Sunday, July 18, 2010

418. பரிணாமம் -- 2

*


தொடர்புள்ள பதிவுகள்:

391. பரிணாமம் -- 1


*

பரிணாமம்  --  2:  

பரிணாமம் உண்டென்பதற்குரிய சான்றுகள்

சான்று : 1  -- படிமங்கள்

பரிணாமக் கோட்பாடுகளுக்குத் தனிப்பட்ட பிரச்சனை ஒன்று உண்டு. எந்த ஒரு அறிவியல் கோட்பாடும் இத்தனை பரிசீலனைகளுக்கு உள்ளானதா என்றொரு ஐயம் உண்டு. 
ஏனெனில் ஒரு அறிவியல் உண்மையை வெளியாகும்போது அது எப்போதும் பெரும் ஆர்வத்துடன் மானிடரால் வரவேற்கப்படுவதுண்டு. ஆனால் பரிணாமக் கோட்பாடுகள் கடவுளின் படைப்பு என்ற பெரும்பாலாரின் மத நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்துவதால் மனிதர்கள் எப்போதும் பரிணாமத்தை ஒரு கேள்விக்குரிய கோட்பாடாகவே கருதுவது வரலாற்று உண்மை.
கேள்வி: 1.*** படிமங்கள் எப்படி இத்துணை வரிசைக்கிரமத்துடன் காணக் கிடைக்கின்றன?
கேள்வி: 2. *** எல்லோருக்கும் தெரிந்த டைனோசார்கள் எப்படி இப்போது இல்லாமல் போயின?
கேள்வி: 3. *** பிரபஞ்சத்தின் வயது கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் எப்படி ஆதாம்- ஏவாள் கதை மனித நம்பிக்கைகளின் அச்சாணியாக இருக்கிறது? (WMAP என்று அழைக்கப்படும் நாசா (NASA) வைச் சார்ந்த Wikinson Microwave Anisotropy Probe என்ற அமைப்பு இந்த பிரபஞ்சத்தின் வயது 13.6 பில்லியன் ஆண்டுகள் எனக் கண்டறிந்துள்ளது.)
கேள்வி: 4. *** மனித தோற்றமும், வரலாறும் மிகப்பல காலத்திற்கு முந்தியது என்ற வரலாற்று உண்மைகளை எப்படி மறுக்கிறார்கள்? 

கேள்வி: 5. *** Exinct - Extant (இருந்து மறைந்த உயிரினங்கள் - இப்போது இருந்துவரும் உயிரினங்கள்) இவைகளுக்கான தொடர்புகள் நிரூபிக்கபட்ட போதும் எப்படி பரிணாமத்தை மறுப்பது?

கேள்வி: 6. ***  gene mapping, genome study போன்ற மரபணுச் சோதனைகள் வெளிவந்த பின்பும் எப்படி பரிணாமம் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத அறிவியலாக நம்பிக்கையாளர்களால் நினைக்கப்படுகிறது?


இது போன்ற இன்னும் பலப்பல கேள்விகளை முன் வைக்க முடியும். இருப்பினும் பரிணாமம் பற்றிய விளக்கத்திற்கு முன் இந்த 21-ம் நூற்றாண்டிலும் பரிணாமம் உண்மை; அது ஒன்றும் சில அறிவியலாளர்களின் "சூழ்ச்சி" இல்லையென்பதை நிரூபிக்க பரிணாமம் உண்மையென்பதை நிரூபணங்களோடுதான் ஆரம்பிக்க வேண்டிய நகைமுரண் வேடிக்கைதான்.
நாமும் அதையே தொடருவோம் ....


இருந்து, மறைந்து, அழிந்து போன சில உயிரிகளின் பலவகை வார்ப்புகளே இந்தப் படிமங்கள் (fossils). இந்தப் படிமங்களின் காலத்தை carbon dating என்ற  முறையில் கணக்கிடுகிறார்கள். பரிணாமம் க்டந்து வந்த  காலங்களை வகைப்படுத்தியுள்ளார்கள்.
நீண்ட இந்தக் காலத்தை Cenozoic, Mesozoic, Paleozoic  என்ற 3 Era -க்களாகப் பிரித்துள்ளார்கள்.
Cenozoic Era  ......................  -----  75 million   ஆண்டுகளுக்கு முந்திய காலம்


Mesozoic Era  ......................135 - 205 million  ஆண்டுகளுக்கு முந்திய காலம்  


Paleozoic Era  ......................230 - 505 million ஆண்டுகளுக்கு முந்திய காலம்

இந்த 3 Era -க்களை மேலும் பல Periods களாகப் பிரித்துள்ளனர்.  எல்லா பெயர்களையும் சொல்லாது, சில Periods பெயர்களை மட்டும் சொல்கிறேன்.

Cenozoic Era என்பது (குட்டிபோட்டு பால்கொடுக்கும்) mammal என்பவைகளின் Era. இப்பகுதியை இரண்டு Periodsகளாகவும் (Quaternary,  Tertiary), 

Mesozoic Era என்பது (ஊர்வனவைகளின்) Reptilesகளின் காலம்: இது Cretaceous, Jurassic, Triassic என 3 Periods களாகவும்,


Paleozoic Era என்பது பழைய உயிரினங்களின் பகுதியாகும். இது மேலும் பல Periodsகளையுடையது.

இந்த காலப்பிரிவுகளை ஒன்றின் மேல் ஒன்றாய் வரைந்தால்   Paleozoic Era- வில் மிகப்பழைய உயிரினங்களின் படிமங்கள் இருக்கும். அதன் மேல் பகுதியில் பின் வந்த உயிரினங்களின் படிமங்களும், இறுதியான மேல் பகுதியில் பரிணாமத்தின் கடைசியில் வந்த உயிரினங்களின் படிமங்களும் இருக்க வேண்டும்.


பெயர்களை எல்லாம் மறந்துவிடுவோம். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே முக்கிய விஷயம்: பரிணாமக் கொள்கை சரியென்றால்,  முதலில் தோன்றிய உயிரினங்கள் கீழ்த்தட்டான Paleozoic Era, அதன் பின் வந்தவை Mesozoic, Cenozoic  என்ற  உயிரினங்களின் படிமங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும். 


நமக்குத் தெரிந்த சில உதாரணங்களை வைத்துப் பார்த்தோமானால், கீழ்த்தட்டில் புழுக்கள், பூச்சிகள், பழைய மீன் வகைகள் என்றிருக்க மேலே வர வர அவை ஊர்வன, பறவைகள், பாலுட்டிகள் என்ற உயிரினங்களின் படிமங்கள் என்று இருக்கவேண்டும். எந்த விதத்திலும் பரிணாமத்தில் வளர்ச்சியடைந்த ஓர் உயிரினம் (ஒரு டைனசாரின் படிமம்) முதல் அடித்தட்டான Paleozoic Era-வில் இருக்க முடியாது; அதே போல் ஒரு பறவையின், பாலூட்டியின் படிமம் இரண்டாம் தட்டான Mesozoic Era-வில் இருக்க முடியாது. எந்தக் குழப்படியும் இல்லாமல் அந்தந்த காலப் படியில் மிகச்சரியான படிமங்களே இதுவரை காணக்கிடைக்கப்பட்டுள்ளது. சிறிய தவறு இருந்தாலும் பரிணாமத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். ஆனால் ஒரு சிறு தவறுகூட இல்லை.

கிடைக்கப்பட்ட படிமங்களை வைத்தே 'பரிணாம மரம் "Evolutionary Tree" மிகச் சரியாக நிறுவப்பட்டுள்ளது. சில படிமங்கள் மிகச்சரியாக அந்தந்த காலக்கட்டத்தில் கிடைக்கப்பட்டு, அதன் மூலம் அந்த உயிரினத்தின் பரிணாமம் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சான்றாக, நமது இன்றைய குதி்ரையின் (Equus) பரிணாமம் முழுமையாகக் கிடைக்கப்பட்டுள்ளன. இந்த பரிணாம வளர்ச்சி Eohippus என்ற Cenozoic Era-வின் அடிமட்டத்தில் ஆரம்பித்து, Cenozoic-ன் இன்றைய கடைசிப்படியில் முடிவடைகிறது. இன்றைய குதிரையின் பரிணாமத்தில் அதன் உருவம் பெரிதாகிக்கொண்டே வர, அதனோடு அதன் கால் குளம்புகளும், தாடை எலும்புகளும், பற்களும் தொடர்ந்து ஒரே முறையில் மாறி வந்துள்ளன. கிடைத்த படிமங்கள் எல்லாவற்றிலும் மாறி வந்துள்ள இந்த முறைகள் மிகச் சரியாக, முறையாக, ஒன்றிலிருந்து மற்றொன்று மாறி வந்துள்ளன. ஒரு எடுத்துக் காட்டு: 3 பின்னங்கால் குளம்புகள் இரண்டாக மாறி, பிறகு,  இன்றுள்ள ஒற்றைக் குளம்பாக மாறியுள்ளது.




இப்படத்தில் கீழிருந்து மேலாக எப்படி எடுத்துக் கொண்ட உடலுறுப்புகள் - (மண்டையோடு, தாடை,முன்னங்கால், பின்னங்கால் எலும்புகள், பற்கள் - பல கால நிலைகளில் தொடர்ந்து மாறி வந்துள்ளன என்பது தெரியும். அதோடு பரிணாம வளர்ச்சியில் பங்கு கொண்ட அந்த படம உயிரினங்கள் இப்போது இல்லவும் இல்லை.  (கேள்வி: 7)இக் கருத்தை, இந்த சான்றை நம்பிக்கையாளர்களால் எந்த முறையில் விளக்க முடியும். கடவுள் ஒவ்வொரு period-லும் ஒவ்வொரு உயிரனமாக அவைகளைப் படைத்து குதிரையை உண்டாக்கினாரா?

இன்னொரு நல்ல பரிணாமச் சான்று ஊர்வனவிலிருந்து பறவையினம் -from reptiles to avian - தோன்றிய வரலாறு. ஊர்வனங்களுக்கென்று ஒரு உடலமைப்பு; பறவைகளுக்கென்று மற்றொரு உடலமைப்பு. ஆனால் கிடைத்த சில படிமங்கள் இந்த இரு வேறு விலங்கமைப்புகளின் கலவையாக - a CONNECTING LINK- கிடைக்கப் பெற்றுள்ளன.

பரிணாம மறுப்பாளர்கள் மேலே சொன்ன 7 கேள்விகளுக்கும் நியாயமான பதில் கொடுத்தால் நலமே ....



Remains of “dino-bird” found 
 (மே12, 2010 - The Hindu)


“Because the SSRL beam is so bright, we were able to see the teeniest chemical traces that nobody thought were there.”
And CMW Institute researcher Bob Morton said: “The discovery that certain fossils retain the detailed chemistry of the original organisms offers scientists a new avenue for learning about long-extinct creatures.”








