Thursday, June 16, 2011

506. சுவனம் செல்ல விழைவோருக்கு ...

*
*

”இஸ்லாமிய சுவனம்”  செல்ல விழைவோருக்கு ...

                              சில பதில்களும், ஒரே ஒரு  கேள்வியும் ....


சில கேள்விகளுக்கு பலமுறை வரும் பதில்:
1400 ஆண்டுகளாக நாங்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூறி வருகிறோம். எதுவும் புதிதல்ல ... கேட்ட கேள்விகளே திரும்ப திரும்ப கேட்கப்படுகின்றன.

தரப்படும் பதில்களும் எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. மொழிபெயர்பாளர்களுக்கு ஏற்றாற்போல் பல அடைப்புக் குறிகள்; புதிய விளக்கங்கள். ஏனிப்படி என்றால் ...
//அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் எழுதினார்கள் -தங்கள் கருத்தை பிராக்கட்டில் போட்டு. பின்னர் அறிவியல் அறிவு வளர வளர....பிராக்கட்டுகள் மாற்றப்படும் அல்லது தகர்க்கப்படும்.//  என்று பதில் வரும். ஆக இதெல்லாம் ஒரு adjustment தான்.

//He is created from a drop emitted- Proceeding from between the backbone and the ribs. (86:7)
இவ்வசனம் சொல்வதன்படி விந்து சிறுநீரகத்தில் இருந்து வருவதாக அல்லவா அர்த்தப்படுகிறது. விந்து சிறுநீரகத்தில் இருந்து வரலாம் என்னும் பிழையான கொள்கையை கிரேக்கர்கள் தான் முதலில் கொண்டுவந்தார்கள். //

//தேனீ  பழத்தை’ச் சாப்பிட்டு தேன் கொடுக்கிறது.//  இங்கே பழம் என்பது மரத்தில் உள்ள எல்லாவற்றையும் என்ற பொருள் வருகிறது என்ற புதிய விளக்கம் வரும்.

பூமியை கடவுள் விரித்தார்; மலைகளை நட்டு வைத்தார் என்பார்கள். வானம் ஏழு அடுக்குகள் என்பார்கள்; கடவுள் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் என்பார்கள். இதெல்லாமே அறிவியலுக்குள் திணிக்கப்படும் அடைப்புக் குறிகளின் துணையோடு.

female genital mutilation பற்றி முகமது கூறியுள்ளாரே - Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband. (!!!!!) - என்றால் அதையும் ஒப்புக் கொள்வதில்லை.

ஏன் சுராக்கள் தாங்கள் பேசு பொருள் அடிப்படையில் பிரிக்கப்படாமல் ‘நீளத்தை’ மட்டும் வைத்து முறைப்படுத்தப்பட்டன? இதனால் சுராக்களின் பொருள், காலம், இடம், context என்று எல்லாவிதத்திலும் மாறி விடுமே?


இதுபோல் கேள்விகள் பல. ஏதாவது ஒரு பதில் வரும் இவைகளுக்கு.


ஆனால் சில கேள்விகளுக்கு எப்பதிலும் ஏனோ வருவதேயில்லை.

நானும் ”sin of khalwa" விளக்கம் படித்து அதிர்ந்தேன். இரு பாலார் தனியே இருக்கக்கூடாதாம். (Being alone and privacy (khalwa) with a non-Mahram is unlawful (haram)) அப்படி இருக்க வேண்டிய சூழலில் அப்பெண் அந்த ஆணுக்கு முலைப்பால் கொடுத்தால் அது ஹராம் ஆகாதாம்! இது ஒரு மிக  ‘நல்ல’ மதக் கருத்து.

லாய்லாஹ் - (லாய்லாஹ் - ஆண்களுக்கு கன்னி கழியாத பெண்கள் (55:56-57, 56:7-40) பையன்கள் (52:24, 56:17) சுவனத்தில் நிறைய தரப்படும்.)

ஆண்கள் சுவனத்திற்குச் சென்றால் என்னென்ன கிடைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது; நன்றாகவே அவைகள் உள்ளன. நல்லது. ஆனால் இதிலும் பால் சார்ந்த வேறுபாடுகள் உள்ளன.

//இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? நம்ம ஊர் நித்திய கல்யாணி மாதிரி,  முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் - மொத்தம் 72 ஹெளரிகள் -  கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste.

இந்த இரு கேள்விகளுக்கும் யாரும் இதுவரை எந்த விளக்கமோ, பதிலோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.

சுவனத்தில் ஆண்களுக்கு இவையெல்லாம்  “மிக மிக நல்ல பரிசு”தான். இக்கருத்தை  வைத்தே தீவிரவாதிகளை மூளைச் சலவை  செய்வதாக வாசிக்கிறோம். ஆனால் இதில் எனக்கு வந்த ஐயம் வேறு மாதிரி. ஆண்களுக்கான சுவனம் இவ்வளவு ‘நன்றாக’ இருக்கிறதே ... அப்படியானால் பெண்களுக்கான சுவனம் எப்படியிருக்க வேண்டும். அவர்களுக்கு அல்லாவிடமிருந்து கிடைக்கும் ‘சுவனப் பரிசு’ என்னவாக இருக்கும்? இதை ஒரு கேள்வியாகப் பலமுறை  வைத்தும் ஏதும் பதிலில்லை.

இதில் ஆச்சரியமும் வேதனையும் என்னவென்றால் இது போன்ற கோட்பாடுகளை ஒரு மதம் கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், இவையெல்லாம் சரியே என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பது நல்ல வேதனையான வேடிக்கை!

இப்படி பதில் இல்லாத ஹூரிகள் பற்றிய விஷயம் பற்றி ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. அதைப் பங்கிட்டுக் கொள்கிறேன்.

இக்கட்டுரை ஒரு பாகிஸ்தானிய நாளிதழில் - DAWN - NILOAR AHMED  என்பவரால் எழுதப்பட்டது.

52: 20  -  அழகிய கண்களைக் கொண்ட அழகியரை ...

55 : 72  -  அழகிய பெண்களும் (ஹூரிகள்) ...

56 : 22  -  அழகிய கண்களுடைய ஜூர் எனும் மங்கையரும் ...


56 : 34 -38  -  அவர்களைக் கன்னியர்களாகவும் (லாய்லாஹ்?), தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சம வயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.

இப்படியெல்லாம் கூறப்பட்டாலும், Maulana Umar Ahmed Usmani ஹூரி என்பது இரு பாலாருக்கும் பொருந்தும் என்கிறார். (அப்படியானால்  சுவனம் செல்லும் பெண்களுக்கும் 72 ஆண் ஹூரிக்கள் கிடைக்கும் என்பதுதானே சரியாக இருக்கும்?)

இன்னொரு நம்பிக்கையும் உண்டு. இவ்வுலகில் நல்ல மனைவியாக இருந்தவர்கள் சுவனத்திற்கு வந்து சேரும் நல்ல ஆண்களுக்கு உரித்தான பெண்களாக மாற்றப்படுவார்கள்!!!!

குரானிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு  -  Hazrat Aasiya என்பவர் அரசனின் பட்டணத்து ராணி. ஆனாலும் தன் கணவனைக் கடவுளாகக் கருதாமல் ஒரே கடவுளை மட்டும் நம்பிய நல்ல பெண்மணி. இவருக்கு சுவனத்தில் என்ன பரிசு என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு கேள்வி.அவரும் ஒரு ஹூரியாக மாற்றப்பட்டு எந்த மனிதருக்காவது பரிசாக அளிக்கப்பட்டிருப்பாரா? அல்லது ஆண்களுக்கு ஹூரிகள் அளிக்கப்பட்டது போல்  இவருக்கும் அதே பரிசைக்  கடவுள் அளித்திருப்பாரா? சுவனத்தில் காலாதி காலம் இருக்க வேண்டும். அப்போது தனிமை வெருட்டும். ஆகவே சுவனத்தில் நல்ல உடனிருப்போருடன் இருக்க வேண்டும்.

குரானில் கூறப்பட்டுள்ள  ஹூரி, azwaj - இருவருகே இரு பால்களிலும் இருப்பர்; அவர்களே பரிசுகளாக அளிக்கப்படுவர்.

