Sunday, October 29, 2006

185. அமெரிக்கத் துளிகள்

இதெல்லாம் எழுதட்டா சிலர் மாதிரியெல்லாம் எப்படித்தான் நாங்கெல்லாம் அமெரிக்க போய்வந்த கதையை அரங்கேற்றுகிறது?

நியூயார்க் பக்கம்; நியூபோர்ட் என்ற இடத்திற்குப் பக்கத்தில பலமாடிக் குடியிருப்பில் மாணவ-நண்பன் - அவன் இன்னும் சின்னாளில் 'காட்டான்' என்ற பெயரில் பதிவுலகத்தில் நுழைவதாகத் திட்டம் - அவனது விருந்தாளியாக ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஒரு நாள் அவனது ஃப்ளாட்டில் நுழையப்போகும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்மணியும், அவரது குட்டிக் குழந்தையொன்றும் வெளியே வந்தார்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்து சிரித்து, 'டாடா'காண்பித்து என் 'அயலானை அன்பு செய்' என்ற தத்துவத்தை நிலைநாட்டினேன். காட்டான் ஒண்ணுமே கண்டுக்கவில்லை. ஏன்'பா என்று கேட்டேன். இதெல்லாம் எதுக்கு; நம்ம ஜோலிய நாம பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றான். சரி இது ஒரு அமெரிக்கத்தனம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு ஒரு நாள் மாலை ஸ்டார் பக்ஸ் போனோமா, அங்கே காஃபி குடித்துவிட்டு, அப்போதுதான் முதல் முறையாக நம்ம ஊரில் பச்சைப் பழம், மோரிஸ் பழம் என்றெல்லாம் சொல்லுவோமே அதே பழம், ஆனால் அழகு மஞ்சள் கலரில் வழுவழுன்னு இருந்தது. அதுக்கு முந்தி அந்த மாதிரி பழம் நம்ம ஊர்ல பார்த்ததில்லை. ஆனா அதுக்குப் பிறகு முதலில் பெங்களூரில் பார்த்தேன். அன்று அத வாங்கலாமான்னு நானும் காட்டானும் பேசினோம். அப்போ கவுண்டரிலிருந்து 'fresh பழம்தான் ,வாங்குங்க' அப்டின்னு தமிழில் ஒரு குரல். 'ஆ'ன்னு வாயப் பொழந்து பேசினவரைப் பார்த்தேன். தமிழ் மூஞ்சி; ரொம்ப friendly-ஆ எங்களைப் பார்த்தார். ஆனால் நம்ம காட்டானோ கண்டுக்கவேயில்லை. கடையை விட்டு வெளியே வந்ததும் 'ஏன்'பா, கண்டுக்கவேயில்லை' என்றேன். ஆமா, இவன் இன்னைக்கி இங்க; நாளைக்கி எங்கேயோ; இதில் என்ன பெரிசா கண்டுக்கிறது' அப்டின்னான். அடுத்த அமெரிக்கத்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் Midway Mall அப்டின்னு ஒரு இடம். சனி ஞாயிறுகளில் நானும் நம்ம சைனா நண்பரும் அங்கு சும்மாவாவது போவதுண்டு. அங்கே போய் ஒவ்வொரு சாமான்களாக எடுத்துப் பார்ப்போம். Made in China என்றுதான் நூத்துக்கு தொண்ணூரு பொருட்களில் இருக்கும் (இப்போ நம்ம ஊர்லயும் அப்படி ஆகிப் போச்சு; அப்போ அது ஒரு பிரமிப்பு) அவர் பெருமையாக அதை எனக்குக் காண்பிப்பார். அதன்பிறகு நம்ம ஊர் காசிலேயும், அவரது காசிலேயும் டாலரின் மதிப்புக்கு ஈடாக எவ்வளவு என்று பார்ப்போம். அதற்கு அவர் அவரது palmtop எடுத்து on செய்வதற்குள் நான் அவரது சைனா காசுக்கு (எட்டால் பெருக்க வேண்டியதிருந்தது - நமக்கு எட்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஜுஜுபியா) டக்குன்னு சொல்லிடுவேன். அவருக்கோ அப்படி ஒரு ஆச்சரியமா இருக்கும். உங்க காசில எவ்வளவு என்பார். அப்போ டாலுருக்கு 48 ரூபாய் என்று நினைக்கிறேன். 50-ஆல் பெருக்கி விட வேண்டியதுதானே; அடுத்த ஜுஜுபி வேலை.ஆனால் நண்பருக்கு பயங்கர ஆச்சரியமா இருக்கும்; இதலாலதான் இந்தியர்கள் software-ல் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பார். அது ஒரு கதை. நம்ம கதைக்கு இப்போ வருவோம். அந்த மாதிரி மால் ஒன்றுக்குள் நுழைந்து கடை கடையாய் சுற்றிக்கிட்டு இருந்தப்போ, ஒரு 45-50 வயது அம்மா ஒருவர் - சேலையில்; காரில் இறங்கி கடைக்குள் வந்தார்; என் மூஞ்சைப் பார்த்ததும் நான் அவர்கள் உடையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டோம். எனக்கு அவர்களைப் பார்த்து ஒரு பிரமிப்பு. இங்க பார்ரா, வெள்ளைக்காரன் ஊரில் நம்ம ஊர் அம்மா...கார்ல வந்து... ஒரு மாதிரியாக மூக்கின் மேல் விரல் வைக்காமல் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அவர்கள் ஒரு ராயல் லுக் விட்டார்கள். ஆனாலும் அப்பப்போ திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். ஏதாவது சிரிச்சி வச்சா பேசலாம்னு நினச்சேன். ஆனால் அம்மணி அப்படி கெத்தாக இருந்துவிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த அமெரிக்கத்தனம்...