63 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

டெக்னிக்கலா பல விஷயங்களைச் சொல்லி இருக்கீங்க ஐயா.. இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த முடியுதான்னு பாருங்களேன்..

தருமி said...

கா.பா.
டெக்னிக்கல் வார்த்தைகளை விட்டுட்டு படிச்சாலே படிப்பது புரியும்படி எழுதியிருப்பதாக எனக்கு நினைப்பு.

NO said...

கேள்வி: 6. *** gene mapping, genome study போன்ற மரபணுச் சோதனைகள் வெளிவந்த பின்பும் எப்படி பரிணாமம் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத அறிவியலாக நம்பிக்கையாளர்களால் நினைக்கப்படுகிறது?

அறிவியல் என்பது முதலில் என்ன?? எங்கள் நூலில் ^*&*^(*&$% இந்த அதிகாரத்தில் நிச்சயமாக சொல்லபட்டிருக்கிறது இது! இந்த gene, genome, என்பதெல்லாம் மனிதன் சொல்லும் வார்த்தைகள்தானே?? அதில் என்ன இருக்கிறது! பரிணாமம் என்பதே பொய் என்று பல அறிஞர்கள் சொல்லும்பொழுது, உலக மக்களே ஏற்கும் பொழுது, நாங்கள் பல நூறு ஆண்டுகள் முன்னரே சரி என்று அறிவியல் வழியாகவே நிரூபித்து விட்ட பிறகு, அதை பற்றி என் இன்னும் பேசுகிறீர்கள்!! வாருங்கள் வந்து நேர்மையாக விவாதியுங்கள்!! அதை விட்டு சும்மா அறிவியல் என்று பம்மாத்து காட்டாதீர்கள்!

--------

மேலே சொன்ன பதில்கள் ஒரு சாம்பிள் மட்டுமே!!!

The enemies of Reason என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்!! இவர்கள் இல்லாத மதம் இல்லை! சில இடங்களில் மிக அதிகம், உங்களுக்கும் தெரியும் அது எங்கே என்று!

மதவாதிகளுக்கு இது புரியாது அல்ல, புரிந்துகொள்ளகூடாது என்று அவர்களின் உள்ளே புகுத்தப்பட்ட irrationalism தடுக்கிறது!!

சிலர் enemies of reason ஆக இல்லாமல் இருந்தாலும், பரிணாமத்தின் core concept ஐ இன்னும் தொடவில்லை என்றால், உள்வாங்கவில்லை என்றால் அது ஒரு விந்தையாகவே புலப்படும்!! அதில் பலர் இருக்கிறார்கள்!! அவர்களுக்கு கண்டிப்பாக உங்கள் எழுத்துகள் உபயோகப்படும்! தெளிவிபடுத்தும்!

பரிணாமம் என்ற நிலைநிறுத்தப்பட்ட அறவியல் உண்மையை மக்களுக்கு மேலும் தெளிவுபடுத்த விழையும் யாவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டும் support உம் என்றும் உண்டு!! வாழ்த்துகள் திரு தருமி அவர்களே!!

நன்றி

NO said...

உங்களின் கேள்விகளுக்கு மதவாதிகளின் பதில்கள்!!!!

கேள்வி: 1.*** படிமங்கள் எப்படி இத்துணை வரிசைக்கிரமத்துடன் காணக் கிடைக்கின்றன?

பதில் - படிமங்கள் என்பதே ஒரு கட்டுக்கதை. அது நோண்டுபவரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவை மட்டுமே!! அதே சமயம் படிமங்களில் காணப்படும் சில மிருகங்கள் சாத்தானால் படைக்கப்பட்ட பின்னர், ஆண்டவன் கட்டளையின் படி, நோவாவினால் கப்பலில் ஏற்றாமல் விடப்பட்ட ஜந்துக்களே!! அவைகள் இறந்து மண்ணடியில் போனது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மட்டுமே!!!

கேள்வி: 2. *** எல்லோருக்கும் தெரிந்த டைனோசார்கள் எப்படி இப்போது இல்லாமல் போயின?

பதில் - டைனாசர் என்பதே டிராகன் எனப்படும் தீய மிருகங்களின் திரிபுதான்!! டிராகன்கள் எல்லாம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, ஆண்டவனின் கட்டளைகள் படி, சில புனிதர்களால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன!! சிலர் அதை மண்ணினுள் புதைத்ததன் காரணமாக அதன் பிம்பம் நமக்கு தெரிகிறது!

கேள்வி: 3. *** பிரபஞ்சத்தின் வயது கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் எப்படி ஆதாம்- ஏவாள் கதை மனித நம்பிக்கைகளின் அச்சாணியாக இருக்கிறது?

பதில் - யார் இதை கண்ணித்தார்கள்? ^(இ&(& (*&()&*&)*, (புனித புத்தகங்கள்) மற்றும் %%%^$&*(*, &^*(&(*&, (புனிதர்கள்) இதை இந்த அடிகளில் தெளிவாக சொல்லி இருக்கிறார்களே! அதாவது ஆதாமும் எவாளும்தான் முதல் என்று, அவர்கள் மட்டும்தான் ஆண்டவனின் முதல் படைப்பு என்று! மேலும் ஆல இலையில் பிறந்தவர்தான் %*&^*^*^, எனப்படும் முதல் தெய்வம் என்று இன்னுமொரு கோஷ்டியும் சொல்லுகிறதே!! அப்படி இருக்கும் பொழுது பிரபஞ்சமாவது, வயதாவது??

கேள்வி: 4. *** மனித தோற்றமும், வரலாறும் மிகப்பல காலத்திற்கு முந்தியது என்ற வரலாற்று உண்மைகளை எப்படி மறுக்கிறார்கள்?

பதில் - ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏது வரலாறு? எல்லாமே அப்பொழுதுதானே படைகபட்டது??

கேள்வி: 5. *** Exinct - Extant (இருந்து மறைந்த உயிரினங்கள் - இப்போது இருந்துவரும் உயிரினங்கள்) இவைகளுக்கான தொடர்புகள் நிரூபிக்கபட்ட போதும் எப்படி பரிணாமத்தை மறுப்பது?

பதில் - நோவா கப்பலில் ஏற்றி போட்ட உயிரினங்களே இப்பொழுதும் இருக்கின்றன!! அதற்கு மேல் உங்களுக்கு என்ன சாட்சி வேண்டும்? மறைந்த உயிரினங்கள் என்பது ஒன்று இல்லை, டிராகன்களை தவிர!! எல்லாம் ஆண்டவனால் மனிதனின் தேவைக்காக படைக்க பட்டதே! நோவாவுக்கு எல்லாம் தெரியாமலா இதை செய்தார், ஆண்டவன் கட்டளை செய்யாமலா இதை செய்தார்!! இதில் தொடர்புகள் இல்லை என்ற பேச்சு வேறு! போய் ^*(^*((**&*(, இந்த நூலில் உள்ள அதிகாரம் ஏழு மற்றும் பன்னிரெண்டில் உள்ளவைகளை படித்து பின்னர் பேசுங்கள்!! இல்லை என்றால் திரு ^&*^(*(* அவர்களிடம் வந்து நேர்மையாக விவாதம் செய்யுங்கள்!!

அதோ பாருங்கள், நாங்கள் ஏற்க்கவில்லை என்றாலும் அந்த கோஷ்டியும் அதே போலதான் சொல்லுகிறது, அதாவது ^*@^*&#*&* புராணம் என்ற அவர்களின் நூலில் &()*&()* போன்ற மிருகங்கள் மட்டுமே இருந்தன, அவை இன்னுமும் இருக்கின்றன என்று! அவர்கள் சொல்லுவது தவறானாலும், நாங்கள் சொல்லுவதுதான் இறுதி உண்மை!! இது புரியாமல் அறிவியல் பெயரை வைத்து நாடகமாடுகின்றீர்கள்!!

தருமி said...

NO has left a new comment on your post "418. பரிணாமம் -- 2":

கேள்வி: 6. *** gene mapping, genome study போன்ற மரபணுச் சோதனைகள் வெளிவந்த பின்பும் எப்படி பரிணாமம் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத அறிவியலாக நம்பிக்கையாளர்களால் நினைக்கப்படுகிறது?

அறிவியல் என்பது முதலில் என்ன?? எங்கள் நூலில் ^*&*^(*&$% இந்த அதிகாரத்தில் நிச்சயமாக சொல்லபட்டிருக்கிறது இது! இந்த gene, genome, என்பதெல்லாம் மனிதன் சொல்லும் வார்த்தைகள்தானே?? அதில் என்ன இருக்கிறது! பரிணாமம் என்பதே பொய் என்று பல அறிஞர்கள் சொல்லும்பொழுது, உலக மக்களே ஏற்கும் பொழுது, நாங்கள் பல நூறு ஆண்டுகள் முன்னரே சரி என்று அறிவியல் வழியாகவே நிரூபித்து விட்ட பிறகு, அதை பற்றி என் இன்னும் பேசுகிறீர்கள்!! வாருங்கள் வந்து நேர்மையாக விவாதியுங்கள்!! அதை விட்டு சும்மா அறிவியல் என்று பம்மாத்து காட்டாதீர்கள்!

--------

மேலே சொன்ன பதில்கள் ஒரு சாம்பிள் மட்டுமே!!!

The enemies of Reason என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்!! இவர்கள் இல்லாத மதம் இல்லை! சில இடங்களில் மிக அதிகம், உங்களுக்கும் தெரியும் அது எங்கே என்று!

மதவாதிகளுக்கு இது புரியாது அல்ல, புரிந்துகொள்ளகூடாது என்று அவர்களின் உள்ளே புகுத்தப்பட்ட irrationalism தடுக்கிறது!!

சிலர் enemies of reason ஆக இல்லாமல் இருந்தாலும், பரிணாமத்தின் core concept ஐ இன்னும் தொடவில்லை என்றால், உள்வாங்கவில்லை என்றால் அது ஒரு விந்தையாகவே புலப்படும்!! அதில் பலர் இருக்கிறார்கள்!! அவர்களுக்கு கண்டிப்பாக உங்கள் எழுத்துகள் உபயோகப்படும்! தெளிவிபடுத்தும்!

பரிணாமம் என்ற நிலைநிறுத்தப்பட்ட அறவியல் உண்மையை மக்களுக்கு மேலும் தெளிவுபடுத்த விழையும் யாவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டும் support உம் என்றும் உண்டு!! வாழ்த்துகள் திரு தருமி அவர்களே!!

நன்றி

Unknown said...

மரியாதைக்குறிய தருமி ஐயா அவர்களுக்கு,

இங்கே ஒருவர் பரினாமவியலை வெட்டி கூறு போட்டுக்கொண்டு இருக்கிறார்...

http://ethirkkural.blogspot.com/2010/05/evolution-stheory-harry-potter-stories.html

http://ethirkkural.blogspot.com/2010/05/evolution-stheory-harry-potter-stories_29.html

http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html

http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

தயவு செய்து அதிக விபரங்கள் பெற்ற தாங்கள், இந்த ஆளை 'என்ன, எப்படி, ஏன்' என்று கேளுங்கள்...