*                                                           *                                                *                          *

இக்கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களில் எனக்குப் பிடித்த சில:

Syed Roman Ahsan says:
//..as for Aasia the wife of pharoah, since her husband claimed godhead and thus doomed to hell, she will have the honour of being blessed eternal companionship of Prophet Muhammad (pbuh). Can a chaste woman ask anything more than that? //

Aasia the wife of pharoah-க்கு சுவனத்தில் முகமதுவின் துணைவியாகும் வாய்ப்பு அளிக்கப்படும். ஒரு நல்ல பெண்ணுக்கு இதைவிட வேறு என்ன பெருமை?

*                             *                                  *                              *                             *
Dark Prince

However, what amazed me was the quote - In Surah Al-Rehman, the Quran says, “The houris will be protected in tents, whom neither humans nor jinns have touched before (55: 72).”

WTF??? Tents even in heaven?? You gotta be kidding me......No FB, No Internet, No TV, Frarris, PlayStation.......Only Tent, Camels, Sex, Huries................................and wine?? No Vodka, Martini, Rum........And you call this 7th century Bedouin mini-Saudi Arabia in sky as heaven?? This is definitely a creation of a man who was short-sighted and who had never seen the world outside his tent, Kabila and Desert!!



*                             *                                  *                              *                             *

jabeen says:
i wonder why this interpretation by Nilofar was not made by all the Imams,islamic scholars and researchers since the advent of Islam? Its certainly an invention of a new idea by the writer by juggling the Arabic vocabulary.

*                             *                                  *                              *                             *
 Syed N. Hussain,MBA, Ph.D says:
This concept mis-translated and exploited by Western Media has not only become a joke, it seeks to demean Allah to being a “sexist”. In the Eyes of God all human beings are created equal with of course certain biological differences between men and women.

*                             *                                  *                              *                             *
John Loacke says:
Thus, the Houris are always female. This is why you will be incapable of finding masculine descriptions for these “companions”. The carnal focus is clearly to allude to males.

*                             *                                  *                              *                             *
Raman says:
Trying to wriggle out of uncomfortable situation but it does not help as most of the Islamic scholars since 7th century have interpreted houris as females – but with the modern moral values – it becomes uncomfortable and hence try to wriggle out of the uncomfortable situation.

 *                             *                                  *                              *                             *
sameen tahir khan says:
It is about time someone explained this…very nice and informational article….Paradise here I come! Inshallah!

  *                             *                                  *                              *                             *

ஒரே ஒரு  கேள்வி:

Khalwa, லாய்லாஹ் - இதுபோன்ற அறிவுக்கு மட்டுமல்லாது, மனித உணர்வுகளுக்கும் எதிரான, அசிங்கமான கோட்பாடுகளை, எல்லாம் அறிந்த இறைவன் கொடுத்தவை என்று எப்படி நீங்கள் தைரியமாக நம்புகிறீர்கள்?








-

18 comments:

Robin said...

சுவனப் பிரியன் எப்படியாவது உங்களை சுவனத்துக்கு கொண்டு சென்றுவிட வேண்டுமென்று முயற்சி செய்கிறார். நீங்க கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி எழுதிக்கொண்டு இருக்கிறீர்களே!

saarvaakan said...

/தரப்படும் பதில்களும் எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. /
சரியான பார்வை.வேன்டுமானால் ஒரே பிரிவில் உள்ள இரு பிரச்சாரகர்கள் கூட விள‌க்கங்களில் வேறுபடுகின்றார்கள்.

1.இறைவனுக்கு உருவம் உண்டு என்று ஒருவர் கூறி அது மறுமை நாளுக்கு பிறகே பார்க்க முடியும் என்று முட்டு கொடுத்தார்கள்.சென்ற வாரம் பார்த்த ஒரு காணொளியில் ஒரு பிரச்சாரகர் ஆதம்,ஹவ்வா கடவுளை பார்த்தார் என்று கூறுகிறார். இறையியல் கொள்கைகள் இன்னும் சரியாக வரையறுக்கப் படாத ஒரு மதம் இஸ்லாம்.

