Wednesday, December 20, 2017

960. அருவி





*






முதல் பட இயக்குனருக்கு இருக்கும் திறமை அதை விட அவரது துணிவு மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அதே போல் ஆண் நடிகர்கள் தங்கள் உடம்பை கதைக்கேற்ப மாற்றுவது போல் கதைக்காக உடம்பை மாற்றிய கதாநாயகியின்  ஈடுபாடும் பாராட்டுதலுக்கு உரியது.


கதாநாயகனின்றி ஒரு தமிழ்ப்படம் – நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒன்று. இந்த தைரியத்திற்காகவே இயக்குனருக்கு என் பாராட்டுகள். இன்னும், ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் வேண்டுமென்று ”ஒத்தைக் காலில்” நிற்கிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லும் பெரிய டைரடக்கர்கள் இந்தப்படம் பார்த்தாவது தங்கள் முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

அருவியின் வாழ்க்கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. பொங்கிப் பிரவாகமெடுக்கும் முதல் இளம் பகுதி அழகுப் பகுதி. பெற்றோரின் அன்பணைப்பில் வளரும் சிறு பெண் – பேதை. இப்பகுதியில் காமிரா தனித்து நிற்கிறது.  பிள்ளையும் அழகு; அதன் அப்பாவும் அழகு. அடுத்து  பட்டணத்து வாழ்க்கைக்கு மாறி உயரத்திலிருந்து கொட்டும் நீராக அடுத்த பகுதி – மடந்தை. கடைசியில் வரும் துன்பயியலில் வாடும் பேரிளம் பெண்.


பலவகையில் எதிர்பார்க்காத பல நிகழ்வுகளைப் படத்தில் பார்க்க முடிகிறது. முதல் பாதி ஏதும் பெரிதாகத் தெரியவில்லையே என்ற நினைப்போடு இரண்டாம் பாகம் உட்கார்ந்ததும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் போல் விரிந்து, இறுதியில் சோகச் சித்திரமாக மனதை உருக்கியது. நகைச்சுவை வலிந்து திணிக்கப்படாமல் காட்சிகளோடு ஐக்கியமாகி மிக இயற்கையாக இருந்தன. நல்ல நகைச்சுவை உணர்வு விரவி இருந்தது.

இதற்கு முன் மோகன்லால் படம். பெயர் ஞாபகத்தில் இல்லை.( சரித்திரம் என்ற படமோ?) முக்கால் வாசிப் படம் நகைச்சுவையோடு செல்லும்.

கடைசிப் பகுதி நெஞ்சைப் பிசைந்து விடும். இப்படமும் அது போல் நகைச்சுவை … சிரித்துக் கொண்டே இருந்து விட்டு… அவலப் பதிவிற்குள் இழுத்துச் செல்லப்படுகிறோம். அதனாலேயே பரிதாபத்திற்குரிய அருவியோடு இணைந்து விடுகிறோம்.

அலட்டிக் கொள்ளாமல் நேர்காணலில் இருக்கும் இயக்குனர் அருண் மீது நன்கு மரியாதை கூடுகிறது. வரும் படங்களில் இதே தரத்தை அவர் தர வேண்டும். கதாநாயகிக்கும் பாராட்டுகள்.


*****

தமிழ்ப்படங்களில் நடுவே வரும் பாட்டுகளின் வரிகளோ, பொருளோ பொதுவாக என் புத்திக்கு எட்டுவதில்லை. வீடியோ இல்லாமல் கேட்கும் போது மட்டும் தான் பாட்டு என் மண்டைக்குள் சிறிதாவது ஏறுகிறது. பொருளும்கொஞ்சமாவது புரிகிறது இது எனக்கு மட்டும் தானா…? 

இதனால் சினிமாவில் நடுவில் வரும் பாட்டுகள் – நல்ல பாட்டுகளாக இருந்தாலும் – எனக்கு எரிச்சலை மட்டுமே தருகின்றன. அதிலும் இப்படத்தில் அதிலும் ஒரு சிறிது வித்தியாசம் இருந்தது. குக்காட்டி குனாட்டின்னு ஒரு பாடல் …அது மட்டும் வித்தியாசமாக ஒலித்தது.





*









Friday, December 08, 2017

958. கடவுள் என்னும் மாயை - அட்டைப்படம்





*


 வெளியீட்டாளரிடமிருந்து என் இரண்டாம் நூலின் அட்டைப்படம் - இரு பக்கமும் - இன்று வந்தது.





.


 சென்னை புத்தக விழாவில் வெளி வருகிறது. 
ஜனவரி 18, 5 - 15











 *

Monday, December 04, 2017

957. BIBLE STUDY - பழைய ஏற்பாடு .... 5






*
பழைய ஏற்பாடு

1. தொடக்க நூல்


இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது. – எல்லா மதங்களுமே அம்மதங்கள் தோன்றிய ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அதன் சாதி சனத்தையும் தான் மய்யப் புள்ளியாக வைத்து கற்பனையின் அடிப்படைகளில் எழுதப்பட்டவை என்ற என் விவாதத்திற்கு உரம் சேர்க்கிறது மேற் சொன்ன வரிகள்: ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறே இங்கு ஒரு மதமாக உருவெடுக்கிறது..

கடவுள் மனைதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.  இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இவை; ஆனால் வாசித்துப் பார்த்தால் நோவாவை மட்டும் விட்டு விட்டு மற்ற உயிரனங்கள் அனைத்தையும் தண்ணீரால் இந்தக் கடவுள் அழித்தொழித்ததையும், பின்பு இது போல் இனி செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு அதன் பின் நெருப்பால் சோதோம், கொமோராவினை அழிக்கிறார். தான் கொடுத்த உறுதிமொழியைக் கடவுள் இப்படியாக முறியடிக்கிறார் நியாயாவதியான கடவுள்! இந்தப் பகுதியில் கடவுளை ஒரு “அழிக்கும்” கடவுளாக மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நூலில் கடவுள் கனிவு காட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது.


கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர் தம் வழி மரம்பினர் வரலாற்றில் தாமே செயல் பட்டுமீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்று இந்த நூலின் துவக்க உரை கூறுகிறது.


                                             ***



விவிலியத்தில் வரும் சில வசனங்களும், 
என் கேள்விகளும்

1: 16   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும்,
இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
எனது கேள்வி:  இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பு ..அது என்ன? நிலவையா சொல்கிறார்கள்?ய்

1:30   – பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
2:5    --    வயல்வெளியில் எவ்விதச் செடியும்;முளைத்திருக்கவில்லை.

எனது கேள்வி: முதலில் ‘அவ்வாறே ஆனது” ஆனால் இரண்டாம் வசனத்தில் எவ்வித செடியும் முளைத்திருக்கவில்லை.????


