Monday, May 01, 2006

157. தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள்

Image and video hosting by TinyPic


நம் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப்பொருத்தவரை அது நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள்தான். அவர்கள் நம் தமிழ்க் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து, காப்பாற்றுவது போல் வேறு யாருமே செய்ய முடியுமா என்ன?

நம் பழைய தமிழ்ப் படங்களில் ராஜா ராணி படமென்றால் குதிரையில், சமூகப் படமென்றால் ஒரு ஃபியட் காரில் கதாநாயகர் வருவார். குதிரைக்கோ, காருக்கோ தண்ணீர் தாகம் எடுக்கும். உடனே அங்கே ஒரு நீர் நிலை. தண்ணீர் எடுக்கப் போவார்.கதாநாயகி குடத்தோடு வந்து அங்கே மிகச்சரியாக ‘பொத்’தென்று விழுவார். நம்ம தலை ‘படாரென’த் தூக்குவார். இனி ‘தொட்ட’ பாவம் அவரை விடாது. ‘என்னைத் தொட்டுத் தூக்கியவரே இனி என் நாதர்’ என்று நாதி சொல்லிவிடுவார். அனேகமாக இதை அடுத்து ஒரு one-night stand இருக்கும்; நாதியும் கர்ப்பமாகி விடுவார். அதெல்லாம் விடுங்க..தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ அந்தக் கற்புக்கரசிகளின் வாயிலாக நம் இயக்குனர்கள் நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பை எப்படிக் காப்பாற்றி விட்டார்கள், பாருங்கள்!

நாதா, நாதி stage போய், ‘மாமா’ stage, அடுத்து அத்தான் stage வந்தது. அதிலும் இந்தக் கற்புக் கதைதான் தொடர்ந்தது. chain snapping என்பதற்குப் பயந்து தாலியை வீட்டில் பத்திரமாய் கழற்றிவிட்டு, பதிலாக ஒரு பித்தளைச் சங்கிலியைத் தாலிமாதிரி போட்டுக் கொள்வதோ, வெயிலுக்கும் இல்லை சாதாரணமாகவே கூட வீட்டில் தாலியைக் கழற்றி வைப்பதோ இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாய் ஆகிவிட்டது. அதில் ஏதும் தவறு இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. ஆனால் நம் இயக்குனர்களுக்கோ இன்னும் அந்த தாலி செண்டிமெண்ட் எக்கச்சக்கமா ஒர்க் அவுட் ஆகுது. தாலியை அறுத்துவிடுவது போல் வில்லன் பக்கத்தில் வந்தாலே அதே நேரத்தில் தாலி கட்டியவன் உயிரே போய்விடுவது போல நம் கதாநாயகிகள் போராடுவார்கள். அதைவிட, (சின்னத்தம்பியில்) ஒரு வயதான கைம்பெண் - அவரின் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றினாலே ஏதோ அமிலம் ஊற்றினது மாதிரியும், குங்குமத்தை நெற்றியில் இட்டாலே என்னவோ ஆனது மாதிரியோ, ஆகிவிட்டது மாதிரியோ நம் இயக்குனர்கள் செண்டிமெண்டை உருக்கி ஓடவிட்டு விடுவார்கள். தாலியை வீட்டில் கழற்றிவிட்டு திரையரங்கிற்கு வந்திருக்கும் நம் தமிழ்க் குலப் பெண்களும் பதைபதைத்து விடுவார்கள் என்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மாங்கா புளிச்சுதோ, வாய் புளிச்சுதோன்னு இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள் என்று நீங்கள் சொல்லலாம்.
ஆகவே கொஞ்சம் தனித் தனிப் படங்களைப் பார்க்கலாமா?

பெளர்ணமி அலைகள்: நல்ல படம். இளம் விதவை (அம்பிகா)வும், வீட்டுக்கு வாடகைக்கு வந்த எழுத்தாளனும் (சிவகுமார்) நன்கு பழக, அம்பிகாவின் மாமனார் தன் மருமகள் மறு திருமணம் செய்துகொண்டால் நல்லது என்று நினைக்க, மாமியார் அதைத் தவறு என்று கணவனிடம் வாதாடுவார். விதவைத் திருமணத்தைப் பற்றிய சமூகத்தின் இரு நிலைப்பாடுகள் அந்த இரு பாத்திரங்கள் மூலமாய் அழகாய் விவாதிக்கப்படும். மாமனாரின் கருத்து வெல்கிறது. இதுவரை படம் பார்க்கும் அனைவருக்குமே மறு மணம் என்பது ஆதரிக்கப் பட வேண்டிய ஒன்று என்ற மனநிலையை வெற்றிகரமாக நிறுவிய இயக்குனருக்கு (யாரென்று மறந்து போய் விட்டது) அதற்குப் பிறகு நம் சாபக்கேடான filmy compromises நினைவுக்கு வந்து அச்சுறுத்த, அதனால் கதாநாயகன் குங்குமம் வைத்ததும் தன் நெற்றியில் நெருப்பினால் சுட்டுக்குகொண்டு பாவப்பரிகாரம் செய்து கொள்வதாக முடித்து விடுவார். மறுமணம் செய்து கொண்டால் என்ன ஆகும் நம் தமிழ்ப் பண்பாடு என்று நினைத்திருப்பார் அந்த இயக்குனர்.

இதற்கு விமர்சனம் எழுதிய குமுதம் தன் ‘புத்திசாலித்தனத்தை’ நன்கு காண்பித்திருந்தது. பெளர்ணமியன்று கடலில் அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பது போல் அவ்விதவைப் பெண்ணின் வாழ்க்கையிலும் சில உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்ற பொருளில் இயக்குனர் அழகாக வைத்த பெயர் என்பது புரியாமல், இந்தப் படத்துக்கும் பெளர்ணமி அலைகளுக்கும் என்ன தொடர்போ என்று தன் விமர்சனத்திற்கு முட்டாள்தனமாக முத்தாய்ப்பு வைத்திருந்தது.

அந்த ஏழு நாட்கள்: இயக்குனர் பாக்யராஜ். கல்யாணமான உடனேயே கணவனுக்கு (ராஜேஷ்) தன் மனைவி (அம்பிகா) ஏற்கெனவே காதலித்த கதை தெரிய, காதலனையும் (பாக்யராஜ்) தேடிப்பிடித்து அவனிடம் ஒப்படைக்கும்போது காதலன் தாலியைக் காட்டி..blah…blah…

இதில் வேதனை என்னவென்றல் பாக்யராஜ் இப்படத்தின் கிளைமேக்ஸாக இரு முடிவுகள் - ஒன்று தாலி செண்டிமெண்ட்; இன்னொன்று காதலனோடு சேர்ப்பது - வைத்திருந்தாராம். முடிவெடுக்க தன் இயக்குனர் பாரதிராஜா, சீனியர் இயக்குனர் பாலச்சந்தர் இருவரையும் அழைத்து ப்ரிவியூ காண்பித்து இரண்டில் எதை வைக்கலாம் என்று கேட்டு, தாலி செண்டிமெண்ட்தான் என்று மூவருமாகத் தீர்மானித்தார்களாம். இதே டைரக்டர்கள்தான் ‘மனசுல ஒருத்தன சுமந்துகிட்டு இன்னொருத்தனோடு எப்படி வாழ்றது’ன்னு பக்கம் பக்கமா வசனம் எழுதவும் செய்வாங்க… கேட்டா இப்படி படம் எடுத்தாதான் படம் ஓடும் அப்டின்னு ஒரு தியரி…நம்ம ஆளுக சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ படத்துக்கு சுப முடிவைத் தமிழ் நாட்டுக்கும், சோக முடிவை கேரளாவிற்கும் வைத்து ஒரே படத்துக்கு இரண்டு க்ளைமேக்ஸுகள் செய்தவர்கள்தானே!

புதுப் புது அர்த்தங்கள்: இயக்குனர் திலகம் பாலச்சந்தரின் படம். இரண்டு ஜோடிகள். தத்தம் துணைகளால் அல்லல் பட்டு கதாநாயகனும் (ரகுமான்), கதாநாயகியும் தற்செயலாகச் சந்தித்து தங்கள் கதைகளைப் பகிர்ந்து, தங்களுக்குள் அன்பை வளர்த்துக் கொண்டு திருமணத்திற்குத் தயாராகும் நிலைக்கு வருகிறார்கள். இங்கு நம் தமிழ்ப் பண்பாடு குறுக்கே வந்து விழுந்து விடுகிறது. பைத்தியமாகிவிட்ட தன் மனைவியிடம் கதாநாயகனும், காலிழந்த கணவனை - அந்தக் கொடுமைக்காரக் கணவன் மனம்கூட திருந்தவில்லை; காலை மட்டும்தான் இழக்கிறான் - கண்டதும் ஓடிப்போய் தாங்கிக்கொள்கிறாள் நம் தமிழ்க்குலப் பெண். இவர்கள் மீண்டும் சேருவதற்கு எந்த நல்ல காரணங்களும் சொல்லப் படுவதில்லை. இதில் பெரிய சோகம் அந்தப் படத்திற்கு வைத்த தலைப்பு. எந்தவித சமூக பொறுப்பும் அற்ற ஒரு கதை - பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்; கல்லானாலும் கணவன்..blah…blah… என்பதையே கட்டுறுத்தும் இந்தக் கதைக்கு எப்படி இந்தத் தலைப்பு பொருந்துகிறதோ எனக்குத் தெரியவில்லை.

இப்படியாகப் பல படங்கள்; ஒரே மாதிரியான கண்ணோட்டங்கள். சமூகம் என்னவோ தன் போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் இன்னும் தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் (!?) கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் இயக்குனர்கள். இந்த நேரத்தில் ஒரு வார்த்தை; நம்மில் பலருக்குமே இந்த ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற வார்த்தையில் ஒரு மயக்கம் உண்டு. அது ஏதோ உண்மை என்று நம்மை நினைக்க வைத்த பெருமை நம் தமிழ்ப் பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், முக்கியமாக நமது சினிமாக்காரர்களுக்கு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொய்யை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. உலகம் முழுவதும் இருக்கிற பண்பாடுதான் நம்ம ஊர்லயும். இங்க மட்டும் ஒழுக்கக் குன்றுகளாக மனிதர்கள் இருப்பது போலவும் மற்ற மக்கள் எல்லோரும் மாக்களாக உலாத்துவது போலவும் ஒரு பிரம்மை. இங்கே ஒருவன் ஒருத்தி என்றிருந்திருந்தால் சிலப்பதிகாரம் வந்திருக்காது; பிறன்மனை விழையாமை என்ற வள்ளுவ அதிகாரம் வந்திருக்காது. நாமும் மற்றவர்கள் போலவே நல்லதும் கெட்டதும் கலந்த குணக்காரர்கள்தான். நாம் ஒன்றும் ஸ்பெஷல் ஐட்டம் இல்லை.












Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 01 2006 11:09 pm சினிமா
118 Responses
மதி கந்தசாமி Says:
May 1st, 2006 at 11:23 pm
நச்!!!

ரொம்ப சின்ன வயதில் நீங்க மேல சொன்னமாதிரிச் சில தமிழ்ப்படங்களைப் பார்த்து + அம்புலிமாமா கதைகளையும் படிச்சு ஆம்பிளைகளோட உயிர், அவர்களின் மனைவிமாரின் தாலியில்தான் இருக்கோன்னு நினைச்சிருக்கேன். நிசமா! )

Sivabalan V Says:
May 1st, 2006 at 11:24 pm
//‘வசந்த மாளிகை’ படத்துக்கு சுப முடிவைத் தமிழ் நாட்டுக்கும், சோக முடிவை கேரளாவிற்கும் // Really?

Good Blog! Good analysis!!

செல்வன் Says:
May 1st, 2006 at 11:26 pm
நீங்கள் சொன்ன மேற்படி படங்களை எனக்கு பார்க்கவே பிடிக்காது.காரணம் அந்த தாலி சென்டிமென்ட் தான்.

ஆனா பாலச்சந்தரே கல்கி மாதிரி படங்களை எல்லாம் எடுத்தாரே?கொஞ்சம் வித்யாசமா சிந்திக்க முயன்றார்.படம் ஊத்தி மூடியதால் பீல்டை விட்டே போய்விட்டார்.

டீவி சீரியல்களில் தாலியை வைத்து பல புரட்சிகள் நடப்பதாக கேள்விப்பட்டேன்.அது பற்றி ஏதேனும் தெரியுமா

-/. Says:
May 1st, 2006 at 11:29 pm
இதிலே சேர்க்கவேண்டிய இன்னும் சில படங்கள்
நூல்வேலி,
சொல்லத்தான் நினைக்கிறேன்
மூன்றுமுடிச்சு
எந்த பாலசந்தர் படமென்றாலும்

குமரன் Says:
May 1st, 2006 at 11:29 pm
//ஆம்பிளைகளோட உயிர், அவர்களின் மனைவிமாரின் தாலியில்தான் இருக்கோன்னு நினைச்சிருக்கேன்//

:-) Me too….

DJ Says:
May 1st, 2006 at 11:42 pm

சின்னத்திரை இயக்குநனர்களும் இப்ப திரைப்பட இயக்குநனர்களை மிஞ்சும் அளவில் தமிழ்ப்பண்பாட்டைக் காக்க வெளிக்கிட்டுவிட்டாரக்ள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்!

Padma Arvind Says:
May 2nd, 2006 at 3:10 am
தருமி, இரண்டு வாரம் முன்பு குமுதத்தில் திருமாங்கல்யத்தின் சிறப்பு பற்றி கட்டுரை படித்தேன். இந்த வாரம் சக்தி விகடனில் (தாலி இல்லை)திருமாங்கல்யம் அணிந்தால் நேரே மோட்சம்தானாம்.

ஷங்கர் Says:
May 2nd, 2006 at 3:41 am
தருமி,

அருமையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

-ஷங்கர்.

நந்தன் Nandhan Says:
May 2nd, 2006 at 3:51 am
அய்யா,

நம்ம கலாசாரக் காவல்களை இப்படி மண்னை கவ்வ விடலாமா
அதுவும் அந்த சின்னதம்பி சீன்….விட்டா கல்தோன்றி மந்தோன்றா காலத்துக்கே நம்மள கூட்டிடு போய்டுவாங்க…
இது தொடர்பா நான் ஆதி காலத்துல எழுதின ஒரு பதிவு இங்கே…

வசந்தன் Says:
May 2nd, 2006 at 4:14 am
நீங்கள் மாற்றாக வந்த சில புரட்சிகரப் படங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
‘வீரா’வில் ரஜனி செய்தது மாபெரும் புரட்சி,
பாலுவின் ‘இரட்டை வால் குருவி’ அடுத்தபடி.

பார்த்தீபனின் புதிய பாதையை எல்லோரும் (குறிப்பாக ஊடகங்கள்) ஆகா ஓகோ என்று புகழ்ந்ததைப் பார்த்துவிட்டு இரண்டுவருடங்கள் முன்புதான் அப்படத்தைப் பார்த்தேன். அதுவரை, கமலுக்கு அடுத்தபடியாக விசாலமான சிந்தனையும் பல்திறமையும் கொண்டவராக பார்த்தீபனை நினைத்திருந்தேன்.

ஷ்ரேயா Says:
May 2nd, 2006 at 4:57 am
அப்டிப் போடுங்க தருமி.!!

இவங்க சென்டி”மென்டலை” இப்பிடி சொல்லிட்டேஏ..ஏ.. போகலாம். கைம்பெண் கட்டாயம் வெள்ளைதான் அணிஞ்சிருப்பாங்க(அணிஞ்சுக்கணும்!!). மஞ்சள்நீர் ஊத்தினா சேலை நிறம் மாறாது? நிறம் மாறினப்புறம் அவுங்க விதவை இல்லையே!!!

விஜய்யும் சிம்ரனும் நடிச்ச ஒரு படம்..கண்றாவி, 3 மணித்தியாலத்தை அநியாயமாக்கின இன்னொரு ப(ப்ப)டம். கதையெல்லாம் மறந்து போச்சு(நல்லதுக்குத்தான்! ) ஆனா, முடிவுலே குழந்தை அம்மா தாலியும் அப்பா கையையுமோ என்னவோ தன் ஒவ்வொரு கையாலே பிடிச்சு “அவங்களை இணைத்து வைக்கும். சுப(ஸ்ப)ம்!”

//பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்;//

இதனாலேயே “மறுபடியும்” படம் கொஞ்சம் பிடித்திருந்தது.

suresh - penathal Says:
May 2nd, 2006 at 9:12 am
நீங்கள் சொன்ன படங்கள் எல்லாமே மிதவாதப்படங்கள் (பௌர்ணமி அலைகள்னு போட்டு நான் பாடும் பாடல் கதையை எழுதி இருக்கீங்களே?).

இதுலேயும் தீவிரவாதம் உண்டு - அதுதான் ஆன்மீகப்படங்கள் - இதுலே தாலி ஆடினால், மெழுகுவர்த்தி ஆடினால், குங்குமம் கலைந்தால் the rightful owner of the தாலி மரணிப்பது உறுதி. unless, of course, தெய்வீக குறுக்கீடு இல்லாவிட்டால் மட்டுமே. (எனக்கென்னவோ இந்தப்படங்களை தங்கள் கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்காக திராவிடர் கழகம் தான் sponsor செய்கிறதோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

தருமி Says:
May 2nd, 2006 at 12:38 pm
மதி,
உங்களுக்குச் சின்னவயதில் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீண்டு விட்டீர்கள். அந்த ‘மீட்பு’ இல்லாமல் எத்தனை ஜீவன்களோ இன்னும். (உங்களுக்குள்ள பதிலில் ஸ்மைலி இல்லாமல் போகலாமா )

தருமி Says:
May 2nd, 2006 at 12:42 pm
சிவபாலன்,
என்ன இப்படி கேட்டுட்டீங்க…நிஜமாலுமேதான். நம்ம ஆளுகளுக்கு அந்தக் காலத்திலேயே tragedies பிடிக்காதென்பது நம் இயக்குனர்களின் ஆழ்ந்த கருத்து. கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது; எண்ணிக்கை 8 வந்திரும்!) - இதனாலேயே ஒரு மைல்கல்லாக அமைந்தது.

sankar Says:
May 2nd, 2006 at 12:42 pm
//
எனக்கென்னவோ இந்தப்படங்களை தங்கள் கருத்துகளை மக்களிடம் பரப்புவதற்காக திராவிடர் கழகம் தான் sponsor செய்கிறதோ என்று ஒரு சந்தேகம் உண்டு.
//

பெரும்பான்மையான தமிழ் இயக்குனர்கள் மற்றும் ஒரு சில நடிகர்கள், திராவிட இயக்கங்களின் sympathizers ஆக இருப்பது உண்மை.

உண்மையாக, தலி செண்டிமெண்ட், கல்லானாலும் கணவன், தான் தமிழ் பண்பாடா?

தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது ஆனால், அது நம் கோலிவுட் (ஒரிஜினலா பெயர் கூட வைக்கத் தெரியவில்லை!!) படங்கள் காட்டுவது அல்ல.

ஷங்கர்

தருமி Says:
May 2nd, 2006 at 12:44 pm
கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது—-மன்னிக்கணும்; ‘ப்’ வரக்கூடாது…

pot"tea"kadai Says:
May 2nd, 2006 at 12:52 pm
“அனேகமாக இதை அடுத்து ஒரு one-night stand இருக்கும்; நாதியும் கர்ப்பமாகி விடுவார்”

இதை காமிக்கும் போது “கலாச்சார எழவு” அவங்க கண்ணுக்குத் தெரியாது.

