*
‘சமாதானம்’ என்ற பொருள் கொண்ட இஸ்லாம் என்ற மதம் முகமது நபியால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது காலத்திலேயே பெரும் இஸ்லாமிய நாடாக உருக்கொண்டது. முகமது 622லிருந்து 632 வரை ஏறத்தாழ 99 போர்க்களங்களைக் கண்டு அவரது இஸ்லாமியப் பகுதியை உருவாக்கினார்.
ஆனால் அவரது இறப்பை ஒட்டியே அவரால் உருவான இஸ்லாம் சன்னி – ஷியா என்ற இரு பகுதிகளாக உடைந்தது. இதற்குக் காரணம் நபியின் இடத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தோன்றிய தகராறே காரணம். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஷியா பிரிவினர் 20 விழுக்காட்டிற்கும் கீழே தான் உள்ளனர். ஆனாலும் ஈராக், ஈரான், பாஹ்ரெய்ன் என்னுமிடங்களில் ஷியா அதிகமாக உள்ளனர்.
சன்னிகள் நபியின் வழிவந்தோரில் தகுதியானவர் பதவியேற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் ஷியா என்ற சிறு பகுதியினர் முகமதுவின் மகளை மணம்புரிந்த அலி பதவிக்கு வரவேண்டுமென விரும்பினர். நபி இறந்த உடனேயே இந்தப் பிளவு ஏற்பட்டு விட்டது.இதில் சன்னிப் பிரிவினரின் விருப்பப்படியே அபு பக்கர் முதல் கலிபா ஆனார். அபு பக்கரை அடுத்து அவரது தேர்வின் படி உமர் அடுத்த கலிபா ஆனார். அடுத்து உத்மன் மூன்றாவது கலிபா ஆனார். இவர் கொல்லப்பட்டு, நான்காவது கலிபாவாக அலி வந்தார். இதனை எதிர்த்து பலர் போர் தொடுத்தனர்.
போராட்டங்களின் முடிவில் அலி கொல்லப்பட்டார். இதனை எதிர்த்து அலியின் மகன் ஹுசைன் ஒரு சிறு படையோடு இன்றைய ஈராக், அன்றைய கர்பாலா போர்க்களத்தில் டமாஸ்கஸ் கலிபாவின் படைகளோடு மோதினார். ஆனால் அவர் படை தோற்கடிக்கப்பட்டு, நபியின் பேரனான ஹுசைனும் அவரது குடும்பத்தினர் 72 பேரும் – ஹுசைனின் ஆறு மாதக் குழந்தையும் – அழித்தொழிக்கப்பட்டனர். ஹுசைனின் தலை மட்டும் கொய்யப்பட்டு டமாஸ்கஸில் உள்ள கலிபாவிடம் சேர்க்கப்பட்டது.
குர்ஆனின் வசனங்கள் தங்க எழுத்துகளில் சுவனத்தில் இருக்கும். அதன் நகல் ஜிப்ரேல் மூலமாக முஹம்மதுவிற்கு இறங்கும்; பின், அதனை அவர் முதலில் மனனம் செய்து கொள்வார். பின்னர் அதனைத் தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, அவர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்.. அதன் பின் குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளச் செய்து, எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார். இப்படித் தான் அவை குர்ஆனாக தொகுக்கப்பட்டது. – இப்படி ஒன்றை 1400 வருடங்களாகச் சொல்லிக் கொண்டு தங்கள் நம்பிக்கையை இதன் மேல் இஸ்லாமியர்கள் வைத்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். மதராஸா பள்ளியில் உள்ள பாடத்திட்டம் போல் அழகாக கதை போல் இருப்பது அந்தப் பள்ளிப் பருவத்திற்கு சரி. ஆனால் எல்லோருக்குமல்ல.
இதில் எந்தக் கேள்வி கேட்டாலும் இதே பதில் திரும்பச் சொல்லப்படும். உதாரணமாக, யாருக்கும் எளிதாகத் தோன்றக்கூடிய ஒரு கேள்வி: அல்லா ஏன் படிப்பறிவில்லாத ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வஹி இறங்கியும், அத்தனை ஆண்டுகளாக ஒருவர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இப்படி தொடர்ந்து இருந்திருக்க முடியுமா? //"முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! // - இப்படி சொல்லியிருக்கிறதாம். அது அவர்களது நூல்; அதிலுள்ளவை அல்லாவின் வார்த்தைகள் – நம்பிக்கையாளர்களுக்கு. நமக்கு இது எப்படி ஒத்து வரும்? வலது கையால் எழுத மாட்டாராம்...? எதற்காக இப்படி ஒரு ‘புத்திசாலித் தனமான’ முடிவை அல்லா எடுத்தார்? முகமதுவே நேரடியாக எழுதி விட்டால் //பைபிளிலிருந்தும் தோராவிலிருந்தும் அனைத்து வசனங்களையும் காப்பி அடித்து விட்டார் என்று அன்றைய அரபுகள் குற்றம் சுமத்துவர். அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்."(குர்ஆன் 29:48)// அதாவது, இவர் கைப்பட எழுதினால் மற்றவர்கள் இவர் ‘காப்பி’ அடித்து விட்டார் என்று குற்றம் சுமத்துவார்களாம். ஏன், ஒருவர் காப்பியடித்து அதை வாயால் சொல்லி பிறரை எழுத வைத்தாலும் … காப்பி காப்பி தானே! ஏனிப்படி நடக்க முடியாதா? அதுவும் இப்படி ‘தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டாலும்’ இப்போதும் முகமது பழைய மத நம்பிக்கைகளைக் குரானில் இறக்கி வைத்துள்ளார் என்று தானே சொல்லப்படுகிறது.