நோவா வெள்ளப் பெருக்கின் முடிவில் …

7:23   மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன.  .. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சி இருந்தனர்.


நோவா பலி செலுத்திய பிறகு …
8: 20, 21   மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்க மாட்டேன் . … இப்போழுது நான் செய்தது போல் இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.


என் கேள்வி:  எல்லாவற்றையும் அழித்தவர் தனது இரண்டாம் யோசனையில்  (on second thoughts) இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒரு சபதமெடுக்கிறார். மனித சிந்தனை போலவே உள்ள ஒரு கற்பனை இது.


9: 11   நோவா வெள்ளப் பெருகிற்குப் பின் …
சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது
.
அப்படியா? உடைக்கப்படுவதற்காகவே உறுதிமொழிகள் மனிதர்களால் மட்டுமல்ல கடவுளாலும் கொடுக்கப்படுகிறது போலும்!


17: 10, 11  உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். …இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.

எப்படி ஏற்பாட்டில் கூறப்பட்ட ஒரு கட்டளை கிறித்துவத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டது.


19: 5 (சோதோமின் தீச்செயல் என்ற தலைப்பில் வரும் ‘கதை’ மிகவும் விரசமான ஒன்றாக உள்ளது.) லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா” என்றனர். 

இதற்கு லோத் ஆண் தொடர்பில்லாத தன் இரு புதல்வியரை அதற்குப் பதிலாகத் தயாராக இருக்கிறார். மிக மட்டமான கதை. இந்துப் புராணங்களைப் பார்த்து கிறித்துவர்கள் முகம் சுழிப்பதுண்டு. இக்கதை பற்றி எத்தனை கிறித்துவர்களுக்குத் தெரியுமோ… தெரிந்த கிறித்துவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவோ?!


19: 12-22 சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. என்று 9:11ல் கடவுள் வாக்களித்தார். ஆனால் இங்கு நெருப்பால் சோதோம், கொமோராவினை நெருப்பினால் அழிக்கிறார்.

எதற்காக அழிக்கிறார்… ஏன் அழிக்கிறார் போன்ற கேள்விக:ளைக் கேட்பதே விரையம் தான். இதெல்லாம் கடவுளுக்கு just like that மட்டும் தான் போலும். அதே போல் அவர் அழித்ததைத் திரும்பிப் பார்த்ததால் பாவம் அந்த லோத்தின் மனைவி. உப்புத்தூணாக மாறினாள். எல்லாம் நம் அகல்யா கதை போல் இங்கு இன்னொரு கதை. புராணங்களின் அடி மட்ட அழுக்குகள்!

இதன் பின் வரும் ஆபிரகாமின் கதை அடுத்த ஒரு மிகக் கேவலமான கதை. (முந்திய பதிவில் அதைப் பற்றி எழுதியாகி விட்டது. 20 அதிகாரம்.)


47: 22  அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.


ஊருக்கு ஊர் இதே கதை தான் போலும். அர்ச்சகர்கள் என்றாலே மானியம் தானா?



  *


Monday, November 27, 2017

956. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ... ... 4







*


ஆபிரஹாம்/இப்ராஹீம்: 

யூதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று 'ஒரே கடவுள்' மதங்களுக்கும் இவரே ஆரம்பம். பிதா மகன்.

அப்படிப்பட்டவர் எப்படி மனிதர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

பஞ்சம் பிழைக்க தன் மனைவி சாராவுடன் எகிப்துக்குச் செல்கிறார். அங்கே உள்ளவர்களின் கண்கள் தன் மனைவி மேல் பட்டுவிடுமே என்றெண்ணி அவளைத் தன் சகோதரி என்று சொல்லிக் கூட்டிப் போகிறார். அங்கே ராஜாவின் கண்ணில் பட, அவர் சாராவைத் தன் அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஆபிரஹாமும் எக்கச்சக்கமான பணக்காரராக ஆகிவிடுகிறார்.

இதைப் பார்த்த கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது -ஆனால் மன்னன் மேல் மட்டும்தான்; ஆபிரஹாமின் மேல் அல்ல! அந்தக் கோபத்தில் மன்னனின் குடும்பத்தின் மீது ப்ளேக் நோயைப் பரப்பி விடுகிறார் கடவுள். 
மன்னனுக்கும் சாரா யார் என்பது தெரிந்து விடுகிறது. ஆபிரஹாமையும் சாராவையும் எகிப்தை விட்டே விரட்டி விடுகிறார். (தொடக்க நூல் 12: 18-19) 


ஆப்ரஹாம் இதோடு விடுவாரா என்ன? அடுத்த நாட்டுக்கு செல்கிறார். அங்கும் கெரார் மன்னனாகிய அபிமேலக்கு என்பவரிடம் ஆபிரஹாம் தன் பழைய கதையை மீண்டும் எடுத்து   விடுகிறார். மன்னன் அவளைச் சேர்த்துக் கொள்கிறான்.

கடவுள் மறுபடியும் வருகிறார். ஆபிரஹாமை ஒன்றும் சொல்லாமல் நேரே மன்னனிடம் வருகிறார்.  அவள் ஆபிரஹாமிற்கு வாக்குப் பட்டவள் என்கிறார். அவளை இதுவரை தொடாதிருந்த மன்னன் அவளை அனுப்பி வைக்கின்றான். கடவுள் அவனின் கனவில் வந்து, “உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பி விடு; ஏனெனில் அவனொரு இறை வாக்கினன். (தூதுவர்). அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவனை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி என்றார்.  (தொடக்க நூல்: 20: 2-5)  மேலும், “ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடியாக்கியிருந்தார். (தொடக்க நூல் 20:18)

இங்கும் தவறு செய்த இறைவாக்கினன் மீது கடவுளுக்குக் கோபம் வரவில்லை. ஆனால் அறியாமையில் இருந்த மன்னன் மீதும் அவ்வீட்டுப் பெண்கள் மீதும் தான் கடவுளுக்குக் கோபம்!

(கடவுள் யாரை இப்போது தண்டிக்க வேண்டும்? தனது இறைவாக்கினனான / தூதுவரான ஆபிரஹாமை அவர் அறிவுறுத்த வேண்டும். தண்டிக்கவும் வேண்டும்.  ஆனால் அவர் “விஷயம் தெரியாத”  மன்னன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் கோபம் கொள்கிறார்.  அதுவும் தவறு செய்த இறைவாக்கினன் வேண்டினால் தான்  நீ பிழைப்பாய் என்கிறார். :( 

என்ன நீதி இது? இந்தக் கடவுள் தான் நம்  இறப்பிற்குப்பின் நமது பாவ புண்ணியங்களைப் பார்த்து நமக்கான நீதி கொடுப்பார் என்று மதம் சொல்கிறது. இப்படிப்பட்ட கடவுளிடமிருந்து நமக்கு என்ன நீதியோ??!!)

