Tuesday, February 05, 2013

636. ஒச்சப்பனும் நானும் .. நம் தாய்மொழிகளும்









*
 எனக்கும்  ஒச்சப்பனுக்கும் நடந்த சில கருத்துப் பரிமாற்றங்களை, தேவை கருதி, உங்கள் முன் வைக்கிறேன்.

 

1830-ல் உருவான பெல்ஜியத்தின் அண்டை நாடுகள் நெதர்லேண்டு. ஜெர்மனி,. ப்ரான்ஸ், லக்ஸம்பெர்க். கிறித்துவர்களின் இரு கூறுகளின் நடுவே நடந்த குழப்பங்களால் இந்நாடு தனியாகப் பிரிந்தது. அப்போது பிரஞ்சு மொழிதான் அரசியல் மொழியாக இருந்தது. அரசியல், வகுப்பு வாத வேறுபாடுகள் பலவும் இருந்த இந்த நாட்டில் பின்னாளில் மொழியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தின. 

1970 வரை ஒன்றாக இருந்த பெல்ஜியம் இந்தப் பிரச்சனைகளால் எழுந்த பல அரசியல் சிக்கல்களினால் பெடரல் ஸ்டேட்டாக மாறியது. இப்போது இது மூன்று பிரிவுகளாக உள்ளன: வடக்குப் பகுதியில் டச் மொழி பேசும் ஃபாளண்டர்ஸ்; தெற்குப் பகுதியில் பிரஞ்சு மொழி பேசும் வல்லோனியா; இரண்டிற்கும் நடுவில் இரு மொழி பேசும் ப்ருசல்ஸ். பிரிவுகளாக இருந்தாலும் பெல்ஜியம் ஐரோப்பிய யூனியனில் நல்ல பொருளாதார மேம்பாட்டோடு இருக்கிறது.

ஃப்ளாண்டர் மொழி பேசுவோர் ஃப்ளெமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள். (நம் ஒச்சப்பன் இந்தக் குழுவைச் சார்ந்தவர்.) தங்கள் மொழி அதிகம் பேசப்படாமல், போற்றப்படாமல் பிரஞ்சு மொழிக்கே அதிக முக்கியத்துவம் இருந்த நிலையை தங்களது மொழிப்பற்றால்  முற்றாக மாற்றினர். இப்போது பிரஞ்சு மொழிக்கு முக்கியத்துவம் இழந்து ஃப்ளாண்டர்ஸ் மொழியே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒச்சப்பன் ஒருவன் தன் மொழியை இழந்தால் அவனது பழம் பண்பாடு, சமூகக் கட்டுக்கோப்பு, ஒற்றுமை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்து விடுவான். அது அந்த சமூகத்தினை முற்றாக அழித்து விடும் என்கிறார். இந்த உணர்வுகளை ஊக்குவித்த பின்பே ஃப்ளாண்டர்ஸ் மொழி வலுப்பெற்று இன்று எங்களின் தாய்மொழியை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்கிறார்.
அவர் எங்கள் நாட்டில் நடந்த மொழிப் பரிணாம வளர்ச்சி அப்படியே மாறி, எதிர்த் திசையில் உங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இங்கே ஆங்கிலத்தின் பின்னாலேயே எல்லோரும் ஓடுகிறீர்கள். அது மட்டுமின்றி ஆங்கிலம் அறிந்தோர் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களை குறைவாகக் கருதுகிறீர்கள். அந்த பாவப்பட்ட தமிழர்களும் ஆங்கிலத்தைப் போற்றுவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு சமூகத்தின், அதன் கலாச்சாரத்திற்கு அடிக்கப்படும் ஒரு சாவு மணி என்பதை உங்கள் சமூகம் புரிந்து கொள்வது நல்லது.

அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். தமிழ் தெரிந்தோருக்கே அரசு வேலைகள் என்ற கொள்கையை அரசு எடுக்க வேண்டும் என்கிறார். இதற்காக அவர் எனக்கு எழுதிய மயிலின் நகலை இங்கே கீழே கொடுத்துள்ளேன்.



Dear Sam,

The Sint-Lievens College was founded in 1930 for the insight and the deployment of Lieven Gevaert (Afga-Gevaert), an industrialist with an eye for social and Flemish needs for Dutch school education. The pride of your own mother-tongue, Dutch was the key for the revival of the Flemish culture, dominated for years by French invasions and domination, which chased away very famous Dutch writers from Antwerp (Belgium) to the Netherlands. Nowadays Flanders grew out to a strong region at the top of world technology, proud leaving behind the French hegemony.

