Wednesday, July 27, 2016

900. கபாலி









*

 இன்னும் கபாலி படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் நாக்கு தள்ளும் அளவிற்கு ஊடகங்களில் அதைப் பற்றிய விமர்சனங்களை மூச்சு முட்ட வாசித்தாயிற்று.

சீக்கிரம் பார்க்கணும்

ரஞ்சித் அளித்த ஒரு காணொளி பார்த்தேன். மிக நீளமான காணொளி  என்றாலும் பார்த்ததும் ரஞ்சித் பிடிச்சிப் போச்சு. மனுஷன் கட் அண்ட் ரைட்டா பேசியிருக்கார். பேச்சில் தன்மையும் ஆழமும் நிறைய இருக்கு. பேசிய விஷயங்கள் சரியாகப் பிடிச்சிது. இந்த காணொளி பார்த்த போது ரஞ்சித் மேல் மரியாதை வந்தது. நல்ல படம் எடுத்தும் மனுஷன் தளும்பவேயில்லை ….”இது தான் நான்” என்று அந்த காணொளியை முடித்தது அருமை …

 மகிழ்ச்சி

அந்தக் காலத்தில் நடிக்க வர்ர நடிக நடிகையர்களிடம் ஊடகக்கார்ர்கள் - இப்போது மாதிரி தான் ... நல்ல கேள்வி கேட்கவே மாட்டார்கள் -  ஒரு வழக்கமான கேள்வி கேட்பார்கள்.

 “நீங்க ஏன்நடிக்க வந்தீங்க?”

 அதற்கான வழக்கமான பதில்: “கலைத்தாய்க்கு சேவை செய்ய வந்தேன்.” 

இப்படித்தான் ரொம்ப நாளா வண்டி ஓடிக்கொண்டு இருந்தது. நடுவில் ஒரு மனுஷன் – ரொம்ப வித்தியாசமான மனுஷன் – வந்தார். எம்.ஆர். ராதா. அவர் பணத்துக்காக நடிக்க வந்தேன் அப்டின்னார். ஏங்க கலைத்தாய்க்கு சேவை செய்ய வரலையான்னு கேட்டாங்க. அப்போ ஒண்ணு சொன்னார். அப்படி சொல்றவங்க எல்லாத்தையும் காசு வாங்காம நடிக்கச் சொல்லு பாப்போம். அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுன்னு சொன்னார். அன்னையிலிருந்து ஒருத்தரும் வாயைத் திறந்து கலைத்தாய் பத்தி பேசுறது இல்லை. அப்படி பேசுற பழக்கம் அவரால நின்னுது.

அது மாதிரி இப்போவும் ஒரு ஆளு வரணும். நானும் பாத்துட்டேன். ரஜினி கூட நடிக்கிறதே பெருசு மாதிரி சும்மா அளந்து விடுவாங்க. கூட கொஞ்சம் விளம்பரம் வேணும்னாலும் கிடைக்கலாம். அதோட சரி… அதுவும் அவர வச்சி டைரக்ட் பண்ணணும்னு நிலை வந்திச்சின்னு வச்சுக்குங்க… ஒரு கூடைப் பூவோட தான் அலைவாங்க. போன ஜன்மத்துப் புண்ணியம் அது இதுன்னு ஒரே டயலாக். கேட்டு காதே புளிச்சிப் போச்சு. சரி…அவர வச்சி டைரக்ட் பண்ற/ கூட நடிக்கிற…. பெரிய புண்ணியம்னு சொல்றல்ல .. காசு வாங்கம ..போன ஜன்மத்துப் புண்ணியத்தின் படி செஞ்சிட்டு போன்னு சொல்ல ஒரு ஆளு வரணும்.

ஆனால் ரஞ்சித் அந்த மாதிரி எதுவும் பேசாம புண்ணியம் கட்டிக்கிட்டாரு. ஆஹா.. ரஜனி படத்தில நடிக்கிறதே பெருசுன்னு எல்லோரும் ஒரே மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ல ரஞ்சித் அப்படியெல்லாம் பேசாததே பெரிய விஷயம். தனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவர் மேல் மதிப்பு உயர்கிறது.

 அட …அதையெல்லாம் விட சிவாஜி அவ்வளவு பிடிச்சிருந்தாலும், இன்னும் புத்தியில்லாம இப்படி நடிச்சிக்கிட்டு இருக்கிறாரேன்னு அவருக்கு வயசானப்போ தோணுச்சு. அவர் காலத்தில பாலிவுட்ல அசோக்குமார் அப்டின்னு ஒரு நடிகர் இருந்தார். சிவாஜியை ஒட்டிய வயசு. வயசுக்கேத்த மாதிரி படங்கள் நடிச்சார். இது மாதிரி நம்ப ஆளும் growing majestically oldன்னு சொல்ற மாதிரி நடிக்க மாட்டேங்குறாரேன்னு கவலையா பேசிக்குவோம். அட அத உடுங்க ..அது பழைய காலத்துக் கதை. ஷோலே தவிர எந்த படத்திலும் பிடிக்காத அமிதாப் இப்போ நடிக்கிற படம் எல்லாம் பிடிக்குது. இன்னும் கமலும் ரஜினியும் டூயட் பாடிக்கிட்டே இருக்காங்களேன்னு நினச்சா எரிச்சல் தான் வரும்.