2.எவரும் பகுத்தறிந்து இறைவனை உணரலாம் என்கிறார் ஒரு பதிவுலக பிரச்சாரகர்,ஆனால் இறைவன் நாடியவன் மட்டுமே மறுமை வாழ்வை அடைய முடியும் என்று குரான் கூறுகின்றது.
_________
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
____________

3. விளக்கம் கொடுக்கும் போது சில விஷயங்களுக்கு இது உண்மையாக் இருந்தாலும்,பொய்யாக இருந்தாலும் மார்க்கம் உண்மை என்பார்கள்.
எ.கா நூஹின்[நோவா] கப்பல்
இந்த ஜல பிரளயம் உலகம் முழுதும் ஏற்பட்டதா,இல்லை குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டதா என்று கேட்டால் இப்படி குழப்புவார்கள்.குரானிய அறிவியலின் பிதாமகர் மௌரிஸ் புகைலின் புத்தக்த்தில் வெள்ளப் பெருக்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டதாக கூறியவர்(முதல் ஆள்?)

4.இம்மாதிரி முரண்படும் விஷயங்களை அவர்கள் மட்டுமா கூறுகின்றார்கள்?
இல்லை குரானும் முன் சொன்ன விஷயங்களை பின்னால் வேறுவிதமாக் அல்லது எதிர்மறையாக் கூறுவது போல் பல இடங்களில் பார்க்கலாம்.

5. குரான் சொற்றொடர்களாகவே இருப்பதால் பிரச்சாரகளுக்கு தாங்கள் விரும்பிய கருத்தினை கொண்டுவரும் வாய்ப்பு மிக அதிகம்[Degrees of Freedom]. குரானில் உள்ள அரபி வார்த்தைகளுக்கு பொருள் கொள்ளும் முறை குரானுக்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பின்பே இலக்கண‌த்தோடு வகுக்கப் பட்டது.

6.குரானில் பெயர் குறிப்பிடப் படாத பல மனிதர்களை பைபிளில் இருந்து இட்டு நிரப்பினார்கள்.அதில் பல விஷயங்களுக்கு காலக் கணக்கு இடிக்கும் ஆபிரஹாமிற்கு[சுமார் BC 2000] உஜைரின் [BC 600]கதை இறைவனால் [குரான் 2:259] கூறப்படுவது ஒரு எ.கா.

yasir said...

// ஆண்களுக்கான சுவனம் இவ்வளவு ‘நன்றாக’ இருக்கிறதே ... அப்படியானால் பெண்களுக்கான சுவனம் எப்படியிருக்க வேண்டும். அவர்களுக்கு அல்லாவிடமிருந்து கிடைக்கும் ‘சுவனப் பரிசு’ என்னவாக இருக்கும்.//

இது தெரியாதா உங்களுக்கு? ஆணுக்கு நித்திய கண்ணிகையர் எனில் அதே ஆண்கள் தானே அந்த பெண்களுக்கு நித்திய கண்ணன்கள்!!

கோவி.கண்ணன் said...

இவங்க குறிப்பிடுகிற சுவனம்,

வேலை வெட்டி இல்லாத விலங்குகளின் வாழ்க்கை உணவிலும் உடலுறவிலும் கழிப்பது போன்றது.

எனக்கெல்லாம் அது போன்ற சுவனம் தேவையே இல்லை.

இஸ்லாமிய சுவனத்தில் பின்லேடனுக்கு சிறப்பான இடம் இருக்குமோ ?

Anonymous said...

சுவனம் - சுவர்க்கம், சுரா - சூத்திரா இதில் எதாவது பெயர் ஒற்றுமை இருக்கா ? ஏனெனில் சமஸ்கிருத சொற்களும் அரபு மொழியில் வருவது போல ஒரு தாக்கம் ..

மத்தப்படி என்ன தான் எடுத்துச் சொன்னாலும் பலர் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு தான் இருக்காங்க.. இதே சொன்னாலும், அதையே நமக்கு திருப்பிச் சொல்லுவாங்க .. சரியான குழப்பவாதிகள் என்பதில் ஐயமே இல்லை ..

சீனு said...

