Friday, March 21, 2014

732. இந்து மதம் எங்கே போகிறது? --- 6






*


***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****


பிராமணர்களின் வாழும் பகுதியாக வேதத்தில் கூறப்பட்ட இடங்கள் எல்லாம் இமயமலைச்சாரல் பகுதிகள். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானமாக இருக்கிறது. (250)


காவிரிக் கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால் ... அந்த மந்திரத்தை மாற்ற வேண்டும். சென்னையில் இருக்கும் பிராமணர்கள் ..

’நமோ அடையாறு கூவம் யோஹே 
மத்யேயே வசந்தீ ... என்றல்லவா வணங்க வேண்டும். (252)

சம்ஸ்கிருத பாஷையைத்தான் போற்றுவோம்; சமஸ்கிருதம் சொன்னால் தான் கேட்போம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்களுக்கு நானும் ‘ஒற்றை ஸ்லோகம்’ ஒன்று சொல்கிறேன்.

 ’வேத ப்ராமாண்யம் கஸ்ய மிது 
கர்த்ரு வாதஹா ஸ்நானே 
தர்மேச்சா ஜாதிவாத அவலேயஹ 
சந்த பாரம்பஹா பாபஹான யசைநீ 
ஸ்தவஸ்த ப்ரக்ஞாநாம் சஞ்சலிங்கானீ ஜாம்யே ....’

’மனிதன் உயிருள்ளவன். ஜீவன் உள்வன். சிந்திக்க வேண்டிய கடமை கொண்டவன்.(’சிந்திக்க மாட்டீர்களா?’ - இதை எங்கேயோ கேட்டது போல் உள்ளதே!! இப்படி சிந்தனையாளனாக இருக்க வேண்டிய மனிதன் இன்று
வெறும் ஜடமாகி விட்டான். அதாவது குட்டிச் சுவர் போலவும் சாலையில் கிடக்கும் கல்லைப் போலவும் பயனற்ற ஜடமாகி விட்டான்.’

இதற்குப் பல காரணங்கள்.
அவைகளின் பட்டியல்:
1. எதற்கெடுத்தாலும் வேதம் சொன்னதையே நம்பிக்கொண்டு அதில் நல்லவை கெட்டவை எது என்பதை அறியாமல் அப்படியே பின்பற்றுவது – வேத ப்ராமாண்யம்.

2. நம் எல்லோரையும் ஒருத்தன் படைத்தான்; அவன்தான் நமக்கு கர்த்தன்; அதாவது காப்பாளன் என்று சும்மா நம்பிக்கொண்டிருப்பதால் மனிதன் ஜடமாகிறான்.

3. ஸ்நானே ... குளியல். இதனோடு மதத்தைச் சம்பந்தப்படுத்தி ஜடமாகிப் போனான்.

4. ஜாதிவாதம் (254)

5. சந்தாபாரம் – உடல் ரீதியாக தன்னையே வருத்திக் கொண்டு ஜடமாகிறான்.

இவைகள் தான் சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள். (255)

மலை மக்கள் வணங்கிய காளி மாதாவை பிராமணர்கள் காலப்போக்கில் ஆகம விதிக்குள் அடக்கி அவளை ஒரு ஆண் தெய்வமாக்கி விட்டார்கள்.

பிராமணர்கள் தங்கள் அடிமடியை அவிழ்த்துக் கொண்டிருப்பதை மலை மக்கள் உணர்ந்தார்கள். போராடத் துவங்கினார்கள். அவர்களின் ஆயுதங்களை பிராமணர்களின் அறிவு தோற்கடித்தது.

இதன் மூலம் ஒரு உடன்படிக்கை. பிராமணர்கள் உள்ளே போய் கடவுளை சேவிக்க, மலை மக்கள் அம்பட்டர்களாய் வெளியே அம்ர்ந்து பக்தர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்பதே அது! இருவருக்கும் தட்சணை கிடைக்கும்!(269)

திருப்பதி மலைக்காளியை பரம சிவனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றிவிட்ட நிலையில் தான் இந்தத் தகவல் வைணவர்களுக்குக் கிடைத்தது. கொதித்தெழுந்தனர் வைணவர்கள்.