Remarkable reverse evolution happens in Tamil Nadu, people are dominated by the foreign language, English. It is considered English-speaking ones are  the elite of Tamil society. Many such are not able anymore to read or write their own mother-tongue Tamil,  making  them foreigners in their own land, alienated from their own culture, looking down on their origin and the common Tamilians as lower caste, copying the English, and exploiting other non-English-speaking Tamils in a worse way. They can't be called proud Tamilians anymore as they chose to reject all Tamil values and its tradition and culture, not aware that they lost their personal-identity. They may praise themselves lucky for the tolerance of the majority Tamils.

Only the Tamil government can preserve their culture by making Tamil a compulsory medium of education. Tamil is one of the oldest languages and still remains as a spoken classical language, with its great Tamil culture, traditions and great jewels of Tamil literature. The more languages you know the more cultures you understand. But  you have an identity only when you master your own mother-tongue. A proud Tamil should know his language and his culture.


Greetings
Henk










*



14 comments:

ப.கந்தசாமி said...

அவசியமான, தேவையான, ஆக்கபூர்வமான கருத்துகள்.

Unknown said...

தருமி ஐயா..! தங்களுடைய இந்தப் பதிவை நாங்கள் தமிழ்ச்செடியில் மறுபதிப்பாக வெளியிடுவதற்கு அனுமதி கிடைக்குமா..?

தருமி said...

வீடு சுரேஸ்குமார்,

தாராளமாக ...
நன்றி

பின், தொடுப்பும் கொடுங்கள்.

Unknown said...

மிக்க நன்றி..!ஐயா!

Unknown said...

அருமையான பதிவு அய்யா ...தங்களின் பதிவுகளை அடிக்கடி எதிர்பாக்கிறோம் ...

மொழி விடயத்தில் சிங்களவர்கள் தமிழர்களை விட எவ்வளவோ மேல்...இங்கு பட்டபடிப்பு கூட தாய்மொழியில் செய்யும் சிங்களவர்களே அதிகம்...சாதாரண பேச்சு வழக்கில் கூட இங்கு பிறமொழி கலப்பு இருக்காது...ஆனால் தமிழர்கள் ..அதுவும் கொழும்பு தமிழர்கள் ஆங்கிலம் கலக்காது பேசினால் அதனை கிண்டலும் செய்வர்..

அலுவலகத்தில் சிங்கள நண்பர்களுடன் பேசும் போது வசனங்கள் தெரியாத வேலையில் ஆங்கில வார்த்தை கலந்து சிங்களம் பேசினால் ,அந்த இடத்தில் என் மேல் வேற்றுகிரகவாசி பார்வை தான் ...

தம் மொழி மேல் பெருமை கொள்ளும் வரை தமிழர்களை மாற்ற முடியாது

Thekkikattan|தெகா said...

Dharumi, I have a great respect for Mr. Occhappan for his colorful presentation of our country side, now even more having read his view about the imperative needs of linguistic preservation.

Hopefully, oneday I will hang out with you guys. Pass my warm regards and love to him.

By the way, thanks for sharing his mail with us and for your thamizh translation. I reshared your article in my plus and facebook.

Ganesan said...

தருமி ஐயா நல்ல பதிவு. இந்த பதிவை பார்த்த அன்றே இந்த செய்தியையும் பார்க்க நேர்ந்தது.

http://news.vikatan.com/index.php?nid=12358#cmt241

நகரங்களில் தான் தமிழ் அழிகிறது என்றால், கிராமங்களிலும் நிலைமை மோசம் தான் என்கிறது இந்த செய்தி. தமிழ் அறிவுடன் ஒப்பிடுகையில், இந்திய சராசரியை விட ஆங்கிலம் நன்றாய் வருகிறதாம் நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு. :(

>தமிழ் வாசிப்பின் (அவல) நிலை:
>*ஒன்றாம் வகுப்புப் படிக்கும் 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே எழுத்துகளை அடையாளம் காண முடிகிறது.
>* ஐந்தாம் வகுப்புப் படிக்கும் 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே இரண்டாம் வகுப்பு கதையை வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 46.8 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
>* தமிழகத்தில் ஆங்கிலத்தில் எளிய வார்த்தயை வாசிக்க முடிந்த குழந்தைகளின் சதவிகிதம், இந்தியாவின் சராசரியை விட அதிகமாகக் காணப்படுகிறது.

