Showing posts with label பலசரக்கு. Show all posts
Showing posts with label பலசரக்கு. Show all posts

Sunday, March 22, 2015

827. அட .. போங்கப்பா .. நீங்களும் உங்க சூப்பர் சிங்கரும் ....






*


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆச்சரியத்தோடு பார்த்தது உண்டு. இம்புட்டு திறமையான்னு ... ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இருப்பாங்க போலும். muziklounge அப்டின்னு ஒரு பாட்டுப் பள்ளிக்கூடம் ஒண்ணு இருக்கிறது போலும். அதன் மாணவர்கள் பாடிய இரண்டே இரண்டு பாட்டு கேட்டேன். என்னமா பாடுறாங்க... இவங்க திறமையோடு பார்க்கிறப்போ சூப்பர் சிங்கர்ல ஜெயிச்சவங்க திறமை அதிகமில்லை.

சூப்பர்ல ஜெயிச்சவங்கள்ள அதிகமாக அதன் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி தெரியவில்லை. முதல் தடவை வந்த மாத்யு என்ன ஆச்சு? அஜேஷ் ஒரு அரை பாட்டு மட்டும் பாடியது மாதிரி இருந்தது. பின் ஆளைக் காணோம். கடைசியா வந்த திவாகர் என்ன ஆச்சுன்னு தெரியலை. ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு பாடுன பையன் முதல் ஆளாக போட்டியில வரலை. ரொம்ப நல்லா பாடின அல்காவைப் பற்றி அதற்கு மேல் தெரியவில்லை. பரிசு வாங்கினாலும் பின்னணி பாடகர் ஆவதற்கு ’அதற்கு மேலும்’ போவது எப்படி?

எது எப்படியோ... muziklounge போட்டிருக்கிற youtubeல் வர்ர நான்கு பாடகர்கள் பக்கத்தில் - except அல்கா - சூப்பர் சிங்கர் பாடகர்கள் பக்கத்தில கூட வர முடியாது. என்னமா பாடுறாங்க....

சச்சினும், அந்த சின்னப் பொண்ணும் - அஸ்வதி ராஜ் -  நல்லா பாடுறாங்க ... அதிலும் அந்த சின்னப் பொண்ணு பாடும் போது அட... யார் யாருக்கெல்லாம் 60 லட்சம்..70 லட்சம்னு வீடு கொடுக்கிறாங்களேன்னு தோணுச்சி ...



 



*



 *

*

இப்படி ஒரு வித்தகரா? எந்த குருவும் இல்லாமல் பல வகை கம்பி வாத்தியங்களை வச்சி விளாசுகிறாரே.... வித்தகர் தான் .........



*

Thursday, May 24, 2012

570. THE MYSTERY CONTINUES ...

*

தெக்கத்திக்காரங்கன்னா தெக்கத்திக்காரங்க, தான் !!!

+2 தேர்வுகளின் முடிவுகளில் டாப் 10 இடத்தில் முதல் ஐந்து இடங்களில் நான்கிடம் தெக்கத்தி மாவட்டங்களுக்குத் தான். அதில் எங்களுக்குப் பெருமை. ஆனால் அதிசயத்தக்கமானதாக எனக்கு அன்றும் இன்றும் இருப்பது முதலிடத்தை பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து வைத்திருப்பதுதான். இந்த ஆச்சரியத்தின் காரணமாக 2006-ம் ஆண்டே ஒரு பதிவிட்டிருந்தேன். மீள் பதிவாக அதே ஆச்சரியத்தோடும்,  அப்போதிருந்த கேள்விகளோடும் எழுதப்பட்ட பழைய பதிவை மீள்பதிவிடுகிறேன்.

பதிலிருப்போர் பதில் தரலாமே ...

இந்த ஆண்டின் தேர்வு முடிவுகள்

+2 PASS PERCENTAGE

THE TOP 10 DISTRICTS

விருதுநகர்            94.68
தூத்துக்குடி            94.62
ஈரோடு                    93.35
மதுரை                    93.32
திருநெல்வேலி   93.11
கோவை                 91.46
நாமக்கல்               90.97
திருப்பூர்                 90.8
கரூர்                        90.8
சிவகங்கை           90.58
சென்னை              90.4

..............................................................................................................................................

மீள் பதிவு


THE HINDU தேதி: 23.11.'06 



நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.

சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்... 

*

சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6%
மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்? (சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)

* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)

* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)

* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%; அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?

மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா ஜி.ரா.?

இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான். அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு போங்க)

* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்... *

Sunday, November 20, 2011

535. Oh! JESUS CHRIST !!!




*

Oh! Jesus Christ! Entry through a back door is not a barely legal option even if you go there for paying a deposit.

But considering a flatulence (A state of excessive gas in the alimentary canal ... புர் .. புர்ர்.. ...!) like a murder is crazy.

With dope a drunk may molest any one even with headlights on! Damn devil, he should be an idiot.

ஜாக்கிரதை! மேலே உள்ள மூன்று சொற்றொடர்களை நீங்கள் SMS செய்தால் உங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். கடும் தண்டனை நிச்சயம்!

நல்ல வேளை இதெல்லாம் இங்கில்லை. பக்கத்து ஊரு பாக்கிஸ்தானில் தான். ‘athlete's foot,' ‘back door,' ‘barely legal,' ‘damn,' ‘deposit,' ‘devil,' ‘dope,' ‘drunk,' ‘flatulence,' ‘headlights,' ‘idiot,' ‘Jesus Christ,' ‘molest,' and ‘murder.'
இதுபோன்ற 1695 வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதென (அவைகள் அப்படி ஒன்றும் கெட்ட வார்த்தைகள் கூட இல்லையே!)
அரசு சட்டம் போட்டிருக்கிறதாம்.

இங்கே வாசித்துக் கொள்ளுங்கள்.

இந்த வார்த்தைகளை ஏன் அந்த அரசு இப்படி புத்திசாலித்தனமாகத் தடை செய்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்; நானும் தெரிந்து உய்வடைகிறேனே ...!




*


Thursday, November 03, 2011

533. Gaddafi - A dictator or a rebellion ?

*
16 Reasons to believe Gaddafi is a dictator.
  1. There is no electricity bill in Libya; electricity is free for all its citizens.
  2. There is no interest on loans, banks in Libya are state-owned and loans given to all its citizens at zero percent interest by law.
  3. Having a home considered a human right in Libya.
  4. All newlyweds in Libya receive $60,000 dinar (U.S.$50,000) by the government to buy their first apartment so to help start up the family.
  5. Education and medical treatments are free in Libya. Before Gaddafi only 25 percent of Libyans were literate. Today, the figure is 83 percent.
  6. Should Libyans want to take up farming career, they would receive farming land, a farming house, equipments, seeds and livestock to kickstart their farms are all for free.
  7. If Libyans cannot find the education or medical facilities they need, the government funds them to go abroad, for it is not only paid for, but they get a U.S.$2,300/month for accommodation and car allowance.
  8. If a Libyan buys a car, the government subsidizes 50 percent of the price.
  9. The price of petrol in Libya is $0.14 per liter.
  10. Libya has no external debt and its reserves amounting to $150 billion are now frozen globally.
  11. If a Libyan is unable to get employment after graduation the state would pay the average salary of the profession, as if he or she is employed, until employment is found.
  12. A portion of every Libyan oil sale is credited directly to the bank accounts of all Libyan citizens.
  13. A mother who gives birth to a child receive U.S.$5,000.
  14. 40 loaves of bread in Libya costs $0.15.
  15. 25 percent of Libyans have a university degree.
  16. Gaddafi carried out the world’s largest irrigation project, known as the Great Manmade River project, to make water readily available throughout the desert country.

