Friday, April 15, 2011

497. ராஜ பக்சேவிற்கு உங்கள் ஓட்டைப் போடுங்கள் - தவறாமல்

*
 எனக்கு வந்த மெயில் ஒன்று.


சகோதர/சகோதரிகள் அனைவருக்கும், 

அஸ்ஸலாமு அலைக்கும், (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)

ஒரு இனத்தை கொடுமைக்குள்ளாக்கிய ராஜபக்ஸேவை எதிர்த்து ஓட்டளியுங்கள். உலகின் 100 ஆற்றல்மிக்கவர்கள் வரிசையில் வர விடாமல் தடுங்கள்.




நன்றி, 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ


Image and video hosting by TinyPic



நானும் அப்பக்கத்தை உடனே புரட்டிப் பார்த்தேன். நான் பார்க்கும் போது நிலைமை மிக மோசமாகத் தெரிந்தது.
அவர் influential என்று ஆதரவாக 70115 ஓட்டுக்களும், அவரை எதிர்த்து வெறும் 17762 ஓட்டுக்களும் இருக்கின்றன.

வாசிக்கும் பதிவர்களை அனைவரும் கீழ்வரும் பக்கத்திற்குச் சென்று உங்கள் வாக்குகளை நன் முறையில் இட்டு இரண்டாம் எண்ணிகையை மேலே வரும்படிச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

இதே வேண்டுகோளுடன்:

http://pattapatti.blogspot.com/2011/04/blog-post_5962.html

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_14.html

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

மணி: இரவு 9.23
கடந்த 9 மணி நேரத்தில் 5000 ஓட்டுகள் அவனுக்குச் சாதகமாகவும், 3700 ஓட்டுகள் பாதகமாகவும் விழுந்துள்ளன.
நாடே அவன் பின்னால் நிற்கிறது போலும்.

அடுத்த நாள் - 16.04.11
சாதகமான எண்ணிக்கை: 92,076
பாதகமான எண்ணிக்கை: 23352

24 comments:

PRABHU RAJADURAI said...

தருமி,

இந்த இண்டெர்நெட் ஓட்டுகளுக்கும், இந்த போஸ்ட் கார்டை பத்து பிரதி எடுத்து அனுப்பாவிட்டால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்ற சாபத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று நினைக்கிறேன்...நான் அந்த சுட்டியை அழுத்திக் கூட பார்க்கவில்லை!

தருமி said...

Prabhu,
ஆனால் வந்திருப்பது TIME என்றும், CNN-உடன் தொடர்பு கொண்டிருப்பதாக அந்தப் பக்கத்தில் உள்ளதே!?

baleno said...

எதற்க்காக எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்பதிற்க்கு நீங்கள் விளக்கம் தரவில்லை. இஸ்லாம் பயங்கரவாதம் அழிக்கபட வேண்டும் தமிழ் பயங்கரவாதம் தொடர்ந்தும் வாழ வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யா.. ஏற்கனவே அஞ்சு நோ குத்தி இருக்கேன்..:-))))

saarvaakan said...

அய்யா வணக்கம்,
ஓட்டளித்து விட்டென்.இப்பொழுது புரிகிறதா இராஜபக்சே எபடி அதிக ஓட்டு வாங்கினாரென்று!!!!.தமிழர்கள் ஒடுக்க்ப் படுகிறார்கள் என்றால் தமிழ் பயங்கரவாதி,அரபுக்ளின் எண்ணெய் வளம்,நிலம் சுரண்டப் படுகிறது என்றால் இஸ்லாமிய பயங்கர்வாதி. பழங்குடி ம்க்களின் நிலங்களை பறிக்காதே என்றால் மாவோயியவாதி,கிறித்தவ ,இஸ்லாமை விமசித்தால் இந்துத்வா அம்பி என்ற மரபு பெயர்கள் இயல்பாக எழுதும் எந்த பதிவருக்கும்[சில சமயம் எல்ல்லா பெயர்களூமே] கிடைக்கும்.

இங்கு ஒரு இணாயத் தளத்தில் திரு இராஜபக்சே உலகின் சிற்ந்த 100 மனிதர்களுல் ஒருவரா என்பதற்கு வாக்கு சேகரிக்கப் படுகிறது.வாக்களிக்காமலும் இருக்கலாம் ஆதரித்தோ .எதிர்த்தோ வாக்களிக்கலாம். இதற்கு எந்த பட்டமும் அவசியமில்லை.