மலை மீது அடுத்ததாக வைணவப் படை ஏறியது. ஸ்ரீராமானுஜர் 11-ம் நூற்றாண்டு தன்னுடைய மாமா திருமலை நம்பியிடம் ராமாயாணம் கேட்பதற்காக திருப்பதிக்குப் போனார்..(270)

இந்த வைணவ – சைவ போரில் ராமானுஜர் ஈடுபட்டதைப் பற்றி குரு பரம்பரை என்ற புனித நூல் விளக்குகிறது. (271)

இரண்டு தரப்பிலும் வாதப் பிரதிவாதங்கள் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

அம்மலைக்கே உரிய மலை மக்கள் இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் முழித்தனர்.

குரு பரம்பரையில் ராமானுஜர் ஒரு வழி சொல்கிறார். பகவானே நேரில் வந்து சொல்லட்டும் என்று ஒரு பதில் தருகிறார். (272)

பெருமாளின் சங்கு சக்கரம், சிவனின் மான், மழு என்ற ஆயுதங்களையும் சன்னதியில் விக்கிரகத்துக்கு அருகே வைத்து விட்டு ராத்திரி சன்னதியை இழுத்துப் பூட்டி விடுவோம். காலையில் வந்து பார்ப்போம். விக்கிரம் எந்த ஆயுதத்தைச் சூடி நிற்கிறது என்று பார்த்து முடிவு கட்டுவோம் என்றார்.(273)

எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

இரவு ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷன் அம்சம். ஆகவே அவர் பாம்பு உருவம் எடுத்து, கோமுகம் / நீர்மம் / தூம்பு வழியாக உள் நுழைந்து சங்கையும் சக்கரத்தையும் எடுத்து விக்கிரகத்திற்கு சூட்டி விட்டு, மான், மழு இரண்டையும் சிதைத்து விட்டு வந்து விடுகிறார். (276)

இதைப் பற்றிப் பேச நீர் யார் என்று என்னிடம் கேள்வி கேட்கின்றார்கள்?

இதற்குப் பதிலாக இன்னொரு நிகழ்வு பற்றிக் கூறுகிறேன். திருப்பதி மலையில் செய்யக்கூடிய பெரிய கைங்கர்யம் பெருமாளுக்கு நித்யப்படி தீர்த்தம் கொண்டு வருவது தான். (277)

ஒரு முறை திருமலை நம்பி தீர்த்தம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு நீர் எடுத்து வரும்போது வழியில் ஒருவர் இவரை, ‘தாத்தா’ என்று கூப்பிட்டு நீர் கேட்கிறார். நம்பி மறுக்கும் போது அவர் ‘எனக்குத் தண்ணீர் தந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றின புண்ணியம் கிடைக்கும். அந்தக் கல்லூக்கு ஊற்றி என்ன பண்ணப் போறே?” என்று கேட்கிறார். நம்பி மறுத்து நடக்கும் போது மீண்டும் அதே குரல். நம்பி திரும்பிப் பார்க்கும் போது பெருமாளே தண்ணீர் கேட்டு சோதித்திருக்கிறார் என்பது நம்பிக்குத் தெரிகிறது. (278)

 ‘தாத’ என்றால் அப்பா என்று ஒரு அர்த்தம் உண்டு. பெருமாளை பிரம்மனுக்கு அப்பா என்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவான பெருமாளே நம்பியை ‘தாத…’ என்றழைத்ததால் திருமலை நம்பி அடியார்க்கு தாத்தா ஆனார். அவரது வம்சத்தினர் தாத்தாச்சாரியார்கள் ஆனார்கள். அடியேனும் அப்படி வந்தவன் தான்.(279)

திருப்பதி மலையோடு ஒன்றியவர் இன்னொருவர். அவர் ஹத்தியராம் பாபுஜி.