A documentary that discusses all these things is here -
http://www.youtube.com/watch?v=0Fwcntl7BeM

The reason Gaddafi was driven out and killed was not because he was a dictator, but because Libya had the purest petroleum in the world in abundance and because Gaddafi did not allow the western countries to capture it cheap and because Gaddafi driven out the IMF and World Bank by nationalizing all the banks in his country and because he supported anti-American and anti-western movements all over the world and  various other reasons.
This staged 'revolution of Libya' followed by the killing of Gaddafi shows how easy it is for the G7 countries to cheat the common masses(people like you and me) through media and propaganda; to create a fake revolution and to kill a leader whom they don't want.
*







Friday, October 14, 2011

531. விளம்பரங்கள்

*

சமீபத்தில் பார்த்த பாட்டு & நடனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது -- விஜய் தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படம் தான் --

“காலு கிலோ கறுப்புப் புளி
மஞ்சத் தூளு’டா ...

பையனுடைய entry, பாடுகின்ற பாட்டு, ஆடுகிற ஆட்டம், படப்பிடிப்பு எல்லாமே  மிக அழகு.  அந்தப் படம் எடுத்தவங்களுக்கு hats off !

பய புள்ள டான்சும் ரொம்பவே நல்லா இருக்கு ... கட்டாயம் பாருங்க.





*

ST கைப்பேசி விளம்பரத்தில் வருகிற நால்வருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த நால்வரில் யார் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்? வேலைக்கார அம்மா நன்கு பேசுகிறார். ஆனாலும் பேசாமலே நடித்த குண்டு பையன் கைப்புள்ளைக்குத் தான் முதலிடம்.


*
புரு காபி விளம்பரத்தில் வரும் அழகான பையன், ‘அம்மா சொன்னாங்க .. காபியில் ஸ்வீட்  இல்லாட்டா என்னடா; பொண்ணுதான் ஸ்வீட்டா இருக்கிறாளே’ என்று சொன்னதும் அந்தப் பெண் சிரிக்குமே பார்த்திருக்கிறீர்களா ...? என்ன ‘அழகு’!!



அடடா .. அந்த சீன் வரும்போது நான் வேறு பக்கம் பார்த்துக் கொள்வேன். தங்க்ஸ் ரொம்ப ஆசையா அந்த பொண்ணை, அதன் “சிரிப்பை” (!) பார்த்து ரசிப்பார்கள்.ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தம்: ஏன் இவ்வளவு அழகான பையனுக்கு இப்படியொரு ‘அழகான’ பெண் கிடைக்க வேண்டும்?

*

Raymonds விளம்பரப் படங்களில் வரும் மேல்நாட்டு இசை எங்கிருந்தெல்லாம் எடுக்கிறார்கள் என்று அப்படங்களைப் பார்க்கும் போதேல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ... முழுதாகக் கேட்க ஆசை.


*

Saturday, September 10, 2011

529. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் அரசியல் ...

*

’புதிய தலைமுறை’ வந்த பிறகு செய்திகள் கேட்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நேற்று - 9.செப்ட். ஒரு செய்தி கேட்டேன். இன்று தினசரியில் வருமா என்று எதிர்பார்த்தேன். அந்த செய்தி வரவில்லை. (செய்திகளை முந்தி தருகிறது புதிய தலைமுறை ..!!)

நேற்றைய செய்தியில் ப்ரணாப் முகர்ஜி சொன்ன செய்தி ஒன்று வந்தது. ஜன லோக்பாலில் சொல்லியாகி விட்டது - அடிப்படை அரசு ஊழியர்களுக்கும் இந்த சட்டத்தில் இடமுண்டு என்று. அதனால் மத்திய அரசு புதியதாக மார் தட்டிக்கொண்டு ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறதாம். அடிப்படை நிலை ஊழியர்கள் தங்கள் பதவிக் காலத்தில் ஊழல் செய்யலாம்; எந்த அளவு ஊழல் செய்கிறார்களோ அதன்படி அவர்களது பதவி இறுதிக்காலத்தில் வரும் மொத்தப் பணத்தில் சில ‘டிஸ்கவுன்ட்’ செய்யப்படும் என்று ஒரு சட்டம். செய்தியில் பார்த்த வரிகள்: சிறிய அளவில் ஊழல் செய்தால் இறுதிப் பணத்தில் 10%, அதிக அளவில் ஊழல் செய்தால் 20% எடுக்கப்படும்!

அடப்பாவிகளா!  -- இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. யார் பெரிய மடையர்கள் என்று புரியவில்லை. எனக்கு வரும் வேலை முற்றுப் பணம் 10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நான் முதலில் இருந்தே “ஒழுங்காக” கணக்கு வைத்து ஊழல் செய்ய வேண்டும் போலும். 10 question paper விற்றால் 10% = 1 லட்சம் எடுத்துக் கொள்வார்கள்; அப்போ நான் விற்கும் ஒரு question paperக்கு பத்தாயிரத்திற்கு மேல் விலை வைக்க வேண்டுமோ? பெரிய ஊழல் செய்ய வேண்டுமென்றால் ஒரு கல்லூரி வாத்தியார்  என்ன செய்ய முடியும்னு தெரியலையே! சரி ... அப்படி ஒரு பெரிய ஊழல் செய்யணும்னா .. அது இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் வர்ர மாதிரி செய்யணும். எல்லாம் நல்லா யோசித்து ப்ளான் பண்ணணும் ! அப்போதான் ‘வரவுக்கும் செலவுக்கும்’ சரியா இருக்கும்.

சரி ... கடைநிலை ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை. ஒரு அமைச்சன் கோடி கோடியாக ஊழல் செய்தால் அவனை என்ன செய்வார்கள். (மிஞ்சிப் போனால் நாலைந்து மாதம் ஏதாவது ஒரு சிறையில் வைத்து விட்டு அதன் பின் விடுதலை ... ஊழலில் திரட்டிய சொத்து ... அதை என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்யவே மாட்டார்கள்.  அனைத்து சொத்தும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் ....

என்ன மடத்தனமான திட்டம். ஊழல் செஞ்சா தண்டனை உண்டு; சாதாரணமாக வரவேண்டிய பணம் எதுவும் வராது; ... இப்படி ஏதும் சொன்னால் ஒரு பயம் இருக்கலாம். மக்கள் கொஞ்சம் ஒழுங்காக இருக்க முயலலாம். ஆனால் இந்த அரசு பட்டியல் போடுவது மாதிரி போட்டால் என்ன லாபமோ தெரியவில்லை; இந்த சட்டத்தைக் கொண்டுவந்த அந்த ‘அதீத புத்திசாலியை’ என்ன சொல்லி வாழ்த்துவது; இதை ஏற்றுக் கொண்ட அரசையும், அமைச்சரையும், அதிகாரிகளையும் என்ன சொல்லி வாழ்த்துவது என்றும் புரியவேயில்லை.

வெட்கக்கேடாக இருக்கிறது.

======================

சில செய்திகள் வருகின்றன -- 2G  ஊழலுக்கு பாடை கட்டியாகி விட்டது என்பது அந்தச் செய்தி.

2G ஊழலில் ராசாவும் கனிமொழியும் மன்மோகன், சிதம்பரம் பெயர்களை இழுத்ததும் மெல்ல மத்திய அரசு இதைப் பூசி மெழுகப் பார்க்கிறதாமே. C.B.I. ஒரு தகவல் தருகிறது; இந்த அமைப்பு இது வரை யாரையேனும் உருப்படியாக கழுவேற்றியுள்ளதா என்பதே ஒரு பெரிய கேள்வி. இதோடு C.A.G.சில தகவல்கள் தந்தன. ஆனால் இப்போது T.R.A.I. புதிய தகவல்களோடு வருகின்றன. 2G ஊழலில் அரசுக்கு ஏதும் நட்டமேயில்லை என்று ஒரு பெரும் போடு போடுகிறது.

ஆக, சீக்கிரம் ராசாவும், கனிமொழியும் எந்த ஊழலும் செய்யாதவர்கள் என்ற பட்டியலில் வெளிவருவார்கள்.

வெட்கக் கேடாக இருக்கிறது .......

