Thursday, February 03, 2011

472. ராபர்ட் க்ளைவ் - நல்லவர்; ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்: புரிந்து கொள்ளுங்கள்.

*

ராபர்ட் க்ளைவ் - நல்லவர்; 
ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்: 

புரிந்து கொள்ளுங்கள்.



எப்டின்னு கேக்குறீங்களா ...


அதுக்கு முன்னால் ஒரு வார்த்தை:

என்னடா .. இந்தப் பதிவில் அங்கங்கே சில நீல எழுத்துக்கள் தலை நீட்டுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவைகள் எல்லாமே கடன் வாங்கிய எழுத்துக்கள்”. அதனால்,  இப்பதிவை வாசிப்பதற்கு முன் இன்னும் இரு பதிவுகளையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்தால் இன்னும் நலம் !

1.   http://thiruchchikkaaran.wordpress.com/2011/01/31/aurangaseebs-imposition-of-religious-tax-on-poor-dhimmis/


2. http://suvanappiriyan.blogspot.com/2011/02/blog-post.html
Image and video hosting by TinyPic


ராபர்ட் க்ளைவ் தன் 19-ம் வயதிலேயே ஒரு குமாஸ்தாவாக இந்தியாவுக்கு வந்தார். ஆனாலும் அவர் ரொம்ப ஒழுங்கானவர்; மிகுந்த புத்திசாலி. இவர் ரொம்ப மண்டூவாக இருந்ததால்தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் தவறான ஒரு செய்தியை நம்மிடம் பரப்பி விட்டனர். இதுபோல்தான் //நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். // பல இந்தியர்கள் ஆங்கிலேயர்கள்  //மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! இதை நாமும் நம்பி விடுகிறோம்.//

ஆனால் க்ளைவ் அப்படிப்பட்டவரல்ல. பார்த்த குமாஸ்தா வேலையில் இருக்கும்போதே பிரஞ்ச், டச் நாட்டுக்காரர்கள் இந்தியாவில் இல்லாமல் ஆக்கி விட வேண்டுமென்று பாடுபட்டார். இந்தியாவின் வரலாற்றை இப்படி உருவாக்கியவர்தான் க்ளைவ். இது இப்போதைய இந்தியர்களுக்குத் தெரியுமா?

விவிலியத்தில் ரோமானியர்களுக்கு உரியதை ரோமானியர்களுக்கும், செசேரியனுக்குரியதை செசேரியனுக்கும் கொடுத்துவிடு என்று ஏசு கூறியிருக்கிறார். அதே போல் க்ளைவ் பாண்டிச்சேரி போர்க்களத்திலும் சண்டையிட்டு நவாபுக்கு துணை நின்று அவரை பிரஞ்சு படையிடமிருந்து காப்பாற்றினார். நல்ல வேளை - இப்படி ஒன்று நடக்காவிடில் நம் நாட்டின் அன்றைய நிலை எப்படியெப்படியோ மாறிப்போயிருந்திருக்கும். 1613-லிருந்து 1947 வரை எப்படிப்பட்ட பொற்காலம். இத்துணை காலம் அவர்கள் இங்கு ஒரு நல்ல காலனியாதிக்கத்தை வைத்திருந்தார்கள் என்றால்  //மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! // அதுவுமின்றி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் அவர்கள் இங்கு நம்மை ஆண்டிருக்கிறார்கள். இதற்கு //முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட இவர்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 350 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.//

அதைவிடவும் இவர் இந்தியாவிலிருந்து தாய்நாடு திரும்பியதும் அவர் வைத்திருந்த செல்வத்தைப் பார்த்து பொறாமை கொண்ட மக்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவர் மேல் வழக்கு தொடுத்தனர். அவர் குற்றமற்றவர் என்பது நிருபணம் ஆனது. இன்று அவர் நம்மோடு நம் நாட்டில் இருந்திருந்தால் இந்திரா காந்தியின் நகர்வாலா கொலை வழக்கு நடக்க விட்டிருப்பாரா? ராஜீவி காந்தியின் போபர்ஸ் வழக்கு நடக்க விட்டிருப்பாரா? இல்லை ...இன்று ஆ.ராசா மாதிரி ஆட்கள் வந்திருக்க முடியுமா? இந்த வரலாற்று உண்மைகளா ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நல்ல ஒரு கிறித்துவராக, பண்பாளராக இருந்ததால்தான் அவர் மேலிட்ட வழக்கில் அவர் நல்லவர் என்று நிரூபணம் ஆனது.

ஆனாலும் மிகுந்த நல்லவரான க்ளைவ் வழக்கில் வெற்றி பெற்றாலும் ’தன்மேல் இப்படி ஒரு பழியா?” என்ற நல்ல மனிதனுக்குரிய உயர்ந்த மனதால், மிகவும் மனக்கஷ்டப்பட்டு தன் 49-வது வயதில் தற்கொலை செய்து கொண்டு மோட்சம் ஏகினார்.

இந்த அளவு நல்ல உள்ளம் கொண்ட க்ளைவ் இந்தியாவில் செய்த அளப்பரிய நல்ல காரியங்களுக்காக William Pitt the Elder என்ற வரலாற்றாசிரியர் க்ளைவ் அவர்களை இந்தியாவிற்கான, இங்கிலாந்திற்கான 'heaven sent general' என்று அழைத்தார். எவ்வளவு உயர்வான மனிதர் க்ளைவ்!!!

--------------

Brigadier-General Reginald Edward Harry Dyer


Image and video hosting by TinyPic
 

க்ளைவ் நம் நாட்டில் ஆங்கிலேயர் காலடி வைக்கத்தான் போராடி, அதன் மூலம் பல சின்னச் சின்ன பகுதிகளாக சிதறுண்டு கிடந்த நம் நாட்டை ஒன்றாக்கும் முதல் முயற்சியை எடுத்தார். அப்படி ஒன்று சேர்ந்த பிறகு அந்நாடு  அந்த கட்டுக்கோப்போடு இருக்க வேண்டுமா இல்லையா? அதற்காக பெரும்பாடுபட்டவர் ஜெனரல் டயர். ஜாலியன்வாலா பாக் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டுமே! அன்று இருபதாயிரம் பேர் கூடி இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோஷம் போட துணிந்தனர். நாட்டை ஒன்றாக்கி நல்லாட்சி செய்யும் எந்த அரசும் என்ன செய்ய வேண்டும்? முதலில், நாட்டைக் காக்க வேண்டும். அதைத்தானே டயர் செய்தார் !

அதோடு அவர் ஒரு பெரும் படையின் தலைவர். அவருக்கு வந்த கட்டளை அந்தக் கூட்டத்தைத் தடுக்க வேண்டும்; கலைக்க வேண்டும். அதற்கான உத்தரவும் வந்தது. பின் ஒரு நல்ல தலைவன் என்ன செய்வான்? சுடச் சொல்வான். அவனது சிப்பாய்கள் - அதில் மிகப் பலர் இந்தியர்களே - சுட்டார்கள். இதில் டயர் மீது என்ன தவறு. கட்டளையைப் புறக்கணிக்காமல் தன் கடமையைத்தானே செய்தார். ஆளுமைக்குப் பயந்து நட என்று விவிலியத்தில் சொல்லவில்லையா? பின் டயர் மீது என்ன தவறு?

20,000 மக்களை நோக்கி அவர் என்ன பீரங்கி குண்டுகளையா போட்டார்? வெறும் துப்பாக்கி மூலம் 1600 ரவுண்டுகளைப் பயன்படுத்தினார்.  Mishra Planeswalker என்ற வரலாற்றாசிரியர் மக்களைக் கொல்ல வேண்டுமென்பதற்காக சுட்டிருந்தால் இன்னும் பல குண்டுகளை அல்லவா செலவழித்திருக்க வேண்டும் என்ற ஒரு அழகான ஒரு கேள்வியை நம்முன் வைக்கிறார். துவேஷத்தில் இருக்கும் இந்தியர்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதோடு, ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்கு முன் அமிர்தசரஸில் Miss Marcella Sherwood என்ற ஆங்கிலேய இளம்பெண்ணை இந்தியர்கள் சிலர் தாக்கியுள்ளார்கள். சில இந்தியர்களே அவளை பின் காப்பாற்றியுள்ளார்கள். இருந்தும், ஒரு  பெண்ணை அடித்துத் துன்புறுத்தியவர்கள் என்பதால் டயர் அதிக சினம் கொண்டிருந்தார். குற்றம் செய்யாதவர்கள் முதல் கல்லை இந்தப் பெண்ணின் மேல் எறியுங்கள் என்றாரே விவிலியத்தில். எதற்காக?  ஒரு பெண்ணைக் காப்பாற்ற. அதே போல் இங்கும் டயர் ஒரு பெண்ணை அடித்தவர்களைத் தண்டிக்க எண்ணி ஜாலியன்வாலா பாக் நிகழ்ச்சியில் நியாயமான ஒரு கோபத்தோடு, தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்ற தன்மான தைரியத்தோடு நடந்து கொண்டுள்ளார்.

அதோடு டயர் வேறு நேரங்களில் தவறாக நடந்து கொண்டதாக எக்குறிப்பும் இல்லை.  //அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! //

இந்த நல்ல காரணங்களுக்காகத் தான் அவர் இங்கிலாந்து சென்றதும் அவருக்கு அந்தக் காலத்திலேயே  இப்போது  Daily Telegraph என்றழைக்கப்படும் அன்றைய Morning Post என்ற தினசரி நாளிதழால் 26,000 பவுண்டுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பெண்களின் காவலனாக இருந்ததால் 13 பெண்கள் அணியினர் அவருக்கு "the Saviour of the Punjab” என்ற பட்டம் கொடுத்து அவருக்கு ஒரு வாளும் பண்மும் பரிசாகக் கொடுத்தார்கள்.
எவ்வளவு உயர்வான மனிதர் டயர் !!!
 ----------
துண்டுச் செய்தி:
//'சதி'யை நிறுத்தியவர்//  William Bentinck என்ற ஆங்கிலேய அதிகாரி. //ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். அதை ஆடசித் தலைமை//யில் இருந்த அந்த அதிகாரி,
ராஜாராம் மோகன்ராய் போன்ற நம் நாட்டுத் தலைவர்கள் மூலம்  விதவை மறுமணம், சத்தி, துகி என்று சொல்லப்படும் காளிக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதப் பலிகள் போன்றவற்றை சட்டப்படி நிறுத்தினார்.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டதால் நம் இந்தியர்கள் க்ளைவ், டயர் போன்றவர்களையும், மற்ற ஆங்கிலேயர்களையும் புரிந்து கொள்ளாமல், இங்கிலாந்து //அரசைக் கவிழ்க்க சதி செய்தனர்.//  அவர்களை //...விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.//

இதெல்லாமே  மாற வேண்டும்.





254 comments:

«Oldest   ‹Older   201 – 254 of 254
thiruchchikkaaran said...

