Thursday, May 30, 2019

1052. Prabahar Vedamanickam ON DSL






*


பேராசிரியர் சாமுவல் லாரன்ஸ் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று மாலை மரணத்தைத் தழுவினார். நான் மாணவனாகச் சேர்ந்த 80களின் தொடக்கத்தில் அவர் சைக்கிளில் வந்து கவனமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் காட்சி நினைவிலிருக்கிறது. மீண்டும் நான் 87இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது அவர் ஆங்கிலத்துறைத்தலைவராக இருந்தார். முதலாண்டு தமிழ் மாணவர்களுக்கு part I எனப்படும் மொழிப்பாடம் கற்பிக்க வருவார். இப்போதெல்லாம் துறைத்தலைவர்கள் முதுகலை தவிர வேறு வகுப்புகளுக்குச் செல்லமாட்டார்கள். ஒருநாள் அதுபற்றிக்கேட்டபோது ' அவர்களுக்குத்தான் அனுபவமிக்க நம்மை போன்ற ஆசிரியர்கள் தேவை' என்றார். 
பழைய தலைமுறை ஆசிரியர். காலையில் வந்து வளாகத்தைவிட்டு கடைசியில் போகும் சிலரில் ஒருவராக இருப்பார். ஓய்வுக்குப் பின் கல்லூரிக்கு ஏற்பட்ட பின்னடைவால் மிகுந்த மனப்பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். நல்லவேளை .. இன்று சுயநினைவோடு இருந்திருந்தால் தேசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை கேள்வியுற்று மிகுந்த மனத்துயரம் அடைந்திருப்பார். 

நன்றி சார். உங்களோடு பேசிக்கழித்த பொழுதுகளுக்கு. போய்வாருங்கள்

No comments:

Post a Comment