Sunday, May 06, 2012

568. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 2

* பகுதி ... 1


* பகுதி ...2



*

இஸ்லாமியர்கள் இஸ்லாமைப்பற்றிய எந்தக் கேள்விகளையும் எழுப்பவே மாட்டார்கள். ஆனால் தற்போது இஸ்லாமிலிருந்து விலகிய பழைய நம்பிக்கையாளர்கள் சிலர் இஸ்லாமியச் சிறையிலிருந்து சில இஸ்லாமியர்களை வெளிக்கொணரும் முயற்சியில் உள்ளார்கள். சானா குரானைப் பற்றிய விவரங்கள் முழுவதும் வெளியே வந்தால் அந்தப் பழைய நிலை நீடிக்காது. குரானின் புனிதத்தன்மை விலக, புது மாற்றங்கள் ஏற்படும். அவர்களின் மனதில் எழும் முதல் கேள்வி – எந்தக் குரான் மிகவும் சிறந்தது. ஆனால் அப்போது ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றவைகளைப் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் எந்த ஒரு குரான் வசனத்தையும் நம்பாதவன் மொத்த குரானையும் நம்பாதவனாகி விடுவான்.

குரான் மனித குலத்தின் இறைவனின் இறுதி வெளிப்பாடு. ஆகவே அது மனித குலத்தின் நன்மைக்கானதாகவே இருக்க வேண்டும். ஆனால் உண்மை அதுவல்ல. முஸ்லீம் நாடுகளே உலகின் ஏழை நாடுகளாக உள்ளன (Ohmyrus 2006). .எதிர்ப்பாளர்களின் பேச்சில் உள்ள அறிவியல், உண்மைத்தனம், தத்துவங்கள் இவைகளை மதக் குருமார்கள் வெறும் முரட்டு பத்வாவினால் முறியடிக்காமல் விளக்கங்கள் மூலமாக முறியடிக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பார்கள். சானா குரான் வெளிச்சத்திற்கு வந்தால் எப்படி இத்தனை ஆண்டுகள் குரானே இறுதி என்ற பொய் எப்படி நிலைத்து நின்றது என்பது அதன் அடுத்த கேள்வியாக இருக்கும். இந்தப் பொய் ‘சாதாரண’ பொய் அல்ல; மிகப் ‘பெரிய’ பொய். இத்தகைய பெரிய பொய்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவைகள் கேட்போரை மயக்கியே வைக்கும். ஹிடலர் தன் நூல் Mein Kamph-ல் ’நாட்டின் மொத்த மக்கள் அனைவரும் சின்ன பொய் ஒன்றிற்கு அல்லாமல், ஒரு பெரிய பொய்யினிற்கு அடிமையாவார்கள்’ என்றார். சினா என்பவரும் பெரிய பொய்கள் கேட்போரை அதிர வைத்து நம்ப வைக்கின்றது என்கிறார். அரசியலில் இந்தப் பெரிய பொய்களின் ஆளுமை மிக அதிகம். George Orwell ‘அரசியல் மொழியில் பொய்கள் மிகவும் உண்மை போலவும், கொலைகள் மிகவும் மதிப்புள்ளது போலவும், காற்றிற்கும் கடுமை உண்டு எனவும் எளிதாகத் திரித்து விடலாம்.

சானா குரான் இப்போதைய இஸ்லாமின் ஆன்மீகத்தன்மையை எளிதில் போக்கி விடும். இஸ்லாம் என்பது அரேபியாவின் அரசியல் நிகழ்வு என்றாகி விடும். குரானின் மீது ஏற்றி வைத்துள்ள இறைத்தன்மை மற்ற நாடுகளை வரலாற்றில் அவர்கள் வென்ற போது அந்த நாட்டு மக்கள் மேல் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த மனத்தளவில் வந்த அடிமைத்தனம் இஸ்லாமியர் அந்த நாட்டைவிட்டு விலகிப் போனாலும் மக்கள் மனதில் நிலைத்து விட்டன. முகமதுவின் நண்பர்கள் பலரும் இஸ்லாமில் இருந்தது அப்போது நடந்த போர்களில் கிடைத்த லாபத்திற்காகத்தான். ஏனெனில் முகமது இறந்ததும் அவரின் பல நண்பர்கள் தங்கள் பழைய மத்த்திற்குத் திரும்பி விட்டனர்.

