Tuesday, February 12, 2013

637. மனிதக் கழிவுகள் பற்றி அரசுக்கு ஒரு கடிதம்







*
28.செப்டம்பர் மாதம் 2007-ம் வருடம், அதாவது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன், மனிதக் கழிவுகளை மனிதன் தூக்கும் அவலைத்தை நிறுத்த மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கி, பரம்பரைத் தொழிலில் தவிக்கும் தலித்துகளை இத்தொழிலிலிருந்து தடுக்க வேண்டும் என்று மத்திய அரசால் நடத்தும் Grievance Cell  பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன்.

இன்று அதற்குப் பதில் வந்துள்ளது ....




ஆச்சரியம் .. ஐந்தரை ஆண்டுகள் நமது வேண்டுகோள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியம் .. ஐந்தரை ஆண்டுகள் ஆனாலும் ஒரு பதில் கொடுத்துள்ளார்கள்.
பல தடவை நீதி மன்றங்கள் இவைகளைத் தடுத்தாலும் அந்த பழக்கம் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.

இப்போதும் நீதி மன்றங்கள் தடை செய்து விட்டன. ஆனால் சுத்தம் செய்ய இயந்திரங்களை அரசு வாங்கி பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டதா? தெரியவில்லை.
ஆயினும் .. இந்த கேஸ் இப்போது முடிவடைந்து விட்டது என்ற செய்தி வந்துள்ளது.



http://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
http://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
எனக்கு இன்று வந்த மயில்:
Your Grievance with Registration No : DARPG/E/2007/06791 has been disposed . Logon to : http://pgportal.gov.in/ for further details. 




Current Status
:
CASE CLOSED
Date of Action
:
12 Feb 2013
Details
:
Clean and carriying human waster by men is prohibited by the Court. Hence those in such occupation are provided bank loan and training for other occupation vide lr.27458/ADW6/2011, dt.29.11.2010

*

இந்த பதிலைப் பார்த்து மகிழுவதா .. அல்லது  நல்லது ஏதும் இன்னும் நடக்கவில்லை என்று வருந்துவதா ....???? 

*

இன்னொரு சோகம்... நண்பர்கள் சிலர் சேர்ந்து 2008-ம் ஆண்டு  FIX MY INDIA என்று ஒரு பதிவை ஆரம்பித்தோம். அதுவும் தூங்கி விட்டது.
யாராவது எழுப்பினால் நலம் ....

*



சின்ன சிறு குறிப்பு:
 carriying human waster by men  - இப்படி பதில் எழுதுவோர் ஆங்கிலத்தை இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதி அனுப்பலாம்.










*



10 comments:

ராஜ நடராஜன் said...

உங்கள் கடிதம் நினைவில் உள்ளது.

66A கூட இன்னும் ஐந்து வருடம் கழித்து தீர்ப்பு வருமா?

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,

ஐந்து வருடம் கழித்து ஒரு பதில்.அதுவும் இப்படி. பதிலே இப்படி எனில் செயல் எப்படி இருக்கும் என புரிய வேண்டியதுதான்!!!

நம் நாட்டில் சட்டம் விளக்கம் எல்லாம் ஏட்டில் நன்றாக இருக்கும். நடைமுறைதான் வரும் ஆனால் வராது!!

பிறப்பின் அடிப்படையில் மனிதக் கழிவு நீக்கும் பரம்பரை தொழிலில் மனிதர்கள்!!!

நினைக்கவே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!

அமர பாரதி said...

தருமி சார், ஒரே தமாஷ் போங்க. இந்த அறிவுத் திறத்தை வைத்துக் கொண்டு இவர்கள் நிர்வாகம் எப்படி இருக்கும்? லஞ்சம் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை சிறிது வேலைத் திறன் அதிகரிப்புக்கும் காட்டலாம். இவர்கள் ஒரு பெரிய அளவில் முடிவெடுக்கும் பதவியில் இருந்தால் நாடு நாறி விடும்.

அமர பாரதி said...

தருமி சார், ஒரே தமாஷ் போங்க. இந்த அறிவுத் திறத்தை வைத்துக் கொண்டு இவர்கள் நிர்வாகம் எப்படி இருக்கும்? லஞ்சம் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை சிறிது வேலைத் திறன் அதிகரிப்புக்கும் காட்டலாம். இவர்கள் ஒரு பெரிய அளவில் முடிவெடுக்கும் பதவியில் இருந்தால் நாடு நாறி விடும்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

ராஜ நடராஜன்,

//66A கூட இன்னும் ஐந்து வருடம் கழித்து தீர்ப்பு வருமா? //

இந்த 66A பற்றிப் பேசினாலே எல்லா பதிவர்கள் மேலும் கோபம் தான் வருகிறது. யாரும் என் பதிவின் கருத்திற்கு ஒத்து வரவில்லை. பயம் தான் காரணம் என்றே நினைக்கிறேன். இந்த பய உணர்வுதான் என் கோபத்திற்கான காரணம்.

