
*
அசராது வெயிலடித்தாலும் அயராது கடைகண்ணிக்கு இன்று போயே ஆவது என்று நினைத்தேன். பாதுகாவலராக பெரிய பெண் உடன் சேர்ந்தாள். கடைகண்ணி முடித்ததும் தாகம் தீர்க்க கடையொன்றில் உட்கார்ந்தோம். மகள் என்னைப் படம் பிடித்தாள். அனுப்பி வை என்றேன். வீட்டுக்கு வந்ததும் பார்த்தேன். என் படத்தோடு இன்னொரு படத்தையும் சேர்த்து வைத்து அனுப்பியிருந்தாள்.
என் முன் ஒரு கேள்வி.
எதற்காக அந்த இன்னொரு படம். இரண்டு பதில் வந்தது:
1. காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பார்களே ... அதே போல் அவளுக்கு அவள் அப்பா படம் பிடித்தது. அனுப்பியிருக்கிறாள்.
2. புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக் கொண்டதோ என்றும் எனக்குப் பட்டது.
No comments:
Post a Comment