Thursday, December 03, 2009

355. 2 + 2 = ???????

10 comments:

வால்பையன் said...

ஒண்ணயே ரெண்டு தடவை போட்டுருக்கிங்க சார்!

வால்பையன் said...

அண்டை வீட்டார்களை மதின்னு குரான் சொல்லியிருக்காம், ஒருவேளை அவர்கள் இஸ்லாமிராக இருந்தால் என்ற வார்த்தை பின்னாளில் யாராவது ஒரு விஞ்ஞானி வந்து கண்டுபிடிப்பாரோ!?

பீர் அப்படி தானே சொன்னார்!

தருமி said...

censored, vals

கல்வெட்டு said...

// பீர் சொன்னது...
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் (வெளி வேஷம் போடாது) முதலில் மத நிகழ்வுகளில்/ சடங்குகளில் இருந்து ஒதுங்கி, உங்கள் உறவுகளுக்கு இதை எடுத்து சொல்லி உங்கள் பக்கம் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களை திட்டி தீர்க்கலாம்.
//

அன்புள்ள பீர்,

//உங்கள் உறவுகளுக்கு இதை எடுத்து சொல்லி உங்கள் பக்கம் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களை திட்டி தீர்க்கலாம். //

இஸ்லாத்தை பரப்பவேண்டிய அவசியம் , கிறித்துவத்தைப் பரப்பவேண்டிய அவசியம் போல பகுத்தறிவு எனப்து பரப்பப்படுவது இல்லை. அவர் அவர் அவராக தனது நம்பிக்கைகளை கேள்வி கேட்டுக் கொள்வதுதான் பகுந்து அறியும் அறிவு. சரியா? எனவே பரப்பும் தேவை இல்லை.

***
//கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் (வெளி வேஷம் போடாது) முதலில் மத நிகழ்வுகளில்/ சடங்குகளில் இருந்து ஒதுங்கி,//

ஏன் ஒதுங்க வேண்டும்?
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதை மதிக்கிறோம்.
எனது மதத்தைத்தைவிர மற்ற மதம் எல்லாம் உண்மைஅல்ல.
எனது தூதர் போல மற்ற தூதர்கள் அல்ல.
அல்லது டாக்லட் ஜாகிர் போல இஸ்லாம் தவிர எல்லாம் பொய் என்று எந்த மனிதனையும் விலக்கும் தேவை எங்களுக்கு இல்லை.

**

Contd.......

கல்வெட்டு said...

Contd...
அப்புறம் ஏன் நான் இங்கே பேசுகிறேன்?

நீங்கள் குரானை உங்கள் மதப்புத்தகமாக தொழுதுகொள்ளுங்கள்.
ஆனால், மனிதன் கண்டறியும் அறிவியல் எல்லாம் குரானில் சொன்னது என்று சொல்லும்போது "அறிவியலை நாசமாக்க வேண்டாம்" என்றே இந்த உரையாடல்கள்.

மற்றபடி "எனது கடவுள் பூனை" என்று நீங்கள் சொன்னால் கூட அல்லது "பக்கோடா மடித்த காகிதம்" எனது புனித பேப்பர் என்று சொன்னாலும் உங்கள் வீட்டு விசேசங்களுக்கு அழைப்பு வந்தால் கலந்து கொள்வேன்.

பூனை ,பக்கோடா எல்லாம் உங்கள் நம்பிக்கை அதை மதிப்பேன்.

என் வழியை பின்பற்றாத நீ "கூபீர்" என்று பட்டம் கட்டி எனது "பகுத்தறிவே சிறந்தது" என்று ஜாகிர்தனமாக சொல்லமாட்டேன்.

வால்பையன் said...

//"எனது கடவுள் பூனை" என்று நீங்கள் சொன்னால் கூட அல்லது "பக்கோடா மடித்த காகிதம்" எனது புனித பேப்பர் என்று சொன்னாலும் உங்கள் வீட்டு விசேசங்களுக்கு அழைப்பு வந்தால் கலந்து கொள்வேன்.//

நானும் கலந்துக்குவேன்!
பிரியாணி தான் வேணும்னு அடம் பிடிக்க மாட்டேன்!

மு மாலிக் said...

இது ஜாகிர் நாய்க்கின் பதில் தான்... அதாவது ஜாகிர் நாய்க் எனும் தனி மனிதரின் கருத்து.


நபி அவர்கள், கிறிஸ்த்தவ தேவாலயத்திற்கு அனுப்பிய கடிதமொன்றினை, அந்த தேவாலயத்தின் இணையதளத்தினைக் கொண்டே சுட்டுகிறேன்.

http://st-katherine.net/en/index.php?option=com_content&task=view&id=20&Itemid=65

தருமி said...

மு.மாலிக்.
என்ன சொல்றீங்க..நம்ம நாய்க் சொன்னது சரின்னு சொல்றீங்களா இல்லையா? உங்க கருத்தைச் சொல்லலையா!!

அப்போ, உங்க & நபி கருத்துப்படி இஸ்லாமிய நாடுகளிலும் எல்லா மத வழிபாடும் நடத்தணும்/நடத்தலாம் அப்டின்னு சொல்றீங்களா?

மு மாலிக் said...

ஆம் தருமி,

நான் மேலே சுட்டிய நபி அவர்களின் கடிதமும், "அவர்கள் வழி அவர்களுக்கு" எனும் குர்ஆன் வரியும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. ஈராக், எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் சர்சுகள் இருந்தே வருகின்றன. சவுதியில் நிலவும் சட்டங்கள் அந்த அரசு கொண்டுள்ள சட்டம் மட்டுமே. அது இஸ்லாத்தின் சட்டம் என அனைவரும் அங்கீகரிப்பதில்லை.


ஜாகிர் நாயக் சவுதி அரசாங்கத்திடமிருந்து விருதுகள் பல பெற்றவர். விசுவாச உந்தலுக்கு ஆளாகியிருப்பவர்

தருமி said...

//ஜாகிர் நாயக் சவுதி அரசாங்கத்திடமிருந்து விருதுகள் பல பெற்றவர். விசுவாச உந்தலுக்கு ஆளாகியிருப்பவர்//

ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ? காசுக்கு அடிபடுற ஆளா?

ஆனா பொதுவாக இஸ்லாமியர்கள் நடுவே அவருக்கு ரொம்ப ரொம்ப ந்ல்ல பேருன்னு எல்லோரும் சொல்வீங்களே ..

//"அவர்கள் வழி அவர்களுக்கு" எனும் குர்ஆன் வரியும்//
இந்த வரிக்கும் இஸ்லாமுக்கும் உள்ள தூரம் நன்கு தெரியுமுங்க...வேணாம்!

Post a Comment