வாக்னின் (Vaknin 1999) – முகமதுவிற்கு இருந்ததாகச் சொல்லப்படும் Narcissistic Personality Disorder-ல் பெரும் பொய்களை நினைவறிந்தோ நினைவின்றியோ சொல்வது எளிது. அவர்கள் சொல்லும் பொய்களை அவர்களே நம்புவதும் இயல்பு என்கிறார். குரானின் தெய்வீகத்தன்மை போனால் மீதி என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்:

முதலாவதாக, பல குரான்கள் இருந்தால் அதில் எந்த குரான் உண்மை?

இரண்டாவதாக, பல குரான்களில் ஒன்று மட்டும் உண்மையென்றால் எப்படி மற்ற குரான்கள் இருக்க அல்லா சம்மதித்தார்?

மூன்றாவதாக, அல்லாவின் வார்த்தைகள் மாறாதவை என்றால் மற்ற குரான்கள் எப்படி வந்தன?

இறுதியாக, புகாரி (4.52.233)-ல் ‘நம்பிக்கையற்றவர்கள் எப்போதும் நம் அடையாளாங்களையும் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்’ என்கிறார். ஆனால் சானா குரானைக் கண்டுபிடித்த ஏமானிய அதிகாரிகள் அதனை மேலும் ஆய்வதற்கு தங்களால் முடியாததால் ஏன் ஜெர்மானிய அறிஞர்களை நாடினார்கள்?

குரான் இன்னும் பல கேள்விகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக, ஏமானிய அதிகாரிகள் புயின், போத்மெர் இருவரையும் இன்னும் அதிகமான ஆய்வுகளுக்குள் செல்வதைத் தடுத்து விட்டனர். Dar al-Makhtutat Library-ல் உள்ள சானா பிரதிகளில் குரானற்ற சில பழைய பிரதிகளை மட்டுமே பார்வையாளர்களுக்கு இப்போது காண்பிக்கப்படுகின்றன. ஆனால் சானா தோற்றுவித்த உண்மைகளை மறைக்க இது மட்டுமே உதவாது. 35,000 ஆயிரம் போட்டோக்கள் எடுக்கப்பட்டு விட்டன. நிச்சயமாக அந்தப் பிரதிகளின் மேல் இன்னும் பல ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கும். அவைகள் ஒரு நாள் நிச்சயம் வெளிவரும்.

 Taher, 2000 – புயின், போத்மெர் இருவரின் ஆய்வுகளை இஸ்லாமியர் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இவைகள் குரானின் மகத்துவத்தைக் குறைக்க வந்த சில நம்பிக்கையற்றோரின் திட்டமிட்ட சதி என்று அவர்கள் கூறலாம். சல்மான் ருஷ்டி விவகாரத்தை மனதில் கொண்டு புய்ன், ‘என் கருத்துக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நடுவே கோபத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அந்தப் பழைய பிரதிகளின் மீது என் கருத்தைச் சொல்ல நான் அருகதையற்றவன் என்பது அவர்களது குற்றச்சாட்டு’ என்கிறார்.  

UNESCO- சானா குரான் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, 1995-ல் அதைப் பற்றி குறுந்தகடு ஒன்றை வெளிக்கொண்டு வந்தது. அரேபிய, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் இதன் விளக்கம் இருந்தது. அக்குறுந்தகட்டில் 302 பிரதிகளின் 651 படங்களும் இருந்தன. அந்தப் பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்ட விதம், அவைகளில் உள்ள பிரதிகளைப் பற்றிய முன்னுரை, அரேபிய எழுத்தியல் எல்லாம் அதில் உண்டு.