//இயக்குனர் திலகம் பாலச்சந்தரின் படம்//

வித்தியாசமாகப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று “MCP” மனப்பான்மையை உரமூட்டி வளர்த்து வருபவர்.

என்னத்த சொல்றது…இன்னும் நிறைய உதாரணங்களைக் கொடுக்கலாம். “கமெர்ஷியல்” மனப்பான்மை மட்டுமே உள்ள தமிழ் சினிமாத் துறை திருந்துவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. அன்னம் போல “ஒளிப்பதிவு” போன்ற சமாச்சாரத்தை மட்டும் ரசித்து விட்டு மற்றதை விட்டுட வேண்டியது தான்.

ramachandranusha Says:
May 2nd, 2006 at 1:02 pm
தருமி சார், ரகுவரன் ஒரு படத்தில் ஐநோ வை ஐநூறு முறை சொல்வாரே அந்த படம் என்று நினைக்கிறேன். அவர் கட்டிய
தாலி டாய்லட் பிளஷ் பிடியில் மாட்டி, இழுக்கப்பட்டு ஓட்டையில் விழுந்து, ஜெயசித்ரா தெரியாமல் பிளஷ் பிடியைப் பிடிக்க,ஓட்டைக்குள் போய்விடும். பார்க்க வருத்தமாய் இருந்தது. நல்லா ஆறுபவுனுக்கு குறையாத தாலியுடன் கூடிய தங்கக்கொடி அதைப் பார்த்திருக்கீங்களா?

பத்மா, திருமாங்கல்யம் வேற, தாலி வேறையா? எங்க விட்டுக்காரர் எதைக் கட்டினார்? அது என்ன நேரா சொர்க்கம்?
அப்ப, இந்து பெண்களுக்கு சொர்க்கம் கேரண்டியா?

Dharan Says:
May 2nd, 2006 at 1:34 pm
இந்திய தமிழக கலாச்சாரம் பற்றி எனக்கு நிரம்ப சந்தேகம் உண்டு..

http://manamay.blogspot.com/2006/04/blog-post_114590688834090905.html

மற்றபடி இன்றைய சினிமா மாறி இருக்கிறது என்றே தோன்றுகிறது…

பொன்ஸ் Says:
May 2nd, 2006 at 1:51 pm
பாத்துங்க.. மருத்துவர் ராமனாதன்,… சாரி, மருத்துவர் ராமதாஸ், நீங்க தமிழையும் தமிழர்களையும் அவமானப் படுத்திட்டீங்கன்னு கிளம்பிட போறாரு..

முத்து(தமிழினி) Says:
May 2nd, 2006 at 2:22 pm
தருமி,

இந்த படங்கள் எல்லாம் வெற்றி படங்கள்தானே?

எப்படியோ கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு பிறகாவது தமிழரின் உண்மையாக கலாச்சாரம் என்ன என்பதைப்பற்றி மக்கள் பேசுவது சந்தோசம் அளிக்கிறது.

மதியின் பின்னூட்டம் சூப்பர்…சிரிப்பை அடக்கவே முடியவில்லை

பொன்ஸ் Says:
May 2nd, 2006 at 2:23 pm
மிஸ் ஆன ஸ்மைலிக்காக

தருமி Says:
May 2nd, 2006 at 2:25 pm
பார்ட்னர்,
“பாலச்சந்தரே கல்கி மாதிரி படங்களை எல்லாம் எடுத்தாரே?..//
என்ன பார்ட்னர் சொல்றீங்க… if i understand you right, do you mean to say kalki is a good movie?????
அம்மாடியோவ், (என்னைப் பொறுத்தவரை)முட்டாள்தனமான படங்கள் பத்து சொல்லு அப்டின்னா, கல்கியை அதில் சேர்ப்பேன். ஒரு பெண் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனுடன் சேர்ந்து கர்ப்பம் தரிப்பாளாம். அட ஆண்டவா! இதென்ன கொடுமை. is there any logic or sense in that concept?? i prefer she does -what is that word for that - barbitoed or something…you got what i mean. ஒங்க ஊர்லதான் நடந்தது. to punish a lousy hubby she simply removed his organ when the guy was sleeping.i can understand the latter and not your kalki’s philosophy!!!

தருமி Says:
May 2nd, 2006 at 2:30 pm
-/.
என்னங்க ரொம்ப symbolic-ஆன பெயரா வச்சிக்கிட்டீங்க போலும்! என்னன்னுதான் புரியலை. உங்கள் எப்படி கூப்பிடறது?

வந்ததுக்கும் சொன்ன சேதிக்கும் நன்றி

தருமி Says:
May 2nd, 2006 at 2:32 pm
kumaran,
இது மாதிரி என்னவெல்லாம் நினச்சிக்கிட்டு இருந்தீங்களோ…இல்ல?

தருமி Says:
May 2nd, 2006 at 2:35 pm
DJ,
அடுத்த பதிவுக்கு ‘முதலடி’ எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

அதயும் எழுதிடுவோம்…வந்திருங்க…

பொன்ஸ் Says:
May 2nd, 2006 at 2:40 pm
தருமி, சின்னத் திரைக் கூத்துக்கள் பத்தி எழுத ஒரு பதிவு போதுமா?

தருமி Says:
May 2nd, 2006 at 2:41 pm
பதமா,
எத்தனை பவுன்ல தாலி…இல்ல…திருமாங்கல்யம் இருந்தா அப்டின்னு ஏதாவது சொல்லியிருந்துச்சா…ஏன்னா தங்க நகைக்கடைக்காரங்க எல்லாருமா சேர்ந்து தங்கத்தில, இத்தனை பவுனில திருமாங்கல்யம் செய்தா இன்னின்ன பலன் அப்டின்னு சொன்னாங்கன்னு வச்சுக்கிங்க…அவங்க பாடு கொண்டாட்டம்தான். நம்ம ஆளுக ‘திருமாங்கல்ய வாஸ்து’ அப்டின்னு ஒரு புது branch of science ஆரம்பிச்சிடுவாங்க…

அடடே , தருமிக்கு கற்பனை கரை புரண்டு ஓடுதே…இத வச்சே ஒரு கதை எழுதலாம்போல இருக்கு

தருமி Says:
May 2nd, 2006 at 2:47 pm
நன்றி ஷங்கர். பணி அப்டின்னு பெரிய வார்த்தையெல்லாம் போட்டுட்டீங்களே

நந்தன்,
ஒரு முக்கியமான கதையமைப்பை விட்டுட்டீங்களே..அத அங்கே சேர்த்துட்டேனே.

தருமி Says:
May 2nd, 2006 at 2:50 pm
ஆமா வசந்தன் கட்டாயமா சேர்க்க வேண்டிய studpid படங்களில் புதிய பாதையும் ஒன்று. முட்டாள்தனத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.

தருமி Says:
May 2nd, 2006 at 2:55 pm
ஷ்ரேயா,
இனிமே நம்ம பதிவில எப்போ ‘மழை’ வந்து…என்னத்த…அப்டின்னு நெனச்சுக்கிட்டு இருந்தப்போ …வாங்க ஷ்ரேயா வாங்க…எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா?

‘மறுபடியும்’ நல்ல படம்…நம்ம ஊரு ஒரிஜினல் இல்லியேன்னு கொஞ்சம் வருத்தம்….

தருமி Says:
May 2nd, 2006 at 3:03 pm
சுரேஷ்,
அடடா, அப்படி ஒரு தப்பு ஆகிப்போச்சா?? அந்தக் கதை என்னென்னு நினைவில்லையே.
சரி அப்படியே விட்டு விடுகிறேன். தலைய விட்டுட்டு உடம்ப மட்டும் எடுத்துக்கட்டும்…

“திராவிடர் கழகம் தான் sponsor செய்கிறதோ …” எப்படிங்க, இதில வீரமணி (ஐயங்கார்)-க்கு என்ன லாபம்? நான் அவரை அப்படித்தான் செல்லமா கூப்பிடறது..ஹி..ஹி..

முத்துகுமரன் Says:
May 2nd, 2006 at 3:04 pm
//ஒரு பெண் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனுடன் சேர்ந்து கர்ப்பம் தரிப்பாளாம். அட ஆண்டவா! இதென்ன கொடுமை.//

புரட்சி!! புரட்சி!!!!!

கோ.இராகவன் Says:
May 2nd, 2006 at 3:05 pm
நல்ல பதிவு தருமி…இதத்தான் தலைதலையா நானும் கத்துறேன்…ஒருத்தன் கேக்க மாட்டேங்குறான்…..சிலப்பதிகாரத்தைக் கூட ஒழுங்கா புரிஞ்சிக்காம பேசுறவங்கதான் நெறையா இருக்காங்க…கண்ணகி கணவனை மறுபேச்சுப் பேசாம இருந்து வாழ்ந்ததுக்குக் கற்புக்கரசீன்னு போற்றப்படலைன்னு தெரியுமா? சிலப்பதிகாரம் படிச்சவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எதை வெச்சிக் கண்ணகி கற்புக்கரசீன்னு முடிவுக்கு வர்ராங்கன்னு தெரிஞ்சா வியப்புதான் பலருக்கு மிஞ்சும்….

ஒரு படம்…கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படம். சாரதான்னு. அதுல கணவன் விபத்துல ஆண்மைய இழந்துருவான். அவளுக்கு இரண்டாம் கல்யாணம் செய்ய கணவனும் அவனுடைய அம்மாவும் முயற்சி செய்வார்கள். உண்மையிலேயே மிகவும் புரட்சிகரமான படம்தான். ஆனால் சரியா படம் முடியும் போது மேடையிலேயே கதாநாயகியைக் கொன்னு கற்பைக் காப்பாத்துவாங்க. உள்ளபடிக்குச் சொன்னா…அந்தக் காலத்துல இந்த அளவுக்கு எடுத்ததே அதிசயம்.

அதுவுமில்லாம….இந்த மாதிரி அபத்தங்களை எதுத்தா….நம்ம நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையுறோம்னும் சொல்ல ஆட்கள் உண்டு. ))))

தருமி Says:
May 2nd, 2006 at 3:19 pm
மன்னிக்கணும் sankar,
“தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது …”//
இதைத்தான் நான் கெட்ட வார்த்தை என்கிறேன். கோவிச்சுக்காம சொல்லுங்க சங்கர்…எந்த விஷயத்தில நாம மற்றவங்கள விட மேலானவங்க…என்ன சிறப்புப் ‘பண்பு’ மற்றவங்ககிட்ட இல்லாதது நம்மட்ட இருக்குன்னு சொல்ல முடியுமா?

எல்லோரிடமும் இருப்பது ஒரே ‘மனிதப் பண்பாடு’. இவைகள் நாம் வாழும் சமூகக்கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், mores, valeus, taboos - இவற்றுக் ஏற்றாற்போல மாறுமே ஒழிய மனிதப் பண்பும், பண்பாடும் எங்கும் எல்லோருக்கும் ஒன்றே. வெறும் மேடைப் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்குள்நாமே ஒரு போலி image-யை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே என்கருத்து, சங்கர்.
மாற்றுக் கருத்துக்களிருப்பின் மீண்டும் வாருங்கள்;விவாதிப்போம்.

swamy red bull Says:
May 2nd, 2006 at 3:20 pm
//கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு //



முத்து(தமிழினி) Says:
May 2nd, 2006 at 3:24 pm
“தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது …”//

இதைத்தான் நான் கெட்ட வார்த்தை என்கிறேன். கோவிச்சுக்காம சொல்லுங்க சங்கர்…எந்த விஷயத்தில நாம மற்றவங்கள விட மேலானவங்க…என்ன சிறப்புப் ‘பண்பு’ மற்றவங்ககிட்ட இல்லாதது நம்மட்ட இருக்குன்னு சொல்ல முடியுமா?

இதை ரொம்ப காலமாச் சொல்றாங்க..தனி பதிவு போட்டு என்னன்னு கேளுங்க தருமி…

தருமி Says:
May 2nd, 2006 at 3:28 pm
ramachandranusha
I know…ஆனா மரந்து போச்சு…உங்க சோகம் புரியுது..

இந்து பெண்களுக்கு சொர்க்கம் கேரண்டியா? // என்னங்க விளையாடுறீங்களா? நானும்தான் எங்க வீட்டுக்காரம்மாவுக்குத் தாலி..இல்லீங்க..திருமாங்கல்யம் கட்டுனேன். அப்போ அவங்களுக்கு சொர்க்கம். நானும் எப்படியாவது அவங்ககூட ‘ஒட்னிஸ்’ போட்டுக்கிட்டு போயிடுவேனே

sankar Says:
May 2nd, 2006 at 3:29 pm
//
எல்லோரிடமும் இருப்பது ஒரே ‘மனிதப் பண்பாடு’. இவைகள் நாம் வாழும் சமூகக்கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், mores, valeus, taboos - இவற்றுக் ஏற்றாற்போல மாறுமே ஒழிய மனிதப் பண்பும், பண்பாடும் எங்கும் எல்லோருக்கும் ஒன்றே. வெறும் மேடைப் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்குள்நாமே ஒரு போலி image-யை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதே என்கருத்து, சங்கர்.
//

ஐயா, நீங்கள் விவாதிக்க விரும்பும் தளம் வேறு. நான் கூறிய தளம் வேறு. நான் சொன்னது, சினிமாவில் காட்டப்படும் கேவலத்தை “தமிழ் பண்பாடு” என்று சினிமா இயக்குனர்கள் கூறுவதையும் உண்மையாக வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் பற்றிய என் கருத்து.

மற்றபடி நீங்கள் கூறும் பொதுவான “மனிதப் பண்பாடு” என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நன்றி,
ஷங்கர்.

தருமி Says:
May 2nd, 2006 at 3:30 pm
பொட்டீக்ஸ்,
அன்னம் மாதிரி குடிச்சிட்டு போகலாம்தான்; ஆனா அப்பப்போ தொண்டைக்குள்ள ஏதாவது தட்டுப்பட்டு விடுகிறதே…

தருமி Says:
May 2nd, 2006 at 3:33 pm
தரண்,
ஏற்கென்வே சங்கருக்குச் சொன்ன பதில் உங்கள் பதிவில் நீங்கள் கேட்டுள்ள கேள்விக்குப் பதிலாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மீண்டும் உங்கள் பதிவுக்கு வருகிறேன்.
‘புதுப் புது அர்த்தங்கள்’ படத்துக்கு ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தேன். ஒண்ணும் சொல்லலை..

தருமி Says:
May 2nd, 2006 at 3:35 pm
பொன்ஸ்,
நீங்க சொன்ன இரண்டு பேர்ல இரண்டாமவர் வந்ததே இல்லை! முதலாமவர் வந்து போய்க்கிட்டு இருந்தார்; இப்போ கொஞ்ச நாளா ஆளே காணோம்; ‘டூ’ போட்டுட்டார் போலும்; பார்த்தா சொல்லுங்க

தருமி Says:
May 2nd, 2006 at 3:38 pm
நட்சத்திரமே,
வருக…உங்கள் வரவுக்கு (to use the regular cliche: amidst your busy schedule this week) நன்றி

திரு Says:
May 2nd, 2006 at 3:41 pm
//இவர்கள் மீண்டும் சேருவதற்கு எந்த நல்ல காரணங்களும் சொல்லப் படுவதில்லை. இதில் பெரிய சோகம் அந்தப் படத்திற்கு வைத்த தலைப்பு. எந்தவித சமூக பொறுப்பும் அற்ற ஒரு கதை - பெண்ணை ஒரு தனிஆளாக அல்லாது வெறும் ஒரு ஆணின் துணையாக மட்டுமே கருதும் கருத்தாக்கம்; கல்லானாலும் கணவன்..blah…blah… என்பதையே கட்டுறுத்தும் இந்தக் கதைக்கு எப்படி இந்தத் தலைப்பு பொருந்துகிறதோ எனக்குத் தெரியவில்லை.//

பழைய பழைய அர்த்தங்கள்-னு வச்சிருக்கலாம் பதிவு அருமை தருமி.

ramachandranusha Says:
May 2nd, 2006 at 3:54 pm
தருமி சார், தமிழர் பண்பாடு என்றால் மற்ற இந்திய சினிமா மொழியில் “சன்ஸ்கிருதி” (ஸ்பெல்லிங் கரைட்டா), பல
படம்களில் பாரத் சன்ஸ்கிருதி வரும். இந்தி சீரியல், படங்களில் “மங்கல் சூத்ரூ” பெருமை பேசப்படும். ஆனால் சாதாரணமாய் வட இந்தியர்கள் தாலி/ மங்கல்யம் அணிவதில்லை.
இன்னும் என் கேள்விக்கு பதில் வரவில்லை. தாலி என்பது செயில் கோர்க்கப்படும்/ முதலில் கயிற்றில் கட்டப்படும் வஸ்து
என்றல்லவா நினைத்திருந்தேன். திருமாங்கல்யம்/ தாலி (டெலி சீரியல் பெயர் இல்லைங்க) என்ன வித்தியாசம்?

தருமி Says:
May 2nd, 2006 at 4:08 pm
முத்துக்குமரன்,
ஆனாலும் இந்த வார்த்தை ‘புரட்சி’ அப்டிங்கிறதுக்கு என்ன அர்த்தம்னே தெரியாம போச்சுங்க..

தருமி Says:
May 2nd, 2006 at 4:21 pm
ஜீரா,
இந்த மாதிரி அபத்தங்களை எதுத்தா…” // ‘நீ அப்படி இருந்தா அதுக்காக எல்லாருமா அப்படி’ ஜப்டின்னும் பதில் வாரும்.
சரி, அத விடுங்க, ஒரு பொடி வச்சு சொல்லியிருக்கீங்க…கண்ணகி கற்புக்கரசி அப்டிங்கிறதுக்கு உள்ள காரணம் சொல்லுங்களேன், please

தருமி Says:
May 2nd, 2006 at 4:30 pm
வாங்க செங்காளை,
“கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு ..”//
அப்டின்னா ன்னங்க அர்த்தம்?

(பழங் கதைகள் எனும் )கட்டுக்களை உடைத்த தலைவி என்றுதானே பொருள்??

தருமி Says:
May 2nd, 2006 at 4:35 pm
சங்கர்,
“எனக்கு மாற்றுக் கருத்து இல்லை”// மன்னிச்சிக்கோங்க…தவறா புரிஞ்சிக்கிட்டேனோ?

டோண்டு N. ராகவன் Says:
May 2nd, 2006 at 5:17 pm
i prefer she does -what is that word for that - barbitoed or something-you got what i mean
It is called Bobbitted, after the fellow Bobbit, whose wife deided, he shall no longer be a fellow.

கல்யாண பரிசு (ஒ-வரக்கூடாது’-மன்னிக்கணும்; ‘ப்’ வரக்கூடாது’)
ஒ வரக்கூடாது என்பதும் சரிதான், ஒ = ஒற்று மிகுதல்.

“திருமாங்கல்யம் அணிந்தால் நேரே மோட்சம்தானாம்.”
யாருக்கு? கணவருக்கா?

