Monday, November 29, 2010

459. அமினா - த.மு.எ.க.சங்கத்தின் விருது பெற்ற விழா

*

அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...


*
Image and video hosting by TinyPic




27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால்  அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.

Friday, November 19, 2010

457. நம் கண்ணைத் திறக்க நமக்கு ஓர் உரைகல் தேவை

*

இப்பதிவில்  shanawazkhan, G u l a m, Haja என்ற மூவர் கொடுத்துள்ள சில விவாதங்களுக்குப் பதில் கூற ஆரம்பித்து, அது நீளமாக அமைந்ததால் அதை ஒரு தனியிடுகையாக என் பதிவில் இடுகிறேன். அவர்கள் விவாதங்களை நீல வண்ணத்தில் கொடுத்துள்ளேன்.
I
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (shanawazkhan)

நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளீர்கள். ஒரு மனைவியோடு இருப்பவன் பல பெண்களோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். அதைத் தடுக்க 4 மனைவிகள் !!!!!!!!!!!!!! - நல்ல தத்துவம்.

எனக்குத் தெரிந்த ஆண்கள் - இஸ்லாமியரையும் சேர்த்து - ஒரு பொண்டாட்டிக்காரங்கதான். நீங்க சொல்றது அதில் யாருக்கும் பொருத்தமில்லை. நீங்கள் யாரை நினைத்து இப்படி சொன்னீர்களோ! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிறீர்களோ?

//பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், ... இதுப் போன்ற அவல நிலை தோன்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கூறிய செய்தி தான் இந்த 4 திருமணம்.// _ Haja

அடுத்த நச் தத்துவம். நீங்க சொல்ற மாதிரி 4 திருமணம் பண்ற பசங்க நிச்சயமா அதோடு நிக்க மாட்டாங்க. அரபு நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வந்து, சில நாட்களுக்குத் திருமணம் செஞ்சு பொண்ணுகளை விட்டுட்டு போனதாக சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. உங்க மதத்தில் அந்த மாதிரி திருமணத்திற்கு ஏதோ ஒரு பெயர் இருப்பதாகப்  படித்தேன். (பெயர் என்ன?) அவங்க ஊர்ல நாலு இருந்தும் பத்தலைன்னு இங்க வந்தாங்க அவங்க. அவுத்து உட்டுட்டா, மேய்ற மாடு அப்படித்தான் எங்க வேணும்னாலும் எபப்டி வேணும்னாலும் மேயும்.

நீங்க சொன்னது என்ன philosophy-ன்னு எனக்கு தெரியவில்லை. பொதுவாக எல்லா ஆண்களையும் கீழ்த்தரத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.

இதைவிடவும் இன்னொரு பொன் முத்து சொல்லியிருக்கீங்க: //விபச்சாரத்தையும், சீன்ன வீடு பிரச்சனைக்கும் அடியோடு ஒழிக்க ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துங்கள்.// (குலாம்.)
நீங்க சொல்றது உண்மையாக இருந்தால் முஸ்லீம் நாடுகளில் விபச்சாரம் என்பதே இல்லையா? முற்றாக ஒழிந்து விட்டதா? நடைமுறை அப்படியில்லையே.

இப்படி 4 பொண்டாட்டி இருந்துட்டா அவனவன் நல்லவனா, அல்லாவுக்குப் பிடிச்சவனா இருந்துருவான். இல்லைன்னா அவன் விபச்சாரத்திற்குப் போய்விடுவான். ஒரு பொண்டாட்டி வச்சிருக்கிறதால்தான் விபச்சாரமும், சின்ன வீடும் -- பயங்கரமான கருத்துக்கள் ............. 

கீதாச்சாரம் அப்டின்னு ஒண்ணு அச்சடிச்சி ரூம்ல மாட்டியிருப்பாங்க. இதையும் அப்படி செய்யலாம். அத்தனை சத்தான முத்துக்கள் இவை. AIDS-க்கு பாதுகாவலா ஆணுறை பயன்படுத்துங்கள் என்பதற்கு ஏகோபித்த கோபக்குரலில் மறுப்பு கொடுக்கும் நீங்கள், இப்படி விபச்சாரத்தை ஒழிக்க ஒரு புது வழியை உங்கள் மார்க்கத்தின் மூலம் கொடுப்பது நன்றாக உள்ளது. நாலு வச்சிருக்கவன்தான் சார், ஏற்கெனவே சொன்ன மாதிரி, அவுத்த உட்ட மாடு மாதிரி எங்கெல்லாமோ போவான். நீங்க என்னடான்னா, வீட்ல நாலு இருந்தா மனுசன் ஒழுங்கா ஆகிடுவான் அப்டின்றீங்க ... அப்பதான் சார், நிலைமை பல காரணங்களால் ரொம்ப மோசமாயிரும். விளக்கமெல்லாம் இங்கே எதற்கு .....

//இதில் சமுகத்திற்கு என்ன பிரச்சனை ஐயா?// -(குலாம்)

இப்படி ஒரு அணுகுண்டு. நாலு மனைவி வச்சிக்கிட்டா சமூகத்திற்கு என்ன பிரச்சனை என்று எளிதாகக் கேட்டு விட்டீர்கள்!  அடக் கடவுளே!!

