Saturday, October 06, 2018

1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே !




முதலில் வாட்சப்பில் ஒரு செய்தி வந்தது ஒரு புகைப்படத்துடன். அச்செய்தி இது:

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தையை ஒரு வருட்த்திற்குப் பின் மீட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் நுழைந்த நீரை குடித்தே உயிர் வாழ்ந்துள்ளது. மீட்ட பின்னும் தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருக்கின்ரது. கல்லிலுள்ள தேரைக்கு உணவளிக்கும் இரைவன் இக்குழந்தைக்கும் உணவளித்துள்ளான்.
கடவுளின் மகிமையே மகிமை...









இப்பதிவையும் அதனுடன் வந்திருந்த படத்தையும் மட்டும் முக நூலில் பதிவிட்டேன். பல பக்த கோடிகள் அதற்குரிய மரியாதை செலுத்தினர். ஓரிரு இந்து மதத்து நண்பர்கள் மட்டும் கேலியாகக் கேட்டு சில பின்னூட்டமிட்டார்கள். பத்து பேருக்கு மேல் அதை ஷேர் செய்ததும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது.
இரு நாட்கள் கழித்து கீழ்வரும் பதிவையிட்டேன். நல்ல வேளை அது இன்னும் முகநூலில் பத்திரமாக உள்ளது. ஆனால் முதலில் இட்ட பதிவை முகநூல் அட்மின் நீக்கி விட்டது ஒரு செய்தியுடன்:

We understand that you may not have known about our standards, so we'd encourage you to learn more about our specific policies on nudity and sexual activity. If you see something on Facebook that you think goes against one of these standards, you can report it to us.
Thanks for your understanding and help in keeping Facebook safe and welcoming.
மேலே சொன்ன எச்சரிக்கையோடு அந்தப் பழைய பதிவு நீக்கப்பட்டு விட்டது. அதனால் அந்தப் பதிவடக்கத்தையும், அதனைத் தொடர்ந்த இரண்டாம் பதிவையும் சேமித்து என் ப்ளாக்கில் எழுதி வைத்து விடுகிறேன்.

வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே !

//specific policies on nudity and sexual activity// என் பதிவில் FB admin சொன்னது போல் என்ன இருந்ததோ. எப்படி FB இப்படி முடிவெடுக்கிறது என்று தெரியுமா? தெரிந்தால் சொல்லித் தாருங்களேன், நியாயமாரே!


எனது முந்தைய பதிவை ஒரு தடவை பார்த்து விட்டு இதைப் படித்தால் நல்லது; அப்போது தான் இப்பதிவு புரியுமென நினைக்கின்றேன். https://www.facebook.com/sam.george.946/…/10215144486078771/ மன்னிக்கணும். அந்தப் பதிவு FB அட்மினால் நீக்கப்பட்டு விட்டது !

https://www.facebook.com/sam.george.946/posts/10215156554220467   ....என் முதல் பதிவின் தொடராக இப்பதிவை இட்டேன். இன்னும் அது முகநூலில் உள்ளது.
அப்பதிவு இது தான்:

அப்பதிவு எனக்கு வாட்சப்பில் வந்தது... ஒரு கிறித்துவரிடமிருந்து. பார்த்ததும் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. வேண்டுமென்றே அதை முகநூலில் பகிர்ந்தேன். பத்து பேர் அதை share செய்துள்ளனர். மார்ட்டினுக்கு கொஞ்சம் சந்தேகத்தோடு செய்துள்ளார். ஏன் தேவப்பிரியா இதை share செய்துள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. சில இந்து நண்பர்களும், மற்றவர்கள் கிறித்துவர்கள் தான் பகிர்ந்துள்ளனர். நல்ல வேளை, (இந்து) நண்பர்கள் பசுவும், பாண்டியிடமிருந்தும் கேலியான கேள்விகள் மட்டும் வந்தன. அதில் அராபிய எழுத்துகளும், அராபிய ஒலிகளும் வருவதால் ஒரு வேளை ஈமான்கள் யாராவதும் வந்தால் நன்றாக இருந்திருக்கும். (நன்றி சாதிக் சமத்.) கருணை, மகிமை போன்ற கிறித்துவ வார்த்தைகள் வந்ததால் அவர்கள் வராமல் எட்டிப் போயிருக்கலாம். கிறித்துவர்கள் லைக் செய்தார்கள்; மற்றவர்கள் ஏன் ... எதற்காக லைக் செய்திருப்பார்கள் .. தெரியவில்லை. சொல்லுங்களேன்.