NO said...

Dear Sir,

Please see this pseudo non-science blog!

http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

Its more funnier than what i had written, except that I joked and this joker seems to be pretty serious. Have also given my rebuttal to the non(science)sense written there.


I should tell you that I saw this crap posting only after I did those comments in your blog. Its to say that idiots are never far away!!

Nandri

ராஜ நடராஜன் said...

மதக்கோட்பாடு நூல்கள் மாதிரி பரிணாமக் கொள்கைகளும் மக்களின் பொதுக்கருத்துக்கு செல்லும் காலத்தில் மதங்கள் பின் தள்ளப்படும்.சந்திரன்,செவ்வாயின் குடியேறல் இன்னும் இதனை துரிதப்படுத்தும்.

உமர் | Umar said...

NO,
ஆறு பந்துகளிலுமே சிக்சர் அடித்துவிட்டீர்கள்.!

தருமி said...

கும்மி,
இன்னொரு பந்து no ball ஆகிப் போச்சா?

:)

தருமி said...

No,

அங்கதப் பதிலுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

வதூவசீ,
அவர் வெட்டிக் கூறு போடவில்லை; ஆனால் வெறும் கூறுகளை மட்டும் வைத்து விமர்சிக்கிறார். ஆனால் அவரது ஆழ்ந்த மத பக்திக்கு என் மரியாதை. பக்தி ஒரு-புறப்-பார்வை மட்டுமே கொடுக்கும் என்பதுதான் வேதனை - குதிரைக்கு இடும் கண்மறைப்பு போன்றது.

இது என்னைப் போல் முதலில் நம்பிக்கையாளனாக இருந்து விட்டு பின் மறுப்பாளனாக மாறியவனுக்கு இயல்பாக நன்கு புரியும்.

அதென்ன வதூவசீ .. பொருள்?

தருமி said...

ராஜ நடராஜன்,

//மதங்கள் பின் தள்ளப்படும்//

நம்பிக்கையில்லை. அது ஒரு psychotherapy தானே. வெறியாக மாறுவது மட்டுமே தவறு. வேறு பக்கமே பார்க்கக் கூடாது என்பதுதானே வேதனை.

NO said...

நன்றி சார்,

பரிணாமத்தை பற்றியும் இதர அறிவியல் உண்மைகளை பற்றியும் மேலும் மேலும் இதே போல் ஆழமாக நீங்கள் எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.
மதத்தின் பிடியினால் கண்மூடி இருக்கும் பல நண்பர்களை கண்திறக்க வைக்க நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம், knowledge and clarity of exposition. அதை நீங்கள் மேலும் செய்யவேண்டும்.

மதப்பிடியில் இருக்கும் பலருடன் தர்க்கம் செய்ய, அதாவது அறிவியலைப்பற்றி விவாதிக்க மிக்க பொறுமை வேண்டும். Religions are populated by this mindless people who go to any extent to fabricate evidence against established facts that go against what has been written in their holy books. இன்னும் ஒரு படி மேலே போய், தங்களின் நூல்களில் எல்லாம் இருக்கிறது, சொல்லப்பட்டுவிட்டது, அதுதான் இது என்று கூவி, எங்கள் மதமே அறிவியலினால் ஆன மதம் என்றும் கவலை படாமல், சற்றும் சலனமிலாமல் சொல்லுவார்கள்!

அதாவது, அவர்களின் நூல்களில் அறிவியலால் நிலைநிறுத்தப்பட்ட, ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மைகளை மட்டுமே இதோ பார், இந்த அத்தியாயத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது, நாங்கள் முன்னமே சொல்லிவிட்டோம் என்று உரத்த கூறமுடியும். இதை வேறு விதமாக கேட்டால், அதாவது, இன்னும் நிலை நிறுத்த முடியாத, தெரியாத அறிவியல் சாரங்களையோ அல்லது உண்மைகளையோ உங்கள் புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து சொல்லுங்கள் என்றால், பதில் கப் சிப்தான்! நடந்தவைக்கு, தெளிவுபெற்றவைக்கு எங்கள் புத்தகங்களில் இருந்து இதோ பார் சொல்லிவிட்டோம் என்பார்கள், அதே சமயம், உங்கள் நூலிலிருந்து வேறு என்ன புதிய அறிவியல் நிலைநிருத்தல்களை எடுத்து கொடுக்க முடியும், அதையும் experiment இன் மூலமாக சரிபார்த்து, ஒரு புதிய சப்ஜெக்டாக நிலைநிறுத்தலாம் என்றால் நிசப்தமே பதில்!

மதப்புத்தகங்களுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் சம்மந்தமே கிடையாது. ஒருவர் தீவிர மத பற்றாளனாக இருந்தாலும், ஆனால் அதே சமயம் அறிவியலின் கூர்மை புரிந்து மற்றும் மத கோட்ப்பாடுகளுடன் அதன் முரண்களை புரிந்து ஆனால் அதே சமயம் தன மதத்தை விட்டு கொடுக்க மனம் இல்லாதவர்கள்,சாமர்த்தியமாக இந்த disconnect ஐ புரிந்து கொண்டு, அது வேறு, இது வேறு என்று கூறி நகர்ந்து விடுவார்கள். இந்த நிலை எவ்வளவோ பராவைல்லை. Atleast, அவர்கள் உளறுவதை நிறுத்தி, வேலையை பார்த்துக்கொண்டு போவார்கள். அனால், மத வெறியர்கள் அந்த நிலையை எடுப்பதில்லை. ஒரு கட்டத்திற்கு மேலே போய், இதெல்லாம் எங்கள் புத்தகங்களில் இருக்கிறது என்று கூறி, மேலும், புத்தகத்திற்கு முரணாக இருக்கும் அறிவியலை சாட ஆரம்பிப்பார்கள். அப்படி செய்யும் நிலையில் இருப்பவர்களிடம் வாதங்கள் எடுபடாது. மூளைச்சலவையின் எடுத்துகாட்டாக இருப்பார்கள் இவர்கள்.

The irony is also that they find enormous happiness in being so. Thats the quirk of evolution of mind, where you get it both the ways. :-))

கோவி.கண்ணன் said...

15 பில்லியன் ஆண்டுகளுக்குள் பரிணாமத்தின் அத்தனை கணக்கையும் முடிக்கனும், இல்லை என்றால் பெருவெடிப்பும் அம்பேல் ஆகிடும் :)
*****

எனக்கு ஒண்ணு புரியவில்லை, சூழல்களால் ஒருசெல் உயிரி இவ்வளவு உயிரினங்களாக பரிணாமம் அடைந்திருக்கும் என்று வைத்துக் கொண்டாலும் இன்றைக்கு இருக்கும் ஒரே விதமான சூழலில் ஒற்றைத்தன்மை உடைய உயிரினங்கள் மட்டும் தானே இருக்க முடியும் ?

உமர் | Umar said...

//இன்னொரு பந்து no ball ஆகிப் போச்சா?//

தொடர்ச்சியா ஆறு சிக்சர் அடிச்ச சந்தோஷத்துல, இன்னொரு பந்தை நோ கவனிக்காமப் போயிட்டாரு போல. :-)

Baranee said...

Felt like sitting in your "Evolution" classes...gr8 going..

For other readers,

One shd be in SamG's "Evolution" classes to enjoy this post rather than just reading it. They way he take the class is Unique. Whole strength would be divided into 2(Atheist, Theist) and full of debates. All these question would be fired to theist group. It would be full of fun as well gr8 learning experience.

Sir,

Teach me how to type in Tamil.

A proud student of SamG,
Baranee

NO said...

dear sir,

The final comments i did in the blog of the creationists.

---------

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் கூறுகிறார்: (ஸ்டீபென் கௌல்ட் பற்றி அவர் எழுதியதில் ஒரு பகுதிக்கு ஏதோ என்னால் முடிந்த தமிழாக்கம்)

""எண்பதுகளில் ஒரு சமயம் நான் அமேரிக்கா சென்ற பொழுது ஒரு தொலைக்காட்சி சானெல் ஒன்று என்னை அழைத்து, Duan P Gish என்ற ஒரு creationist, (அதாவது பரிணாம மறுப்பாளர்கள் மற்றும் எதுவும் மாற்றமிலாமல் படைக்கப்பட்டதே என்று நம்பும் மதவாத பிரச்சாரகர்) உடன் விவாதிக்க வேண்டும், வருவீர்களா என்று கேட்டனர்.

அமெரிக்காவில் இருந்ததால், நான் உடனே ஸ்டீபனை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன செய்யலாம் என்று அறிவுரை கேட்டேன். அதற்க்கு ஸ்டீபென் நட்புடனும் அழுத்தமாகவும் சொன்னது, "Dont do it" (விவாதம் செய்யாதே) என்பதுதான்.

மேலும் அவர் சொன்னது, இதில் முக்கியம் என்னவென்றால் நீ (அதாவது டாகின்ஸ்) இந்த விவாதத்தில் வெற்றி பெறுவதோ தோல்வி அடைவதோ ஒரு பாய்ண்டே இல்லை. மதவாதிகளுக்கு அது முக்கியம் இல்லை. இப்படி ஒரு விவாதம் நடைபெறுவதே அவர்களுக்கு முக்கியம். அதை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது விளம்பரம். ஒரு விஞ்ஞானிக்கோ, அறிவியல் வல்லுனருக்கோ அது முக்கிய குறிக்கோள் அல்ல. ஆனால்
விபரம் அறியா சராசரி மக்களை தங்களின் தொகுதியாக வைத்து வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கோ, இதோ பார் நாங்கள் விஞானகளிடமும் விவாதம் செய்கிறோம், என்று விளம்பரம் அடித்து தங்களின் நிலையை அதே பாமர சிந்தனை உடைய மக்களுக்கு உயர்த்தி சொல்லவே இவர்கள் விழைகிறார்கள். அதாவது, மக்களும் இதை பார்த்து, "இதோ பார், நம்ம மத பேச்சாளர்கள் சொல்லுவதில் பல விடயம் இருக்கிறது போல இருக்கு , ஏனென்றால் இவர்களுடன் விபரம் தெரிந்தவர்களும் அறிவியல் வல்லுனர்களும் கூட விவாதம் செய்கிறார்கள்" என்று சொல்ல இது ஒரு களமாக அமைந்து விடுகிறது.