மதம் எப்படி மனுஷங்களை ஆட்டுவிக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு பெரிய அத்தாட்சி ஏது? நிஜமாகவே இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி உங்க மனசாட்சி உங்களை அவிழ்த்து விட்டது??!!  நம் சமூகக் கட்டுப்பாடு என்று ஒன்றுள்ளது. அது உங்களுக்குத் தேவையில்லை; குரான் தான் எங்களுக்கு எல்லாம் என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் விவாதம்.  தனி மனித ஒழுங்கு, loyalty to your spouse, -- இப்படி பல நல்ல காரியங்கள் நீங்கள் சொல்லும் பல தாரத்தால் அழிந்தொழிந்தல்லவா போய்விடும். நிஜமாகவே உங்களுக்கு ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற கருத்து தவறாகத்தான் உள்ளதா?

ஆளுக்கு நாலுன்னு வச்சிக்கிட்டா ... கடவுளே! நினச்சி பார்க்கவே பயமா இருக்கே. நீங்க ரொம்ப லைட்டா சொல்லிட்டீங்க ...

முகமது காலத்தில் நிறைய சண்டைகள்; சச்சரவுகள்; போர்க்களங்கள். நிறைய ஆண்கள் இறந்து போயிருப்பார்கள். பெண்கள் அதிகமாக வாழ்வில்லாமல் இருந்திருப்பார்கள். ஆண் நான்கு பெண்களை - அதை ஏன் முகமது நாலு என்று வைத்தாரென்று தெரியவில்லை;  - திருமணம் செய்து கொள்ளலாம் என்று முகமது கூறினார் என்றால் அதில் தவறேதும் இல்லை. ஒரு சமூகக் காரணியாக அதை ஒரு சமூக கடமையாகக் கூட நினைத்து ஒப்புக் கொள்ளலாம். அந்தக் காலத்திற்கு அது ஒரு சரியான தீர்வு என்று கொள்ளலாம். ஆனால் அன்று சொன்னது அல்லாவே சொன்னார் என்பதுவும், அதுவும் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு அமைப்பு இது என்பதுவும், கடவுளே இப்படிச் சொன்னார் என்பது கேலிக்குரியவையே ஒழிய வேறொன்றுமில்லை.

அதிலும் எல்லோருக்கும் 4; எனக்கு மட்டும் அந்தக் கணக்கில்லை என்கிறார் உங்கள் முகமது. ஏனென்று கேட்டால் அல்லாவே உத்தரவு கொடுத்துட்டார் என்கிறீர்கள். நான் இதைப் பற்றி சொன்னதைத் திரும்பவும் சொல்கிறேன். அல்லா எனக்கு மட்டும் இந்த exemption கொடுத்திருக்கிறார் என்றால் அது ஒரு குற்றவாளியே தனக்கு சாதகமான சாட்சியாக வாக்குமூலம் கொடுப்பது போலல்லவா உள்ளது.

அடுத்து, எதற்காக முகமதுவிற்கு அந்த exemption? ஆயிஷா என்ற  சின்ன பிள்ளையைக் கல்யாணம் செய்வது அரசியலுக்காக என்பீர்கள்; ஜேனாப் - வளர்ப்பு மகன் தன் மனைவியை தலாக் சொல்லிவிட்டால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; ஏனெனில் வளர்ப்பு மகனை உண்மையான மகனாக நினைக்கக்கூடாது என்று காட்டுவதற்காக இந்த திருமணம் என்ற காரணம்; ஜுவேரியா என்ற தன்னிடம் தோற்ற எதிரியின் மனைவியைப் பேரம் பேசி முகமது திருமணம் செய்வது ..
... இதெல்லாம் என்ன சமூக / தனி மனித நாகரீகமோ; நியாயமோ?! தெரியவில்லை.

========================================================
II
ஆண்களுக்கு சுவனத்தில் என்னென்னவோ காத்திருக்கிறது என்று குரானில் சொல்லியுள்ளதே; ஏன் பெண்ணுக்குச் சொல்லவில்லை; பெண்ணுக்கு சுவனத்தில் என்ன கிடைக்கும் என்று கேட்டிருந்தேன்.

//ஆணை இங்கு முன்னிருத்தி சொல்கிறானே தவிர பெண்ணிற்கு அஃது கிடையாது என்று சொல்லவில்லை.//- G u l a m

ஓ! பெண்ணிற்கு 'அஃது உண்டு' என்கிறீர்களா? நல்லது. அந்த 'அஃது' என்னென்ன என்றுதானே கேட்கிறேன். ஏன் அதை சொல்லவே மாட்டேங்றீங்க? ..... ஆண்களுக்கு சுவனத்தில் என்னவென்று தெரியும். நிறைய இருக்கு. அதுபோல் பெண்களுக்கு என்ன? குலாம் வேறு இப்படி சொல்லியிருக்கிறார்: //அல்லாஹ் நாடினால் இது குறித்து மேலதிக விளக்கம் தருகிறேன்// G u l a m

இப்போதைக்கு நானும் நாடுகிறேன்.

---------------------------------------------------------------------------------------
III




1.***Sin of Khalwa  - ஒரு ஆணோடு ஒரு பெண் தனித்து இருந்தால் பாவம். அந்த பாவத்தை மாற்ற பெத்த பிள்ளைக்கு ஒரு தாய் முலைப்பால் குடுக்குறது மாதிரி அந்த ஆணுக்கு அந்த பெண் தாய்ப் பால் கொடுத்துட்டா அவன் கூட தனியா இருக்கலாம் என்பது எப்படிப்பட்ட தத்துவம்! (இது என்ன ஹத்தீஸ்- strong /weak - என்று தெரியவில்லை; ??)

