Saturday, March 07, 2009

298. கடவுள் என்றொரு மாயை --- 1

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12


*


கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


*


*


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


According to the dictionary supplied with Microsoft Word: delusion = a persistent false belief held in the face of strong contradictory evidence, especially as a symptom of psychiatric disorder" (pp28)


delusion: தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவைகளை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி.



இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. வாசிக்க ஆரம்பித்ததுமே மிகவும் பிடித்துப் போனது. இருக்காதா, பின்னே! நம்ம 'சைடு' ஆளாச்சே. ஆரம்பித்திலிருந்தே நிறைய கருத்துக்கள் பிடித்துப் போக, அதிலும் அவர் ஒன்று சொல்கிறார்: இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை. இப்படி இருக்கிற ஆளுககிட்ட இந்த நூல் சொல்ற சேதிகளை பண்டமாற்று செய்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் இந்தத் தொடர் பதிவுகளை இட நினைத்துள்ளேன்.

அவ்வப்போது, அங்கங்கே பிடிக்கிற இடங்களை தமிழ்ப்படுத்தி இங்கு இடலாமென ஆவல். சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் கருத்துக்களாகவே இருக்கும். நான் ஏதாவது சொல்ல ஆசைப்பட்டால் அதைக் கருப்பில்லாத வேறு வண்ணத்தில் தருவதாக உத்தேசம். அப்போதுதானே கேள்வி-பதிலுக்கும் வழியிருக்கும்.

==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

ROBERT M. PIRSIG (Author of ZEN AND THE ART OF MOTORCYCLE MAINTENANCE:

WHEN ONE PERSON SUFFERS FROM A DELUSION, IT IS CALLED INSANITY. WHEN MANY PEOPLE SUFFER FROM A DELUSION IT IS CALLED RELIGION. (pp 28)

புரிஞ்சிருக்குமே; அதான் தமிழில் சொல்லலை!!

========================================



ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:

* நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.

* இயற்கைக்கு ஏதோ ஒரு குறிக்கோளோ அர்த்தமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயற்கையின், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை. (pp 36)


ஐன்ஸ்டீனின் மத மறுப்பு அறிக்கைகளுக்குப் பிறகு அவரைக் கண்டித்து பலரும் எழுதியும் பேசியும் வந்தனர். எல்லா பெரிய மனிதர்களையும் போலவே ஐன்ஸ்டீனும் கடைசிக் காலத்தில் கிறித்துவரானார் என்ற புரட்டுச் செய்திகளும் அவர் காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்டன!
====================================


CARL SAGAN in his book, "PALE BLUE DOT":

எந்த ஒரு பெரிய மதமாவது அறிவியல் உண்மைகளை அறிந்து, பின், "அடே! நாம் நினைத்தவைகளை விடவும் இந்தப் பிரபஞ்சம் பெரியது; நம் நபி / தூதுவர் / (புத்தகத்தில்: prophet) சொன்னதைவிடவும் மகத்தானது; பிரமிப்பூட்டுவது" என்று ஏன் சொல்வதில்லை? அதற்குப் பதிலாக, "இல்லை .. இல்லை ..! என் கடவுள் அப்படி ஒன்றும் பிரமாண்டமானவரில்லை; (அவர் இந்த உலகுக்கானவர் மட்டுமே)" என்றுதான் சொல்கிறது. (நம் மதங்கள் யாவுமே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை நினைவில் கொள்வதில்லை; மனிதகுலம், இந்த நமது உலகம் இதைத்தாண்டி யோசிப்பதில்லை.) (pp 33)

=====================================
DOUGLAS ADAMS:

இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல - இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews)சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி! என்பது எவ்விதத்தில் சரி.

சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது? (pp 43)
=====================================

மதம் என்றால் சட்டமும் வளையும்.

மதம் என்றாலே சும்மா அதிருதில்ல ...!

