Wednesday, January 20, 2016

885. மதங்களும் ... சில விவாதங்களும் -- நூலாய்வு




*
சந்திரசேகர்  jk

*





அறிவு ஜீவிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டு தாங்கள் சொல்ல வருகின்ற கருத்துகள் சமானியர்களுக்கு புரியாத வகையில் சிலர் புத்தகங்களை எழுதுவர். அதை ஒரு சிலர் ஆஹா...ஓஹோ...என்றும், இன்னும் சிலர் அந்த அளவிற்கு இல்லை என்று தங்கள் மேதாவிதனத்தையும் காட்டிக் கொள்வர்.

புத்தகம் எழுதுவதே தங்களின் ஆத்ம திருப்திக் கென்று கூறுவோர் உண்டு.அப்படியாயின் அதை அவரின் நாட்குறிப்பிலேயே எழுதலாமே.

இன்னும் சிலர் அவர்கள் படித்ததை அப்படியே புத்தகமாக வாந்தி எடுத்திருப்பார்கள்.அவருக்கும் நமக்கும் புரியவே புரியாது.

ஒரு கருத்து யாருக்கு சென்று சேர வேண்டுமோ,அதை அவர்களுக்கு புரியும் வகையில் அவர்கள் மொழியில் எழுதுவதுதான் நோக்கமாய் இருக்க வேண்டும்.அப்படித்தான் வாசகனின் தரத்தை கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்த முடியம்.

பெருவாரியான சாதரணமான மக்களுக்கு, கருத்துக்கள் எளிமையாக சென்று சேரவேண்டும். அத்தகு கலையை நான் தருமி அவர்களிடம் கண்டேன். அதற்காக அவர் உழைத்த உழைப்பும் ஆர்வமும் புத்தகத்தின் வரிகளாய் படிந்துள்ளது.

அவர் பேராசியராய் பணியாற்றிய அனுபவம் கருத்துக்களை எளிமையாகவும் வலிமையாகவும் முன் வைக்கின்றன. இன்றைய உலக அரசியல் சூழலில் மதவாதம் எப்படி அதிகாரத்தை பிடிக்க துடிக்கிறது என்பதை அறியாமல்,மதவெறி துண்டுதலுக்கு இரையாகும் இளைஞசர்களை எச்சரிக்கும் ஒரு எளிய நூலாக விளங்குகிறது.

இத்தகு புத்தகங்கள் தமிழில் வெகு அரிதாகவே காணமுடிகிறது.  'மதங்களும் சில விவாதங்களும்' என்பது நூலின் தலைப்பு. ஆனால் உள்ளே பல விவாதங்கள் சுவாரசியமாக எழுகின்றன.
தருமி அவர்கள் கிறுஸ்துவ மதத்தில் பிறந்தவர்.முதலில் அவர் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிப்பதே கிறுஸ்துவ மதத்தைதான். அதில் நமக்கு அவரின் நேர்மை பிடித்திருக்கிறது. தன்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடுவதில் விளைந்துதான் இந்த புத்தகம்.

மனிதன் பிறந்த உடனே அவனுக்கு மதம் எனும் கண்ணாடி பொருத்தப்பட்டு விடுகிறது. அவனும் வாழ்க்கை முழுதும் அந்த பார்வையிலேயே கேள்வி கேட்காமல் பயணப் படுகிறான் என்ற உண்மையுடன் துவங்குகிறது.

யூதர்களின் செமிடிக்,கிறுஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்கள் ஒரே இனக்குழுவில் தோன்றியும்,ஜெருசலேமை பொது புண்ணிய பூமியாக ஏற்றுக் கொண்டும், இவர்களுக்குள் 'கடவுளுக்கே' அடுக்காத எத்தனை போர்கள் எத்தனை அராகஜகங்கள்.
கருணையே வடிவான கடவுள் 'சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காமல்' வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ஆரம்ப கால நாகரீகத்தில் அப்படி நடந்தது என்று மறக்க முடியாது, இன்றும் கூட
மாற்று மதத்தவனின் தலையை 'இறைவனின் புகழை' கூவிக் கொண்டு தலையை கொய்து தொலைக் காட்சிகளில் ஒளிபரப்புவது என்ன மதக்கலாச்சாரம்?