=======================

மதுரையில் போன வாரத்தில் செய்தித் தாளில் வந்த செய்தி: வண்டிகளில் number plates  சரியான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் தண்டனை என்று செய்தி.

சட்டம் என்று சொல்லி விட்டார்களே என்று யாராவது சரியாக எழுதாத தங்கள் வண்டி எண்களை மாற்றுகிறார்களா என்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை; அரசு ஒரு சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தால் மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ’அட .. போங்கய்யா .. நாலைந்து நாளைக்கு போலீஸ் தேடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டால் பிறகு என்ன’  என்ற மனப்பான்மை நம்மில் அநேகருக்கு.

ஏன் நாம் மட்டும் இப்படி சட்டங்களை மதிக்காத மாக்களாக இருந்து தொலைக்கிறோம் ...?

நம்ம ஊர்  மக்களை நான் நல்லாவே பார்த்து விட்டேன். சட்டம் என்றால் மதிக்கும் மனப்பான்மையே கிடையாது. ஆனால் அரசு கொஞ்சம் ‘கையை ஓங்கினால்’ அனைத்தும் சரண்டர்! இரண்டு சான்றுகள்: இந்திராவின் அவசரகாலச் சட்டத்தில் நம் தமிழ் மக்கள் அடைந்திருந்த முட்டாள்தனமான அடிமைத் தனத்தைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உதாரணமாக, மூன்று முறை வேலைக்குத் தாமதமாக வந்தால் தண்டனை என்று ஒரு பேச்சு - வெறும் பேச்சுதான் - அடிபட்டது. அடேயப்பா ... மக்கள் பதறிப் போய் சரியான காலத்திற்கு அலுவலகம் வந்தது எனக்கு ஒரு அவலமாகப் பட்டது. இது போல் நம் தமிழ் நாட்டில் நடந்தவைகளைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்: இந்த மக்களுக்கு முதுகெலும்பு என்பதே கிடையாது; வெறும் பூச்சிகள் .. புழுக்கள். வெட்டு வீராப்புகள்.

மதுரையிலேயே இன்றும் நடக்கும் ஒரு வழக்கம். சாலையில் ஒரு சண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யாராவது ஒருவன் ‘ஏய் .. ஆள் தெரியாம விளையாடாதே!’ என்று அடுத்தவனைப் பார்த்து முதலில் எவன் சொல்கிறானோ அவனே வின்னர்!

இரண்டாவது சான்று: ஜெயலலிதா மழைநீர் வடிகால் திட்டம் நல்ல ஒரு ‘பய முறுத்தலில்’ அழகாக நடந்தேறியது.

நமக்கு எது சரி அதன்படி நடக்க வேண்டும்; கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது; சட்டம் என்று ஒன்றிருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இப்படியெல்லாம் நமக்கு எப்போது தோன்றும்????????




*


Friday, July 08, 2011

510. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*

மயிரும் மதங்களும்

வைக்கம் முகமது பஷீர் தன் மந்திரப் பூனை என்ற புனைவில் எழுதிய ஒன்று பிடித்தது. அவர் மலையாளத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்தினாரோ தெரியவில்லை; ஆனால் இந்த தமிழ் மொழியாக்கத்தில் ரோம மதங்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைவிட தலைப்பில் உள்ளது போல் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?!

“இதுவரை இந்த பூமியில் இருக்கும் எல்லா மதங்களும் ரோமத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. கொஞ்சம் ரோமத்தை நீக்கி, கொஞ்சம் ஒரு இடத்தில் மட்டும் ரோமம் வைத்து, சிலர் முழுமையாக நீக்கி, சிலர் முழுமையாக ரோமத்தை அப்படியே விட்டு .... இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது ரோம மதங்கள்! இப்போது ரோமங்களின் பிடியில் இருந்து மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது.”

விடுபட்டால் சரி!!

----------------------------------

விம்பிள்டன் 2011



விம்பிள்டன் 2011 பற்றி எழுதணும்னு நினச்சி, சோகத்தில எழுத முடியாம போச்சு!

வில்லியம்ஸ் அக்கா-தங்கச்சி முதலிலேயே போயாச்சு. எப்படியோ நவரத்திலோவாவின் ஆசி பெற்ற பெண் வென்று விட்டது.

ஸோங்கா பெடரரை வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அன்று ஸோங்காவின் ஆட்டம் அழகாக இருந்தது. ஸ்வீப் செஞ்சாலே பந்து எப்படி இறங்கியது! அரையிறுதிக்குள் 1,2, 3 தர ஆட்டக்காரர்களோடு 12ம் தர ஸோங்கா இறங்குகிறாரே என்று நினைத்தால், ஜோக்கோவிச்சிடம் பெரும் தோல்வி!

இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச் வென்று விடுவார் என்று சோகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது செட்டில் 6:1 என்ற கணக்கில் ஜோக்கோவிச்சை நம்ம ஆளு ரபா வெற்றி பெற்றதும் ... ஆஹா .. அடுத்த செட்டும் நம்ம ஆளு... அப்டின்னா 5 செட் ஆடினால் ரபா தான் என்று நினைக்கும்போது நாலாவது செட்டிலேயே ஜோக்கோவிச் அடிச்சி துவச்சி எடுத்துட்டார்.

ஒரே ஒரு செகன்ட் நேரத்தில் விம்பிள்டன் தரையிலிருந்து சின்ன புல்லை எடுத்து வாயில் போட்டார் ஜோக்கோவிச். ஆனால்  அதை எத்தனை அற்புதமாகப் படம் எடுத்து விட்டார்கள். ரொம்ப கவனமா இருப்பாங்க போலும்!

---------------------------

திஹார் ஜெயிலில் சாய்பாபா!!

Kancha Ilaiah - காஞ்சா ஐலையா Deccan Chronicle-ல் 6.7.11 அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ராம் தேவ் செய்த போராட்டம் பற்றிய ஒரு குறிப்பு; அதில் எப்படி ராம் தேவிடம் இவ்வளவு பணம்?; 200கோடிக்கு தனி ஒரு தீவு .. இப்படி பல கேள்விகள் கேட்டு விட்டு, பணக்காரர்களின் கறுப்புப் பணம் வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்பதோடு நிற்காது, நம்ம சாமியார்களின் / மதப் பிரச்சாரர்களின் ‘தெய்வீகப் பணமும்’ - divine money - வெளியே வரவேண்டுமென்றார்.

அமிர்தமாயி, ஸ்ரீ ஸ்ரீ, ராம் தேவ் போன்றோர் பெயரையும் குறிப்பிட்டார். (நம்ம ஊர் தினகரன், மோகன் லாசரஸ் பெயரெல்லாம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் போலும்!)  அதோடு இத்தனை கோடி பணமும், கிலோ கணக்கில் தங்கமும் சாய்பாபா படுக்கை அறையில் இருந்தது எப்படி என்று கேட்டுள்ளார். இன்று சாய் பாபா உயிரோடு இருந்திருந்தால் அ. ராசா, கனிமொழி மாதிரி சாய்பாபாவையும் திஹார் சிறையில் அரசு அடைத்திருக்குமா? என்று கேட்டிருந்தார்.

பாபா உயிரோடு இருக்கும்போது அந்தச் செல்வங்கள் பிடிபட்டிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? ஒன்றும் நடந்திருக்காது.

’எல்லாம் அவன் செயல்’!
----------------------------------

கெம்பனூர் 'சாதி இந்து'க்களின் சாதி என்ன என்று கேட்டிருந்தேன். ஒரு கோவைக்காரரும் பதிலே சொல்லவேயில்லையே!!
--------------------------------------

Sunday, February 27, 2011

481. சக்கரங்கள் சுழலுகின்றன ...

*

பதிவுலகிறகு வந்த பின் செய்த சில பிடித்த விஷயங்களில் ஒன்று

Thursday, February 24, 2011

480. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் ... 12

*

நீத்திஷ் குமார் அவர் மாநிலத்தில் ஒரு சட்டம் போட்டிருக்காராம். ஜூ.வி.யில் பார்த்தேன்.