Really very poor logic of Allah ! அல்லாவின் லாஜிக் என்ன என்று புரியவில்லை.
மேலும் குரானில் இன்றைய அறிவியல் அப்படியே இருப்பதாகவும் அதுவே இது ஒரு 1400 வருடங்களுக்கு முந்திய மனிதனால் எழுதப்பட்டதல்ல; எல்லாம் அறிந்த அல்லாவால் எழுதப்பட்டது என்பது குரான் கடவுளின் வார்த்தை என்பதை நிரூபிக்க அவர்கள் பயன்படுத்தும் இன்னொரு விவாதம். ஆனால் என் பட்டறிவில் ஆணிற்கு எங்கிருந்து விந்து வருகிறது என்பதை படங்கள் மூலம் விளக்கினாலும் அவர்கள் சொன்ன ‘எங்கள் முயலுக்கு மூன்று கால் தான்’ என்கிற விவாதம் தொடர்ந்து வருவதையும் பார்க்க முடிந்தது. அதே போல் உலகத்தைச் ‘சுருட்டி வைத்தல்’, சூரியனின் பயணம் போன்றவைகள் எல்லாமே விஞ்ஞானம் என்று கூறுவதைப் பார்க்கும் போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம்: அவர்கள் முயலுக்கு மூணு கால் தான் என்பதே!
அனைத்தும் அறிந்த ஒரு இறைவனென்றால் அவன் சொல்வது மிகச் சரியானதாக, ஆணியின் தலையில் அடிக்கும் சுத்தியலாக கருத்துகள் இருக்க வேண்டும். ஆனால் அடைப்புக்குறி போட்டு தான் அவைகளை மனிதர்களுக்கு விளக்க வேண்டும் என்று நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது இவ்வளவு மோசமான ‘அறிவியல் ஆசிரியராக’ அல்லா இருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது. இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதை தான் குரான் தொகுக்கப்பட்டதற்கு மதராஸாவில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.
இதில் இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். குரான் முகமது இறந்த பிறகு தொகுக்கப்பட்டது. ஆனால் இந்த கால இடைவெளிக்குள் இஸ்லாமியருக்குள்ளேயே, அதுவும் முகமதுவின் நண்பர்களுக்குள்ளும், உறவினர்களுக்கும் இடையே நடந்த போர்கள் பற்றி நிறையவே சொல்லியாயிற்று. எந்தக் குழுவில் யார் அதிகாரத்தோடு இருந்தார்களோ அவர்கள் சொல்வது தான் உண்மையாக இருக்கும் என்பது வெளிப்படை உண்மை; வஹி பெற்றவரே எழுதி வைத்திருந்தால் இருக்கக்கூடிய உறுதி, தெளிவு, நேர்மை இவ்வகைப் பதிவுகளில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு தான்.
அதுவும் என் வார்த்தைகளைத் தொகுக்க வேண்டாம் என்று முகமது உத்தரவு கொடுத்த பிறகும் ஹதீசுகள் தொகுக்கப் பட்டன. ஏன் தொகுக்கப்பட்டன என்பதற்கான பதில் இல்லை; ஆனால் தொகுக்கப்பட்டிருந்தால் இத்தனை அரசியல், இத்தனை குழுக்கள், அவர்களுக்குள் போராட்டங்கள் இருந்த காலத்தில் அவை தொகுக்கப் பட்டவைகள் என்பதே அவைகளின் மீதான நம்பிக்கைக்கு ஒரு பெரிய கேள்வி.
//நபி எந்த எழுத்துக்களையும் விட்டுச்செல்லாததனால், "நபி கூறினார்" என்று யாரேனும் கூறினால், அது நபி கூறியதாகாது.// -- இப்படி ஒரு விவாதம். அதாவது ஒரு ஹதீஸ் சொன்னால் அது நபி சொன்னது என்ற நிச்சயம் இல்லையாம். அப்படி நிச்சயம் இல்லாத ஹதீசுகளை ஏன் இன்னும் வைத்திருக்கிறார்கள். ஒண்ணும் புரியவில்லை ....
சானா குரான் என்று ஒரு தொல்பொருள் கிடைத்தது. ஆரம்ப கால ஆய்வுகள் சில ஜெர்மானிய அறிஞர்களால் ஆரம்பிக்கப் பட்டது. சில தகவல்கள் கசிந்தன. அதோடு சரி ... இப்போது அவை சரியான பாதுகாப்பின்றி ஒரு நூலகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள உண்மைகள் எப்போதாவது வெளிவருமா என்றும் தெரியவில்லை. அது முகமதுவின் check list-ல் அது இல்லை; அதைப் பற்றிய அக்கரை எங்களுக்கு ஏதுமில்லை என்று இஸ்லாமியர் கை கழுவுகிறார்கள்.
இத்தனை குழப்பங்களையும், மனிதக் குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
நம்பிக்கையுள்ளவர்களுக்கு இதெல்லாம் பெரும் நம்பிக்கை; நம்பிக்கையற்றவர்களுக்கு இதெல்லாம் வெறும் வேடிக்கை !
*