(இந்தக் கதையை எல்லாம் படித்துவிட்டு எப்படித்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மக்கள் ஆபிரஹாம்/இப்றாஹீம், சாரா போன்ற பெயர்களை வைக்கிறார்களோ?!)





 * *

Friday, November 17, 2017

955 நான்காவது குழந்தை பிறந்தது ...........





*


நான்காம் குழந்தை. 





நான்கில் இரண்டு தத்து எடுத்தது - மொழியாக்கம் செய்த நூல்கள் - அமினா (கிழக்குப் பதிப்பகம்) & அசோகர் (எதிர் வெளியீடு) 

அடுத்த இரண்டு நானே பெற்றது - மதங்களும் சில விவாதங்களும். (எதிர் வெளியீடு) 

 அதன் தொடர்ச்சியாக வந்த அடுத்த நூல் - கடவுள் எனும் மாயை. (எதிர் வெளியீடு) 


எதிர் வெளியீடு அனுஷிற்கு பெரும் நன்றி.






*



Saturday, November 11, 2017

954. அப்பாடா ........ பூங்கா எங்களுக்கே ........ :)







நிச்சயமான தீர்ப்பு ... நியாயமான தீர்ப்பு ... அதை விடவும் இத்தீர்ப்பு இனி வரும் வழக்குகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கு போல் இருந்து வழி காட்டும் என்பதில் எங்களுக்குப் பல மடங்கு மகிழ்ச்சி.




ஆனால் ஒரு சின்ன வருத்தம் ...

தீர்ப்பு சொன்ன பின்பும் தீர்ப்பின் நகலுக்காக 98 நாள் காத்திருக்க வேண்டியதாகிப் போய்விட்டது. தேவையில்லாத மன உளைச்சல். வாய்க்கு வந்ததை நிறுத்திய கவலை. இன்னும் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விடுமோ என்ற அச்சம். There was light in the tunnel ... but it was far off keeping us in limbo. கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லையே என்ற மருகல்.







இப்போது நான் மொழியாக்கம் செய்து முடித்திருக்கும் நூலின் கடைசிப் பகுதியில் இது போல் பொது நல வழக்குகள் கையாளப்படும் விதம் பற்றி ஆசிரியை அழகாக வருத்தத்துடன் எழுதியுள்ளதை நாங்கள் தீர்ப்பின் நகலுக்குக்காகக் காத்திருக்கும் நேரத்தில் வாசித்து, மொழியாக்கம் செய்து கொண்டிருந்தேன்.  நல்ல ஒற்றுமை. ஆசிரியை பட்ட சோகத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. great coincidence .........





நேற்று பூங்கா வேலை மீண்டும் ஆரம்பித்தது.  

1997ம் ஆண்டின் இறுதியில் நானிருக்கும் வீட்டிற்குக் குடி வந்த பிறகு 1998ம் ஆண்டில் ஏறத்தாழ 50 மரங்கள் நட்டோம். வேப்ப மரங்கள் அத்தனையும் தளைத்தன. அடுத்து நன்கு வளர்ந்தவை தூங்கு மூஞ்சி மரங்கள். இப்போதுள்ள பூங்காவின் நடுவில் ஒரு பெரிய மரம் வளர்ந்து பெரும் கிளை பரப்பி நின்றது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை ஒரு விரலில் தூக்கி நிறுத்தி மாடுகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பாரே ... அந்தப் படம் நினைவுக்கு வரும்.






 சென்ற முறை பூங்கா வேலை ஆரம்பித்த போது இம்மரத்தின் பெரிய கிளைகளை அரக்கி விட்டனர். மழையில் மீண்டும் நன்கு தளைத்து விட்டது.
நேற்று அந்த மரத்தை அறுத்து எடுக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது.  ஒரு பூங்கா வருவதற்காக  ஒரு மரத்தைத் தியாகம் செய்வோம் என்றார்கள். என்னிடமும் அதற்கான அனுமதியைக் கேட்டு அதன் மூலம் என்னைப் பெருமை படுத்திய நண்பர்களுக்கு என் நன்றி.











கடைசியாக அந்த மரம் எங்களுக்கு 
பூசை போட இடமளித்தது.  
நன்றி மரமே!

சென்று வா.


*

இந்த பதிவுக்குத் தலைப்பாக ODE  TO  A  FALLEN  TREE என்று வைத்திருக்கலாமோ?!





*

Wednesday, November 08, 2017

953. BIBLE STUDY - பழைய ஏற்பாடு .... 3





இந்து மதக் கடவுள்கள் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பது பற்றி மற்ற மதக்காரர்கள் கேலி செய்வதோ, கேள்வி கேட்பதோ வழக்கமான ஒரு விஷயம் தான். இந்துக் கடவுள்கள் கைகளில் வித விதமான ஆயுதங்கள் வைத்துப் பயமுறுத்துகிறார்களே என்றால், ஆபிரஹாமியக் கடவுள் அவர்களின் வேதப் புத்தகங்களில் மிகவும் பயங்கரமான வார்த்தைகளோடும், கட்டுப்பாடுகளுடனும் அச்சத்தைக் கரைத்து நெஞ்சில் ஊற்றும் பயங்கரத்தைச் செய்கிறது.


”நான் உன் கடவுள் … என்னை வணங்கு”  --  என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஆபிரஹாமிய கடவுள் (இனி, ஆபி.கடவுள் என்றழைக்கிறேன்.) மனித குலம் அத்தனையையும் “முழுக் குத்தகை” எடுத்தது போல், வேறு தெய்வங்களை நீ நினைத்தாலே உன்னை உருக்கொலைத்து விடுவேன் என்கிறது. அதற்காக ஆபி.கடவுள் கொடுக்கும் தண்டனைகள் அந்தக் கடவுளை ஈவு இரக்கமில்லாத ஒன்றாகத்தான் காட்டுகிறது. முழுவதுமாக மனித குலத்தைத் தன்னிடம் அடக்கிக் கொண்டு வேறு கடவுளைக் கும்பிட்டால் ஒழித்து விடுவேன் என்கிறது.


இணைச்சட்டம் 8:19   உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

இணைச்சட்டம் 5:7-9    என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது. … எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்;

இணைச்சட்டம் 4 : 24   உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.


