Tuesday, July 20, 2010

419. ஒரு விருது - மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்

*

சென்ற வாரம் கிழக்குப் பதிப்பகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அப்பதிகத்திற்காக நான் மொழிமாற்றிய "அமினா" என்ற புதினத்திற்கு மொழியாக்க விருது ஒன்று எனக்குக் கிடைத்திருப்பதாக ஒரு செய்தி.
ஆயினும் முறையாக பரிசளிப்போரிடமிருந்து வரும் செய்திக்காகக் காத்திருக்கச் சொன்னார்கள். அப்போதைக்கு மகிழ்ச்சியை தங்ஸிடமும், பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். அடுத்த நாள் "திசை எட்டும் ... " என்ற இதழின் ஆசிரியர் குறிஞ்சி வேலன் அப்பரிசை தனது இதழின் மூலமாக எனக்குக் கிடைத்திருக்கும் "2010 நல்லி திசையெட்டும் விருதுகள்" பற்றிக் கூறினார்.

எனக்கு இந்த இதழ் பற்றி ஏதும் தெரியாததால் நண்பர்கள் இருவரிடம் - கல்லூரித் தமிழாசிரியர்கள் - கேட்டேன். ஒருவர் அவ்விதழ் மொழியாக்கத்திற்காக மட்டுமே நடந்து வரும் ஒரே இதழ்;  பல மொழிகளிலிருந்தும்  கதைகள், கவிதைகள், கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெறும் என்றார். மற்றொருவரும் இதையே கூறி, அதோடு எவ்வித அரசியிலும் இல்லாது மொழியாக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படும் இதழ் என்று கூறினார். நல்ல இதழ் ஒன்றின் விருது என்று நண்பர்கள் கூறியது மிக்க மகிழ்ச்சியளித்தன.

எனது முதல் முயற்சிக்கு இத்தகைய விருது, ரூபாய் பத்தாயிரம் பரிசு என்றெல்லாம் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. என் மகிழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆவல்.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இவ்விருது பொள்ளாச்சியில் கொடுக்கப்படும் என்று அறிகிறேன். மேலும் விவரங்கள் மீண்டும் வரும் ...

குறிஞ்சி வேலனைப் பற்றிய ஒரு குறிப்பு சென்ற ஞாயிற்றுக் கிழமை தினமணியில் வந்துள்ளது. காண்க ....

 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை.
விலை ரு. 30
கதை, கட்டுரை, கவிதை, நூல் அறிமுகம் ... போன்ற பிற மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளடங்கியது.



48 comments:

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் ஐயா. பலன் பாராது செயல்பட்டால் நல்ல முயற்சிகளுக்கு தகுந்தப் பலன் கிடைத்தே தீரும்.

பிச்சைப்பாத்திரம் said...

வாழ்த்துகள் ஐயா,

திசை எட்டும் - முற்றிலும் மொழிபெயர்ப்பு படைப்புகளுடன் கூடிய இதழ். அவர்களிடமிருந்து விருது பெறுவது உங்களின் உழைப்பை சுட்டிக் காட்டுகிறது.

Baranee said...

வாழ்த்துகள் ஐயா..

குசும்பன் said...

மகிழ்வான செய்தி, வாழ்த்துக்கள்!

உமர் | Umar said...

வாழ்த்துகள் ஐயா!

துளசி கோபால் said...

ஆஹா..... இனிய பாராட்டுகளும் நல்வாழ்த்து(க்)களும்.

போன வருசம் நம்ம ரெண்டு இனிய தோழிகள் விருது வாங்கினாங்க. கவிதாயினி மதுமிதவும், சிங்கை ஜெயந்தி சங்கரும்.

இந்த வருடம் எங்கள் இனிய தோழர்!!!!!

- யெஸ்.பாலபாரதி said...

வாத்தியாரே.. இதெல்லாம் ஒன்னும் இல்லை. இன்னும் இருக்கு போகவேண்டிய தூரம்.

ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
எவ்வ்வ்வ்வ்வ்வளவு.. சொன்னேன் எழுதவாங்கன்னு... இனியாவது ஒழுங்க இருங்க. ;)

இல்லாட்டி எங்க வூட்டி ரவுடி கனிவமுதனை கொண்டு உங்களை ஒரு வழி பண்ணிடுவேன். :)))

வாழ்த்துகள்.

Vidhoosh said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிரமம் இல்லையெனில் அந்தப் பத்திரிக்கை சந்தா விபரங்கள் தெரிவித்து உதவ முடியுமா?

கையேடு said...

வாழ்த்துகள்ங்க தருமி சார்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சார்

அடுத்தமாதம் நேரில் பிரத்யேக வாழ்த்துகளைத் தெரிவிக்க விருப்பம்

:)

தருமி said...