சிக்காகோவிலும் இதே போல்தான். சிக்காக்கோவிலிருந்து நம்ம சென்னை எலக்ட்ரிக் ரயில் மாதிரி ஒன்றில் - ஆனால் கூட்டமே கிடையாது - பக்கத்து suburb-க்குச் சென்றேன் இன்னொரு நண்பரோடு. முதல் வார்னிங்காக அவர் சொன்னது - ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருக்கும்போது எந்தக் காரணம் கொண்டும் black என்ற சொல்லை ஆங்கிலத்தில் சொல்லிவிடவேண்ட்டாம் என்றார். அடுத்தது - நம்ம ஊர் ஆளுக யாரும் இருந்தாலும் கண்டுக்க வேண்டாம்; ஏன்னா அவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க என்றார். அதே போல் எங்கள் சீட்டுக்கு சில இடம் தள்ளி நம்ம தமிழ் மூஞ்சி ஒன்று ஆங்கில நாவலைக் கையில் வைத்துக்கொண்டு, சீரியஸாக வாசித்துக் கொண்டு இருந்தது. ஓரக் கண்ணால் பார்த்தேன். அந்தக் கேசு எங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ரெகுலராக ரயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார். நான் தங்கியிருந்த இடத்தில் தமிழில் பேச ஆள் கிடைக்காமல், வாடி வதங்கி இருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. ஒன்றுமில்லையென்றாலும் ஒரு மணி நேரப் பயணத்தில் பேச்சுத் துணையாகக் கூட ஒரு தமிழனை இன்னொரு தமிழன் கண்டு கொள்வதில்லையென்பது விநோதமாயிருந்தது; இருக்கிறது.