2.***லாய்லாஹ் - ஆண்களுக்கு கன்னி கழியாத பெண்கள் (55:56-57, 56:7-40) பையன்கள் (52:24, 56:17) சுவனத்தில் நிறைய தரப்படும்.

3. ***4 மனைவி + போனசாக அடிமைகள் - இவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள் அப்டின்ற "தேவ வாக்கு"

4. ****எல்லாத்துக்கும் 4 மனைவி வரை லைசன்ஸ்; ஆனால் முகமதுவிற்கு மட்டும் நிறைய - எல்லா வயதிலும். அதிலும் வளர்ப்பு மகன் மனைவியை -ஜேனாப்- தன் மனைவியாக்கிக் கொண்டது; 9 வயதுப் பெண்ணை -ஆயிஷா- மனைவியாக்கியது; போரில் தோற்ற தலைவனின் மனைவியை -ஜுவேரியா - தனதாக்கியது ... இந்தக் கதைகள்.

5. **** உங்கள் மதத்தை மறுப்பவர்களுக்கான தண்டனைகள்:


 //உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0// - Arun

இந்த மதத்தீவிரம் எப்படி "கடவுளாலேயே" கொடுக்கப்பட்டிருக்க முடியும்?

என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண். 

-- நான் இதுவரை இருபது தடவையாவது பின்னூட்டங்களில் சொல்லியிருப்பேன். மேலே சொன்னவைகளை இஸ்லாமில் இல்லாத உங்கள் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி, அவைகளுக்கு அவர்கள் எவ்வாறு react செய்வார்கள் என்று பாருங்கள் என்று சொல்லியுள்ளேன்.

இதிலும் ஒரு பிரச்சனை. இஸ்லாம் மத தொடர்பான பதிவர்கள் யாரும் இஸ்லாமைத் தவிர வேறு எதுவும் எழுதுவதில்லை. ஒரு பிரபல பதிவரைக்கூட ஒரு தொடர் பதிவில் வரவேற்றேன். அவருக்கு இஸ்லாமைத் தவிர ஏதும் எழுதமாட்டாரென்பது அப்போது தெரிந்தது. எல்லோரும் நன்றாக 'மத ஊழியம்' செய்கிறீர்கள். சரி .. ஆனால் இதுவரை நீங்கள் எழுதியவைகளில் இஸ்லாமிய பதிவர்களைத் தவிர வேறு யாரும் வந்து, 'ஆஹா! நீங்கள் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்' என்று கூறியதை நான் பார்க்கவிலை. அதோடு, என்னோடு இன்னும் வால்ஸ், கல்வெட்டு, The Analyst போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அதிகமாக வந்து உங்கள் பதிவுகளில் கருத்துக்களைப் பகிருவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும், அதில் ஒன்று - என்ன சொன்னாலும் இவர்கள் எங்கே கேட்கப்போகிறார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆகவே நீங்கள் இஸ்லாமியரைத் தவிர வேறு யாரையும் நண்பர்களாக அண்டுவதில்லை என்றே நினைக்கிறேன். பாவம் .. எப்படி நீங்கள் நண்பர்களைத் தேடி இதையெல்லாம் சொல்ல முடியும்?!

எந்தக் கேள்விக்கும் நீங்கள் எப்போதும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிடுவீர்கள்: '1400 வருஷக் கதை & எல்லாவற்றிற்கும் இஸ்லாமில் பதில் உண்டு'. அதோடு நான் சொல்வதெல்லாம், 1400 வருஷக்கதையை மனுக்குலத்திற்கே சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு, பிற சமய நண்பர்கள் ஒரு நாலு பேரிடம் சொல்லி அவர்களின் பதிலையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணைத் திறக்க நம் கருத்துக்களுக்கு உரைகல் தேவை. அதைத்தான் செய்யச் சொல்கிறேன். மற்றவர்களுக்கு உங்கள் மதம் எந்த உணர்வுகளை எழுப்புகிறது என்று உங்களுக்கும் கொஞ்சமாவது தெரிய வேண்டாமா? முயற்சி செய்யுங்களேன் ஒரு முறையாவது. நான் சொல்லியுள்ள அந்த ஐந்தை மட்டும் சொல்லுங்களேன். அது போதும். அதை விட்டு விட்டு குரானை ஒரு முறை வாசியுங்கள்; பதில் கிடைத்து விடும் என்ற வேலை எதற்கு? கேட்ட, வாசித்த கொஞ்ச பகுதியிலேயே எக்குத் தப்பான கேள்விகள்;

முழுவதையும் வாசித்தால் ....???


*

Thursday, November 18, 2010

456. அமினா - இன்னொரு விருது

*

முந்திய விருது: “திசை எட்டும்”
*

என்னால் மொழியாக்கம் செய்யப்பட்ட “அமினா” என்ற புதினத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2009-ம் ஆண்டிற்கான த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசை - வ. சுப. மாணிக்கனார் நினைவு மொழி பெயர்ப்பு: இலக்கியப் பரிசை - அளிக்கிறது.

