Tuesday, April 25, 2006

155. HAIL ‘THE HINDU’ !

Image and video hosting by TinyPic

THE HINDU பேப்பரை இன்னைக்கிக் காலையில் பார்த்ததும் அப்படி ஓர் அதிர்ச்சி; சந்தோஷமும் கூட. எப்படியாவது நாலு பேத்துக்காவது அதைப் பற்றிச் சொல்லிடணும்னு ஒரே ‘இது’! அதனாலதான் இந்த ‘இது’.

வழக்கம்போல முதல் பக்கத்தை மேஞ்சிட்டு, ஸ்போர்ட்ஸ் பக்கம் போனா ஆச்சரியம்னா அப்படி ஒரு ஆச்சரியம். வழக்கமா 20,21-ம் பக்கங்களில் கிரிக்கெட்டின் தனி ஆவர்த்தனம்தான் இருக்கும். கிரிக்கெட் செய்தி இல்லாவிட்டாலும், டெண்டுல்கர் வீட்டு நாயின் வலது காலின் இடது பக்கத்தில் உள்ள முதல் விரலின் கடைசி எலும்பு பிசகியுள்ளதற்காக எடுக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகள் பற்றியாவது இருக்கும்.

இன்றைக்கு அங்கங்கே கொஞ்சம் கிரிக்கெட் செய்தி இருந்தாலும் முக்கிய செய்திகளாகக் கால்பந்து பற்றிய செய்திகள் முதலிடம் பெற்றிருந்தன. என்ன ஆச்சு, ஹிண்டுவுக்கு? உலகக் கோப்பைக்காக இருக்குமோவென்று நினைத்தேன். அப்படியும் தெரியவில்லை. உலகக் கோப்பை என்றால் நம் திருநாட்டைப் பொருத்தவரை 8-10 நாடுகள் (அதில் 3-4 உப்புக்குச் சப்பாணி நாடுகள்!) சேர்ந்து, சட்டைகூட நனையாத விளையாட்டு ஒன்று விளையாடுவார்களே, அதானே உலகக் கோப்பை பந்தயம். என்னன்னே புரியலை. அதைவிடவும் தெண்டுல்கரின் பிறந்த நாள் விழா புகைப்படம் 19-பக்கம் வந்திருந்தது. அது எப்படி முதல் பக்கத்தில் வரவில்லையென்ற ஆச்சரியத்தில் மூழ்கியவன் இந்த நேரம் வரை (மாலை 4.23) எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

யாராவது கைதூக்கி உடுங்கப்பா, please!





வால் செய்தி: நேற்று இரவு சன் செய்திகள் 8 - 8.30 பார்த்தேன். விளையாட்டுச் செய்திகள் என்ற பகுதி வந்தது. டெண்டுல்கர் பிறந்த நாள் கேக் தானே வெட்டி (பக்கத்தில் யாருமே இல்லை ?!) தானே சாப்பிட்டதைக் காட்டி அதையே செய்தியாகச் சொல்லி முடித்தது.
அதுதான் கொள்கைப் பிடிப்பு என்பது!!







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 25 2006 04:34 pm | Uncategorized |
21 Responses
துளசி கோபால் Says:
April 25th, 2006 at 5:53 pm
தருமி,

தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரம் ‘ஜாலி’யாப் போய்க்கிட்டு இருக்கறதை கவனிக்கிற ஜோர்லே
தெண்டூல்கரை மறந்துட்டாங்க போல.

TheKa Says:
April 25th, 2006 at 8:11 pm
ஹா…ஹா…ஹா…தருமி சார், தருமி சார்…அடப் போங்க சார்…

Ganesh Says:
April 25th, 2006 at 9:12 pm
Kalakkiputtinga

Sivabalan V Says:
April 25th, 2006 at 9:17 pm
Photo is good!