2006-ம் ஆண்டு, பிப். 21-ம் தேதி வழக்கு ஒன்று அமெரிக்க உச்ச நீதி மன்றத்திற்கு வந்தது.
Centro Espiritia Beneficiente Uniao do Vegetal என்ற ஒரு கிறித்துவ மதக் குழு தடை செய்யப்பட்ட dimethyltryptamine என்ற வேதிப்பொருள் அடங்கிய hoasca tea-யைக் குடித்தால்தான் தங்கள் கடவுளோடு தாங்கள் ஐக்கியமாக முடியும் என்றும் அதனால் அந்த டீயை அருந்த தங்களுக்கு உரிமை வேண்டும் என்று ஒரு வழக்குத் தொடர்ந்தனர். மதத்தின் பெயரே இங்கு ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டது. வழக்கும் வென்றது! மதம் என்னும் தாயத்து செய்த மாயம் அது!

2004-ம் ஆண்டு ஜேம்ஸ் நிக்சன் என்ற மாணவன் ஒரு டி-சட்டையைத் தன் பள்ளிக்கு அணிந்து வந்தான். அதில், "ஓரினச்சேர்க்கை பாவம்; இஸ்லாம் ஒரு பொய்; கருச்சிதைவு கொலைக்குச் சமம்" என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. பள்ளி அவன் அந்தச் சட்டை அணிவதை அனுமதிக்க மறுத்தது. பெற்றோர்கள் வழக்கு மன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தவில்லை. பதிலாக, "மதச் சுதந்திரம்" என்பதே வழக்கின் அடிப்படையாக எடுக்கப் பட்டது; வழக்கும் வெற்றி கண்டது.

இதுபோல் பல வழக்குகள். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்த்து பல வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாமே 'நான் கிறித்துவனாக இருப்பதால் எனக்கு அடுத்தவனின் தனிப்பட்ட செயல்களிலும்கூட மூக்கை நுழைக்க உரிமையுள்ளது' என்ற நினைப்பில்தான் தொடுக்கப் பட்டன; வெற்றியும் பெற்றன. (pp44-46)



*

இன்னும் வரும் ...





*

311 comments:

1 – 200 of 311   Newer›   Newest»
தருமி said...

ரொம்ப ஆச்சரியமா இருக்கு .. இந்தப் பதிவுப்பக்கமே யாருமே வரலையா .. இல்ல வந்துட்டு பேசாம போய்ட்டாங்களா .. அல்லது சாமி கண்ண கிண்ண குத்திடும்னு பயந்து ஒண்ணுமே சொல்லாம போய்ட்டாங்களா ..

ஒண்ணுமே புரியலையே'ப்பா

அப்துல் குத்தூஸ் said...

//ஒண்ணுமே புரியலையே'ப்பா//

எப்படி புரியுமப்பா... எப்படி புரியும்?

உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சாய்ஸ்ல விட்டுட்டு போறிங்க. அப்புறம் எப்படி மத்தவர்களிடம் மட்டும் உங்களின் கேள்விக்கு பதில் எதிர்பார்க்கின்றீர்கள்?

இதையும் உங்க சாய்ஸ்ல உட்டுடுங்க.

Unknown said...

Hi,
I am new to these Tamil blogs, I started reading your blogs recently. Really nice postings. I like to write this comment in Tamil font but don't know how to.

Sathees

தருமி said...

//இதையும் உங்க சாய்ஸ்ல உட்டுடுங்க//

சரிங்க'த்தா ...

குடுகுடுப்பை said...

நான் இருக்கேன்.மதங்களை கேள்வி கேக்கும் தைரியம் கடவுளுக்கு கூட இருக்குமான்னு எனக்கு சந்தேகம்தான்.

குடுகுடுப்பை said...

என்னைப்பற்றி: நான் கோவிலுக்கு போவேன் சாமி கும்பிடுவேன்.ஆனால் ஒரு நாத்திகப்பின்னனி உள்ள குடும்பத்தில் இருந்து வந்ததால்,என் பக்தி மீது எனக்கே நம்பிக்கையில்லை.

