Tuesday, June 26, 2018

986. இவர்களுக்கும், அவர்களுக்கும் .. ஆளுக்கொரு கேள்வி





*


இவர்களுக்கொரு கேள்வி:

 நம் கர்த்தர் மிகவும் இரக்கமானவர் ... நம் பாவங்களுக்காக இங்கு வந்து தன்னைப் பலியாகக் கொடுத்து நம்மை இரட்சிக்கவந்த அன்பான கடவுள். 

என்ன ... சரியாகச் சொல்லி விட்டேனா? 

 இதில் ஒரு கேள்வி: அவ்வளவு இரக்கமான ஒரு கடவுளால் எப்படி ஒரு நித்திய தண்டனைக் களமாக ஒரு நரகத்தைப் படைத்து, அதில் என் போன்றோரை தள்ளிவிட்டு, காலங்காலமாய் கொடிய தண்டனை கொடுமைப் படுத்த முடியும்? 


 *****



 அவர்களுக்கொரு கேள்வி:

 மதுவைத் தொடாதே; மனைவிகள் தவிர பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதே. தவறினால் கல்லெறிந்து கொல்லும் அளவிற்கு இவை ஹராமான விஷயங்கள்.

 என்ன ... சரியாகச் சொல்லி விட்டேனா? 

இதில் ஒரு கேள்வி: இவ்வளவு தீர்க்கமாக மாதும்,மதுவும் தீயது என்று வேத நூலில் கூறிவிட்டு, அதே நூலில் மறு வாழ்க்கையில் 72 ஹீரிகள் + எப்போதும் வற்றாத ஆறாக ஓடும் மது வகை நிறைந்த சுவனம் என்று சொல்வதில் என்ன பொருளுண்டு. இங்கே தீயது; அதனால் தடை என்றால் அங்கும் அது தீயது தானே! கடவுளே இதெல்லாம் அளவின்றி கொடுப்பார் என்றால் ... என்ன ஒரு சுவனம் அது?!




 *

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

Post a Comment