Wednesday, December 14, 2011

541. நானும் photography-யும் ... 3




*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.

*
காமிராவைத் தூக்கிய அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் தான் எத்தனை வித்தியாசம். auto focusing, VR lens, digital, படம் எடுத்த அடுத்த விநாடியில் படம் கண்முன்னே... சரியாக வந்ததா இல்லையா என்று instant result .. சரியாக வரலையா அடுத்த முயற்சி.. படம் எடுத்து முடித்த பிறகு இருக்கவே இருக்கிறது PP - post production ... adobe photoshop, light room போன்று ஆயிரத்தெட்டு மென் பொருள்கள் .. எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த காலத்தில் எல்லாமே manual மட்டும் தான். காலமும் நன்கு கைகளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும். ஒரு ரோல் பில்ம் வாங்கி மாட்டினால் படம் எடுத்து முடித்து எப்போது develop செய்வோமோ அதுவரை என்ன எடுத்தோம்; எப்படி வந்திருக்கும் என்பதெல்லாமே தெரியாமல் இருப்போம். தனிக்குறிப்பாக exposure details எழுதி வைத்துக் கொண்டதும் உண்டு - பின்னால் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக. சொந்தமாக develop செய்யும் போது கிடைக்கும் thrill பயங்கரம் தான். fixer-லிருந்து எடுக்கும் போது நிச்சயமாக இதயம் பட படத்துத் துடிக்கும். பாவம் .. இப்போ காமிரா வைத்திருக்கும் இளைய நண்பர்களுக்கு அந்த துடிப்பை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது தான்.

fixer-லிருந்து எடுத்துக் கழுவி காய வைத்து விட்டு அதன் பின் ஒவ்வொரு ப்ரேமாகப் பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷங்கள் .. சோகங்கள் .. ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே ...

மதுரை வைகை நதியின் கல்பாலத்தில் பட்மெடுப்பது மிகவும் பிடிக்கும். வாழ்க்கையின் பல குறுக்கு வெட்டுத் தோற்றங்களை அங்கே காணலாம். பலவகை வியாபாரங்கள், ஆற்றுக்குள் தொட்டி கட்டி காசு கொடுத்து குளிக்கும் மக்கள், காற்றில் காயும் துணிகள் .. வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும். அந்தப் பாலத்திலும், ஆற்றுக்குள் இறங்கியும் பலமுறை படமெடுத்ததுண்டு. ஒரு நாள் படமெடுத்து பாலத்தில் ஏறப்போகும்போது இரண்டு கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. நல்ல back lighting .. படமெடுக்க ஆசை. முதல் ஷாட்
U  &  I

எடுத்தேன். எதற்கும் இன்னொன்றும் எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தால் அதுவே கடைசி ப்ரேமாக இருந்திருக்கிறது. அப்பவே ஒரு பயம் தான் -  கடைசி ப்ரேம் என்பதால். ரோல் டெவலப் செய்து முதலில் க்ழுதைகளைத்தான் பார்த்தேன். பயந்தது நடந்திருந்தது. exposure  சரிதான். ஆனால் கடைசி ப்ரேம் என்பதால் நன்றாக ஒரு scratch. - emulsion உறிந்திருந்தது. படம் போட்டால் ஒரு கருப்பு வட்டம் வயிற்றில் வரும். சோகப்படத்தான் முடியும். இப்போதென்றால் உடனே அடுத்த படம். நீங்களும் அங்கே தான் இருப்பீர்கள்; கழுதைகளும் அப்படித்தான். பிரச்சனை ஏதுமில்லை. இப்போது நெகட்டிவ் இப்படி ஆன பின் நான் கழுதைகளைத் தேடிப் போகவா முடியும். என் தலைவிதியும், கழுதைகளின் தலைவிதியும் இப்படித்தான்  என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும்  அந்த நெகட்டிவ் என்னிடம் பத்திரமாக இருந்தது. adobe photoshop கை கொடுக்க படத்தை பல ஆண்டுகள் கழித்து தேற்றி விட்டேன்! இப்போது காமிரா உலகமே மாயலோகமாக அல்லவா மாறிவிட்டது ! (கழுதைகளுக்குக் கொடுத்த தலைப்பு உங்களுக்குப் பிடிக்கிறதான்னு சொல்லுங்க ...)