அதே சமயம், நீ (அதாவது டாகின்ஸ்) இந்த விவாதத்தில் பங்கெடுக்கமாட்டேன் என்று விலகினால், உன்னை கோழை, அறிவியல் தெரியாதவன், உன் நிலையை விளக்க தெரியாதவன் என்று பட்டம் கட்டுவார்கள். ஆனால் நம்மிடம் இருந்து இவர்கள் எதிர்ப்பார்ப்பதை விட இந்த இகழ்ச்சி பேச்சுகளை நாம் வாங்கி கட்டிக்கொள்வது எவ்வளவோ மேல்! - ஏனென்றால் இந்த விவாதங்களின் மூலமாக இவர்கள் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது, இவர்களின் மூட வாதங்களுக்கு உண்மை அறிவியல் சமூகத்திடமிருந்து ஒரு மரியாதை மற்றும் அங்கீகாரம் மட்டுமே!! ஆதலால் அறிவியல் அங்கீகாரம் என்ற அந்த பிராணவாயுவை இவர்களுக்கு வழங்காதிருப்பது கோழை பட்டத்தை விட எவ்வளவோ மேல்! """
______________

மேலே டாக்கின்ஸ் சொன்னது, இங்கே நான் சொல்லுவது - ஆதலால், நண்பர்களே, இங்கே வந்து இவர்களுடன் விவாதம் என்று இறங்குவது (நான் விவாதம் செய்ய இங்கே வரவில்லை, ஸ்டீபென் பெயரை பார்த்ததால் கொஞ்சம் சிரித்து விட்டு ஒரே ஒரு மறுப்பு என்ற வகையில் மட்டுமே இட்டேன்) ஒரு வேண்டாத வேலையாகவே முடியும்.

அதுவும் ஹருண் யாஹயா என்ற ஏமாற்று கார, போலி அறிவியலாளர் என்று எல்லோருக்கும் தெரிந்த con-man எழுதியதை மறு பதிவிடும் ஒருவரின் எழுத்துகளை விமர்சிப்பதே, அந்த மூட எழுத்துகளுக்கு பலர் வழங்கும் அங்கீகாரமாகும்! இத்துடன் இதை நிறுத்துகிறேன். உண்மை மேல், அறிவியல் மேல் அக்கறை கொண்ட யாவரும் அதையே செய்யுமாறு வேண்டுகிறேன்.

நண்பர் திரு ஆஷிக்கு மற்றும் நண்பர் திரு ஷேக் தாவுத் போன்றவர்கள் அவர்களின் தொகுதிக்கு வேண்டிய "உண்மைகளை" பகிர்ந்து கொள்ளட்டும்,
நன்றாக இருக்கட்டும். இடம் கொடுத்தமைக்கும் நன்றி நண்பர்களே.

சலாம் and நன்றி my friends.


-------------


hence i feel its better we dont debate with such mindless entities.

nandri

வால்பையன் said...

விவாதங்களை அறியும் பொருட்டு!

தருமி said...

No,

நீங்கள் சொல்வதை நான் முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன். நம்பிக்கையாளர்களால் மாற்றுக் கருத்துக்களை - அவைகள் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் - ஒத்துக்கொள்ள முடியாது என்பதை விந்துவைப் பற்றிய விவாதத்தில் புரிந்து கொண்டேன்.

என்னதான் அறிவு பூர்வமாக, அறிவியல் நுட்பத்தோடு சொன்னாலும் அதை ஒப்புக் கொண்டால் மத துரோகக் குற்றமிளைத்தவர்களாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் இருக்குமல்லவா?

எனவே, முயலுக்கு மூன்று கால்தான் .......

ஆகவே அவர்களுக்குப் 'பதில்' சொல்வதற்குப் பதில் நாம் சொல்ல நினைப்பதை நமது இடுகைகளிலேயே எழுதிவிட வேண்டும்; அதற்கு மேல் வேண்டாம் என்கிறீர்களோ?

அறிவாளன் said...

தருமி சார்,
கட்டுரை அருமையாக வந்துள்ளது, அடுத்த 'விருது' புத்தகமாக வெளி வரும் தகுதிகளுடன்...!

கவனமாகவும், கண்ணியமாகவும் எழுதப் படுகிறது என்று கருதுகிறேன்.
கருத்துகளும் நல்லமுறையில் பின்னூட்டமாய் வருகின்றன.
குறிப்பாக 'நோ' அவர்கள் தங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவிதம் நல்ல நைய்யாண்டி.

எனது கட்டுரையை சுட்டி காட்டியமைக்கு நன்றி. நானும் சில கருத்துகளை திரட்டி வருகிறேன்.நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
நன்றி.
அறிவாளன்.

NO said...

நண்பர் திரு தருமி,

// ஆகவே அவர்களுக்குப் 'பதில்' சொல்வதற்குப் பதில் நாம் சொல்ல நினைப்பதை நமது இடுகைகளிலேயே எழுதிவிட வேண்டும்; அதற்கு மேல் வேண்டாம் என்கிறீர்களோ?//
அவ்வளவுதான். அதுவே சால சிறந்தது. உங்கள் தளத்திலும் அவர்கள் விவாதத்திற்கு வந்தார்களானால் முடிந்த வரையில் சொன்னதையே சொல்லுவோம், அதாவது அறிவியலின் உண்மையை, அவர்களும் கத்தி விட்டு போகட்டும்.

ஜப்பானிய manufacturing experts மற்றும் consultants பல இந்திய கம்பனிகளில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது நாலு முறையோ வந்து, அந்த தொழிற்ச்சாலையில் systems மற்றும் process களை audit செய்வார்கள். மேலும் உயர்வு பெற வகுபெடுப்பார்கள். அந்த தொழிற்ச்சாலையில் உள்ள பல மட்ட வல்லுனர்களுடன் பேசுவார்கள், advice கொடுப்பார்கள், சரியாக இல்லாததை மாற்ற முயர்ச்சிபார்கள். ஒரு trip இல் இவ்வளவு செய்து விட்டு அடுத்த முறை அவர்கள் வரும்பொழுது நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் (அதாவது மாற்றும் தெரிவதுபோல படம் காட்டினாலும்) , அவர்கள் செய்வது ஒன்றுதான். அதாவது, போனமுறை வந்த பொழுது என்ன சொன்னார்களோ அதையே மறுபடியும் சொல்லுவார்கள். இதைதான் சொல்லிவிட்டீர்களே என்று
யாராவது கேள்வி கேட்டால், அதற்கெல்லாம் கவலை படாமல் சொன்னதை மறுபடியும் சொல்லுவார்கள். ஏனென்றால், தொழிற்சாலையில் யாரும் சொன்னதை impliment செய்யவில்லை, ஆதலால் அவர்கள் மனம் உணர்ந்து அதை செய்யும் வரையில் அடுத்த கட்டத்தை பற்றி பேச மாட்டார்கள், முன்பே சொன்னதை மறுபடியும் அவர்கள் உணரும் வரையில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். (Of course, அந்த ஜப்பானியர் ஒன்றும் நடக்காது என்று தெரிந்தால் கம்பனி M.D இடம் சொல்லிவிடுவார், M.D யும் எல்லோரையும் கூப்பிட்டு ஆப்படிப்பார் என்பது வேற விடயம். ஆனால் நமகெல்லாம் பாருங்கள் M.D என்று யாரும் கிடையாது, அதாவது both in terms of visible and invicible supervisor from above (கண்ணுக்கு தெரிந்த அல்லது தெரியாத "மேலே" உள்ள all in all), hence we need to deal these folks with the only thing that we have which is knowledge and truth. We shall do it in that way, in our place, and of course without hurting any body.)
.
இதை ஏன் நான் சொல்லுகின்றேன் என்றால், நாம் எடுக்க வேண்டிய வழிமுறையும் ஏறக்குறைய இதே போலதான். அறிவியலின் உண்மைகளை சொல்லிக்கொண்டிருப்போம். அவர்களே மெதுவாக கேட்டு புரிந்து ஏற்றால் மகிழ்ச்சி, இல்லையேல் நாம் சொல்லி மட்டும் கொண்டிருப்போம், அவர்களுக்கு பதிலாக அல்ல, நம்மின் வழிமுறையாக.

NO said...

//என்னதான் அறிவு பூர்வமாக, அறிவியல் நுட்பத்தோடு சொன்னாலும் அதை ஒப்புக் கொண்டால் மத துரோகக் குற்றமிளைத்தவர்களாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் இருக்குமல்லவா?//

மிக மிக சரி ஐயா நீங்கள் சொல்லுவது. இந்த குற்ற உணர்வு எல்லா மதக்காரர் உள்ளிலும் விதைக்கபட்டிருக்கிறது. ஆனால் பாருங்கள் பல சமூகங்கள் இதை தாண்டி வந்து விட்டன. நான் முன்பே கூறியதுபோல, அதையும் இதையும் (அறிவியலும் மதமும்) வேறு வேறு என்று புரிந்து, அதை கலக்காமல், அதனால்
எனக்கும் ஒன்றும் சங்கடம் இல்லை என்று உணர்ந்து நடந்து கொள்ளும் நிலைக்கு பலர் வந்து விட்டார்கள். முக்கியமாக ஆபிரகாமிக் மதங்களில்
யூதர்களும் கிருத்துவர்களும் (சில கும்பல்களை தவிர்த்து, ஆனால் அவர்களும் பெருவாரியான கிருத்துவர்களால் எள்ளி நகயாடவே படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடையாது என்பதே உண்மை) இந்த நிலைமைக்கு வந்து வருடங்கள் பல ஆகிவிட்டன. அவை மட்டும் இல்லை, இந்து, ஷிண்டோ,பௌதம், ஜைனம், போன்ற அபிராகாமிய அல்லா மதங்கள் எல்லாமே இந்த பிரச்சனையிலே வரவே வராது. அவைகளுக்கு, ஒரே கடவுள், ஒரே புத்தகம் ஒரே தூதர், ஒரே வழிமுறை, ஒரே கட்டளை என்று இல்லாததால் இந்த ஆட்டத்திற்கு அவர்கள் வரவே இல்லை. ஆதலால் அறிவியல் மத முரண்கள்
என்று அவற்றிற்கு வரும்பொழுது, அறிவியலுக்குதான் முதல் இடம். ஆதலால் பிரச்சனை அங்கேயும் இல்லை.

So, இந்த பிரச்சனை தலைவிருத்து ஆடும் இடம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் ஹரூன் யாஹய போன்ற சுத்த ஏமாற்று காரர்களை முன்னிறுத்தி (அவர் ஒன்றும் அறியாத, அறிவியலே தெரியாத ஒரு con-man என்று எல்லோரும் திட்டவட்டமாக அறிவித்த பின்னரும்) "அறிவியல்" பேசும் இவர்கள், மதத்தின் பிடியில் படு இறுக்கமாக இருக்கிறார்கள் என்பதை தவிர என்ன சொல்லுவது. நான் சொல்லுவது இங்கே தமிழ் இணய தளத்தில் எழுதும் இவர்களை வைத்து இல்லை. இவர்களெல்லாம் வெறும் ஜுஜுபி. நான் சொல்லுவது, சிலகாலமாக நான் உன்னிப்பாக கவனிக்கும், உலகத்தில் பல இடங்களில் எழுதப்படும் விடயங்களை வைத்தே. நான் பலவற்றை படிக்கும் பொழுது, மத முரண் என்று வரும்பொழுது அறிவியல் பக்கம் போகாமல் மதம் பக்கம் சாயும் பலர் இருக்கும் மதம் ஒன்றுதான். அதவும் நன்றாக படித்தவர்கள் என்று அறியப்படும் பலரும் அதை செய்வதால், அவர்கள் தங்கள் மதத்தை விட்டுக்கொடுத்து விடுவோம் என்று மிக அஞ்சுகிறார்கள். அதை மீறி எப்பொழுது அவர்கள் வருகிறார்களோ அப்பொழுது அவர்களுடன் பேசலாம்.