என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Image and video hosting by TinyPic

Sunday, November 14, 2010

455.பரிணாமம் ... 3

*
னைய பதிவுகள்:

இது மூன்றாவது இடுகை

Tuesday, November 09, 2010

454.அன்னை தெரஸா - COME BE MY LIGHT...என் பார்வையில்.. 5

*
தொடர்புள்ள இடுகைகள்:

முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை


*




Image and video hosting by TinyPic

  
*


எனது பார்வையில் .... 
கடவுள் என்னிடம் பேசினார் ...

கிறித்துவர்கள் மத்தியில்   தன்னோடு கடவுள் / கர்த்தர் / ஏசு பேசினார் என்று பலரும் சொல்வது அடிக்கடி நடக்கும் ஒன்று. இது பிரசங்கிகள் (மதப் பிரசாரக்காரர்கள் & மத வியாபாரிகள்) மிக எளிதாகப் பயன்படுத்தும் ஒரு விஷயம். நான் கேட்டதில்ல; ஆனால் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஒரு 'பெரிய' பிரசங்கி ஞாயிறு தோறும் breakfast ஏசுவோடு என்று கூறுவாராம்! கல்யாண விஷயங்களில் இந்துக்களுக்கு ஜாதகம் பார்ப்பது போல், கிறித்துவர்களில் பலரும் கடவுளின் நேரடித் தலையீட்டை திருமணங்களுக்கு எதிர்பார்ப்பதுண்டு.  

இவ்வளவு எதற்கு ... என்னிடமே ஒரு முறை கடவுள் பேசினார். அது என் முதுகலைப் படிப்பு நடந்த போது நடந்தது. நடந்த இடம், நேரம் எல்லாமே நன்கு நினைவில் உள்ளன. சிறுவயதிலிருந்து ஆடி ஓடித் திரிந்த St. Mary's Cathedral. அங்கு நான் காலைப் பூசை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அப்போது மிகுந்த நம்பிக்கையாளன். எனக்குத் தேவையான ஒன்றைப் பற்றி கடவுளிடம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பூசையில் மிக முக்கியமான இடமான 'எழுந்தேற்றம்' நடந்த சமயம். தலைகுனிந்து எல்லோரும் ஆராதனை செய்யும் நேரம். அப்போது நானும் தலைகுனிந்து ஆராதிக்கும்போது  நான் கேட்டதற்கான விடை என் காதுகளில் மிகத் தெளிவாக ஒரு குரல் மூலம் விழுந்தது. அது அப்போது எனக்கு கடவுளின் குரலாகவே தெரிந்தது. நான் இங்கு சொல்லியதில் ஏதும் மிகை இல்லை.


எனக்கு எப்படி அந்தக் குரல் காதில் விழுந்தது? முழு நம்பிக்கையாளனாக இருந்த அன்று எனக்கு அது நிச்சயமாக கடவுளின் குரலாகத்தான்  தெரிந்தது. இன்று பழையதை நினைத்துப் பார்க்கும் போது அதற்கான காரணம் என்னவென்று தெரிகிறது. இங்கே அதைச் சொல்லியுள்ளேன். 

நான் கேட்டதற்கு கடவுளிடமிருந்து கிடைத்த பதில் பின்னால் தவறாகப் போய்விட்டது. அந்த வயதில் என்ன பெரியதாகக் கேட்டிருக்கப் போகிறேன், கடினமான ஒரு பாடத்திட்டத்தில் எந்தப் பகுதியில் பெரிய essay question வருமென்பதுதான் என் அன்றைய பிரச்சனை. (இதற்கெல்லாமா ஜெபிப்பீர்கள் என்று ஒருவேளை நீங்கள் யாராவது கேட்டால் ... உங்களுக்கு கிறித்துவ மக்களைப் பற்றித் தெரியவில்லை என்று பொருள். இதற்குத்தான் என்றில்லை; எதற்கும் ஜெபம் என்பது கிறித்துவ வழக்கம். சில ஜோக்குகள் கூட உண்டு. இங்கே வேண்டாமே!)

இப்படி 'கடவுளோடு பேசுவது' தொடர்பாக எனக்குப் பரிச்சியமான இந்து,கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களோடு இதற்கான தொடர்பை எழுதணும்.

கட்டுப்பாடற்ற இந்து மதத்தில்தான் அதிகமாக இந்த 'கடவுளோடு பேசுவது' நடக்கிறது என்று நினைக்கிறேன்.பலரும் அந்த தெய்வத்தோடு பேசினேன்; இந்த தெய்வத்தோடு பேசினேன் என்று சொல்வது அடிக்கடி கேட்கப்படும் ஒரு ஜோக்! அதுவும் சின்ன தெய்வங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமங்களில் இன்றும் 'சாமியாடிகள்' என்று சில குறிப்பிட்ட மக்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஊரில் நடக்கும் அம்மன் கொடை போன்ற விழாக்களில் இவர்களின் 'ஆட்டம்' பார்த்திருக்கிறேன். 'அருள் வாக்கு' என்பது நடைமுறை வார்த்தை. ஆடும்போது பல கேள்விகள் கேட்க இவர்கள் தங்கள் அருள்வாக்கைத் தருவார்கள். ஆனால் கேட்ட கேள்விகளும் அவர்கள் தந்த அருள் வாக்கும் யாருக்கு நினைவில் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த ஆண்டு அம்மன் கொடை அன்று மறுபடி கேள்விகள் கேட்க அவரும் மறுபடி அருள்வாக்கு கொடுப்பார். சென்ற ஆண்டு கொடுத்த அருள்வாக்குகள் சரியாக இருந்தனவா என்று யாரும் கணக்கெடுப்பதில்லை.