அன்புக்குரிய, திரு. வால் பையன் அவர்களே, நீங்கள் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டாம்.

சிந்திப்பதற்கு பெரிய படிப்பு தேவை இல்லை. ஸ்கூலுக்கே போகதாவர்கள் கூட பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியும். மூளையை உபயோகித்து சிறிது சிந்தித்தால் போதும்.

நம்பிக்கையாளர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள். ஆனால் எதையும் நிரூபிக்க வேண்டியது பற்றி நினைத்ததுக் கூடப் பார்க்க வேண்டியதில்லை. அது நம்பிக்கை, நீயும் நம்பு என்று முடித்த்து விடலாம்.

ஆனால் பகுத்தறிவு வாதி எதையும் ஆராய்ந்து பார்த்து, சிந்தித்துப் பார்த்து- இது இப்படி, இந்த முடிவு இப்படிவந்தது,இதை இப்படி சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.

உலகம் உருண்டை என்பதை அறிவியல் அறிஞர்கள் சொன்ன போது ஐரோப்பிய மத அடிப்படை வாதிகள் அவர்களை சித்திரவதை செய்தனர், நெருப்பிலே போட்டனர். அவர்களின் தடைகளை எல்லாம் மீறி அறிவியலை வளர்த்து வருகின்றனர். படிப்படியாக அறிவியல் பல உண்மைகளை கண்டு பிடித்து வருகிறது. கோள்கள் உருவாக்கம் பற்றிய நவீன ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெறுகிறது. ஆராய்ச்சிகளில் கிடைக்கும் முன்னேற்றங்களை அவ்வப்போது வெளி இட்டு வருகின்றனர்.


அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவின் அடிப்படையிலேயே கருத்து சொல்ல முடியும். குயவர் சட்டி பானை செய்வதைப் பார்த்து விட்டு, கடவுள் இதே போல உலகத்தைப் படைத்தார் என்று சும்மா எடுத்து விட முடியாது.

thiruchchikkaaran said...

பெரிய படிப்பு படித்து விட்டு குருட்டுத் தனமாக அப்படியே ஒத்துக் கொள், கேள்வி, நிரூபணம் எல்லாம் கேட்கக் கூடாது என்று கட்டையைக் காட்டி பயமுறுத்துபவர்களை விட, ஸ்கூலுக்கே போகாமல் ஆனால் சிந்திக்காமல் எதையும் அப்படியே ஒத்துக் கொள்ள மறுப்பவர் அறிவின் வழி செல்பவர் ஆவார்.

என்னுடைய நெருங்கிய தோழர்கள் விருத்தத் சேதனம் செய்யாவிட்டால் உடல் நலம் கெட்டு விடும் என்ற கருத்து உடையவர்கள். இந்த பேச்சை எடுத்தாலே பயந்து நடுங்குவார்கள், அழுக்கு இருக்கும்பா, நல்லா கழுவுங்கப்பா என்று புலம்பித் தள்ளி விடுவார்கள்.

பிளட் கேன்சருக்கு கூட அந்த அளவுக்கு பயப்பட மாட்டார்கள் , நுனித் தோலுக்குள் உள்ள அழுக்குக்கு அப்படி அஞ்சுவார்கள். நகத்தில் கூட அழுக்கு உள்ளது, முடியிலே அழுக்கு உள்ளது, ஏன் இவ்வளவு பயப்படுறீங்க என்றால் கூட, சிறுநீர் போனா நல்லா கழுவிடுங்கப்பா, இல்லன்னா ரொம்ப பிரச்சினை ஆகி விடும் என்று ஜன்னி கண்டது போல பேசுவார்கள்.

thiruchchikkaaran said...

பெரிய படிப்பு படித்து விட்டு குருட்டுத் தனமாக அப்படியே ஒத்துக் கொள், கேள்வி, நிரூபணம் எல்லாம் கேட்கக் கூடாது என்று கட்டையைக் காட்டி பயமுறுத்துபவர்களை விட, ஸ்கூலுக்கே போகாமல் ஆனால் சிந்திக்காமல் எதையும் அப்படியே ஒத்துக் கொள்ள மறுப்பவர் அறிவின் வழி செல்பவர் ஆவார்.

என்னுடைய நெருங்கிய தோழர்கள் விருத்தத் சேதனம் செய்யாவிட்டால் உடல் நலம் கெட்டு விடும் என்ற கருத்து உடையவர்கள். இந்த பேச்சை எடுத்தாலே பயந்து நடுங்குவார்கள், அழுக்கு இருக்கும்பா, நல்லா கழுவுங்கப்பா என்று புலம்பித் தள்ளி விடுவார்கள்.

பிளட் கேன்சருக்கு கூட அந்த அளவுக்கு பயப்பட மாட்டார்கள் , நுனித் தோலுக்குள் உள்ள அழுக்குக்கு அப்படி அஞ்சுவார்கள். நகத்தில் கூட அழுக்கு உள்ளது, முடியிலே அழுக்கு உள்ளது, ஏன் இவ்வளவு பயப்படுறீங்க என்றால் கூட, சிறுநீர் போனா நல்லா கழுவிடுங்கப்பா, இல்லன்னா ரொம்ப பிரச்சினை ஆகி விடும் என்று ஜன்னி கண்டது போல பேசுவார்கள்.

thiruchchikkaaran said...

அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவின் அடிப்படையிலேயே கருத்து சொல்ல முடியும். குயவர் சட்டி பானை செய்வதைப் பார்த்து விட்டு, கடவுள் இதே போல உலகத்தைப் படைத்தார் என்று சும்மா எடுத்து விட முடியாது.


பெரிய படிப்பு படித்து விட்டு குருட்டுத் தனமாக அப்படியே ஒத்துக் கொள், கேள்வி, நிரூபணம் எல்லாம் கேட்கக் கூடாது என்று கட்டையைக் காட்டி பயமுறுத்துபவர்களை விட, ஸ்கூலுக்கே போகாமல் ஆனால் சிந்திக்காமல் எதையும் அப்படியே ஒத்துக் கொள்ள மறுப்பவர் அறிவின் வழி செல்பவர் ஆவார்.

என்னுடைய நெருங்கிய தோழர்கள் விருத்தத் சேதனம் செய்யாவிட்டால் உடல் நலம் கெட்டு விடும் என்ற கருத்து உடையவர்கள். இந்த பேச்சை எடுத்தாலே பயந்து நடுங்குவார்கள், அழுக்கு இருக்கும்பா, நல்லா கழுவுங்கப்பா என்று புலம்பித் தள்ளி விடுவார்கள்.

பிளட் கேன்சருக்கு கூட அந்த அளவுக்கு பயப் பட மாட்டார்கள் , நுனித் தோலுக்குள் உள்ள அழுக்குக்கு அப்படி அஞ்சுவார்கள். நகத்தில் கூட அழுக்கு உள்ளது. முடியிலே அழுக்கு உள்ளது, ஏன் இவ்வளவு பயப்படுறீங்க என்றால் கூட, சிறுநீர் போனா நல்லா கழுவிடுங்கப்பா, இல்லன்னா ரொம்ப பிரச்சினை ஆகி விடும் என்று ஜன்னி கண்டது போல பேசுவார்கள்.

suvanappiriyan said...

திரு நோ!

//நண்பர் திரு சுவன்னப்பிரியன் போன்ற பகுத்தறிவு உள்ள வகாபி மத விரும்பிகள் சந்தோஷம் படும்படியான விடயங்கள் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்து வருகின்றது.//

நல்ல விஷயங்கள் வந்து மாற்றங்கள் வந்தால் நல்லதுதானே மிஸ்டர் நோ!

//பிரான்சில் படுதா போட தடை வந்த பொழுது அதை எதிர்த்து இங்கு சென்னையில் மீட்டிங் போட்ட வகாபிகள்,//

நான் சொல்வதை விட தினமலர் சொன்னால் உங்களுக்கு உடனே விளங்கும். இதற்குதான் இஸ்லாம் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்புக்காக மேலதிகமாக சில உடைகளை கொடுக்கிறது. விரும்பி முஸ்லிம் பெண்கள் அணியும் போது அதை தடுப்பது நியாயமா? உயிர் போன அந்த பள்ளி சிறுமியின் நிலைக்கு உடை குறைப்புதானே காரணம்.

“வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை”.- தின மலர்

இப்படி நிறைய பேசலாம். நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

குடுகுடுப்பை said...

சௌதியில் உட்கார்ந்திருக்கும் இந்தியாவை சேர்ந்த பல பல இஸ்லாமிய நண்பர்கள், அங்கே இருக்கும், பிழைக்க வந்த சக நாட்டு இந்து மற்றும் கிருத்துவர்களின் மத சுதந்திரத்திற்க்காக ஒரு முறையானாலும் குரல் கொடுத்துர்ப்பார்களா??? மலேசியாவில் குரல் கொடுத்தார்களா?? அல்லது வேறு நாட்டு இஸ்லாமியர்கள் அந்த நாட்டு மைனாரிட்டி மக்கள் படும் அவலத்தை பார்த்து குரல் கொடுத்தார்களா??? //

சுவனப்பிரியன் மேலே உள்ள நோ வின் கேள்விக்கும் கூட பதில் சொல்லலாமே.?

குடுகுடுப்பை said...

ராஜராஜன் ஒரு அரசன், முகம்மது கடவுளின் தூதன் இருவரும் ஒன்றாகமுடியுமா? அடிமை முறை பற்றி கடவுள் முகம்மது மூலம் என்ன சொன்னார்?.

suvanappiriyan said...

திரு நோ!

//சௌதியில் உட்கார்ந்திருக்கும் இந்தியாவை சேர்ந்த பல பல இஸ்லாமிய நண்பர்கள், அங்கே இருக்கும், பிழைக்க வந்த சக நாட்டு இந்து மற்றும் கிருத்துவர்களின் மத சுதந்திரத்திற்க்காக ஒரு முறையானாலும் குரல் கொடுத்துர்ப்பார்களா???//

முதலில் நம்ம நாட்டில் இந்து மக்கள் அனைவரையும் ஆலய பிரவேசம் செய்ய வைத்து விட்டு என்னிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.

முதலில் சவுதி ஒரு இஸ்லாமிய நாடு. இஸ்லாத்துக்கு எதிராகவோ வேறு மதங்களை பரப்புவதற்கோ இங்கு அனுமதியில்லை. இதை ஒத்துக் கொண்டுதான் நாம் இங்கு சவுதிக்கு பணம் சம்பாரிக்க வருகிறோம். இந்து நண்பர்கள் மனைவி மக்களோடு சந்தோஷமாக 10 வருடம் 20 வருடங்கள் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் இம்சைபடுத்தப் பட்டிருந்தால் என்றோ நம் நாடு திரும்பியிருப்பார்கள்.