நன்றி

NO said...

//என்னதான் அறிவு பூர்வமாக, அறிவியல் நுட்பத்தோடு சொன்னாலும் அதை ஒப்புக் கொண்டால் மத துரோகக் குற்றமிளைத்தவர்களாக ஆகிவிடுவோமோ என்ற அச்சம் இருக்குமல்லவா?//

மிக மிக சரி ஐயா நீங்கள் சொல்லுவது. இந்த குற்ற உணர்வு எல்லா மதக்காரர் உள்ளிலும் விதைக்கபட்டிருக்கிறது. ஆனால் பாருங்கள் பல சமூகங்கள் இதை தாண்டி வந்து விட்டன. நான் முன்பே கூறியதுபோல, அதையும் இதையும் (அறிவியலும் மதமும்) வேறு வேறு என்று புரிந்து, அதை கலக்காமல், அதனால்
எனக்கும் ஒன்றும் சங்கடம் இல்லை என்று உணர்ந்து நடந்து கொள்ளும் நிலைக்கு பலர் வந்து விட்டார்கள். முக்கியமாக ஆபிரகாமிக் மதங்களில்
யூதர்களும் கிருத்துவர்களும் (சில கும்பல்களை தவிர்த்து, ஆனால் அவர்களும் பெருவாரியான கிருத்துவர்களால் எள்ளி நகயாடவே படுகின்றனர் மற்றும் அவர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடையாது என்பதே உண்மை) இந்த நிலைமைக்கு வந்து வருடங்கள் பல ஆகிவிட்டன. அவை மட்டும் இல்லை, இந்து, ஷிண்டோ,பௌதம், ஜைனம், போன்ற அபிராகாமிய அல்லா மதங்கள் எல்லாமே இந்த பிரச்சனையிலே வரவே வராது. அவைகளுக்கு, ஒரே கடவுள், ஒரே புத்தகம் ஒரே தூதர், ஒரே வழிமுறை, ஒரே கட்டளை என்று இல்லாததால் இந்த ஆட்டத்திற்கு அவர்கள் வரவே இல்லை. ஆதலால் அறிவியல் மத முரண்கள்
என்று அவற்றிற்கு வரும்பொழுது, அறிவியலுக்குதான் முதல் இடம். ஆதலால் பிரச்சனை அங்கேயும் இல்லை.

So, இந்த பிரச்சனை தலைவிருத்து ஆடும் இடம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் ஹரூன் யாஹய போன்ற சுத்த ஏமாற்று காரர்களை முன்னிறுத்தி (அவர் ஒன்றும் அறியாத, அறிவியலே தெரியாத ஒரு con-man என்று எல்லோரும் திட்டவட்டமாக அறிவித்த பின்னரும்) "அறிவியல்" பேசும் இவர்கள், மதத்தின் பிடியில் படு இறுக்கமாக இருக்கிறார்கள் என்பதை தவிர என்ன சொல்லுவது. நான் சொல்லுவது இங்கே தமிழ் இணய தளத்தில் எழுதும் இவர்களை வைத்து இல்லை. இவர்களெல்லாம் வெறும் ஜுஜுபி. நான் சொல்லுவது, சிலகாலமாக நான் உன்னிப்பாக கவனிக்கும், உலகத்தில் பல இடங்களில் எழுதப்படும் விடயங்களை வைத்தே. நான் பலவற்றை படிக்கும் பொழுது, மத முரண் என்று வரும்பொழுது அறிவியல் பக்கம் போகாமல் மதம் பக்கம் சாயும் பலர் இருக்கும் மதம் ஒன்றுதான். அதவும் நன்றாக படித்தவர்கள் என்று அறியப்படும் பலரும் அதை செய்வதால், அவர்கள் தங்கள் மதத்தை விட்டுக்கொடுத்து விடுவோம் என்று மிக அஞ்சுகிறார்கள். அதை மீறி எப்பொழுது அவர்கள் வருகிறார்களோ அப்பொழுது அவர்களுடன் பேசலாம்.

நன்றி

Unknown said...

ஜபான்காரங்க எல்லாரும் புத்திசாலிகள் இல்லை தோழர்.நோ அவர்களே.
அதிலும் அந்த புத்திசாலிகள் எப்போதுமே புத்திசாலிகள் இல்லை.

எங்கள் கம்பெனியில் உள்ள யூரியா உர புராசாஸ் ஜப்பாநியருடையது. தினம் 1500 டன் உர உற்பத்தித்திறன் கொண்டது அந்த யூரியா பிளான்ட். நிறுவனத்தின் நம்மூர் ஊழியர்களின்-பொறியாளர்களின் suggestions & modifications மூலம் காலப்போக்கில் சிறிது சிறிதாக 1650 டன் என்று தின உற்பத்தி கூடியது. மாசுக்கட்டுப்பாட்டு குறைப்பு நடவடிக்கையிலும் பல பொறியியல் முன்னேற்ற சொந்த மாறுதல்களால் இது 80% உற்பத்தி இருந்தால் எவ்வளவு மாசு வருமோ அப்படி குறைந்தது. (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பாராட்டுக்கள் தனி) எந்த எகியுப்மேன்டுக்கும் எந்த கெடும் வராமல் இதை நம்மவர்கள் சாதித்தனர். இது கிட்டத்தட்ட பத்து வருடங்களாக போய்க்கொண்டு இருந்தது. இருபது வருடங்கள் கழித்து தங்கள் பிளாண்டை ஸ்டடி செய்துவிட்டு கியாரண்டி பீரியடை புதுப்பிக்க வந்த அந்த ஜப்பானிய நிருவனத்தினர், ஆச்சர்யப்பட்டு நம்மை பாராட்டாமல் மாறாக பொறாமை கொண்டு கடுப்பாகி கியாரண்டியை கேன்சல் செய்து விட்டு சென்று விட்டார்கள்.

இவர்களின் பிளான்ட் எந்த நாட்டிலும் இருபது வருடங்களுக்கு நூறு சதவித உற்பத்தி தந்ததில்லையாம். நம்முடைய மேலதிக சாதனையை கண்டு ஜீரணிக்க முடியாமல் வயிற்றெரிச்சல் கொண்ட மனம்பொருக்காதவர்கள், அந்த ஜப்பானியர். உங்கள் கூற்றுக்களை படித்தபோது ஏனோ அவர்களின் ஞாபகம் எனக்கு வருகிறது.

அவர்கள் கியாரண்டியை கேன்சல் செய்தாலும் இன்னும் பல வருடங்கள் நம்மால் இந்த பிளாண்டை 110% லோடில் ஒட்டமுடியும் என்ற ஊழியர்களின் நம்பிக்கை மற்றும் அறிவுத்திறன் அந்த ஜப்பானியரை எங்களின் கால்தூசிக்கு சமமாக மதிக்க வைத்தது.

இதேபோலவே என் நண்பனின் 2001 model ஹீரோ ஹோண்டா ஸ்பிலண்டர் என் நண்பனின் (அவன் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர்)கைவண்ணத்தால் லிட்டருக்கு 90 km கொடுக்கவைக்கப்பட்டது. அப்போதும் இதே கியாரண்டி பிரச்சினைதான்.

ஆக தான் சொல்வதுதான் சரி என்று நினைத்தவர்கள் மற்றவர்கள் சொல்வது எப்போதுமே தவறாகவே இருக்கும் என்று ஆழமாய் நம்புவார்கள். அதனால் அதனை சரிகானக்கூட விழைய மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத்தான் நஷ்டம்.

நான் நம்புவதெல்லாம் ஒன்றுதான். மனிதன் கண்டுபிடித்தது எதுவுமே மாற்றத்திற்குட்பட்டது. மனித கண்டுபிடுப்புக்களில் தத்துவங்களில் 100% சரியானது என்று எதுவுமே கிடையாது.

...அது பரிநாமவியலானாலும்...!

netmp said...

"நான் நம்புவதெல்லாம் ஒன்றுதான். மனிதன் கண்டுபிடித்தது எதுவுமே மாற்றத்திற்குட்பட்டது. மனித கண்டுபிடுப்புக்களில் தத்துவங்களில் 100% சரியானது என்று எதுவுமே கிடையாது.

...அது பரிநாமவியலானாலும்...!"


The law of physics never changes,Only human understanding of the law changes over the time.


even in the past people said the earth is flat .What happend now.
Just because of that the earth become flat? or because of the fact , the earth remains as such ?

Even in evolution , we may not have much links "MISSING LINKS" now. But it is enough what we have already to prove evolution.


Every one is forgetting a fact that, human life is short.But the age of this universe is beyond comprehensible by a human mind.And everyone want to see the evolution happening before their very eyes.


Cheers, Grow up in life.

NO said...

Philosophical skullduggery
Or
Diluting facts with voluminous harangue
Or
Clothing of plain quackery with Philosophical bombast

மேலே நான் சொன்னவற்றை தமிழில் மொழி பெயர்க்க என்னால் முடியவில்லை. யோசித்து பார்த்தேன், முடியவில்லை. இருந்தாலும் முயற்சித்தேன்....

தத்துவம் போல பேசப்படும் பித்தலாட்ட பேச்சு
அல்லது
அதிகமான ஆனால் அர்த்தமற்ற சொல்லாடல்களை கொண்டு உண்மைகளை கரைக்க முனைதல்
அல்லது
குழப்பவாத பேச்சுக்கு தத்துவ முலாம் பூசுதல்

இது போல பலர் பேசுவார்கள், ஏனென்றால் இதை செய்வது சுலபம். Out of context quote செய்வது, சொல்லவந்த பாய்ண்டிற்கு வலு சேர்க்கவே சொல்லப்பட்ட
உவமைகளை முதன்மை படுத்தி, அது தவறென்று சுட்டி கட்டி, அதனால் மையக்கருத்தும் தவறு என்று விதத்தில் விவாதம் அமைப்பது போன்ற குழப்ப
முறைகளை கையாள்வது, மதவாதிகளுக்கும், மதவாதமிலாமல் ஆனால் அறிவியல் என்பதன் வீரியத்தை முழுவதும் உணராத நண்பர்களும் கைவந்த கலை.

சிலர் உணர்ந்தே செய்வார்கள், பலர் உணராமலும் செய்வார்கள்.

இதில் சிலர் post modernist, அதாவது பின் நவீனத்துவம் நிலையை எடுத்து, எதுவுமே உண்மை இல்லை, அதுவும் மாறும், எதுவும் மாறும் போன்ற போலி தத்துவார்தங்களை பக்கம் பக்கமாக அரைப்பதில் வல்லமை பெற்றவர்கள்.