இந்த அனுபவத்திற்கு முன் தங்கை ஒருத்தி குடும்பத்தோடு இரண்டு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலிருந்து வந்த போது, எடுத்திருந்த வீடியோ, போட்டோ எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எல்லாம் அவர்கள் கம்பெனியில் இங்கிருந்து சென்று வேலை பார்க்கும் கூட்டத்தைத் தவிர ஒரு ஆள் கூட வேறு மாநிலத்து நண்பர்களாகவோ, அமெரிக்க நண்பர்களாகவோ இல்லாது இருந்ததைப் பார்த்த போதும் மிக்க ஆச்சரியமாக இருந்தது.

இப்போ 20 நாளைக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த சின்ன மகள் அப்பப்போ தொலைபேசியில் பேசுவாளா...அவள் சொன்னது: பார்க்கிலோ, கடைகளிலோ, அவ்வளவு ஏன் கிறித்துவக் கோயில்களிலோ எதிர்த்தாற்போல் அமெரிக்கர்கள் வந்தால் ஒரு ஹலோ, அல்லது ஒரு புன்சிரிப்பு. ஆனால் நம்ம ஊர் ஆட்கள் நம்மை நேருக்கு நேர் - கண்ணோடு கண் - தற்செயலாகப் பார்த்து விட்டாலும் கூட ஒரு ஜடப்பொருளைப் பார்க்கும் reaction-ஓடு கடந்து சென்று விடுகிறார்கள்; ஏன் இப்படி என்றாள். அதுதான் அமெரிக்கத்தனம் என்றுதான் சொல்ல முடிந்தது.

அமெரிக்கக்காரர்களுக்கு ஒரு வேளை பதில் தெரியலாமேவென இங்கே இதைப் பதிவு செய்கிறேன். தருமியல்லவா...அதனால் ஒரு கேள்வி. வழக்கமாக எனக்கு யாரும் மதுரைக்காரர் ஒருவர் பதிவரெனத் தெரிந்தால் ஒரு பாசம்; அட, நெல்லைக்காரர் என்றால் கூட பிறந்த மண் பாசம் பெருக்கெடுக்கிறது. அடுத்த மாநிலத்தில் நம் மாநிலத்தவரைப் பார்க்கும்போதும் ஒரு பாச ஊற்று பொங்கிவிடுகிறது; பொங்கியிருக்கிறது. அப்படியானால் அடுத்த நாட்டில் நம் நாட்டினர் என்றாலே அந்தப் பாசம் வராதா? அதுவும் தமிழ்நாட்டுக்காரன்/ர்/ரி என்று தெரிந்தாலும் எப்படி, ஏன் கண்டுக்காமல் போகி(றீ)றார்களாம்? கண்டுக்கிட்டா அத ஒரு மாதிரி தப்பாதான் எடுத்துக்கொள்கி(றீ)றார்களாமே ஏன்?


.
.

Wednesday, October 25, 2006

184. BLOGGERS' MEET AT MADURAI - 4

பலவும் பேசினோம். ஞான வெட்டியான் தன் பெயர்க்காரணம் பற்றி விளக்கினார். தான் எழுதிவரும் விஷயங்களின் lowdown ஒன்று கொடுத்தார்.பிபுரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள் என்று அவர் சொன்னது என் மரமண்டைக்கு ஏறவில்லை. அந்த மாதிரி விஷயங்கள் பற்றி அக்கு வேறு ஆணி வேறு என்று பேசியவருக்கு 'உள்குத்து', 'வெளிக்குத்து', 'நேர்குத்து' போன்ற நம்முடைய bloggers' parlance பற்றி ராம் பாடம் எடுக்கும்படியாயிற்று. கற்றது கைமண் அளவு...! அதையொட்டி,வரவனையானின் ப்ளாக்கர்களுக்கான பங்களிப்பான 'சொ.செ.சூ.' க்காக ஒரு சிறப்பு நன்றி கூறப்பட்டது. வரவனையான் அந்தச் சொற்றொடரை patent / copyright எடுக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தார்.

