Sunday, May 26, 2013

655. இஸ்லாம் வேகமாகப் பரவுகிறது ...!











*




http://www.thehindu.com/opinion/op-ed/seeking-allah-in-the-midlands/article4743582.ece 


SEEKING ALLAH IN THE MIDLANDS ....

OF THE THOUSANDS OF WHITE BRITONS EMBRACING ISLAM EVERY YEAR, MOST ARE THOUGHT TO BE PROFSSIONALLY SUCCESSFUL, INDEPENDENT-MINDED WOMEN, SAYS A STUDY.


*  ஏறத்தாழ ஆண்டு தோறும் 50,000 ஆங்கிலேயப் பெண்கள் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்கள்.
*  9/11க்குப் பிறகு அதிக பெண்கள் இஸ்லாமிற்கு மாறி வருகிறார்கள்.
*  இஸ்லாமிய ஆண்களைத் திருமணம் செய்வதன் மூலமாகவும் நிறைய பெண்கள் இஸ்லாமிற்கு வருகிறார்கள்.
*  மதம் மாறிய பெண்களுக்கு எதிராக அவர்களது குடும்பம், நண்பர்கள், சமூகம் நிற்பது சாதாரணம்.
*  மதம் மாறிய பெண்களும் பிரிட்டனில் இயங்கி வரும் ஷாரியத் பெண்களுக்கு எதிராக இயங்கி வருவதாகக் கூறுகிறார்கள்.

மத மாற்றம் பற்றி பொதுவாக எனக்குப் பல கருத்துகள் உண்டு. தன் மதமும் புரியாமல், பாதி மட்டும் அறிந்து அடுத்த மதத்திற்குப் போகும் பலரைப் பார்த்துள்ளேன். அல்லது, தனக்குக் கிடைத்த ஏதோ ஒரு நன்மையை வைத்து அடுத்த மதத்திற்கு சென்றவர்கள் நிறைய பேரை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொல்லப்பட்டவர்களை அந்த அட்டவணையில் சேர்க்க விரும்பவில்லை. 

இஸ்லாம் பற்றி அதிகமாகத் தெரியாத நிலையில் இருந்த போது என்னிடமிருந்த  எண்ணங்கள் அந்த மதக் கொள்கைகளை அறிந்த பின் அம்மதத்திற்கு மிகவும் எதிராகத் திரும்பின. . மாற்று மதங்கள் மீது இஸ்லாமிற்கு இருக்கும் ‘கோபமும்,’ எதிர்ப்பும் மிக அதிகம். அந்த வெறுப்புணர்வு அச்சத்தைத் தந்தது. 

அதோடு, மற்ற மதங்களிலிருர்ந்து இஸ்லாமிற்குள் நுழைபவர்கள், அதன் பின் அப்படி மதம் மாறும் தங்கள் உரிமையை முற்றிலும் இழந்து விடுகிறார்கள். இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த  ஒரு சட்டம் இருப்பது தெரிந்தாலே அம்மதத்தின் மீது மரியாதைக்குப் பதில் பயம் தானே வரும் என்பது என் எண்ணம்.

எப்படியோ ... பலர் இஸ்லாமிற்குள் வருகிறார்கள். இனியாவது ஆர்ம்ஸ்ட்ராங்க் .. மைக்கிள் ஜாக்சன் .. பதிவியைத் துறந்த போப் .. எல்லோரும் இஸ்லாமியர்களாக மாறி விட்டார்கள் என்பது போன்ற   இஸ்லாமியரின் வழக்கமானப்  பிரச்சாரத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது.

இக்கருத்து தினசரியில் வந்த அடுத்த நாள் மூன்று இஸ்லாமியரின் கடிதங்கள் Letters to the Editor-க்கு வந்தது. அது ஒன்றும் ஆச்சரியமில்லை!