அதையும் தாண்டி தன்னை நம்புபவர்களுக்கு இன்னும் வேறு பொறுப்புகளையும் ஆபி. கடவுள் நம்பிக்கையாளர்கள் மேல் ஏற்றி விடுகிறது.  என்னை நம்பினால் மட்டும் பற்றாது; அதைவிட வேறு தெய்வங்களைக் கும்பிடுபவர்களை இரக்கமின்றி கொன்று விடு; அந்தக் கடவுளின் சிலைகளை கூட விட்டு வைக்காது அழித்து ஒழித்து விடு என்று முரட்டுத்தனமான சட்டம் போடுகிறது.


லேவியர் 24: 16 ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்.

விடுதலைப் பயணம் 24 : 23  நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

எண்ணிக்கை 33:52  அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய ல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி, 53   தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்;
இணைச்சட்டம் 7:5   …அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.

என்னைப் படைத்தாய்… என்னை வணங்குவது தான் சரி … இப்படி ஒரு கடவுள் சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடவுளைத் தெரியாதவர்களோ, அறியாதவர்களோ அவர்களைப் படைத்ததாக எண்ணும் வேறு ஒரு சாமியைக் கும்பிட்டு வரலாம். அதை அப்படியே எடுத்துக் கொள்ள இந்த ஆபிரஹாமிய கடவுளுக்குப் பொறுக்கவில்லையே…. அப்படி கும்பிடுபவர்களை அழித்து விடு … அவர்கள் கும்பிடும் கடவுள் சிலைகளை அடித்து நொறுக்கு உடைத்துப் போடு என்றால் … என்ன கடவுளோ இது! சுத்த பயங்கரம் என்பதும், அயோக்கியத்தனமான கட்டளையாகவும் தான் இது தெரிகிறது.

இப்படிப்பட்ட ஓர் ஈவு இரக்கமற்ற கடவுளைக் கும்பிடும் மனிதனிடம் அன்பையோ,  ஒற்றுமையையோ, அயலானோடு அணுக்கமாக அன்பாக இணைந்து செல்வதையோ எப்படி எதிர்பார்க்க முடியும்? இதனால் தான் நான் மத நல்லிணக்கம் என்பது முடியாத ஒன்று என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்.

ஆரம்பகாலத்தில் கிறித்துவர்கள் இருந்தது போல் இப்போது இல்லை என்பது மகிழ்ச்சியே. ஆனாலும் ஆரம்ப காலத்தில் அவர்கள் நடத்திய சிலுவை யுத்தம், Spanish inquisition போன்ற பயங்கரங்கள் வரலாற்றுப் பக்கங்களில் ஆழமாகவே எழுதப்பட்டுள்ளன. வரலாறு அவைகளை அழித்து விடாது. உலகம் உருண்டை என்று சொன்னாலே தண்டனை.  அன்றிருந்தது போல்  கிறித்துவ மதமே ஒரே உண்மையான மதம் என்ற மமதை இன்னும் அம்மக்களிடம் இருந்தாலும் அதில் முன்பிருந்த வன்மம் குறைந்து விட்டது. 


எனது இளம் வயதில் நாங்கள் செய்த ஜெபங்களில் கிறித்துவர்களை மெய் ஞானிகள் என்றும், மாற்று மதத்தினரை அஞ்ஞானிகள் என்று அழைத்த வழக்கம் இப்போது என் வாழ்நாளிலேயே மறைந்து மாறி விட்டது. கடும் சட்டங்கள் பல நீர்த்துப் போய் விட்டன. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை ஒரு சான்றாகத் தருகிறேன். என் சிறு வயதில் ‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற சொல்லே ஒரு கெட்ட வார்த்தையாக கிறித்துவர்களால்  நினைக்கப்பட்டது. இப்போது மதம் அதை அத்தனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. 

கத்தோலிக்கர் மத்தியில் ‘பாவமன்னிப்பு’ என்ற ஒரு சடங்கிற்கு என் சிறுவயதில் இருந்த முக்கியத்துவம் இப்போதில்லை. இந்த மாற்றங்கள் என் வாழ்நாளிலேயே நடந்தவைகள் தான். இப்படி சில ‘தீவிர விஷயங்கள் நீர்த்துப்  போவதைப் பார்க்கும் போது எல்லோருக்குமே  மகிழ்ச்சி. ஆனாலும் இது போன்ற சில விஷயங்கள் மாறினாலும் “எங்கள் மதமே ஒரே சரியான மதம்” என்ற உன்மத்தமான நினைப்பு கிறித்துவர்களின் மனதில் இன்னும் பொங்கி வழிந்து கொண்டேயிருப்பதில் எனக்கு வருத்தமே! அது மாறவே மாறாது ... ஏனெனில் அதைத்தானே அவர்கள் “புத்தகம்” சொல்கிறது!




ஆனால் கிறித்துவத்தில் நடந்த இந்த மாற்றங்கள் அதன் பங்காளி மதமான இஸ்லாமில் இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லை என்பது ஒரு வேதனையான விஷயம். பழைய ஏற்பாட்டை பற்றி ஒவ்வொரு கிறித்துவரும் ஒவ்வொரு விதக் கருத்து சொல்வார்கள். அதனை முழுவதாக ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதில் உள்ள வன்மமும், சில மட்டமான ரசனை உள்ள புராணக் கதைகளும் தான் இப்படிக் கை கழுவுவதற்கான காரணம். ஆனால் அதை தங்கள் வேத நூலாகவே இன்னும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. I think it is an unavoidable nuisance for the Christians. 




பழைய ஏற்பாட்டின் வரலாறோ, அதனை எழுதியவர் யார், எப்போது அது எழுதப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. இப்போது கிறித்துவினால் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடு மட்டுமே நமக்கு அருளப்பட்ட முக்கியமான நூல் என்பார்கள்; ஆனால் பழைய ஏற்பாட்டையும் முழுவதுமாகப் புறக்கணிக்க முடியாத சிரமமும் உண்டு. பாவம் கிறித்துவ மக்கள்.





ஆனால் இஸ்லாமியருக்கு பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகள் அவர்களது குரானில் இடம் பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு புதிய, பழைய ஏற்பாடுகள் என்ற வித்தியாசம் ஏதுமில்லை. எல்லாமே குரானில் உள்ளவை. ஆகவே அனைத்தும் அவர்களுக்கு நம்பியாக வேண்டிய விஷயங்கள். அனைத்தையும் நம்பி, அதன் வழியே நடக்கிறோம் என்று சொல்லும் ISIS குழுவினரை அதனால் தான் மிதவாத இஸ்லாமியர்கள் கூட கண்டிக்க முடிவதில்லை. ISIS தரும் ஒரே பதில் – நாங்கள் குரானில் சொல்லப்பட்டதை “அப்படியே” நடத்திக் காண்பிக்கின்றோம் என்பது மட்டுமே. 