From L to R:





ராம் & ஞானவெட்டியான்



பிரபு ராஜதுரை தான் மரத்தடியில் எழுதிய 'அந்தக் காலத்தில...' நினைவுகளைத் தொகுத்தளித்தார். அவர் சொல்லச் சொல்ல நம் தமிழ் பதிவர்களின் எழுத்திலும், எண்ணங்களிலும் ஏற்பட்டு வரும் பரிணாமம் (is it retrogressive..?) கண்முன் விரிந்தது. தனிமனித சாடல், உள்குத்து வைத்து எழுதுதல், குழு மனப்பான்மை இவை எல்லாம் அப்போது இந்த அளவு இல்லை என்று தெரிந்தது. எனக்கு 'மணிக்கொடி காலம்' என்று பழைய பெரிய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசும்போது சொல்வார்களே அதேபோல இந்த 'மரத்தடி'காலம் என்று ஒன்று வலைப்பதிவுலகத்தில் இருந்ததாகத் தோன்றியது.







முத்து(தமிழினி) & ராஜதுரை



அப்சல் விவகாரம் தலைதூக்கியது. பிரபு ராஜதுரையின் அலசலை அடுத்து நீண்ட விவாதம். நண்பர் சைலஸும் சேர்ந்து தீவிரமாகப் பேசினோம். சைலஸின் 'தீவிரத்தை'ப் பார்த்து அவருக்கு வரவனையான் 'ப்ரொபசர் ரமணா' என்று ஒரு பட்டப் பெயர் வைத்ததாகக் கடைசியில் சொன்னார். முடிவு என்று எடுப்பதற்காகவா நாம் விவாதிப்போம். இப்போதும் அது போலவே, முடிவுக்கு வராத நீள் விவாதமாக நடந்து முடிந்தது.







ராஜ்வனஜ்; ராம் & ஞானவெட்டியான்



அடுத்து, இடப்பங்கீடு பற்றிய விவாதமாக அமைந்தது. நான் அங்கே சொன்னதைப் பொதுவில் வைக்க விரும்புகிறேன். reservation-க்கு ஆதரவாக இருப்பவர்களாவது இனி இட ஒதுக்கீடு என்பதற்குப் பதில் "இடப்பங்கீடு" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுகிறேன். காரணம் தெரியவேண்டுவோர் அங்கே பார்க்கவும். மறுபடியும் ball was in the court of prabu rajadurai. அடித்து ஆடினார். புதிதாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு முடிந்தபின் அதன் முடிவு பற்றி தன் பதிவொன்றில் விளக்கம் தர இசைந்தார். இடப்பங்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பும், அவர்களது உள்மன எண்ணங்களும், காரணங்களும் பற்றி சிறிதே விவாதித்தோம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்ற ஏற்கெனவே தெரிந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.








லி.ஸ்.வித்யா, ஜிரா & மஹேஷ்


வாங்கி வைத்திருந்த மதுரை மண்ணுக்குரிய பாட்டில் பானமான Bovonto சுற்றில் வர, புத்திசாலித்தனத்தோடு முன்னேற்பாட்டோடு வந்திருந்த மஹேஷ் அதிரசம், முறுக்கு என்று அசத்திவிட்டார். அதிரசம் டாப்! அவ்ளோ soft!

வரவனையான் சுற்றி சுற்றி வந்து எங்களை எல்லாம் க்ளிக்கினார்; நீள் படமும் எடுத்தார் - அதாங்க வீடியோ. அவர் பதிவில் வரும் என்று நினைக்கிறேன். அவரையும், சுகுணாவையும் நான் எடுத்த படம் என்னவாயிற்றென்று தெரியாமல் போச்சு.அவர்கள் இருவரின் படம் வர என் பதிவுகள் கொடுப்பினை இல்லாமல் போச்சு.ஜிரா கூட்டம் ஆரம்பித்து 40-45 நிமிடங்களில் புறப்பட்டு விட்டார். விரைவில் கிளம்புவேன் என்று சொன்ன வித்யா கடைசிவரை இருந்ததே கூட்டம் சென்ற போக்கையும், சிறப்பையும் - it was so binding - உங்களுக்குச் சொல்லாதா என்ன?