Thursday, June 10, 2010

400. அமினா - ஒரு திறனாய்வு

*
அமினா பற்றிய முந்திய பதிவு ..... 

*
மதுரையிலிருந்து பேரா. ஜேம்ஸ் என்பவரால் நடத்தப்படும் சிறு மாத இதழ் "மனித நேயம்". வழக்கமாக இவ்விதழில் எழுதி வரும் முனைவர் பேரா.டாக்டர் வின்சென்ட் இவ்வாண்டின் மே மாத இதழில் அமினா என்ற என் மொழிபெயர்ப்பு நூலின் மீது ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். டாக். வின்சென்ட் நைஜீரிய புதின எழுத்தாளர் சினு அச்சிபி்யின் புதினங்கள் மீது Ph.D.க்கான தன் ஆய்வுக்கட்டுரை எழுதியவர். அவரது கட்டுரை:






நூல் :         அமினா 
ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி 
பதிப்பு: கிழக்கு

பக்கம்: 368 
விலை: ரூ. 200

ஆப்ரிக்க நாடுகளின் ஆங்கிலப் படைப்புகள் உலக இலக்கியத்தில் உயர்வாக மதிக்கப்படுபவை. குறிப்பாக நைஜீரிய நாட்டின் வளமான இலக்கியப் படைப்புகள் அரை நூற்றாண்டிற்கு மேல் வாசகர்களையும் திறனாய்வாளர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சினு அச்சிபியும், நோபெல் பரிசு பெற்ற ஓலே சோயிக்காவும் உலகப் பெரும் எழுத்தாளர்கள் வரிசையிலே இடம் பெற்றவர்கள். எனினும் வடக்கு நைஜீரியாவிலிருந்து இப்போதுதான் ஆங்கிலத்தில் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது முகமது உமர் எழுதிய அமினா என்ற நூல்.

இந்தப் புதினம் நைஜீரியாவில் இஸ்லாமியர் நிறைந்த பக்காவோ நகரினைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாமியப் பெண்களின் அவலநிலையை சிந்திக்கிறது. கதைத் தலைவி அமீனா மாநில மக்களவை உறுப்பினர் ஹமணாவின் நான்காவது மனைவி. படித்தவள். தொடக்கத்தில் தன் அழகு, செல்வம், கணவரின் பதவி தந்த செருக்கில் மிதந்தவள்.  ஆனால் அவளுடைய தோழி பாத்திமா என்ற பெண் விடுதலைப் போராளி அவளைத் தன் பக்கம் ஈர்க்கிறாள்.  ஹருணாவின் வீட்டில் பாத்திமாவின் கூட்டாளிகள் சந்திக்கிறார்கள். முதலில் அவர்களுடைய வழியில் செல்லாத அமீனா, பிறகு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.  அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் கணவன், அவனுடைய பெண்ணடிமைக் கொள்கையை எதிர்த்துப் போராடும் கூட்டம் என்று அலைக்கழிக்கப்படுகிற அமீனா பெண்கள் இயக்கத்தில் தலைவியாகிறாள். அவளுடைய கணவன் மக்களவையில் கொண்டு வந்த பெண்ணடிமைத் தீர்மானத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார், அவள் காப்பாற்றி வளர்த்த பெண் லாராய் துப்பாகிச் சூட்டில் இறக்கிறாள். அமீனாவும் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறாள். வழக்கு மன்றத்தில் அமீனாவே தனக்காக வாதாடுகிறாள். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பாத்திமா அமீனாவிற்கு ஐ.நா. சபை மாநாட்டுப் பத்திரம் தரப் போவதாக அவளுக்குத் தெரிவிக்கிறாள். இந்தப் போராட்டம் தோற்றாலும், அடுத்த போராட்டம் வெற்றி தரும். "ஒளிமயமான எதிர்காலம் கைக்கெட்டும் தூரத்தில் தான்" என்ற் நம்பிக்கைச் சொற்களோடு நாவல் முடிகிறது.

நைஜீரியாவில் பரவி இருக்கும் ஊழல், பதவிப்போர் ஆகியவற்றைப் படம், பிடித்துக் காட்டும் இந்நாவல் இஸ்லாமியப் பெண்களின் அவல நிலையை நெஞ்சுருகச் சொல்லுகின்றது. பலதாரமணம், பெண்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல் முதலியன நைஜீரிய இஸ்லாமிய சமூகம் அங்கீகரித்தவை. மகன் ரஷித்தின் உயிரைக் காப்பாற்றக் கதறியழும் அமீனாவை ஹருணா சந்தேகத்தின் பேரில் கண்மண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவது கொடூரமான சோகம்.

நைஜீரியாவின் பெண்ணடிமைத்தனத்தையும், ஊழலையும் விவரிக்கும் முயற்சியில் உயர்நாவலின் கட்டமைப்பை மறந்து விடுகிறார். பாத்திரப்படைப்பில் அழுத்தமில்லை. எனினும் ஒரு பெண் போராளியின் கதை என்ற முறையில் நைஜீரிய இஸ்லாமிய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புதினம் இது. 'தருமி' என்ற புனைப்பெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  ஆற்றொழுக்கான நடை. ஒரு சில இடங்களில் சொற்களில் தடுமாற்றம் இருந்தாலும், கதை சொல்லும் பாணி மிக நன்று. பெண்ணிய ஆர்வலர் அவசியம் படிக்க வேண்டும்.

.................... பேராசிரியர் ச. வின்சென்ட்


*










Thursday, May 20, 2010

394. ஊர் சுத்தப் போறேன் ...........



*


மணற்கேணி 2009 போட்டியின் "அரசியல் / சமூகம்" பிரிவின் வெற்றியாளர் "திரு.தருமி" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.


அரசியல் / சமூகம் பிரிவு கட்டுரைகள்


சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமி

--- இப்படி ஒரு வெற்றி கிடைத்ததும், 'அடடே! நமக்கா' என்று தோன்றியது. 'வாங்க சிங்கப்பூருக்கு' என்று சிங்கை தமிழ்ப்பதிவர்களின் அழைப்பும் வந்தது. ஒரு வழியாக புறப்பட ஆரம்பிச்சாச்சு. 21 மே இரவு சென்னையிலிருந்து பயணம். திரும்புவது 31 மே காலை. தங்ஸ் 'வரமாட்டேன், போ!' என்று சொன்னதால் தனிப்பயணம். தனிப்பயணம் இல்லை ... நண்பன் பிரபாகர் சென்னையிலிருந்து என்னோடு வருகிறார். தேவன்மாயம் எங்களுக்கு அடுத்த விமானத்தில் வருகிறார். I miss கையேடு.

சிங்கைப் பதிவர்கள் இந்தப் போட்டிக்காக தங்கள் உழைப்பு,  நேரம், ஆர்வம், காலம், பணம், பல முயற்சிகள்,  எல்லாவற்றையும் தாராளமாகக் கொடுத்து, அவர்கள்  செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கெல்லாம் தமிழ்ப்பற்று ஒன்றுதான் காரணம் என்பதை நினைக்கும்போது அவர்களுக்கு பெரும் பாராட்டும், நன்றியும் சொல்லியாக வேண்டும். வாழ்க .. வளர்க ..

போய்ட்டு வந்து மீதிக் கதை சொல்றேன். வர்ட்டா .......?


பி.கு.:

பதிவு போட்டதும் மதுரைப் பதிவர்களிடமிருந்து ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் ... மதுரை திரும்பி வரும்போது எந்த சைஸில்  flexboard அடிக்கிறது; என்ன டிஸைன் போடணும்; தலைவா வா ... அப்டின்னு போடலாமா?, இளைஞரணியின் வழிகாட்டியே ..ன்னு போடவா? -- இப்படி எக்கச்சக்க கேள்விகள்.