 


இப்போதும் அந்தப் பிரதிகள் முறையான வழியில் பாதுகாக்கப்படவோ, அண்மைக் காலத்து அறிவியல் முறையில் பிரதிகளைக் காக்கவோ ஏமானிய அரசு ஏதும் செய்வதில்லை என்று அந்த நூலகத்தின் அதிகாரி Ursula Dreibholz கூறியுள்ளார். பூச்சி, நீர் போன்றவைகளிடமிருந்து காக்கவோ, அதைவிடவும் முக்கியமாக நெருப்பிலிருந்து காக்கவும் எந்த முயற்சியும் இல்லை. அதற்கெல்லாம் பணமில்லை என்பது ஏமானிய அரசின் கூற்று. மதத்தைக் காக்க எந்த அளவுக்கும் நம்பிக்கையாளர்கள் செல்வார்கள். எப்போது ஒரு பெரும் தீ விபத்து நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். தீவிபத்து தடுப்பு ஏதும் ஏமானிய அரசு செய்யாமல் இருப்பது இந்த ’விபத்தை’ எதிர்பார்த்துதானோ!



References

Journals:

1. Abid, Abdelaziz (1997); “Memory of the World”: Preserving Our Documentary Heritage. Museum International, Vol. 49, No. 1, January 1997 issue. Blackwell Publishers, Oxford.

2. Dreibholz, Ursula (1983); A treasure of early Islamic manuscripts on parchment. Significance of the find and its conservation treatment. AIC Preprints of papers presented at the 11th annual meeting in Baltimore, Maryland, 25-29 May 1983. Washington, DC.

3. Dreibholz, Ursula (1996); The Treatment of Early Islamic Manuscript Fragments on Parchment in The Conservation and Preservation of Islamic Manuscripts, Al-Furqan Islamic Heritage Foundation, London

4. Dreibholz, Ursula (1999); Preserving a treasure: the Sana’a manuscripts. Museum International. Islamic collections. Vol. LI, No. 3, July 1999 issue. Blackwell Publishers. Oxford.

5. Whelan, Estelle (1998); Forgotten Witness: Evidence for the Early Codification of the Qur’an. Published in The Journal of America Oriental Society. January to March Issue, 1998. University of Michigan. USA.



*
Another article related to Sana Quran: http://www.theatlantic.com/past/issues/99jan/koran.htm


*

பின் குறிப்பு:

இது ஒரு மத அவதூறுப் பதிப்பல்ல; ஒரு வரலாற்றுப் பதிவே.. 


*

27 comments:

ராஜ நடராஜன் said...

நேற்றுத்தான் வவ்வால் எனக்கு அடாது மழை பெய்தாலும் விடாது வெயில் அடித்தாலும்ன்னு பின்னூட்டம் போட்டார்:)

குறும்பன் said...

மதபதிவர்களுக்கு தமிழ்மணம் ஆப்பு வைத்துவிட்டது, ஆப்பு வைக்கப்படாதவர்களும் பாதிக்கப்பட்டுட்டாங்க side effect!. இப்பவெல்லாம் அவங்க கதை எழுதறாங்க தெரியுமுல்ல.

Unknown said...

தருமி சார், தமிழ்மணம் தடை விலக்கம் செஞ்சிட்டாங்களா
வாழ்த்துக்கள் சார்!

suvanappiriyan said...

//மதபதிவர்களுக்கு தமிழ்மணம் ஆப்பு வைத்துவிட்டது, ஆப்பு வைக்கப்படாதவர்களும் பாதிக்கப்பட்டுட்டாங்க side effect!. இப்பவெல்லாம் அவங்க கதை எழுதறாங்க தெரியுமுல்ல.//

கதை எழுதினாலும் அதிலும் ஒரு மெஸ்ஸேஜ் சமூகத்துக்கு வைப்போம்ல :-)

சார்வாகன் said...

அருமையாக போகிறது,
பல் தேவையான் தகவல்கள்.
நன்றி

Unknown said...

Ha ha ha ha ha nice joke!
:)

Ramya Parasuram said...