தருமி said...

thank you sathees.
for your ref:
http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_4

wish you are able to type in tamil soon and விரைவில் தமிழ்மண ஜோதியில கலக்க வரவேற்பும் வாழ்த்தும்...

தருமி said...

குடுகுடுப்பையாரே,

//மதங்களை கேள்வி கேக்கும் தைரியம் கடவுளுக்கு கூட இருக்குமான்னு எனக்கு சந்தேகம்தான்.//

என்ன அப்படி சொல்லீட்டீங்க!! நிறைய பேரு ஆரம்பிச்சாச்சில்லா ..

மணிகண்டன் said...

:)-

puthisuthaan said...

பின்னூட்டுகள் இல்லை இல்லைன்னு ரொம்ப அலுத்துக்கினார் தருமி : ஆகவே ஒரு பின்னூட்டு :

"மதத்தை திட்டும் / அல்லது எதித்து கேள்வி கேட்கும் அல்லாரையும் சவுதி அரேபியாவுக்கு அனுப்புங்கப்பா !!"

ப்ளைட் சார்ஜு ரொம்ப ஆவும்னா அண்டை நாட்டு தாலிபான் கிட்டயோ புதிசா மதம் மாறின முஸ்லீம்கிட்டையோ புடிச்சு குடுத்தா போச்சு :-)

கோவி.கண்ணன் said...

//WHEN ONE PERSON SUFFERS FROM A DELUSION, IT IS CALLED INSANITY. WHEN MANY PEOPLE SUFFER FROM A DELUSION IT IS CALLED RELIGION. //

அது........!

Ponchandar said...

நான் உங்களின் இந்த பதிவைப் பற்றி இல்லாமல் எனது கேள்விகளை கேட்பதற்கு மன்னிக்கவும். நீங்கள் பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் படித்தீர்களா ? சொந்த ஊருக்கு இப்பொழுதும் வருவதுண்டா ? நான் வலையுலகத்திற்கு புதியவன். உங்களின் எழுத்துக்கள் என்னையும் எழுதத் தூண்டுகின்றன. நன்றி !

தருமி said...

பொன்சந்தர்,

வாருங்கள் பதிவுலகத்திற்கு .. வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள் சீக்கிரம் ..

தனி மயிலும் அனுப்பியுள்ளேன்.

தருமி said...

puthisuthan,

மொத மொதல்ல வரும்போதே இப்படி குண்டு போட்டா எப்படி?

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க பெயரை எப்படிக் கூப்புடுறது? புது சுத்தன் / புத்தி சுத்தன்/ புதுசுதான் ...?

தருமி said...

வாங்க கோவி.

மணிகண்டன்,
அப்போ, அப்டின்றீங்க ... இல்லியா?

வோட்டாண்டி said...

இதுல்ல சொல்றதுக்கு என்ன இருக்கு..
மாண்புமிகு முஸ்லிம் பதிவர்களுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம்
ஏன்னா இந்தவாட்டி நீங்க கிறிஸ்துவ மதத்த மட்டும் தான டார்கெட் பண்ணிருகீங்க..

முஸ்லிம் பதிவர்கள் பாராட்டு கூட தெரிவிகாதத பார்த்தா ஒருவேளை ஆத்திகர்கள் எல்லாம் ஒண்ணு சேந்து உக்காந்து யோசிகிறான்களோ என்னவோ!! இங்க பின்னூட்டம் போடாம தனியா அவங்க வலை தளத்துல ஒரு பதிவு போடுவாங்க..

கையேடு said...

மிகவும் கவர்ந்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று, உங்களைக் கவர்ந்த பகுதிகளைக் காண ஆவலாகயுள்ளேன்.
ஆனால், ஒரு ஆங்கில அகராதி அருகில்லாமல் என்னால் பல பகுதிகளைக் கடக்க முடியவில்லை.

கபீஷ் said...