ஆனால் நம் சக பிளாக்கர்களிலும் இந்த இரட்டை நிலைதானே தலை விரித்தாடுகிறது? ஆண் பெண் கற்பு நிலைகளை பற்றி நான் போட்ட 3 பதிவுகளையும் அவற்றுக்கு வந்த பின்னூட்டங்களையும் பாருங்களேன்.

http://dondu.blogspot.com/2005/10/1_11.html
http://dondu.blogspot.com/2005/10/2_14.html
http://dondu.blogspot.com/2005/10/3.html

உங்கள் பதிவு பிளாக்கரில் இல்லாததாலும், ஆகவே எலிக்குட்டி மற்றும் போட்டோ சோதனையெல்லாம் இங்கே பலிக்காததாலும், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க அதன் நகலை என்னுடைய ஆண் பெண் கற்புநிலை பற்றிய மூன்றாம் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்து(தமிழினி) Says:
May 2nd, 2006 at 5:37 pm
//கட்டுடைத்தலைவி குஷ்புவிற்கு//

முதல்ல இந்த வார்த்தை பேடண்ட் உரிமை நம்மது..நம்ப பின்னூட்டத்தில் இருந்து எடுத்து என்நண்பன் ரெட்புல் சிரிச்சாரு..அத்த நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க..

குஷ்பு சொன்னது தப்பேயில்லை..ஆனால் யார் இங்க யோக்கியம்னு கேட்டாங்கள்ள..தன்னை வைச்சு அடுத்தவங்களை எடை போட்டாங்கள்ள..அதுதான் தவறு…

இன்னொன்று வயசுக்கு வந்தவங்க கல்யாணத்திற்கு முன்னாடி தப்பு பண்ணியே ஆகணும்கிற தொனி அவங்க பேச்சில் இருந்தமாதிரி எனக்கு பட்டது…

மணியன் Says:
May 2nd, 2006 at 6:01 pm
தமிழ் சினிமாவின் தாலி சென்டிமென்ட் பொதுமக்களாலேயே தாங்க முடியாமல் நக்கலடிக்கப் படும் விதயம் தான்.

ஆனாலும் நிங்கள் சொன்ன ‘அறிவுஜீவி’ இயக்குனர்களின் வாழைப்பழத்தில் ஊசியேற்றும் ஆணாதிக்கக் கருத்துக்களும் பண்பாடு என்பதைவிட ஆங்கிலத்தில் (ஃப்ரென்ச்சா ?) Cliche’ எனப்படும் கட்டமைப்புகளில் திரையுலகம் தடுமாறுவதையும் அனைவரும் விவாதிக்க ஒரு களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.நல்ல பதிவு.

ramachandranusha Says:
May 2nd, 2006 at 6:52 pm
50

selvan Says:
May 2nd, 2006 at 8:47 pm
if i understand you right, do you mean to say kalki is a good movie?????
அம்மாடியோவ், (என்னைப் பொறுத்தவரை)முட்டாள்தனமான படங்கள் பத்து சொல்லு அப்டின்னா, கல்கியை அதில் சேர்ப்பேன். ஒரு பெண் ஒருவனைத் தண்டிப்பதற்காக அவனுடன் சேர்ந்து கர்ப்பம் தரிப்பாளாம். அட ஆண்டவா! இதென்ன கொடுமை. is there any logic or sense in that concept??//

No partner.

In the climax of that movie balachandar would have shown that the heroine, after having a baby with prakasraj ,marries Rahman.Thankfully Balachandar did not show it as kalki and sri geetha and renuka living with a reformed prakashraj

Kalki sucks.I agree.But atleast the thali sentiment was broken in that movie

ஷ்ரேயா Says:
May 3rd, 2006 at 5:01 am
ஆகா..கிடைச்ச இடைவெளியில நைசா கடிச்சிட்டீங்களே!

புதிய பாதை படம் பார்த்ததில்ல.. எடுத்துப்பார்த்து 3 மணித்தியாலம் வீணாக்காமே, யாரவது கதைச் சுருக்கம் சொல்லுங்கப்பு.
“மறுபடியும்” அசல் யாருடையது? என்ன மொழி?

Padma arvind Says:
May 3rd, 2006 at 3:57 pm
This is for Sankar: http://reallogic.org/thenthuli/?p=121

தருமி Says:
May 3rd, 2006 at 4:42 pm
ரா.உஷா,
you are off the target. better luck for the 75th

தருமி Says:
May 3rd, 2006 at 4:47 pm
முத்து-தமிழினி,
“இதை ரொம்ப காலமாச் சொல்றாங்க..தனி பதிவு போட்டு என்னன்னு கேளுங்க தருமி… .” //
பத்மா நேரடி அனுபவமாக, ஆழமாக ஒரு பதிவு எழுதியுள்ளார்கள்.http://reallogic.org/thenthuli/?p=121

யார் எழுதி என்ன செய்ய? நம் மீடியாக்கள் நாம் ஒருபடி ஏறினால் இரண்டு படி இறக்க ஆவன செய்கின்றனவே

தருமி Says:
May 3rd, 2006 at 4:51 pm
நன்றி திரு.

முத்து-தமிழினி,
கட்டுடைத்த'’ - ஐயா, உங்கள் காப்பி ரைட் மீறினதுக்கு ரொம சாரிங்க

தருமி Says:
May 3rd, 2006 at 5:00 pm
டோண்டு,
1. ஆங்கில வார்த்தை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி. அவனது மனைவியின் பெயர்: Joanna Ferrell, அப்படியானால் bobbitted என்பதற்குப் பதில் ferrelled என்றுதானே வைத்திருக்க வேண்டும்
2. இலக்கணம் புரியலை.
3. முழுமையாக நீங்கள் சொல்வதில் கருத்துடன்பாடு இல்லை.

தருமி Says:
May 3rd, 2006 at 5:02 pm
அய்யன்மீர் / அம்மாமீர்
யாராவது இங்க வாங்களேன்; வந்து தாலி/திருமாங்கல்யம் - இரண்டுக்கும் உள்ள 6 ஒற்றுமை/வேற்றுமைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்.
உஷா படுத்துராங்களே

Prasanna Says:
May 3rd, 2006 at 9:22 pm
அய்யோ! இவனுங்க பண்ற அநியாயம் பெரிய அநியாயம்ங்க. அதாவது பெண் புத்தி பின் புத்தினு படம் எடுத்தவங்க தான. கலாபக் காதலன் அப்படின்னு ஒரு படம். சைட் டைட்டில் “காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது?” படம் பார்த்துட்டு எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. அதாவது அந்த ஹீரோ வ அவன் பொண்டாட்டியோட தங்கச்சி கரெக்ட் பண்ண ட்ரை பண்ணும். அவன் அதுக்காக ஊர்ல இருந்து ஒருத்தன கூப்டு வந்து அவள பலாத்காரம் பண்ண ஐடியா குடுப்பார்.அந்த பொண்ணு அப்புறம் அவன கல்யாணம் பண்ணிகிட்டு அப்புரம் தற்கொலை பண்ணிகிட்டு செத்து போயிடும்.

கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழிச்சவன் கூட தான் சேர்ந்து வாழணுமா?? தனியா வாழக் கூடாதா?
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல! நான் எனக்கு வரப்போற மனைவி எப்படி இருந்தாலும் கவலை இல்லை. குஷ்பு சொன்ன மாதிரி இருந்தா கூட. இப்பொ எல்லம் என்னல்லாமோ நடக்குது. தப்பு நடக்க வாய்ப்பே இல்லைனு சொல்றதுகில்ல. அதனால கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க எப்படி நடந்துக்குறாங்கனு தான் பார்க்கணும்.

இதே மாதிரி ஒரு கருத்தை எங்க அண்ணன் கல்யாணத்துக்கு முந்தின நாள் பேசிகிட்டு இருக்கும்போது சொன்னதுக்காக பயங்கரமா வாங்கி கட்டிகிட்டேன். என்னத்த கருத்து சுதந்திரம்!!!

தருமி சார், ஒரு 200 பின்னூட்டம் அடிக்கும் போல இருக்கு. வாழ்த்துக்கள்.
அன்பில் தம்பி,
பிரசன்னா

தருமி Says:
May 3rd, 2006 at 9:28 pm
ப்ரசன்னா,
ரொம்ப ஓப்பனா பேசிட்டீங்க…

“ஒரு 200 பின்னூட்டம் அடிக்கும் போல இருக்கு. “//
- அதெல்லாம் இல்ல தம்பி. நம்ம ரேஞ்ச் 75 தாண்டாது

பொன்ஸ் Says:
May 3rd, 2006 at 9:41 pm
தருமி, அப்படியே 200 கிட்ட போறா மாதிரி இருந்தாலும், நீங்க “ஐயோ. எனக்கே கஷ்டமா இருக்கே.. இத விட நல்ல பதிவெல்லாம் இருக்கறச்சேன்னு இதுக்குப் போய் இப்படி சேருதேன்னு” சொல்லுவீங்க.. எப்படிங்க 75 தாண்டும்??

தருமி Says:
May 3rd, 2006 at 10:04 pm
என்னங்க பொன்ஸ் பண்றது? அப்பப்போ இந்த பாழாப்போன மனசு உண்மையைச் சொல்லிடுது
அப்படியும் இங்க என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா?

தருமி Says:
May 3rd, 2006 at 10:08 pm
Partner,
“…thali sentiment was broken in that movie ..” - you’re are right on that point..

தருமி Says:
May 3rd, 2006 at 10:09 pm


வசந்தன்,

உங்கள் குளுவிற்கு நன்றி. ஒரு மாதிரியாக ஒருவரை அனுமானித்துள்ளேன்.




தருமி Says:
May 3rd, 2006 at 10:10 pm
ஷ்ரேயா,
story on one line: காசுக்காகத் தன்னைக் கற்பழித்த ரெளடியைத் தேடிப்பிடித்துக் காதலித்து, கைப்பிடித்து… டண்ட டய்ங்.(அதாவது, செத்துருவா..க.நாயகன் குழந்தையோடு walks into the sun!)
எப்டி கதை?

மறுபடியும்: இந்தி - ஷியாம் பெனகல் ..??

ஷ்ரேயா Says:
May 4th, 2006 at 8:25 am
இரண்டு கேள்விகள் தருமி.

1. புதிய பாதை கதை சொன்னதுக்கு நன்றி. ஆனா ஏன் கதாநாயகி அப்பிடிச் செய்றாங்க/செய்யணும்? வல்லுறவுக்குட்படுத்தியவனைத் தான் கட்டிக்கணும்கிற “பண்பாடா”? (அப்பாவி கோவிந்தன் மாதிரிக் கேட்கிறேனோ??)

2. நேற்றிரவு சிப்பிக்குள் முத்து பார்த்தேன். கமல்(லின் பாத்திரம்) கட்டும் தாலியை அதிர்ச்சியுடன் பார்க்கும் ராதிகா(வின் பாத்திரம்), ஏன் அதைக் கழற்றவில்லை? (இதைக் கேட்டதுக்கு வீட்லே “அப்பிடிக் கழட்டிட்டா படம் இதோடயே முடிஞ்சுரும்” னாங்க)

துளசி கோபால் Says:
May 4th, 2006 at 9:51 am
அடடே… இப்படி ஒண்ணு இங்கே நடந்துக்கிட்டு இருக்கறதைக் கவனிக்காம என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்?

நம்ம கருத்தைச் சொல்லலைன்னா எப்படி? நல்லா இருக்குமா?

‘கள்’ ஆனாலும் கணவன் & ‘ஃபுல்’ ஆனாலும் புருஷன். இதை முதல்லே புரிஞ்சுக்கிடுங்க.

ஆச்சா… இப்ப

தாலிவாஸ்து.

சொர்க்கத்துக்கு நேரே போகணுமுன்னா 21 பவுன் தாலிச்சங்கிலியிலே நல்லதா ரெண்டு பக்கமும் கல்வச்ச
மோப்பு(முகப்பு) சேர்த்த தாலியைக் கட்டணும். கூடவே புருஷனும் போகணுமுன்னா மோப்புலே வைரக்கல்
பதிச்சிருக்கணும்.

முக்கியமாக் கவனிக்க வேண்டியது. மேற்படி நகைக்கான செலவு முழுசும் கணவனே செய்யணும்.

அம்மா வீட்டுலெ செலவு செஞ்சிருந்தா, புருஷனுக்கு நரகம்தான்.

தருமி Says:
May 4th, 2006 at 12:54 pm
கெடுத்தீங்களே துளசி,
வீட்டுக்கார அம்மா தாலியிலே 21 பவுன் இல்ல; ரெண்டு மோப்பு இல்ல; ஒண்ணுதான். - இந்த ரேஞ்சுக்கு என்ன பலன் அப்டின்னு சொல்லுங்க. நிச்சயமா எனக்கு நரகம்தான்…நாங்க வைரத்துக்கு எங்க போறது, சொல்லுங்க? ஆனாலும் சொர்க்கம் இவ்வளவு காஸ்ட்லின்னு தெரியாம போச்சு..விடுங்க, நாங்க நல்ல கம்பெனி இருக்கிற எடத்துக்குப் போய்க்கிறோம்.

அதுசரி, உஷா சந்தேகம் யார் தீர்க்கிறது?

தருமி Says:
May 4th, 2006 at 12:58 pm
என்ன ஷ்ரேயா,
இதுகூட தெரியலைன்னா என்ன பண்றது? அதான் ஏற்கெனவே சொல்லியிருக்கோம்ல!
“இனி ‘தொட்ட’ பாவம் அவரை விடாது. ‘என்னைத் தொட்டுத் தூக்கியவரே இனி என் நாதர்’ என்று நாதி சொல்லிவிடுவார். …தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ அந்தக் கற்புக்கரசிகளின் வாயிலாக நம் இயக்குனர்கள் நம் தமிழ்ப் பெண்டிரின் கற்பை எப்படிக் காப்பாற்றி விட்டார்கள், பாருங்கள்!”//
இப்பவாவது புரியுதா?
2=-வது கேள்விக்கு வீட்டிலேயே நல்ல பதில் சொல்லிட்டாங்களே!

பொன்ஸ் Says:
May 4th, 2006 at 1:00 pm
//அம்மா வீட்டுலெ செலவு செஞ்சிருந்தா, புருஷனுக்கு நரகம்தான். //
:)
அப்போ தமிழ் நாட்டுல இருக்கற எல்லா புருஷங்களுக்கும் நரகம் தானாக்கா? )

கமல் Says:
May 4th, 2006 at 7:38 pm
தாலிதானம் படத்தைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே! லக்ஷ்மியோட நடிப்புக்காகவே பலமுறை பார்க்கலாம்.

துளசியோட தாலிவாஸ்து நல்லா ஒர்க் அவுட் ஆகுது. நேத்து என் அம்மாவிடம் போனில் சொன்னேன். அப்புறம் அவங்க பக்கத்து மற்றும் எதிர் வீட்டாரிடம் சொல்லப்போய், ஊர் முழுக்க இதுதான் இப்போ ‘ஹாட் டாபிக்’காம். இதைக்கேட்டு, அடுத்த மாதம் கல்யாணம் பண்ணிக்கப்போகும் எங்க தெருப்பையன் ஒருத்தன் பேயறைஞ்சமாதிரி ஆயிட்டானாம்! எதுக்கும் இப்பவே காப்புரிமை பதிவு செஞ்சுடுங்க!

நன்றி
கமல்

தருமி Says:
May 4th, 2006 at 9:08 pm
துளசி,
கமல் சொன்னது கேட்டுச்சா..? அப்டியே எனக்கும் ஒரு பார்ட்னர்ஷிப்

பொன்ஸ் வேற என்னமோ கேட்டிருக்காங்க…

தருமி Says:
May 4th, 2006 at 9:10 pm
மக்களே,
என்ன ஆச்சு, இந்தக் கடைசியா போடுற 10 பின்னூட்டங்கள் திடீர்னு குண்டு குண்டா வருதே ..ஏன்? எப்படி? மறுபடி ஒழுங்கா கொண்டு வர்ரது எப்படி? Help…help…

Prasanna Says:
May 4th, 2006 at 9:46 pm
சிவாஜி யோட மாஸ்டர் பீஸ் எல்லாம் லிஸ்ட் போட்டா போட்டுகிட்டே இருக்க வேண்டியது தான். இங்க மட்டுமா இந்த நிலமை. எனக்கு கிளமெண்ட் ஈஸ்ட்வுட் பத்தி தெரியாது, ஆன சீன் கானெரி தெரியும். அர்னால்ட் தெரியும், ஆனா அந்த காலத்துல வேற நடிகர பத்தி தெரியாது. ஆக்சன் ஹீரோஸ் எப்பவுமே மவுசு தான்.

கமல் Says:
May 4th, 2006 at 10:19 pm
மறுபடியும் ஒழுங்கா வராது சார்! இனிமேல் வர்ற எல்லாப் பின்னூட்டங்களும் இப்படித்தான் வரும்னு நினைக்கிறேன்.

வசந்தன் clue-விற்கு நன்றி சொன்ன பின்னூட்டத்தில, / க்கு அப்புறம் b போடுவதற்கு பதிலாக b க்கு அப்புறம் / போட்டுட்டீங்க. அதனால வந்த வினை இது.

html expert யாராவது இருந்தா சொல்லுங்களேன்.

முந்தைய பின்னூட்டத்தில இதைச் சரிபண்ண ஒரு முயற்சி பண்ணினேன். ஆனால் முடியவில்லை.

நன்றி
கமல்

ஷ்ரேயா Says:
May 5th, 2006 at 7:45 am
நீங்க சொல்றதும் சரிதான் தருமி.
என் கேள்வித் தொடர்ல அடுத்தது: ஏன் இப்பிடி “நாதி” (நாதியில்லாம)”தொட்ட” நாதனைத் தான் போய்க் கட்டிக்கணும்னு எடுக்கிறாங்க?(அப்ப இவங்க “பண்பாட்டு”ப்படி பாத்தா, பாலியல் தொழிலாளர்களெல்லாம் யாரைக் கட்டுவதாம்?)

யார் இந்த பண்பாட்டு யோசனையை முதல்லே தமிழ்சினிமாலே (உங்களுக்கு வயசாச்சுன்னு சொல்லல ) கதையா எடுத்தது? யாராவது இயக்குன நண்பர்கள் இருந்தால் கேட்டுச் சொல்லுங்க. (ஆமா, இவங்கெல்லாம் படக்கதையைப் பற்றி வீட்டுலே, சினிமா தவிர்ந்த ஒரு நட்பு/சொந்தக்காரங்க வட்டத்துக்கிட்டே கருத்துக் கேட்க மாட்டாங்களா??)

துளசி கோபால் Says:
May 5th, 2006 at 2:39 pm
அய்யோ ஷ்ரேயா,

பாலியல் ‘தொழிலாளி’ன்னு சொல்றீங்க. தொழிலுக்கும் கல்யாணத்துக்கும் முடிச்சுப் போட முடியுமா?

தருமி Says:
May 5th, 2006 at 3:11 pm
அடுத்த பதிவாவது ஒழுங்கா வந்திருமில்ல, கமல்

தருமி Says:
May 5th, 2006 at 3:14 pm
ப்ரஸன்னா,

ஆக்சன் ஹீரோஸ் எப்பவுமே மவுசு தான். // நம்ம எம்.ஜி.ஆர்.,இ.த. விஜய் மாதிரி ..இல்ல

சிவமுருகன் Says:
May 5th, 2006 at 8:19 pm
//தொட்டவரைக் கணவராக ‘வரிக்கும்’ //
யதார்தத்திற்க்கு ஒத்து வருமா? பஸ்ல போறோம், பஜாருக்கு போறோம். சும்மா யாராவது ஒரசிட்டா அத்த எல்லாம் ‘வரி’க்கவோ ‘வாரிக்கவோ’ முடியுமா?

கடந்த கால சினிமாவில் ஒகே.
நிகழ்கால சினிமாவில்?

புகைபடம் அருமை நீங்க தான் கிளிக்கிஇருப்பீங்க.