//WTF??? Tents even in heaven?? You gotta be kidding me......No FB, No Internet, No TV, Frarris, PlayStation.......Only Tent, Camels, Sex, Huries................................and wine?? No Vodka, Martini, Rum........And you call this 7th century Bedouin mini-Saudi Arabia in sky as heaven?? This is definitely a creation of a man who was short-sighted and who had never seen the world outside his tent, Kabila and Desert!!//

:)))))) அனுபவிச்சு எழுதியிருக்கார்...

தருமி said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

ராபின்!
//சுவனப் பிரியன் எப்படியாவது உங்களை சுவனத்துக்கு கொண்டு சென்றுவிட வேண்டுமென்று முயற்சி செய்கிறார்.//

தருமி வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே! ராபின் கொஞ்சம் எடுத்து சொல்லப்படாதா!

சார்வாகன்!
//1.இறைவனுக்கு உருவம் உண்டு என்று ஒருவர் கூறி அது மறுமை நாளுக்கு பிறகே பார்க்க முடியும் என்று முட்டு கொடுத்தார்கள்.சென்ற வாரம் பார்த்த ஒரு காணொளியில் ஒரு பிரச்சாரகர் ஆதம்,ஹவ்வா கடவுளை பார்த்தார் என்று கூறுகிறார். இறையியல் கொள்கைகள் இன்னும் சரியாக வரையறுக்கப் படாத ஒரு மதம் இஸ்லாம்.//

கருத்து சுதந்திரம் இஸ்லாத்தில் உள்ளதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் அனைவருக்கும் ஒரு இறைவன்! ஒரு வேதம்! ஒரு தூதர்! இந்த எல்லைக்குள் இருந்து தங்கள் அறிவு சொல்வதின்படி செயல்பட இஸ்லாம் அனுமதிக்கிறது.

யாசிர்!
//இது தெரியாதா உங்களுக்கு? ஆணுக்கு நித்திய கண்ணிகையர் எனில் அதே ஆண்கள் தானே அந்த பெண்களுக்கு நித்திய கண்ணன்கள்!!//

ஓரளவு நெருங்கி வந்து விட்டமாதிரி தெரிகிறது. ம்..ம்...அப்புறம்.

//இஸ்லாமிய சுவனத்தில் பின்லேடனுக்கு சிறப்பான இடம் இருக்குமோ ?//

பின்லாடனுக்கு உரியதை அவர் அடைந்து கொள்வார். உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று சிந்தியுங்கள் கோவிக் கண்ணன்!

இக்பால் செல்வன்!
//மத்தப்படி என்ன தான் எடுத்துச் சொன்னாலும் பலர் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு தான் இருக்காங்க.. இதே சொன்னாலும், அதையே நமக்கு திருப்பிச் சொல்லுவாங்க .. சரியான குழப்பவாதிகள் என்பதில் ஐயமே இல்லை ..//

உங்களை விடவா! :-(

சீனு!
//:)))))) அனுபவிச்சு எழுதியிருக்கார்...//

மெய்யாலுமா!

RISHAN SHERIF said...

அன்பு வணக்கங்கள்,

வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி !

தருமி said...

இது தெரியாதா உங்களுக்கு? ஆணுக்கு நித்திய கண்ணிகையர் எனில் அதே ஆண்கள் தானே அந்த பெண்களுக்கு நித்திய கண்ணன்கள்!!

//ஓரளவு நெருங்கி வந்து விட்டமாதிரி தெரிகிறது. ம்..ம்...அப்புறம்.//

இல்லையே .. கணக்கு உதைக்குதே. ஒரு ஆணுக்கு 72 ஹூரிகள். ஆண்:ஹூரி = 1: 72
ஒவ்வொரு பெண்ணுக்கும் 72 ஆண் ஹீரிகள் !!
பெண்:ஆண் ஹீரி = 1: 72

ஹூரிக்களுக்கு தனிக்கணக்கு, தனி மஸ்டர் ரோல், தனி தணிக்கை தான் போடணும்!

naren said...