ஆழ்ந்த சிந்தனை! அற்புதமான கருத்துக்கள்.:-) வெயிட்டீஸ் ஃபார் அடுத்த பகுதி. இதுல இருக்கறதுல நிறைய கருத்ஸை வழிமொழியறேன்.
எல்லாத்தையும் இல்ல :-)

Jayabarathan said...

"நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது."

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Jayabarathan said...

"நமது வலுவற்ற நெஞ்சம் உணரும்படி, மெய்ப்பொருள் ஞானத்தைத் தெளிவு படுத்தும், ஓர் உன்னத தெய்வீகத்தைப் பணிவுடன் மதிப்பதுதான் என் மதம். அறிவினால் அளந்தறிய முடியாத பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி எங்கும் நுட்ப விளக்கங்களில் பரவி யிருப்பதை ஆழ்ந்துணரும் உறுதிதான், என் கடவுள் சிந்தனையை உருவாக்குகிறது."

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Jayabarathan said...

கடவுள் ஒரு மாயையா ? இல்லை வடிவில்லாக் கடவுள் ஒரு கற்பனை மெய்ப்பாடு.

கடவுளைப் பற்றி எனது கருத்துக்கள் :

இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் தோன்றிய ஒளிமந்தை காலாக்ஸிகள், அவற்றில் உதித்த கோடான கோடி விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், அவற்றில் ஒன்றான நூதனப் பூமியிலே படைக்கப் பட்ட மனிதர், உயிரினம், பயிரினம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்போம். அவை உண்டாகச் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

சீராக இயங்கி வரும் நமது பரிதி மண்டலம், அதில் ஒன்றான பூமியின் இயற்கை அமைப்புகள் யாவும் படிப்படியாக உண்டாகச் சுமார் 4.7 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன.

பிரமிக்கத் தக்க இத்தகைய மகத்துவப் படைப்புகள் "தொப்பென" மந்திர சக்தியில், மாயமாக, மர்மமாக இங்கே தாறு மாறாய் விழவில்லை. (In the logically & orderly formed Structure of the Universe, there are No Miracles or Witchcraft. Look at Darwin's Theory of Life's Evolution)& Newton's Theory of Gravity. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு (Under The Cause & Effect Theory).

பிரபஞ்ச நிகழ்ச்சிகளை சுருக்கமாய் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று மனிதன் செய்யக் கூடியவை. அடுத்தது மனிதனால் செய்ய முடியாதவை.

மனிதன் 20 ஆம் நூற்றாண்டில் நிலவில் தடம் வைத்து மீண்டான். இதுவரை செய்த வினைகளில் அதி உன்னத தீவிரச் செயல்.

ஆனால் அதே மனிதனால் அண்டக் கோள்களை உண்டாக்க முடியாது. ஈர்ப்பச் சக்தியை ஆக்கிக் கோள்களைப் பம்பரமாய் ஆட்ட முடியாது. இருக்கும் சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் அண்டத்தையோ, பிண்டத்தையோ, சக்தியையோ படைக்க முடியாது. எல்லாம் வல்ல ஏதோ ஒன்று நமக்காக மழையை உண்டாக்குகிறது. காற்றை நமக்கு வீசுகிறது. குளிர்காலத்தில் நீரைப் பனியாக்கித் துருவங்களில் சேமித்து வைக்கிறது ! கடல் நீரை மழை நீராய்ப் பெய்ய வைக்கிறது.

மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது. ஊழ், இறை, வாலறிவன், உலகியற்றியான் என்று வள்ளுவர் கூறுகிறார். இயற்கை, கடவுள், காலக் குயவன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம்.

அதாவது நாம் அறிய வேண்டியது :

1. மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது.

2. கடவுள் செய்யக் கூடியதை மனிதனால் செய்ய முடியாது.

இந்த ஊழ் நியதியை புரிந்து கொண்டால் கடவுள் எது மனிதம் எது என்பது புரியும்.

கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.

சி. ஜெயபாரதன், கனடா

தருமி said...