வட இந்தியரான இவர் கோயிலில் சேவகம் செய்ய ஆரம்பித்து, பின் கோயிலின் நிர்வாகியாக ஆகி விடுகிறார்.(280)

திருப்பதி கோயிலில் உள்ள தெய்வம் மலை மக்களது காளி என்பதற்கான இன்னொரு தடயத்தை ஆசிரியர் தருகிறார். திருப்பதி கோயிலைப் பிரபல்யமாக்க மொட்டை போடுவதை பாபாஜி தீவிரமாகக் கடைப்பிடித்தார். அப்போது சில பிராமணர்கள் அவரிடம், ‘விக்ரஹத்தின் கைகளில் பாம்பு இருக்கிறது. அதை எடுத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல் .. பின்னாலுள்ள பின்னலையும் நீக்கி விட்டால் ...’ என்றனர். பாபாஜி மறுத்து விட்டார். பின்னால் என்ன பின்னல்? (281)

ஜெருசலேமில் உள்ள ஒரு பெண்மணி இசையரசி எம். எஸ். அம்மா அவர்களுக்குத் தெரியும். இந்து மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியவருக்கு எனது தொடர்பு கிடைக்கிறது. அவரை அழைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வெங்கடாஜலபதியை முழுமையாகப் பார்க்கும் போது தான்  திருப்பதி பெருமாளுக்கு அழகான தலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள் என்பதைப் பார்க்கிறார்.(283)

வர்த்தகக் கடவுளாக மாறி விட்ட வேங்கடாஜலபதியின் முந்தைய நிலைமையைச் சொன்னேன். மலையின் மைந்தர்கள், முதலில் காளியை வழிபட்டார்கள். இன்று வெளியே உட்கார்ந்து மொட்டையடிக்கிறார்கள். இதை பெரிய பிஸினஸ்ஸாகவும் ஆக்கி விட்டார்களே ... அந்த ஆதங்கத்தில் தான்... திருப்பதி பற்றிய இத்தனை திருப்பங்களையும் சொன்னேன்.

இதற்கு மேலும் இன்னும் சில ஆதாரங்களைக் கூட நாம் சேகரிக்க முடியும். திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கைகளில் சங்கு சக்கரமும் இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாக இருக்கும். ஆனால் திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். சங்கு சக்கரம் தோள்பட்டையில் தான் தொற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்து, பெருமாளின் பக்கத்தில் பிராட்டியைப் பார்த்ததுண்டோ? (284)

பிராட்டியார் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறார். மலை மக்களின் காளியை மலையேறியவர்கள் மாற்றி விட்டார்களே ... அந்த உரிமைப் பிரச்சனைக்குத் தான் இப்படிச் சொன்னேன். (285)

அடுத்து …

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமம். அது பாண்டிய ராஜாவிடமிருந்த மலை தேசம். வளங்கொழித்துக் கிடந்தது. திடீரென்று குதிரைகளில் வந்த ஒரு சிப்பாய்க் கொள்ளைக்காரர்கள் சுழன்றடித்தார்கள். கொள்ளையடித்ததும் சுற்றும் பார்த்தார்கள். சுற்றிலும் 5 குன்றுகள். கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள். காந்த மலை என்ற அந்தக் குன்றை அடைந்ததும் அங்கே மலைவாழ் மக்கள் வைத்திருந்த தங்கச் சிலை அவர்கள் கண்ணைப் பறித்த்து. (286)

அங்கே நடந்தது பற்றி இரு கருத்துகள் உள்ளன. கொள்ளையடித்தார்கள் என்பது ஒரு கருத்து. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கினார்கள் என்ற செய்தி.

தங்கள் சிலை கொள்ளையடிக்கப்பட்டதும் காந்த மலையிலிருந்து இறங்கி 5 குன்றுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்னொரு அய்யனார் காவல் சிலையை உருவாக்கினர். பின்னால் இதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. முதலில் பொன் விக்கிரகம் இருந்த இடம் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. இப்படி எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலை மக்களின் சிலை தான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (287)

அய்யனாருக்கு வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்போதைய கேரளா (ஆந்திரப் பிரதேசம் என்று நூலில் உள்ளது??) நம்பூதிரிகள் பூணூலை முறுக்கிக் கொண்டு வந்தனர்.