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:19 pm
Just a test

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:24 pm
Another Another test to Remove the Bold

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:35 pm
another test. vidamattomla

தருமி Says:
May 5th, 2006 at 11:37 pm
நன்றி சோழநாடன்,
ரொம்ப நன்றிங்க. ஆனாலும் இன்னும் ‘குண்டு குண்டு’ன்னுதான் வருது

தருமி Says:
May 5th, 2006 at 11:40 pm
சிவமுருகன்,
“கடந்த கால சினிமாவில் ஒகே.
நிகழ்கால சினிமாவில்?”//
- புதிய பாதை நிகழ்கால சினிமாதானே? அந்தக் கதை என்ன? இன்னும் அதுமாதிரிதான் (நம்ம சினிமாவில) நடந்துகிட்டு இருக்கு; இல்லையா?

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:42 pm
தருமி,
முயற்சி செய்தேன் முடியவில்லை . நீங்கள் வசந்தனுக்கு கொடுத்த பதிலில் Bold tagஐ மூடும்போது என்று போட்டு விட்டீர்கள். அதுதான் காரணம். அந்த பின்னூட்டத்தை அழித்தால் சரியாகுமென்று நினைக்கின்றேன்.
[எனது சோதனை பின்னூட்டங்களையும் அழித்து விடவும். நான் கொடுக்கும் ஒற்றை tagஐ incorrect format என்பதால் பின்னூட்ட validation தின்று விடுகிறது. உங்கள் பின்னூட்டத்தை மட்டும் incorrect format உடன் எப்படி ஏற்றுக்கொண்டதென்று தெரியவில்லை ]

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:44 pm
///Bold tagஐ மூடும்போது என்று போட்டு ///
Bold tagஐ மூடும்போது என்று போட்டு

Chozanaadan Says:
May 5th, 2006 at 11:48 pm
Can you please send a mail to me at Chozanaadan[at]yahoo[dot]com.

KOZHUNDU Says:
May 6th, 2006 at 4:02 pm
91யில இருக்கு. 100க்கு போயிடுவோம்.
திருமாங்கல்யம் படம் பார்க்கலயா? தேர்தல் நேரம். பார்த்து பதில் சொல்லுங்க!
அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 6th, 2006 at 4:13 pm
லொரென பாபிட்ன்னு ஒருத்தர் இருக்காருங்க.
அன்புடன்
சாம்

தருமி Says:
May 6th, 2006 at 4:26 pm
பாபிட் விஷயம் டோண்டு விளக்கிட்டார்.
இந்த ‘திருமாங்கல்யம்’ விஷயம் நீங்க சொல்ல வர்ரது என்னென்ன புரியலையே (இழுக்கிறதுக்காக ஒண்ணும் அப்படி சொல்லலை:???:)

pot"tea"kadai Says:
May 6th, 2006 at 4:31 pm
இன்னைக்கு ரெண்டு படம் பாத்தேன்…
1) மைக்கேல் மதன காம ராஜன்
2)மீண்டும் கோகிலா

ஒன்னுத்துல நெரைய “டெக்னிகல்” டீடெய்ல்ஸ் இருந்தது…இன்னொன்னு இம்சையா இருந்தது…
உங்க கருத்து என்ன?

கவுன்ட் டவுன் போட்டுடவா…

முத்து(தமிழினி) Says:
May 6th, 2006 at 4:31 pm
ஹலோ,

திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணியில் பேராசிரியர் இணைந்துவிட்டதால் சில முற்போக்கு கருத்துக்களை மாற்றிக்கொள்வார் என்று மட்டும் தப்புகணக்கு போட்டுவிடவேண்டாம்.

இன்னும் அவருக்கு குஷ்பு பிடிக்கும்.சின்னதம்பி படத்தை அவர் பதினைந்து முறை பார்த்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

pot"tea"kadai Says:
May 6th, 2006 at 4:32 pm
இன்னும் 4 தான்…ஒரு கை கொடுத்தீங்கனா …100ஐ அசால்டா அடிச்சிடலாம்!

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:34 pm
பாருங்க….

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:35 pm
உங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தரையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:36 pm
பார்ட்னர் செல்வனையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:37 pm
உங்க நளபாகத்தை ருசித்த முத்து தமிழினியையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:38 pm
அப்பபப்ப வந்து போற டீக்கடைகாரரையும் காணோம்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:39 pm
மாநாட்டுக்கு வந்தவங்களையும் காணோம்…

கவலப்படாதீங்க நான் இருக்கேன்

முத்துகுமரன் Says:
May 6th, 2006 at 4:40 pm
100வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள் தருமி சார்

KOZHUNDU Says:
May 6th, 2006 at 4:48 pm
நம்ம சி எம்மோட நூறாவது படம். அவங்க அந்தப் படத்தில அழுத மாதிரி வேற எந்தப் படத்திலயும்
அழுததில்ல. தெலுங்குக்காரங்க எடுத்த படம். இப்படியா படம் எடுப்பாங்க! இவங்க ரசனையே தனி. திருமாங்கல்யத்துக்கு அவ்வளவு முக்கியம். புருசன் யாருன்னு கூட ஞாபகம் இல்லை!
அன்புடன்
சாம்

தருமி Says:
May 6th, 2006 at 8:38 pm
நின்னு அடிச்சி ஆடுன முத்துக்குமரனுக்கு ஒரு ஜே!
ஊர்ப்பாசம்னா ஊர்ப்பாசம்தான்.

Prasanna Says:
May 6th, 2006 at 9:03 pm
////ப்ரஸன்னா,

ஆக்சன் ஹீரோஸ் எப்பவுமே மவுசு தான். // நம்ம எம்.ஜி.ஆர்.,இ.த. விஜய் மாதிரி ..இல்ல : ///

சான்ஸ் கிடைச்சா பழய எம்.ஜி.ஆர் பாட்டு பாருங்க. பாட்டுல வர ஒவ்வொரு வரிக்கும் அபிநயம் பிடிப்பார். அய்யோ விஜய் ஆக்சன் தான, இப்பொ தான் ஷாஜஹான் படம் பார்த்தேன். கொடுமையிலும் கொடுமை. எப்படித்தான்…..

பொன்ஸ் Says:
May 6th, 2006 at 9:04 pm
தருமி,
போனமுறை நீங்க மனசாட்சி அது இதுன்னு எனக்கு ஒத்து வராத (’தமிழ் பண்பாட்டுக் காவலர்களுக்கும்’ ஒத்து வராத) காரக்டரை எல்லாம் கூப்பிட்டதுனால நான் இந்தப் பக்கம் வரலை.. இப்போ எங்க குரு பதிவுல கை கொடுக்க சொன்னீங்கன்னு வந்திருக்கேன்.. ஆமாம்..

Prasanna Says:
May 6th, 2006 at 9:04 pm
நான் சொன்னதுல பாதி நிறைவேறிட்டு போல இருக்கு. வாழ்த்துக்கள்.
பிரசன்னா

தருமி Says:
May 6th, 2006 at 9:24 pm
தமிழினி,
“அவருக்கு குஷ்பு பிடிக்கும்.”//
- இப்போ மாத்தியாச்சே..சொல்லலையா உங்க கிட்ட..?
இப்போ இன்னொரு படத்தை 16 தடவை பாத்தாச்சே, தெரியாதா தல?

தருமி Says:
May 6th, 2006 at 9:26 pm
வெளியே நின்னு கைதட்டி encourage செய்து centuryக்கு வழிகாட்டிய துணைத்தலை பொட்டீக்ஸுக்கு நன்றி

தருமி Says:
May 6th, 2006 at 9:30 pm
கொழுந்து,
நல்லவேளை அந்தப் படம் பார்க்கவில்லை.
“திருமாங்கல்யத்துக்கு அவ்வளவு முக்கியம். புருசன் யாருன்னு கூட ஞாபகம் இல்லை!”//
- பொதுவாகவே, தாலிக்குக் கிடைக்கிற மரியாதை அதைக் கட்டியவனுக்கு பொதுவா கிடைக்கிறதில்லை என்பதே ஒரு வேடிக்கை

சமுத்ரா Says:
May 6th, 2006 at 9:39 pm
//தமிழர்களுக்கு என்று ஒரு நல்ல பண்பாடு இருக்கிறது //

எனக்கு தெரிந்து தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பது இட்லி தோசை மட்டுமே.

தருமி Says:
May 6th, 2006 at 10:37 pm
that’s a good one, Samudra

துளசி கோபால் Says:
May 7th, 2006 at 2:24 am
தருமி,

//பொதுவாகவே, தாலிக்குக் கிடைக்கிற மரியாதை அதைக் கட்டியவனுக்கு பொதுவா கிடைக்கிறதில்லை என்பதே ஒரு ……//

ஏன்னா தாலி தங்கத்துலே செஞ்சது.மதிப்பு கூடுதல்.
இப்போ கிராம் 1000 ரூபாயாமே

தருமி Says:
May 7th, 2006 at 9:09 am
துளசி, ஒண்ணுதெரியுமா? உங்க பின்னூட்டத்தை முதலில் பெயர் பார்க்காமலே வாசிக்க ஆரம்பித்து, பாதியிலேயே, ‘ஆஹா, இது துளசி மாதிரி இருக்கே’ன்னு பார்த்தா நீங்களேதான்!

கண்டுபிடிச்ச என் ‘தெறமய’ சொல்லவா? இல்ல, இப்படி தனக்கென ஒரு ஸ்டைலை வச்சிருக்கிறத சொல்லவா? எதுன்னு தெரியலையே! (சிவாஜி ஸ்டைல்?)

துளசி கோபால் Says:
May 7th, 2006 at 11:45 am
தமிழ்மணத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிச்சிட்டேன்னு சொல்றீங்கதானே?

‘வாழ்க’ போட ஏன் தயக்கம்? எலக்ஷன் திருவிழா முடிவுக்கு வந்துருச்சேன்னு கலக்கமா?

தருமி Says:
May 7th, 2006 at 7:48 pm
துளசி,
“தமிழ்மணத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதிச்சிட்டேன்னு சொல்றீங்கதானே?”//
நெஜம்ம்ம்மாதான் துளசி.

வாழ்க துளசி வாழ்க…உங்களுக்கு வாழ்கன்னு சொல்லாம நான் வேறு யாருக்கு’மா சொல்லமுடியும்? (மறுபடியும் சிவாஜி ஸ்டைல்)

Saturday, April 29, 2006

156. சிவாஜி –> கமல் –> ???

Image and video hosting by TinyPic


சிவாஜி நல்ல நடிகர்தானா என்று கேள்வி கேட்போரும் உண்டு. அந்தக் கேள்வியிலும் நியாயம் உண்டு. நாம் நல்ல நடிப்பு என்று கருதும் விஷயங்களின் அளவுகோல்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை வைத்துதான். ஹாலிவுட்டில் பல நடிகர்களின் நடிப்பு சிறந்ததாகக் கருதப்பட்டாலும் மார்லன் ப்ராண்டோ தனக்கெனத் தனியிடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை. அவரது On the water front என்ற படத்தை மும்முறை பார்த்திருக்கிறேன். நாம் வழக்கமாகச் சொல்லுவோமே -’அவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்கவில்லை; அந்த்ப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டார்’ என்று, அதேபோல்தான் அந்தப் படத்தில் மார்லன் ப்ராண்டோ அந்தக் கதா பாத்திரமாகவே மாறியிருப்பார். எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும். அதேபோல் Godfather படத்தில் சிறிதே மாறுபட்ட மேக்கப்புடன், அவர் வழக்கமாக உதடுகள்கூட அசையாமல் பேசுவாரே அந்தப் பேச்சும், நடிப்பும் அவரது சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் என்றும் பேசப்படும். இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னொரு நடிகர் Antony Quinn. அவர் நடித்த Hunchback of NotreDame, La Strada மனதை விட்டு அகலாத, அவரது நடிப்புதிறனை வெளிக்கொணர்ந்த படங்கள். அதிலும் Umar Muktar என்ற படம் அச்சு அசலாக நமது கட்டபொம்மன் படம் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும் - சுதந்திரத்திற்காக ஆள வந்த அயல்நாட்டுக்காரர்களை எதிர்த்த இரு புரட்சியாளர்களின் கதை. ஆக்கப்பட்டிருந்த விதங்களில் அவைகள் எதிர் எதிர் துருவங்களில் இருந்தன. இந்த ஆங்கிலப்படங்களில் அந்த நடிகர்களைக் காணும்போது இது போல் சிவாஜியால் எளிதாக நடித்திருக்க முடியும்; ஆனால் அவரை அவ்வாறு நாம் நடிக்க விடவில்லை என்ற உண்மைதான் மனதில் தைக்கிறது. அவருக்கும் சினிமாவைப் பற்றிய ஒரு பறவைப் பார்வை இல்லை. அதுவும் சினிமாவைப் பற்றிய உலகளாவிய ஒரு பார்வையோ, அது பற்றிய ஞானமோ சுத்தமாக இல்லவே இல்லை. நமது கைதட்டல்களும், விசில்களும் அவரை நாம் ஏற்றி வைத்த பீடத்திலிருந்து அவர் இறங்கி வந்து ஏற்கெனவே நன்கு வளர்ந்திருந்த மற்ற நாட்டுப் படங்களின் போக்கைப் பற்றிய உய்த்துணர்தல் ஏதும் இன்றி அவரை ஒரு ‘தனிக்காட்டு ராஜா’வாக முழுமையாக ஆக்கி விட்டது. இப்போது அவரைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் He had all tha potential; but Tamil film world did not utislise his talents fully’ என்ற cliche -வைத் திருப்பித் திருப்பிச் சொல்லும்படியாகி விட்டது. அவராகவே முடிவெடுத்தோ அல்லது அந்தப் பட டைரக்டர் பந்துலு (?) சொன்னதின் பேரிலோ கப்பலோட்டிய தமிழன் படத்தில் ‘அடக்கி வாசித்திருந்தார்’. ஆனால், அந்தப் படம் வெளியான போதோ பெரும் தோல்வியைச் சந்தித்தது. Our taste buds never relish newer and even better tastes ! at least சினிமாவைப் பொறுத்தவரையாவது. கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதை யாரும் கேள்வி கேட்பதேயில்லை. காரணம் கமல் தன்னை ஒரு விஷயம் தெரிந்த நடிகனாக ஆக்கிக் கொண்டுள்ளார். உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம். ஆயினும் தமிழ் சினிமா உலகத்துக்கே உரித்தான பல்வீனம் அவரையும் பாதித்துள்ளது. பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். அவரது ‘தளபதி’ படத்திற்கான அந்தக் கதைக்கு அவர் யாருக்கும் royalty தராமலேயே ஒரு நல்ல கதையைப் பெற்று, அதை நல்ல திரைக்கதையாக்கி ஒரு வெற்றிப் படம் அளித்தார்! மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ. தாங்களே கதாசிரியர்களாக மாறி, தாங்களே திரைக்கதை, வசனம்…இப்படி பல பொறுப்புகளையும் தங்கள் தலைகளில் ஏற்றிக்கொண்டு நம் டைரக்டர்கள் ‘சுமை தூக்கும் கழுதை’களாக மாறி விடுகின்றனர். (பாரதி ராஜா இதில் கொஞ்சம் விதி விலக்கு)கமலுக்கு இந்த ஆசை கொஞ்சம் அதிகம். படத்தில் தன் முழு ஆளுமை வேண்டும் என்பதற்காகவோ என்னவோ அவரே பல விஷயங்களிலும் தலையிட்டு, நடிகன் என்ற தனிப் பொறுப்புக்கு செலவிட வேண்டிய தன் சக்தியை வீணடிக்கிறார். அவரது சிந்தனை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து புதுப் புது விஷயங்களைக் கதைக்களன்களாக மாற்றும் கதாசிரியர்கள் இல்லை. அதற்காக அவரே மற்ற மொழிப்படங்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு நம் ரசனை, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் என்பதற்கேற்ப அவைகளை மாற்றும் ரசாயன வித்தைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. இத்துணை வசதிக்குறைகளோடும், அவர் இன்னொரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்க வேண்டியதுள்ளது. அது ஏற்கெனவே சொன்னது போல, ‘எங்கள் ரசனைகளை மாற்றிக் கொள்ளவே மாட்டோம்’ என்ற கொள்கையில் உறுதியாக நின்று கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமுதாயம்! இங்கே கதாநாயகன் படங்களில் தனியொருவனாக நின்று பெரும்படையையே எதிர் கொண்டு அழித்தாலும், தரையிலிருந்து எம்பி எத்தனை அடி குதித்தாலும், எவ்வளவு முட்டாள்தனமான காரியங்கள் செய்தாலும் பரவாயில்லை; ஒரு ‘பஞ்ச் டயலாக்’ சொல்லணும்; கடைசியில எல்லாம் நல்ல படியா முடியணும் அவ்வளவுதான். சகிக்க முடியாத முக லாவண்யம் இருந்தாலும், அந்த நடிகனோ நடிகையோ ரெண்டு படத்தில் வெற்றிகண்டால் போதும் அவர்களுக்குப் பின்னே கூட்டம் போட்டு விசிலடிக்கத் தயார். இந்த ஃபார்முலாக்களில் இருந்து நம் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சமும் மாறுவதாயில்லை. எனவே இங்கு புத்திசாலித்தனமும் திறமையும் மதிக்கப்படுவதில்லை; அதிர்ஷ்டமும், வியாபார லாபமும்தான் நமது அளவுகோல்கள். இந்த சூழலிலும் தனித்து நிற்கும் கமலைப் பாராட்டவேண்டும்.

முன்பேகூட ஒரு பதிவில் கேட்டிருந்தேன் - ஏன் நமது தமிழ்நாட்டில் இரண்டாந்தரங்கள் எப்போதும் சுத்த அக்மார்க் முதல் தரங்களாக மக்களால் போற்றப்படுகின்றன என்று. சிவாஜி - எம்.ஜி.ஆர்.; கமல் - ரஜினி என்ற தொடரில் இன்று மக்கள் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நல்ல சில நடிகர்களைப் புறந்தள்ளி முன்னணி நடிகராக இருப்பது நம் வழக்கமான ஃபார்முலாப் படிதான். stereotyped cast, புதிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிடவும் எடுக்கவே மாட்டேன் என்று கூறுவதும் அவரின் தனித் தன்மை. இப்போது உள்ள இளம் நடிகர்களில் நல்ல நடிகர் யார் என்ற கேள்விக்கு எத்தகைய தயக்கமின்றி நான் சொல்லும் பதில் - சூர்யா. முதலில் வந்த சில படங்களில் கொஞ்சம் பாவமாகவே இருந்தது - அவரது தந்தை சிவகுமாரை உயர்ந்த மனிதன் படத்தில் பார்த்தது போல. அதன் பிறகு நல்ல பிரமிப்பு
தரும் வளர்ச்சி. முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. சடை வளர்த்து அதற்கு மேல் ஒரு போலீஸ் தொப்பியை வைத்துக் கொண்டு அந்தப் பதவியை ஒரு mockery செய்த நடிகர்களே அதிகம். ஆனாலும் அந்தப் படத்தின் நடிப்பு இயக்குனரின் ‘அடக்கு முறையால்’கூட வந்திருக்கலாம். ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான். இறுதி சீன், கதையமைப்பு, charectersation - இவைகளே அந்தக் கடைசி சீனில் விக்ரமையும் அந்த சீனில் அவர் நடிப்பையும் நம் மனதில் நிலை நிறுத்தியது. தண்ணி அடிச்சிட்டி ‘அப்டியா?’ன்னு கேக்குற இடமெல்லாம் தமிழ்ப் படத்துக்கு ரொம்பவே புதுசு. சூர்யாவின் நடிப்பு பட்த்துக்குப் படம் மெருகேறி வருவது கண்கூடு. இதுவே அவரை நம் தமிழ்த் திரை உலகத்தின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 29 2006 03:30 pm சினிமா
62 Responses
bharaniru_balraj Says:
April 29th, 2006 at 4:45 pm






bharaniru_balraj Says:
April 29th, 2006 at 4:47 pm
படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுரார்.