//இந்தவாட்டி நீங்க கிறிஸ்துவ மதத்த மட்டும் தான டார்கெட் பண்ணிருகீங்க..//

வோட்டாண்டி,
ஆசிரியரே சொல்லியிருப்பார்: 'நான் முக்கியமாக ஆபிரஹாமிய மதங்களைப் பற்றியே அதிகம் பேசப் போகிறேன். அதிலும் என் 'பழைய' மதம் என்ற முறையில் கிறித்துவ மதத்தைப் பற்றியே அதிகம் பேசினாலும், அம்மதத்தைப் பற்றிச் சொல்வது மற்ற இரு மதங்களுக்கும் அனேகமாக பொருத்தமானதாகத்தான் இருக்கும்'.

தருமி said...

கையேடு,
கபீஷ்,

நன்றி. சொல்வதைப் பார்த்தால் தொடர்ந்து வருவீர்கள் என்று நினைக்கிறேன்.

Muthu said...

//இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை.//


இதையே நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னேன்.இந்த புத்தகத்தை படிக்காத அப்பவே.

அந்த தனிப்பட்ட மற்றும் சமூக காரணங்களை பற்றி எழுதினால் ஒருவேளை பதிவில கூட்டம் சேருமோ என்னவோ?

:)

Jayabarathan said...

கடவுளை மனிதன் காண முடியுமா ?

கருவுக்குள் இருக்கும் சிசு தன்னை வளர்த்து வரும் தாயை எவ்விதம் காண முடியாதோ அவ்விதம் மனிதன் தன்னைப் படைத்த கடவுளைக் காண முடியாது என்று இரவீந்திரநாத் தாகூர் கூருகிறார். பிள்ளை பெரிதாகி வெளியே பிறக்கும் போதுதான் தாயைக் குழந்தை அடையாளம் காண்கிறது.

ஆனால் மனிதன் தான் அடைபட்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து விடுதலையாகி வெளியே நின்று தனியே கடவுளைக் காண முடியாது.


சி. ஜெயபாரதன், கனடா

தருமி said...

jeyabharathan,
i have to come back to disagree with you later.

now, just one thing: //கற்பனை மெய்ப்பாடு.// - is it not an oxymoron?

Jayabarathan said...

Dear Dharumi,

What is the meaning of Oxymoron ?

Jayabarathan

தருமி said...

அன்புள்ள ஜெயபரதன்,

ஏதோ என்னை மடக்கிறதுக்காகக் கேக்குறீங்கன்னு தெரியுது. இருந்தாலும் சொல்லிர்ரேனே ..
osymoron = Conjoining contradictory terms (as in 'deafening silence')

மெளனத்தின் இரைச்சல் மாதிரி "கற்பனை மெய்ப்பாடு" என்பதில் இரு சொற்களும் முரண்பட்டு இருக்கின்றன அல்லவா? நீங்கள் //கடவுள் ஒரு கற்பனை மெய்ப்பாடு.// என்று சொல்லும்போது என் கேள்வி அது கற்பனை என்கிறீர்களா இல்லை, மெய் என்கிறீர்களா என்பதுதான்.

உங்களின் ஐன்ஸ்டீனின் வாக்குமூல மொழியாக்கம் எனக்குத் தவறாகத் தோன்றுகிறது. இப்போது கையில் அந்தப் புத்தகம் இல்லாததால் அதையும் அதை ஒட்டிய மற்றைய உங்கள் கருத்துக்களையும் உடனே மறுக்க முடியவில்லை. நாளை தருகிறேன்.

அமர பாரதி said...

தருமி சார்,

//அல்லது சாமி கண்ண கிண்ண குத்திடும்னு பயந்து ஒண்ணுமே சொல்லாம போய்ட்டாங்களா //

எதுக்கு வம்பு? ;-)

தருமி said...

Jayabarathan said...