இலங்கையில் மட்டுமல்ல பல நாடுகளில் இனக் குழுக்களுக்கிடையே நிலவி வரும் போராட்டங்கள் அனைத்துமே அதிகாரப் பகிர்வு,பாரபட்சமற்ற அரசியலமைப்பு என்ற இலக்கை நோக்கியே செல்கிறது .உலகத்தில் எது நடந்தாலும் என்னை பாதிக்காதவரை கவலைப் படாமல் இருப்பேன் என்று சொல்லவும் உரிமை உண்டு.எப்போதும் எதுவும் நம் வாழ்வை பாதிக்காது,யாருடையா ஆதரவும் எனக்கு எபோதும் தேவைப் படாது என்ற நிச்சயம் இருந்தால் மிகவும் நல்லது.அப்படியே இருக்க வாழ்த்துகிறேன்.

இணையத்தால் உலகின் எவ்விடத்திலும் நடக்கும் ஒரு செயலுக்கு நம் கருத்தை நம்மை பாதிக்காத வகையில் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பை இந்த அளவிற்கு பெரிது படுத்த அவசியமில்லை.

எனக்கு இராஜபக்சே இப்போது தமிழர்களை நட்த்தும் விதம் சரியில்லையென்று தோன்றுகிற‌து எதிர்த்து வாக்களித்துவிட்டேன்.ஆஹா எளிதில் தமிழ் தீவிரவாதி ஆகிவிட்டேன்.

yasir said...

தகவலுக்கு நன்றி அய்யா எதிர்த்து வாக்களித்துவிட்டேன்

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIMES கணிப்பு அல்ல)

Thekkikattan|தெகா said...

தருமி,

அந்த ‘டைம்’ வாக்கு எடுக்கும் பக்கத்தில் திட்டமிட்டே எதிர் தரப்பில் ஓட்டுக்களின் எண்ணிக்கை எகிரும் வாக்கில் செயல்படுத்தப்படுவதாக எண்ணுகிறேன்.

கீழ் கண்ட முறையில் ஒரு மின்னஞ்சலை அந்த பத்திரிக்கையின் எடிட்டருக்கு எழுதி விட்டேன்.
********************

எடிட்டருக்கு எழுதியதின் மூலம், கொஞ்சமாவது பெட்டி மாறியிருந்து இவிங்களும் விலை போயிருந்தால் அந்த குற்ற உணர்ச்சியாவது இந்த கடிதங்கள் ஏற்படுத்தினாலே போதுமென்ற அளவில் நானும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறேன். நகல் இங்கே...


Dear Editor,

Recently in your magazine I voted for 100 influential person through yes or no option. To my surprise I noticed the list included the Sri Lankan President Mahinda Rajapakse, all along I've been thinking during the last push of 2008 civil war in his country he killed tens of thousands of tamil people.

As you aware of, during the massacre period he had kicked out all the media, human right activists, humanitarian workers etc., which was condemned by the international medias. Behind the closed door, he allegedly buldozed down half alive people to die and buried them alive also.

I, so far, had a hope that "Time" like media wanting to go in the island and report hands on, what had happened. In spite when no international media or human right activist is allowed till to date to go in and report, shamefully around this time this magazine includes Mr. Mahinda the alleged president to be on the top 100 list. Simply unbelievable!

As I was voting, I realized everytime one refreshes the page by default a vote is added; which meant it was not a legitimate number what we see there too.

Hope that you drop the name from the list until UN inquires the war crime allegation against Mr. Mahinda, in turn that would bring back the legitimacy and lost confidence in your magazine. Thank you!

Sincerely,

Ganesan said...

தகவலுக்கு நன்றி தருமி ஐயா, எதிர்த்து வாக்களித்து விட்டேன்

நண்பர் Baleno ,
//எதற்க்காக எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்பதிற்க்கு நீங்கள் விளக்கம் தரவில்லை.இஸ்லாம் பயங்கரவாதம் அழிக்கபட வேண்டும் தமிழ் பயங்கரவாதம் தொடர்ந்தும் வாழ வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.//
சிங்கள பேரினவாதத்தை இந்த லிஸ்டில் விட்டு விட்டீர்களே? எதற்காக எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கு ஐநா சபையின் இந்த விளக்கத்தை பார்க்கலாமே
http://news.yahoo.com/s/afp/20110416/wl_asia_afp/srilankaununrest

Ganesan said...

தகவலுக்கு நன்றி தருமி ஐயா, எதிர்த்து வாக்களித்து விட்டேன்

நண்பர் Baleno ,
//எதற்க்காக எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்பதிற்க்கு நீங்கள் விளக்கம் தரவில்லை.இஸ்லாம் பயங்கரவாதம் அழிக்கபட வேண்டும் தமிழ் பயங்கரவாதம் தொடர்ந்தும் வாழ வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.//
சிங்கள பேரினவாதத்தை இந்த லிஸ்டில் விட்டு விட்டீர்களே? எதற்காக எதிர்த்து ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கு ஐநா சபையின் இந்த விளக்கத்தை பார்க்கலாமே
http://news.yahoo.com/s/afp/20110416/wl_asia_afp/srilankaununrest

தருமி said...

a real good letter, theks.

thanks

தருமி said...