பின்னூட்டங்கலுல மெஜேஸ் வெச்சாலும் தமிழ்மணம் ஆப்பு வெய்க்கும்முன்னு தெரியுமுல்லே! தமிழ்மணம்காரனுங்க என்ன இளிச்சவாயனுங்களா ஒங்க கபடி ஆட்டத்துக்கெல்லாம் கைய விரிச்சுகிட்டிருக்க. இருந்து பாருங்கன்னா சுவனமே சொய்ங்க்குன்னு கிட்டுது

dondu(#11168674346665545885) said...

இதில் தரப்பட்ட தகவல்களுக்கு மறுப்புகள் எங்கே? அதைச் செய்யாமல் கதை எல்லாம் எழுதிக் கொண்டிருக்காங்க போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

//இதில் தரப்பட்ட தகவல்களுக்கு மறுப்புகள் எங்கே? அதைச் செய்யாமல் கதை எல்லாம் எழுதிக் கொண்டிருக்காங்க போல.//

தனிப் பதிவாகவே போட்டு விளக்கமெல்லாம் கொடுத்தாஞ்சுங்கண்ணா! முகமது நபியின் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டு பல தோழர்கள் மனனமிட்ட குர்ஆனையும் ஒப்பிட்டு உஸ்மான் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு அது உலகம் முழுக்க அனுப்பப் பட்டது. அந்த பிரதிகளில் இரண்டு இன்றும் மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தருமி சொல்லும் குர்ஆன் முகமது நபி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டதல்ல. எனவே அதைப் பற்றிய கவலையும் முஸ்லிம்களுக்கு இல்லை.

அன்புடன்

சுவனப்பிரியன்.

shakiribnu said...

குரான்ல இருந்த பால்குடி வசனம், ஆடு தின்ன வசனம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லைன்னு அல்லாஹ்வே ஆட்டை உட்டு திங்க வச்சிட்டார்னு நம்ம தவ்ஹீத் அண்ணன் போட்டு தாக்குறார். எலே நான் தப்பா அனுப்பின்லே.. அத போயி தின்னுடுன்னு ஆடுகிட்ட சொல்லி அந்த ஆடு போயி தின்னிச்சின்னு நெனக்கிறேன்.

எங்க மனசுல இருக்குன்னு வேற நம்ம தவ்ஹீத் அண்ணன் அடிக்கிறார். லே அவன் மனசுல ஏம்ல வேற மாரி இருக்குன்னு கேட்டதுக்கு நீங்க மெஜாரிட்டியத்தான் எடுத்திறணும்னு சொல்லிட்டார். அவன் மைனாரிட்டி அவன் சொல்றதை மெஜாரிட்டி கரீக்ட் பண்ணிரும்னு சொல்றார்.

அப்ப மெஜாரிட்டி தப்பா மைனாரிட்டி சரியா இருந்திச்சின்னா என்ன பண்றதுன்னு கேட்டிருக்கணும்.. நம்ம நஸரியாக்களுக்கு டைம் இல்லன்னு நெனக்கிறேன்.

சரி நான் ஒரு கவுஜ எளுதியிருக்கேன். கொஞ்சம் பாருங்களேன்..
நாமளும் எயுதும் கவுஜ

Ramya Parasuram said...

ஏன் தருமி சார் உங்க போஸ்ட மட்டும் தமிழ்மணம் அலாவ் பண்ணறாங்க. ஏதாச்சும் ஸ்பெசல் குடுகறீங்களா? பாருங்க ஒங்க போஸ்டுலயே திருமறை காமெண்டுல ஓதறானுங்க. நீங்க வரப்பும் வாய்காலும் வெட்டி குடுக்கறீங்க. திஸ் இஸ் நாட் ஓகே. தமிழ்மணம் ஆட்மினிஸ்ரேசனுக்கு ட்ரபிள் இந்த பசங்ககிட்ட வாங்கி குடுக்கறதே ஒங்க ஏழாண்டு திட்டமா?

Ramya Parasuram said...

shakiribnu ச்சோ! ச்சொ! ரொம்ப நொந்து போயிருக்கீங்க.

ராஜ நடராஜன் said...