அன்புமிக்க நண்பர் தருமி,

<< கற்பனை மெய்ப்பாடு >> என்ற சொற்றொடரில் "மெய்ப்பாடு" என்பது பிரதமச் சொல். "கற்பனை" என்பது அதன் பண்பாடை விளக்கும் தழுவி.

காலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன், அப்துல் கலாம் ஆகிய அனைத்து விஞ்ஞான மேதைகளும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்.

http://michaelcaputo.tripod.com/einsteinandgod/ [Einstein's View of God]

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

தருமி said...

//...பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உண்டாக்கிய ஒரு மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி ...//

நீங்கள் சொல்லியுள்ள "மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி" என்ற சொல்லை நான் அவரது கூற்றுக்களில் எங்கும் காணவில்லையே! அவர் கூறியிருப்பது: What I see in Nature is a maginificent structure that we can camprehend only very imperfectly, and that must fill a thinking person with a feeling of humility. This is a genuinely religious feeling that has nothing to do with mysticism.

The idea of a personal God is quite alien to me and seems even naive.

நான் ஏற்கெனவே சொல்லியுள்ளதுபோல் அவரது மரணத்திற்குப் பின் அவர் தன் கடைசி காலத்தில் கிறித்துவத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுவது ஒரு வரலாற்றுத் தவறு. (pp37)

தருமி said...

//காலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன், அப்துல் கலாம் ஆகிய அனைத்து விஞ்ஞான மேதைகளும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்.//

இதற்கு 3 வகையில் பதில் தரலாம்:

1. So what?

2. ஐன்ஸ்டைன் personal god என்பதை முற்றிலுமாக மறுதலித்தவர். கலிலியோவின் வரலாற்றுச் சோகம் தெரியும்; அதன்பின்னும் அவரை ஒரு 'மதப்புட்டிக்குள்' எப்படி அடைக்கிறீர்கள்?

3. நீங்கள் கொடுத்துள்ள லின்க்கில் உள்ள ஒரு சொற்றொடர்: Professor Richard Bube of Stanford says, "There are [proportionately] as many atheistic truck drivers as atheistic scientists."

தருமி said...

jayabarathan,
நீங்கள் கொடுத்துள்ள தொடுப்பில் - http://michaelcaputo.tripod.com/einsteinandgod/ - உள்ளவை உங்கள் கருத்துக்களுக்கு எதிரான செய்திகள்தானே இருக்கின்றன:

In 1931 Einstein published an article in the magazine Forum and Century titled, “The World as I See It.” ...

“A knowledge of the existence of something we cannot penetrate, our perceptions of the profoundest reason and the most radiant beauty, which only in their most primitive forms are accessible to our minds it is this knowledge and this emotion that constitute true religiosity; in this sense and in this sense alone, I am a deeply religious man.”...

In 1930 Einstein wrote another article titled, “About Religion,” for the New York Times Magazine. In this article he first of all asserts three stages in the development of religion. Firstly, the “primitive stage” (இயற்கையின் மீதான அச்சத்தில் உண்டானது) ....

The next stage is the creation of the “God of morality.”(ஆபிரஹாமிய மதங்களும், மற்றும் பல மதங்களூம்) ..

the third and highest stage: the “cosmic religion” stage, “which knows no dogma and no God conceived in man’s image.”

இவ்வளவும் சொல்லிவிட்டு பின் நீங்கள் சொல்லும் MICHAEL APUTO பின்வருமாறு சொல்லுவது ஒரு வேடிக்கைதான்: he thus belonged to this category of the “profoundly religious” who studied the universe to understand the mind of its Creator

குறுக்கிக் கூறவேண்டுமானால் ..: to the end of his days Einstein rejected the view of a “personal God” in the Judeo-Christian tradition and continued to embrace the view of that God is a creative mind that manifests Itself in the wonders of nature.

இதெல்லாமே நீங்கள் கொடுத்த தொடுப்பில் உள்ளதுதான்.

தருமி said...