அருள்,
நீங்கள் அனுப்பிய பக்கத்தில் என் கருத்தையும் சேர்த்து விட்டேன்.

நன்றி

தருமி said...

கணேசன்,
baleno போன்றவர்களுக்குப் பதில் சொல்லாமல் விடுவது நலமே என நினைத்தேன்.

தூங்கும் மனிதர்களைத்தானே எழுப்ப முடியும்.

baleno said...

நண்பர் கணேசன்,
சிங்கள பேரினவாதத்தை மறக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மிக மோசமான மனித அவலங்களை ஏற்படுத்தியாவது தங்களை பாதுகாக்க செயல்பட்ட புலி பயங்கரவாதிகளை ஆதரிப்பது, கள்ள மவுனம் சாதிப்பது இது பற்றியே குறிப்பிட்டேன்.

Ganesan said...

நண்பர் Baleno ,

தங்கள் பதிலுக்கு நன்றி. என்னை பொறுத்த மட்டிலும் நான் புலி ஆதரவாளன் அல்ல. அவர்களால் ஈழ தமிழர்க்கும், அவர்களின் உரிமை போராட்டதிற்கும் பின்னடைவே ஏற்பட்டது என்று எண்ணுபவன். திரு தருமி அவர்களின் வலை தளத்தை நான் படித்து வந்ததில் இருந்து அவரும் இதுவரை புலிகளக்கு ஆதரவாக ஏதும் எழுதியதாக நினைவில்லை. ராஜபக்சேவை எதிர்த்து எழுதுவோரெல்லாம் புலிகளக்கு கள்ள தனமாக ஆதரவு அளிப்பவர்கள் என்று நினைப்பது தவறு.

சிங்கள பேரினவாதத்தை மறக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். அதன் படி பார்த்தால், ஈழ தமிழருக்கு இன்னல் விளைவித்து வந்த புலிகளும் ஒழிக்கபட்டுவிட்டனர். தற்சமய பிரச்சினை பேரினவாதம் தானே. எங்களுடன் சேர்ந்தே அதை கண்டிக்கலாமே.

தருமி said...

இப்போது இந்த ஓட்டெடுப்பில் ராஜ பக்சேவின் பெயர் எடுக்கப்பட்டு விட்டது. தெக்ஸ் போன்றவர்களின் முயற்சியால் இது நடந்திருக்கலாமென நினைக்கிறேன்.

தெக்ஸ் & அவ்ரைப் போல் எதிர்ப்பை TIME இதழுக்கு அனுப்பியவர்களுக்கு நன்றி.

ஜோதிஜி said...

இப்போது இந்த ஓட்டெடுப்பில் ராஜ பக்சேவின் பெயர் எடுக்கப்பட்டு விட்டது. தெக்ஸ் போன்றவர்களின் முயற்சியால் இது நடந்திருக்கலாமென நினைக்கிறேன்.


மானம் காத்த மாவீரன் தெகாவுக்கு என் வாழ்த்துக்கள் அய்யா.

ஜோதிஜி said...

ஏற்கனவே ஓங்கு தாங்கான ஆளுங்கோ. நீங்க வேற சுருக்கி சுருக்கி இப்ப தெக்ஸ் ஆக்கிட்டீங்க. பாருங்க அடுத்த தெக் என்று ஆயிடப்போறாரு?

தருமி said...

//மானம் காத்த மாவீரன் தெகாவுக்கு என் வாழ்த்துக்கள் //

ஜோதிஜி
தனிப் பதிவு போட்டே நாம் அவரை வாழ்த்தியிருக்கலாமோ?!

//நீங்க வேற சுருக்கி சுருக்கி இப்ப தெக்ஸ் ஆக்கிட்டீங்க.//
எல்லோரும் உங்களை மாதிரி சுருக்க முடியாத பெயரா வச்சிக்க முடியுமா, என்ன?!

குடுகுடுப்பை said...

தெக்கிக்காட்டாருக்கு நன்றி.

தருமி said...

//Marco Polo of neuroscience, V.S. Ramachandran //

இவருக்கு நம் வாழ்த்துகள்.

saarvaakan said...

வணக்கம்
ஓட்டு அளிக்கும் போதே இது புரிந்தது.இதில் இருந்து இலங்கை அரசு ஒரு இமேஜ் பில்டிங்கிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது புரிகிறது.நம்மால் இயன்ற வரை இந்த விஷயங்களையாவது தடுக்க வேண்டும்.நண்பர் தெ.கா,உங்களுக்கும் பாராட்டுகள்.இது தொடக்கமே இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

baleno said...

நண்பர் கணேசன், உங்களை போன்ற ஒரு நேர்மையான இலங்கையரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

Post a Comment