முகமது நபி அவர்கள் எந்த விதத்தில் ஒரு சாராசரி மனிதனை விட மேம்பட்டவராகிறார் என்ற கேள்வி எழும் போது, ஏனோ எனக்கு தேவர்களின் தலைவனாயிருந்து பின் காலாவதியான (All Gods have expiry date -Kamalhasan) கேவலமான இந்திரனின் நினைவு வந்தது.

அனைத்து மதங்களும் தங்கள் மதம்தான் சிறந்தது என்று சொல்லி மற்ற, மதங்களை எள்ளி நகையாடுவது ஏன்?

என் அம்மா நல்லவள் என்று சொல்வதில் எந்த தவறுமில்லை.ஆனால் என் அம்மா மட்டுந்தான் நல்லவள் என்று சொல்வதுஎப்படி சரியாய் இருக்கும் என வினவுகிறார் தருமி.உண்மைதானே.

எல்லாம் வல்ல ஈசனுக்கு 'டொய்ங்' என்று உலகத்தை ஒரு நொடியில் படைக்காமல் ஆறு நாட்களாய் படைத்து விட்டு ஒருநாள் ஓய்வெடுத்தக் கொள்கிறாராம்.அது எந்த நாள் என்பதிலும் குழப்பம்.

எந்த சமயமும் ஏன் உலகம் தழுவிய சமயமாக இல்லை என கேள்வி எழுப்புகிறார். மதங்களில் காணப்படும் புவி அறிவே இதெல்லாம் லோகல் பிரச்சனைகள் என தெளிவுறுத்துவதாக சொல்கிறார்.

ஒரு இந்து மதத்துகாரனின் கனவில் ஏன் அல்லா வருவதில்லை.ஒரு முகமதியன் கனவில் ஏன் சிவன் வருவதிலை என கேட்பதில் உள்ள உண்மை நமக்கு புரிகிறது.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றது பழைய ஏற்பாடு(செமிடிக்).ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றது புதிய ஏற்பாடு(கிறுஸ்துவம்).மீண்டும் பழிக்கு பழி என்று செய்துக் கொண்டிருப்பது இஸ்லாம். வெச்சா குடுமி இல்லன்னா மொட்டைதான்.ஆனால் அராஜகத்தில் எவரும் சளைத்தவராக தோன்றவில்லை.

கடவளின் தேவை என்ன? மதத்தின் சேவை என்ன? மனிதன் ஏன் அதில் வயப்பட்டுளான்.

நிலையில்லா மனிதவாழ்வில் நிறைந்த அச்சம், உத்தரவாதமற்ற வாழ்க்கை,அதனால் எழும் சோகங்கள், இவற்றிற்கான ஆறுதலாகவும்,துன்பத்தை போக்கவல்ல நமபிக்கையாகவும்,தன்னுள் எழுந்த உணர்வை கடவளாக கற்பித்துக் கொண்டான்.

பிரான்சு நாட்டில் CERN ஆராய்ச்சி நடக்கும் போது,இந்தியாவில் சில பக்த கோடிகள் 'லோகம் அழிய போறது' என்று கோவில்களில் தஞ்சம் அடைந்தார்களாம்.
அப்போது நவீன அழிக்கும் கடவுளான அப்துல்கலாம் 'அழியாது' என்றதும் பெருமூச்சு விட்டனராம்.

உலகம் அழியும் நாளன்று கடவுள் நிச்சயம் வருவரேன்று அனைத்து மதங்களும் கோரஸாக சொல்கின்றன.சில தேதிகளை குறிப்பிட்டு மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன.

எதையும் காதில் வாங்காமல் புவி அதன் பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறது.
மனித மூளையில் உள்ள 'டெம்பரல் லோப்' பகுதிக்கும் நினைவுகளை ஆளுகின்ற மூளை பகுதிக்கும் உள்ள இணைப்பை பலமாக்கினால் 'மத உணர்வுகள் பொங்குகின்றன' என்று சோதனை மூலம் விடை கண்ட கலிபோர்னியா பல்கலைகழகத்தை சார்ந்த நரம்பியல் விஞ்ஞானி,விலயனூர் ராமச்சந்திரன்(நம்மவர்தான்).

இது குறித்து இறை நரம்பியல் (Neuro theology)என்ற தனித்துறையே உருவாகியுள்ளார்களாம். அந்த சோதனைகளையும் முடிவுகளையும் சுவாரசியமாக
பதித்துள்ளார்.