சவுதியில் மக்கா மதினா தவிர ஏனைய பள்ளிகளில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் கொள்கையை கடைபிடிக்கும் இந்து அன்பர்களை வழிபட அழைத்துச் செல்கிறேன். அதிலும் முதல் வரிசையிலே அவர்களை நிறுத்துகிறேன். அதே அன்பர்களை நமது குடிமகனை நமது நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களின் உள்ளே உங்களால் அனுமதிக்க் முடியுமா? அவர் ஒரு தாழ்த்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் கூட. தீண்டாமை என்ற வர்ணாசிரமக் கொடுமையிலிருந்து விடுபட்டு சர்வ சுதந்திரமாக சவுதியில் வலம் வரும் என் இந்து சகோதரர்களின் மீது உங்களுக்கு அப்படி என்ன சார் வெறுப்பு?

வீட்டுக்கு உள்ளே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். வெளியில் வந்தால் அது அமெரிக்கராக இருந்தாலும், இந்தியராக இருந்தாலும் கறுப்பு அங்கியை அணிந்து கொண்டு அவர்கள் செல்லும் போது நமக்கே ஒரு மரியாதை வரும். இங்கு பெண்மை மதிக்கப்படுகிறது. போற்றப்படுகிறது.

//இஸ்லாமிய நாடுகளில் கிருத்துவர்களை வேட்டையாடும்பொழுது அது தவறு நாங்கள் கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னார்களா?//

பல முஸ்லிம் நாடுகளும் கண்டனம் தெரிவித்ததை நீங்கள் படிக்கவில்லை. சிறுபான்மை மதத்தவரை பாதுகாக்க சட்டமே உள்ளது இஸ்லாத்தில். முகமது நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக வீற்றிருக்கும் போது ஒரு யூதரிடம் தனது கவசத்தை அடமானம் வைத்திருந்தார் என்றால் அங்கு சிறுபான்மையினர் எந்த அளவு சுதந்திரமாக இருந்தனர் என்பது தெரிய வருகிறது.

'மலேசிய இந்துக்களுக்கு இங்கு எந்த குறைவும் இல்லை. நலமுடனே இருக்கிறார்கள்' என்று அந்நாட்டு அமைச்சர் டத்தோ சாமிவேலு கொடுத்த அறிக்கையை நீங்கள் பார்க்கவில்லையா? ஒரு சிலர் நம் நாட்டு இந்துத்வா வாதிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு மலேசியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்ச்சித்தனர். அது தவறு என்று இப்பொழுது பிரச்னை பண்ணியவர்களே உணர்ந்து கொண்டனர்.

NO said...

திறிக்கவேண்டாம் நண்பர் திரு சுவனப்பிரியன் அவர்களே.

ஹிஜாப் மற்றும் படுதா போடுவது என்பது உங்களின் உரிமை. ஆதலால் ஹிஜாப் நல்லதா கெட்டதா என்பது பற்றி அல்ல இந்த தர்க்கம். பேசப்படும் விடயம் என்னவென்றால் பிரான்சில் நடுக்கும் ஹிஜாப் தடைக்கு விடயத்திற்காக இங்கே கலாட்டா செய்யும் இஸ்லாமியர்கள் பற்றிதான். சமூக நீதி மற்றும் மைனாரிட்டி உரிமை பேசும் அதே கும்பல்கள் அதே மற்ற மைனாரிடிகளின் மேல் இஸ்லாமிய நாடுகள் அவிழ்த்துவிடும் வன்முறையை எப்போதாவது கண்டித்தார்களா என்பதுதான் அது!

ஆதலால் இல்லாததை பிடித்துக்கொண்டு அதிலுள்ளவைக்கும் so called உங்கள் மத மேன்மைக்கு முடிச்சு போட்டு என்னிடம் அரை பக்கத்திற்கு லெக்சர் அடிக்க
வேண்டாம். இந்த "எல்லாம் எங்கள் மதத்தில் உள்ளது" "நாங்களே உண்மை" என்ற அறிவற்ற, ஆதிக்க அரேபி ஏகாதிபத்திய பிதற்றல்களை தயவு செய்து
எங்களுக்கு sermon ஆக தரவேண்டாம்!!! எல்லா மதத்திலும் இதைபோல மேலானா "கருத்து களஞ்சியங்கள்" இருக்கிறது. நீங்கள் உங்கள் மதத்தின் பெயரை சொல்லி சும்மா பக்கம் பக்கமாக கிறுக்குவதால் மட்டும் நீங்கள் சொல்லும் "உண்மை" உண்மையாகாது!!!

The fanatic is so sure, he thinks the skewed world in his mind is what it is in his front. By such folly, he cheats not only the world, but also himself. For the life is so short and the truths are so obvious, the last thing the Human mind wants is an explanation of this wonderfull universe through the rantings of a few medieval men and their meaningless writings. So, let go your god fever and such irrational fervor, for what you are loosing as a Human is what you will never get again!! ------ NO

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//என்னுடைய நெருங்கிய தோழர்கள் விருத்தத் சேதனம் செய்யாவிட்டால் உடல் நலம் கெட்டு விடும் என்ற கருத்து உடையவர்கள். இந்த பேச்சை எடுத்தாலே பயந்து நடுங்குவார்கள், அழுக்கு இருக்கும்பா, நல்லா கழுவுங்கப்பா என்று புலம்பித் தள்ளி விடுவார்கள்.//

நல்ல விஷயம் யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே சார். எனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு(பகுத்தறிவாதி) தனது மகன் பாவலனுக்கு சுன்னத் செய்திருக்கிறார். விருத்த சேதனத்தின் பலனை உணர்ந்தவர்கள் தானாக முன் வருவார்கள். இன்னும் மருத்துவரை நீங்கள் அணுகவில்லை என்று நினைக்கிறேன்.

தருமி said...

//he cheats not only the world, but also himself.//

மிகச்சரி - புரிந்து கொண்டோருக்கு.

தருமி said...

//நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக வீற்றிருக்கும் போது ஒரு யூதரிடம் தனது கவசத்தை அடமானம் வைத்திருந்தார் என்றால் அங்கு சிறுபான்மையினர் எந்த அளவு சுதந்திரமாக இருந்தனர் என்பது தெரிய வருகிறது. //

1. யூதர்கள் பயங்கர வட்டி வியாபாரம் செய்வார்கள் என்பது உண்மையோ பொய்யோ .. அதை நிறுவ இந்த ”உண்மை” மிக அவசியம்.

2. ”இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில்” சிறுபான்மையர் அதுவும் யூதர், கிறித்துவர்களின் நிலை என்பதை என் அடுத்த பதிவில் ‘கொஞ்சம்’ சொல்கிறேனே...

தருமி said...

//நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக வீற்றிருக்கும் போது ..//

ஏசு தான் பலியிடப்படப் போகும் நேரத்தில் ‘என் ராஜ்யம் இந்த உலகத்தைச் சார்ந்ததல்ல’ என்று கூறியதாக கிறித்துவர்கள் சொல்கிறார்கள்.. நல்ல வசனம் தான்.. இல்லீங்களா? ஏன்னா கடவுளின் / அல்லாவின் வழியைச் சொல்ல வந்தவர் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் முகம்து ஒரு வியாபாரி --> கடவுளின் தூதர் என்ற ‘சுய அறிவிப்பு --> இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்காக பல போர்கள் --> இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவி, “ராஜா” ஆகி விடுகிறார்... இல்லை , சக்கரவர்த்தி!!

முதல் கதை கேட்க நல்லா இருக்கு; இரண்டாவது நிச்சயமாக நன்றாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை!

NO said...

Things are already amusing when a religious fanatic starts making a point. It gets more than amusing when he knows his diatribe and crap is not being taken seriously. The way he fumes and spites one and all with absolute conviction on the correctness and supremacy of his faith clearly points out to a growing breed of know nothings that would not hesitate to bring harm on any one that do not follow their line of thought and their brand of god!
Based on what we see today and what we see in people like Mr. Suvanapiriyan, I am starting to think that the likes of Taliban, Osama and Al Qaida are not just aberrations in an otherwise calm environment. Whereas it looks like they are all continuous product of a mind bending machine which has now attained such legitimacy even among so called moderates.
Mr. Suvanapiriyan and others are no blind people. They have not been programmed to rant as they perfectly know what they are doing. Looks like they have taken it to themselves to be a part of such venomous and supremacist critical mass, that rejoices in the claiming such superiority over all others. Not stopping at that they provide the seed for more of them to grow and thrive.
The bottom line is that the weapons of mass delusion like this are now getting manufactured at a fervent phase ; This time around they are being made with blood and flesh but with little brains!!!

suvanappiriyan said...

திரு நோ!

//சௌதி மசூதிகளில், கிருத்துவத்தை பற்றியும், யூதம் பற்றியும் மிக கேவலமான சொற்பொழிவு ஆற்றுவார்கள். நம்ம ஊரு சலாபிகளை கேட்டால், நாங்கள் இயேசுவை மதிக்கிறோம் என்பார்கள். ஆனால் சத்தம் போட்டு கும்பல் கூட்டி சௌதியில் திட்டுவார்கள். இந்து மதத்தை பற்றி ஒரு நாள் மிக கேவலமாக பேசியதை அங்கே இருந்த நண்பர் ஒருவர் சொன்னார். மிக தரமிழந்த கிண்டல் மற்றும் கேலி.//

இங்கு நம் நாட்டில் பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தை காய்ச்சி எடுப்பது போல் உலகில் வேறு யாரும் அதிகமாக செய்து விடவில்லை. ஏன் தன் மதத்தையே இவர்கள் இந்த அளவு விமரிசிக்க வேண்டும்? ஏனெனில் அந்த அளவு குறை பாடு உடையதாக இந்து மதம் இருக்கிறது. நான் பகுத்தறிவாதி என்று ஒருவன் இந்து மதத்திலிருந்து ஒதுங்கினாலும் 'பகுத்தறிவாதி என்று நீ சொன்னாலும் நீயும் இந்துதான்' என்று ஆக்டோபஸைப்போல் அவனையும் இறுக்கிக் கொள்கிறது இந்து மதம். சங்கடமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. என்னுடைய நாட்டில் உருவான ஒரு மதத்தை விடுத்து அரபு நாட்டில் ஆரம்பித்த முகமது நபியின் போதனையை ஏற்றுக் கொள்ள் என் முன்னோர்களுக்கு என்ன அவசியம் வந்தது?

மேலும் இஸ்லாம் சவுதிக்கு வருவதற்க்கு முன்பு இங்கும் நம் நாட்டைப் போன்ற சிலை வணக்கம்தான் கொடி கட்டி பறந்தது. அதை அவர்கள் விமரிசித்தால் அது நம் நாட்டைக் குறிப்பதாக யாரும் தவறாக விளங்கியிருக்கலாம்.

தருமி!

மற்றவர்களின் பின்னூட்டங்களை அனுமதித்து என் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதின் மூலம் உங்களிடம் பதில் இல்லை என்று தெளிவாகிறது. நீங்கள் வெளியிடா விட்டாலும் அவை அனைத்திற்க்கும் பதில் என் தளத்தில் வெளியாகும்.