ரிச்சர்ட் டாகின்ஸ் இவர்களை பற்றி கூறும்பொழுது ஒன்று சொல்லுகிறார், அதாவது அறிவியலில் உண்மை நிலை என்பதே இல்லை என்பவர்களுக்கு -
" Show me a post modernist at 30,000 feet, I will then show you an Hypocrite"!!

அதாவது, முப்பதாயிரம் அடியில் ஒருவர் இருக்கும் நிலைமை அவர் விமானத்தில் பறந்தால்தான் வரும். விமானம், பறக்கிறது. அது அறிவியலினால் கட்டமைக்கபற்ற ஒன்று. கண்முன்னே நடக்கும் உண்மை. அறிவியல் கோட்பாடுகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டு, கண் முன்னே நடக்கும் உண்மை. அப்படி உண்மையாக வரையருத்தபட்ட அறிவியலின் பயனை அனுபவித்துக்கொண்டு, பார்த்துகொண்டு, உணர்ந்துகொண்டு, ஒருவர் இன்னமும் அறிவயல் என்பது உண்மை இல்லை, அப்படி இப்படி என்று தத்துவமும் பின் நவீனத்துவமும் பேசினால் அவரைப்போல ஒரு கடைந்தெடுத்த பாசங்குக்காரர், கபடதாரி வேறு யாரும் இறுக்க முடியாது!

பலரின் பேச்சும் எண்ணங்களும் அந்த வகையை சார்ந்ததுதான். அறிவியலின் முழு பயன்களையும் கண்முன்னே இருந்தும், அதை தினமும் அனுபவித்துக்கொண்டும் இருந்தும், ஆனால் அதன் மூலம் வெளிப்பாடாக வரும் தங்களின் பல புத்தக மற்றும் மத முரண்களை மட்டும் நம்ப மாட்டோம் என்று கூறி, அந்த நம்பாமைக்கு பல தத்துவ அர்த்தங்களையும் மற்றும் நம்பிக்கை மட்டும் சார்ந்த விளக்கங்களை மட்டும் சொல்லுவது, பாசாங்கு மற்றும் கபட வேடம் அல்லாமல் என்னவாக இருக்கும்?

NO said...

நான் கடைசியாக சொல்லுவது இதுதான்;

Science, its findings, its manifestations and its result completely contradict all versions of all non-moral content in all holy books. Most of the things that is "explained" in the non-morality/ethics section of any holybook are plainly wrong and those have been given better and truthfull explanations by modern science. Inspite of such mounting evidence about the non-usefulness of holybooks in the realm of all the areas except the moral and ethical codes, we have bands and bands of comitted followers trying to "prove" the non existent scientifc or rational content in those areas. They are the Enemies of Reason and they have the capacity to sow seeds for the future spawning of fundamentallists, although they themselves might not be one. Hence these science-twisters are equal enemies for reason and progress eventhough they might not be an immediate threat at this momment and by all means might also be good people by heart, until some one sees what they say and starts to "beleive" the infallibilty of his religion when compared to everything in this universe.

(I should add that the commandments of all religions and holybooks about moral and ethical codes are also one that needs to be heavily debated but at this momment, as long as it does not affect others and seem to serve as some sort of a guide for a community, then let it be - Although scientists like Richard Dawkins, Steven Pinker and Daniel Dennet have gone one step up and questioned as to why these codes and conducts as said by religions be given a special treatment in the first place and why they should not are not be subjected to enquiry on the basis of how they came to be in the first place, Stephen J Gould and others have countered this saying something called NOMA or Non-Overlapping Magestria. This loosely means that as long as religion does not trespass into areas that science considers its forte and have proven to be so, it can exist without any issues together with science. By proposing this, I think, basically Stephen Gould was trying to say that common people would still want religion and the best way that they can have it without being seen as an enemy to science is to decouple that with science. By this, he might have thought, the people of science would not have a reason to go in for a conflict with religions. But Dawkins and many others did not accept that and I think it might be for the reason I have already explained which is; even if religion keeps out of the territory of science,the "not-too fundamentallist and the medium believer will still try and seed his thoughts about his "holy book's" proof about science and therby creating new funadamentallist's, either knowingly or unknowingly.)

So, all aspects of religion needs to be questioned the momment they try and show their religion or holybook have something to do with science or for that matter any fact of the universe, which by all accounts they do not. Hence its better for moderate believers to keep their religion and "holybooks" out of the turf of science. And lastly, evolution is indeed in the turf of science.

நன்றி

தருமி said...

மிக்க நன்றி No. இதோடு தொடர்பான உங்கள் ஆங்கிலப் பின்னூட்டம் இங்கு ஏறவில்லை. அதனை ஏற்றி, 'முடிந்தால்' தமிழாக்கம் செய்து ஒரு இடுகையாக இட உத்தேசம். மிக நல்ல பின்னூட்டம் அது. அதனால் அது எல்லோரையும் சேர தமிழாக்கம் செய்ய நினைக்கிறேன் - கொஞ்சம் கடின வேலையென்றாலும். உங்கள் சம்மதத்தை எதிர்பார்த்திருக்கிறேன்.

நன்றி - மீண்டும்.

தருமி said...

NO has left a new comment on your post "418. பரிணாமம் -- 2":

நான் கடைசியாக சொல்லுவது இதுதான்;

Science, its findings, its manifestations and its result completely contradict all versions of all non-moral content in all holy books. Most of the things that is "explained" in the non-morality/ethics section of any holybook are plainly wrong and those have been given better and truthfull explanations by modern science. Inspite of such mounting evidence about the non-usefulness of holybooks in the realm of all the areas except the moral and ethical codes, we have bands and bands of comitted followers trying to "prove" the non existent scientifc or rational content in those areas. They are the Enemies of Reason and they have the capacity to sow seeds for the future spawning of fundamentallists, although they themselves might not be one. Hence these science-twisters are equal enemies for reason and progress eventhough they might not be an immediate threat at this momment and by all means might also be good people by heart, until some one sees what they say and starts to "beleive" the infallibilty of his religion when compared to everything in this universe.

(I should add that the commandments of all religions and holybooks about moral and ethical codes are also one that needs to be heavily debated but at this momment, as long as it does not affect others and seem to serve as some sort of a guide for a community, then let it be - Although scientists like Richard Dawkins, Steven Pinker and Daniel Dennet have gone one step up and questioned as to why these codes and conducts as said by religions be given a special treatment in the first place and why they should not are not be subjected to enquiry on the basis of how they came to be in the first place, Stephen J Gould and others have countered this saying something called NOMA or Non-Overlapping Magestria. This loosely means that as long as religion does not trespass into areas that science considers its forte and have proven to be so, it can exist without any issues together with science. By proposing this, I think, basically Stephen Gould was trying to say that common people would still want religion and the best way that they can have it without being seen as an enemy to science is to decouple that with science. By this, he might have thought, the people of science would not have a reason to go in for a conflict with religions. But Dawkins and many others did not accept that and I think it might be for the reason I have already explained which is; even if religion keeps out of the territory of science,the "not-too fundamentallist and the medium believer will still try and seed his thoughts about his "holy book's" proof about science and therby creating new funadamentallist's, either knowingly or unknowingly.)

So, all aspects of religion needs to be questioned the momment they try and show their religion or holybook have something to do with science or for that matter any fact of the universe, which by all accounts they do not. Hence its better for moderate believers to keep their religion and "holybooks" out of the turf of science. And lastly, evolution is indeed in the turf of science.

நன்றி

NO said...

Dear Sir,

No problem.Please do. My pleasure.

Thanks & Nandri

Unknown said...

//எல்லோருக்கும் தெரிந்த டைனோசார்கள் எப்படி இப்போது இல்லாமல் போயின?//

டைனோசர்கள் இல்லை என்பதற்கும் பரிநாமதிற்கும் என்ன தொடர்பு?

//பிரபஞ்சத்தின் வயது கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் எப்படி ஆதாம்- ஏவாள் கதை மனித நம்பிக்கைகளின் அச்சாணியாக இருக்கிறது?//

மதங்களில் வரும் ஆதாம் ஏவாள் கதையில் வருடங்கள் எதுவும் குருப்பிடவில்லையே, நீங்கள் கணிப்பது போன்று அதுவும் சிலரின் கணிப்பு தான், அது பொய்யாகி விட்டது.

//மனித தோற்றமும், வரலாறும் மிகப்பல காலத்திற்கு முந்தியது என்ற வரலாற்று உண்மைகளை எப்படி மறுக்கிறார்கள்? //

யார் மறுத்தது? மதவாதிகளும் ஏற்று கொள்ளத்தான் செய்கிறார்கள்.

//Exinct - Extant (இருந்து மறைந்த உயிரினங்கள் - இப்போது இருந்துவரும் உயிரினங்கள்) இவைகளுக்கான தொடர்புகள் நிரூபிக்கபட்ட போதும் எப்படி பரிணாமத்தை மறுப்பது//

இதில் பரிணாமத்திற்காண அதாரம் எங்கு உள்ளது, நாளை ஒரு இனம் அழிந்துவிட்டால் பரிணாமத்தை உறுதி படித்திவிடுவீர்களா?

//gene mapping, genome study போன்ற மரபணுச் சோதனைகள் வெளிவந்த பின்பும் எப்படி பரிணாமம் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத அறிவியலாக நம்பிக்கையாளர்களால் நினைக்கப்படுகிறது?//

இரு உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பை மரபணு சோதனை செய்யாமல் நேராக பார்த்தல் தெரியாதா? இவைகளுக்கும் கண் மூக்கு வாய் எல்லாம் உள்ளது அவைகளுக்கும் எல்லாம் உள்ளது. இதிலிருந்து தான் அது வந்தது என்று மரபணு சோதனை நிரூபிக்கவில்லை!!யாரும் நிரூபிக்க வில்லை, வெவ்வேறு உயிரினங்கள் என்றே கூறுகின்றனர்.
www.carbonfriend.blogspot.com

தருமி said...

கார்பன் கூட்டாளி,

//டைனோசர்கள் இல்லை என்பதற்கும் பரிநாமதிற்கும் என்ன தொடர்பு?//

நீங்களும் தெரிந்துதான் கேட்கிறீர்களா இல்லையா என்பது தெரியவில்லை!

கடவுள் எல்லாவற்றையும் படைத்திருந்தால் அங்கேது படிமங்கள்? படிமங்கள் இருந்தால் அங்கேது கடவுளின் படைப்பு?

சில உயிரினங்களைப் படைத்து விட்டு, on second thoughts, வேண்டாமென்று கடவுள் அவைகளை extinct ஆக்கியிருக்க மாட்டாரென்று நினைக்கிறேன்.

தருமி said...

//நாளை ஒரு இனம் அழிந்துவிட்டால் பரிணாமத்தை உறுதி படித்திவிடுவீர்களா?//

ஆம்.