ஐயா தருமி,
நீஙகள் அட்டைப்படத்தைப் பார்க்காமல், முதல் பக்கத்திற்கு சென்றுவிட்டீர்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் அலசி தேடிய வரையில் சரியான பதில் கிடைக்கவில்லை. பதில் அளித்தவையில் ஆயிரம் கேள்விகள். இந்நிலையில் நீங்கள் இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம்......செல்வது கடினம் தான். அதனால் தான் மூமின்களை இறைத் தூதர் துருவி துருவி மார்க்க விஷயத்தில் கேள்வி கேட்க வேண்டாம் என்று அறிவித்துவிட்டார் போலும்.

என் அட்டைப் பட (அடிப்படை) கேள்வி.
1) குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம்?

%அல்லா குரானில் சொல்லிவிட்டார், குரான் 1400 ஆண்டுகல் மாறவில்லை, குரான் போன்று வேறு யாரும் எழுத முடியாது என்ற பதில்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

2) இறைவன் ஒருவனே என்பதுக்கு என்ன ஆதாரம்?
#உலக அத்தாட்சிகளை பார், என்றால் அந்த அத்தாட்சிகளை வைத்து பல இறைவன்கள் இருக்கிறார்கள் என்பதற்க்கும் பொருந்தும்.

3)முகமதுதான் இறைவனின் தூதர், கடைசி தூதர் என்பதற்ககு என்ன ஆதாராம்?
# குரான் ஹதீஸ்கள் தவிர்த்து ஆதாராம் இருக்கிறதா.

4) குரான் தான் இறைவனின் கடைசி, தப்பே இல்லாத, எல்லா காலத்திற்க்கும் பொருந்தும், வேதம் என்பதற்க்கு என்ன ஆதாராம்?

5)அறிவியல் குரானை பின் பற்றி வளர்ந்ததா, தவிர்த்து வளர்ந்ததா?

6) குரான் அறிவியல் பூரவமாக நிருபிக்கப்பட்டது என்றால் எவ்வகையில்?

7) குரானை இறை வேதம் என்றால், நம்பிக்கையுடன் படித்தால் தான் நம்ப முடியும் என சொல்வது ஏன்?

இதற்கு பதில் கிடைத்தால் கதவை திறந்து உள்ளே செல்ல ரெடி. தாயிக்கள் எனக்கு பதில் தர கடமை பட்டிருக்கிறார்கள் என நம்புகிறேன்.

ஷர்புதீன் said...

:-)
for follow ups

saarvaakan said...

நண்பர் நரேன்,
நீங்க புதுசு என்ப்தால் இக்கேள்விகளை கெட்கிறீர்கள்.ஏற்கெனவே நடந்த விவாதங்களில் இருந்து இத்ற்கு பதில் அளிக்கிறேன்.
/1) குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம்?/
குரான் இறைவனால் அருளப்பட்டதற்கு இன்று கண்டறிப படும் பல அறிவியல் உண்மைகளை அன்றே கூறியது ஒன்று போதாதா?.வேண்டுமெனில் இன்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை வழக்கம் போல் இரு காஃபிர் விஞ்ஞானி கண்டுபிடிக்கட்டும்.எங்கள் குரு'அஆஇஈ' அதற்கு குரானில் இருந்து வசனம் காட்டுவார்.இம்மாதிரி அற்புதம் எங்காவது உண்டா.ஆகவே நிரூபிக்கப் பட்டது.இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?


2) இறைவன் ஒருவனே என்பதுக்கு என்ன ஆதாரம்?
முதல் கேள்விக்கு குரான் மட்டுமே மாறாத இறுதி வேதம் என்பதை நிரூபிதோன்.நீங்கள் நேரடி விவாதத்திற்கு வராததால் எங்கள் கூற்று நிரூபிக்கப் பட்டது.ஆகவே குரான் கூறு ஒருவரே கடவுள்.

3)முகமதுதான் இறைவனின் தூதர், கடைசி தூதர் என்பதற்ககு என்ன ஆதாராம்?
குரான் 33:40.
**********************************
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்..
******************
பல ஹதிதுகள் காட்ட இயலும்.