நெகட்டிவ்களோடு இவ்வளவு பிரச்சனையென்றால் படங்களை ப்ரிண்ட் போடுவதும் தனி ஒரு சுகம்.  பெரிய படம் போடுவதற்கேற்ற நல்ல நெகட்டிவ்கள் கிடைப்பது முதல் சுகம். அதன் பின் பெரிய ப்ரிண்டுகள் போட நடக்கும் முஸ்தீபுகள் பற்றித் தனிப்பதிவே போடலாம்! கெமிக்கல்ஸ் கலப்பது, பெரிய wet table-ல் வேண்டிய வசதிகள் செய்து கொள்வது. enlarger-யைத் திருப்பி, சுவற்றை நோக்கி நிறுத்தி, சுவற்றில் printing paper-யை நிறுத்த சில ஸ்பெஷல் ஏற்பாடுகள் ... இப்படியே போகும். blow up  என்றால் முதலில் 10 x 12 என்ற சைஸ்தான் இருந்தது. அதிலிருந்து முன்னேறி 18 x 24 சைஸ் வரை ப்ரிண்ட் போட்டதாக நினைவு. அதற்கு மேல் போகவும் ஆசை. K.பாலச்சந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் சரிதா முகத்தை மிகப் பெரிதாக blow up செய்திருக்குமே .. அதைப் பற்றியக் கட்டுரைகள் எல்லாம் வாசித்து அதில் பாதியாவது செய்ய வேண்டுமென்ற ஆசையெல்லாம் இருந்தது. அதற்கு, முதலில் .. காசுக்கு எங்கே போவது!!??



ஆனாலும் முதலில் blow up என்றால் அது 10 x 12 என்ற சைஸ்தான். அந்த அளவில் முதன் முதல் போட்ட படம் தான் இது.






முதலில் பட்டென்ற வளர்ச்சி ...பின் slowing down ... இதுதானே நம்ம வாழ்க்கை. அதே போல்தான் புகைப்படக் கலையிலும் நமது வளர்ச்சி.

ஆனாலும் காலத்தோடு காலமாக நானும் கொஞ்சம் at least காமிராக்களைப் பொறுத்தவரை மாறித்தான் வந்துள்ளேன். Mamiya போய் Nikon FE வந்தது. அதன்பின் Nikon F2. அடுத்த கட்டம் டிஜிட்டல். 2002-ல் அமெரிக்கா போனபோது முதல் Olympus - digital. 2 MP!! ஆனால் இப்போது வெறும் போனிலேயே அதைவிட அதிக பிக்செல்களோடு காமிரா வந்து விட்டன. Olympus-க்குப் பிறகு Canon Power shot  சின்ன மகளின் முதல் வருகையில் கிடைத்தது. அவளது இரண்டாம் வருகையில் போனால் போகுதுன்னு Nikon 60 with 18 - 55mm & 70 -300mm கிடைத்தது. 500 mm கூட வேணுமானால் நண்பனிடம் இருக்கிறது.

நண்பனும் ஐந்நூறும் ...

ஆக, இப்போ தெருக்கோணல்; அதனால் தான் நடனம் வரவில்லை என்றெல்லாம் நான் பொய் சொல்ல முடியாது!

நல்ல தெரு .. நல்ல மேடை .. நெடுநாள் ஆடிப் பழகிய நடனம் ... ஆனாலும் இன்னும் கட்டுக்குள் வரவில்லையேன்னு கவலை. இதிலும் அடுத்தவங்க எடுக்கிற படமெல்லாம் கண்ணுக்குள் ஒத்தி வச்சிக்கிறது மாதிரி இருக்கு. of course, ஒண்ணு சொல்லுவாங்க .. எத்தனை படம் எடுத்தாலும் நல்ல படத்தை மட்டும் வெளியே காண்பிக்கணும் அப்டின்னு. அப்படிப் பார்த்தா சமீபத்தில் எடுத்த எந்தப் படத்தை நான் பெருசா வெளியே சொல்ல முடியும்னு தெரியலை. அந்தக் கதைகளை அடுத்தப் பதிவில் சொல்றேனே ...

.......... தொடரும்


*

2 comments:

ப.கந்தசாமி said...

அருமையான பதிவு.

கோவி said...

அனுபவம்தான் வழிகாட்டும்.. ஆவலுடன் இன்னும் எதிர்பார்க்கிறோம்..

Post a Comment