பின் ஏன் புத்தரின் உருவங்களை அவர்கள் உடைக்காமல் விடுவார்கள். ஆபி. கடவுளின் கட்டளைகள் அல்லவா அவை??!!

***

ஒத்த கருத்துடையோர் “ஆமென்” போட்டு விடலாமே!


***

Sunday, November 05, 2017

952. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ..... 2





*


மாத் 5-9

“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.”

 ஆஹா … ஏசு அமைதி பற்றிப் பேசுகிறார். மகிழ்ச்சி.

 யோவான் 14 : 27 

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்”.

 தனது சமாதானத்தை நம்மிடம் கொடுக்கிறார். சமாதானத்தின் தூதுவனாக நம்மிடம் இறங்குகிறார். பெரும் மகிழ்ச்சி. 

ஆனால் .. இதென்ன புதிதாக ….?

மத்தேயு 10:34-36  

34. பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 
35.  அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 
 36.  சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள். 

இவையெல்லாம்  தேவனுடைய வார்த்தை என்பீர்கள். ஏன் அக்கடவுள் நம்மைப் பிரிப்பதில், குடும்பத்தை உடைப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்? அதில் அவருக்கென்ன ஆதாயம்?

மேலே சொன்ன மேற்கோளுக்குப் பொருள் தேட முயன்றேன். பல விளக்கங்கள் … ஆனால் எதுவும் சரியான விடையாகத் தெரியவில்லை.

ஏசு தனது சீடர்களை மதத்தைப் பரப்புவதற்காக அனுப்பும் போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ”உருவகம்” என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனாலும் சரியான பதில் கிடைக்கவில்லை.

பதில் தெரிந்தோர் பொருள் கொடுத்தால் தன்னியமாவேன்.

உதவுங்கள். 





*

https://www.facebook.com/sam.george.946/posts/10212566033819076

 *

Saturday, November 04, 2017

951. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ... 1




*


மத்தேயு 10 : 37

“என்னை விடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல”.


அனேகமாக இஸ்லாமியர்களுக்கு மிகச் சின்ன வயதிலேயே மதராஸாவில் சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதானென்று நினைக்கின்றேன். எல்லா இஸ்லாமியர்களும் இதை ஒரே மாதிரியாகச் சொல்வதை விவாதங்களில் பார்த்திருக்கின்றேன். 

"எங்களைப் பெற்ற தாய் தந்தையரை விட நாங்கள் நபியையே நேசிக்கிறோம்” என்று சொல்வார்கள்.

என்னடா இது … என்று பார்த்தால் இது அப்படியே விவிலியத்தில் அச்சுக் குண்டாக உள்ளது. இங்கே ஏசுவைப் பற்றிச் சொன்னது அங்கே நபிக்காக மாறி விட்டது!  ந்ல்லவேளையாக எங்களுக்கும் சிறு வயதிலேயே இதை மனப்பாடம் செய்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல் என்று நிர்ப்பந்திக்கவில்லை.


இஸ்லாமிய மதம் அதற்கு முன்பிருந்த கிறித்துவ, யூத, ஜோராஸ்ட்ரியன் மதக் கோட்பாடுகளை உள் வாங்கி ஆரம்பித்து வளர்ந்த மதம் என்பார்கள் வரலாற்றாளர்கள். அதற்கு இது ஒரு சாம்பிள்!

அவிசுவாசிகளுக்கு - அதாவது,  நான் சொல்ல வந்த கருத்து உங்களுக்குப் பிடித்தால் கீழே “ஆமென்”  (அதன் பொருள் -  "அப்படியே ஆகட்டும்”)  என்று பின்னூட்டமிடவும்.


*


Friday, September 29, 2017

950. BIG SALUTE TO HER !




*


 சும்மா சொல்லக்கூடாது. அந்த 75 நாட்கள். என்ன நடந்தது .. என்னவெல்லாம் நடக்கவில்லை என்பது பயங்கர மர்மமாக இருக்கிறது. இப்போது ஒவ்வொரு மூலைக்குள்ளிருந்தும் ஒவ்வொரு முனகல்கள். சில பிதற்றல்கள். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மையாக விசுவரூபமெடுத்து நிற்கிறது. அந்தக் கட்சியில் எல்லாருமே காசு .. பணம் .. பதவி. இவ்வளவு தான். எந்த நன்றியுணர்வோ, அன்போ பாசமோ, எதுவும் இல்லாமல் காசுக்கு நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலையும் ஆட்களே எங்கும் காணப்படுகிறார்கள். அட .. அந்த அம்மாவின் விசிறிகளாகவும், பக்தர்களாகவும் இருந்த சாதாரண மக்கள் கூட இப்போது எந்த உணர்வும் இல்லாமல் அலைகிறார்கள். செத்தவுடன் சித்தி மேல் கோபமாக இருந்தது போல் தெரிந்தது. இந்தம்மாதான் அந்தம்மாவை கொன்னுரிச்சின்னு கோபமா இருந்தாங்க. இப்போ எல்லாம் மறந்தது போல் தெரிகிறது. ஆறிப் போச்சு போலும். முதலில் மன்னார்குடி மேலிருந்த கோபமெல்லாம் இப்போது இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.


ஆயிரம் இருந்தாலும் ‘சித்தி’ சரியான சித்திதான் போலும். எம்புட்டு காரியங்களை செய்ய முடியுதுன்னு பார்த்தா மலைப்பா இருக்கு.


சரி … மம்மியை மருத்துவ மனையில் சேர்த்தாச்சு. ஏன் சர்க்கரை அம்புட்டு கூடிப்போச்சுன்னு தெரியலை. விடுங்க. மருத்துவ மனையில் பெரிய பெரிய மருத்துவர்களெல்லோரும் வந்தாங்க .. மருத்துவம் பார்த்தாங்க. மருத்துவ மனைத் தலைவர் அப்பப்போ என்னென்னவோ செய்திகளையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் நோயாளி எப்போ வீடு திரும்பலாம் என்பதை நோயாளியே முடிவு செய்யும் படியான அளவிற்கு மருத்துவம் வெற்றியடைந்தது என்றார். அது ஒரு நல்ல ஜோக்காக இருந்தது. மற்ற மருத்துவர்கள் வாயே திறக்கவில்லை. ஒரு வேளை அது medical ethics என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இங்கிலாந்து மருத்துவர் பீலே ஏன் ஊடகங்களைக் கூட்டி பேசினார் என்று தெரியவில்லை. அப்போது அதற்கான அவசியம் இருந்ததா என்றும் தெரியவில்லை. அடுத்து, அரசியல் வியாதிகள் எல்லோரும் வந்து பார்த்தார்கள். நேரில் எல்லோரையும் அந்த சித்தியால் எப்படி filter பண்ண முடியும், எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்பது எனக்குப் புரியவே இல்லை. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் என்று எல்லோரையும் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை எப்படி ஒருவரால் எடுத்துக் கொள்ள முடிந்தது? வந்து பார்க்க வந்தவர்களும் எப்படி அதற்கு அடிபணிந்தார்கள் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. எப்படி அவ்வளவு அதிகாரம்? யாரும் ஏன் கேள்வி கேட்கக்கூட தைரியம் இல்லாமல் இருந்தார்கள். ஆச்சரியம் … அவலம். அவ்வளவு தான் நம் ஆட்கள்.