8 அடி = 16 அடி

Muthuraman Says:
April 29th, 2006 at 6:42 pm
Sivaji ellaa padathilum over acting pannavillai. udharanthukku mudal mariyathai, devar makan , even parasakthi. neenga sonnathu pola avarai nadikka vida villai enru thaan sollanum.

Prasanna Says:
April 29th, 2006 at 10:31 pm
நல்ல நடிகரை பயன்படுத்த தெரியாமல் விட்டுவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். உயர்ந்த மனிதன், முதல் மரியாதை, தேவர் மகன், புதிய பறவை போன்ற படங்கள் மிகச் சிறந்த நடிப்பால் மெருகேற்றப்பட்டவை. பாபு படத்தில் ரிக்ஷாகாரனாக செய்ததை பாராட்டாதவர்கள் எம்.ஜி.ஆரின் ரிக் ஷா காரன் படத்திற்கு தேசிய விருது தந்தார்கள். இன்று கமலையும் அப்படித்தானே செய்து விட்டார்கள். வசூல்ராஜா கமலின் கேரியருக்கு என்ன நன்மை செய்தது என எனக்கு தெரியவில்லை..

TheKa Says:
April 29th, 2006 at 11:02 pm
நல்லா சிந்தித்து தீர்க்கமான முறையில அருமையா எழுதியிருக்கிற கட்டுரை, தருமி. ஆனால் நாம் ஒன்றை கவனத்தில் நிறுத்த தவறக்கூடாது, மக்களின் ரசனையை பொருத்துதான், தயரிப்பாளரும், இயக்குனரும் அந்த குட்டைக்குள் இரங்குகிறார்கள் இல்லன்னா…குணா, மகாநதி, ஆளவந்தான் போன்ற விசயப் படங்கள் மாதிரி ஊத்திக்க வேண்டியதுதான்.

எனவே இது நடிகர்களின் தவறு இல்லை, நம் ரசனையில்தான் இருக்கிறது என்பேன்.

என்ன ரேடியோவில நாம நாடகம் கேட்டதெல்லாம் மறந்து போச்சா…சார் நடிடிடிடிடிக்க்க்கனும் சார்…

சூர்யா நல்ல தேர்வு.

தெகா.

வெளிகண்ட நாதர் Says:
April 29th, 2006 at 11:38 pm
//பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது.//
நல்ல நாவல்களை படமெடுக்கும் முயற்சியில் வெற்றி கொண்ட மகேந்திரன் ஏனோ அதிகம் தொடர்ந்து எடுக்கவில்லை! அதே போல R.செல்வராஜின் அழகான ஆழம் மிகுந்த கிராமியக்கதைகளை, நம் மண்வாசனை கொண்ட கதைகளுக்கு நல்ல திரைக்கதை அமைத்து வெற்றி படங்களாக ஆரம்பத்தில் எடுத்த படங்களுக்கு பிறகு, பராதிராஜா பிறகு மசாலாவிற்கு சென்றதும் வருத்தமானது! அதே போல, அந்த கால நடிகர்களில் அதீத செயற்கையில் நடித்தால் தான் நடிப்பு என்று இலக்கணம் படைத்துக்கொண்டிருந்த சிவாஜியின் காலகட்டத்தில், அதிக மசலா, மக்கள் ஈர்ப்பு ஃபார்மலாவில் தன்னை தனியாக நிலை நிறுத்தி கொண்டிருந்த எம்ஜிஆர் போன்றோர் நடித்த காலகட்டத்தில், மிதமாகவும் இயல்பாகவும் நடித்த ஜெமினி கணேசன் எவ்வளவோ மேல்!
//உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம்.// இதுவும் கொஞ்சம் அதிகம் புகழுவது. ஏனென்றால் மிதமான எதார்த்த நடிப்பை விட அதிபிரசங்கித்தனமான ஓவர் ஆக்டிங் வெளிப்பாடுகள் அதிக இடங்களில் கமலிடம் வெளிப்படுவது உண்மை. இதை நான் ஒரு நடிகன் என்று உணர்ந்து நான் நடித்த காலங்களில் இந்த அதீததை தவிர்க்க நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன்! ஆனால் இது போன்ற அதீதமான நடிப்புகளுக்கு, மக்களிடையே இருந்து வரும் ஆதரவு, கைத்தட்டல், விசில் போன்றவை தரும் போதைகள் அதிகம், அதனால் அதை முழுவதும் விட்டு விட்டு இயல்பான நடிப்புக்கு மாறுவது சற்று கடினமே! இதுவும் நான் உணர்ந்த என் அனுபவம்! ஆதாலால் நடிப்பின் பரிமாணங்களை நிறைய கற்று கொண்டு அதில் மிளர எத்தனையோ யுக்திகளை கடைபிடிக்க இன்று இருப்பது போல, அதனை பக்கத்தில் கண்டுணர்வதுகுண்டான வசதிகள் அப்பொழுதில்லை. ஆனால் அவை அனைத்தும் இருந்தும் இப்பொழுதும் நமது பெருவாரியான ஜனங்களின் ரசிப்பு தன்மையில் அதிக முன்னேற்றம் ஏதும் வரவில்லை என்றே கூறுவேன். அது என்னமோ மெத்தபடித்து, இது போன்ற வசதிகளை பெற்று, பல மடங்கு பரிணாமங்களை பெற்று நடிக்கும் நடிப்பு திறன்கள், புது கதை களங்கள், மற்றும் கதை சொல்லும் பாங்கு போன்வற்றை பார்த்தும், நம் மக்களின் ரசனை வீணாப் போன இந்த ‘திருப்பதி’ போன்ற படங்களை கண்டு ரசிக்கும் தன்மை மாறவில்லை. இதை கண்கூடாக இங்கு அமெரிக்காவிலும் நான் பார்க்கிறேன். இதை என்ன சொல்லுகிறீர்கள். நம் தமிழனக்கு இந்த அதீதமான உணர்வுகள் தம்மால் வெளிகொணற முடியாத அந்த உணர்ச்சி மற்றும் செய்கைகளை திரையில் மற்ற பிம்பங்கள் செய்யும் பொழுது அவனை அறியாமலே பொங்கும் அந்த உணர்ச்சியும் ஒரு காரணம் நீங்கள் சொல்லும் மாறாத நிலை, அதனால் உண்டான வியாபாரத்த்ன்மை! இது மாற பல காலங்கள் ஆகலாம். அது வரையில் சூரியா போன்றோர் மென்மேலும் தங்களி செதுக்கி ஒரு பண்பட்ட நடிப்பின் ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பது நல்லது. அதுவரை விஜய்யும் பேரரசு போன்றோரின் ஆளுமை தான் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்க போகிறது!

குறும்பன் Says:
April 30th, 2006 at 12:14 am
உண்மை படத்திற்கு படம் சூர்யாவின் நடிப்பு மெருகேறிவருகிறது. நல்ல நடிகர் கணக்கில் விக்ரமையும் சேர்த்துக்கொள்ளலாம். முதல் மரியாதையில் சிவாஜி நடிக்கவில்லை வாழ்ந்தார்.
எல்லா (90%) மசாலாபடங்களும் ஓடுவதில்லையே? ரசிக்கிறமாதிரி படம் எடுத்தா ஓடும் .

துளசி கோபால் Says:
April 30th, 2006 at 2:13 am
தருமி,

தமிழ்சினிமா ரசிகர்களின் ‘டேஸ்ட்’ தனிரகம்ன்றது இப்பவாவது புரிஞ்சதா? :
சிவாஜி நாடக மேடையிலே இருந்து வந்தவர். அதான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்னு சொல்லும்படி ஆயிருச்சு.
ஆனாப் பாருங்க, சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனருக்குத்தான் எதை எப்படி எதுவரை செய்யணும்றது
தெரியணும். சரியான நடிப்பு வர்றவரை திரும்ப ஷூட் செய்யலாம்தான். தயாரிப்புச் செலவு கூடிரும்.

ஆனாலும் இதுக்கு முழுப் பொறுப்பு டைரக்ட்டர்தாங்க.

எனக்கும் கமலுக்கு அடுத்தபடி சூர்யாதாங்க.
இன்னும் என்னென்னமோ சொல்லணும்தான். பார்க்கலாம். பின்னூட்டமெல்லாம் சுருக்கமா இருக்கணுமாமே.
டிபிஆர்ஜோ சொல்லி இருக்கார்.

சிட்டுகுருவி Says:
April 30th, 2006 at 10:57 am
சூர்யா வை பற்றி என்பதால் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்னும் சற்று தூரம் பயணம் செய்ய வேண்டும்.
அந்த வரிசையை அடைய.
மற்றபடி நடிகன் என்ற நிலயை தாண்டி சகலகலாவல்லவன் ஒரு கலைஞனுக்கு நிகர் (multi-skill artist) இந்தியாவில் இன்னும் யாருமில்லை.
இங்கு தமிழை தாண்டி யோசித்தால், மம்மூட்டி யை இந்த வரிசையில் வைத்துத்தான் ஆக வேண்டும்.

கதாநாயகன் என்ற அந்தஸ்து எடுத்துவிட்டால், ரகுவரன்,நாசர்,பிரகாஷ்ராஜ் இவர்களை ஒதுக்க முடியாது.

ஏன் ரஜினியையே நாம்தான் கெடுத்துவிட்டோம். அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது,16 வயதினிலே.. கமலுடன் சேர்ந்து நடிக்கும் போது,நிறைய இடங்களில் கமலைவிட நன்றாக perform செய்திருப்பார்.
நன்றி…

தருமி Says:
April 30th, 2006 at 11:14 am
bharaniru_balraj,
நான் கணக்குல ரொம்ப வீக்குங்க. நீங்க வேற கணக்கு போட்டுத்தள்றீங்க..
அதோடு ஸ்மைலிகள் வேறு.

என்ன சொல்றீங்கன்னு தெளிவா சொல்லுங்களேன்; புரிஞ்சுக்கிறேன்.

பிறகு இன்னொண்ணு - உங்க இந்தப் பதிவைப் படிக்கிறதுக்கு என்ன மாயக்கண்ணாடி போடணும்னும் சொல்லிருங்கோ.

தருமி Says:
April 30th, 2006 at 11:19 am
மன்னிச்சிக்கங்க bharaniru_balraj,
லின்க் தப்பா கொடுத்திட்டேன். நான் சொன்னது இந்தப் பதிவைத்தான். ஒரு preview option இருந்தா இதுக்குத்தான் நல்லதுன்னு தோணுது

தருமி Says:
April 30th, 2006 at 11:25 am
Muthuraman,
அவரை நன்றாக நடிக்க நாமும் விடவில்லை; அவருக்குமே நாடக ஸ்டேஜிலிருந்து திரைப்படங்களுக்கு எடுக்க வேண்டிய பரிணாமம் தெரிகிற அளவுக்கு விஷய ஞானம் இல்லாம போச்சு. அவரோட காலமும் அப்படி.
நாமும் சரி அவரும் சரி ரொம்பவே unlucky.

ஆனால் இப்பவும் ‘வளர மாட்டேன்’ அப்டின்னு அடம் பிடிக்கிற சினிமாக்காரர்களும், ரசிகப் பெருமக்களான நாமும்தான் ரொம்ப மோசம் & பாவம்

தருமி Says:
April 30th, 2006 at 11:48 am
Prasanna,
நாம் ‘வளரணும்’ அப்டிங்கிறதுதான் எனது ஆசையும், எதிர்பார்ப்பும். என்னைக்கி அது நடக்குமோ…உங்க காலத்திலேயாவது வளருங்க’ப்பா

செல்வன் Says:
April 30th, 2006 at 11:57 am
பார்ட்னர்,

இதில் முக்கால்வாசி கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை.நல்ல படம் என்றால் என்ன?ரசிகன் விரும்புவதை தருவது நல்ல படமா அல்லது பண்டிதர்கள் விரும்புவதை தருவது நல்ல படமா?திரைத்துறை கலைத்துறையா வியாபாரமா என்பதை பொறுத்தே இதற்கான பதில் அமையும்.திரைத்துறை கலைத்தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.இது முழுக்க முழுக்க கமர்சியல் சினிமா எனும்போது கலையை இங்கு கொண்டு வந்து புகுத்துவது தேவையற்றது.

வியாபாரத்தில் இப்படித்தான் மேகின்டாஷ் சிறந்த கம்புயூட்டர் என பண்டிதர்கள் அனைவரும் சொல்வார்கள்.ஆனால் அதிகம் விற்பது பி.சியாகவும் வணீக ரீதியாக அடிவாங்குவது ஆப்பிள்,மேகின்டாஷாகவும் இருக்கும்.

வியாபாரத்தின் பொன்விதி quality is determined by customers,not by pundits என்பதாகும்.(Quality is as perceived by customers and not determined by manufacturer’s internal standards)

மேலும் தரமான படம் என ஒன்று தமிழில் இருக்கிறது என நான் நம்பவில்லை.(ஆங்கில,மலையாள,இந்தி படம் எல்லாம் நான் பார்த்ததில்லை,so can’t compare and comment).தரமான படம் என பண்டிதர்கள் சொல்லும் படங்களை பார்த்தால் அழுவாச்சி வரும்.அதில் பெரிதாக ஒன்றும் இருக்காது.நடிப்பை பார்,மேக்கப்பை பார்,மேக்கப் போடாமல் நடித்திருக்கிறார்,போலிஸ்காரன் போல் முடிவெட்டிக்கொண்டு போலிஸ்காரனாக நடித்திருக்கிறார் ஆ ஊ என்பார்கள்.யாருக்கு வேணும் அதெல்லாம்?who cares?what difference does it make to me?Who knows it?who notices it?Not me.I am not ready to spend my cognitive resources on such pointless things.I go there to have fun,not to do a reviewer’s job.ரஜினி பரட்டைத்தலையோடு இன்ஸ்பெக்டராக வந்தா தான் நல்லாருக்கும்.அழகா இருப்பார்.போலிஸ் கட்டிங்க்ல இன்ஸ்பெக்டரா வந்தா நல்லாவே இருக்காது.

ரஜினி படம் பார்த்து விட்டு திரயரங்கை விட்டு வெளிவரும் குடும்பம் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு வரும்.ஜாலியாக கணவனும் மனைவியும் சிரித்தபடி குழந்தைகளை அருகிலுள்ள ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப்போய் டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு,ரஜினி போல் குழந்தை வசனம் பேசுவதை,சண்டை பிடிப்பதை ரசித்துக்கொண்டு சந்தோஷமாக அந்தக் குடும்பம் வீட்டுக்கு போகும்.

கமல் படத்தை பார்த்துவிட்டு அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வெளியே வந்து மூட் அவுட்டாகி வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவார்கள்.காப்பியாவது,டிபனாவது?

கமல் சீரியசாக ஒருபடம் தந்துவிட்டு,காமடியாக இன்னொரு படம் தருவார்.ஒரு படம் விட்டு இன்னொன்றை தான் பார்ப்பது என வழக்கமாக வைத்திருக்கிறேன்.

தருமி Says:
April 30th, 2006 at 12:08 pm
தெக்காட்ஸ்,
“மக்களின் ரசனையை பொருத்துதான், தயரிப்பாளரும், இயக்குனரும் அந்த குட்டைக்குள் இறங்குகிறார்கள் ..”//

இது ரொம்ப age old excuse ! இதுக்கு நான் கொடுக்கிற age old answer இதுதான்: வீணை செய்ற கலைஞனால ரொம்ப விற்குமே அப்டிங்கிறதுக்காக அகப்பைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டான். நல்ல கலைஞனால் மோசமான படைப்பைத் தர முடியாது. (அந்த உணர்வை சலங்கை ஒலியில் இயக்குனர் நன்கு காண்பித்திருப்பார்)
ஒரு ஆடூரையோ, நம்ம மகேந்திரனையோ ஒரு திருப்பதி/ திருப்பாச்சி படம் எடுக்கச் சொல்லிப்பாருங்க…பாவம் அவர்களால் அது முடியாது.

நம்ம ஆளுகளுக்கு அவ்வளவுதான் ஐவேசு..சரக்கே அவ்வளவுதான். கேட்டால் ரசிகர்கள் (வினியோகஸ்தர்கள்) அதைத்தான் கேட்கிறாங்கன்னு நம்ம தலையில போட்டுருவாங்க. அவங்க சரக்கைப் பத்தி அடுத்த பதிவு ஒண்ணு போடுறேன். அவ்வளவு எதுக்குங்க, சமீபத்திய நிகழ்வு: பாலாவின் பிதாமகனில் ஒரு டப்பா டான்ஸ் வேணும்னு வினியோகஸ்தர்கள் கேட்டதால் சிம்ரன் டான்ஸ் ஒண்ணு கடைசியில சேர்த்ததாக ஒரு செய்தி.அந்த நடனம் படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்டாகத்தான் இருந்தது - though focus was on Surya and not on simran. that is out and out becasue of Bala. making of that scene was simply great unlike - இப்படிப் போடு போடு/ வடுமாங்காய் ஊறட்டுமா?

தருமி Says:
April 30th, 2006 at 6:02 pm
வெளிகண்ட நாதர்,
நீங்கள் கூறுவதில் பலவற்றுடன் உடன்படுகிறேன் - சில விஷயங்கள் தவிர.
ஜெமினி கணேசன் - மிதமும் இயல்பும் சரி; ஆனால் variety? சந்தோஷமாக இருந்தால் கோட்டு சூட்டு; கவலையானா ஜிப்பா,பைஜாமா. கொஞ்சம் வளையாத உடல்வாகு..எப்பவும் ஒரு straight rod போன்றதொரு உடலமைப்பு. pliability totally missing …இல்ல..?

கமல்: ஓவர் ஆக்டிங்..? இதை நம் திரைப்படங்களில் சிறிது சிறிதாக ஏற்பட்டு வரும் பரிணாமம் என்றுதான் என்னால் கூற முடியும். ஹாலிவுட் படங்களில் நடிகர்களின் நடிப்பைவிடவும் உணர்ச்சிகளைக் காண்பிக்க கேமிரா கோணங்களும், இசையும் பெரிதும் பயன் படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த cliff hanger பட்த்தின் முதல் சீனில் உயிருக்குப் போராடும் ஒருவரின் நடிப்பு ஒரு சில காமிரா கோணங்களினாலும் இசையாலும் உயிர்ப்போடு இருக்கும்.நாம் இன்னாள் வரை நாம் எதிர்பார்ப்பது முகத்தின் ஒவ்வொரு தசையும் துடிக்கணும்; கண்ணுக்குக் கீழ் உள்ள சதை மட்டும் ஆடணும்….