உ.பிறப்புகளே & ர.ரத்தங்களே, இதெல்லாம் தயவு செய்து வேண்டவே வேண்டாம்.

:)

******************

ஆனானப்பட்ட இந்து தினசரியில் கிரிக்கெட்டுக்குப் பதிலா உலகக் கால்பந்து பற்றி நேற்றிலிருந்து (19 மே) செய்திகள் போட ஆரம்பித்து விட்டார்கள். நம் பதிவர்கள் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு பதிவு போடுவார்கள். ஆனால் பாவம் .. கால்பந்து. சரி, நாமளாவது ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாமா என்று நினைத்து .. நினைத்து .. காலமாகி விட்டது. உடன் சேர ஆர்வமானவர்களைத் தேட நினைத்தும் கைகூடவில்லை. சரி... நாமளா விளையாட்டைப் பார்த்து, போனதடவை ஆங்கிலப் பதிவில் சிறு குறிப்புகள் எழுதியது மாதிரி ஏதாவது எழுதி 'பசி'யை ஆற்றிக் கொள்ளலாமென நினைத்து விட்டேன். அதிலும் ஒரு பிரச்சனை, எந்த தொலைக்காட்சி ஒளிபரப்பப் போவது என்றும் தெரியவில்லை, அதோடு விளையாட்டு சேனல்கள் எல்லாவற்றையும் கடந்த சில வாரங்களாக முடக்கிப் போட்டு வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு மட்டும் ஒரு சேனல். மற்றதெல்லாம் அரோகரா .. கேபிள்காரர்கள் சுமங்கலி அவற்றையெல்லாம் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஜூனில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்கிறார்கள். அதென்னமோ .. கால்பந்துன்னா இப்படி ஒரு அலட்சியம். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். சென்ற கால்பந்து உலகக் கோப்பைக்கும் இதே தகராறு இருந்து, பின் வந்தது.

கால்பந்து பார்க்கணும். எங்க ஊர் 'பெரியவர்' கண் திறக்கணும்.

***********



Thursday, April 29, 2010

390. கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்

*

ஜெயலலிதா சொத்து வழக்கில் தீர்ப்பு; தர்மபுரி பஸ் எரிப்பு; 3 கல்லூரி மாணவிகள் அதில் எரிந்து சாம்பலானார்கள்; அ.தி.மு.க. "தலைவர்களுக்குத் தண்டனை" --

Monday, April 26, 2010

389. சீக்கிரம் கண்டு பிடிங்க'ய்யா ....

*
நம்மைத் தவிரவும் வேறு உயிரினங்கள் நம் பிரபஞ்சத்தில் உள்ளதா என்று பல்லாண்டுகளாகவே அறிவியலாளர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் அளித்துள்ள பதில்:

நிச்சயமாக உயிரினங்கள் கட்டாயம் இருக்கும்.

Wednesday, January 06, 2010

363. பணம் பதவி பவுசு இருந்தால் ....?!

*

Ruchika's suicide: Feeble justice

August 12, 1990: SPS Rathore, a 1966-batch IPS officer and then IG, molests Ruchika Girhotra at the office of the Haryana Lawn Tennis Association.

September 3, 1990: Inquiry report by R.R. Singh, then DGP, indicts Rathore.

September 20, 1990 Ruchika is expelled from Sacred Heart Convent School for 'indiscipline'.

October 23, 1993: Her brother Ashu is arrested in 11 car theft cases.

December 28, 1993 Ruchika commits suicide.

November 1994: Rathore is promoted as the Additional Director-General of Police, Haryana.

November 1997 Ruchika's friend's mother Madhu Parkash moves the high court seeking a CBI probe.

August 21, 1998: High court directs the CBI to conduct an inquiry.

November 16, 2000 CBI files chargesheet holding Rathore guilty of molestation under Section 354 of the IPC.

July 2002 Rathore retires as DGP, Haryana.

December 21, 2009: CBI court gives six months of rigorous imprisonment and a fine of Rs 1,000 to Rathore. He gets bail the same day. Two years is the maximum punishment under the provisions.


Neighbours and friends crowd the large living room as the children stare goggle eyed but 32-year-old Aradhana Gupta still blanches when she recalls the moment in 1990 when her friend, Ruchika Girhotra, then a bright-eyed 14-year-old with a dream to make it big in tennis, was molested by Shambhu Pratap Singh Rathore, then inspector general of police (IGP), Haryana.

As if in slow motion, the scene unfolds before her eyes, Rathore pulling Ruchika towards him and Ruchika struggling to free herself.

"When she was released from his grip, she ran out like someone possessed. She dusted her clothes wherever he had touched her. Later, whenever we talked about it, she would break down. I could see her spirit was being shattered," says Aradhana, who was then only 13 but would counsel her friend daily, telling her not to worry. She would get justice one day.

Unfortunately, despite Aradhana's battle, braving harassment and threats, it hasn't happened. On December 23, after 400 adjournments in special CBI courts and over 40 adjournments in the high court and Supreme Court, Rathore was given six months imprisonment and a fine of Rs 1,000.

As he left the Chandigarh District Court with his lawyer wife, Abha, he even smiled, as if to mock the system he had once vowed to uphold. He even seemed optimistic that he would emerge victorious in reducing the punishment.

"I am filing an appeal against this order. Truth will prevail and I will win," he said with complete lack of irony. For Aradhana, who had pursued the case since it was first filed by her mother Madhu Parkash, 60, in November 1997, in the Punjab and Haryana High Court, it was a rude shock.

One that was shared in an unprecedented outpouring of outrage against the judgement, with MPs in Parliament saying the punishment handed out to Rathore was too light and social activists demanding a retrial.

But then the case seemed doomed from the start, when despite an inquiry by then director general of police (DGP) R.R. Singh holding Rathore prima facie guilty of molesting Ruchika and his recommendation to the state government that a case be registered against him, chief minister Hukam Singh of the Indian National Lok Dal (INLD) ignored it.

Rathore, now 68, was even promoted as the additional DGP in 1994 when Bhajan Lal was the chief minister. It was just a few months after Ruchika committed suicide. Five years later, the INLD government led by Om Prakash Chautala made him the DGP of the state, where he stayed on till December 2000, despite the CBI chargesheeting him in the molestation case in January the same year.

Such was Rathore's clout that he even managed to thwart efforts to lodge an FIR against him. On May 28, 1991, the Government okayed filing of a chargesheet against him but even that didn't happen till June 30, 1992, when Legal Remembrancer R.K. Nehru said that the Haryana government was not competent to issue a chargesheet to Rathore and it would be appropriate to get an FIR registered instead.
That didn't happen. For several months even the case file went missing from the government records though it was found later.


In her own words
"Mr Rathore caught hold of my hand. He pressed his body against mine. I tried getting rid of Mr Rathore by pushing him away with one hand which Mr Rathore was not holding. I was shocked and became nervous with the behaviour of Mr Rathore. In the mean time Reemu (Aradhana Gupta) came into the room and on seeing her Mr Rathore released me and fell down in his chair. Mr Rathore asked Reemu to go out of his room and bring Mr Thomas, the coach, with her. But she refused and then Mr Rathore rebuked Reemu loudly, asking her to bring the coach, Mr Thomas. Mr Rathore insisted that I stay in his room but I ran out. I told Reemu whatever Mr Rathore had done. She had also seen Mr Rathore misbehaving with me. I was so afraid and nervous that I asked Reemu what we should do now. We were afraid that since Mr Rathore is the Inspector General of Police, he may involve or harass our parents. Therefore, we decided not to inform our parents or anybody else about the incident. On August 13, we did not go to play. Next day, we went to play tennis and when we were leaving, the ball picker Mr Paltoo said Mr Rathore was calling me again. It was then that we decided to inform our parents. Reemu narrated the incident to my father and after that I went to her house and told her mother, Madhu."