தருமி said...

பதிலளிக்கும் அளவுக்கு உங்களது மற்ற கேள்விகல் இல்லையென்று நினைக்கிறேன்.

மன்னிக்கவும்.

Unknown said...

//கடவுள் எல்லாவற்றையும் படைத்திருந்தால் அங்கேது படிமங்கள்? படிமங்கள் இருந்தால் அங்கேது கடவுளின் படைப்பு?//

இறப்பு என்பது அனைவருக்கும் சமம், இறப்பு இருப்பின் படிமங்கள் இருக்கும், பரிணாமத்தை நிரூபிக்க எந்த ஒரு சரியான வாதமும் இல்லை, முடிந்தால் பரிணாமத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும்.

// சில உயிரினங்களைப் படைத்து விட்டு, on second thoughts, வேண்டாமென்று கடவுள் அவைகளை extinct ஆக்கியிருக்க மாட்டாரென்று நினைக்கிறேன்.//

பல்லாயிர வருடங்கள் முன்பு வாழ்ந்து அழிந்ததால் பரிணாமம் எப்படி சரியாகும்.

// ஆம்.//

ஆதாரம் இல்லாத வாதம்.

தருமி said...

கடவுளே!

ஐயா,
படிமம் என்றால் நீங்கள் சொல்வது போல் செத்த சவம் இல்லை. ஆங்கிலத்தில் extinct என்பார்கள். அந்த விலங்கினங்கள் அழிந்து விட்டன. சரியா?

கடவுள் படைத்திருந்தால் எப்படி சில இனங்கள் அழியும். அப்படி அழிவதாயிருந்தால் கடவுளின் ஆற்றல் என்ன ஆச்சு?

வால்பையன் said...

//
கடவுள் படைத்திருந்தால் எப்படி சில இனங்கள் அழியும். அப்படி அழிவதாயிருந்தால் கடவுளின் ஆற்றல் என்ன ஆச்சு? //

அழிந்ததும் லட்சகணக்கான ஆண்டுகளுக்கு முன், ஆபிரஹாம மத வேதத்தின் படி உலகம் உருவாகி எத்தனை வருடங்கள் ஆச்சு!?

ஆதாமில் ஆரம்பித்து அவரது மகன், மகன் என்று எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று ஈசாநபி வாழ்க்கை வரை குறிப்பு இருக்கே!

டைனோசர்களை எல்லாம் படைத்தது யார், அப்போ கடவுள் எங்கே போயிருந்தார்!, ஒருவேளை நம்மை குழப்ப அம்மாதிரி படிமங்களை கடவுள் சும்மா படைத்திருப்பாரோ! அவருக்கு பூமி ப்ளேகிரவுண்டு தானே!

தருமி said...

//பல்லாயிர வருடங்கள் முன்பு வாழ்ந்து அழிந்ததால் பரிணாமம் எப்படி சரியாகும்.//

கடவுளே! பரிணாமம் எப்படி படிமங்கள் உருவாகின என்று சொல்கிறது. உங்கள் படைப்புவாதத்தில் எப்படி ஐயா படிமங்களுக்கு விளக்கம் சொல்வீர்கள்?

//பரிணாமத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும்.//

மூணு கால்தான் சார் சரி.

//// ஆம்.//

ஆதாரம் இல்லாத வாதம்.

இல்லை!

Unknown said...

//மூணு கால்தான் சார் சரி.//

பரிணாமம் என்பது தீர யோசித்து எழுதிய கட்டுக்கதை என்பதை உங்கள் பதிலிலேயே ஒப்புகொண்டீர், நன்றி.

Unknown said...

///கடவுளே!

ஐயா,
படிமம் என்றால் நீங்கள் சொல்வது போல் செத்த சவம் இல்லை. ஆங்கிலத்தில் extinct என்பார்கள். அந்த விலங்கினங்கள் அழிந்து விட்டன. சரியா?

கடவுள் படைத்திருந்தால் எப்படி சில இனங்கள் அழியும். அப்படி அழிவதாயிருந்தால் கடவுளின் ஆற்றல் என்ன ஆச்சு?///---தருமி அய்யா... இப்போது உலகெங்கிலும்(சரியாக சொல்வதானால்... புலிகள் வாழும் ஓரிரு நாடுகளில்)புலிகள் சரணாலயம் அமைத்து புலிகளை காக்கவில்லையானானால் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் உள்ள புலிகள் இன்று அழிந்து போயிருக்கும் அல்லவா? இப்படித்தானே புலிகள் வாட்ச் புள்ளியியல் கூறுகிறது. இப்போது(அதாவது புலிகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே) எந்த இந்திய காட்டில் தோண்டினாலும் புலிகள் படிமங்கள் கிடைக்காதா? அவ்வளவு தூரம் என் போகணும்? மனிதப்படிமங்கள் கிடைக்காதா? அழிந்த பிராணிகளின் படிமங்கள்மட்டும்தான் கிடைக்க வேண்டுமா? சிருவனாயிருந்தபோது நான் பார்த்த கூட்டங்கூட்டமாக எங்கும்பறந்த காக்கா, கொக்கு,சிட்டுக்குருவி போன்றவை எல்லாம் இப்போது பெரும்பாலும் காணவில்லையே... அவை அழிந்து கொண்டிருக்கவில்லையா? மனிதனைத்தவிர (மற்றும் பிராய்லர் கோழி தவிர)மற்ற இனங்கள் அழிந்து கொண்டிருக்கவில்லையா? இவற்றின் அழிவிற்குப்பின் அவற்றின் படிமங்கள் கிடைப்பதாயின் அவை கடவுள் படைப்பு அல்ல என்று சொல்லிவிடுவதா? சற்று லாஜிக்குடன் விவாதியுங்கள் பேராசிரியரே...

தருமி said...

//சற்று லாஜிக்குடன் விவாதியுங்கள் பேராசிரியரே...//

கட்டாயமா செஞ்சிருவோம் சார்!

ஆனா, அதுக்கு முன்னால் படிமங்கள் அப்டின்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுட்டு வந்திட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் ... ப்ளீஸ்!!!!!

//புலிகள் படிமங்கள் கிடைக்காதா? அவ்வளவு தூரம் என் போகணும்? மனிதப்படிமங்கள் கிடைக்காதா? அழிந்த பிராணிகளின் படிமங்கள்மட்டும்தான் கிடைக்க வேண்டுமா? //

நல்ல கேள்விகள்!!!!

தருமி said...

வதூவசீ
மறந்திட்டேனே ... extinct அப்டின்றதுக்கு அர்த்தமும் பார்த்துட்டு வாங்க .. சரியா?!

Unknown said...

பேராசிரியரே...

//படிமங்கள் அப்டின்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுட்டு வந்திட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்//

எஸ் ஸார்.... ஓகே ஸார்...

அப்படியே நீங்களும் கொஞ்சம்...

'Fossil Foolishness'

http://www.noanswersingenesis.org.au/fossil_foolishness.htm

HOW FOSSILS FORM

http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/dinofossils/Fossilhow.html

This qualifies for Evolution in the News because it appeared in the January 28, 2006, issue of Science News, but it is more like history than news. If you have read any creationist literature, you will already know all of this. If, however, you have been protected from the truth by the evolutionists’ censorship of the public school science curriculum, this might take you by surprise. Here is a typical tale about fossilization, as told by an evolutionist:

http://www.scienceagainstevolution.org/v10i6n.htm

...human remains have been found buried with dinosaur remains on more than one occasion. It may be that man hunted dinosaurs to extinction.

http://www.allaboutcreation.org/dinosaur-fossils.htm

The most important conclusion is probably that fossilization has to happen quickly, or it won’t happen at all because, “fossilization is a race between the processes of mineralization and decay.” If something doesn’t fossilize quickly, it will decay.

http://www.scienceagainstevolution.org/v10i6n.htm

Unknown said...

பேராசிரியரே...

//...extinct அப்டின்றதுக்கு அர்த்தமும் பார்த்துட்டு வாங்க..//

எஸ் ஸார்.... ஓகே ஸார்...

அப்படியே நீங்களும் கொஞ்சம்...

'படிமங்கள்' என்றாலே "மில்லியன் ஆண்டுகள்தான்" என்று நினைவுக்கு வருவதுபோலவே... 'extinct' என்றாலும் டைனோசர்தான் நியாபகத்துக்கு வர வேண்டுமா?

In biology and ecology, extinction is the end of an organism or group of taxa. The moment of extinction is generally considered to be the death of the last individual of that species (although the capacity to breed and recover may have been lost before this point)

Recently Extinct Animals and Plants in North America...the list covers extinctions since 1960 to 2007

http://www.currentresults.com/Endangered-Animals/North-America/recently-extinct-animals.php

Caspian tiger( அட...! புலியே தான் ஸார்...) became extinct in the second half of the 20th century

http://devon.freepgs.com/2006/09/extinctions-in-recent-history.php

Top 10 Recently Extinct Animals:-

http://listverse.com/2009/07/25/10-recently-extinct-animals/

1 in 4 Mammals Could Go Extinct in the Near Future...

http://www.sciencesays.net/2008/10/1-in-4-mammals-could-be-going-extinct/

//நல்ல கேள்விகள்!!!!//---எனில் இப்போது தங்களின் பதில்கள் பெற நான் தகுதியுள்ளவள் தானே ஸார்...?

தருமி said...

வதூவசீ,

//நல்ல கேள்விகள்!!!!//---எனில் இப்போது தங்களின் பதில்கள் பெற நான் தகுதியுள்ளவள் தானே ஸார்...?//

இல்லவே இல்லை.

ஏன்னா, நல்ல கேள்விகளுக்குப் பிறகு வரும் ஆச்சரியக்குறிகளுக்கு நிறைய அர்த்தமிருக்குங்க. இப்படி புரியாம சந்தோஷப்பட்டுட்டீங்களே!

Unknown said...

//இல்லவே இல்லை//--நன்றி... தடம் மாறி தவறாக உள்ளே நுழைந்துவிட்டேன்...
மன்னிக்கவும்...
இனி உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன்.

தருமி said...

வதூவசீ,
//உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன்.//

மிக்க நன்றி. ஆயினும் எனக்கு நிறைய ஹோம் வொர்க் கொடுத்திருந்தீர்கள்; அதையெல்லாம் முடித்து விட்டேன். சில பதில்கள் உண்டு. கொடுத்து விடுகிறேன் .. எதற்கும்!

தருமி said...

http://www.noanswersingenesis.org.au/fossil_foolishness.htm - இதை மேற்கோள் காட்டிவிட்டு நீங்கள் பாட்டுக்கு போய்விட்டீர்களே! யார் கொடுத்தது அந்த மேற்கோள் ? நீங்கள் கொஞ்சம் படித்து விட்டு அதைக் கொடுத்திருக்கலாமே!

