Sunday, June 05, 2005

18. யாருக்கு வேண்டும் இப்படி ஒரு சி.பி.ஐ.?

போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் விடுவிப்பு; சரியான ஆதாரங்கள் சி.பி.ஐ. தரவில்லை; இந்த வழக்கிற்கான செலவு 250 கோடி அல்ல, பத்து கோடிதான்; - சென்ற வாரத்தில் அடுத்தடுத்த பத்திரிகைச் செய்திகள்.

இது ஒன்றும் புதிது அல்ல. சி.பி.ஐ. தொடுத்த வழக்குகள், அதுவும் சிறப்பாக பெரிய அரசியல் புள்ளிகள் தொடர்புள்ள வழக்குகள் ஏதும் வெற்றி பெற்றதாகவே தெரியவில்லை. Accountability (சரியான தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை; உதவவும் ) என்று எதுவும் சி.பி.ஐ.-க்கு கிடையாதா?
அந்த அமைப்பிற்காகச் செலவிடப்படும் பொதுப்பணம் எல்லாம் வீண் என்றால் எதற்கு அந்த அமைப்பு?
அங்கு பெரிய பொறுப்பில் வேலை பார்க்கும் பெரிய மனிதர்களுக்கு சுய கெளரவமே இருக்காதா?
எதிர் கட்சிக்காரங்களை அவ்வப்பொழுது பயமுறுத்துவதற்கு மட்டுமே இந்த அமைப்பா?

2 comments:

J.P Josephine Baba said...

உண்மை சிந்திக்க வேண்டிய கருத்து, போலிஸ் சிபீஐ எல்லாம் சாதாரண மனிதர்களுக்கு தான்!!!

தருமி said...

இப்போது நடக்கும் ஸ்பெக்ட்ரம், CWG ஊழல் வழக்குகள் இதே பாதையில்தான் போகுமென நினைக்கிறே.

Post a Comment