In all this, Rathore was not suspended for a single day. Instead, Ruchika's family was harassed unrelentingly. Eleven cases were filed against her brother, Ashu, then 16, and now a transporter in Panchkula. Her father, Subhash Chander Girhotra, now 68, Rathore's exact age, a manager with the Oriental Bank of Commerce, was threatened, harassed in office and left with no choice but to quit.

He was forced to sell his Sector 6 house after Ruchika filed a complaint with the police, seeking registration of a molestation case. Goons would man their locality and their house would be attacked with stones. Ruchika was stalked and even rusticated from Sacred Heart Convent School on grounds of "indiscipline".


What next

- The Parkash family can seek a retrial, adding Section 306 of the IPC for abetment to suicide.
- Ruchika's family is still hesitant to come out in the open, and hopes that the court will take notice and intervene in the case.

- Parkash's lawyer Pankaj Bhardwaj says a retrial will be possible only through media-inspired public pressure.

Almost a prisoner in her own home, her family in ruins, her gleaming sporting future shattered, Ruchika felt there was nothing to live for, recalls Aradhana. "More than what happened to her, she was bothered about what her brother and father were passing through. She felt responsible for all that." She committed suicide on December 28, 1993.

"I was busy with my BA exams and hadn't spoken to her for some days," says Aradhana, still shaking her head at the waste of a young life. Her family went underground, not even accessible to the Parkashs. Even Aradhana and her father were not spared. "When I was doing my MBA in Kurukshetra, my parents would get calls that someone has kidnapped me."

Her father, a chief engineer with the Haryana Agriculture Marketing Board, was chargesheeted 13 times for alleged corruption and even demoted as superintending engineer.

But never did the family think of withdrawing the case. "We were threatened but we were never intimidated," says Madhu, who was the first person Ruchika confided in after the molestation, having lost her own mother when she was just 12. They are disappointed and yet relieved.

Says Aradhana, "A message has been sent out that you might be a top police officer, but you can't get away from your sins. The nation and the media are now with us. But this is not enough. We will fight until he gets a harsher sentence."

They are examining their options, and as Parkash's lawyer Pankaj Bhardwaj says, they believe it will be possible only thanks to public pressure. "He should have been charged under Section 306 of the IPC for abetment to suicide in which the maximum punishment is 10 years. But the CBI didn't challan him under that section. We will still seek a retrial and ask for a harsher sentence," says Bhardwaj.

The Punjab and Haryana High Court dropped Section 306 in 2003 and the CBI said it was investigating only charges under Section 354. "In the absence of adequate support from the agency, the high court rejected the application for abetment to suicide," says Parkash.

Aradhana, Reemu to Ruchika, the lone witness to the molestation, and now settled in Sydney, has been in India for two months with her husband Aman Gupta.

Life has moved on but it hasn't been the same. Her favourite sport, tennis, and so much else died along with Ruchika. "I remember Rathore used to watch us for hours everyday as we played tennis. We respected him as a senior police officer who was heading our tennis organisation.
But we could never tell that he looked at us in any way other than as his daughters. He used to chide us for wearing long skirts. "You can't play in long skirts", he would say. We had to fold them. "How could a police officer behave like that?"

It is a question that defies a humane answer. And it is an answer that sends chills down the spine of any parent.


Making justice work

Intense media scrutiny helped conviction in these high-profile cases as well.

-Nitish Katara, a management graduate, was seeing his classmate Bharati Yadav which her brother Vikas and cousin Vishal, didn't approve of. Nitish was abducted and murdered by them on February 17,2002, and his battered, mutilated body was found three days later. A number of witnesses repudiated their initial testimony as Vikas was the son of influential criminal-politician D.P. Yadav. Thanks to intense media scrutiny, however, Vikas and Vishal were sentenced to life imprisonment in 2008.

- Priyadarshini Mattoo, a 25-year-old law student, was raped and murdered on January 23, 1996, by Santosh Kumar Singh. He was acquitted three years later by a local court which led to a massive public outcry. The CBI challenged the judgement in the Delhi High Court on February 29, 2000. The matter was then dealt expeditiously and the judgement was reached in 42 days. It overturned the original acquittal order and held Singh guilty of murder and rape.

- Jessica Lall On April 29, 1999, Lall was shot dead at Tamarind Court by Manu Sharma, son of a senior Haryana Congress leader, when she refused to serve him a drink. Six years later, a Delhi court acquitted all those charged with Lall's murder. A sting operation showed how the witnesses were pressured to turn hostile. Public anger led to the reopening of the case and Sharma was held guilty. He was sentenced to life imprisonment by the Delhi High Court in 2006.

Saturday, January 02, 2010

362. சில நிஜங்களும் ஒரு கற்பனையும் ..


***


எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


***

நானும் மிகவும் உற்சாகமாக 'நீயா? நானா?' நிகழ்ச்சி பற்றி மகிழ்ச்சியாக ஒரு பதிவு போட்டேன். ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கடன் பற்றிய நிகழ்ச்சி அது. ந்ன்றாகச் செய்திருக்கிறார்களே என்று நினைத்தேன். ஆனால் புத்தாண்டன்று அதே நிகழ்ச்சி 'இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கப் போகிறது?' என்று ஐந்து ஜோதிடர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது. எல்லோரும் ஏதேதோ ராசி அது இதுன்னு பேசினாங்க. எரிச்சலில் முழுவதும் பார்க்கவில்லை. 2010 எப்படியிருக்கும்; எந்த ராசிக்காரருக்கு நல்லா இருக்கும் என்று ஒரு பட்டிமன்றம் மாதிரி ... இந்த ஐந்து ஜோதிடர்களில் ஓரிருவர் ஏற்கெனவே வந்து 'வாங்கிக் கட்டிக்கிட்டு' போனவங்க மாதிரி தெரிஞ்சிது.

கடைசியில் ஒரு பங்களிப்பாளருக்கு குலுக்குச்சீட்டு முறையில் பரிசு கொடுப்பதாக ஒரு ஏற்பாடு. குலுக்குச் சீட்டு எடுப்பதற்கு முன் அந்த ஐந்து ஜோதிடர்களிடம் எந்த ராசிக்காரருக்குப் பரிசு கிடைக்கும் என்று கோபிநாத் கேட்க, அந்த ஐவரும் ஆளுக்கொரு ராசி சொன்னார்கள். அவர்களில் ஒருவரே குலுக்குச் சீட்டை எடுக்க, பரிசு கிடைத்தவர் அவர்கள் சொன்ன அந்த ஐந்து ராசியிலும் இல்லாதவர்!! :)

Friday, December 18, 2009

359. இப்படி ஒருவர் ...

எனக்கு வந்த மெயில் ஒன்று. என் ஆச்சரியத்தை, மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.

-----------------------------

Came across nice article.
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
------------------------------------------------------------------------------
?ui=2&view=att&th=1256765dae601cbc&attid=0.1&disp=attd&realattid=ii_1256765dae601cbc&zw
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

Sunday, December 13, 2009

358. நீயா .. நானா ..?

*

வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 – 10 என்பதற்குப் பதிலாக 9 – 10.45 என்று நீண்டாலும் தொடர்ந்து பார்க்க என்னை இறுத்தியது. மிக நன்றாக இருந்த ஒரு நிகழ்ச்சி.

கல்விக் கடனுக்கு அலைந்த மாணவர்கள் ஒரு புறம்; கல்விக்கடன் தரும் வங்கி அதிகாரிகள் என்று ஒரு புறம். நான் முதல் இருபது நிமிடங்கள் பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் மாணவர்கள் தங்கள் சோகங்களைக் கொட்டித் தீர்த்திருப்பார்கள் போலும். மாணவர்கள் என்ன பேசினார்களோ தெரியவில்லை; ஆனால் நான் பார்க்கும்போது பேசிய வங்கி அதிகாரிகள் யாரும் உருப்படியாகப் பேசியதாகத் தெரியவில்லை.