பெண்களின் உடை குறித்த விவாதம் தற்போது நடக்கின்றது.பெண்களின் உடை விருபத்திற்கெதிராய் மட்டும் இந்து முஸ்லீம் ஒத்த குரலில் முழங்குகின்றன.

'ஹிஜாப்' முஸ்லீம் பெண்ணின் முகம் மற்றும் கைகளை மறைக்கும் தளர்வான ஆடை வந்ததற்கான காரணம் வெளியில் சொல்ல முடியாதவை. தமிழ்நாட்டில் புர்கா போடும் பெண் திருமண சந்தையில் விலை போகாமல்,எங்கே அவமான பட்டு விடுமோ... என்று அச்சப்படும் பெற்றோர்களின் கவலையை, தருமி உணர்வது அவரின் சமூக பொறுப்பை காட்டுகிறது.பெண்கள் உடை குறித்து கிறுத்துவ மதம் அவ்வளவாக கவலை கொள்ளலாது நல்ல விஷயமே.

ஏமன் நாட்டில் சானா என்ற மசூதியில் கணடெடுக்கப் பட்ட புராதாண 'குரான் ' குறித்து தகவல் ஏன் வெளிப்படையாக விவாதிக்க படவில்லை என நியாயமான கேள்வி கேட்கிறார் தருமி. அப்படி வெளிவந்தால் 'டாவின் சி கோட்' போல் இன்னொரு கதை உருவாகலாம்.

இயேசுவே தன்னை யூத ஆடுகளை மேய்க்க வந்த மேய்ப்பாளரா கூறிக் கொள்கிறார்.பின் எப்படி உலக ஆடுகளின் மேய்ப்பாளரா மாறினார். Ron wyatt என்பவர் யேசுவின் புண்ணிய தலங்களில் ஆராய்சி செய்து யேசுவின் ரத்தத்தை கண்டு பிடித்து சோதனை செய்தாராம்.
என்ன ஆச்சரியம் அதில் ஆண்களுக்குரிய 'Y' குரோமோசம் மட்டுமே இருந்ததாம்.
அடேங்கப்பா...என்ன ஒரு கண்டுபிடிப்பு.

நம்ம ஊர்லே ராமர் பிறந்த இடமும்,அவர் கட்டிய பாலமும் ண்டுபிடிச்சாச்சு.அவருடைய வில்லும் அம்பும் BJP கையிலே இருக்கு.

அன்னை தெரிசா பாவமன்னிப்பு கோரும் கடிதத்தில் நாத்தீக சிந்தனையும் மனிதநேயமும் வெளிப்படுவதை விவரிக்கிறார்.

புது மதங்களும் மதக்கிளைகளும் தோன்றும் காரணத்தை விவரித்திருக்கிறார்.
அடடே...அவ்வளவுதானா நாளைக்கே நாம் ஒரு புது மதத்தை உருவாக்கலாம்.சில்லறை தட்டுபாடின்றி சுகமாக வாழலாம்.

இந்து மதத்தை இரு கூறுகளாகப் பார்க்கும் அவரின் பார்வை யாதார்த்தத்தை காட்டுகிறது. ஒரு கூறு சிறுபான்மை பிராமணர்களை கொண்டதாகவும் அடுத்த கூறு பெருன்பான்மை கொண்டதாக இருப்பினும் அதன் தலை மீது ஏறி மதம் என்னும் போர்வையில் சிறுபான்மை ஆளுவதை சுட்டிக்காட்டுகிறார்.

இந்து என்ற பெயர் எப்படி வந்தது.அரசு குறிப்பில் எப்போது பதியப் பெற்றது.சிறு மதங்களாய் நிரவி இருந்த மதங்களை இந்து மதம் என்று ஒரே மூட்டையாக கட்டியது யார்? போன்ற சுவாரசிமான செய்திகளை அள்ளி தருகிறார்.

பல கடவுள்களை தொலைத்தும் சில கடவுள்களை சுவீகரித்தும் திட்ட மிட்டு வளர்ந்தது இந்து மதம். புத்தரையே தசவதாரத்திற்குள் கொண்டு வந்தவர்களாயிற்றே.

சாமி சிலை திருட்டை கேள்வி பட்ட நமக்கு சாமி திருடர்களை பற்றி கேள்வி படாதது நம் அறியாமையே.