ஓராண்டு இடிபாடுகளுக்குள் கிடந்த குழந்தை என்கிறார்கள். சாமி பேரைச் சொல்லி எதைச் சொன்னாலும் நம்பிக்கையாளர்கள் நம்பி விடுவார்கள் போலும். நம் மண்டைக்குள் இருப்பது ஏதும் சொல்லாதா? அல்லது அது சொல்வது மனதிற்குள் ஏறாதா? ஒரு சின்னஞ்சிறு குழந்தை ஓராண்டு இடிபாடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்திருக்க முடியுமா என்று ஒரு வினாடிகூட எப்படி யோசிக்காமல் நம்ப முடிகிறது. அடுத்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்ததாம். குழந்தை என்ன ஒரு சித்தரா? இதையும் எப்படி கண்ணை மூடி நம்புகிறார்கள்?

ஏன் நம்புகிறார்கள் தெரியுமா?

அதன் பின் வந்த வார்த்தைகள் தான். // கல்லிலுள்ள தேரைக்கு உணவளிக்கும் இறைவன் இக்குழந்தைக்கும் உணவளித்துள்ளான். கடவுளின் மகிமையே மகிமை//
ஆம் ... கடவுளின் மகிமை என்று சொன்னால் நம்பாமல் என்ன செய்வது?

சரி... இடிபாட்டிற்குள் ஓராண்டு தண்ணீர் கொடுத்து கடவுள் காப்பாற்றினார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படிச் சொல்லும் போது அக்குழந்தையை வேறு விதமாக அந்தக் கடவுள் காப்பாற்றித் தொலைத்திருக்கலாமே என்ற எண்ணம் தானாக வராதா? ஓராண்டுக்கு கொடூரமாக தனியே அந்தக் குழந்தையை விட்டு ஆனால் தண்ணீர் மட்டும் கொடுத்துக் காப்பாற்றினாராம் அந்தக் கொடூரமான கடவுள்.

// கல்லிலுள்ள தேரைக்கு உணவளிக்கும் இறைவன் இக்குழந்தைக்கும் உணவளித்துள்ளான்.// சரி ... அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஆக உணவளித்தது கடவுள். ஓராண்டு இடிபாட்டுக்குள் வைத்ததும் அதே கருணைக் கடல் தானே. அப்போதே காப்பாற்றியிருக்கலாம் ஒரு புத்திசாலிக் கடவுள்! இப்படியா குழந்தையோடு கொடூரமாக விளையாடுவது

கிறித்துவக் கடவுள் என்றால் அப்படியே ஆகட்டும்என்று சொன்னாலோ, இஸ்லாமியக் கடவுள் என்றால் குன்என்று சொன்னாலோ ஒரு வருடத்திற்குப் பின் குழந்தையைக் கண்டெடுத்தவர்கள் உடனே காப்பாற்றி ரட்சித்திருப்பார்களே!

ஏற்கெனவே சொன்னது தான். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் கிறித்துவர்கள் சிரிப்பார்கள். ஆனால் இப்படி மகிமை, கருணை என்றாலோ ஓடிவந்து அகமகிழ்வார்கள். இன்னொரு உதாரணம் இங்கே ... http://dharumi.blogspot.com/2017/08/blog-post_19.html

ஆக ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் பெயரைச் சொல்லி என்ன சொன்னாலும் நம் நம்பிக்கையாளர்கள் அச்சுக் குண்டாக அதை அப்படியே நம்புவார்கள். எந்த மதக்காரராக இருந்தாலும் இதுதான் நடக்கும்.

ஒரு மகிழ்ச்சி. என்னுடைய பதிவு இப்படியிருக்கிறதே என்று நினைத்து like போட்டவர்கள் பலரும் கேள்வி (thumbs up) எமோஜிபோட்டிருக்கிறார்கள். பரவாயில்லை ... அவர்களுக்கு என் மேல் அத்தனை பலமான நம்பிக்கை. நம்பிக்கையோடு அப்படி எமோஜி போட்டதற்கு மிக்க நன்றி நண்பர்களே.
இதையும் பாருங்கள் மக்களே ...http://dharumi.blogspot.com/2018/04/979.html


நம்பிக்கொண்டேயிருங்கள் மக்களே .......

அராபிய மொழி தெரிந்தோர் அங்கு பேசப்படுவதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?







2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இறை நம்பிக்கை என்பது வேறு. இதுபோன்ற நம்பிக்கைகள் வேறு. நம்மவர்கள் இறைவனின் பெயரைச் சொல்லி தத்தம் ஆதாயத்திற்காக பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

வேகநரி said...

ஒரு வருடம் இடிபாடுகளுக்குள் குழந்தையை வைத்து பராமரித்த கடவுளின் அன்பு உள்ளம் பெரியது. காட் இஸ் கிரேட்.

Post a Comment