கோவீஸ்,
எல்லாம் மணற்கேணி வழிதான் ...
நன்றி.

சுரேஷ் கண்ணன், பரணி,

மிக்க நன்றி

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் ஐயா. மிக்க மகிழ்ச்சி.

Thekkikattan|தெகா said...

அசத்தல், தருமி! வாழ்த்துக்கள்!

ராஜா கைய வைச்சா அது ராங்கா போயிடுமா :)) அவ்வளவு உழைப்பை போட்டுருக்கீங்கன்னு எடுத்துகிறோம். ரெண்டாவது, உங்க மனசுக்கு நெருக்கமான படைப்பா வேற இருந்திருக்கும் ... we are happy for you, Sam!!

செல்வநாயகி said...

வாழ்த்துகள்.

Sridhar Narayanan said...

வாழ்த்துகள் தருமி ஐயா!

மேலும் பல விருதுகள் வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

தர்ஷன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தருமி ஐயா
மேலும் தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவ்விதழ் மொழியாக்கத்திற்காக மட்டுமே நடந்து வரும் ஒரே இதழ்//

//எனது முதல் முயற்சிக்கு//

இரண்டையும் இணைத்துப் படிக்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி!
இனிய வாழ்த்துக்கள் தருமி ஐயா!
இன்னும் பல விருதுகள் தொடரட்டும்..coz success breeds success! :)

கார்த்திகைப் பாண்டியன் said...

எப்பவும் உங்களுடனே.. வாழ்த்துகள் அய்யா..:-)))

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் ஐயா..!

உங்களுடைய திறமையின் வெளிப்பாடு முதல் படைப்பிலேயே வெளியானது பார்த்தீர்களா..?

அறிவாளன் said...

தருமி ஐயாவிற்கு அன்பான வாழ்த்துக்கள்.

அமர பாரதி said...

வாழ்த்துகள் தருமி சார்.

//என் மகிழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆவல்.// மகிழ்ச்சியை மட்டுமல்ல. அந்த பத்தாயிரத்தையும் பகிர்ந்து கொண்டாலும் மகிழ்ச்சியே.

Unknown said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் தருமி ஐயா!

தருமி said...

யெஸ் பா
நன்றாக நினைவில் உள்ளது - நீங்கள் 'தள்ளி விட்டும்' நான் எழுந்திருக்காமல் இருந்தது. அப்போது சொன்ன நல்ல வார்த்தைகளை மறந்ததில்லை. அவைகளை நிரம்ப காலந்தாழ்த்தி முளைக்க வைத்தது தவறுதான்.

இன்னும் கனியின் 'உதை' தேவையாக இருக்குமென நினைக்கிறேன்.

gulf-tamilan said...

வாழ்த்துகள்!!!

ராஜவம்சம் said...

கடமையை செய் பலன் தன்னால் கிட்டும்.

வாழ்த்துக்கள் சார்.

அ.வெற்றிவேல் said...

அய்யா!

இது எனக்கு கிடைத்து போல எனக்குப் பெருமையாக உள்ளது.. தமிழ் வலைத்தளங்களில் ஒரு அறிவுபூர்வமானது மட்டுமல்ல., விஷயஞானம் உள்ள வலைத்தளம் தங்களுடையது. மேலும் தங்கள் எழுத்துக்களிலேயெ தங்களது உழைப்பு நன்கு தெரியும் பெருகட்டும் பரிசுகள்.வணங்குகிறேன் தங்கள் அறிவையும் உழைப்பையும்
அன்புடன் வெற்றி

தருமி said...

குசும்பன்,
மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி

கும்மி,
மிக்க நன்றி

துளசி,
பெரிய ஆளுக கூட என்னையும் சேர்த்திட்டீங்களே ..

மிக்க நன்றி

விதூஷ்,
மிக்க நன்றி.

கேட்ட விவரத்தை இன்னும் இரு நாளில் இதே பக்கத்தில் இட்டு விடுகிறேன்.


கையேடு,
மிக்க நன்றி.

நேசமித்திரன்
மிக்க நன்றி.

வாங்க ... அடுத்த மாதம் 'நேருக்கு நேர்' ஒரு கை பார்த்துக்குவோம்.

குமரன்,
மிக்க நன்றி.

தெக்ஸ்,
மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி.

செல்வநாயகி,
மிக்க நன்றி.

ஸ்ரீதர் நாராயணன் ,

மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் பலிக்க முயல்கிறேன்.


தர்ஷன்,
மிக்க நன்றி.


ரவி ஷங்கர்,
உங்கள் வாழ்த்துக்கள் பலிக்க முயல்கிறேன்.
மிக்க நன்றி.


கா.பா.,
மிக்க நன்றி.