ஒரு வழியாக 3 மணிக்குச் சரியாக ஆரம்பித்து 6 மணிக்கு கூட்டத்தை முடித்து, இருந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். அங்கிருந்து, ஞானவெட்டியான், வித்யா, ராஜதுரை, ராம், மஹேஷ் விடைபெற்றுச் செல்ல மற்றவர்கள் இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் முத்துவின் 'மேலிடத்திலிருந்து' அவர் அன்றைய மாலை ரயிலில் செல்லவேண்டியதிருப்பது பற்றிய நினைவூட்டலும், இன்ன பிற கட்டளைகளும் வந்ததால் எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டோம். முத்துவை அவர் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, நான்,ராஜ்வனஜ்,வரவனையான், அவரது கவிஞ நண்பர் சுகுணாவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் ஒரு 'மண்டகப்படி' (இது ஒரு மதுரை வார்த்தை. விளக்கம் கேட்டு பின்னூட்டமிடுபவர்களுக்குப் பதில் விளக்கம் கொடுக்கப்படும்). நிஜ டீ குடித்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் பதிவுகள், பதிவர்கள், பதிவரசியல் எல்லாமுமாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எட்டரை மணிக்கு விடைபெற்றொம்.

நான் கூட்டத்தில் சொல்ல நினைத்து வைத்திருந்ததைச் சொல்லாமலே விட்டு விட்டேன். அது என்னவென்று பொதுவில் வைத்து விடுகிறேனே. உண்மையிலேயே பதிவர்கள் நீங்கள் பலரும் இளைஞர்கள்; நல்ல சிந்தனா சக்தியும், தங்களூக்கென்று ஒரு கருத்தும், அந்தக் கருத்தைத் தாங்க நிரம்ப விஷய ஞானமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதில் வயதில் மட்டும் நம் பதிவுலகத்திலேயே மூத்த எனக்கு நிரம்ப திருப்தி. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நிம்மதிப் பெருமூச்சு. அதனாலேயே இந்தப் பதிவருலகம் ஒரு think tank ஆக உருவெடுக்க வேண்டும். நம் தமிழ் நாட்டு அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு வழிகாட்டியாக இப்பதிவுலகம் இருக்க வேண்டுமென எனக்கொரு ஆசை. ஆனால், அப்சல் விஷயம் அலசப்படும்போது என் ஆசை நிராசையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் என்று ஒரு கருத்து இருப்பதால் நாம் எல்லோரும் எல்லா விஷயத்திலுமே பலதரப்பட்டக் கருத்துக்களோடுதான் இருப்போம்; ஒருமித்த கருத்து என்பது வருவதறிது என்ற நிஜம் புரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி பதிவுலகம் ஒரு think tank ஆக முடியும் என்ற வினா என் மனதில் எழுந்தது. அதனால் அக்கூட்டத்தில் நான் பேச நினைத்ததை பேசாமல் விடுத்தேன்.

உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது?


ஏனைய பதிவர் கூட்ட பதிவுகள்:

*வரவனையானின் பதிவு & வீடியோ: மதுரை...மதுரை.....மதுரோய்ய்ய்ய்ய்

*முத்து(தமிழினி): மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

*ராம் : மதுரை வலைப்பதிவர் சந்திப்பு



.
.

Monday, October 23, 2006

183. BLOGGERS' MEET AT MADURAI - 3

வந்திருந்தோர்:

லிவிங் ஸ்மைல் வித்யா
பிரபு ராஜதுரை
ராம்

முத்து(தமிழினி)
மஹேஷ்

ஞானவெட்டியான்
வரவனையான்
சுகுணா திவாகர்

ராஜ்வனஜ்
ஜீரா

Dr.சைலஸ்

யார் யாரென நீங்களே கொஞ்சம் மனக்கணக்கு போட்டு வையுங்களேன்!