என்ன எல்லோரும் கதை கதைன்னு கதைக்குறாங்களே!கதை எழுதறது கூட தப்பா:)

சார்வாகன் said...

சகோ சுவனன்,

நீங்கள் கூறிய விடயங்களை மீதான என புரிதல்கள் சரியா என கூறி இதற்கு உங்களின் ஆதரபூர்வமான ஹதிதுகளில் இருந்து சான்று தர வேண்டுகிறேன்.

1,/பல தோழர்கள் மனனமிட்ட குர்ஆனையும் /

அதாவது முழுக் குரானையும் மனப்பாடம் செய்த சஹாபாக்கள்(நபித்தோழர்கள்) இருந்தனர்.

2./ உஸ்மான் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு அது உலகம் முழுக்க அனுப்பப் பட்டது.//
பல் என்றால் எத்தனை? உலக நாடுகளில் எங்கெங்கு அனுப்ப பட்டது?

3.//அந்த பிரதிகளில் இரண்டு இன்றும் மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது/

எந்த மியுசியம்?.அந்த இரு குரான்களும் ,இப்போது உள்ள (ஹாஃப்ஸ்)குரானும் ஒரு புள்ளி கோடு கூட மாறாமல் அப்படியே இருக்குமா?

4. வட ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் பயன்படுத்தப்படும் வார்ஸ் குரான் பற்றி உங்கள் கருத்து என்ன?.

5. ஹஃப்சாவின் குரான் பற்றி கொஞ்சம் விளக்கவும்.அதனை உஸ்மான் எரித்தது ஏன்?

நன்றி

My earlier post regarding this compilation of quran

http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_22.html

வவ்வால் said...

ராஜ்,

//நேற்றுத்தான் வவ்வால் எனக்கு அடாது மழை பெய்தாலும் விடாது வெயில் அடித்தாலும்ன்னு பின்னூட்டம் போட்டார்:)//

அதெப்படி விட்டுட முடியுமா... கடமைனு ஒன்று இருக்கில்ல... அப்புறம் இது வரலாற்றுப்பதிவு... யுனெஸ்கோ ஆவணப்படமெல்லாம் ஆதாரம் காட்டியிருக்கார் உபாத்தியார்... எனவே அரசியல் செய்தால் அறம் கூற்றாகும் என சொல்லிகொள்கிறேன் :-))

எனக்கு என்னமோ வாழைப்பழ காமெடி தான் நியாபகம் வருது....
உபாத்தியார்: உண்மையில எத்தன குரான் அல்லா சொன்னாரு?
சு.பிரியன்: ஒன்னு தாண்ணே,
உபாத்தியார்: சானா குரான்ன காட்டி... அப்போ இது என்ன?
சு.பிரியன்: அது புத்தகமண்ணே...
உபாத்தியார்: கண்ணா ... புத்தகம் தான் ஆனா அது பேரு சானா குரான்... இப்போ சொல்லு அல்லா சொன்னது எந்த குரான்..?
சு.பிரியன்: அது ஒரிஜினல் குரான் அண்ணே..
உபாத்தியார்: கிர்ர்ர்ர்ர்....இரு தெளிவா சொல்லுறேன் அப்ப இது என்ன சானா குரான், நீ வச்சிருக்கிறது என்ன ஹாப்ஸ் குரான் , அப்போ இது எப்படி வந்துச்சு யாரு சொன்னா?
சு.ப்ரியன்: அதாண்ணே இது...

உபாத்தியார்: டேய் உன்னை...
(அடிக்க தொறத்துகிறார்...ராஜ நடை வந்து ..யேன்பா என்ன இங்க சத்தம்.....என்ன ஒரு புத்தகத்துக்கு இம்புட்டு சண்டையா ...இருங்க நான் கேட்கிறேன்...பஞ்சாயத்து தொடரும்)

suvanappiriyan said...