TheKa Says:
April 30th, 2006 at 6:44 pm
தருமி, உங்க காச போட்டு இந்த ‘காட்டான’ சினமா காட்ட கூட்டிடு போனீங்கன்னா, அந்த படம் டப்பவா இல்ல தங்கமான்னு தெரிஞ்சுக்கலாம், எப்படின்னு கேளுங்க…நான் ஒரு அளுமூஞ்சி படம் பாத்துகிட்டு இருக்கும் போது கீழ குமிஞ்சு ஏதோ தேடுற மாதிரி ஆக்ட் வுட்டேன்னா, இயக்குனர் என் மனச ‘lick’ பண்ணீட்டருன்னு பொருள் அதுக்காக, கையிலா அம்மாவ தூக்கிட்டு கோயில் படில ஹீரோ “அம்மாவை வணங்காத”ன்னு பாடிக்கிட்டு ஏறப்ப அப்படி தோணுமான்னு கேக்காதீங்க…என்னமோ தோனாது…

KOZHUNDU Says:
April 30th, 2006 at 7:14 pm
உலக அளவில் பேசப்படுகிற படங்களில் இயக்குனர்தான் கடவுள். கமலோட திறமையால பல இயக்குனர்களெல்லாம் இவர்கிட்ட வேலைதான் செய்யறாங்க. சிவாஜி விசயத்திலேயும் இதேதான் நடந்தது. சிவாஜியை சரியா உபயோகித்தவர் பாரதிராஜா. நம்ம மக்கள் சினிமாவுக்கு போறது
மூணு விசயத்துக்காகன்னு நினைக்கிறேன். அன்றாடம் கவலையை மறக்கிறதுக்கு, நம்மளவிட அழகானவங்கள பாக்கிறதுக்கு, நம்மால முடியாததை மத்தவங்க செய்யறத பாக்கிறதுக்கு.
வாழ்கைத்தரம் முன்னேற முன்னேறத்தான் வேறு விதமாப் படங்கள் வரப் போகுது. ஆனா இதுல ஒரு விதி விலக்கு இருக்கு. பலரோட அனுபவங்கள திரைப்படங்களா இயல்பா காமிக்கணுன்னு வரும் போது இயக்குனருக்கு வெற்றி. அந்த காலத்தில ஒரு தலை ராகம். இந்த காலத்தில காதல், தவமாய்
தவமிருந்து. ‘hunchback of notredame’ யெல்லாம் தமிழ்ல ஒடவே ஓடாது. அன்பே சிவத்தில கமல் முகத்தை கோரப் படுத்திக்கிட்டது படம் ஓடாததற்கு ஒரு காரணம். அட அது கதைக்கு தேவைன்னு சொல்லலாம். அழகா இல்லாதவங்க
நடிச்சு படம் எதாவது வந்திருக்கா?

கமல் தானே இயக்குகிற படத்தில் இந்த தப்பைப் பண்ணுகிறார். காட்சி அமைப்புகளின் நீளம் அதிகம். சேரனும் இதையே செய்கிறார். யார் வீட்டிலயாவது சாப்பிட போகும் போது, சாப்பாடு நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை ஆரம்பத்திலேயே சொல்லிட்டா, எழுந்து போக விட மாட்டாங்க.
தட்டில அதிகமா விழுந்துகிட்டே இருக்கும். நமக்கு என்னடா செய்யறதுன்னு ஆயிடும்.

கமலோட வலிமை, காட்சி அமைப்புகள்(Details). நகைச்சுவை.

சூர்யா நல்ல தேர்வு!

அன்புடன்
சாம்

//எதிர்பார்ப்பது முகத்தின் ஒவ்வொரு தசையும் துடிக்கணும்; கண்ணுக்குக் கீழ் உள்ள சதை மட்டும் ஆடணும்….//

எனக்கு மாடு ஞாபகம் வருது )

dharumi Says:
April 30th, 2006 at 9:25 pm
partner,
better you visit this my earlier posting: 106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) - பின் குறிப்பு The very first line may question your view. you are welcome to come back after reading that…

ஜோ Says:
April 30th, 2006 at 9:31 pm
தருமி,
நான் இதைப்பற்றி பின்னூட்டமெல்லாம் தர முடியாது.பதிவு போட்டால் தான் உண்டு..அவ்வளவு சொல்ல வேண்டியிருகிறது .இப்போதைக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன் .இயல்பு நடிப்பு ,மிகை நடிப்பு ,ஸ்டைல் நடிப்பு ,கம்பீர நடிப்பு ,வீர நடிப்பு ,கோழை நடிப்பு எல்லா நடிப்புலயும் மன்னன் ஒருவர் தான் .எங்கள் நடிகர் திலகம் தான் .அவருக்கு பிறகு கமல் தான்.

செல்வன் Says:
April 30th, 2006 at 10:02 pm
பார்ட்னர்
உங்களோட அந்த பதிவை முன்னமே படிச்சிருக்கேன்.என்னை பொறுத்தவரை சினிமாங்கறது பொழுதுபோக்குத் தான்.பொழுதுபோக்குக்காக மூளையை களட்டி வைக்கணுமான்னு கேக்கறீங்க.ஆமாம்னு தான் சொல்லுவேன்.மூளையோட பொழுதுபோக்க செஸ்,புத்தகம் படித்தல்னு நிறைய இருக்கு பார்ட்னர்.மூளையை கழட்டி வச்சுட்டு எஞாய் பண்ண மாயாஜாலம்,மந்திரம்,ரகளை,ரவுசுன்னு தர்ர சினிமா வேணும்.லைட் என்டெர்டைன்மென்டை போய் சீரியசா எடுத்துக்க சொன்னா என்னங்க பண்றது?

மகாநதி பாத்துட்டு மூட் அவுட்டானது, ஏ ராம் பாத்துட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையே வீணாணது,குருதிபுனல் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்தது…எதுக்குங்க இப்படி பொழுது போக்கணும்?

சினிமாங்கறது ஒரு குடும்பத்தோட சந்தோஷமான ஞாய்யிற்றுக்கிழமையை கழிக்க உதவணும்ங்க.சிரிச்சுட்டே குழந்தைகளோட சேர்ந்து படம் பாத்துட்டு பாப்கார்ன் சாப்பிட்டுட்டு ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வர்ர மாதிரி இருந்தா தானுங்க அது படம்.எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமா?கூட வர்ர 3 வயசு குழந்தைக்கும் படம் புரிய வேண்டாமா?

சிவாஜியோட பாசமலர்,பாகப்பிரிவினை எல்லாம் கஷ்டப்பட்டு எவ்வளவோ டிரை பண்ணியும் முழுக்க பாக்க முடியமாட்டேங்குது.பலே பாண்டியா,சபாஷ் மீனா,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி எல்லாம் பாத்தா சிரிப்பே நிக்க மாட்டேங்குது.குளோசப்ல அழுகற காட்சி அவர் மாதிரி யாராலும் பண்ண முடியாதும்பாங்க.எனக்கு அது பாக்க புடிக்காதுங்கறப்ப அது தேவைங்களா?

தயாரிப்பாளர் வாழணும்ங்க.ரஜினி படம் எடுத்த தயாரிப்பாளர் எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க.சிவாஜி வாழ்க்கை முழுவதும் நடிச்சு சம்பாதிச்சு சேத்த சொத்தை விட அதிக சொத்தை பிரபுவுக்கு தந்து சந்திரமுகிங்க.
வேட்டையாடு விளையாடு எடுத்த காஜா மைதீன் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாரு,கலைப்புலி தாணு கிட்டத்தட்ட அந்த நிலைமைக்கு போயி தப்பிச்சாரு,அன்பே சிவம் எடுத்த வெங்கடேச்வரா பட கம்பனி அதோட காலி….அந்த படம் எடுத்த நஷ்டத்தை ஈடுகட்ட இலவசமா ஒரு படம் நடிச்சுதர்ரேன்னு கமல் சொல்லி கூட அவங்க ஒத்துக்கலையாம்.

இவரும் கஷ்டப்பட்டு,தயாரிப்பாளரையும் கஷ்டப்படுத்தி,படம் பாக்க வர்ரவங்களையும் அழ வெச்சு…எதுக்குங்க இதெல்லாம்?

சகலகலாவல்லவன் அடைந்த வெற்றி சரித்திர சாதனைங்க.நாயகன்,ஏ ராம் எதுவும் அது முன் நிக்க முடியாதுங்க.

தருமி Says:
April 30th, 2006 at 10:36 pm
குறும்பன்,
படங்கள் ஓடுவது மட்டுமே படங்களின் தகுதியையும் தரத்தையும் பற்றிச் சொல்லும் காரணிகளா என்ன..?

தருமி Says:
April 30th, 2006 at 10:39 pm
துளசி,
“பின்னூட்டமெல்லாம் சுருக்கமா இருக்கணுமாமே.
டிபிஆர்ஜோ சொல்லி இருக்கார்..'’//
-அதெல்லாம் அவர் பதிவுகளுக்காகச் சொல்லியிருப்பார் பாருங்களேன்..சோதனையாய் இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் பல என்ன நீளம்னு. நீங்க எழுதுங்க..எழுதிக்கிட்டே இருங்க…

தருமி Says:
April 30th, 2006 at 10:43 pm
சிட்டுக்குருவி,
“சூர்யா இன்னும் சற்று தூரம் பயணம் செய்ய வேண்டும்.”//

- அதனால்தான் தலைப்பை அப்படி வைத்தேன்.

தருமி Says:
April 30th, 2006 at 11:01 pm
பார்ட்னர்,
“முக்கால்வாசி கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை” - கால்வாசிக்கு நன்றி
உங்கள் கேள்விகளுக்கு இரு வகை பதில்கள் கொடுக்கலாம்:
1. நாம் இருவரும் இந்த விஷயத்தில் இணைய முடியா இணை கோடுகள். வேற விஷயம் பேசுவோமா..?
2. உங்களைப்போலவே நகைச்சுவைப் படங்கள் Laurel&Hardyயிலிருந்து இன்றைய நகைச்சுவைப் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவை நகைச்சுவைப்படம் என்று தெரிந்து போய், மகிழ்வது என்பது வேறு. சீரியஸான படத்துக்குப் போய் அங்கே ஒருவன் பத்துபேரை தோளில் உள்ள துண்டு அல்லது கண்ணில் போட்டிருக்கும் கண்ணாடி, அல்லது உதட்டிலிருக்கும் பீடித்துண்டு கீழே விழாமலே எல்லாரையும் புரட்டி எடுக்கும் நகைச்சுவைக் காட்சி என்னை ரசிக்க வைப்பதில்லை.அந்த மாதிரி இடங்களில் என் பேரப்பையன் அதை ரசிக்கலாம்; ஆனால் நானுமா அதை ரசிக்க முடியும்?
genre - என்ற வார்த்தையே நம் சினிமா உலகில் இல்லையே என்பதுதான் வருத்தம். அப்படி இருந்தால் உங்களுக்குப் பிடித்தது நீங்கள் பார்க்கலாம்; எனக்குப் பிடித்ததை நான் பார்க்கலாம் - ஆங்கிலப்படங்களில் இருப்பது மாதிரி. இங்கே நாம் இரண்டு பேருமே ஒரே படத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதிருக்கிறதே!

அதோடு பார்ட்னர், நீங்கள் சொல்வது போல எல்லாமே சுகம் என்கிறது மாதிரியான படங்களாக இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது சரியா? இலக்கியங்களிலே எப்போதுமே அவலச்சுவைதான் நிலைத்து நிற்கும் இலக்கியங்களாக இருக்கின்றன - சிலப்பதிகாரம் போல். ஷேக்ஸ்பியரின் as you like it போன்ற நாடகங்களைவிடவும் Macbeth, Hamlet, Othello போன்ற சோக முடிவுள்ள நாடகங்களே புகழ் பெற்றன.

அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசம் - நீங்கள் சொல்கிறீர்கள்: “சினிமாங்கறது பொழுதுபோக்குத் தான்.” எனக்கு அப்படி இல்லைங்க.

செல்வன் Says:
April 30th, 2006 at 11:41 pm
பார்ட்னர்,

நீங்கள் சொல்லுவதை புரிந்துகொள்ள முடிகிறது.உங்கள் ரசனையும் எதிர்பார்ப்புகளும் வேறு,என்னுடையது வேறு.

நீங்கள் சொன்ன மாதிரி கலைப்படம் விரும்பும் ரசிகர்களுக்காக அம்மாதிரி படங்கள் தேவைதான்.வெரைடி இல்லை என்கிறீர்கள்.உண்மைதான்.variety will come with numbers.

ஒரு கதாநாயகன் 1000 பேரை அடிப்பது உலகம் பூரா இருப்பதுதான்.First blood, fist of fury,என்டர் தெ டிராகனில் எல்லாம் அப்படித்தான் வெளிநாட்டில் எடுத்தார்கள்.கிளாடியேட்டர்,Robinhood பார்த்தால் பழைய எம்ஜிஆர் படம் மாதிரி தான் இருக்கு.இந்த படங்களை எல்லாம் ஆஸ்கார் கொடுத்து நல்ல படம் என்கிறோம்.நம்மூரில் ரஜினி,எம்ஜிஆர் செய்தால் நமக்கு பிடிப்பதில்லை.

சரி…சினிமா சீரியஸ் இல்லைன்னு சொல்லிட்டு அதை சீரியசா ஆராய்ச்சி பண்ணி கிடைப்பது என்ன?

தருமி Says:
May 1st, 2006 at 10:13 am
கொழுந்து சாம் / சாம் கொழுந்து,
* முதல் மரியாதையையும் விட தேவர் மகன்தான் எனக்குப் பிடித்தது.
* அன்பே சிவம் தோற்றதற்கு நீங்கள் கொடுத்த காரணம் சரியா என்று தெரியவில்லை. அப்படியானால், பதினாறு வயதினிலே அதில் சேராதா?
* “அழகா இல்லாதவங்க
நடிச்சு படம் எதாவது வந்திருக்கா?” இப்படியெல்லாம் ஜோக் அடிக்கக் கூடாது. நம்ம பாரதிராஜா அறிமுகம் செய்த சந்திரசேகர், பாண்டியனிலிருந்து இன்றைக்கு நம்ம தனுஷ் வரை உள்ள ‘திரு முகங்களை’ மறந்திட்டீங்களா?

தருமி Says:
May 1st, 2006 at 10:14 am
ஜோ,
ஒண்ணு சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போய்ட்டீங்க…
தேர்தல் வேலையில் பிஸியா இருக்கீங்க போலும்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 10:39 am
தேவர் மகனையும் சேர்த்திருக்கணும். இயக்குனர் மலையாளப் பட இயக்குனர் பரதன் தானே!
இவர் மலையாளப் படங்கள் நீங்கள் சொல்கிற ‘genre’ வகை. பதினாறு வயதினிலே முழுக்க முழுக்க
பாரதிராஜா படம். அவருக்காகவே அவருடைய புதிய மாறுபட்ட முயற்சிக்காக பேசப்பட்டது.
படம் முழுக்க கமலுக்கு மட்டும் முக்கியத்துவமில்லை. ரஜினிக்கு அட்டகாசமான ரோல், ஏன் sri devi, காந்திமதிக்கு கூட நினைவில் நிற்கும் கதா பாத்திரங்கள். இவர் தான் முதல் முறையா படத்தின்
இயக்கம், ஆக்கம் எல்லாத்துக்கும், தரத்துக்கும் தான் காரணம்னு காட்டியவர். நல்ல இசை, நல்ல
ஒளிப்பதிவு, முழுக்க முழுக்க கிராமம் எல்லாமே +. இன்னைக்கு இந்த ரோல்ல கமல் நடிக்க மாட்டார். அன்னைக்கு பாலசந்தர்
உருவாக்கிய அழகிய பையன் இமேஜை உடைக்க உதவியது இந்த பாத்திரம்.
பாண்டியன், சந்திர சேகர் படவுலக ஆயுள் கம்மிதானே! இவங்க படம் ஓடின மாதிரி தெரியலையே! பாலைவனச்சோலையைப் பத்தி சொல்றீங்கன்னா, அது சுகாசினி படம். பையங்க பொண்ணு பின்னாடி
போற கதை.

அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 10:46 am
தனுஷ் பத்தி சொல்லணுன்னா, தெரிந்து உருவாக்கிய ‘bad boy’இமேஜ். நிறையப் பேர் மனசில நினைக்கிறத
திரையில செய்கிறார். இவர் முதல் படம் ஆபாசம்ன்னு எதிர்ப்பு இருந்துதுன்னு நினைக்கிறேன்
அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 11:07 am
பாரதி ராஜா தன்னை ஹிரோவாப் போட்ட படம் நல்ல படம்னாலும் ஒடலையே! விஜய சாந்தி,
அருணாவின் அறிமுகப் படம்.
அன்புடன்
சாம்

Prasanna Says:
May 1st, 2006 at 3:14 pm
///ஜெமினி கணேசன் - மிதமும் இயல்பும் சரி; ஆனால் variety?
///
அப்போ ஸ்ரீகாந்த் இந்த வகைல சேர்த்துகலாமா?? வெண்ணிற ஆடைல அடக்கி வாசிச்சது. காசேதான் கடவுளடால காமெடி, ராஜ நாகம்ல வில்லன். அவர நாம மிஸ் பண்ணலயா??

//மகாநதி பாத்துட்டு மூட் அவுட்டானது, ஏ ராம் பாத்துட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையே வீணாணது,குருதிபுனல் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்தது…எதுக்குங்க இப்படி பொழுது போக்கணும்?//
கரெக்ட் அதுக்கு பதிலா, ஊர்க்காவலன் படத்துல கால்ல கயிறு கட்டி ஜீப்ப நிறுத்துற டெக்னிக்க கத்துக்கலாம். பாபா பாத்து ஷூல தீ வர்ற மாதிரி நடக்க கத்துக்கலாம். சந்திரமுகில ரஜினி அறிமுக காட்சில கைல ஷு கட்டி இருப்பாரே அத பாத்து ரசிக்கலாம்.
அடப்போங்கய்யா! பேரரசு படம் எடுத்தா மெஸேஜ் இல்லனு சொல்றது, கமல், சேரன் படம் எடுத்தா காட்சி நீளம்னு சொல்றது. உங்கள எப்படித்தான் திருப்தி படுத்த முடியும்???

வசந்தன் Says:
May 1st, 2006 at 3:32 pm
சிவாஜி திரைக்குப்பின்னும் நடித்துக்கொண்டுதான் இருந்தார் என்று நினைக்கிறேன்.
சென்னை வானொலியில் சிவாஜியின் செவ்வி தொடராகப் போனபோது கேட்டேன். தொடக்கத்தில், இவர் நடித்த படத்திலிருந்துதான் வசனங்கள் போடுகிறார்களோ என்று ஐயுறுமளவுக்கு இருந்தது.
‘சாமி, ஆக்டர்ஸ் கிட்ட அவ்வளவுக்கு பிரிவினை வந்துடிச்சா? மலையாளி, தெலுங்கன், கர்னாடகான்னு பிரிச்சுப் பாக்கிற நெலம வந்துடிச்சா? அப்பிடியா நாம இருந்தோம்? அந்தநேரத்துல இந்தியா -சீனா வார் நடந்தப்போ….” என்று அடித்தொண்டையில் கரகரத்துக்கொண்டிருந்தார், கெளரவம் சிவாஜிபோல.
பல நாட்கள் ஒலிபரப்பான அவரின் அத்தொடர் முழுதும் நான் கவனித்தது இதைத்தான்.
அவர் வழமையிலும் அதீத நடிப்புக்காரன் என்றுதான் நான் நினைக்கிறேன். நேரில் அறிந்தவர்கள் உண்மை சொன்னால் நன்று.

கொழுந்து சொல்வதுபோல, வாழ்க்கைத்தரம் மாறினால் ரசனையும் மாறுமென்பதில் ஓரளவு நியாயமிருக்கிறது. ஆனாலும் அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது.