To my knowledge, The Hindu gives importance to other sports/games also (I do agree they give more importance to Cricket, but it is order of the day)

But I hardly find any newspaper in India to give good coverage on Sports/games. It is the status. I do not see any major change on this in near future.

ஜெயக்குமார் Says:
April 25th, 2006 at 9:45 pm
ஹிந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு (ராம்) இலங்கை அரசு லங்காரத்னா விருது வழங்கி கவுரவித்தது எதற்கு என்று தெரியுமா?

அங்குள்ள தமிழ்மக்களின் மீது அந்த நாட்டு ரானுவம் நடத்தும் அராஜகங்களை நம்மக்களுக்கு திரித்துக்கூறுவதற்காகத்தான்.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை ரானுவத்தால் சில university மாணவர்கள் நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது அங்கு இருந்த ஹிந்து நாளேட்டின் நிருபர்கள் மாணவர்கள் வெடிகுண்டுகளை எடுத்துச்செல்லும் போது அவர்களும் அசாதாரணத்தால் வெடித்து உயிரிளந்தனர் என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.

கோ.இராகவன் Says:
April 25th, 2006 at 9:52 pm
டெண்டுல்கர் பிறந்த நாள் கொண்டாடுறது ஒங்களுக்கெல்லாம் பெரிய விஷயமா இருக்கு……ம்ம்ம்….அதுவும் தேர்தல் வந்திருக்கிறப்ப…………

ஜவஹர் Says:
April 25th, 2006 at 11:48 pm
அன்புள்ள தருமி,
இப்போதுதான் பார்த்தேன்.
மணி 11.30 காலை.
இது பசிபிக் நேரம்.
நன்றாகச் சொன்னீர்கள்.
கருவிப்பட்டையில் தலைப்பு நீங்கள் தந்ததா? படம் ஒரு கவிதை என்றால், விவரித்த விதம் ஒரு சிறுகதை.
பொருத்தம் என்றால் அப்படியொரு பொருத்தம். ஜமாயுங்கள்.
அன்புடன்,
ஜவஹர்.

தருமி Says:
April 26th, 2006 at 11:53 am
துளசி,
எங்க மறந்தாங்க…கொஞ்சம் ஓரங்கட்டியிருக்காங்க…ஆமா, வயசு ஆயிரிச்சில்ல…:???:

தருமி Says:
April 26th, 2006 at 12:40 pm
தெக்கா,
அது என்ன தெக்கிக்காட்டான்? சரியான பெயர் தெக்கத்திக்காட்டான் என்றுதான இருக்கணும்? அப்படித்தான் சிலபேரு என்ன கூப்பிட்டதுண்டு..

தருமி Says:
April 26th, 2006 at 12:53 pm
கணேஷ்,
ரொம்ப நன்றி. நீங்க முதல் தடவையா வர்ரீங்களோ? எங்க இருந்து, என்ன அப்டிங்கிறதெல்லாம் தெரியலையே!

தருமி Says:
April 26th, 2006 at 12:54 pm
சிவபாலன்,
“it is order of the day)” // -
- இல்லீங்க; இது disorder of decades !

தருமி Says:
April 26th, 2006 at 12:55 pm
ஜீரா,
கதைய மாத்துறீங்களே அய்யா!

தருமி Says:
April 26th, 2006 at 12:55 pm
ஜவஹர்,
படப் பொருத்தத்துக்குத் தந்த பாராட்டு செம ஜில்… நன்றி

பொன்ஸ் Says:
April 27th, 2006 at 5:34 pm
டெண்டுல்கர்னு சொன்னா, எனக்கு நினைவு வருவது ஒண்ணே ஒண்ணு தான்.. மெனக்கட்டு பம்பாய் போய், டெண்டுல்கர்ஸில் சாப்பிட வேண்டும் என்று ஒரு நாள் போனோம்; காலை மாலை ரெண்டு வேளையும் போனோம், எங்க கெட்ட நேரம் அவங்க அதைத் திறக்கவே இல்லை..