தருமி said...

விஜய்.
//இங்கு பட்டபடிப்பு கூட தாய்மொழியில் செய்யும் சிங்களவர்களே அதிகம்...சாதாரண பேச்சு வழக்கில் கூட இங்கு பிறமொழி கலப்பு இருக்காது...//

இரண்டுமே ஆச்சரியத்தை எனக்குத் தருகிறது. ஆங்கிலம் இல்லாமல் தமிழில் பேச என் போன்ற எத்தனை தமிழர்களால் முடியும் என்று தெரியவில்லையே.

தருமி said...

கணேசன்
நீங்கள் கொடுத்த இணைப்பில் உள்ள கட்டுரையைப் படித்தேன்.

ஆக, தமிழர்களாகிய நாம் தமிழை விட ஆங்கிலத்தில் ‘எக்ஸ்பெர்ட்ஸ்’ ..!!!

இராஜராஜேஸ்வரி said...

தமிழர்களாகிய நாம் தமிழை விட ஆங்கிலத்தில் ‘எக்ஸ்பெர்ட்ஸ்’ ..!!!

இரணடையும் சரியாக கற்காமல் இரண்டும் கெட்டான் நிலையில்
இருப்பதாக எண்ணுகிறேன் ஐயா..

வேகநரி said...

தருமி ஜயா தகவலுக்கு நன்றி.
விஜய்லங்கன்,
//அதுவும் கொழும்பு தமிழர்கள் ஆங்கிலம் கலக்காது பேசினால் அதனை கிண்டலும் செய்வர்//
நீங்க இங்கே வந்து பார்த்தா தான் தெரியும் அவர்கள் எவ்வளவோ தேவலையே என்று.

நெல்லைத் தமிழன் said...

அய்யா... இது ஒவ்வொரு வருடத்துக்கும் முதல் மீள் பதிவாக இருக்க வேண்டும். இன்றைக்கு தனித் தமிழில் பேச யாழ்ப்பாணத் (இலங்கைத்) தமிழரை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஆங்கிலத்தில் பேசிப் பேசி (என்னுடைய மொழியை மன்னிக்கவும். இந்தப் பயலுவோ பெருசா இங்கிலிபீசில் பேசிக் கிழிக்கிறானுவோ. ஒரு பயலுக்கும் இலக்கணம் தெரியாது. இதுல வேற, சொந்தச் சரக்கில்லாமல், யாழ்ப்பாணத் தமிழரின் வார்த்தைகளைக் கடன் வாங்கிப் பேசுகிறார்கள். உதாரணம், கதைப்பது போன்றவை. தமிழர், தமிழுணர்வு என்று பீத்திக்கொள்ளும் இந்தப் பயலுவளுக்கு ஒழுங்கா தமிழே பேசத் தெரியாது. மொழி, கலாச்சாரம் இவற்றின் அருமை தெரியாத பயலுவோ.) நாம் தமிழில் பல சொற்களை (அதுவும் வட்டாரச்) இழந்துள்ளோம். இது பெருமைக்குறியது அல்ல. மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக நம் மொழியையும் கலாச்சாரத்தையும் அல்ல. பெரியார் போன்று விளைவைப் பற்றிக் கவலைப் படாமல் (அதாவது எதிர்வினையைப் பற்றி) செருப்பால் அடிக்கிறமாதிரி (எருமைத் தோலனுக்கு உரைக்கிறமாதிரி) யாராவது வந்து தமிழைக் காப்பாற்றுங்களையா.

தருமி said...

நெல்லைத் தமிழன்,
’நீங்கள் தினத்தந்தி டிவியில் தினசரிகளை வைத்துக் கொண்டு பேசுபவர் போல் பேசுகிறீர்களே .. ........

alwin said...

பலருக்கு அயல் மொழியின் அதீத மோகம் இருப்பதே இந்த பின்னடைவின் காரணம்... இப்பொழுதுள்ள மத்திய அரசு எடுக்கும் மும்மொழி என்பது சிறுக சிறுக தாய்மொழியை (எந்த மாநிலமானாலும் சரி) கொல்லும்...

Post a Comment