அமெரிக்கன் கல்லூரிக்கு நான் வந்து சேர்வதற்குள் முதல் ஆளாய் முத்து(தமிழினி) வந்து சேர்ந்திருந்தார். வெளியில் மரத்தடி பெஞ்சுகளில் கூட முடிவு செய்திருந்தும், மழை கொஞ்சம் விளையாட்டு காட்டியது - வந்தாலும் வருவேன்; வராமல் போனாலும் போயிருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று அறைச்சாவி ஒன்றும் தயாராக வைத்திருந்தோம். துணிந்து வெளியிலேயே அமரலாம் என்று முடிவு கட்டி முடிப்பதற்குள் ஒவ்வொரு பதிவராக வந்து சேர்ந்தார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னையோ, முத்துவையோ முன்பின் பார்த்திராத பதிவர்களே அதிகம் என்பதால் நாங்கள் வாயிலுக்கு அடுத்தே நின்றாலும், வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே வாயில்காப்போரைத்தாண்டி உள்ளே வந்து, கைத்தொலிபேசியில் அழைப்பார்கள். நான் தொலைபேசியை எடுத்துப் பேசினால் அவர்கள் அனேகமாக எதிர்த்தாற்போல் நிற்பார்கள்.

எங்களுக்கு அடுத்தபடியாக ஞானவெட்டியான் தன் வாடிக்கையான ஐய்யப்பனின் கால் டாக்சியில் வந்து இறங்கினார். முத்துவுக்கு அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடத்திலிருந்து அந்த இடத்தை கலகலப்பாக்கிக் கொண்டு இருந்தார் ஞானவெட்டியான்.

கூட்டம் மாலை 3 மணியென்று குறிப்பிட்டிருந்திருந்தேன்; ஆனால் காலையில் 11 மணிக்கே ஒரு போன் வீட்டுக்கு. பேசியது யாரென்றேன். "பாகு" என்று 'ஒரு சொல்'. அவ்வளவு எளிதில் மொடாக்கு எனக்குப் புரியுமா என்ன? நோட்ஸ் கேட்டேன்; பாகு அப்டிங்கிறதுக்கு ஜீரா அப்படின்னும் சொல்லலாம் என்றது மறுமுனை. பிடிபட்டது. ஆஹா! சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஆள் புதுசா சேருகிறாரென்று நினைத்து, எப்போ வந்தீங்க; மாலையில வந்துருவீங்கல்ல என்று கேட்டதும் மறுமுனைக்குத் தடுமாற்றம். பிறகுதான் தான் தற்செயலாக மதுரை வந்திருப்பதாகவும், பதிவர் கூட்டம் பற்றித் தெரியாது என்றும் சொல்ல, நான் மாலை வந்து விடுங்கள் என்றேன். தலைகாட்டுவேன் என்றார். அதேபோல் 3 மணிக்கு முன்பே ஞானவெட்டியானுக்கு அடுத்து வந்து இறங்கினார் ஜி.ராகவன்.


அடுத்து ஒரு போன். ராஜா என்று ஒரு குரல்; புரியவில்லை. பிறகு ராஜ்வனஜ் என்றதும்தான் புரிந்தது. எனக்கு நேரே நின்று கொண்டுதான் பேசிக்கொண்டிருந்தார். தில்லியில் வேலை செய்யும் இவர், ஓராண்டு கழித்து வீட்டுக்கு இருவார விடுமுறையில் வரும் இவர் அதில் ஒரு நாளை பதிவர் கூட்டத்திற்காக ஒதுக்கி கோவையிலிருந்து வந்தது எனக்கு மிகவும் பிரமிப்பாயிருந்தது. முன்பதிவில் சொன்ன the mystery of that chemistry தான் நினைவுக்கு வருகிறது. அவரை அடுத்து ஒவ்வொருவராக வர, கல்பெஞ்சுகளுக்குப் போய் சேர்ந்தோம்.அங்கே நண்பரும், உடன்வேலை பார்த்தவரும் இப்போது ஒரு விடுதி காப்பாளராகவும் இருக்கும் முனைவர் சைலஸ் எங்களோடு சேர்ந்து கொண்டார். அதைப் போலவே வரவனையானோடு அவரது நண்பர் ;மிதக்கும் வெளி' கவிஞர் சுகுணாவும் வந்திருந்தார்.