ஐயையோ....என்ன தருமி சார்! நிலைமை இப்படி போய்க்கிட்டு இருக்குது. :-(

According to Ucoi [the Union of Islamic communities in Italy] about 70,000 Italians converted to Islam.
Why on earth should 70,000 Italians want to convert to Islam. Surely they must be bonkers. Or perhaps as the old saying goes “if you can’t beat them join them”


http://my.telegraph.co.uk/riteman/riteway/16310026/70000-italians-convert-to-islam


நீங்க என்னத்த பதிவு எழுதி எங்களை எல்லாம் எப்போ நாத்திகர்களா மாத்த போறீங்களோ தெரியல....:-)

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

சு.பி. சார்!

இந்த மாதிரி செய்தி எடுத்துப் போடும்போது இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க. நீங்க சொன்னதில இருக்கிற வார்த்தைகளுக்கு எதுக்கும் மொதல்லேயே அர்த்தம் பாத்திருங்க .. சரியா?

இதுக்கு அர்த்தம் பாருங்க -//Surely they must be bonkers. //

The last laugh is mine, சு.பி. சார்!

தருமி said...

எதுக்கும் அர்த்தத்தை நானே கொடுத்திர்ரேனே!

bonkers = insane or very stupid = புத்தி பேதலித்தவர்கள் அல்லது முட்டாள்கள்

கோவிச்சிக்காதீங்க .. அது நீங்க கொடுத்த மேற்கோள்தான்!!!!

suvanappiriyan said...

தருமி சார்!

//கோவிச்சிக்காதீங்க .. அது நீங்க கொடுத்த மேற்கோள்தான்!!!!//

இத்தனை பேர் மார்க்கத்தை மாற்றிக் கொண்டு இஸ்லாத்துக்கு சென்றால் யாருக்குத்தான் கோபம் வராது. கோபத்தின் வெளிப்பாடுகளே அந்த வார்த்தைகள். இங்கு மார்க்கத்தை மாற்றிக் கொண்டதுதான் பேசு பொருள். நீங்கள் சொல்லும் நாத்திகத்தை விட இஸ்லாமே மனஅமைதிக்கு வழி என்ற முடிவுக்கு இத்தாலியர்கள் வந்துள்ளனர். இனி உங்களுக்கும் கோபம் வரணுமே! :-).

தருமி said...

அது என்ன சுபி சார்!

என்ன மீசை வச்சிருக்கீங்க? எத்தனை தடவை விழுந்தாலும் மண்ணே ஒட்ட மாட்டேங்குதுன்னு சொல்றீங்க!

masumlalpet said...

இஸ்லாமிய எதிர்ப்பும்,நமது மறுப்பும் http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_16.html

DEVAPRIYA said...

கிறிஸ்துவர்கள் ஏதோ உண்மையை அப்படியே ஏற்பதாக கூறுகிறீர்களே? உண்மை அப்படி இல்லை.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற பைபிள் அறிவியலை மறுத்த கலிலேயோ தன் வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று.
புதிய ஏற்பாட்டை ஏற்ற பைபிளியல் ஆய்வாளர், இடைச்சருகல்கள் நீக்கி ஏசு உண்மையில் என்ன சொன்னர் என ஆய்வு முடிவுகள் வெளியிட பல உண்மைகள் வந்தது. சர்ச் அவர்களை மதப் பிரஷ்டம் செய்தது. ஏன் பைபிளை முதலில் மொழி பெயர்த்து வெளியிட்ட திண்டேலை உயிரோடு சிலுவையில் கொளித்தது.

சாக்கடல் சுருள்களை பல ஆண்டுகள் மறைத்துதான் வைத்துருந்தது.
சர்ச்சின் கொடுமைகளை எதிர்த்து எழுந்த தியாசாபிகல் சொசைட்டி போன்றோரும், 25000 பிரிவு சர்ச்சுகளுள் போட்டியும் அறிவியல் வளர்ச்சியும் சர்ச்சின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது.