சமூக தளத்திலும் அன்றாட நடைமுறையிலும் காணத பாலியல் கதைகள் வேதத்திலும் புராண கதைகளிலும் விரவி இருக்கினறன.

இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்ரியர் செயலற்று போனதும்,சூத்திர சாதியினர் புதிய சத்ரியர்களாய் உருவாகி வருகிறார்கள். பதிய சத்ரியர்களின் நோக்கம் மனித உறவுகளை தலித் ஜனநாயகமாக்குவதோ அல்ல. மாறாக பார்பனீய மயமாக்கவே முயல்கிறாரகள் என்பதை துகிலுரித்து காட்டுகிறார். இந்த உண்மை மக்களுக்கு உறைக்க வேண்டுமே, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மனம் பதறுகிறது.

இந்து மதத்தில் சாதி கொடுமைகளால் எழும் எதிர்ப்புகள் மதப்புரட்சி என்ற பெயரில் சாந்தப்படுத்த அவ்வபோது சிலர் தோன்றியுள்ளனர்.சாதிக் கட்டுபாடுகள் மட்டுமே இந்து மதத்தை அழிவில் இருந்துகாப்பாற்றி உள்ளது என்று காந்தியடிகள் கூறியதை வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

இந்து மதத்தில் ஒழுக்க குறைபாடுள்ள மனிதர்களை கூட கடவுளுக்கு இணையாக போற்றுவதை அதிசயமாக பார்க்கிறார்.

எல்லா மதங்களும் வெவ்வேறு கடவுள்களையும் வெவ்வேறு தத்துவங்களையும் சொன்னாலும் சில முக்கிய பிரச்சனைகளில் மாறுபாடில்லாமல் ஒற்றுமையை ஒரே கருத்தை கொண்டிருப்பது உற்று நோக்கத் தக்கதாகும்




ஒன்று பெண் சுதந்திரம்.

எல்லா மதங்களும் பெண்ணை ஜீவனற்ற பொருளாக பார்க்கிறது.அவர்களுக்கென்று தனி உணர்வும் அறிவும் இருப்பதை மறுக்கிறது. இந்து மத வேத்திலேயே 'பெண் பிள்ளை பிறக்க விடாமல் எங்களை காத்தருள்வாய்' என வேத ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
பால்ய விவாகம், உடன்கட்டை,விதவை மறுமணம்(இவை தற்போது குறைந்துள்ளது என்றாலும் BJB ஆட்சி ஆயுளை பொறுத்தே உள்ளது)வழக்கத்தில் இருந்தன.

வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமாய் இருப்பதில்லை என்று ஒழுக்கங்கெட்ட காமுகன் சங்கராச்சார்யா சொன்னது சமீபத்தில்தான்.

முஸ்லீம் மதத்தில் பெண் பிள்ளையை பெறுபவர்களை குரான் போற்றுகிறது.
ஆனால் ஒருவன் நான்கு மனைவியரை கொள்ளலாம் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது. திருமணத்திற்கு முன் பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டுமாம்.மௌனமாக இருந்தாலே சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளப் படுமாம்.

வாரே...வா...என்ன ஒரு சுதந்திரம்.

நபிகள் ஒன்பது வயது நிரம்பிய பெண்ணை மணம் புரிகிறார். நபியின் வழியில் தோழர்களும்.ஒரு வறுமைக்கிழவன் தன் இளம்மகளை ஒரு பணக்கார கிழவனுக்கு மணமுடித்து வைக்கிறான்.அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இவன் ஒரு இளம் பெண்ணை மணக்கிறான்(ஆப்கானிஸ்தான்)

கிறுஸ்துவ மதத்தில் பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும் ஆங்காங்கே கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு ஏழ்மை

எல்லா மதங்களும் ஏழை மீது அதித கருணை மட்டுமே கொண்டிருக்கின்றன.ஏழையின் மேம்பட எந்த வழியும் மதங்களில் காணப்படவில்லை.

அந்நிலைமை மாறிடாதிருக்க,சொர்க்கம்,தலைவிதி,ஆண்டவன் அறிந்தே ஒருவரின் நிலையை படைக்கிறான் அதை மாற்ற இயலாது என்கிறது.

ஏழைக்கு பிச்சையிடாதவன் நரகம் காண்பான் என்று சொன்னதை நம்பி இன்னும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பாமர்கள்.