வாழ்க பகுத்தறிவு! :-(

தருமி said...

//மற்றவர்களின் பின்னூட்டங்களை அனுமதித்து என் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதின் மூலம்....//

என்ன சுவனப்பிரியன்
உங்கள் பின்னூட்டத்தை நான் மட்டுறுத்தியுள்ளேனா ... தவறு. அப்படி ஏதும் நான் செய்யவில்லை; 200 பின்னூட்டங்களை அடுத்து மற்றவை அடுத்த பக்கத்தில் தொடர்கின்றன. நானும் இதைப்போல் சில பின்னூட்டங்கள் வரவில்லையே என்று குழம்பி நின்றேன். நீங்களும் அது போல்தானோ ...?

//இன்னும் மருத்துவரை நீங்கள் அணுகவில்லை என்று நினைக்கிறேன்...//

இப்படி முடிவதுதானேநீங்கள் கடைசியாக எழுதிய பின்னூட்டம்? i have checked your last comment; this is the one. இதுவும் இருக்கே...

இதுக்கெல்லாம் ஏன் பகுத்தறிவின் மேல் உங்களுக்குக் கோபம்? ”கடவுளின் / அல்லாவின் தவறு” என்று நான் எழுதியதற்காக என் பின்னூட்டத்தை மறுத்தது போல் நான் மறுப்பது இல்லையே!

தருமி said...

சுவனப்பிரியன்,
ஒருவேளை ஏதேனும் விடுபட்டிருந்தால் (இல்லையென்று பார்த்துவிட்டேன்.)மறுபடியும் தெரிவியுங்கள்.

thiruchchikkaaran said...

85.1 O Prophet, when you [Muslims] divorce women, divorce them for [the commencement of] their waiting period and keep count of the waiting period, and fear Allah , your Lord. Do not turn them out of their [husbands'] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality. And those are the limits [set by] Allah . And whoever transgresses the limits of Allah has certainly wronged himself. You know not; perhaps Allah will bring about after that a [different] matter.


65.2 And when they have [nearly] fulfilled their term, either retain them according to acceptable terms or part with them according to acceptable terms. And bring to witness two just men from among you and establish the testimony for [the acceptance of] Allah . That is instructed to whoever should believe in Allah and the Last day. And whoever fears Allah - He will make for him a way out

65.3And will provide for him from where he does not expect. And whoever relies upon Allah - then He is sufficient for him. Indeed, Allah will accomplish His purpose. Allah has already set for everything a [decreed] extent.


65.4And those who no longer expect menstruation among your women - if you doubt, then their period is three months, and [also for] those who have not menstruated. And for those who are pregnant, their term is until they give birth. And whoever fears Allah - He will make for him of his matter ease.


65.5 That is the command of Allah , which He has sent down to you; and whoever fears Allah - He will remove for him his misdeeds and make great for him his reward.

65.6 Lodge them [in a section] of where you dwell out of your means and do not harm them in order to oppress them. And if they should be pregnant, then spend on them until they give birth. And if they breastfeed for you, then give them their payment and confer among yourselves in the acceptable way; but if you are in discord, then there may breastfeed for the father another woman.

thiruchchikkaaran said...

5261. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்து) 'முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும் வரையில் முடியாது' என்று கூறிவிட்டார்கள்.13

http://www.tamililquran.com/bukhari.asp?start=5251


5264. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், 'ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் (திரும்ப அழைத்துக்கொள்ளலாமே!) ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள். 19 ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும் வரை உனக்கு அவள் விலக்கப்பட்டவளாக ஆம்விடுவாள்' என்று பதிலளிப்பார்கள்.
Volume :6 Book :68

thiruchchikkaaran said...

5258. யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)' என்று கேட்டேன்

அதற்கு அவர்கள், 'இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று உங்களுக்குத் தெரியும்.
நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்து என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். எனவே, (என் தந்தை) உமர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால் அவளை அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்' என உத்தரவிடுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் கூறுகிறார்:
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (மனைவி மாதவிடாயிலிருந்தபோது தாங்கள் அளித்த மணவிலக்கை) நபி(ஸல்) அவர்கள் 'தலாக்' என்றே கருதினார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?' என்று கேட்டார்கள்.6

http://www.tamililquran.com/bukhari.asp?start=5251

suvanappiriyan said...

தருமி!

//200 பின்னூட்டங்களை அடுத்து மற்றவை அடுத்த பக்கத்தில் தொடர்கின்றன. நானும் இதைப்போல் சில பின்னூட்டங்கள் வரவில்லையே என்று குழம்பி நின்றேன். நீங்களும் அது போல்தானோ ...?//

உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் தான் தவறு என் மேல் என்று தெரிந்தது. தவறுக்கு வருந்துகிறேன். நாளை வந்து உங்களுக்கும், நோவுக்கும், திருச்சிக்காரனுக்கும் பதிலளிக்கிறேன். குடுகுடுப்பை கேட்ட கேள்விகளுக்கு நோவுக்கு கொடுத்த பின்னூட்டத்திலேயே பதில் இருக்கிறது.

////he cheats not only the world, but also himself.

மிகச்சரி - புரிந்து கொண்டோருக்கு.//

இந்து மதத்திலேயே எங்களால் போராடி வெற்றியைப் பெற்று விட முடியும் என்ற எண்ணத்தில் இருக்கும் திருச்சிக்காரன் போன்ற பிராமணர்களைத் தவிர்த்த பிற்ப்படுத்தப் பட்ட மக்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது. இடம் மாறி வந்திருக்கிறது.

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//ராஜராஜன் ஒரு அரசன், முகம்மது கடவுளின் தூதன் இருவரும் ஒன்றாகமுடியுமா? அடிமை முறை பற்றி கடவுள் முகம்மது மூலம் என்ன சொன்னார்?.//

ராஜராஜன் அடிமை முறையை நம் நாட்டுக்கு கொண்டு வருகிறான். பெரிய கோவிலை கட்டியதே அடிமைகளின் உழைப்பை வைத்துதான் என்று வரலாறு கூறுகிறது. முகமது நபி இருந்த அடிமைகளின் வாழ்க்கையை மேம்படுத்தி அவருடைய காலத்திலேயே அடிமைகள் அற்ற சமூகத்தை உருவாக்கி விட்டு செல்கிறார். இரண்டும் ஒன்று என்கிறீர்களா?

'நன்மை தீமை என இரு வழிகளை நாம் மனிதனுக்கு காட்டவில்லையா? அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்று நபியே உமக்கு எப்படி தெரியும்? அடிமையை விடுதலை செய்தலும் நெருங்கிய உறவுடைய அனாதைக்கும் அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தலும்...போன்றவைகளே கணவாய்'
-குர்ஆன்: 90:10,11,12

தீமை என்ற கணவாயைக் கடப்பதில் ஒன்று அடிமையை விடுதலை செய்வது. இது போன்று பல வசனங்கள் உள்ளன.

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//ராஜராஜன் ஒரு அரசன், முகம்மது கடவுளின் தூதன் இருவரும் ஒன்றாகமுடியுமா? அடிமை முறை பற்றி கடவுள் முகம்மது மூலம் என்ன சொன்னார்?.//

ராஜராஜன் அடிமை முறையை நம் நாட்டுக்கு கொண்டு வருகிறான். பெரிய கோவிலை கட்டியதே அடிமைகளின் உழைப்பை வைத்துதான் என்று வரலாறு கூறுகிறது. முகமது நபி இருந்த அடிமைகளின் வாழ்க்கையை மேம்படுத்தி அவருடைய காலத்திலேயே அடிமைகள் அற்ற சமூகத்தை உருவாக்கி விட்டு செல்கிறார். இரண்டும் ஒன்று என்கிறீர்களா?

'நன்மை தீமை என இரு வழிகளை நாம் மனிதனுக்கு காட்டவில்லையா? அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்று நபியே உமக்கு எப்படி தெரியும்? அடிமையை விடுதலை செய்தலும் நெருங்கிய உறவுடைய அனாதைக்கும் அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தலும்...போன்றவைகளே கணவாய்'
-குர்ஆன்: 90:10,11,12

தீமை என்ற கணவாயைக் கடப்பதில் ஒன்று அடிமையை விடுதலை செய்வது. இது போன்று பல வசனங்கள் உள்ளன.

suvanappiriyan said...

நோ!

//சமூக நீதி மற்றும் மைனாரிட்டி உரிமை பேசும் அதே கும்பல்கள் அதே மற்ற மைனாரிடிகளின் மேல் இஸ்லாமிய நாடுகள் அவிழ்த்துவிடும் வன்முறையை எப்போதாவது கண்டித்தார்களா என்பதுதான் அது! //

சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் விரும்பும் பர்தாவை தடுப்பதை எதிர்ப்பதற்க்கும் இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்தும் ஒரு இஸ்லாமிய நாடு தனது சட்டத்தை செயல்படுத்துவதற்க்கும் பெருத்த வேறுபாடு உண்டு நண்பரே!

இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்களை திட்டம் போட்டு கொன்று குவித்த நரேந்திர மோடியை எதிர்த்து இதுவரை நீங்கள்(இந்துத்துவா வாதிகள்)ஏன் ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை என்று நானும் எதிர்க் கேள்வி கேட்க முடியும்.

//சும்மா பக்கம் பக்கமாக கிறுக்குவதால் மட்டும் நீங்கள் சொல்லும் "உண்மை" உண்மையாகாது!!!//

அதாவது அந்த உண்மை உங்களை குஷிப்படுத்துவது போல் இருக்க வேண்டும். எப்படியோ உண்மை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

//For the life is so short and the truths are so obvious, the last thing the Human mind wants is an explanation of this wonderfull universe through the rantings of a few medieval men and their meaningless writings.//

நீங்கள் சொல்லும் அதே கருத்தைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

'நம்பிக்கைக் கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் தமது பிரார்த்தனையில் பணிவைப் பேணுவார்கள். வீணாண பேச்சுக்களைப் புறக்கணிப்பார்கள்'-குர்ஆன் 23:1,2,3

'இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப்பூச்சியைப் போன்றது. அது ஒரு வீடை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலவீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?' -குர்ஆன் 29:41

மனிதர்கள் கிறுக்கி வைத்ததை எல்லாம் விடுத்து குர்ஆன், பைபிள்,தோரா, ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் கூறும் அந்த ஏக இறைவனை வணங்கி மனிதர்களில் பேதங்களை கற்ப்பிக்க வேண்டாம் என்கிறோம்.

suvanappiriyan said...

///நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக வீற்றிருக்கும் போது ..//

ஏசு தான் பலியிடப்படப் போகும் நேரத்தில் ‘என் ராஜ்யம் இந்த உலகத்தைச் சார்ந்ததல்ல’ என்று கூறியதாக கிறித்துவர்கள் சொல்கிறார்கள்.. நல்ல வசனம் தான்.. இல்லீங்களா? ஏன்னா கடவுளின் / அல்லாவின் வழியைச் சொல்ல வந்தவர் அதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் முகம்து ஒரு வியாபாரி --> கடவுளின் தூதர் என்ற ‘சுய அறிவிப்பு --> இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்காக பல போர்கள் --> இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவி, “ராஜா” ஆகி விடுகிறார்... இல்லை , சக்கரவர்த்தி!!

முதல் கதை கேட்க நல்லா இருக்கு; இரண்டாவது நிச்சயமாக நன்றாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை!///

நீங்களே அதை கதை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். ஏசுவின் உண்மையான வரலாறை படித்தீர்களென்றால் இன்றுள்ள கிறித்தவ மதமே ஆட்டம் கண்டு விடும். அதற்க்கான ஆராய்ச்சிகள் பல கிறித்தவர்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது. சீக்கிரமே நல்ல செய்திகளை எதிர்பாருங்கள்.

தருமி said...

//முதல் கதை கேட்க நல்லா இருக்கு; இரண்டாவது நிச்சயமாக நன்றாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை!///

நீங்களே அதை கதை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.//

பாதி பாதியாய் புரிந்து கொள்கிறீர்களே, சுவனப்பிரியன். நான் இரண்டையுமே கதை; அதில் ஒன்று reasonable அடுத்தது அதுவும் இல்லை என்கிறேனே .. ஏன் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள்?!

ஏற்கெனவே சொன்னதைத் திருப்பிச் சொல்கிறேன். ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய நூல் மற்றைய் வரலாறு படித்த பின் எனக்குத் தோன்றுவது குரான் - கடவுளே சொல்லியிருந்தாலும் எழுத்து கூட மாறாத என்று 1400 ஆண்டுகளாகச் சொல்லப்படுவது - இன்னொரு கதை; அவ்வளவே. காரணங்களும் லாஜிக்கும் ஏற்கெனவே பலமுறை சொன்னதுதான்

எத்தனை முறை ஒரே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொன்னாலும் விழித்துப் பார்ப்போருக்கு பொய் பொய்தான்.

suvanappiriyan said...

நோ!

//Based on what we see today and what we see in people like Mr. Suvanapiriyan, I am starting to think that the likes of Taliban, Osama and Al Qaida are not just aberrations in an otherwise calm environment. Whereas it looks like they are all continuous product of a mind bending machine which has now attained such legitimacy even among so called moderates.
Mr. Suvanapiriyan and others are no blind people. They have not been programmed to rant as they perfectly know what they are doing. Looks like they have taken it to themselves to be a part of such venomous and supremacist critical mass, that rejoices in the claiming such superiority over all others.//

தவறான புரிதல். இதை ஒரு சுவனப்பிரியனை மட்டுமே வைத்து மதிப்பிட வேண்டாம். உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரோ இருவரோ நீங்கள் சொல்வது போல் மூளை சலவை செய்வதாக வைத்துக் கொள்வோம். எத்தனை நாளைக்கு தாங்கும்? எத்தனை நாடுகளை அது சென்றடையும்? சில மாதங்களிலேயே சில நாட்களிலேயே முகமது நபி காலத்திலேயே இஸ்லாம் சரிந்து விழுந்திருக்கும்.

நான் முன்பே சொன்னது போல் முகமது நபி யாரும் சொல்லாத ஒரு புது கருத்தையோ கொள்கையையோ இந்த உலகுக்கு கொண்டு வரவில்லை.நம்நாட்டு இந்து மதம், சிறித்தவ மதம், யூத மதம், போன்றவைகளின் வேதங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அனைத்தின் சாயலுக்கும் கருத்துக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் உணர முடியும். ஒரு சில வேதங்களில் மனிதர்களின் கரம் புகுந்தாலும் இறைவனின் வார்த்தைகளும் ஆங்காங்கே சேர்ந்திருப்பதுதான் இந்த ஒற்றுமைக்கு காரணம்.

அடுத்து இஸ்லாத்தில் தீவிர பற்றுடன் இருந்தால் அவர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை பலரிடமும் தவறாக விதைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை ஒருவன் விளங்க வேண்டிய முறையில் விளங்கி தனது வாழ்க்கையிலும் செயல்படுத்த ஆரம்பித்தால் உலகிலேயே சிறந்த மனிதனாக வாழ முடியும். மனதை பக்குவப்படுத்துவதில் இஸ்லாமைப் போன்று வேறு எந்த மார்க்கமும் இந்த அளவு வெற்றியடையவில்லை என்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்.

தாலிபான்கள் இஸ்லாத்தை விட்டு என்றோ சென்று விட்டனர் என்று ஆரம்பத்தில் சொல்லியும் இருக்கிறேன். இஸ்லாத்தை சரியான முறையில் விளங்கி செயல்படுத்துவதில் சவுதி அரேபியா முன்னணியில் நின்று வெற்றியும் பெற்றுள்ளதை உதாரணத்திற்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

thiruchchikkaaran said...

இராஜ இராஜ சோழன் அடிமை முறையை புகுத்தியதாகவோ, அடிமைகளை வைத்து கோவில் கட்டியதாக வரலாறு எங்கே சொல்லி இருக்கிறது? என்ன ஆதாரம்? என்னுடைய நண்பர்கள் கூட சிலர் என்னையா இந்தப் பெரிய கோவில் விடயத்தில் அரசாங்கம் எவ்வளவு பெரிய விழா எடுக்குது என்று சொல்வார்கள். ஏன், அது தமிழர்களுக்கு சிறப்புதானே என்றால், அடப் போப்பா, நம்ப சொந்தக்காரங்க யாரவாது பேர் எடுத்தா நல்லா இருக்கும் என்பார்கள். இப்படிப் பட்ட குறுகிய சிந்தனைப் போக்கையும் காண்கிறோம்.



சொந்த மனைவியையே அடிமைகளை விட மோசமாக நடத்த வாய்ப்பு அளித்திருக்கிறது இவர்கள் மார்க்கம். அமெரிக்காவில் அடிமைகளாக உள்ள கறுப்பினப் பெண்டிரை வெள்ளைக்கார முதாலாளி இன்னொரு வெள்ளை முதலாளிக்கு விற்று விடுகிறான். குழந்தைகள் , கணவனை விட்டு அவள் பிரிய வேண்டியதுதான், கண்ணீரும் கம்பலையும் தான். மார்க்கத்திலோ, சொந்தக் கணவனே மனைவியை வெளியே போகும்படி சொல்லி விட முடியும். தன்னுடைய குழந்தைகளை விட்டு அவள் பிரிந்து செல்ல வேண்டும். பாலூட்ட வேண்டிய குழந்தையைக் கூட விட்டுப் பிரிய வேண்டியதுதான். கணவன் (முன்னாள் கணவன்)நினைத்தால் சொந்த அன்னையை அழைத்து பாலூட்ட சொல்லி விட்டு அதற்க்கு கூலி கொடுக்கலாமாம். அல்லது கணவன் (முன்னாள் கணவன்) விரும்பாவிட்டால், வேறு யாரையாவது அழைத்து பாலூட்ட சொல்லலாமாம். சொந்த மனைவியை, தன உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த மனைவியை , தன்னையே நம்பிய மனைவியை அடிமையப் போல நடத்தும், விரட்டி அடிக்கும் முறைதான் சொல்லப் பட்டு உள்ளது.இது நியாயமா, மனித நேயமா, மனதில் கொஞ்சமாவது இரக்கம் இருந்தால் இப்படிப் பட்ட முறைகள் வருமா? சிந்தித்துப் பாருங்கள். கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் கருணை உள்ளவராக இருந்தால், இப்படி ஒரு வழியைத் தருவாரா? கடவுள் என்ற கான்செப்டை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் சொல்லி விட முடியும், எதிர்த்துப் பேச இயலாது என்பதையே இது காட்டுகிறது. இதை எல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். நம்மையும் அது போல ஆக்க விரும்புகின்றனர்

அடிமை முறை, போரில் சிக்கியவரைப் படித்து அடிமையாக்கிக் கொள்ளுவது, போரில் சிக்கிய பெண்களை அடிமைப் பெண்களாக்கி அனுபவிப்பது என்று எல்லா வகையான அடிமை முறைக்கும் அங்கீகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது.

இங்கே நாம் எல்லாம் சிந்திக்கத் தெரியாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டு கற்கால கொடுமைகளை நாகரீகம் போல சொல்லி, ஒத்துக்க என்று மிரட்டி, ஒத்துக்காவிட்டால் நீ அம்பி, ஆர்.எஸ்.எஸ். அம்பி , நீ பிராமணன் என்றெல்லாம் உருட்டி மிரட்டி நம் தலையில் கற்கால கொடுமைகளை கட்டப் பார்க்கிறார்கள். கொல்லரிடம் வூசி விற்க முயல்கிறார்கள்.

Ganesan said...

//ராஜராஜன் அடிமை முறையை நம் நாட்டுக்கு கொண்டு வருகிறான். //
சுவன பிரியன், இராஜ இராஜனுக்கு முன் நம் நாட்டில் அடிமைகள் இருக்கவில்லை என்று சொல்கிறிர்களா? அவர் தான் அடிமை முறையை நம் நாட்டிற்கு கொண்டு வந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

//உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரோ இருவரோ நீங்கள் சொல்வது போல் மூளை சலவை செய்வதாக வைத்துக் கொள்வோம். எத்தனை நாளைக்கு தாங்கும்? எத்தனை நாடுகளை அது சென்றடையும்? சில மாதங்களிலேயே சில நாட்களிலேயே முகமது நபி காலத்திலேயே இஸ்லாம் சரிந்து விழுந்திருக்கும்.//

//ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். //

மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்களும் உங்களுடையதே. இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. பவுலால் 1600 ஆண்டுகள் கிறிஸ்துவர்களை ஏமாற்ற முடியும் என்றால், முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)

தருமி said...

//முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)//

செம லாஜிக்!

thiruchchikkaaran said...

இயேசுவின் வரலாற்றைப் பற்றி என்ன புதிய தகவல் வந்தால் என்ன? அவருடைய கோட்பாடு என்ன சொல்லுகிறது என்று பாருங்கள்.

என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுவதல்லாமல் கொள்கைகளைப் பின்பற்றுவதுதான் முக்கியம் எனற வகையிலே சொல்லி உள்ளார். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும், பசியாக இருக்கும் ஒருவருக்கு உண்ணக் கொடுத்தது எனக்கு கொடுத்தது போல என்று சொல்லி இருக்கிறார். இது நல்ல கொள்கை தானே. ஒரு பெண்ணை துணைவியாக ஏற்று, அவளை ஆண்டு அனுபவித்து, தன் கணவனை உயிரினும் மேலாகக் கருதி உள்ள அவளை விவாகரத்து செய்து விரட்டக் கூடாது, பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் - இது நல்ல கோட்பாடா, ஈவு இரக்கம் காட்டாமல் விவாகரத்து செய்து விரட்டுவது நல்ல கோட்பாடா?