தருமி Says:
May 1st, 2006 at 3:51 pm
partner,
1000 பேரை அடிப்பது உலகம் பூரா இருப்பதுதான்…sylvester படம், james bond படம் அப்டின்னா எப்படியிருக்கும்னு தெரியும். நீங்க சொல்றது மாதிரி ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் படம் பார்க்க குடும்பமா போகும்போது baby’s day out, home alone அப்டின்னு போவீங்க; கொஞ்சம் வயசான பையன் ஆயிட்டா saving the ryan அல்லது james bond படத்துக்கோ கூட்டிக்கிட்டு போவீங்க. வ்யசுக்கார ஆளுகளா சேர்ந்தா basic instinct, indecent proposal அப்டின்னு போவீங்க. இங்கே எல்லா மசாலாவையும் ஒரே படத்தில் அல்லவா அள்ளித் தெளிக்கணும்னு எதிர்பார்க்கிறோம்.

bharaniru_balraj Says:
May 1st, 2006 at 3:52 pm
தருமி,

முதல் கமன்ட் “வித விதமான் தோற்றம்”
2 வது கமன்ட் ” அப்பா 16 அடி பாஞ்சா இவர் 16 அடி பாயுறார்.

அவ்வளவுதான்.

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:03 pm
//அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது//

வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!

அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:05 pm
தெக்காட்ஸ்,
“கீழ குனிஞ்சு ஏதோ தேடுற மாதிரி ஆக்ட் வுட்டேன்னா…” நம்ம டெக்னிக் வேற

தருமி Says:
May 1st, 2006 at 4:13 pm
கொழுந்து சாம்,
தனுஷ் பற்றிச் சொன்னது தமிழ்த் திரையுலகின் ‘அழகுத் திருமுகங்கள்’ என்ற முறையில். ரஜினியைக்கூட இதில் சேத்துக்கலாம். என்ன, மக்கள் அடிக்க வராமலிருந்தால் சரி

தருமி Says:
May 1st, 2006 at 4:15 pm
ப்ரசன்னா,
“உங்கள எப்படித்தான் திருப்தி படுத்த முடியும்??? “//
- அதச் சொல்லுங்க…

தருமி Says:
May 1st, 2006 at 4:17 pm
வசந்தன்,
probably the ‘actor’ in him had overgrown on his personal self

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:22 pm
தருமி சார்,
எங்க வீட்டில ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் இருக்கார்!!! நிறைய பேர்
வீட்டிலேயும் இத பார்த்திருக்கேன்!
மாமனார் சுறு சுறுப்பு மருமகனுக்கு கொஞ்சமாவது இருக்கு. மாமனார் charisma தான் இல்லை!:-)
அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:28 pm
கொழுந்து,

“ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் ..” அந்தப் பிஞ்சுக் ‘கொழுந்து’ யாருங்க?

அது எப்படிங்க? சினிமாவிலோ, சின்னத் திரையிலோ மூஞ்ச காமிச்சிட்டாலே அவங்க எவ்வளவு ‘கேவலமா’ இருந்தாலும் நம்ம ஊரு கூட்டம் கொஞ்சம் பின்னாலேயே போயிடுது? சில comperes, சின்னத்திரை நடிகர்கள் இருக்கிறார்கள் - அதுகளை smart, cute அப்டின்னு சொல்லிக்கிட்டு பின்னால போறதுகளைப் பார்த்தா வேடிக்கையாகத்தானிருக்கு.

தருமி Says:
May 1st, 2006 at 4:31 pm
bharaniru_balraj Comments:

தருமி,

முதல் கமன்ட் “வித விதமான் தோற்றம்”
2 வது கமன்ட் ” அப்பா 16 அடி பாஞ்சா இவர் 16 அடி பாயுறார்.

அவ்வளவுதான்

தருமி Says:
May 1st, 2006 at 4:34 pm
bharaniru_balraj,
உங்க பின்னூட்டத்தை அனுமதித்த பின்னும் இங்கே ‘இறங்க’ மறுத்துவிட்டதால் நானே வலுக்கட்டாயமாக இறக்கம் செய்து விட்டேன்.

உங்கள் இரண்டாம் கமண்ட் புரிந்தட்க்ஹு. முதலாவது இப்போது தான் புரிகிறது.
அப்பா எங்கே 8 அடி பாய்ந்தார்?

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:40 pm
//“ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் ..” அந்தப் பிஞ்சுக் ‘கொழுந்து’ யாருங்க?//
நிசமாலுந்தான் சொல்றேன். சின்னத்திரையில ரஜினி முகத்தைப் பார்த்தா வர சந்தோசத்த விலை கொடுத்து வாங்க முடியாது. படையப்பா திரும்ப திரும்ப பார்த்துட்டு அந்த பிறந்த நாள் பாட்ட ஹம் பண்ணப் பார்ப்பாங்க. இது கோர்வையா பேச்சு வரதுக்கு முன்னாடி!
அன்புடன்
சாம்
சின்ன திரையில ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை?
அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:45 pm
KOZHUNDU Comments:

//அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது//

வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!

அன்புடன்
சாம்

suresh - penathal Says:
May 1st, 2006 at 4:49 pm
உங்கள் பதிவு தூண்டி நானும் ஒரு திரை அரசியல் பற்றிப்பதிவிட்டிருக்கிறேன் இங்கே!

அவசியம் பாத்து திட்டிட்டுப்போங்க!

தருமி Says:
May 1st, 2006 at 4:50 pm
கொழுந்து சாம்,
உங்க பின்னூட்டத்தை அனுமதித்த பின்னும் இங்கே ‘இறங்க’ மறுத்துவிட்டதால் நானே வலுக்கட்டாயமாக இறக்கம் செய்து விட்டேன்

“வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!”//
- எனக்குப் புரிஞ்சு போச்சே! சந்திரமுகி படத்துக்கு நமது அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்கள் அடித்த ‘லூட்டி’ பத்திதானே சொல்றீங்க, வசந்தன்?

இளவஞ்சி Says:
May 2nd, 2006 at 9:13 pm
தருமி சார்,

சிவாஜி, கமல் அதுக்கப்பறம் சூர்யா.. இதெல்லாம் ஓகே!

ஆனா சிவாஜி ஓவர் ஆக்டிங்னு ஹாலிவுட் படங்களையெல்லாம் கம்பேர் செய்து சொல்வதை நான் கொஞ்சம்கூட ஒத்துக்க மாட்டேன்!

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு கலை. இயல், இசை, நாடகம்னு நமக்கு எல்லாமே இயல்பு வாழ்க்கையைவிட ஒரு படி தூக்கலா இருக்கனும்! இத்தகைய பின்புலத்தில் இருந்து வந்த ஒரு கலைஞன் அந்த காலத்தில் அத்தனை வேடங்களை ஏற்று அத்தனை வெரைட்டி காட்டியிருக்காருன்னா அது எப்பேற்பட்ட சாதனை! கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும்னு சொன்னா எந்த முகம் உங்களுக்கு ஞாபகம் வருகிறது?!

ராமாயண மகாபாரத கூத்துக்கள் பார்த்திருக்கிறீர்களா? அது வாழ்க்கையோடு ஒட்டி இயல்பாகவா இருக்கு?! அப்படி இருந்தாதான் அது ரசிக்குமா?! யோசிச்சு பாருங்க.. இயல்பா இருக்கட்டும்னு அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள் மாதிரி கூத்துல ராமன் வில்லை எடுத்துக்கிட்டு 10 நிமிசமா எதுவுமே பேசாம நிலைகுத்திய பார்வையோட நடந்து போய்க்கிட்டே இருக்காருன்னு வைங்க! மக்கா பிரிச்சுற மாட்டாங்க! கூத்து, நாடகம் என்பவை நம் மண்ணோடு பிணைந்திருந்த காலத்தில், ரசிக்கப்பட்ட காலத்தில், போற்றப்பட்ட காலத்தில், அதுவே அற்புதமான நடிப்பென நம்பப்பட்ட காலத்தில் இந்த மண்ணில் ஒரு கலைஞன் இதைவிட வேறெப்படி நடித்திருக்க முடியும்?! :

அவங்கவங்க மண்ணுக்கு அவங்கவங்க ரசனை! கதக்களிய பார்த்தா எனக்கு சிரிப்புதான் வரும்! ஏனெனில் எனக்கு அந்த மண்ணுடன் எந்த பந்தமோ, அந்த கலையைப் பற்றிய எந்த அறிவோ ரசனையோ இல்லை என்பதே உண்மை! அதற்காக அது கேரளாவின் இயல்பில்லையென ஆகிவிட முடியுமா என்ன?

மார்லன் பிராண்டோ அவர் ஊருக்கு.. சிவாஜி நம்ப ஊருக்கு…

திமிங்கிலத்துக்கு தரைல நடக்கத் தெரியலைன்னும், சிங்கத்துக்கு தண்ணிக்குள்ள தம்கட்ட தெரியலைன்னும் சொன்னா அது சரியா??

இந்த விசயத்துல நான் ஜோ கட்சி!!!

தருமி Says:
May 3rd, 2006 at 8:51 pm
ஹாய் இளவஞ்சி,
நீங்க நம்ம கட்சி / அட, நான் உங்க கட்சி –ரெண்டுல எதையாவது வச்சுக்கங்க. ந்ம்ம தமிழ்மணதின் சிவாஜி ரசிகர் மன்றத்துக்கு தலைவர் ஜோ அப்டின்னா நானதான் துணைத்தலைவர். வேணும்னா உங்கள செயலரா போட்டுருவோம். நீங்க என் பழைய பதிவைப் படிக்கலைன்னு நினைக்கிறேன். படிச்சுப் பாருங்க.

திமிங்கிலத்துக்கு தரைல நடக்கத் தெரியலைன்னும், சிங்கத்துக்கு தண்ணிக்குள்ள தம்கட்ட தெரியலைன்னும் சொன்னா அது சரியா?? // - இது நச் & இளவஞ்சி டச்

இளவஞ்சி Says:
May 3rd, 2006 at 9:06 pm
தருமிசார்,

ஹிஹி…(போற போக்கைப்பார்த்தா என் பேரே ஹிஹி ஆகிடும் போல இருக்கு )

அந்த பதிவினை படிச்சு பின்னூட்டம் வேற போட்டிருக்கேன்! சைக்கிள் கேப்புல கொஞ்சம் உணார்ச்சி வசப்பட்டு மறந்துட்டேன்!

இந்த ஒரு தபா விட்டுருங்க!

தருமி Says:
May 3rd, 2006 at 9:22 pm
போனா போகுது இந்த ஒரு தபா நம்ம இளவஞ்சியாச்சேன்னு உடுறேன்.

கமல் Says:
May 4th, 2006 at 7:21 pm
வழக்கம்போலவே, மிக அருமையான பதிவு.

//எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும். …….. இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது.//

சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன், வ.உ.சி, ராஜராஜசோழன், இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே! கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லையெனில், இது எப்படி சாத்தியமாகியிருக்கும்?

//ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். ……. மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ.//

மணிரத்னம் மட்டுமல்ல. தளபதி கமர்ஷியலாக வெற்றியடைந்திருந்தாலும், அழகி (நாவல் : கல்வெட்டு) அளவுக்கு நல்லபடம் என்று பாராட்டப்படவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள், மோகமுள், இதெல்லாம் நாவலாக வந்து வெற்றியடைந்தபின் சினிமாவாக வந்து வெற்றியடைந்தவை.

//முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. …. ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான்.//

100% சரி. ஆனால், காக்க காக்க பார்த்து முடித்தபின், குருதிப்புனல் போன்று எடுக்க முயன்று தோற்று விட்டார்களோ என்ற நினைவு வருவதுண்டு. குருதிப்புனல் கமலும் போலீஸ் வேடத்துக்கு முழுப்பொருத்தம். ஆனால் கமர்ஷியல் கலந்த காக்கிச்சட்டையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

நன்றி
கமல்

தருமி Says:
May 4th, 2006 at 9:00 pm
கமல்,
இப்படித்தான் நேரம் கழிச்சி வர்ரதா? என்ன நீங்க?

“சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன், வ.உ.சி, ராஜராஜசோழன், இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே!”//
- இதில வ.உ.சி.ய வெளியே எடுத்துடுங்க; மீதியெல்லாம் நீங்க சொன்னது மாதிரி நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தான்; ஆனால் அது சரியல்லவே. வ.உ.சி. அப்படியல்ல. இப்படித்தான் அவர் இருந்திருப்பார் என்ற நினைவே வந்தது. மிக இயல்பு. மில நேர்த்தி. வாவ்… தலைவர்னா தலைவர்தான். அப்படிப்பட்ட கலைஞனை பயன்படுத்தாம விட்டுட்டோமே.

அதே போல நீங்கள் சொல்லியுள்ள மூன்று நாவல்களில் சி.நே.சி. மனிதர்கள்,மோகமுள் இரண்டும் படங்களாகப் பரிமளிக்கவில்லையே.

குருதிப் புனலில் the technical qualities எனக்குப் பிடித்தது. நடிப்பில் கமல் நன்றாக் இருந்தாலும், என் ஓட்டு சூர்யாவிற்குத்தான்.

Prasanna Says:
May 4th, 2006 at 9:38 pm
//இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே! கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லையெனில், இது எப்படி சாத்தியமாகியிருக்கும்?//
இதப் பத்தி எனக்கு ஒரு அனுபவம் உண்டு. நான் ஒரு சின்ன சீரியல் மாதிரி (விஜய் டி.வி.ல ஞாயித்து கிழமை காலைல ஏழு மணிக்கு போடுவாங்க, கிறிஸ்டியன் ஸீரியல்) ஒரு விஷயத்துல நடிச்சேன். அதுல கும்பலோட கோவிந்தா போட்ற சீன்ல எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டேன். கிளோஸ்-அப் நு ஒண்ணு வெச்சு கொல்லுவாங்க. டைரக்டர் சொல்ற எக்ஸ்பிரஷன் சுத்தமா எனக்கு வரல.அப்போ யூனில இருந்த லைட் மேன் ஒருத்தர் சொன்னார், சிவாஜி சேர்ல உக்காந்து சிகரெட் குடிச்சுகிட்டி இருப்பாராம். டைரக்டர் பக்கத்துல வந்து “சார் நெகிழ்ச்சியா ஒரு கிளோஸ் அப் வேணும்” அப்படின்னு சொல்லுவாராம். உடனே சிகரெட்ட கீழ போட்டு “ம்! எடுத்துகுங்க”னு அசால்ட்டா எக்ஸ்பிரஷன் குடுத்திடுவாராம்.
அவர் படத்துல எல்லாம் வேல பாத்துட்டு இப்போ உனக்கு தெர்மாகோல் பிடிக்குறனே-ன்ற ரேஞ்சுக்கு பேசினார். அப்போ தான் எனக்கு அந்த நடிப்ப உணர முடிஞ்சது. அதுவரைக்கும் நானும் ஓவர் அக்ட்னு தான் சொல்லிகிட்டு இருந்தேன்.

தருமி Says:
May 4th, 2006 at 9:46 pm
அடடே நம்ம பக்கம் ஒரு நடிகர் இருக்காரா…
இனிமே ‘சின்னத் திரைப் புகழ் ப்ரஸ்’ அப்டின்னு போட்டுருவோம். சரியா?

Prasanna Says:
May 5th, 2006 at 8:05 am
என்னத்த நடிகர். அந்த விஷயம் படா கஷ்டமா இருக்கு பாஸ். அடுத்த ஒரு நிகழ்ச்சிக்கு கூப்ட்டாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த டைரக்டர் கிட்ட திட்டு வாங்கி மாளாது.

மேட்டர் எல்லாம் சரிதான். அந்த ஸ்மைலி என்ன சொல்ல வருது???

தருமி Says:
May 5th, 2006 at 11:44 pm
ப்ரஸ்,
“…திட்டு வாங்கி மாளாது. “//
பட்டை தீட்டுறதின்னா சும்மாவா?

–> ஒரு பொறாமைதான்

தருமி Says:
May 5th, 2006 at 11:53 pm
வசந்தன்,
நீங்க போட்ட பின்னூட்டத்தை எடுத்தா குண்டுஎழுத்தில இருந்து விமோசனம் கிடைக்கலாமென்றதால் எடுத்தேன். எடுத்ததை மீண்டும் இப்போது இடுகிறேன்.

தருமி, உங்களுக்கு உண்மையிலேயே ‘-/’ யாரென்று தெரியாதா? அதுவும் பாலச்சந்தருக்கு ஒரு இடி கொடுத்த பிறகும். ‘பெயரி’ல்லாமல் வநதாலும் ரெண்டு கோடு போட்டு வாறார்தானே?

குறும்பன் Says:
May 13th, 2006 at 12:16 am
// படங்கள் ஓடுவது மட்டுமே படங்களின் தகுதியையும் தரத்தையும் பற்றிச் சொல்லும் காரணிகளா என்ன..? //
ஆகாது. நல்ல தரமான படம் எடுத்தா ஓடாது மக்கள் அதை ரசிக்க மாட்டாங்க என்று கூறும் மக்களுக்காக கூறினேன்.
தரமான படத்தை ரசிக்கும் படியா எடுத்தா ஓடும் என்பது என் வாதம். குறிப்பா சொல்லனும்ன்னா ரசிக்கும் படியா இருக்கும் எல்லா படங்களும் ஓடும் அங்கு தரத்துக்கு வேலையில்லை. தரம் இருந்தா அதன் வெற்றி அதிகபடியாக இருக்கும்.

தருமி Says:
May 13th, 2006 at 12:29 pm
குறும்பன்,
“ரசிக்கிறமாதிரி படம் எடுத்தா ஓடும். “//
யாருரசிக்கிறது மாதிரி அப்டிங்கிறதுதான் அடிப்படைக் கேள்வி!
ஒரு பெங்காலி மாதிரியா?
ஆந்திரக்காரர் மாதிரியா?
இல்ல நம்ம ரஜினி ரசிகர்கள் மாதிரியா????

கோ.இராகவன் Says:
May 13th, 2006 at 1:13 pm
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் தருமி. சூர்யா மிகச் சிறந்த நடிகர். காக்க காக்க அவரது திறமையை வெளிக் கொண்டு வந்த படம். அவரை முறையாக இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிவாஜியிடம் ஒரு முறை கேட்டதற்குச் சொன்னார். “அப்பா….நான் இயக்குனர் நடிகன். ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும் என்று விரும்புவது இயக்குனரின் உரிமை. அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்கிறேன். சரியில்லை என்று அவர்கள் சொன்னால் அவர்கள் சொன்னது போல மாற்றிக் கொள்கிறேன்.”

ஆகக் கூடி அவரை வைத்தும் நல்ல படம் எடுக்க முடியாத இயக்குனர்கள் மீதுதான் குற்றம். கப்பலோட்டிய தமிழன் மட்டுமல்ல, நிறைய படங்கள் இருக்கின்றன. பரீட்ச்சைக்கு நேரமாச்சு படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? சிவாஜியே பிடிக்காத நண்பன் கூட பாராட்டிய படம். ஒரு சரிதா படம் கூட உண்டு. ரொம்ப இயல்பாக இருக்கும். முதல்மரியாதை, தேவர்மகன், பூப்பறிக்க வருகிறோம் என்று வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனாலும் தங்கத்தைக் கொண்டு ஓட்டை அடைத்த இயக்குனர்கள்தான் தமிழில் நிறைய.

மகரிஷி எழுதிய நாவல் பத்ரகாளி நாவலை ஏ.சி.திருலோகச்சந்தர் மிகவும் இயல்பாக படம் பிடித்திருந்தார்…ஆனால் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா போன்ற படங்களைத்தான் பிரதானமாக எடுத்தார். வியட்நாம் வீடு படத்தில் நன்கு பயன்படுத்திக் கொண்ட சுந்தரம் அடுத்தடுத்து வழக்கமான பாணியிலேயே போய் விட்டார்.