இது போன்ற  'அருள்வாக்கு'க்காரர்களோடு எனக்கு இரண்டு அனுபவங்கள். ஒன்றில் நானும் என்னைப்போல் நம்பாத நண்பன் ஒருவனும் நம்பிக்கையோடு சென்றவனோடு உடன் போனோம். நம்பிக்கைக்காரனுக்கு 'பலன்' சொல்லியாச்சி. வேடிக்கைக்காக நம்பிக்கையில்லா நண்பனைப் பற்றி சும்மானாச்சுக்கும் ஒரு கேள்வி கேட்டேன். தம்பிக்கு மனசுல ஒரு கஷ்டம். என்னவாகும் என்றேன். அந்தப் பெண்மணி - வீட்டு வேலை செய்து வந்து, திடீரென்று அருள்வாக்கு கொடுக்கும் அற்புதப் பெண்ணாக லோக்கலில் பெயர் பரவியிருந்தது - வயசுப்பையன் என்ற அனுமானத்தில், காதலிக்கிற பொண்ணு கட்டாயம் கிடைக்கும்; வெளிநாட்டுப் பயணம் இன்னும் சில மாதத்தில் என்று அருள் வாக்கு கொடுத்தது. பிறகு நாங்களே சொன்னோம் - பையனுக்கு லவ்ஸ் ஏதும் கிடையாதுன்னு. சிரிச்சிக்கிட்டே, டமார்னு எனக்கு ஒரு அருள்வாக்கு கொடுத்தது. 'உங்க மூஞ்சிய பார்த்தா .. நல்லா தெரியுது, உங்களுக்கும் அருள் வாக்கு சொல்ற அம்சம் மூஞ்சில நிறைய இருக்குதுன்னு' சொல்லிச்சி. பொழைக்கத் தெரியாத ஆளா ஆய்ட்டேன் .. அப்பவே இறங்கியிருக்கணும் .. !


இதெல்லாம் சின்ன சாமியாடிகளின் கதை. இப்போதெல்லாம் இது பெரிய, பெரிய கார்ப்பரேட் லெவல்ல இந்த 'அருள் வாக்குகள்' சொல்லப்படுகின்றன. இங்கேயும் யாரும் அருள்வாக்குகளின் validity-யை சோதிப்பதில்லை. எல்லாமே ஒரு 'அருள் மயம்' மட்டும்தான் ! ஆனால் currency laundering எல்லாம் இவங்க மூலமா நடக்கிறதாகவும் அதனால் தான் அரசியல்வியாதிகள் இவர்களை நெருங்கியிருப்பதாகவும் நம்ம நித்தீஸானந்தா விவகாரத்தில் ஊடகங்கள் எழுதின. பாபாவா, நித்தீஸா, கல்கியா, மேல்மருவத்தூரா ... எல்லாம் இந்த குரூப்பில் வருகிறார்கள். கல்கி மேல் பயங்கர காட்சிகளெல்லாம் தொலைக்காட்சியில் வந்தன; ஆனால் சில நாளில் கல்கி ஆஷ்ரமத்தின் பக்தி காட்சிகளும் வந்தன. மேல்மருவத்தூர் வரி ஏய்ப்பு விஷயம் வந்தது; அதோடு சரி. அட .. அதைவிட நித்தீஸ் விஷயம் தீயாய் எரிந்தது; ஆனால் தலைவர் போட்ட முதல் கூட்டத்தில் எல்லோரும் முழு அட்டென்டன்ஸ்! எப்படியோ, அவங்க பிஸினஸ் களைகட்டிப் போகுது ... !

அடுத்து கிறித்துவர்கள் மத்தியிலும் 'கடவுளோடு பேசுதல்' நிறைய நடக்குது. இதிலும் பெரிய பிரசங்ககாரர்களுக்கு ஒரு தனியிடம். அவர்களில் பலர் ஏசுவுடன் 'நேரடி உரையாடலை' நடத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் லைன் வைட்டல் லின்க்! எப்படித்தான் இப்படி கதை சொல்கிறார்களோ?! நம்பத்தான் ஆளிருக்கே .. அதனால்தான். ஒரு பிரசங்கியார் மேல் நம்பிக்கை வந்துவிட்டால் எதையும், எல்லாவற்றையும் நம்பிவிடுகிறார்களே! அதோடு, ஒரு பிரசங்கி பிடித்து விட்டால் அதன் பின் அவர், அவரது மனைவி, பிள்ளை குட்டி, மருமகன், மருமகள். பேரன் பேத்தி என்று அவர்கள் குடும்பத்து மேலேயே பக்தி மேலிட இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே கடவுள் காத்திருக்கிறார் போலும். அவர்கள் ஜெபம் பண்ணினால்தான் கடவுள் கேட்பாரென்ற நம்பிக்கை. ஏதோ போனா போகுதுன்னு அவர்கள் வீட்டு நாய் பூனைக்குட்டிகளை விட்டு விட்டார்கள்! இவர்கள் இந்து கார்ப்பரேட்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சும்மா சொல்லக் கூடாது .. நன்றாக வளர்கிறார்கள். ஆனாலும் இதில் எனக்கு ஒரு சின்ன வருத்தம். இந்து கார்ப்ரேட் (ஆ)சாமிகள் பெரிய மருத்துவமனை, கல்லூரி அது இதுன்னு பெருசா மக்களுக்கு உதவுவது போல் செய்வது மாதிரி இந்த கிறித்துவ வியாபாரிகள் எதுவும் நல்ல காரிய்ங்கள் செய்வது இல்லை.