இந்த இரண்டு காரணங்களுகாகவே மதங்களை கலைத்து விடலாம்.முடியமா....
மதம் தோன்றியதில் இருந்தே அரசியலை தன்னுடன் இருத்திக் கொண்டுள்ளது.சரியாக சொன்னால் அரசின் ஸ்திர தன்மை காக்கவே மதம் பிறந்தது.

முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவ ஆலயங்களில் அரசியல் போதிக்கப் படுகிறது.

இந்து மதத்தில் அப்படி ஒரு ஏற்பாட்டை கொண்டுவர இந்துத்துவா துடிக்கிறது.

முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் அந்த துடிப்பை வேகமாக்குவதில் சளைக்காமல் இயங்குகிறது.

சோசலீச சரிவுக்கு பின் மதங்கள் அரசை கைப்பற்றும் நோக்கம் வேகமடைந்துள்ளது.

இவை ஏகாதியபத்தின் வேலை என்று சொன்னால்,
நம்பாமல் உள்ளூர் பிரச்சனையாக பார்க்க வைக்கும் ஊடகங்கள்.

டார்வினின் பரிணாம கொள்கையும் கொபர்நிக்கஸின் சூரிய மைய வாதமும் பைபிளை கேள்விக்குள்ளாக்கியது.இந்த நெருக்கடியை களைய கடவுளின் ஆட்சி அல்லது யேசுவின் வருகை என்கிற அடிப்படையுடன் முதன்முதலாக அடிப்படைவாதம் என்னும் கருத்து உதயமாகிறது என்கிறார்.

அது இஸ்ஸலாமிலும் நிலைத்து தற்போது இந்து மதத்தில் நீடித்து வளர்கிறது.

சோவியத் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகலளாவிய எதிரியாக இஸ்லாம் அடிப்படை வாதத்தை உருவாக்கியதாக கூறுகிறார். இந்தியாவின் ஆதரவும் அதற்கு இருந்தது வெட்ககேடு.

அமெரிக்காவின் பொருளாதார வளர்சிக்கு இரையாகும் முஸ்லீம் தீவிரவாதம்.

பெரும்பான்மை கிறுஸ்தவ அடிப்படைவாதிளின் ஆதவுடன் தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க அதிபர்,யாருடைய நலன் காப்பார்?


மதமெனும் அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால்,ஒரு சமூக புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையில் இருந்து'கடவுளை' அகற்ற முடியும் என்கிறார் மாமேதை காரல் மார்க்ஸ்.

நிறைவான புத்தகத்தை படித்து நிறையவே தெரிந்து கொண்ட பெருமித்தால் 'தருமி'அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
















*









4 comments:

தருமி said...

சந்திரசேகர் jk
சார்லஸ் சொன்னது போல் உங்கள் கருத்துகளைத் தனிப் பதிவாக இடுவதே நலம் என்று நானும் எண்ணியதால் தனிப்பதிவாக போட்டுள்ளேன். நன்றி

சார்லஸ் said...

என் கருத்தினை ஆமோதித்து பதிவாக மாற்றியமைக்கு நன்றி. மீண்டும் வாசித்தேன் . நல்ல கருத்துச் செறிவான உங்களின் படைப்பினை அழகூட்டும் விமர்சனம் .

வேகநரி said...

சந்திரசேகரின் சிறந்த கருத்துக்களுக்கும் தனி இடம் கொடுத்துள்ளீர்கள். நல்ல நடவடிக்கை.
தஜிகிஸ்தான் நாடும் மத தீவிரவாதத்துக்கு எதிரான புனித போர் தொடங்கியுள்ளது. மதவாத பிற்போக்கு பர்தாவை அகற்றுதல், மதவாத தாடியை ஷேவ் பண்ணுதல்.
http://www.dailymail.co.uk/news/article-3409790/Tajikistan-removes-headscarves-1-700-women-shaves-beards-13-000-men-tackle-jihadism.html
தருமி சாருக்கும், தஜிகிஸ்தான் நாட்டுக்கும் பாராட்டுக்கள்.

தருமி said...

//Tajikistan is a majority Muslim country, but has a secular government.//

how did this happen then?

surprising to note that you have a helluva details... how do you gather such things? appreciate you so much.

Post a Comment