அவர்கள் புது ஐதீகத்தைக் கிளப்பினார்கள்.(288) இது உங்க அய்யனார் இல்லை; எங்க அய்யப்பன் இவன் என்றார்கள். (289)

பத்மாசுரன் என்ற ஓர் அசுரன் பயங்கர தவம் இருந்தான். சிவனும் காட்சி கொடுத்தார்; என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார். ‘நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் பஸ்பமாக வேண்டும்’ என்றான். அதை சேங்ஷன் பண்ணி விட்டார் சிவன். எல்லார் தலையிலும் கைவைத்த பத்மாசுரன் கடைசியில் சிவனிடமே வந்தான். தன் வரமே தன்னை அழிக்க வந்ததை அறிந்த சிவன் திருமாலிடம் ஓடினார்.

பெருமாள் மோகினியானார். (290) மோகினி பார்த்த பத்மாசுரனுக்கு எல்லாம் மறந்து போனது.

மோகினியும் ஆட ஆரம்பித்தாள், என்னைப் போல் ஆடினால் நான் கிடைப்பேன்; தயாரா என்றாள். பத்மாசுரனும் போட்டிக்குள் இறங்கினான். ஆட்டத்தில் மோகினி தலையில் கை வைக்க, பத்மாசுரனும் தன் தலையில் கை வைத்து எரிந்து போனான்.(291)

ஆஹா.. பத்மாசுரன் இறந்து விட்டான் என்று நினைத்துத் திரும்பிய சிவனின் கண்ணில் மோகினியின் அழகிய உருவம் தெரிய, அவளை அவர் பிரேமிக்க … இந்த சம்பவத்தால் மோகினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த தெய்வக் குழந்தை தான் அய்யப்பன். இந்த அய்யப்பன் கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல, (293) அவர்களும் நம்பினார்கள்.

இரண்டு மூர்த்திகளால் அவதரித்த அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள் என்றார்கள்.

 மலை மக்கள் பூக்கள் போட சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள். அவைகளை சாதாரண படிகள் அல்ல; 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்த்தவை; 6 திருப்படிகள் முருகன் அம்சம் கொண்டவை; 6 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பனின் அம்சங்கள். மண்டலம் இருந்து.

மாம்ஸம் விலக்கி, சுத்தமாக இருந்தால் தான் இங்கே ஏறமுடியும் என்றார்கள். அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது.

பிராமணர்கள் மேலே சென்றனர். அவர்களின் கண்களில் ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. (294)

நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அது தான் அந்தக் காந்த மலையில் ஜொலிக்கிறது என்றார்கள் மலை மக்கள். அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டு வாசி பக்தை இருந்தாள். அவளை புஷ்பம் இறைத்து, தேவர்கள் வாழ்த்த ஒரு பெரிய ஜோதி தோன்றியது. அதில் சபரி கலந்து மோட்சம் அடைந்தாள் என்றார்கள் நம்பூதிரிகள். அந்த மோட்ச ஜோதி அது என்றார்கள்.

இப்போது நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு செய்து அங்கே தீமூட்டி வருகிறார்கள்.

இதை பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். (295)





*

4 comments:

வவ்வால் said...

தருமிய்யா,

மிலேச்சர் என்றால் மாமிசம் உண்பவர்கள், ஆர்யர்களும் மாமிசம் உண்பார்கள்.

# சபரி மலை சாஸ்தா,அய்யப்பன் ஆதியில் புத்த மடாலயம்,சுமார் 3ஆம் நூற்றாண்டில் வந்த சீனர் ஃபா ஷுன்சீ என்பவர் குறீப்பீட்டூள்ளார்.

# பேரா.வசந்தன் குறீத்த நினைவேந்தல் யதார்த்தமாக உள்ளது.

விரிவாக பின்னர் வருகிறேன்.

தருமி said...

//அய்யப்பன் ஆதியில் புத்த மடாலயம்..//

ashokar நூலில் இது பற்றி கூறப்பட்டுள்ளது.

”தளிர் சுரேஷ்” said...

திருப்பதி மலை பாலாஜி காளி என்றும் சுப்ரமண்யர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்! வழிபாடுகள் திரிபடுவதை அழகாக சொல்லிச் செல்கிறது பதிவு! நன்றி!

S.P.SENTHIL KUMAR said...

பல தகவல்களை தெரிந்து கொண்டேன். அய்யா!

Post a Comment