Thursday, December 19, 2019

1076. அண்ணன்களின் வழியில் .... வந்ததே புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா.




ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்த எனக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு எழுதும் வாய்ப்பு வந்தது. ‘பிரிட்டிஷ் கால இந்திய வரலாறு’.  ஆசிரியர்: பேரா. சு. வெங்கடேசன். (வர்த்தமானன்).  இதன் மூலம் பல புதிய வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நூலின் கடைசிப் பகுதிக்கு வந்த போது நம் நாட்டின் சாதிய நிலைகள் பற்றிய பகுதி வந்தது.

சாதிகள் எப்படி எப்போது எந்த வழியில் நம்முள் நுழைந்தது என்பது பற்றிய விவரங்கள் வந்த போது தான் அதிர்ச்சிகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. சாவர்க்கர், கோவால்கர், R.S.S. பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை மொழிபெயர்க்கும் காலத்தில் தான்  CAB  திட்டம் அமுலுக்கு வந்தது.  மோடி முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்றே தோன்றியது. சாவர்க்கர், கோவால்கர்  அன்று சொன்னதை இன்று முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடமை உணர்வு இப்படி சிறப்பாக இத்திட்டத்தைக் கொண்டு வந்ததில் இருந்து தெரிய வருகிறது.

1923ல் விநாயக் தாமோதர் சாவர்க்கர் “இந்துத்வா: இந்து என்பவர் யார்?” என்ற நூலை வெளியிடுகிறார்.  சர்க்கார் சொன்னதில் எனக்குப் “பிடித்த” பாய்ண்ட்!!! : இதோ ...
அண்ணன் சாவர்க்கர் சொல்கிறார்: ஆரியர்கள் வரலாற்றின் துவக்க காலத்தில் இந்தியாவுக்கு வந்து குடியேறிய போதே தேசத்தை ஏற்படுத்தி விட்டனர். ... இவர்கள் தனி இனசாதியைச் சேர்ந்தவர்கள், இந்துக்களின் இரத்தத்தில் கலந்திருப்பது “வேதத்தந்தையர்”களின் குருதி தான்.

அண்ணன் சாவர்க்கர் சொன்னது ....

அடுத்த அண்ணன் கோவால்கர்: கேசவ் பாலிராம் ஹெட்கேவார் 1925ல் R.S.S. அமைப்பை ஆரம்பிக்கிறார். அதன் பின் வந்த கோல்வால்கர் 1939ம் ஆண்டில் புது வடிவத்தையும் விளக்கத்தையும் கொடுக்கிறார். அண்ணன் சொன்னதில் எனக்குப் பிடித்தது !!!”

இந்துக்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர், இந்திய மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.  அவர்களே ஆரியர்கள். வேதகால கலாச்சாரமே ஆரிய கலாச்சாரம். ஆரிய கலாச்சாரமே இந்து கலாச்சாரம். இந்து கலாச்சாரமே இந்திய கலாச்சாரம். ... ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஒற்றை அடிப்படை தேசமே விரும்பத் தக்கது. 

அண்ணன் கோவல்கர் சொன்னது ...
கோவால்கர் ஜெர்மானிய இனவாத அணுகுமுறையால் கவரப்பட்டவர். .ஜெர்மானியர் எவ்வாறு ஓரின வாதத்தை நிலைநாட்டினார்களோ அதே போன்று இந்து இன ஆதிக்கத்தை இந்தியாவில் செய்ய வேண்டும். .. இந்து ராஷ்ட்ரத்தை ஏற்படுத்துவதே இந்து தேசியவாத இயக்கத்தின் குறிக்கோள்.

அன்று அண்ணன்கள் கிழித்த கோட்டை அப்படியே நிறைவேற்ற தொடர்ந்து போராடி வருகிறார்கள் நமது தலைவர் மோடி - ஷா.

2 comments:

Post a Comment