ஆனால் இந்தப் படத்தில் வயதுக்கேற்ற வேடம் என்பதாலேயே பிடித்தது அப்டின்னு ரஜினி சொன்னார் என்று சொன்னதைக் கேட்டதும், அப்படி ஒரு படத்தில் நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இந்த இடத்தில் சுகுணா திவாகர் எழுதிய ஒரு கருத்தை இங்கே மேற்கோளிடுகிறேன்:
 இன்றைக்கு ரஜினிக்குச் சவால் கமல் அல்ல. மாறியுள்ள தமிழ் சினிமா சூழலும் உலகின் எந்த நடிகர்களுக்கும் குறைவில்லாத அளவு நடிப்புத்திறமையை வழங்கும் தனுஷும் விஜய்சேதுபதியும்தான். ஆனால் 'கபாலி'யில் வழங்கியதைப் போன்ற நடிப்பை ரஜினி தொடர்ந்து வழங்கினால் தனுஷுக்கும் விஜய்சேதுபதிக்கும் முதல் சவாலே ரஜினிதான். 

இனிமேயாவது ரஜினி நல்ல படங்களில் நடிப்பார் என்று தோன்றியது. ஆனால் ஷங்கர் என்ற மோசமான, எல்லாத்துலயும் பெயிண்ட் அடிக்கிற ஒரு “பிரமாண்ட” டைரடக்கரின் பற்றிய நினைப்பும் வந்து வயிற்றைக் கலக்கியது.








 *

7 comments:

NewWorldOrder said...

Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

Even After 10-20-100-1000 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

Watch more Kabali!

By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

Nambikkai Kannan said...

அருமையான பதிவு. ரஞ்சித் அவர்கள் தன்மானம் உள்ள அருமையான மனிதர்.

கபாலி படம் பார்த்த பிறகு மனதில் இருந்து வந்த சிந்தனைகள்.
தயவு செய்து உங்களின் கருத்துகளை எனக்கு சொல்லுங்கள்.
அது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

http://vaangapesalamvaanga.blogspot.com/2016/07/blog-post.html

Thekkikattan|தெகா said...

படம் அவசியம் பாருங்க. நான் ரஜினியின் பாபா திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்தது கிடையாது. அந்த அளவிற்கு வெறுப்பு மண்டிவிட்டது. இந்த படத்தைக் கூட ரஞ்சித்தின் மீது உள்ள அபிமானத்தின் பேரிலேயே பார்க்க ஆரம்பித்தேன். அசத்தல்! மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி அசத்தி இருக்கிறார். மிக மெதுவாக நகரும் காட்சி அமைப்புகளை கொண்டு ரஜினியின் நடிப்பிற்கு நல்ல தீணி. அடி நாதமாக இன்றைய மூடர் கூடத்திற்கு தேவையான அரசியலும் உண்டு. உங்களுக்கு பிடிக்கும்.

NewWorldOrder said...

Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. ***Watch more***

Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

Watch more Kabali!

By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit

G.M Balasubramaniam said...

நான் இன்னும் கபாலி படம் பார்க்கவில்லை விரைவில் பார்ப்பதும் சந்தேகம் இருந்தாலும் வலைத்தளங்களில் கபாலி பற்றியதை எழுதி இருப்பதைப் படிக்கும்போதே சினிமா பார்த்தது போல் இருக்கிறது

வேகநரி said...

நான் மலேசியாவுக்கு சில தடவைகள் சென்ற போதெல்லாம் நான் கண்டதெல்லாம் அங்குள்ள தமிழர்களின் வாழ்கை தர உயர்வு, கவலையுடன் தமிழக தமிழரின் கீழே இருக்கும் வாழ்கை நிலை ஒப்பீடு தான்.
நான் தான் தற்போது சில தடவைகள் மலேசியா சென்றவன், குறுகியவட்டத்துக்குள் சில வாரங்களுக்குள் மலேசியாவை தெரிந்தவர்களுடன் பர்த்தவன், முழுமையாக அறிந்து கொள்ள முடியாதாக இருக்கும் என்று நான் சொன்னவற்றை நிராகரித்தாலும் கூட, நீங்க குறிப்பிட்ட பழைய காலத்து நடிகர் எம்.ஆர். ராதா மலேசிய சென்று அங்கே உள்ள தமிழர்களை சந்தித்த பின்பு சொன்னாராமே! இந்த நாட்டில் நீங்க நல்லா வாழ்க்கை வாழுறிங்க. அதை விட்டு தமிழகத்துக்கு வந்து குடியேறும் எண்ணம் ஒரு போதும் உங்களுக்கு வேண்டாம் என்று.
தர்மியின் ரஜினியும், ரஞ்சித்தும் மலேசியாவில் அப்படி என்ன தான் சாதிய ஒடுக்குமுறைகள், தமிழ் தொழிளாளர்கள் உரிமைகளுக்காக போராடினார்களோ தெரியல்ல!

சார்லஸ் said...

சார்

மலேசியாவில் தமிழர்களுக்கு என்னதான் நேர்ந்தது ? ரஜினியும் ரஞ்சித்தும் படத்தில் சொல்லவில்லை. அதனால் கதையில் அழுத்தமில்லை. நல்ல கேங்ஸ்டர் கெட்ட கேங்ஸ்டர் இரண்டு பேருக்கும் தகராறு என்பதுதான் கதை . ரஜினி வயசுக்கேற்ற வேடம் ஏற்று நடித்திருக்கிறார் என்ற ஒரு திருப்தியைத் தவிர படத்தில் தெளிவில்லை . ரஜினியை ரசிக்கலாம். மற்றபடி கொரியன் திரைப்படம் பார்த்த மாதிரிதான் இருந்தது.

Post a Comment