4) குரான் தான் இறைவனின் கடைசி, தப்பே இல்லாத, எல்லா காலத்திற்க்கும் பொருந்தும், வேதம் என்பதற்க்கு என்ன ஆதாராம்?
ஹா ஹா ஹா முதல் இரு கேள்விகளின் பதிலே

5)அறிவியல் குரானை பின் பற்றி வளர்ந்ததா, தவிர்த்து வளர்ந்ததா?

அறிவியலையும் படைத்தது இறைவன்,குரானில் இரகசியங்களாக குறிப்பிட்டு ,அவை காஃபிர்களால் கண்டுபிடிக்கப் பட்டபின்,எங்கள் குரு 'அஆஇஈ' க்கு வசன‌ம் புரிந்து விள‌க்குகிறார்.

/6) குரான் அறிவியல் பூரவமாக நிருபிக்கப்பட்டது என்றால் எவ்வகையில்?/
எங்கள் தளத்தில் பல காணொளிகள் உண்டு அதனை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள் .யு ட்யூபையே நிறைத்து விட்டோம்.

7) குரானை இறை வேதம் என்றால், நம்பிக்கையுடன் படித்தால் தான் நம்ப முடியும் என சொல்வது ஏன்?

உங்கள் தாய் தந்தையரை இவர்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?அது போல்தான்.நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்இதற்குத்தான் சகோதரரே,நீங்கள் நேரடியாக வந்தால நேர்வழிக்கு அழைத்து செல்வோம்.இறைவன் நாடியது போல் தெரிகிறது.இறைவன் மிக பெரியவன்.

_________

தருமி said...

//தாயிக்கள் எனக்கு பதில் தர ..//

????????

சீனு said...

@சார்வாகன்,

மறுபடியும் மொதல்ல இருந்தா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Tamilan said...

//WTF??? Tents even in heaven?? You gotta be kidding me......No FB, No Internet, No TV, Frarris, PlayStation.......Only Tent, Camels, Sex, Huries................................and wine?? No Vodka, Martini, Rum........And you call this 7th century Bedouin mini-Saudi Arabia in sky as heaven?? This is definitely a creation of a man who was short-sighted and who had never seen the world outside his tent, Kabila and Desert!!//
I like this...

viki said...

அய்யா ஓங்க வயசுக்கு நான் ஓங்க காலில்தான் விழனும்.உண்மைய இப்படி தைரியமாக எடுத்து சொல்லும் உங்கள் பணிக்கு ஒரு வணக்கம்.இதை தொடர வேண்டும்.யாரவது ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.நீங்கள் உண்மையை சொல்லுங்கள்.நாங்கள் இருக்கிறோம்.நன்றி மிக்க நன்றி

yasir said...

//Khalwa, லாய்லாஹ் - இதுபோன்ற அறிவுக்கு மட்டுமல்லாது, மனித உணர்வுகளுக்கும் எதிரான, அசிங்கமான கோட்பாடுகளை, எல்லாம் அறிந்த இறைவன் கொடுத்தவை என்று எப்படி நீங்கள் தைரியமாக நம்புகிறீர்கள்? //

த‌லைவா ந‌ம்பிக்கைக்கு தைரிய‌ம் அவ‌சிய‌மே இல்லை. முட்டாள்த‌ன‌ம் தான் அவ‌சிய‌ம். ஒரு விஞ்ஞானி ராக்கெட் விடுவ‌த‌ற்கு பூஜை போடுவ‌தும், ப‌டித்த‌வ‌ர்க‌ள் சாமியார் கால்க‌ளில் விழுவ‌தும், க‌ற்றோர் ச‌பைக்கு வ‌ருவ‌த‌ற்கு ஜோதிட‌ம் பார்ப்ப‌தும், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் ஓடோடிச் சென்று பார்த்து ப‌ர‌வ‌ச‌ப்ப‌ட்டு வ‌ண‌ங்கிக் கொண்டிருப்ப‌தும் எத்த‌னை முட்டாள் த‌ன‌மோ, அது போல் வேத‌ங்க‌ள் க‌ட‌வுள் த‌ந்தார் என‌ ந‌ம்புவ‌தும் இதே ர‌க‌ம்தான்.

Post a Comment