மேல்மட்ட ஆட்களை எப்படி ”தன்னைக்கட்டினார்” என்பது புரியவில்லை. காசு வேலை பார்த்ததா? அப்படியா எல்லோரும் சரமாரியாயக் காசுக்கு விழுந்து விடுவார்கள்? சரி … அது ஒழியட்டும். அடுத்து அடுத்த நிலை ஆட்கள். நிச்சயம் ஒரு மருத்துவ மனையில் மிகச் சாதாரண வேலை பார்க்க அத்தனை பேர்கள் இருப்பார்கள். அடிமட்ட வேலைக்கு வந்த மக்களைக் கூட எப்படி “வாயைக் கட்ட முடியும்” என்றும் புரியவில்லை. எந்த செய்தியும் வராத அளவிற்கு எப்படி அந்தப் பெண்ணால் அணைகட்ட முடிந்தது. காசும், பதவியும்(?) செய்த வேலையா அது?


தன் கட்சி ஆட்களை அடக்கி வைப்பது எளிது. வளைந்தே பழகிய மக்கள். நிமிர்ந்து நிற்க முடியாத ஜென்மங்கள். சாலையைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் தானே. (இன்னும் கூட அவர்களின் முதுகு நிமிறவே முடியவில்லை. எடப்பாடி அவர்களோடு இருந்த இன்னொரு சாதாரண எம்.எல்.ஏ. ஆனால் இப்போது முதல் அமைச்சர். அவர் வரும்போதும் இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் மம்மிக்கு குனிந்த அளவு இல்லாவிட்டாலும் அப்படி ஒரு அநியாயமாகக் குனிந்து வணக்கம் போடுகிறார்கள். என்னவோ சொல்வார்கள். மரத்துக்குச் சேலையைச் சுற்றினாலும் திரும்பிப் பார்ப்பான் என்பார்கள். அது மாதிரி இந்தக் கட்சி உறுப்பினர்கள் பதவியில் யார் வந்தாலும் விழுந்து கும்பிடுவார்கள் போலும். நல்ல வளர்ப்பு!)


ஆக, சித்தி தன் கட்சி ஆட்களை அடக்கி ஆண்டார்; ஆண்டு கொண்டிருக்கிறார். அது பெரிதில்லை. ஆனால் கூட்டிப் பெருக்க வரும் ஒரு பாவப்பட்ட பெண்ணிலிருந்து, மத்திய அமைச்சர்கள் வரை வந்தவர்கள் அனைவரின் கண்ணைக் கட்டி விட்டது எப்படி? ஒரு விஷயமும் கசியாதபடி எப்படி திரை போட்டு அக்குடும்பம் மறைத்தது? இரண்டு முறை ஒரே ஆளைச் சாக வைத்த நாடகமும் நடந்தேறியது. செத்தவரின் மீது போர்த்திய நாட்டின் மூவர்ணக் கொடியை வாங்கும் மனத்திறமை மிக அபாரம். அப்போதே தனது வாரிசுரிமைக்குக் கையெழுத்தைப் போட்டாகி விட்டது. அல்லது அது நம் தலையெழுத்துக்கே போட்ட கையெழுத்தோ என்னவோ?


சிறைக்குப் போனதென்னவோ குற்றம் செய்ததற்கும், குற்றத்திற்கு உதவியாக இருந்ததற்கும். போலி கம்பெனி இருந்ததற்கும் ஆதாரம் வந்தாச்சு. ஆனால் ஷாப்பிங் போற அளவு திறமையாக தன் சுற்றத்தை சிறையிலேயே அமைத்துக் கொள்ள முடிகிறது. சும்மா வந்த ஊர்ப்பய காசு தானே. அதானால் தான் அது சிறையாக இருந்தால் என்ன .. கூவத்தூராக இருந்தால் என்ன … கூர்காக இருந்தால் என்ன? அள்ளி எறிய முடிகிறது!


இவ்வளவு திறமையான அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய சல்யூட் தாராளமாகப் போடலாம்.


படே ஆத்மி!


*

ஆனால் philosophical-ஆக பார்த்தால் … 20 வருஷத்துக்கு மேல அப்படி ஒரு முரட்டுத்தனமான powerfulஆக இருந்துட்டு, எப்படி செத்தோம்னு தெரியாம ஒரு ஆள் போயாச்சு. இன்னொரு ஆளுக்கு காத்து அடிக்க ஆரம்பிச்ச காலத்துல சிறைக்குப் போயாச்சு. என்னதான் ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டாலும் சிறை தானே வாழ்க்கையாகப் போச்சு.

பிள்ள குட்டிகளுக்கும் சேர்க்கலை. தியேட்டரும், நீரும், நிலமும் வாங்கி/பிடுங்கிக் குமிச்சி யாருக்காகவோ குமிச்சி வச்சாச்சி… என்ன வாழ்க்கை? 

இது தான் வாழ்க்கையா? தெரியலையே!


*



http://tamil.south.news/sasikala-jayalalitha-fight/


*

Monday, September 11, 2017

949. சில விவாதங்கள் - என் ‘மதங்களும் சில விவாதங்களும்” நூலுக்கான ஓர் ஆய்வுரை

*


 சில விவாதங்கள்



மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. 

 மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன. 

 இவையன்றி பட்டினிக் கிடத்தல், இரத்த சர்க்கரையின் அளவு அலை பாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவுகளைக் கொண்ட நடனம் ஆகியவையும், அமானுஷ்யமானவை என்று சொல்லப்படும் அனுபத்தைத் தர வல்லவை. 

 சாதாரணமாக இளம் வயதில் மதத்தை விட்டு விலகியிருந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று, வயதடைய வயதடைய, கடவுளைத் தேடி சரணடைபவர்கள் ஏராளம்..

 ஆனால் இவர் சற்று வித்தியாசமானர்.