இம்புட்டா ....

நம்பள்கி said...

தருமி!

இது கொடுமை! case closed என்று அனுப்ப உங்களுக்கு....

அரசியல்வியாதிகளே அப்படித்தான். இனி யாரவது கேட்டால்...இதோ இந்த அரசானை...

Current Status

:

CASE CLOSED
Date of Action

:

12 Feb 2013
Details

:

Clean and carriying human waster by men is prohibited by the Court.

இதையே தான் நான் எழுதினபோது, ஒரு பிரபல அரசியல் பதிவர் பச்சையா எழுதினார்...

தமிழ்நாட்டில் கோர்ட்டில் சட்டம்போட்டாச்சு...1996-ல்.
இப்படி பதில் எனக்கு கொடுப் பவர்களை என்ன செய்வது?

Unknown said...

மனித நாகரீகம் எவ்வளவோ வளர்ந்த பின்னும் இது போன்ற செய்கைகள் நடாத்த படுவது வேதனை அளிக்கிறது.....ஆதிக்க சாதி மக்கள் இவர்களை வேறு பக்கம் செல்ல விடாமல் இதன் உள்ளேயே அழுத்தி வைத்திருப்பதும் .....ஆரோக்யா பாலில் வரும் .."நலம் அன்புடன் நமது கிராமங்களில் இருந்து " என்ற வார்த்தை பொய் என்றே தோன்றுகிறது...

என் அக்கா ஒருவரின் கணவர் மும்பைவாசி தமிழர்..நன்கு படித்து உத்தியோகம் செய்பவர்..இலங்கை வந்த போது ஆதிக்க சாதி முன்னிறுத்தல் மற்றும் தாழ்ந்த சாதி மக்களின் பழக்கவழக்கங்களை குறை கூறி கொண்டிருந்தார்..படித்த மக்களே சாதியுடன் பின்னி பிணைந்து இருக்கும் போது இந்நடைமுறையின் ஒடுக்கம் எப்போது நிகழும் என்பது ????????????????????????????????????????????

புதிய தலைமுறையில் பார்த்த செய்தி...ஒரு சவர தொழிலாளி ,தனக்கு வயதாகி விட்டதால் தொழில் செய்ய முடியாது என கூறியுள்ளார்...ஊர் மைனர் குஞ்சுகள் எல்லாம் ஒன்னு கூடி அவருக்கு பதிலா அவர் மகள் சவரம் செய்து விடணும்னு தீர்ப்பு வழங்கிட்டாங்க...இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவமான படுத்தி தாக்கியும் உள்ளனர்..

தருமி said...

//ஊர் மைனர் குஞ்சுகள் எல்லாம் ஒன்னு கூடி அவருக்கு பதிலா அவர் மகள் சவரம் செய்து விடணும்னு தீர்ப்பு வழங்கிட்டாங்க.//

அந்தப் பெண்மணியும் கத்தியை எடுத்திருக்கலாம் ...

http://en.wiktionary.org/wiki/bobbitt

Unknown said...

அப்படியே செஞ்சுருந்தா nallaa இருந்து இருக்கும் ...ஆனா ,அதன் பின் மிச்ச குஞ்சுகள் அந்த பெண்ணை ஒரு நொடியாவது உயிர் வாழ விடுவாங்களா
??????
இங்கு இருப்பதால் சாதீயத்தின் கொடூர முகத்தை இன்னும் முழுமையாக காணக்கிடைக்கவில்லை...இணையத்தின் வாயிலாக அறியும் ஒவ்வொரு செய்தியும் உலகில் வேறு எங்கும் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறுமா என தோன்றுகிறது...அதுலயும் மருத்துவர் அய்யா அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை னு அத்தனை பெரிய சாதியையும் கூட்டி வச்சுருக்கார்....பரவா இல்லையே அனைத்து சாதி மக்களையும் ஒன்னு சேர்த்துடார்னு பார்த்தா ,தலித் மக்கள் வன்னியரை கொடுமை படுத்துறாங்கனு அறிக்கை விடுறார்...இருந்தும் இல்லாத வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் திருத்தி அமைக்கணும்னு வேண்டுகோள்..

அதை விட அன்புமணி ராமதாஸ் இடம் கேட்கப்பட்ட கேள்வி ...சாதிகளை சேர்த்து அரசியல் நடத்துவது சரியா?
அவரது பதில் ,சாதி இல்லாமல் எந்த கட்சி இருக்கு,எல்லோரும் செய்வதை நாங்களும் செய்வோம் ....(வாழ்க திராவிடம் ) இவனுங்கள எல்லாம் நம்பி ஒட்டு போடுற மக்கள் தான் பாவம் ...

இங்க மேர்வின் சில்வானு ஒருத்தர் இருக்காரு...அவரும் இவங்க மாதிரி தான்

Post a Comment