*****************************

http://articles.timesofindia.indiatimes.com/2013-05-24/uk/39500802_1_woolwich-muslim-communities-riot-police

நட்ட நடுத் தெருவில், பட்டப் பகலில்  ஆங்கிலேய சிப்பாய் ஒருவரை இரு இஸ்லாமியர் பலர் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்கள். இந்த கொலையில் சம்பந்த்தப்பட்ட இரு நைஜீரியர்களும் கிறித்துவத்திலிருந்து இஸ்லாமிற்கு சமீபத்தில் மதம் மாறியவர்கள். இவர்களது வெறிச் செயலை //It was also a betrayal of Islam - and of Muslim communities who give so much to our country.// - என்கிறார் ஆங்கிலேயப் பிரதமர்.

கொலையாளிகள் ஒருவனான Adebolajo  banned Islamist organization Al Muhajiroun which promotes Sharia law-ல் சேர்ந்து, பின் விலகி,. இன்னொரு militant Islamist group Al Shabaab in Somalia-ல் சென்ற ஆண்டு சேர்ந்துள்ளான்.

இஸ்லாமில் சேருவதோடு நின்று விட்டால் பரவாயில்லை போலும். ஏனெனில் பல்வேறு உருவத்தோடு வளர்ந்து வரும் இஸ்லாமிய குழுக்கள் இவ்வாறு வல்லினத்தை வளர்த்து விடுகின்றன.

இந்த இரு  கொலைகாரர்களும் அப்படை வீரனைக் கழுத்தை அறுத்துக் கொல்லும் போது ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தினார்கள். கழுத்தை அறுக்கும் போது ஏன் அல்லாஹூ அக்பர் என்று கத்துகிறார்கள் என்று முன்பே கேட்டிருந்தேன். பல கேள்விகளுக்குப் பதிலில்லாதது போல் இக்கேள்விக்கும் சகோக்கள் யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை.

இச்செயலை எதிர்த்து எந்த இஸ்லாமியரும் அத்தினசரிக்கு எக்கடிதமும் அடுத்த நாள் எழுதியதாக நான் பார்க்கவில்லை.

********************







*

10 comments:

abdul said...

அய்யா தருமி அவர்கள்
//இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த ஒரு சட்டம் இருப்பது தெரிந்தாலே அம்மதத்தின் மீது மரியாதைக்குப் பதில் பயம் தானே வரும் என்பது என் எண்ணம்.//

ஏன் பயமென்று உங்களுக்கு நீங்களாகவே கற்பனை செய்கிறீர்கள் .பிடித்திருக்கலாம் . அல்லது மற்றவைக்கு இது பரவாயில்லை என்று இருக்கலாம் .தீர விசாரித்து விட்டு எழுதுங்கள்

தருமி said...

//பிடித்திருக்கலாம் . அல்லது மற்றவைக்கு இது பரவாயில்லை என்று இருக்கலாம் //

பிடித்திருக்கலாம் .

மற்றவைக்கு இது பரவாயில்லை என்று இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்று விட்டு விட்டுப் போகலாம்.

-- இப்படி இருந்தால் எப்படி இருக்கும். கட்டிப் போட்டு வைக்கிறதை விட இது நல்லா இருக்கும்ல ..

வேகநரி said...

இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த ஒரு சட்டம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது, அல்லது அப்படி ஒரு மதம் சொல்லும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.எங்களுக்கு தானே தெரியும் அது மதமல்ல ஒரு மார்க்கமானது என்பது:)
நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரையாவது கண்டு பிடித்து காரணம் அறிய தான் முயல்கிறேன். ஆனா வெள்ளை சிப்பாய்க்கு கழுத்தை அறுத்துக் கொலை செய்த இஸ்லாம் பற்றி அலறும் வெள்ளையர்களை தான் காண முடிகிறது.

தருமி said...

//நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரையாவது கண்டு பிடித்து காரணம் அறிய தான் முயல்கிறேன். /

all the best .........

abdul said...