 40 – 43 வயது வரை, இவர் சார்ந்த கிறித்துவ மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், இம்மதக் கடவுளின் மேல் மாறா பற்றும் உடையவராய விளங்கியவர்.

 இளம் வயதில் பூட்டிக் கிடந்த கோவிலின் முன்னால், இரவு நேரத்திலே போய், தனியாக உட்கார்ந்து அழுதவர்தான் இவர்.

 ஆனாலும், பின்னர் மெல்ல மாறினார்.

 ஒரு நாளிலோ, ஒரு சில மாதங்களிலோ ஏற்படட மாற்றமில்லை. தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து மெல்ல மெல்ல மாறினார்

 யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ இவர் மாறவில்லை.

 கேள்வியும் நானே, பதிலும் நானே என இவர், இவரையேக் கேள்விகள் கேட்டு, அதற்கானப் பதில்களையும் இவரே கூறி, பலமுறை பதிலுக்காக அலையாய் அலைந்து, பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, மெல்ல மெல்ல மாறியவர்.

 தன் மதம், பிறர் மதம் என்று பாராமல், உலகின் அத்துனை மதங்களையும் அலசி, நெக்குருகப் படித்து, தீவிராமாய் ஆராய்ந்து, சில விவாதங்களை முன் வைக்கிறார்.

 தேவதூதர், யேசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் கூறியதாகவும், அதே தேவதூதர் முகமதுவிற்கு அல்லாவின் வார்த்தைகளைக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

 இதோ கடவுள் உன்னிடம் குழந்தையாய் பிறக்கப் போகிறார் என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா அல்லது பயப்படாதே, நான் அல்லாவினால் அனுப்பப் பட்டவன் என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா. 

 எது சரி?

 இரண்டில் ஒன்றுதானே சரியாக இருக்க வேண்டும்.

 விவாதத்தை முன் வைக்கிறார்.

 நம் இந்தியக் கடவுளர்கள் எங்கெல்லாம் சஞ்சரித்தார்கள். வடக்கே கைலாயம் என்ற இமயம். தெற்கே குமரி முனை இந்த இந்தியக் கண்டத்தைத் விட்டு வெளியே செல்லாத கடவுளர்கள், கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால், அடுத்த நாடு, இலங்கையைக் கூறலாம். 

 கிரேக்க நாட்டுக் கடவுளர்கள், நமது முருகனைப் போல், மலைகளில் மட்டுமே வசிப்பதான கதை. 

 ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும், அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும், அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கி விடுவது ஏன்? 

விவாதத்தை முன் வைக்கிறார். ஏன் கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள். 

யோசித்துப் பாருங்கள் என சிந்திக்க நம்மைத் தூண்டுகிறார்.

 ஆற்ற முடியாத சோகங்களைக், காலம் மெல்ல மெல்ல ஆற்றும். 

 ஆனால் அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை, உடனடியாய் போக்கும். 

இதனைப் புரிந்து வாழ்ந்து, பட்டுணர்ந்து தெளிவு பட்ட, நம் முன்னோர், நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த, சுமை தாங்கித் தூண்கள்தான் நமது கடவுளர்கள். 

 அவைகள் வெறும் தூண்கள்தான், வெறும் கற்கள்தான், வெறும் கதைகள்தான். 

ஆனால் மனதிற்கு இதம் அளிக்க, மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.

 சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம் தேவை. 

 வயதும், மனமும் வளர வளர, கடவுள் நமக்குத் தேவையில்லை. 

 செத்தபிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது, 

உன்னையும், என்னையும், மனிதம் உள்ள மனிதனாக வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். 

 இந்த வெளிச்சத்தை உணர்ந்தபின், அறிந்தபின், கடவுள் எதற்கு. மனிதம் போதுமே.

 மதங்களும் சில விவாதங்களும் 

 பேசுவதே இவர் தொழில்.

 ஆம். இவர், 37 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

ஒரு நைஜீரியப் புதினத்தை மொழி பெயர்த்தமைக்காக, இரு மாநில விருதுகளைப் பெற்றவர்.

 இவரது இரண்டாவது மொழி பெயர்ப்பு நூல் பேரரசன் அசோகன்.


‘மதங்களும் சில விவாதங்களும்” 


என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல் …… தொடர்ந்த தேடல் …… 

 முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. 

நான் சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. கடினமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள் …. 

 240 பக்கங்களுக்குத் தொடரும் விவாதங்கள், விளக்கங்கள், வெளிச்சங்கள். 

பெரு வள்ளலாய், பெரு வெள்ளமாய், விவாதங்களை முன் வைத்து, அலசி ஆராயும் இவரின் புனைப் பெயர் ....

 த ரு மி

. மதங்களும்,சில விவாதங்களும்
எதிர்வெளியீடு,
96,நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி -642 002
தொலைபேசி 04259 . 226012, 9942511302

 மின்னஞ்சல் dharumibook@gmail.com 





 *

Friday, September 01, 2017

948. அசோகர்



*


https://www.facebook.com/sam.george.946/posts/10212057853234879?pnref=story


*

***


*

Saturday, August 19, 2017

947. எங்கள் கோவிலில் ஒரு அதிசயம் .........




*

திடீரென்று பிரிவினைக்கார சபைக்காரரும், கிறித்துவ ஊழியம் செய்பவரும், எங்கள் பகுதியில் குடியிருப்பவரும், பழக ஆரம்பித்ததிலிருந்தே உறவு முறை சொல்லி அழைத்து நட்பு பாராட்டும் நண்பரிடமிருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. எங்கள் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் (கத்தோலிக்க) கோவிலில் ஒரு அதிசயம் என்று செய்தி வந்தது. இரண்டு படங்களுடன் வந்த செய்தி அது.

ஒரு படம் இது தான்: --->
                                               

அதனோடு எங்கள் பங்குத் தந்தை (Parish Priest) கொடுத்த செய்தியும் இருந்தது. செய்தி இது தான்: 


அன்பார்ந்தவர்களே .. 
கிறிஸ்து அரசரின் பெயரால் வாழ்த்துகள்.

நேற்று காலையிலிருந்து எம் பங்கில் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் ஆலயத்தின் பீடப்பகுதியில் நற்கருணைப் பேழை அதற்கு மேல் அமைக்க இருக்கும் கிறிஸ்து அரசர் சுருப இடத்தில் அன்னை மரியாள் கொடிப் பிடித்து  தம் திரு மகனை வரவேற்பது போல நிழல் படிந்திருக்கிறது. 

இது உண்மையிலேயே இறைவன் திருவுளம் என்றால் 
கிறிஸ்து அரசருக்கும், அன்னை மரியாளுக்கும் 
புகழ் உண்டாவதாக !!!!!