அவருக்கு முன்னால் இருந்த யூத முக்கியஸ்தர் மோசஸ்.மோசஸ் தள்ளுதல் சீட்டை கொடுத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்டபோது, அதற்க்கு இயேசு உங்கள் மனக் கடினத்தின் நிமித்தம் அப்படி சொன்னார் என்றார்.

இவ்வாறாக மக்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகும் படி மோசஸ் பல கட்டளைகளைப் போட்டு அவற்றை எல்லாம் கடவுள் சொன்னதாக காட்டி விட்டனர்.

மோசஸ் காலத்தில் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று சொன்ன கடவுளுக்கு ஜீசஸ் காலத்தில் மனைவியை விரட்டி விடாதே என்று மனம் மாறி விட்டதா? திரும்பவும் 750 வருடம் கழித்து மனம் மாறி விவாகரத்து கொடுக்க சொல்லி விட்டாரா?

சமுதாயங்களி உருவாக்க அந்த சமுதாயத் தலைவர்கள் போட்ட சட்டங்களே இவை. இதை இயேசு தெளிவாக உங்கள் மனக் கடினத்தை ஒட்டியே அப்படி மோசஸ் சொன்னார் என்று -இதிலே கடவுள் எந்த சட்டமும் போடவில்லை, உங்களோடு மல்லுக்கு நிற்க முடியாமல் சரி போ, தள்ளுதற் சீட்டை கொடுத்து தொலை என்று மோசஸ் சொன்னதாக தெளிவாகப் பேசி உண்மையை வெளிப் படுத்தி விட்டார்.எனவே இதிலே "கடவுள்" எதுவும் சொல்லவில்லை. எல்லாம் இவர்களாக சொன்னதுதான்.



இந்த இலட்சணத்தில் கட்டுப்பாடு பற்றி இவர்கள் பேசுகிறார்கள். எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கட்டுப்பாட்டுடன் குடும்ப வாழ்க்கை வாழும் அமைதியானவன் இந்தியவன். காலை முதல் மாலை வரை உழைக்கிறான். இரவு அமைதியாக் குடும்பத்துடன் காஞ்சி குடிக்கிறான். இன்றும் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் குழந்தைகள் வீடு வந்திருக்குமோ என்பது போன்ற கவலைகளுடன், அலுவலகத்தில் இருந்து மாலையில் விரைவாக வீடு திரும்புகின்றனரே அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

கண்ணகி, சீதை, சித்தூர் பத்மினி காட்டாத கட்டுப் பாட்டை இவர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்க வருகிறார்களா? நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள், சென்னையிலோ, திருச்சியிலோ ஒரு தெருவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே எத்தனை பேர் குடுமபத் தோடு கட்டுப் பாடாக வாழ்கிறான், யாராவது கட்டுப் பாடு இல்லாமல் இருக்கிறானா என்று பார்த்துக் கொள். இந்தியாவில் இருக்கும் 120 கோடி பெரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஒம்புகிறார்கள் என்று சொல்ல வரவில்லை. பெரும்பாலான மக்கள் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சொல்லலாம். எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!

thiruchchikkaaran said...

please read as-எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் என்று வாழ்வதையே விரும்புவான். விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!

suvanappiriyan said...

கணேசன்!

//உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரோ இருவரோ நீங்கள் சொல்வது போல் மூளை சலவை செய்வதாக வைத்துக் கொள்வோம். எத்தனை நாளைக்கு தாங்கும்? எத்தனை நாடுகளை அது சென்றடையும்? சில மாதங்களிலேயே சில நாட்களிலேயே முகமது நபி காலத்திலேயே இஸ்லாம் சரிந்து விழுந்திருக்கும்.//-suvanappiriyan

//ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். //
-suvanappiriyan

மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்களும் உங்களுடையதே. இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. பவுலால் 1600 ஆண்டுகள் கிறிஸ்துவர்களை ஏமாற்ற முடியும் என்றால், முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)//

//செம லாஜிக்!//- -தருமி//

இதுல லாஜிக் எங்கே இருக்கிறது? பவுல் கட்டிய கற்பனைக் கோட்டைகள் காலப் போக்கில் சிதைந்ததால்தான் நாத்திகத்திற்கு சென்று கடவுளை மறுத்து பதிவுகளாக எழுதி வருகிறார் தருமி! இந்து மதத்தைப் போலவே கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.

அதே நேரம் இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கு முகமது நபியால் அஸ்திவாரம் பலமாக போடப்பட்டு சென்றதால் சுவனப்பிரியனான நானும் மற்றவர்களும் இறைவனின் பெருமையை பதிவுலகில் பதித்து வருகிறோம். இதில் மட்டும் உண்மை இல்லாமல் இருந்திருந்தால் தருமி, நேசகுமார், ஐக்,நீலகண்டன் போன்றோரின் சாதுர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் இணையத்தை விட்டு என்றோ நான் ஓடியிருப்பேன். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே நேரத்தில் தக்க பதிலை குர்ஆன் வழங்கி வருவதை அனைத்து பின்னூட்டங்களிலும் பார்க்கிறீர்கள்தானே!

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பெயரளவில்தான் உள்ளது. அதற்கு காரணம் ஏசு நாதர் சொன்ன உண்மை மார்க்கத்தை விட்டு பவுலின் மார்க்கத்தை கையில் எடுத்ததன் விளைவை இன்று அனுபவிக்கிறது கிறித்தவ உலகம்.

அதே நேரம் முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட துனீஷியாவிலும் எகிப்திலும் மாற்றங்கள் வந்து விட்டன. இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டு உண்மை முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி வந்திருக்கிறது. மக்களும் அதை விரும்புகிறார்கள். ஏமனிலும், பஹ்ரைனிலும்,ஜோர்டானிலும்,லிபியாவிலும் இஸ்லாத்தின் தாக்கம் ஆடசியாளர்களையே கதிகலங்க வைத்திருக்கிறது. சவூதியைப் போல் அந்த ஆட்சியாளர்களும் குர்ஆனை முதன்மைபடுத்தி ஆட்சி செய்திருந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டிருக்காது.

என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைதி சவூதி ஆட்சியாளர்களின் திறமையினால் வந்தது அல்ல. முற்றிலும் அவர்கள் ஆட்சிக்கு அஸ்திவாரமாக கொண்டிருக்கும் முகமது நபியின் வழிகாட்டுதனால் வந்தது.

தணல் said...

I love these arguments!! Thanks to Dharumi sir for the initiation.

ராபர்ட் க்ளைவ் நல்லவர், ஜெனரல் டயர் மிக மிக நல்லவர். இது போக,
தருமி சார் மற்றும் வால்பையன் - ஆர் எஸ் எஸ் அம்பிகள். சரிதானே நான் புரிந்து கொண்டது :-௦

கடவுளே கடவுளே.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//please read as-எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் என்று வாழ்வதையே விரும்புவான். விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!//

ஏதோ பெரிய தத்துவத்தை சொன்னதுபோல் இரண்டாவது முறையாக வேறு குறிப்பிடுகிறீர்கள்? ஐயா...நீங்கள் கடவுளாக வணங்கும் முருகனுக்கு வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவி இல்லையா? பதி விரதன்(?) ராமனின் தந்தைக்கு 6000 மனைவிகளாம். இன்னும் உங்களின் கடவுள் கண்ணபிரான் செய்த லீலைகளை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடவுளுக்கே இந்த கதி என்றால் மன்னர்களையும் மக்களையும் பற்றி சொல்லவே வேண்டாம். ராஜராஜசோழனுக்கு வைப்பாக இருந்தவர்களின் வாரிசுகளுக்கென்றே தஞ்சையில் ஒரு தெருவே இருக்கிறது. நமது முதலமைச்சருக்கு மூன்று மனைவிகள். அதற்கு முன்னால் எம்.ஜி.ஆருக்கு இரண்டு மனைவிகள்.(கணக்கில் வராதது எத்தனையோ...:-)) எனவே இந்த ஆண் பெண் உடலுறவு என்பது எல்லா நாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நானும் தமிழன்தான். எனவே என் இனத்தைப் பற்றி நான் நன்றாகவே அறிவேன். இஸ்லாத்துக்கு மாறியும் கூட தமிழகத்தில் எத்தனை முஸ்லிம்கள் பலதார மணத்தை கடைபிடிக்கிறார்கள்? கணக்கெடுத்தால் நூற்றில் ஒன்று கூட தேறாது. ஆனால் மற்ற சமூகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சின்ன வீட்டு பிரச்னை நீக்கமற நிறைந்திருப்பதை பார்க்கிறோம்.

காரணம் என்ன? இந்து மதம் அனுமதிக்காததால் அவர்கள் சின்ன வீடு என்ற தவறான வழிக்கு செல்கிறார்கள். இதை வைத்து பாக்யராஜ் ஒரு படமும் எடுத்திருக்கிறார். அந்த பெண்ணும், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்த குடும்பம் எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கும் என்பதை ஒரு படத்தில் மணிரத்னம்(அக்னி நட்சத்திரம்) கார்த்திக் மூலமாக சொல்லியிருப்பார். எந்த ஒரு கொள்கையும் காலாகாலத்துக்கும் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அடுத்து விவாகரத்து பிரச்னைக்கு வருவோம்.

ஒருவன் மூன்று முறை ஒரு பெண்ணை பல்வேறு காலகட்டங்களில் தலாக்(விவாகரத்து) சொல்லி விட்டால் மனைவியோடு நிரந்தரமாக பிரிகிறான். இரண்டு முறை மடடுமே அவன் தலாக் சொல்லியிருந்தால் பழையபடி மனைவியோடு சேர்ந்தே வாழலாம். விவாகரத்தை ஆண்கள் விளையாட்டாக செய்து விடக் கூடாது. அதில் இப்படி ஒரு கண்டிஷன் இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற கருத்திலேயே சொல்லப்பட்டது. விவாகரத்தை சிரமமாக்கியதால்தான் இந்து குடும்பங்களில் 'ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு' என்ற செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம்.

suvanappiriyan said...

Ganesan!

//மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்களும் உங்களுடையதே. இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. பவுலால் 1600 ஆண்டுகள் கிறிஸ்துவர்களை ஏமாற்ற முடியும் என்றால், முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)////

//செம லாஜிக்!//- -தருமி//

இதுல லாஜிக் எங்கே இருக்கிறது? பவுல் கட்டிய கற்பனைக் கோட்டைகள் காலப் போக்கில் சிதைந்ததால்தான் நாத்திகத்திற்கு சென்று கடவுளை மறுத்து பதிவுகளாக எழுதி வருகிறார் தருமி! இந்து மதத்தைப் போலவே கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.