இந்துவாக இருந்து கிறித்துவரான ஒருவர் - டாக்டர் - மாரிமுத்துன்னு பெயர். அவர் பையன் பெயர் ஒரு அண்ணாமலை பல்கலையில் கொடூரமான ஒரு கொலைக்கேசில் வந்ததென நினைக்கிறேன். அவரைப் பத்தி என் பாஸ் சொன்ன கதை நன்றாக இருந்தது. என் பாஸும் இந்துவாக இருந்து கிறித்துவரானவர். அந்த டாக்டர் படிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவராம். தேர்வு நேரத்தில் பயந்து போய் ஏசுவிடம் இறைந்து மன்றாடியிருக்கிறார். அன்று அவரது "கனவில்" ஏசு வந்து அப்படியே Question Paper-யைக் காண்பித்திருக்கிறார். யாரிடம் இதைச் சொல்லாதே என்று வேறு சொல்லிச் சென்றிருக்கிறார் ஏசு! ஆனாலும் ஒரு evidence வேணுமில்லையா .. அதனால் நம்ம டாக். மாரி நண்பர்களிடம் கேள்விகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.


அடுத்த நாள் .. தேர்வு. இங்க பாருங்கய்யா ... அப்படியே ஏசு கொடுத்த கேள்விகள். அதை மட்டும் சாய்ஸ் விடாமல் படித்த நம்ம டாக். மாரி அழகாக எழுதி பாஸ் பண்ணிட்டார். கடவுள் தன்னிடம் வந்து பேசி தன்னைப் பாஸ் ஆக்கிய பின் நம்ம டாக். என்ன பண்ண முடியும்? கிறித்துவனாகி விட்டார். இதைத் தன் பிரசங்கத்தில் 'சாட்சி' சொல்லியிருக்கிறார் -- இது என் பாஸ் சொன்ன கதை.

என் பாஸின் மகன் இந்தக் கதை சொல்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்தான் எங்கள் துறையிலேயே படித்து விட்டுச் சென்றிருந்தான். நல்லா படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பையன். பாஸ் கதை சொல்லியதும் கொஞ்சம் pause விட்டு விட்டு, வேறு ஏதேதோ பேசிவிட்டு, மெல்ல பாஸிடம் 'உங்க பையன் சீனு படிக்கும்போது அவனுக்கு Question Paper leak பண்ணியிருக்கீங்களா?ன்னு மெல்ல கேட்டேன். பாஸுக்கு கோபம்; ஆனாலும் 'என்ன Sam. இப்படிக் கேட்டுட்டீங்க? நானெல்லாம் அப்படியெல்லாம் பண்ற ஆளா .. அந்த மாதிரி தப்பெல்லாம் செய்வேனா?' அப்டின்னு சென்டியா கேட்டார்.

'பாஸ்! நீங்களே உங்க பையனுக்கு Question Paper leak பண்றது தப்புன்னு சொல்றீங்க. ஆனா உங்க கடவுளுக்கு அது தப்பா தெரியாதா? படிச்சவனுக்கு உதவி செய்யாம, இப்படி ஊர்சுத்திக்கு ஏன் உதவுறார்?' -- அப்டின்னேன். பாஸ் கொஞ்சம் அப்செட். நான் தொடர்ந்தேன்: 'ஏன் உங்க கர்த்தரை நீங்களே இப்படி தரம் தாழ்த்துறீங்க? நீங்க கூட செய்ய தயங்குற ஒரு தப்பை உங்க ஆண்டவன் செய்வார்னு ஒரு ஆள் சொன்னதை எப்படி நம்புறீங்க? அதை கோவில்ல வச்சி சாட்சியா ஒருத்தன் சொன்னா நம்பிடுவதா? -- அப்டின்னேன். .... பாஸ் அப்பீட் அந்த இடத்திலிருந்து!

இஸ்லாம் மதம் இதில் ஒரு தனி வகை. இன்னும் இறுக்கமான மதம். இங்கே யாரும் கடவுளைப் பார்த்தேன்; கடவுளிடம் பேசினேன் என்று சொன்னதாக நினைவில்லை. (ஆனால், Bahai  என்ற புதிய சமயத்தில் Bahá'u'lláh என்று ஒருவர்  தானும் ஒரு நபி என்று சொல்லி புதிய சமயத்தை ஏற்படுத்தினார். அந்த மதத்தைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறது: Bahá’í Faith is today among the fastest-growing of the world’s religions. With more than five million followers,  it is the second-most widespread faith,surpassing every religion but Christianity)  இருந்தாலும்  யாரும் இஸ்லாமிய மதத்தில் கடவுள் என்னிடம் பேசினார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் அது தேவ தூஷணமாகி விடும்.பத்வா தான் அடுத்தது. இதற்கு பாகிஸ்தானில் தூக்குத் தண்டனையோ ?