என்றும் இறையன்பில்
Fr. மரிய மிக்கேல்
பங்குத் தந்தை, 
கிறிஸ்து அரசர் தேவாலயம்,
விளாங்குடி, மதுரை




பிள்ளையார் பால் குடித்த கதையும்,  மும்பையில் சிலுவையிலிருந்து வந்த ரத்தம் என்று சொன்னதை எடமருக்கு தவறென கண்டு பிடித்ததும் “அவிசுவாசியான” (மூமின்!!) எனக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.  (Sanal Edamaruku is an Indian author and rationalist. He is the founder-president and editor of Rationalist International.)


Sanal Edamaruku  -  Miracle-buster


 ஆனாலும் ஆர்வம் விடுமா?  உடனே வண்டியை எடுத்து விரைந்தேன் கோவிலுக்கு.


 புதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் கோவில். இப்போது வழிபாடுகள் கீழ்த்தளத்தில் - எதிர்காலத்து வண்டி நிறுத்தும் இடம் - நடந்து வருகின்றன. வீட்டுக்கார அம்மா கோவிலுக்குப் போகும் போது அவர்களை கீழே
அனுப்பி விட்டு கோவிலின்மேலே  உள்கட்டுமானத்தை ரசிப்பது வழக்கம். ஞாயிறு கூட சில ஆட்கள் அலங்கார வேலை செய்து கொண்டிருப்பார்கள். நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு நகாசு வேலை செய்யும் அவர்களைப் பார்ப்பது நன்றாக இருக்கும். சின்னச்சின்ன சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கொண்டிருப்பார்கள். மிக அழகான வேலைப்பாடுகள் உள்ளே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன். முதல் தடவை பார்த்த போது பிரமித்துப் போனேன்.  என்ன அழகான வேலைப்பாடுகள். Wondering about the symmetry and beauty of the inner decorations



இன்று உள்ளே போனேனா ... கோவிலில் சின்னக் கூட்டம் இருந்தது. விசேஷ வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.  பூக்கள், மெழுகுவர்த்தி, ஜெபங்கள் என்று மக்கள் ஈடுபாட்டோடு இருந்தனர். 

 ஆலயத்தின் பீடத்தின் நடுவில் புதிய சிமெண்ட் சுவற்றில் கருமையான உருவம் ஒன்று. பெண்ணின் முதுகுப்பக்கம் காண்பிப்பது போல் ஒரு உருவம் தெரிந்தது. வலது கையை சிறிது உயர்த்தி ஏதோ ஒன்றைப் பிடிப்பது போன்ற ஒரு உருவம் தெரிந்தது. மக்கள் பலரும் மலர் வைத்து, மெழுகு திரி ஏற்றி ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். எந்த நம்பிக்கையாளனுக்கும் இதைப் பார்த்ததும் நிச்சயம் பக்தி பொங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.  பார்ப்பதற்கு அப்படியே ஒரு பெண்ணின் உருவம். கையில் எதையோ ஏந்திக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம். மரியாளை நம்புவோருக்கு அது நிச்சயம் ஒரு மரியாளின் உருவம் தான்.

பங்குத் தந்தையும் இருந்தார். (என் புத்தகம் கூட ஒன்று அவரிடம் உண்டு. வீட்டுக்கு ஒரு முறை வந்த போது கொடுத்திருந்தேன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். ஆனால் என் புத்தகம் என்ன சொல்கிறது என்பது பற்றி இதுவரை அவருக்குத் தெரியாது.) அவரிடம் படம் எடுக்கலாமா என்று கேட்டேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.



.
எங்கள் பங்குத் தந்தை
Fr. மரிய மிக்கேல்

படம் எடுத்ததும் மனசுக்குள் நாமும் ஒரு எடமருக்கு என்ற நினைப்பு வந்தது எனக்கு. 

பீடத்தின் பின்பக்கம் சென்று பார்க்க நினைத்தேன். பீடம் பின்பக்க சுவரிலிருந்து சிறிது முன்னால் தள்ளி இருந்தது . பின் பக்கம் சென்றேன். அது இப்போதைக்கு அங்கு வேலை செய்பவர்களின் தங்கும் இடமாக இருந்தது. பீடத்தில் உருவம் தெரிந்த இடத்திற்கு நேரே பின்னால் சென்று பார்த்தேன். அங்கும் - படத்தில் இருப்பது போல் - ஒரு வட்டமான இடத்தில் சுவற்றில் ஈரம் பாய்ந்திருந்தது. மதுரையில் சமீபத்தில் நல்ல மழையும் பெய்திருந்திருந்தது. அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். நீரின் ஈரம் தெரிந்தது.  அந்த 




இடத்திற்கு மேல் சுவற்றின் உயரத்திலும் சிறிது ஈரம் தெரிந்தது.  மழையின் விளைவு என்று மனதிற்குள் தோன்றியது.



அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து எப்படி அந்தச் சுவற்றில் ஈரம் வந்தது என்று கேட்டேன். அவர் சாரலில் நனைந்திருக்கும் என்றார். ஆனால் மூடிய அறை. அங்கு எப்படி சாரல் அடித்திருக்க முடியும் என்றேன். தெரியவில்லை என்றார். 

அடுத்து அவரிடம் முன் பக்கம் உருவம் தெரிவதும், பின்னால் ஈரம் இருப்பதும் ஒரே சுவரா என்று கேட்டேன். அவர் தனித்தனி சுவர் என்றார். அப்படித் தெரியவில்லையே என்றேன்.  

பீடத்திற்கு நேர் மேலே ஒரு வட்டம் வெளிச்சம் வர திறந்தே இருந்தது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் இறங்கி இப்படி ஒரு உருவம் வர நிச்சயமாக எந்த வழியும் இல்லை. பின்னாலிருந்தும் நீர் கசிந்து வரவும் வழியில்லை.

நேற்றிருந்த அதே அளவில் தான் இன்றும் உருவம் தெரிகிறதாம். ஈரம் காய்ந்திருக்குமே என்ற நினைப்பில் கேட்டேன். நேற்றை விட இன்று தான் அதிகமாகத் தெரிகிறது என்றார் ஒருவர்.

பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி இது சட்டென்று அவிழவில்லை. 

பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளக்கம் கிடைத்தால் தருகிறேன்.


இப்போதைக்கு கீழே உள்ள இரு நிகழ்வுகள் பற்றியும் படித்துக் கொள்ளுங்கள் - விருப்பமிருந்தால்!

JUST CLICK THEM:

https://www.theguardian.com/world/2012/nov/23/india-blasphemy-jesus-tears

http://dharumi.blogspot.in/2006/04/154.html



 *