//நானும் ஒரு இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரு வெள்ளையரையாவது கண்டு பிடித்து காரணம் அறிய தான் முயல்கிறேன்.///
முயற்சித்துவிட்டு கலப்பிடமில்லாமல் எழுதலாம். பயன் தரும்.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,

நல்ல கேள்விகள். மதவாதிகள் தங்கள் மதத்தினர் ஒடுக்கப்படுவதாக ,உணர்வுகளைத் தூண்டுவகையில் பிரச்சாரம் செய்வார், மதத்திற்கு உயிர்விட்டால் கிளுகிளு சுவனம் என்பார். அதில் புத்தி பிசகி யாராவது எதையாவது செய்து கையும் கள்வுமாக மாட்டிக் கொண்டால்[இதுதான் விடயம்] இது மதத்திற்கு முரண் ஆனது என பல்டி அடிப்பதும் நாம் அறிந்த விடயம்தானே!!

உயிரையும் விட மேலான ________ என் சொல்பவர்களே இதன் அத்தாட்சி.
***
பெண்கள் மதம் மாறுகிறார் என்றால் அது பெரும்பாலும் காதல்,திருமணம் சார்ந்தே இருக்கும்.ஒரு திருமணம் ஆன காஃபிர் பெண்ணைத் திருமணம் செய்யவும் ஷரியா அனுமதிக்கிறது என்றால் எதற்கு என சிந்திக்க மாட்டீர்களா?

இதன் இரக்சியம் என்ன?

ஒரு காஃபிர் பெண் இஸ்லாமுக்கு மாறிவிட்டால்,காஃபிர் பெண் முஸ்லீமால் சிறை எடுக்கப்ப்ட்டால் முந்தைய திருமணம் செல்லாது!!
இதுவே ஏக இறைவனின் சட்டம் ஹி ஹி
http://spa.qibla.com/issue_view.asp?HD=12&ID=176&CATE=11

(a) Is the woman considered immediately divorced upon converting to Islam, and if not, what procedures are to be taken?

If a married, non-Muslim woman becomes Muslim in non-Muslim lands, the husband and wife are not considered immediately legally separated. Rather, the husband is given a “grace period”, namely the length of a regular post-marital waiting period (‘idda) [three menstrual cycles for a woman who has menstrual cycles, or three months for those who don’t] before she is considered legally separated from him in the eyes of the Sacred Law. Imam Quduri writes in his Mukhtasar:

“If a woman embraces Islam in Dar al-Harb, her separation [from her husband] is not effected until she has completed three full menstrual periods (t: all of which were after her becoming a Muslim). [When she has completed the three menstrual periods], she becomes separated from her husband.” [Mukhtasar al-Quduri, chapter on “Marriage”]

நன்றி!!

தருமி said...

//If a married, non-Muslim woman becomes Muslim in non-Muslim lands, ..//

அப்டின்னா Muslim lands வேற ரூல்ஸ் இருக்கா?

அல்லா எப்பவுமே ஒரே சைட்ல இழுக்குறாரே.. இஸ்லாமியர்னா ஒண்ணு; காபிர்னா வேற .. நல்ல சாமி!

abdul said...

இந்த பதிவு தாங்களாகவே சுயமாக மதம் மாறியவர்களை பற்றி .
ஏன் திசை திருப்புகிறீர்கள்

தருமி said...

//ஏன் திசை திருப்புகிறீர்கள் //

நாங்கள் உங்களைப் போல் ‘திசை’களைப் பார்ப்பவர்கள் அல்லவே!

இங்கே திசைகள் திருப்பப்படுவதில்லை, அப்துல்.
சில கேள்விகள் வைக்கிறோம். மற்ற சகோக்கள் அமைதி காப்பது போல் நீங்களும் பதில் சொல்லாமலேயே இருக்கலாம். அல்லது பதில் சொல்லலாம் ... அவ்வளவே!

தருமி said...

abdul

புதிய பதிவரான நீங்கள் இங்கே வந்ததே ஆச்சரியம். பின் அப்படியே ’மறைந்து’ விடுவீர்கள் என்பதும் தெரியும்.

சும்மா சொல்லக்கூடாது .. சகோக்கள் மத்தியில் உள்ள இந்த நெருக்கமும், கட்டுப்பாடும் .. ஆஹா .. நன்றாக இருக்கிறது.

Post a Comment