மிக ஏழைக்குடும்பத்து மாணவி தன் பொறியியல் படிப்புக்குக் கடன் கிடைக்காத சோகத்தைச் சொல்லும்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். தனக்கு கடன் கிடைக்காததைப் பற்றிப் பேசும்போது ஒரு வங்கி அதிகாரி சட்டென்று, நாளைக்கே இந்த பெண்ணுக்குக் கடன் தருகிறேன் என்று சொன்ன பிறகு, அந்தக் குழந்தை அழுது பேசியது மனதைத் தொட்டது. நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் அந்த வங்கி அதிகாரிக்கு ஒரு தொலைப்பெட்டி பரிசளித்த போது நிச்சயமாக அவர் அந்த தொலைப்பெட்டியைக்கூட அந்த பெண்ணுக்கே கொடுத்து விடுவார் என்று நினைத்தேன். மனுஷன் அதையும் தாண்டி விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை தன் வங்கி மூலம் ஏதாவது ஒரு அநாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பிற்கு கொடுக்கப் போவதாகக் கூறினார். நன்றாக இருந்தது. அந்த அதிகாரிக்கு என் வணக்கங்கள்.

அதேபோல் பாலுமகேந்திரா என்ற மாணவனுக்கும் 4 லட்ச ரூபாய் கடன் தொகையை அனுமதித்தார் இன்னொரு வங்கி அதிகார். ஒரு break முடிந்து வந்ததும் கோபிநாத் அந்த மாணவன் ஏதோ சொல்ல விரும்புவதாகக் கூறி அழைத்தார். அந்த மாணவன் தான் கடனுக்காக அலைந்து கிடைக்காமல் போனதால் இவ்வருட படிப்பு படிக்க முடியாது போயிற்று. அந்தக் கடனை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு ஏழை மாணவனுக்கு அவர் பரிந்துரைக்க வங்கி அதிகாரி அந்தப் புதிய மாணவனுக்குக் கடனைத் தர சம்மதித்தார். தனக்கு வந்த கடனை அடுத்த மாணவனுக்கு – அந்த மாணவனை இந்த நிகழ்ச்சியில்தான் முதலில் சந்தித்துள்ளான்; break சமயத்தில் வேறு எந்த ஏழை மாணவனுக்கு உதவி தேவை என்று கேட்டறிந்து, அதன்பின் தனக்குக் கிடைத்ததை அடுத்த மாணவனுக்குத் தந்த அந்த மாணவன் … simply great!
He humbled me.


முக்கிய விருந்தாளியாக வந்ததில் மாணவர்கள் தரப்பில் பேசிய ஒரு வழக்குரைஞர் பேசியது கொஞ்சமேயாயினும் மிகத் தெளிவாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவர் கருத்துக்கு வங்கி அதிகாரிகளோ மற்ற விருந்தினரோ பதில் கொடுக்க முடியாதபடி தன் கருத்தைத் தந்த அந்தப் பெண்மணியும் பாராட்டப் பட வேண்டியவரே.

கோபிநாத் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளில் பல எனக்குப் பிடிக்கும். இன்று கோபிநாத் was on the top! Hats off to him. Emotional ஆன விஷயங்களை மிக ஆழமாக மனதில் பதியும்படி பேசி இந்த நிகழ்ச்சியை மிக அழகாகக் கையாண்டார். நிச்சயமாக இதை வங்கி அதிகாரிகள் பார்த்திருந்தால் சென்ற சில மாதங்களில் அவர்கள் மறுத்த சில கல்விக் கடன் பத்திரங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

வாழ்க .. வளர்க .. நீயா .. நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

விஜய் டிவிக்கும் என் வாழ்த்துக்கள்.



*

*

Wednesday, December 09, 2009

356. AMERICAN COLLEGE CELEBRATES CENTENARY

College celebrates centenary D. Karthikeyan


American College plans a light-and-sound show to mark celebration
— Photo: G. Moorthy

Standing tall: The main building of The American College.


MADURAI: Education is the key to unlock the golden door of freedom- George Washington Carver

Fin de siècle to the close of 19th century and start of 20th century saw the emergence of missionary education spreading across the wider parts of erstwhile Madras Presidency taking education to the unreached spaces.

One such defining moment was the establishment of The American College, in Madurai, started initially as ‘Pasumalai College’ in the year 1881 at Pasumalai.

Rev. Zumbro who had his formal education at University of Michigan, Columbia and Yale, made a proposal in the year 1903 to the Missionary bound in the United States to shift the college to Madurai.

New vision

The idea behind this shifting was to give a new vision to Christian higher education.

By this, Rev. Zumbro meant that education should be made available to the common man despite divisions based on caste, creed and religion, said Joseph Chinnaraj Jaikumar, Principal, The American College.

Rev. Zumbro envisaged that once Christian education goes public, people of Madurai would acquire a character which would be beneficial for the city in the long term.

In his words, “Madurai should grow with American College and American College should grow with Madurai.”

The century old American College main building symbolizes this slogan as it was this grandiose structure built by adopting the Indo Saracenic style rather than Gothic or Victorian that signified the arrival of modernity in Madurai.

Mr. Chinnaraj Jaikumar, said that this synthesis of Indo Aryan style also represents secularism as it possesses the minarets and arches of Islamic structure, corridors of Hindu temple and the grandness of gothic style.

Construction

The construction of the building was started in the year 1905 and was completed in 1909.

The main hall of the building was indeed a central element in the major intellectual shift that took place then in the form of public lectures to the citizens of the city.

Eminent literary scholars and international figures like Rabindranath Tagore, French Premiere Georges Clemenceau visited the college and delivered lectures in the hall.

In fact, Tagore gave public lectures in the year 1919 and collected Rs. 2,365 out of which he took Rs.2, 000 for Visva Bharati, Shantiniketan and gave Rs.365 for starting an endowment in American College.

The building was constructed by Henry Irving, who built the Mysore Palace and the then Principal G. T. Washburn was influential in getting funds from the U.S.

The building to the surprise of people of this generation was constructed at a cost of Rs.52, 000, said Mr. Chinnaraj Jaikumar.

The College will be holding a ‘light and sound’ show to mark the centenary celebration.

Mr. Chinnaraj who has done a good amount of research on Rev. Zumbro’s contribution to higher education is to come out with a book aiming to highlight his contributions to the dissemination of knowledge in this part of the world.

Citizens of Madurai owe a great deal of respect and gratitude for Rev. Zumbro who was instrumental in spreading inclusive education based on science.

Zumbropuram

Apart from his contributions in the field of education, Rev. Zumbro was a socially conscious individual who saw the resettlement of palm tree workers and the place was now remembered by his name Zumbropuram.

© Copyright 2000 - 2009 The Hindu

Thursday, November 19, 2009

352. சில சின்னச் சின்னக் கேள்விகள் ...

*
2007-ல் தீர்ப்பு வந்தது -- தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அ.தி.மு.க. கட்சியினருக்குத் தூக்குத் தண்டனை அப்டின்னு. நம்ம பதிவர்கள் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா கை தட்டினாங்க.

அவங்க தொங்கியாச்சா?

*
2006-ல் இன்னொரு தீர்ப்பு. அப்சலம் தூக்குத் தண்டனை. பதிவுலகத்தில் நிறைய வாதங்கள்.

அவனும் தொங்கியாச்சா?

*
கேசாப் வழக்கு இன்னும் நடக்குது. அவன் வயசாகி, தானா சாகுறதுக்குள்ள அந்த வழக்கு முடிஞ்சிருமா?

*
கோடா இப்ப நாலஞ்சு நாளா ஆளே தினசரியில காணுமே. எங்க போனான்? அம்புட்டுதானா?

*
இன்னொரு மத்திய அமைச்சர். வெளிநாடு போனப்போ இங்கே அந்த ஆளு வீட்ல படுக்கை அறை, பூசை அறையில் இருந்த சாக்கு மூடைகளில் பணம்.. பணம் .. அப்டின்னு மூட்டை மூட்டையா கண்டு பிடிச்சாங்க. பேரு என்னமோ ஒரு ராமர் அப்டின்னு நினைவில் இருக்குது. அதுவும் அம்புட்டுதான் ...