தருமி, இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க, உங்க படத்துக்கும் பதிவுக்கும் உள்ள சம்பந்தம் தான்…

தருமி Says:
April 27th, 2006 at 9:50 pm
பொன்ஸ்,
சரியான சாப்பாட்டு ராமி - அப்டித்தான் வேணும்

நீங்களும் இருக்கீங்களே…மேல ஜவஹர் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க

பொன்ஸ் Says:
April 28th, 2006 at 5:55 pm
//சரியான சாப்பாட்டு ராமி //

கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க.. மதுரைக்கு வந்து உங்களைப் பாக்காம, நல்ல, ஜிகிர் தண்டா என்ன, பதநீர் என்ன, பன்னீர் சோடா என்ன.. நல்ல ஊருங்க உங்க ஊரு

கமல் Says:
April 28th, 2006 at 7:40 pm
வந்து விட்டேன் ஐயா! (போன பதிவுல உங்க பின்னூட்டத்தை இப்பத்தான் படிச்சேன்!)

இந்த போட்டோவில் இருப்பது பாலாஜி கோயிலா? சின்ன வயசுல பார்த்த ஞாபகம்!

கும்பகோணம் பன்னீர்சோடாவை விட மதுரை பன்னீர்சோடா ருசியா இருக்குமா?

ஜில் ஜில் ஜிகிர்தண்டா (காதல் படத்துல) கேள்விப்பட்டிருக்கேன். சாப்பிட்டதில்லை. எப்படி இருக்கும்?

நன்றி
கமல்

தருமி Says:
April 28th, 2006 at 8:09 pm
பொன்ஸ்,
“நல்ல ஊருங்க உங்க ஊரு ..”//
- நாங்கல்லாம் இருக்கோம்லா..பெறகு எப்படி ஊரு நல்லா இல்லாம இருக்கும். அடுத்த தடவையாவது சொல்லிட்டு வாங்க…

தருமி Says:
April 28th, 2006 at 8:13 pm
கமல்,
நிச்சயமா சின்ன வயசில பார்த்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அந்தக் கோவில் சிக்காகோவில் இருக்குது. எவ்வளவு பெரிய வளாகம்…! எவ்வளவு சுத்தம்…!!

ஜிகர்தண்டா - கமல், சில விஷயங்கள் சொல்லித் தெரிவதில்லை. மதுரை ஸ்பெஷல் ஜி.தண்டா அதில ஒண்ணு

TheKa Says:
April 28th, 2006 at 8:23 pm
அது ஒன்னுமில்ல தருமி என்கிற உருமி (ஹி…ஹி…ஹி), என்னுடைய சிறிய ஊரின் பெயர் அது, சரி முகமூடியில்லாமல் அப்படியே இங்கு வழங்கினால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு முயற்ச்சிதான், அந்த தெக்கிக்காட்டான்.

வெளி ஊருக்கு சென்று படிக்கும் பொழுது சில பேர் தனது சொந்த ஊரின் பெயர் நகைக்கும் படி இருக்கிறது என்று பக்கத்தில் உள்ள பெரிய்ய்ய்யா ஊரின் அடையளத்துடன் வாழ்ந்து சாவதை பார்த்ததுண்டு…ஒரு சிறிய விழிப்புணர்வு ஊட்டும் பெயர்தான் காட்டான். உண்மைக்குமே நான் ஒரு காட்டான் சசசார், நம்புங்க…

தெகா.

கமல் Says:
April 28th, 2006 at 8:34 pm
சிக்காகோவா? பார்த்ததில்லை. கொடைக்கானல் அருகிலிருக்கும் பாலாஜி கோயில்ன்னு நினைச்சேன்.

அடுத்தமுறை இந்தியா வரும்போது இதுக்காகவே மதுரை வர்றேன்.

நன்றி
கமல்

No comments:

Post a Comment