உ.த.,

மிக்க நன்றி.

அறிவாளன்,
மிக்க நன்றி.

அமரபாரதி
மிக்க நன்றி & 'இஸ்க்கு புஸ்க்கு"!!

சுல்தான்,
மிக்க நன்றி.

gulf-tamilan,
மிக்க நன்றி.

ராஜவம்சம்,
அப்டியா??!!

மிக்க நன்றி.

அ.வெற்றிவேல்,

நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

துளசி கோபால் said...

சேர்க்காட்டால் எப்படி?

நீங்க இப்ப (இன்னும்) பெரிய ஆளு!!!!

மகிழ்ச்சி.

தருமி said...

இல்ல துளசி .. அவங்க ரெண்டுபேரின் achievement பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்.

தருமி said...

சந்தோஷ் எழுதியது ...


Dear Sir,
Vanakkam
I dont have Tamil fonts to congratulate you Sir. "Kalakareenga Ponga" Once again you have proved that you are a "SAGALAAA KALA VALLAVAR" nu, Zoologist, Photographer,Critic,Journalist, Aethist, Speaker,...etc..etc..
I pray that you should be healthy and live long long long really long.......


Dr.S.Winkins Santosh,
Post Doctoral Fellow,

Neurogenesis and Estrogens,
CNRS Laboratory,
Rennes- FRANCE.

sangappalakai said...

GREAT! i dint know even your translation, but you surprised by this news. But a person like should do more in the creative fields...
Like Balabharathy said, i would say this is just THE beginning... we will wait for more milestones...
Manamaarntha Vazhththukkal!

தருமி said...

இன்னும் சில விவரங்களை இடுகையில் சேர்த்துள்ளேன்.

Dr.N.Kannan said...

தருமி சாருக்கு: நல்வாழ்த்துக்கள். மனம் மிக மகிழ்வாக உள்ளது.

ஜோ/Joe said...

வாத்தியாரே,
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

தாணு said...

வாழ்த்துக்கள்! நேரமின்மையால் வலைப்பூக்கள் பார்ப்பதில்லை. தொடர்பை புதுப்பித்தலுக்கும் நன்றி
தாணு

தேவன் மாயம் said...

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!

Radhakrishnan said...

வாழ்த்துகளும், பாராட்டுகளும் ஐயா.

துளசி கோபால் said...

அட! தாணுவா?

நலமா தாணு?

தருமி, ஸார் மன்னிக்கணும். இங்கே கொஞ்சம் தனி விசாரிப்பு வேண்டி இருக்கு:-))))

தருமி said...

//இங்கே கொஞ்சம் தனி விசாரிப்பு வேண்டி இருக்கு:-//

அதுக்குத்தானே இங்கே இழுத்தது.

(துளசியின் காதுக்குள்: எப்படி இவங்க எல்லாம் நம்மள மறந்திர்ராங்க .. இல்ல..?)

ஜெகதீசன் said...

வாழ்த்துகள் ஐயா!

தருமி said...

delphine,
மிக்க நன்றி டாக்.

சந்தோஷ்,
பழைய நினைப்புடா பேராண்டி .. என்ற பேச்சு நினைவுக்கு வந்தது!

சங்கப் பலகை கார்மேகம்,
ஆனா அந்த மாதிரி சொந்த படைப்புக்காரனாவது என்னால் முடியுமான்னு தெரியலையே'ப்பா!

டாக். கண்ணன்,
மிக்க நன்றி.

வாத்தியார் ஜோ,
மிக்க நன்றி.
(நேற்று தலைவர் பிறந்த நாள் ...! உங்கள நினச்சேன்.)

தாணு,
busy bee?
தொடர்பா ..அப்டின்னா...?

வந்தமைக்கு நன்றி

V.Radhakrishnan,
மிக்க நன்றி

வடுவூர் குமார் said...

மகிழ்ச்சியாக இருக்கு.

மதுரை சரவணன் said...

நல்வாழ்த்துக்கள்... அய்யா . அடுத்த படைப்புக்கு ரெடிபண்ணுங்க ...நல்ல அங்கிகாரம் கிடைத்துள்ளது. என்றும் என் வழிக்காட்டி ...அன்புடன் உங்கள் மாணவன்

தருமி said...

வடுவூர்,
மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி

சரவணன்,
அந்த அங்கீகாரம் தான் மகிழ்ச்சிக்கு காரணம். நன்றி. அடுத்ததற்கு ... கட்டாயமாக முயல்கிறேன்.

டெல்பின்,
மிக்க நன்றி

kothai said...

My heartfeltcongratulations sir.

தருமி said...

நன்றி கோதை

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

hearty congratulations.
karthik+amma

தருமி said...

நன்றி, karthik+amma

Post a Comment