இஸ்லாமில் முகமது மட்டுமே 'கடவுளோடு பேசியவர்'. அதுவும் முதலில் அவருக்கு அதை நம்ப முடியாமலிருந்து, பிறகு துணைவியார் confirm செய்த பிறகே அவரும் ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறை குரான் இறங்கும்போதும் அவர் சில உடல் மாற்றங்களுக்கு உள்ளாகிறார். இங்கும் அவர் கடவுளோடு, அல்லது அவரது தேவ தூதரோடு பேசினார் என்பது முகமதுவின் அறிவிப்பு. இதற்கு என்ன சான்று? அவர் அப்படி ஜிப்ரேலிடமிருந்துதான் குரானைப் பெற்றாரா என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம். தேவ தூதர் வந்து பேசினாரா ... இல்லை, நான் முன்பே சொன்னதுபோன்ற அது ஒரு மனப்பிரம்மையா என்பதை யார் உறுதி செய்ய முடியும்? முகமது சொன்னார்; நான் நம்புகிறேன்; ஏனென்றால் சின்னப் பிள்ளையிலேயே அது சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பது மட்டுமே இந்த விஷயத்தில் ஒரே ஒரு சான்று. ஜிப்ரேல் கொடுத்த வேதம் பல installments-களில், பல ஆண்டுகளில்தான் (610 to 632  - 22 ஆண்டுகள்)கொடுக்கப்படுகிறது. அதில் என்ன லாஜிக் என்று தெரியவில்லை. கொடுக்க நினைத்த கடவுள் ஒட்டு மொத்தமாக ஏன் கொடுக்கவில்லை? அதுவும் கொடுத்த கட்டளைகள் முறையாக -சீரியல் ஆர்டராகக் - கொடுக்கப்படாமல் அவ்வப்போது கொடுக்கப்பட்டு, பிறகு மனிதர்களால்  முறையாகத் தொகுக்கப்பட்டது என்று படித்து தெரிந்து கொண்டேன். ஏன் இப்படி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது .. ஏசு ஏன் 12-30 வயது வரை ரகசிய வாழ்க்கை வாழ்ந்தார் என்றெல்லாம் கேட்டால் கிறித்துவ நம்பிக்கையாளர்களுக்குப் பிடிக்காது. அது போல்தான் இங்கும். ஆனால், முகமது சொன்னார்;  அதனால் நம்புகிறேன் என்பது நம்பிக்கையாளர்களுக்குப் போதும்; ஆனால் எல்லோருக்கும் போதுமா?

ஆர்க்கிமிடீஸின் eureka  கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆர்க்கிமிடீஸ் ஒரு பிரச்சனைக்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறார். நினைவெல்லாம் அதிலேயே இருக்கிறது. அந்த நினைவின் நீட்சியாக அவருக்குத் திடீரென ஒரு பதில் கிடைக்கிறது. இதில், அவரது  நினைவின் நீட்சியாகப் பதில் கிடைத்தது என்பது சரியா? அல்லது, அவருக்கு கடவுள் வந்து செய்தி சொன்னார் என்பது சரியா?  நான் சொன்ன மனப் பிரம்மை என்பதும் இத்தகையதே,. நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நினைவு வருகிறது. அது நம் நினைவின் ஆழத்திலிருந்து வந்த ஒரு பதில். நமது பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கலாம். அத்தீர்வு நாம் ஏற்கெனவே நினைத்து வந்ததின் தொடர்பே.

ஆர்க்கிமிடீஸ் மட்டுமல்ல .. இது போல பல அறிவியல் உண்மைகள் கனவுகளாக, நினைவுகளாக திடீரென தோன்றியவைகள்தான். சில சான்றுகள்:

The scientists credited with the top seven eureka moments, in an ascending order of excitement (with the discovery of penicillin the winner) are:
இதை விடவும்  Kekulé என்ற வேதியியல் அறிஞருக்கு வந்த 'பாம்புக் கனவே' benzene என்ற வேதிப்பொருளுக்கான உருவமைப்பை வெளிப்படுத்தியது. அது போலவே, கலிலியோ கோவிலில் உட்கார்ந்து ஒழுங்காக பிரசங்கத்தைக் கேட்காமல், கோவில் ஆடிக்கொண்டிருந்த chandelier-ன் அசைவின் ஒழுக்கத்தைக் கவனித்து பெண்டுலத்தைக் கண்டுபிடித்தார்.


இந்த அறிவியலாளர்களுக்கு கடவுளே இப்படி வந்து பதில் கொடுத்தார் என்று ஏன் சொல்லக்கூடாது?

அப்படியே நம்பிக்கையாளர்கள் சொல்வது போல் கடவுளே வந்து 'ஏதாவது' சொன்னால் அது அறிவியல் மொழியோடு ஒட்டிய ஒரு மொழியாக, சரியான பொருளோடு சொன்ன அன்று இருந்த காலத்தை ஒட்டி இல்லாமல் எப்போதைக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் குரான் முழுவதும் அறிவியலோடு ஒன்றியது என்று சொல்லிக்கொண்டிருப்பதால் அதிலிருந்தே சில வசனங்களை எடுத்து விவாதிப்போம்.

