏதாவது புதுப்பட்டம் கொடுக்கணும்; 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' இல்லை. வேற என்ன கொடுக்கலாம். யோசிக்கணும். அந்த வேலையும் நிறைய இருக்கு.

அதோட நம்ம ஈனா தானாவை நம்பி இருக்கேன் இன்னொரு விஷயத்துக்கும். இவர் வர்ர வேகத்தைப் பார்த்தா அப்படியே நம்ம தனுஷ், சிம்பு, விஷால், பரத் .. இன்னும் பலர் .. இப்படி பலரையும் தன் கட்சிக்கு வரவழைச்சிக்குவார். அப்படியே இல்லைன்னா கூட இவங்க எல்லாரும் தனிக் கட்சி ஆரம்பிச்சிருவாங்க. நான் நினைக்கிறேன், தனுஷ், சிம்பு ரெண்டுபேரும் தனித் தனிக் கட்சிதான். அதான் நல்லா இருக்கும். எப்படியோ நாடு நல்லா இருக்கப் போகுது.

எப்படா இவங்க எல்லாரும் தனிக் கட்சிகள் ஆரம்பிப்பாங்க; நாடு முன்னேறும்னு ஒரு துடிப்போடு இருக்கேன்.

பொறாமைப் படாதவங்க எல்லாரும் ஒரே அணியில் இருப்போம்; வாருங்கள்.

===========================================

நாடல் பாவம் ... ஐந்தாம் முறை தொடர் வெற்றிக்கான வாய்ப்பு போச்சு. ரெண்டு பேருடைய பேட்டி சண்டை நல்லாத்தான் இருந்திச்சி ...

============================================

இப்போ மயிலில் வந்த ஜோக்:
What is confidence????

A hypothetical situation where 20 CEOs board an airplane and are told that
the flight that they are about to take is the first-ever to feature
pilotless technology: It is an uncrewed aircraft. Each one of the CEOs is
then told, privately, that their company's software is running the
aircraft's automatic pilot system. Nineteen of the CEOs promptly leave the
aircraft, each offering a different type of excuse.

One CEO alone remains on board the jet, seeming very calm indeed. Asked why
he is so confident in this first uncrewed flight,

he replies :

"If it is the same software that is developed by my company's IT systems department, this plane won't even take off." !!!!

That is called Confidence!!!


=========================================
8.6.09

பெடரர் ஜெயிச்சாச்சு. எல்லா ஸ்லாம்களிலும் வெற்றி. சாம்ப்ராஸின் 14 வெற்றிக் கோப்பைகளுக்கு ஈடு கொடுத்தாச்சி. இன்னைக்கு அழுகை ரொம்பவே. நிறைய பாய்ண்டுகள் drop shots-ல கிடைச்சிது.
எதிர்ப் போட்டியாளர் சோடர்லிங் -போட்டி ஓரளவு நல்லா இருந்தாலும் - நல்ல பேட்டி கொடுத்தார்;

==========================================

லியாண்டர் ப்யாஸ் மறுபடி ஒரு ஸ்லாம் வெற்றி. முதல் செட்டில் கண்ணில் நல்ல அடி. அந்த செட் போக, அடுத்த இரண்டிலும் வெற்றி. முதலில் ஓடி பழைய பார்ட்னர் நவரத்திலோவாவிற்குப் பார்த்தது நல்லா இருந்திச்சி. ஆனாலும் ப்யாஸ் தன் பார்ட்னரைத் தூக்க முயற்சித்தது எதுக்கு? :)

==============================================

டென்னிஸ் முடிஞ்ச பிறகு "நீயா நானா?" பார்த்தேன். வயசான பெற்றோர், இளம் பிள்ளைகள் இவர்களுக்குக்கேயான ஒரு உரையாடல்.

ஏன் வயசானவங்க (?) எல்லாரும் இப்படி 'அழுது வடியிறாங்க'? ஒருவேளை வயசாயிரிச்சின்னா அப்படித்தானிருக்குமோ? தெரியலை!

இதுக்குத்தான் ஒழுங்கா நான் முன்பே சொன்னது மாதிரி 192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY*** இருக்க வேண்டியதுதானே!

===================================================



*