அதே நேரம் இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கு முகமது நபியால் அஸ்திவாரம் பலமாக போடப்பட்டு சென்றதால் சுவனப்பிரியனான நானும் மற்றவர்களும் இறைவனின் பெருமையை பதிவுலகில் பதித்து வருகிறோம். இதில் மட்டும் உண்மை இல்லாமல் இருந்திருந்தால் தருமி, நேசகுமார், ஐக்,நீலகண்டன் போன்றோரின் சாதுர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் இணையத்தை விட்டு என்றோ நான் ஓடியிருப்பேன். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே நேரத்தில் தக்க பதிலை குர்ஆன் வழங்கி வருவதை அனைத்து பின்னூட்டங்களிலும் பார்க்கிறீர்கள்தானே!

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பெயரளவில்தான் உள்ளது. அதற்கு காரணம் ஏசு நாதர் சொன்ன உண்மை மார்க்கத்தை விட்டு பவுலின் மார்க்கத்தை கையில் எடுத்ததன் விளைவை இன்று அனுபவிக்கிறது கிறித்தவ உலகம்.

அதே நேரம் முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட துனீஷியாவிலும் எகிப்திலும் மாற்றங்கள் வந்து விட்டன. இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டு உண்மை முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி வந்திருக்கிறது. மக்களும் அதை விரும்புகிறார்கள். ஏமனிலும், பஹ்ரைனிலும்,ஜோர்டானிலும்,லிபியாவிலும் இஸ்லாத்தின் தாக்கம் ஆடசியாளர்களையே கதிகலங்க வைத்திருக்கிறது. சவூதியைப் போல் அந்த ஆட்சியாளர்களும் குர்ஆனை முதன்மைபடுத்தி ஆட்சி செய்திருந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டிருக்காது.

என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைதி சவூதி ஆட்சியாளர்களின் திறமையினால் வந்தது அல்ல. முற்றிலும் அவர்கள் ஆட்சிக்கு அஸ்திவாரமாக கொண்டிருக்கும் முகமது நபியின் வழிகாட்டுதனால் வந்தது.

suvanappiriyan said...

Tiruchchikkaran!

"கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர்கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.” - (சங்கீதம் 19:7,8)

"முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.” - (எபிரேயர் 7:18)

பவுலுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?

thiruchchikkaaran said...

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒரு தலைப் பட்சமாக விவாகரத்து செய்யும் உரிமையை பெண்களுக்கு வழங்க வேண்டும்.

பெண்கள் தங்கள் குழந்தை குட்டிகளை தாங்கள் வைத்துக் கொண்டு, கணவனைப் பார்த்து உன்னை விலக்கி வைக்கிறேன், வெளியில் போ, என சொல்ல வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு.

பெண்களைப் போகப் பொருளாக நினைத்து கசக்கி முகர்ந்து, தேவை முடிந்ததும் தூக்கி எரியும் கொடூரத்தைப் , பெண்களுக்கு பாதுகாப்பு என்பது போலக் சொல்லி ஏமாற்ற முடியுமா?

நான் ஏற்க்கனவே சொன்னது போல் பெரும்பாலான மக்கள எப்படி வாழ்கிறார்கள். எந்த ஒரு பகுதியையாவது எடுத்துக் கொள்ளுங்கள், திருச்சி என்றால் உரையூரோ, தென்னூரோ, சென்னை என்றால் மந்தைவேலியோ, குரோம்பெட்டோ... மக்கள் மாலையில் அலுவல் முடிந்து, வீடு வந்து சேருகின்றனர். பெரும்பாலனா மக்கள் எப்படி வசிக்கிறார்கள் என்பதை வைத்து தான் பண்பாடு, கட்டுப் பாடு அறியப் படுகிறது. இந்த இந்தியப் பண்பாட்டில் இன்னமும் இருப்பதால் தான் அதே வகையான வாழ்க்கையை இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர்.

மூன்று முறை தலாக் குடுத்தால் அதற்குப் பிறகு முந்தைய கணவனோடு விருப்பப் பட்டாலும் சேர முடியாது, வேறு கணவனோடு சேர்ந்து விட்டு அவன் தலாக் குடுத்தால் தான் இவன் கூட வாழ முடியும். இந்தக் கலாச்சாரத்தை இங்கே புகுத்த முடியாது.

ஸ்டவ் வெடிக்கும் கொடுமையை என்னைப் போல யாரும் எதிர்க்க முடியாது. ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் உருவாக்கப் பட்டு உள்ளன. ஒரு இந்து ஒரு பெண்ணைக் கொடுமைப் படுத்தி விட்டு, அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது என்கிற வகையில் சட்டங்கள் உள்ளன. இப்படிக் கொடுமைக்கார சாடிச்ட்டுகள் சிலர் உள்ளபோது, உள்ளபோதும், பல ஆண்கள் அப்படி இல்லை. பெண்கள் கணவனோடு மனம் ஒப்பி விரும்பி தான் வாழுகின்றனர்.

ஸ்டவ் வெடிக்கும் அநீதிக்கு தீர்வு, பெண்கள் நினைத்த நேரத்தில் ஆண்களை விவாகரத்து செய்யலாம் என்று இருந்தால் கொடுமைக் கார கணவனிடம் இருந்து மனைவி தப்ப முடியும்.

ஆனால் ஆண் பெண்ணை அடிமையைப் போல வாங்கி விட்டு, போதும் என்றவுடன் தூக்கி எரியும் முறை, பெண்ணை விரட்டி அடிக்கும் உரிமை, பசியில் குழந்தை அழுதாலும் இன்னொருத்தியை வைத்து பால் குடுக்க சொல்கிறேன், நீ போடி என்று குழந்தையிடம் இருந்து பிரிக்கும் உரிமை- இது கற்கால காட்டு மிராண்டிக் கொடுமை என்பதை உங்களால் உணர முடியாது. ஏனெனில் மார்க்கப் பற்று அந்தளவுக்கு உள்ளது.

இந்த இலட்சணத்தில் இந்தியா மதச்சார்பற்ற நாடு. ஒரு இந்தியன் இஸ்லாமியனாக இருந்தால் அவன் மனைவிக்கு ஒரு தலைப் பட்சமாக விவாகரத்து கொடுக்கலாம். அவனே கிறிஸ்துவனாக இருந்தால் அவன் அவன் முதலில் சர்ச்சிடம் ஒப்புதல் வாங்கக் வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொல்லும் நீங்கள், இந்தியாவில் பெண்களின் ஒப்புதல் இன்றி , அவர்களின் முறையீட்டைக் கேட்காமல், நீதி மன்ற உததரவில்லாமல் எந்த ஒரு மனிதனும் தன மனைவியை விவாகரத்து செய்யச் சொல்ல முடியாத படிக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என சொல்லத் தயாரா?

இந்த உலகத்தில் எவ்வளவு கொடுமை நடந்தாலும் உங்களுக்கு ஒப்பே, ஏனெனில் அவை கடவுளின் பேரால் போடப் பட்டவை என்று சொல்லி விட்டாரகள்.

thiruchchikkaaran said...

@சுவனப்பிரியன்,

//இயேசு, என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுவதல்லாமல் கொள்கைகளைப் பின்பற்றுவதுதான் முக்கியம் எனற வகையிலே சொல்லி உள்ளார். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும், பசியாக இருக்கும் ஒருவருக்கு உண்ணக் கொடுத்தது எனக்கு கொடுத்தது போல என்று சொல்லி இருக்கிறார். இது நல்ல கொள்கை தானே. ஒரு பெண்ணை துணைவியாக ஏற்று, அவளை ஆண்டு அனுபவித்து, தன் கணவனை உயிரினும் மேலாகக் கருதி உள்ள அவளை விவாகரத்து செய்து விரட்டக் கூடாது, பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் - இது நல்ல கோட்பாடா, ஈவு இரக்கம் காட்டாமல் விவாகரத்து செய்து விரட்டுவது நல்ல கோட்பாடா?

அவருக்கு முன்னால் இருந்த யூத முக்கியஸ்தர் மோசஸ்.மோசஸ் தள்ளுதல் சீட்டை கொடுத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்டபோது, அதற்க்கு இயேசு உங்கள் மனக் கடினத்தின் நிமித்தம் அப்படி சொன்னார் என்றார்.

இவ்வாறாக மக்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகும் படி மோசஸ் பல கட்டளைகளைப் போட்டு அவற்றை எல்லாம் கடவுள் சொன்னதாக காட்டி விட்டனர்.

மோசஸ் காலத்தில் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று சொன்ன கடவுளுக்கு ஜீசஸ் காலத்தில் மனைவியை விரட்டி விடாதே என்று மனம் மாறி விட்டதா? திரும்பவும் 750 வருடம் கழித்து மனம் மாறி விவாகரத்து கொடுக்க சொல்லி விட்டாரா?//

சுவனப்பிரியன், இதற்க்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் பதில் சொல்லுங்கள். அதை விட்டு பவுல் அடிகளார் இப்படி சொல்லி இருக்கிறாரே, அப்படி சொல்லி இருக்கிறாரே என்றால் அதற்க்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? பவுல் அடிகளார் சொன்னாலும், ஜீசஸ் சொன்னாலு, மோசஸ் சொன்னாலும், காந்தி சொனாலும், கண்ணன் சொன்னாலும் சொன்ன கருத்தை ஆராய்ந்து அதில் மக்களுக்கு நன்மை இருந்தால் எடுத்துக் கொள்வோம், இந்த வகையில் இவ்வளவு நன்மை இருக்கிறது , விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம். நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்படுவதற்கு நாம் என்ன சொல்ல முடியும். யார் வேண்டுமானாலும் ஒன்றை சொல்லி, இதை நம்பு என்று சொல்லலாம்.

Now Let me Repeat


//ஒரு பெண்ணை துணைவியாக ஏற்று, அவளை ஆண்டு அனுபவித்து, தன் கணவனை உயிரினும் மேலாகக் கருதி உள்ள அவளை விவாகரத்து செய்து விரட்டக் கூடாது, பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் - இது நல்ல கோட்பாடா, ஈவு இரக்கம் காட்டாமல் விவாகரத்து செய்து விரட்டுவது நல்ல கோட்பாடா?


மோசஸ் காலத்தில் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று சொன்ன கடவுளுக்கு ஜீசஸ் காலத்தில் மனைவியை விரட்டி விடாதே என்று மனம் மாறி விட்டதா? திரும்பவும் 750 வருடம் கழித்து மனம் மாறி விவாகரத்து கொடுக்க சொல்லி விட்டாரா?//

இதற்க்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் பதில் சொல்லுங்கள்.

thiruchchikkaaran said...