Sunday, October 22, 2006

182. BLOGGERS' MEET AT MADURAI - 2

எப்படிங்க இப்படி..? எப்படி நமக்குள் இப்படி ஒரு உறவு? புரியவேயில்லை...The chemistry of our relationship is a mystery.

பின் எப்படி இந்த கீழ்க்கண்ட நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது...நீங்களே சொல்லுங்கள்.

1. 3 மணிக்கு சந்திப்பதாகக் கூறியிருந்தோம். சரியாக 3 மணிக்கு நாங்கள் நால்வர் மட்டுமே சேர்ந்திருந்தோம். அப்போது ஒரு தொலை பேசி அழைப்பு எனக்கு. அடுத்த முனையிலிருந்து - சென்னையிலிருந்து சிவஞானம்ஜி. எங்கள் கூட்டம் இனிது நடந்தேற வாழ்த்துக்கள் கூறினார். the mysterious chemistry?!

2. 8 பேர் வந்துவிட கல்பெஞ்சுகளில் போய் உட்காருகிறோம்... அடுத்த அழைப்பு முத்து(தமிழினி)யின் கைத்தொலைபேசிக்கு. அழைத்தவர் ஓகை. முத்துவிடம் மட்டும் பேசாது, முத்துவின் தொலைபேசி வலம் வர, வந்துள்ள ஓவ்வொருவரிடமும் சில நிமிடங்கள் பேசி வாழ்த்து கூறி விடை பெற்றார் ஓகை
- the mysterious chemistry?!

3. நாங்கள் மொத்தம் 10 பதிவர்கள் சேர்ந்து கூட்டம் களை கட்டுகிறது... இன்னொரு overseas call..from Australia..பொட்டீக்கடையிடமிருந்து வரவனையானுக்கு . நானும் அவரிடம் பேசுகிறேன். வரலாறு படம் பார்த்துக்கொண்டே இந்த அழைப்பைக் கொடுத்து எங்கள் கூட்டத்திற்கு வாழ்த்து கூறுகிறார். - the mysterious chemistry works again ?!

4. இதுவரை எனக்கு மட்டுமே வெகு சில பின்னூட்டங்கள் இட்டுள்ள non-பதிவர் நாராயணசாமி என்னும் சின்னக் கடப்பரை சென்னையிலிருந்து என்னை அழைக்கிறார் - மதுரையில் இருந்திருந்தால் எப்படி தானும் கலந்து கொண்டிருக்க முடியும் என்று சொல்லி வாழ்த்து சொல்லுகிறார் - the mysterious chemistry works again and agian ?!



ஒரு பின்குறிப்பு:
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!

Saturday, October 21, 2006

181. MADURAI BLOGGERS' MEET - INVITATION

அன்புடையீர்,

தயவு செய்து இந்த belated அழைப்பிற்காக மன்னித்து தவறாது

நாளை 22.10.06 ஞாயிற்றுக் கிழமையன்று

மாலை 3 மணிக்கு

மதுரை அமெரிக்கன் கல்லூரி - canteen முன்னாலுள்ள கல்பெஞ்சுகளுக்கு


வந்துவிடுங்கள்.

மேலும் என்னையோ, முத்து(தமிழினி)யையோ தொலைபேசியில் அழைக்க:

என் எண்: 94438 31320
முத்து எண்: 98459 83065