உலக படைப்பைப் பற்றிக் கூறினால் உருண்டையான இந்த உலகைப் படைத்தார். சூரியன், நிலவு இப்படி இப்படி இருக்கும் என்று சொன்னால் சரி; அதை விட்டு விட்டு, பூமியை நான் விரிப்பேன்; மலைகளை நட்டு வைப்பேன், சூரியன் இரவு வணங்க வரும் ...  என்பது போன்ற பொத்தாம் பொதுவான சொற்கள் நமக்கு இன்றைய அறிவியல் நிலையில் என்ன புதியதாக, சரியாக சொல்லிவிட்டன? அதைவிட பதிவுகளில் நன்கு விவாதிக்கப்பட்ட விந்துவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இனவிருத்திப் பொருட்கள், விந்து-முட்டை இணைதல், நிறமிகள் ஒன்று சேரல், haploid, diploid, fertilization, மூளையும் இதயமும் எப்படி வளர ஆரம்பிக்கன்றன என்பது போல் அன்றே சொன்னால் இன்றைய அறிவியலுக்கு ஒத்து வரும். அதை விட்டு விட்டு ...
086.006 He is created from a drop emitted- விந்து  மிகச்சிறிய ஒன்று; அது  என்ன a drop? Is sperm a drop of liquid?
086.007 Proceeding from between the backbone and the ribs:    'ribs' அப்டின்னா நெஞ்செலும்பு. முதுகெலும்பிற்கும், நெஞ்செலும்புக்கும் நடுவிலிருந்து என்றால் அது நெஞ்சாங்கூட்டிலிருந்து என்றாகிறது. வர்ர இடத்தை சரியா சொல்றதா இருந்தா சொல்லணும்; இல்லட்டா சொல்லாம விட்டிரலாம்.

ஒரு மாணவன் தப்பான விடை தருவதைவிட குழப்பமான விடை கொடுத்தால்  நிச்சயம் அவனுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும். சொல்ல வந்தால் சொல்ல வந்ததை தெளிவாக, சரியாக, இக்காலத்திற்கும் பொருந்துவதாக 'கடவுள்' அப்பவே சொல்லியிருக்கணும். அது இல்லைன்னா அது கடவுள் சொன்னதாக இருப்பதாக நினைப்பது தவறு. கடவுள் சொன்னதாக இருந்தால் அது 2+2 = 4 என்பதுபோல் கனக் கச்சிதமாக இருக்க வேண்டும். கடவுள் சொன்னதுக்கு அர்த்தம் இதுல்ல .. அதுன்னு சொன்னா ...அதுல்ல  .. இதுன்னு சொன்னா ?

ஆக, கடவுள் சொன்னார் என்பதெல்லாமே மனப்பிரம்மை; சுயக் குழப்பம்; இதெல்லாம் இல்லையென்றால், அது வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்று வேலை.

இன்னொரு விஷயம்:   கிறித்துவத்திலும் ஏக கடவுள் என்ற நிலையுண்டு. என்னைத்தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை என்ற தத்துவம்தான். ஆயினும் வழி தவறினால் உனக்கு என்னென்ன நடக்கும் என்ற விஸ்தாரங்கள் இங்கே இல்லையென நினைக்கிறேன். ஆனால் கிறித்துவத்தைத் தொடர்ந்து வந்த இஸ்லாமியத்தில் அவைகள் நறுக்குத் தெறித்தது போல் சொல்லியுள்ளன - நல்ல அச்சுறுத்தலாகவே ...


[ஹல்ரத் அலீ: "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதம்தான் சிறந்த வழி. (தன் அறிவைக் கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல்படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கி விடுவான்."

16:106: "அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு இதயத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு.)


மூன்று ஆபிரஹாமிய மதங்களில் எப்படி வந்தது இந்த பெரும் வேற்றுமை?
பழைய ஏற்பாட்டில் இருக்கும் கொடூரம் புதிய ஏற்பாட்டில் கொஞ்சம் நலிந்து. பின் ஏன் 'கடைசி ஏற்பாட்டில் இப்படி ஆனது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அதுவும் இந்தக் கடைசிக் கடவுள் மிக வல்லினமானவராகத் தெரிகிறது. நிறைய பயமாக இருக்கிறது.

என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்று சொல்லும் ஒரு  'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது இஸ்லாமில் ஒரு நல்ல நகைமுரண். அதோடு இப்படி குரானில் பேசப்படுவது வன்முறையல்ல; அது வெறும் எச்சரிக்கைதான் என்று சொல்வது அதைவிட மிகப் பெரிய நகைமுரண்.


*


Sunday, November 07, 2010

453. அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... 4

*
Image and video hosting by TinyPic


மற்றைய இடுகைகள்: 

முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை

*


கிறித்துவ புனிதர்களுக்கெல்லாம் மனதில் எவ்வித கேள்விகளோ குழப்பங்களோ வருவதில்லை என்று பலரும் நினப்பதுண்டு.

Saturday, November 06, 2010

452. தீபாவளி வாழ்த்துகளும் ...

Image and video hosting by TinyPic

தீபாவளிக்கு முந்திய நாள் மாலை. ஊருக்குள் குவிந்து கிடந்த கூட்டத்தை ஊடுருவி ஒன்றிணைந்து மதுரைப் பதிவர்கள் ஒரு தீபாவளி சந்திப்பு நடத்தினோம்.