ஏன் சமீபத்தில் 2ம் நூற்றாண்டின் மாற்கு சுவிசேஷத்தின் ஏடுகள் கிடைத்துள்ளது-அதில் 43% மட்டுமே உள்ளதாம். 27000 பிரதிகள் உண்டு எனப் பெருமை பேசும் சர்ச்சுகள் அவற்றை ஏன் பிலிம் ஆக்கி வலையில் ஏற்ற தநங்குகிறார்கள்.
இஸ்லாம் 5000 வருட ந்து பெற்றுள்ள ஆய்வு சுதந்திரமும், கிறிஸ்துவம் பெற்ற 300 வருடஆய்வு சுதந்திரமும் இன்னும் இஸ்லாம் பெறவில்லை, ஆனால் இன்றைய அறிவியல் இதை மிக வேகமாக செய்யும்.
தேவப்ரியா சாலமன்

DEVAPRIYA said...

கிறிஸ்துவர்கள் ஏதோ உண்மையை அப்படியே ஏற்பதாக கூறுகிறீர்களே? உண்மை அப்படி இல்லை.
சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற பைபிள் அறிவியலை மறுத்த கலிலேயோ தன் வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று.
புதிய ஏற்பாட்டை ஏற்ற பைபிளியல் ஆய்வாளர், இடைச்சருகல்கள் நீக்கி ஏசு உண்மையில் என்ன சொன்னர் என ஆய்வு முடிவுகள் வெளியிட பல உண்மைகள் வந்தது. சர்ச் அவர்களை மதப் பிரஷ்டம் செய்தது. ஏன் பைபிளை முதலில் மொழி பெயர்த்து வெளியிட்ட திண்டேலை உயிரோடு சிலுவையில் கொளித்தது.

சாக்கடல் சுருள்களை பல ஆண்டுகள் மறைத்துதான் வைத்துருந்தது.
சர்ச்சின் கொடுமைகளை எதிர்த்து எழுந்த தியாசாபிகல் சொசைட்டி போன்றோரும், 25000 பிரிவு சர்ச்சுகளுள் போட்டியும் அறிவியல் வளர்ச்சியும் சர்ச்சின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது.

ஏன் சமீபத்தில் 2ம் நூற்றாண்டின் மாற்கு சுவிசேஷத்தின் ஏடுகள் கிடைத்துள்ளது-அதில் 43% மட்டுமே உள்ளதாம். 27000 பிரதிகள் உண்டு எனப் பெருமை பேசும் சர்ச்சுகள் அவற்றை ஏன் பிலிம் ஆக்கி வலையில் ஏற்ற தநங்குகிறார்கள்.
இஸ்லாம் 5000 வருட ந்து பெற்றுள்ள ஆய்வு சுதந்திரமும், கிறிஸ்துவம் பெற்ற 300 வருடஆய்வு சுதந்திரமும் இன்னும் இஸ்லாம் பெறவில்லை, ஆனால் இன்றைய அறிவியல் இதை மிக வேகமாக செய்யும்.
தேவப்ரியா சாலமன்

Unknown said...

அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.

மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Unknown said...

அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.

மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தருமி said...

mohamed sahabudeen,

மதராஸா பள்ளியில் உள்ள பாடத்திட்டம் போல் அழகாக கதை போல் எழுதியுள்ளீர்கள். நன்றி.

//நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். // - இதை வாசிக்கும் போது அல்லா ஏனிப்படி ஒரு கடுமையான சோதனைக்கு உள்ளாகவேண்டுமென்று நினைக்க மாட்டீர்களா? ஏன் எழுதப் படிக்கத்தெரியாத மனிதரைத் தேர்ந்தெடுத்து, அல்லா சொன்னதை இவர் போய் சொல்லி .. அதை சிலர் எழுதி .. அதைத் திருத்தி ..... அம்மாடி! at lesat இவன் தான் என் நபி என்று அல்லா முடிவு செய்திருந்தால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரிந்திருக்கச் செய்திருக்கலாம். நமக்கும் தொல்லையில்லாமல் இருந்திருக்கும். இல்லீங்களா?

அதை விட முக்கியமாக, இக்கட்டுரையின் தலைப்பையும், உள்ளடக்கத்தையும் வாசிக்காமல் விட்டு விட்டீர்கள் போலும்!

Post a Comment