*
மஞ்சள் துண்டு ஆட்சி வந்ததும் பழைய பச்சை சேலை இருந்த சிறுதாவூர் அரண்மனை அடிச்சிப் பிடிச்ச இடத்தில கட்டுனதுன்னு புகார் வந்திச்சி. புதுசா வந்திருக்க ஆளுக உடனே அடிச்சிப் பிடிப்பாங்கன்னு பார்த்தேன். அவுகளுக்குள்ள என்ன அரேஞ்மென்டோ ... அந்த நில தாக்கீதை ஒரு வாரத்தில கண்டு பிடிங்கன்னு சொல்லுவாங்கன்னு நினச்சா அரசே 6 மாசம் டைம் கொடுத்திருச்சி. அதுக்கு ஏது இம்புட்டு டைம்?!. ஆனா, இப்ப இதுவரை ஒண்ணையுமே காணோம். மஞ்சளுக்கும் பச்சைக்கும் நடுவில சிகப்பு வந்திச்சி. அதுட்ட இருந்தும் சத்தம் ஒண்ணும் இல்லை.

*
அந்த பத்திர ஊழலில் ஒரு போலீஸ்காரர் முதல் நிறைய பேருங்க சொன்னாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. ஆனா இதில் எனக்குப் பிடிச்சது அந்த பிடிபட்ட போலீஸ்காரர் அப்படியே சும்மா ஜில்லுன்னு மீசையை வருடி விட்டுக்கிட்டு வர, அவரை சுத்தி நிக்கிற போலீஸெலாம் அவருக்கு சல்யூட் அடிப்பாங்க பாருங்க .. அது நல்லா இருந்திச்சி. மற்ற சில குற்றவாளிகள் மாதிரி மூஞ்சை மூடிக்கிட்டு ... அதெல்லாம் எதுக்கு இவருக்கு? நல்ல மனுசன் ..

*
ராஜா விவகாரமும் இப்ப தினசரியில ஒண்ணையும் காணோம். "எல்லாமும்" முடிஞ்சிருக்குமோ?

*
கொஞ்ச நாளா லட்ச கோடிப்பணம் ஸ்விஸ் வங்கிகளில் தூங்குது. நாங்க வந்த உடனே வெளியே கொண்டு வந்திருவோம்னு சொன்ன காவிக்கலர்காரங்க இப்ப அவங்க பிரச்சனையில இருந்து இன்னும் வெளியே வரவேயில்லை. அதுவும் அம்புட்டுதானா?

*
அப்போ, மாட்டுத்தீவனத்தை "மாடு" தின்னுட்டு போயிரிச்சி; இனிமே அது அம்புட்டுதானா?

*
பச்சை சேலைக்கர மம்மி மேல இன்னும் நிறைய கேஸ் இருக்கும் போலும். லண்டன் ஹோட்டல் ... அது இதுன்னு நிறைய இருக்கு. ஆனா எல்லாமே அம்புட்டுதானோ?

* ஆனாலும் போபர்ஸ் வழக்கு மாதிரி எதுவும் இருக்க முடியாதுல்ல .. க்வாட்ரச்சியோடு அதையும் இழுத்து மூடியாச்சோ?

*
ஆனாலும் நமக்கெல்லாம் மறக்கிற ஞாபக சக்தி இல்லாட்டி ரொம்ப கஷ்டம்ல ...?


*

*
U.I.D. பற்றி சிறிது எழுதணும்; அதற்கு உங்க ஆதரவும் வேணும். கொஞ்சம் யோசிச்சிட்டு பொறுத்து எழுதுகிறேன்.

*

Thursday, November 05, 2009

350. என்னென்னமோ ...

*


*

கோலங்கள் அப்டின்னு ஒரு சீரியல். காலங்காலமாய் நடந்துக்கிட்டு இருக்கு. அதில் வர்ர கேமிரா கோணங்களைப் பார்த்தா ரொம்ப கோவமா வந்ததாலே ரொம்ப முந்தியே அதப் பார்க்கிறதை நிப்பாட்டியாச்சி. இருந்தாலும் தங்ஸ் அதில வர்ர ஒரு கேரக்டர் வந்ததும் என்னைக் கூப்பிடுவாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும் அதில வர்ர 'தில்லா'வைப் பார்க்கிறதுக்கு. மற்ற முக்கிய கேரக்டர்கள் அழுமூஞ்சி அம்மாவும், 'வரட் வரட்' ஆதியும். இந்த அம்மா, ஆச்சி பொடிக்கு சிரிச்சிக்கிட்டே வருவாங்களா, அதில கூட அவங்களை இப்ப பார்க்க முடியாம போச்சு. அதில கூட அவங்க அழுதுகிட்டே விளம்பரம் பண்ணினால் நல்லா இருக்கும்னு தோணுது. அந்த அளவுக்கு இந்த சீரியலில் கிளிசரின் பாட்டிலோடு வந்துக்கிட்டே இருக்காங்க. அந்த ஆதிக்கு நல்ல தொண்டை. இவங்களைப் பார்த்தாலே நிலமை ரொம்ப மோசமா போனதாலதான் அந்த சீரியல் நேரத்தில் ஹால் பக்கமே போறதில்லை. ஆனா, தில்லா ரொம்ப தமாஷான ஆளு. ஒரு ஆளு ஏன் இப்படி பண்றார்; அதை டைரடக்கர் எப்படி அனுமதிக்கிறார் என்றே புரியவில்லை.

நீங்களும் பார்த்துச் சொல்லுங்க ...

*

அந்த சீரியலில் ஒரு 'தோழர்' வந்தார்; செத்துட்டார். தமிழ் நல்லா பேசுவார். டைரடக்கர் அவர் மூலமாக இலங்கைப் பிரச்சனையில் தன் கருத்தை நன்றாக சொல்ல வைத்துவிட்டு சாகடித்து விட்டார்.

*

அரசி சீரியல் என்று நினைக்கிறேன். அதில் உசரமா நல்லதம்பின்னு பேருன்னு நினக்கிறேன். நல்ல உடல்மொழி. குரலும் நல்லா இருக்கும். இந்த மாதிரி ஆட்களெல்லாம் திடீர்னு வந்துட்டு அப்புறம் காணாம போய்றாங்க. இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் விட்டுட்டு தாங்க முடியாத தர்த்தியான மூஞ்சுகளை அடிக்கடி சீரியல்களில் பார்க்க முடிகிறது. ஏன் இப்படி நம்ம டைரடக்கர்களுக்கு ஒரு டேஸ்ட்!?

பாவம் .. இந்த மாதிரி நல்ல நடிகர்கள்.

*
குரு பூஜைக்காக எங்க ஊரு ஜே .. ஜே ன்னு இருந்திச்சி - வழக்கம் போல. இதுவரை எனக்குத் தெரிஞ்சு இந்த ஒரு குரு பூஜைதான் இருந்தது. ஆனா, இப்போது நாலு குரு்பூஜை இதே சமயத்தில் நடக்குது.

அந்த குருபூஜைகளில் பேருந்துகளில் எறியும் கல்களையும், தீர்த்து எரிக்கும் பெட்ரோல் காசை வைத்தும் வருஷத்து நாலு பள்ளிக்கூடம் கட்டலாம்.

*
*
பழைய ஜார்க்கண்ட் முதலமைச்சர் மது கோடா தண்டிக்கப்படுவார்னு யாராவது நிஜமா நினைக்கிறீங்களா? (CNN-IBN has learnt that during the four days of continuous interrogation, Koda allegedly admitted to stashing away Rs 375 crore in Swiss banks.) அம்மாடி!!

அப்புறம் நம்ம ராசா?

*

லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் இருக்காமே, அதையெல்லாம் என்ன பண்ணப்போறார் ப.சி.?

*



*