Tuesday, April 25, 2006

155. HAIL ‘THE HINDU’ !

Image and video hosting by TinyPic

THE HINDU பேப்பரை இன்னைக்கிக் காலையில் பார்த்ததும் அப்படி ஓர் அதிர்ச்சி; சந்தோஷமும் கூட. எப்படியாவது நாலு பேத்துக்காவது அதைப் பற்றிச் சொல்லிடணும்னு ஒரே ‘இது’! அதனாலதான் இந்த ‘இது’.

வழக்கம்போல முதல் பக்கத்தை மேஞ்சிட்டு, ஸ்போர்ட்ஸ் பக்கம் போனா ஆச்சரியம்னா அப்படி ஒரு ஆச்சரியம். வழக்கமா 20,21-ம் பக்கங்களில் கிரிக்கெட்டின் தனி ஆவர்த்தனம்தான் இருக்கும். கிரிக்கெட் செய்தி இல்லாவிட்டாலும், டெண்டுல்கர் வீட்டு நாயின் வலது காலின் இடது பக்கத்தில் உள்ள முதல் விரலின் கடைசி எலும்பு பிசகியுள்ளதற்காக எடுக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகள் பற்றியாவது இருக்கும்.

இன்றைக்கு அங்கங்கே கொஞ்சம் கிரிக்கெட் செய்தி இருந்தாலும் முக்கிய செய்திகளாகக் கால்பந்து பற்றிய செய்திகள் முதலிடம் பெற்றிருந்தன. என்ன ஆச்சு, ஹிண்டுவுக்கு? உலகக் கோப்பைக்காக இருக்குமோவென்று நினைத்தேன். அப்படியும் தெரியவில்லை. உலகக் கோப்பை என்றால் நம் திருநாட்டைப் பொருத்தவரை 8-10 நாடுகள் (அதில் 3-4 உப்புக்குச் சப்பாணி நாடுகள்!) சேர்ந்து, சட்டைகூட நனையாத விளையாட்டு ஒன்று விளையாடுவார்களே, அதானே உலகக் கோப்பை பந்தயம். என்னன்னே புரியலை. அதைவிடவும் தெண்டுல்கரின் பிறந்த நாள் விழா புகைப்படம் 19-பக்கம் வந்திருந்தது. அது எப்படி முதல் பக்கத்தில் வரவில்லையென்ற ஆச்சரியத்தில் மூழ்கியவன் இந்த நேரம் வரை (மாலை 4.23) எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

யாராவது கைதூக்கி உடுங்கப்பா, please!





வால் செய்தி: நேற்று இரவு சன் செய்திகள் 8 - 8.30 பார்த்தேன். விளையாட்டுச் செய்திகள் என்ற பகுதி வந்தது. டெண்டுல்கர் பிறந்த நாள் கேக் தானே வெட்டி (பக்கத்தில் யாருமே இல்லை ?!) தானே சாப்பிட்டதைக் காட்டி அதையே செய்தியாகச் சொல்லி முடித்தது.
அதுதான் கொள்கைப் பிடிப்பு என்பது!!







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 25 2006 04:34 pm | Uncategorized |
21 Responses
துளசி கோபால் Says:
April 25th, 2006 at 5:53 pm
தருமி,

தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரம் ‘ஜாலி’யாப் போய்க்கிட்டு இருக்கறதை கவனிக்கிற ஜோர்லே
தெண்டூல்கரை மறந்துட்டாங்க போல.

TheKa Says:
April 25th, 2006 at 8:11 pm
ஹா…ஹா…ஹா…தருமி சார், தருமி சார்…அடப் போங்க சார்…

Ganesh Says:
April 25th, 2006 at 9:12 pm
Kalakkiputtinga

Sivabalan V Says:
April 25th, 2006 at 9:17 pm
Photo is good!

To my knowledge, The Hindu gives importance to other sports/games also (I do agree they give more importance to Cricket, but it is order of the day)

But I hardly find any newspaper in India to give good coverage on Sports/games. It is the status. I do not see any major change on this in near future.

ஜெயக்குமார் Says:
April 25th, 2006 at 9:45 pm
ஹிந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு (ராம்) இலங்கை அரசு லங்காரத்னா விருது வழங்கி கவுரவித்தது எதற்கு என்று தெரியுமா?

அங்குள்ள தமிழ்மக்களின் மீது அந்த நாட்டு ரானுவம் நடத்தும் அராஜகங்களை நம்மக்களுக்கு திரித்துக்கூறுவதற்காகத்தான்.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை ரானுவத்தால் சில university மாணவர்கள் நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது அங்கு இருந்த ஹிந்து நாளேட்டின் நிருபர்கள் மாணவர்கள் வெடிகுண்டுகளை எடுத்துச்செல்லும் போது அவர்களும் அசாதாரணத்தால் வெடித்து உயிரிளந்தனர் என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.

கோ.இராகவன் Says:
April 25th, 2006 at 9:52 pm
டெண்டுல்கர் பிறந்த நாள் கொண்டாடுறது ஒங்களுக்கெல்லாம் பெரிய விஷயமா இருக்கு……ம்ம்ம்….அதுவும் தேர்தல் வந்திருக்கிறப்ப…………

ஜவஹர் Says:
April 25th, 2006 at 11:48 pm
அன்புள்ள தருமி,
இப்போதுதான் பார்த்தேன்.
மணி 11.30 காலை.
இது பசிபிக் நேரம்.
நன்றாகச் சொன்னீர்கள்.
கருவிப்பட்டையில் தலைப்பு நீங்கள் தந்ததா? படம் ஒரு கவிதை என்றால், விவரித்த விதம் ஒரு சிறுகதை.
பொருத்தம் என்றால் அப்படியொரு பொருத்தம். ஜமாயுங்கள்.
அன்புடன்,
ஜவஹர்.

தருமி Says:
April 26th, 2006 at 11:53 am
துளசி,
எங்க மறந்தாங்க…கொஞ்சம் ஓரங்கட்டியிருக்காங்க…ஆமா, வயசு ஆயிரிச்சில்ல…:???:

தருமி Says:
April 26th, 2006 at 12:40 pm
தெக்கா,
அது என்ன தெக்கிக்காட்டான்? சரியான பெயர் தெக்கத்திக்காட்டான் என்றுதான இருக்கணும்? அப்படித்தான் சிலபேரு என்ன கூப்பிட்டதுண்டு..

தருமி Says:
April 26th, 2006 at 12:53 pm
கணேஷ்,
ரொம்ப நன்றி. நீங்க முதல் தடவையா வர்ரீங்களோ? எங்க இருந்து, என்ன அப்டிங்கிறதெல்லாம் தெரியலையே!

தருமி Says:
April 26th, 2006 at 12:54 pm
சிவபாலன்,
“it is order of the day)” // -
- இல்லீங்க; இது disorder of decades !

தருமி Says:
April 26th, 2006 at 12:55 pm
ஜீரா,
கதைய மாத்துறீங்களே அய்யா!

தருமி Says:
April 26th, 2006 at 12:55 pm
ஜவஹர்,
படப் பொருத்தத்துக்குத் தந்த பாராட்டு செம ஜில்… நன்றி

பொன்ஸ் Says:
April 27th, 2006 at 5:34 pm
டெண்டுல்கர்னு சொன்னா, எனக்கு நினைவு வருவது ஒண்ணே ஒண்ணு தான்.. மெனக்கட்டு பம்பாய் போய், டெண்டுல்கர்ஸில் சாப்பிட வேண்டும் என்று ஒரு நாள் போனோம்; காலை மாலை ரெண்டு வேளையும் போனோம், எங்க கெட்ட நேரம் அவங்க அதைத் திறக்கவே இல்லை..

தருமி, இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க, உங்க படத்துக்கும் பதிவுக்கும் உள்ள சம்பந்தம் தான்…

தருமி Says:
April 27th, 2006 at 9:50 pm
பொன்ஸ்,
சரியான சாப்பாட்டு ராமி - அப்டித்தான் வேணும்

நீங்களும் இருக்கீங்களே…மேல ஜவஹர் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க

பொன்ஸ் Says:
April 28th, 2006 at 5:55 pm
//சரியான சாப்பாட்டு ராமி //

கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க.. மதுரைக்கு வந்து உங்களைப் பாக்காம, நல்ல, ஜிகிர் தண்டா என்ன, பதநீர் என்ன, பன்னீர் சோடா என்ன.. நல்ல ஊருங்க உங்க ஊரு

கமல் Says:
April 28th, 2006 at 7:40 pm
வந்து விட்டேன் ஐயா! (போன பதிவுல உங்க பின்னூட்டத்தை இப்பத்தான் படிச்சேன்!)

இந்த போட்டோவில் இருப்பது பாலாஜி கோயிலா? சின்ன வயசுல பார்த்த ஞாபகம்!

கும்பகோணம் பன்னீர்சோடாவை விட மதுரை பன்னீர்சோடா ருசியா இருக்குமா?

ஜில் ஜில் ஜிகிர்தண்டா (காதல் படத்துல) கேள்விப்பட்டிருக்கேன். சாப்பிட்டதில்லை. எப்படி இருக்கும்?

நன்றி
கமல்

தருமி Says:
April 28th, 2006 at 8:09 pm
பொன்ஸ்,
“நல்ல ஊருங்க உங்க ஊரு ..”//
- நாங்கல்லாம் இருக்கோம்லா..பெறகு எப்படி ஊரு நல்லா இல்லாம இருக்கும். அடுத்த தடவையாவது சொல்லிட்டு வாங்க…

தருமி Says:
April 28th, 2006 at 8:13 pm
கமல்,
நிச்சயமா சின்ன வயசில பார்த்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அந்தக் கோவில் சிக்காகோவில் இருக்குது. எவ்வளவு பெரிய வளாகம்…! எவ்வளவு சுத்தம்…!!

ஜிகர்தண்டா - கமல், சில விஷயங்கள் சொல்லித் தெரிவதில்லை. மதுரை ஸ்பெஷல் ஜி.தண்டா அதில ஒண்ணு

TheKa Says:
April 28th, 2006 at 8:23 pm
அது ஒன்னுமில்ல தருமி என்கிற உருமி (ஹி…ஹி…ஹி), என்னுடைய சிறிய ஊரின் பெயர் அது, சரி முகமூடியில்லாமல் அப்படியே இங்கு வழங்கினால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு முயற்ச்சிதான், அந்த தெக்கிக்காட்டான்.

வெளி ஊருக்கு சென்று படிக்கும் பொழுது சில பேர் தனது சொந்த ஊரின் பெயர் நகைக்கும் படி இருக்கிறது என்று பக்கத்தில் உள்ள பெரிய்ய்ய்யா ஊரின் அடையளத்துடன் வாழ்ந்து சாவதை பார்த்ததுண்டு…ஒரு சிறிய விழிப்புணர்வு ஊட்டும் பெயர்தான் காட்டான். உண்மைக்குமே நான் ஒரு காட்டான் சசசார், நம்புங்க…

தெகா.

கமல் Says:
April 28th, 2006 at 8:34 pm
சிக்காகோவா? பார்த்ததில்லை. கொடைக்கானல் அருகிலிருக்கும் பாலாஜி கோயில்ன்னு நினைச்சேன்.

அடுத்தமுறை இந்தியா வரும்போது இதுக்காகவே மதுரை வர்றேன்.

நன்றி
கமல்

154. பிள்ளையாரும் பால் குடித்தார்…




 அது நடந்து எத்தனை வருஷம் இருக்கும்னு தெரியலை; ஆனா எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஊரென்ன உலகமே ஒரு ஆட்டம் ஆடிப்போச்சு. லண்டன் பிள்ளையார் கோவிலில் குடம் குடமா பிள்ளையார் குடிக்கிறதுக்காக நம்மூர் படித்த மக்கள் பலர் பால் ஊத்தினதைப் படமாக எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டிருந்தார்கள். அன்றைக்கு நடந்தது இன்னும் நல்லா நினைவில் இருக்கு. வீட்டுக்கு வெளியே நான் என் குடும்பத்தாரோடு நின்று கொண்டிருந்தேன் - ஏதோ தெருவும் ஊரும் வித்தியாசமான கல கலப்போடு இருந்தது மாதிரி இருந்ததால். அப்போது எதிர்த்த வீட்டுப் பையன் - ஒன்பதாவது படிக்கிறவன் - அவன் அம்மாவோடும், அக்காமார்களோடும் விரைந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். வேகமாக எங்களிடம் வந்து ‘பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்’ என்றான். சரியாக விஷயம் புரிபடாமல் ‘என்னப்பா? ‘ என்று கேட்டேன். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் உள்ள பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்; பார்க்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான். 

பிள்ளையாராவது, பால் குடிக்கிறதாவது என்று சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். ஆனாலும் தெருவில் சல சலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் நாங்கள் - நாங்கள்தான் கிறிஸ்துவர்கள் ஆயிற்றே - வேற சாமி பால் குடிச்சி அதிசயம் பண்ணுதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன? 

 கொஞ்ச நேரம் ஆச்சு; அடுத்த தெருவுக்குப் போன எதிர் வீட்டு பையன் ஓடிவந்து ‘நிஜமா அந்த வீட்டுல இருக்கிற பிள்ளையார் பால் குடிச்சார்’ அப்டின்னு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டான். அப்பவும் நான் கண்டுக்கவில்லை. ஆனால் அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் ஓடிவந்த பையன் பரவசத்தோடு, ‘எங்க வீட்டுப் பிள்ளையாரும் குடிக்கிறார்; அப்பா உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க’ அப்டின்னான். சரி, பிள்ளையாரத்தான் போய் பார்த்துட்டு வந்துருவோமேன்னு போனேன். 

அங்கே ஏற்கெனவே பிள்ளையார் பால் குடிச்சிருந்தார். பையனோட அப்பா, நம்ம நண்பர் ராமச்சந்திரன் ஒரு தட்டில் இருந்த பிள்ளையார் முன்னால் அமரிக்கையாக உட்கார்ந்து பால் குடுக்க, நல்ல பிள்ளையாக பிள்ளையார் கொடுத்த பால் முழுவதையும் குடித்துக்கொண்டிருந்தார். ஒரு ஸ்பூனில் பாலைக் கொண்டு போய், அவரது தும்பிக்கை வயிற்றிற்கு மேல் வளைந்து இருக்கும் இடத்தில் வைத்ததும், பிள்ளையார் பாலை சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சார் பாருங்க…அப்படியே நான் அசந்துட்டேன். என்னடா இது கலிகாலமா போச்சேன்னு நின்னுக்கிட்டு இருந்த போது நண்பர் என்னிடம் ஸ்பூனை நீட்டினார். நானும் பாலை ஸ்பூனில் கொடுக்க பிள்ளையார் அதே மாதிரி சர்ருன்னு உறிஞ்சிட்டார். வெலவெலத்துப் போய்ட்டேன். 

புத்தி கேட்கலை.  சோதனை தொடர்ந்தது. வேற வேற இடத்தில வச்சுப் பார்த்தேன். சில இடத்தில பால் உறிஞ்சப்பட்டது; சில இடத்தில் இல்லை. கொஞ்ச நஞ்சம் இருந்த மூளை கொஞ்சம் வேலை செய்ய, நான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைச் சுவற்றில் இணைப்பதற்காக உள்ள கீலில் இருந்த சின்ன இடைவெளியில் ஸ்பூனை வைத்தேன்.இப்போவும் பால் சர்ரென்று உறிஞ்சப்பட்டது. நண்பர் ஐயப்பர் பக்தர். அந்த சிலை ஒன்று சிறியது இருந்தது. ஐயப்பனையும் பால் குடிக்க வைத்தேன். நண்பர் குடும்பத்தினருக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. பிள்ளையார் மட்டுமல்லாமல், ஐயப்பன் குடிச்சாகூட பரவாயில்லை; கதவின் கீல் கூட குடிக்குதேன்னு ஆச்சரியம். ‘எப்படி அங்கிள்’ என்ற பையனிடம் ‘தெரியலைப்பா; ஏதோ இயற்பியல் விஷயம் இருக்கு; ஒருவேளை capillary action ஆக இருக்கும்’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். (பின்னால் அது surface tension என்று சொன்னார்கள்.) 

 எங்கள் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் என்னாயிற்று என்று கேட்டார்கள். ‘கொஞ்சம் பாலும் ஒரு ஸ்பூனும் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த மேரி மாதா சிலை ஒன்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மாதாவின் கால் பக்கம் உள்ள வரை ஒன்றிலும், கூப்பிய கைகளுக்கு அருகிலும் ஸ்பூனை வைத்ததும் மாதாவும் பால் குடித்தார்கள்! பிள்ளைகளிடமும் கதவுக் கீல் பால் குடிப்பதையும் காண்பித்தேன். 

 அடுத்த நாள் கல்லூரியிலும் பரபரப்பு. கிறித்துவ நண்பர் அகஸ்டின் நம்பிக்கையில்லாமல் ‘அதெப்படி பிள்ளையார் பால் குடிப்பார்; சுத்த ‘இதுவா’ இருக்கேன்னார். நான் ‘என் கண்ணால் பார்த்தேன்’ என்றேன். அதெப்படி என்றார். நடந்ததைச் சொன்னேன். இயற்பியல் துறை ஆட்களிடமும் கேட்டேன். அவர்களும் என் தியரி சரியாக இருக்கலாமென்று சொன்னார்கள். இது நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும். 

பிள்ளையார் கதை எல்லாம் ஆறின கேஸாக ஆகிப் போயிருந்தது. அப்போது ஒரு நாள் நண்பர் அகஸ்டின் ஒரு ஃபோட்டோ காப்பி ஒன்றுடன் என்னிடம் விரைந்து வந்தார். எத்தியோப்பாவில் அமெரிக்க சிப்பாய் ஒருவன் sand storm ஒன்றைப் படம் எடுத்து அதைப் பிரிண்ட் செய்து பார்த்த போது அந்த சூறாவளியில் ஏசுவின் முகம் தெரிந்ததாக ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் வந்திருந்த படத்தின் நகல் அது. பயங்கர பிரமிப்புடன் அதை என்னிடம் கொண்டு வந்து அதைக் காண்பித்தார் - ஒரு மத நம்பிக்கையற்றவனை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் நோக்கமாக அது எனக்குத் தோன்றியது! ‘ஏனய்யா, ஒரு வருஷத்துக்கு முன்பு வேற மதத்து சாமி பால் குடிக்கிதுன்னு சொன்னப்போ, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதெப்படி நடக்கும் என்று அன்று கேள்வி கேட்க முடிந்தவருக்கு, இன்று நீங்கள் நம்பும் மதம் என்றால் மட்டும் எப்படி அப்படியே நம்ப முடிகிறது?’ என்றேன். அதோடு, இதே மாதிரியாக கொடைக்கானல் மலை,மேகம் இவைகளின் ஊடே கண்ணாடி போட்ட மாணவன் ஒருவனின் முகம் தெரிவது போல விளையாட்டாக நான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த புகைப்படம் ஒன்றையும் காண்பித்தேன். உண்மையை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியாத அரைகுறை மனதோடு சென்றார். 

 இதைத்தான் நான் எனது மதங்கள் பற்றிய பதிவுகளில் நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity - யோடு பார்க்க முடிவதில்லை என்றும் முதல் பதிவின் முதல் பாயிண்டாகவே கூறியுள்ளேன். என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்; பிறந்ததிலிருந்து ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து மனதை விடுவிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியமல்லவே! Every coin has got two sides என்பது அவர்களுக்கு என்றுமே புரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள தயாராகவும் இருப்பதில்லை. 

நம்பிக்கையாளர்கள் முயல்களுக்கு மூன்றே கால்கள்…