ஏன்னா, அது உங்களுக்கு சப்போர்ட் செய்யும் answersingenesis.org என்ற பதிவுக்கு எதிராக உள்ள பதிவுங்க ..! உங்கள் நம்பிக்கைகளை நன்றாகக் கிண்டல் அடித்த இடுகை அது! நோவா வெள்ளம் விட்டுச் சென்றவைதான் படிமங்களாக ஆனது என்ற கூற்றை // What a clever flood to not only drop mud on fish and wildlife, but also to bury them in volcanic ash! It was also very clever of the flood to manage to preserve delicate structures like footprints and burrows without washing them away.// கேலி செய்கிறதே!

நீங்கள் கொடுத்த இடுகையில் உள்ள ஒரு பதிவில் (http://www.noanswersingenesis.org.au/index.htm) "Creationism is not the alternative to Evolution - ignorance is" என்று கொடுத்திருக்கிறது. ரொம்ப வேடிக்கை அதை நீங்கள் எனக்குக் கைகாட்டி மேற்கோளிட்டது! மேலும், //"...be on guard against giving interpretations of Scripture that are far fetched or opposed to science, and so exposing the Word of God to the ridicule of unbelievers."
--Saint Augustine// என்றும் சொல்கிறது!

அடுத்த இன்னொரு இடுகையையும் பாருங்கள்: http://www.noanswersingenesis.org.au/answers_in_genesis2.htm
All of the sites listed above are excellent examples of the ridiculous. (3வது பத்தி!!)
In the final count, I must place AiG-USA in the ridiculous category. AiG-USA fails the scientific test with flying colours.

நீங்கள் கொடுத்த இன்னொரு மேற்கோள்: http://www.scienceagainstevolution.org/v10i6n.htm
Creationists have long argued that dead birds and fish float.
தண்ணியில உழுந்து பாசில் ஆகுறதப் பற்றி எழுதியிருக்கு..படிமங்கள் எத்தனையோ முறையில் நடக்ககூடியது. அதை ரொம்ப சிம்ப்ளிபை பண்ணிட்டீங்க. நம்ம வசதிக்காகவா …?

இதுதான் உலகின் மாபெரும் ஜோக்குங்க … கடவுளே உலகத்து முன்னால் நின்னுட்டா அதுக்குப் பிறகு யாராவது கடவுள் இல்லைன்னு சொல்லுவானா? சொல்ல மாட்டான். அது மாதிரியே நீங்க சொல்றது மாதிரி (http://www.allaboutcreation.org/dinosaur-fossils.htm -In addition, human remains have been found buried with dinosaur remains on more than one occasion. It may be that man hunted dinosaurs to extinction) மனுசப்பயலும் டைனசாரும் ஒரே சமயத்தில் உலகத்தில் இருக்குன்னு நிரூபிச்சிட்டா, நான், டாக்கின்ஸ் எல்லோரும் ஒரே சமயத்தில பரிணாமத்தை ஓரங்கட்ட்டி தூக்குப் போட்டுற மாட்டோமா?! இது மட்டும் உண்மைன்னு உங்க சைடு நிரூபிச்சிட்டா வேற ஒண்ணுமே தேவையில்லைங்க …. இப்போதைக்கு இதைப் பற்றிய என் comment: RUBBISH!

இதையும் பாருங்க: http://www.youtube.com/watch?v=qvHII6Vv06s டாக்கின்ஸின் பேச்சு ..டைனோ & மனுஷன்!

கடைசியில மிச்சம் இருக்கிற கேள்வி ஏற்கெனவே நான் திரும்ப திரும்பக் கேட்டதுதான். படிமங்கள் இருக்குதுன்னு நம்பிக்கையாளர்களே சொல்லிட்டீங்க. என் கேள்வி: அப்படி இருந்து மறைந்த உயிரினங்களின் படிமங்கள் இப்போ இருக்குதே … அப்டின்னா, சாமி படைச்ச நிறைய உயிரினங்கள் எல்லாம் எப்படி இப்போ இல்லாமல் போச்சு. அது என்ன கடவுளின் படைப்பில் உள்ள தகறாரா?? தப்பு தப்பா படைச்சிட்டாரா ...?

Prakar said...

An excellant explanation in tamil Mr.Dharumi.
Too bad, i am unable to write in tamil as good as you can :).

Unknown said...

//கடைசியில மிச்சம் இருக்கிற கேள்வி ஏற்கெனவே நான் திரும்ப திரும்பக் கேட்டதுதான். படிமங்கள் இருக்குதுன்னு நம்பிக்கையாளர்களே சொல்லிட்டீங்க. என் கேள்வி: அப்படி இருந்து மறைந்த உயிரினங்களின் படிமங்கள் இப்போ இருக்குதே … அப்டின்னா, சாமி படைச்ச நிறைய உயிரினங்கள் எல்லாம் எப்படி இப்போ இல்லாமல் போச்சு. அது என்ன கடவுளின் படைப்பில் உள்ள தகறாரா?? தப்பு தப்பா படைச்சிட்டாரா ...?//

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பரிணாமத்தை உண்மை என நிரூபிக்க எந்த அடித்தளமும் இல்லை.

தருமி said...

//நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பரிணாமத்தை உண்மை என நிரூபிக்க எந்த அடித்தளமும் இல்லை.//

உங்களால தூங்குறமாதிரி நடிக்கக்கூட தெரியலையே .. ஆச்சரியமா இருக்குங்க.

அய்யா! படிமங்கள் உண்மையென்றால் அங்கே கடவுளின் படைப்பு என்பது பொய்; வெட்டிக் கதை; புருடா .. etc.. etc..

better you continue your sleep.

தருமி said...

கார்பன் கூட்டாளி,

எம்புட்டு சொன்னாலும் விந்துவுக்கும் முதுகெலும்பிற்கும் தொடர்புன்னு சொல்றவங்க கிட்ட இருந்து எந்த விவாதத்திற்கும் சரியான பதில் கிடைக்காதுன்னு சொல்றவங்க ரொம்ப சரிதான்.

Unknown said...

//உங்களால தூங்குறமாதிரி நடிக்கக்கூட தெரியலையே .. ஆச்சரியமா இருக்குங்க.

அய்யா! படிமங்கள் உண்மையென்றால் அங்கே கடவுளின் படைப்பு என்பது பொய்; வெட்டிக் கதை; புருடா .. etc.. etc..//

தங்களின் கருத்து தவறேன்பதே என்னுடைய பதில். படிமம் என்றால் என்ன என்பதையே தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள்.

என்னுடைய பதிவில் உள்ள செய்திகள் உங்களுக்கு ஒரு விளக்கத்தை தரும் என எதிர்பார்கிறேன்.

//எம்புட்டு சொன்னாலும் விந்துவுக்கும் முதுகெலும்பிற்கும் தொடர்புன்னு சொல்றவங்க கிட்ட இருந்து எந்த விவாதத்திற்கும் சரியான பதில் கிடைக்காதுன்னு சொல்றவங்க ரொம்ப சரிதான்.//

நான் தருவது பதில் அல்ல விவாதமே

Prakar said...

While i was searching for evolution facts and creationist theories, i landing upon this page., which was also an interesting read.

http://www.viewzone.com/edenpole.html

Whatz your opinion on the year 2012?

தருமி said...

//நான் தருவது பதில் அல்ல விவாதமே//

இந்த தமிழ் எனக்குப் புரியலைங்க; ஓ! உங்க விவாதத்தில பதில் இருக்காதா??!!

//படிமம் என்றால் என்ன என்பதையே தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள். //

அப்டிங்களா .. நான் வாசிச்ச பரிணாம புத்தகங்களில் உள்ளதைச் சொன்னேன். அப்போ ஒண்ணு செய்ங்க. நீங்க படிமம்னா என்னன்னு படிச்சிருப்பீங்களே அதில் உள்ள அர்த்தம் என்னன்னு சொல்லுங்க. தெரிஞ்சுக்கிறேன்.

தருமி said...

கார்பன் கூட்டாளி/

//எந்த இந்திய காட்டில் தோண்டினாலும் புலிகள் படிமங்கள் கிடைக்காதா? அவ்வளவு தூரம் என் போகணும்? மனிதப்படிமங்கள் கிடைக்காதா?//

இதுமாதிரி நீங்களும் (தப்பா) சொல்றீங்களோ?

தருமி said...

Praveen,

நான் நீங்க கொடுத்த பக்கத்தை வாசித்தேன் - பாதிவரை. முடியலை...

எனக்கு ஒண்ணும் பொருத்தமாகத் தெரியவில்லை.//We remember them as Aryans (Ari), Krishtaya (Christians), Kurus, and Tur/anians. //
அப்போவே கிறிஸ்துவர்கள் ஏது? ... இப்படி பல ...

Prakar said...

Dear Dharumi,
i too am amused of the stories. Thanks for your explanation on parinamam, thatz what made me to search all over.

I see about the krishtayas, here
http://www.viewzone.com/rewrite.html

Unknown said...

//இந்த தமிழ் எனக்குப் புரியலைங்க; ஓ! உங்க விவாதத்தில பதில் இருக்காதா??!!//

//மூணு கால்தான் சார் சரி.//

அதுபோல நான் கூறவில்லையே!!

//நீங்க படிமம்னா என்னன்னு படிச்சிருப்பீங்களே அதில் உள்ள அர்த்தம் என்னன்னு சொல்லுங்க. தெரிஞ்சுக்கிறேன்.//

படிமம் என்பது பல ஆயிர வருடங்களுக்கு முன்பு இறந்த உயிர்கள். பனி போன்றவைகளில் சிக்கி அவைகள் படிமமாக மாறுகின்றன. நீங்கள் கூறும் extinct களும் படிமம் தான். தவறு என்றால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன்.

////எந்த இந்திய காட்டில் தோண்டினாலும் புலிகள் படிமங்கள் கிடைக்காதா? அவ்வளவு தூரம் என் போகணும்? மனிதப்படிமங்கள் கிடைக்காதா?//

இதுமாதிரி நீங்களும் (தப்பா) சொல்றீங்களோ?//

அது என்னுடைய கருத்து இல்லை.தட்ப வெப்ப நிலையே படிமங்களுக்கான முதற்காரணம்.

தருமி said...

Praveen,

கீழே உள்ளது போல் நிறைய இருக்கு .. எனக்கு (முழுமையும் வாசிக்க) முடியலை
They were also called Pancha Krishtayas (The Five Races of mankind).

...Because the oxygen levels there were much higher than now, they could live for up to a thousand years and stay free from all sicknesses. The only way they could die was by committing suicide.

Serindip derives from the Sanskrit Ceren-dvipa.

how can we prove that all humans left Central Asia for other parts of the world?

Notice the Cross symbol on the center page.

தருமி said...

கார்பன் கூட்டாளி,
//எந்த இந்திய காட்டில் தோண்டினாலும் புலிகள் படிமங்கள் கிடைக்காதா?//

கிடைக்காது.
படிமங்களின் வயதைப் பற்றி தெரியாமல் இப்படிப்பட்ட அடிப்படையற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

Post a Comment