Saturday, June 02, 2007

220. THE HINDU-வில் நாமும் தமிழ்மணமும்

இன்றைய இந்து தினசரியின் Metro Plus மதுரைப் பதிவில் நம் தமிழ்ப் பதிவுகளைப் பற்றியும், நல்லா தெரிஞ்ச நம் பதிவர்கள் சிலர் பற்றியும், தமிழ்மணம்,தேன்கூடு ... பற்றியும் நல்ல சில தகவல்கள்.
very vocal பால பாரதி, demure-looking லி.ஸ்.வித்யா, motivator ஓசை செல்லா, writer பாமரன் இவர்கள் பெயர் குறிப்பிட்டு ஒரு செய்தித் தொகுப்பாக வந்துள்ளது.

பொதுசன பத்திரிக்கைகளில் நம் பதிவுகளுக்குத் தனியிடம் கிடைப்பது இந்த நேரத்தில் நம் வளமைக்கு நல்லது என்ற முறையில் மகிழ்ச்சி. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

8 comments:

உண்மைத்தமிழன் said...

எங்க chennai edtion-லேயும் போன வாரம் வந்துச்சாக்கும்..

தருமி said...

உண்மைத் தமிழன்,
அப்போ அத எடுத்து போட்டுருக்கலாம்ல. நாங்களும் தெரிஞ்சிக்கிட்டு இருப்போம்ல...

Unknown said...

http://classroom2007.blogspot.com/2007/05/blog-post_26.html

தருமி said...

வடிவேல்,
அப்போ சென்னை மக்கள்தான் தூங்கிட்டாங்கன்னு சொல்லுங்க. (அல்லது அவங்களும் ஏதேனும் செய்தி கொடுத்திருந்தாங்களோ?)

G.Ragavan said...

இந்தச் செய்தியை போன வாரமும் வலைப்பூவுல எடுத்துப் போட்டிருந்தாங்களே. படிச்சேனே. ஆக...சென்னைல செய்தி போட்டு ஒருவாரம் கழிச்சுதான் மதுரைல செய்தியாப் போடுறாங்களா! மதுரக்காரவுகளே....என்னங்க இது! இப்பவே மதுரை இந்துப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போயி.....ஐயோ..இல்ல இல்ல வேண்டாம்.

தருமி said...

et tu ஜிரா !

G.Ragavan said...

// தருமி said...
et tu ஜிரா ! //

என்ன செய்றது தருமி சார். லேட்டஸ்ட்டா பேசுனாத்தானே எடுபடுது..ஹி ஹி ஹி..கோவிச்சிக்கிராதீக. இதெல்லாம் ஒரு இதுதான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், செய்தியின் முதலில் வரும் படத்தில் தமிழ் ஒழுங்காகத் தெரியவில்லையே. இதைக் கூட கவனிக்காமயா செய்தி போடுவாங்க

Post a Comment