சமுதாயங்களி உருவாக்க அந்த சமுதாயத் தலைவர்கள் போட்ட சட்டங்களே இவை. இதை இயேசு தெளிவாக உங்கள் மனக் கடினத்தை ஒட்டியே அப்படி மோசஸ் சொன்னார் என்று -இதிலே கடவுள் எந்த சட்டமும் போடவில்லை, உங்களோடு மல்லுக்கு நிற்க முடியாமல் சரி போ, தள்ளுதற் சீட்டை கொடுத்து தொலை என்று மோசஸ் சொன்னதாக தெளிவாகப் பேசி உண்மையை வெளிப் படுத்தி விட்டார்.எனவே இதிலே "கடவுள்" எதுவும் சொல்லவில்லை. எல்லாம் இவர்களாக சொன்னதுதான்.

வால்பையன் said...

//ஒரு இந்து ஒரு பெண்ணைக்
கொடுமைப் படுத்தி விட்டு, அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது என்கிற வகையில் சட்டங்கள் உள்ளன. //

திருச்சிகார அண்ணே!

மனுசங்களுக்கு தான் சட்டம், அதுல இந்து, முஸ்லீம், கிரிஸ்டீன்னு பிரிச்சு நாசமா போறது நாம தான்!

என் மதத்தில் சம உரிமை கொடுக்க பட்டிருக்குன்னு மதத்தை தாங்குவதை விட முதலில் உரிமை என்பது பிறபெங்கும் சமம்னு புரிஞ்சிக்கோங்க!

thiruchchikkaaran said...

வால் பையன் அவர்களே,


//மனுசங்களுக்கு தான் சட்டம், அதுல இந்து, முஸ்லீம், கிரிஸ்டீன்னு பிரிச்சு நாசமா போறது நாம தான்!//

பிரிப்பது நாம் என்று எப்படி சொல்கிறீர்கள்? நாம் இணைப்பை தான் விரும்புகிறோம்.




மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் இந்தியாவில் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவருக்கும் ஒரு சட்டம் - உண்மையா இல்லையா? அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ அப்படி இல்லை.

யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளட்டும்.
அதை நாம் குறை சொல்லவில்லை.

ஆனால் சட்டம் என்பது பொதுவாக இருக்க வேண்டுமா, இல்லை தனித் தனியாக இருக்க வேண்டுமா? ஒரு மனிதன் விவாக ரத்து என்றால் அவன் இந்துவா, கிறிஸ்துவனா என்றுதான் சட்டம் கேட்கிறது. எனவே பிரிப்பது யார் என்று சிந்தித்து பாருங்கள்.

எல்லோருக்கும் சம உரிமை, சம சட்டம் வேண்டும்மா இல்லையா? நாம் என்ன ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கட்டாய மத வரி கட்ட வேண்டும் என்று சொல்கிறோமா? மத ரீதியாக அவர்களை தனிமைப் படுத்துகிறோமா? எல்லா மதத்தினரின் விழாக்களிலும் கலந்து கொள்கிறோம்.

thiruchchikkaaran said...

வால் பையன் அவர்களே,

//முதலில் உரிமை என்பது பிறபெங்கும் சமம்னு புரிஞ்சிக்கோங்க//

நான் பிறப்பெங்கும் சமம் இல்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா?

எல்லா மனிதர்களும் அடிப்படையில் சிறப்பானவர்களே, சமமானவர்களே, நல்லவர்களே, அவர்கள் கேட்கும் கருத்துக்கள், சொல்லப் படும் போதனைகள, அவரகளிச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்கள் படிக்கும் நூல்கள் , அவரக்ளுடைய நண்பர்கள் இவற்றின் தாக்கத்தினாலேயே ஒவ்வொரு மனிதனின் மனப் போக்கும் செயல்பாடும் உருவெடுக்கிறது என்பதை பல இடங்களில் எழுதி இருக்கிறோம்.


//என் மதத்தில் சம உரிமை கொடுக்க பட்டிருக்குன்னு மதத்தை தாங்குவதை விட முதலில் உரிமை என்பது பிறபெங்கும் சமம்னு புரிஞ்சிக்கோங்க//

வால் பையன் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று இன்னொருமுறை படித்துப் பாருங்கள்.

//ஒரு இந்து ஒரு பெண்ணைக்
கொடுமைப் படுத்தி விட்டு, அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது என்கிற வகையில் சட்டங்கள் உள்ளன. //

இந்துக்களுக்காக என்று தனியாக உருவாக்கப் பட்ட சட்டம், அது எப்படி இருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறேன். நான் சொல்லியது சட்டத்தைப் பற்றித் தான் , அந்த சட்டத்தை போட்டது, பிரித்துப் போட்டது நான் அல்ல.

Ganesan said...

சுவனப்ரியன், பவுலால் மக்களை ஏமாற்ற முடியும் என்றால் முகமதாலும் முடியும் தானே என்று கேட்டதற்கு நீங்கள் கிருஸ்துவத்தில் நாத்திகம் பெருகிவருவதை பற்றி பேசி உள்ளீர்கள். இந்து மதத்தில் நாத்திகம் பெருகி இருப்பதை பற்றியும் நீங்கள் முன்பு கூறி இருந்தீர்கள். முஸ்லிம்களில் நாத்திகர் இல்லை என்றா நீங்கள் நம்புகிறீர்கள்? இந்த சுட்டிகளை பாருங்கள்

http://www.mideastyouth.com/2010/11/21/atheist-of-the-week-muhammad-ibn-zakariya-razi
http://www.mideastyouth.com/2007/06/15/interview-with-an-arab-atheist-does-islam-drive-its-youth-away/
http://arabatheist1.blogspot.com/

உங்கள் வாதப்படி பார்த்தால், இந்த அரபு நாத்திகர்கள் இருப்பதை கொண்டு நாம் இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம் என்ற முடிவுக்கு வரலாம். சரி தானே?

Ganesan said...

//என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. //
சுவனப்ரியன் சார் நீங்க இப்படி தைரியமா இருக்கீங்க. சவுதி அரசர் அப்துல்லாவோ பாவம் பயந்து போய் இருக்காரு. அவசரமா சவுதி திரும்பியது மட்டும் இல்லாமே, $11 பில்லியன் அளவுக்கு சலுகைகள் எல்லாம் அறிவிச்சி இருக்காரே. இள வயதினர் திருமணம் செய்ய, வீடு வாங்க அப்படின்னு சொல்லி சொந்த மக்களுக்கே லஞ்சமா இருக்கே. நீங்க வேணா அவர் கிட்டே பயப்பட வேண்டாம், ஆட்சிக்கு அஸ்திவாரமாக இருந்து கொண்டிருக்கும் முகமது வழிகாட்டுதல் போதும் லஞ்சமெல்லாம் வேண்டாம்-நு சொல்லி தைரியம் கொடுக்கலாமே?

தருமி said...

கணேசன்,
//முஸ்லிம்களில் நாத்திகர் இல்லை என்றா நீங்கள் நம்புகிறீர்கள்?//

அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல...? அப்புறம் எப்படி வெளிய காமிக்க முடியும் - அதுவும் இஸ்லாமிய நாடுகளில்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//சவுதி அரசர் அப்துல்லாவோ பாவம் பயந்து போய் இருக்காரு. //

இந்த செய்தியெல்லாம் என் கண்ணில் படலையே! அங்க போராட்டம் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சா .. அதெல்லாம் multi layered விஷயமாச்சே ...பயமா இருக்கு.

Ganesan said...

// அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல...? அப்புறம் எப்படி வெளிய காமிக்க முடியும் - அதுவும் இஸ்லாமிய நாடுகளில்.//

உண்மை தான் தருமி சார். ஆனாலும் மனித குணம்னு
ஒண்ணு இருக்கே. மத சம்பந்த பட்ட விஷங்கள் உண்மையா என்றா சந்தேகம் சிலருக்காவது வராமல் இருக்குமா என்ன? வெளியே பகிங்கரமா காமிக்க முடியாமல் இருக்கலாம், இணையத்தில் எழுத முடியுமே.

நான் குறிப்பிட்டு இருந்த முதல் லிங்க்குக்கு போய் பாருங்கள், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முகமதை ஒரு பொய் தூதர் என்று எழுதி இருக்கிறார் முகம்மது இப்ன் சகஹரியா என்பவர். மற்ற லிங்க்குகளையும் பாருங்கள், இந்நாளைய இஸ்லாமியரை பிறந்த இறை மறுப்பாளரின் எண்ணங்களை அறிய முடியும்.

Ganesan said...

// இந்த செய்தியெல்லாம் என் கண்ணில் படலையே! //

தருமி சார் இந்த சுட்டியை பாருங்க
http://www.guardian.co.uk/world/2011/feb/23/middle-east-unrest-concessions

//அங்க போராட்டம் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சா .. அதெல்லாம் multi layered விஷயமாச்சே ...பயமா இருக்கு.//
பஹ்ரைன்லே என்ன நடக்குதோ அதை வச்சி தான் சவுதி என்ன ஆகும்னு சொல்ல முடியும் போலிருக்கு. எகிப்து, துனிசியா போன்ற நாடுகளிலாவது நடந்தது சர்வாதிகரிகளை எதிர்த்து நடந்த போராட்டம். பஹ்ரைனில் நடப்பதோ முடியாட்சியை எதிர்த்து, அதுவும் ஷியா மக்கள் சுன்னி மன்னரை எதிர்த்து. இதே ஷியா சுன்னி பிரச்சனை சவுதியிலும் உண்டு. மிக அருகிலேயே சவூதிக்கு எதிரியான ஷியா ஈரான் வேறு.

facebook போன்ற வலை தளங்களில் ஏற்கனவே அனானிகள் தங்கள் பெயரை வெளியிடாமல், சவுதியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். பலர் அதில் சேர்வதாகவும் கை எழுதிட்டுளனர். அங்க போராட்டம் வந்தால் ... நிச்சயமாய் பயப்பட வேண்டிய விஷயம் தான்.

Ganesan said...

// அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல...? அப்புறம் எப்படி வெளிய காமிக்க முடியும் - அதுவும் இஸ்லாமிய நாடுகளில்.//
நீங்க பார்க்க மேலும் சில பக்கங்கள்
http://www.youtube.com/watch?v=csEJFYwcnRA
http://www.youtube.com/watch?v=cLiMlQzTHlQ&feature=related
http://pakistaniatheist.blogspot.com/

தருமி said...

சுவனப்பிரியன்
//கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.//

ஒரு நல்ல u-tube பார்த்தேன். (கணேஷுக்கு நன்றி) நீங்களும் பாருங்கள்.

Unknown said...

Dharumi,

I don't think many of the posters here have understood your satire article about Clive and Dyre. Pleas clarify them before you are portrayed as pro RSS, pro pentecoast or even CIA agent!

S. Manidhan

தருமி said...

Manidhan
i dont think that there is any need for an explanatory note for this post. other than the 3rd comment which was meant for one who took the post otherwise, all others, i hope, have found the 'real' meaning of the post.

«Oldest ‹Older   201 – 254 of 254   Newer› Newest»

Post a Comment