Thursday, December 06, 2018

1013. அம்பேத்கர் ...




*

இன்று அம்பேத்கரின் பிறந்த நாள். 

நேற்று தான் அம்பேத்கரைப் பற்றிய நூல் ஒன்றின் தமிழாக்கத்தை  எழுதி முடித்த மகிழ்ச்சி.





இன்று தமிழ் இந்துவில் வினோத் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் அம்பேத்கர் இன்னும் நம் மத்தியில் ஒரு “ஒதுக்கப்பட்டவராகவே “ உள்ளார் என்பதை எழுதியுள்ளார். இதைச் சாதி வெறி என்று அம்பேத்கரின் நினைவகத்தின் காவலாளி மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்,

(ஆனாலும் அம்பேத்கருக்கு இவ்வளவு அழகான நினைவகம் கட்டியது யாரோ! மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எப்படி இத்தனை அழகாக ஒரு நினைவகம் என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் இல்லாமல் இருக்கும் இடம் கூட பலருக்கும் தெரியாமல் எங்கோ முடங்கிக் கிடக்கிறதாமே!)

என்று மாறுமோ இந்த சாதி வெறி?

இந்தியர்களின் மனத்திலிருந்து. இது மாறவே மாறாது என்று தான் நினைக்கின்றேன். ஒரு பெரும் முடியாத நீள் கதை...



அம்பேத்கரின் பிறந்த நாள் .. எனது இப்போதைய மொழியாக்க வேலை முடிந்த ஒரு மகிழ்ச்சி. இந்தச் சூழலில் நண்பன் பேராசிரியர் முனைவர் சாமிநாதன் எழுதிய “நெகிழ்ச்சி” என்னும் புதினத்தை இப்போது வாசித்துக் கொண்டிருக்கும்போது இதையொட்டிய மிகச் சரியான சில வரிகளை அவன் நூலில் காண முடிந்தது. அதையும் இங்கு தருகிறேன் - நம் சாதி வெறிக்கு இன்னும் ஒரு சின்ன அடையாளச் சின்னம்!







****

எத்தனை அம்பேத்கர்கள், பெரியார்கள் வந்தென்ன ... 


*****




1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் ஐயா
தங்கள் நூலின் வரவிற்காகக் காத்திருக்கிறேன்

Post a Comment