அன்புள்ள Jayabarathan,

ஐன்ஸ்டைன் I believe in Spinoza’s God என்று சொல்லியுள்ளார். அந்த ஸ்பினோசாவின் கடவுள் யார் என்பதைப் படித்தால் உங்கள் வாதம் தவறு என்று தோன்றுகிறது.

தருமி said...

அன்புள்ள Jayabarathan,

<< கற்பனை மெய்ப்பாடு >> என்ற சொற்றொடரில் "மெய்ப்பாடு" என்பது பிரதமச் சொல். "கற்பனை" என்பது அதன் பண்பாடை விளக்கும் தழுவி.

புரியவில்லை. ஒன்று மற்றொன்றை எதிர்க்கிறது; மறுக்கிறது என்பதாகவே புரிந்து கொள்கிறேன். அதனாலேயே அதனை oxymoron என்றேன்.

தருமி said...

ஜெயபரதன்,

//மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது.//

அந்த "ஏதோ" ஒன்றை நீங்கள் கடவுள் எனலாம். அது "இயற்கை" என்று ஐன்ஸ்டைன் சொல்லுவது எனக்குச் சரிதானதாகத் தோன்றுகிறது.

தருமி said...

அமரபாரதி,
சாமிட்ட நீங்க இங்க வந்ததைக் காமிச்சி கொடுத்துர்ரேன், பாருங்க!

Jayabarathan said...

நண்பர் தருமி,

"கற்பனை மெய்ப்பாடு" என்பதை ஒருவகை metaphysics என்று சொல்லலாம். "சிந்திப்பு மெய்ப்பாடு" என்று அதற்குப் பொருள்.விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் முதலில் கற்பனை மெய்ப்பாடாக இருந்து பின்னால் சில் நிரூபிக்கப் பட்டவை.

பிரபஞ்சத்தின் பல புதிர்கள், மர்மங்கள் (கரும் பிண்டம், Dark Matter கருந்துளை, Black Hole கருமைச் சக்தி, Dark Energy) ஆகியவற்றின் இருப்பு இன்னும் கற்பனை மெய்ப்பாட்டில்தான் உள்ளன.

+++++++++++++

மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது. ஊழ், இறை, வாலறிவன், உலகியற்றியான் என்று வள்ளுவர் கூறுகிறார். இயற்கை, கடவுள், காலக் குயவன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம்.

அதாவது நாம் அறிய வேண்டியது :

1. மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது.

2. கடவுள் செய்யக் கூடியதை மனிதனால் செய்ய முடியாது.

இந்த ஊழ் நியதியை புரிந்து கொண்டால் கடவுள் எது மனிதம் எது என்பது புரியும்.

கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.

Jayabarathan said...

நண்பர் தருமி அவர்களுக்கு

காலிலியோவை மதாதிபதிகள் வீட்டுச் சிறையில் வைத்தாலும் அவர் முழுக்க முழுக்க கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவரது வாழ்க்கை வரலாறு முழுவதையும் படியுங்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத சில இந்திய அல்லது தமிழ் விஞ்ஞானிகள் பெயரைக் குறிப்பிடுங்கள்.

பெரியார் எத்தனை விஞ்ஞானிகளைத் தமிழ் நாட்டில் உண்டாக்கி இருக்கிறார் ?
பெரியாரின் பிரதான சீடர் அண்ணாத்துரை ஏன் "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்று பெரியார் புராணத்தைக் கவிழ்த்தினார் ?


சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

"மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி"

“A knowledge of the existence of something we cannot penetrate, our perceptions of the profoundest reason and the most radiant beauty, which only in their most primitive forms are accessible to our minds—it is this knowledge and this emotion that constitute true religiosity; in this sense and in this sense alone, I am a deeply religious man.”[xi]

Jayabarathan said...

Religion & Science to Einstein


They also should avail themselves of “the forces that are capable of cultivating the Good, the True, and the Beautiful, in humanity itself.”[xxiv] These “forces” are provided by scientific reasoning and research that can help the human condition.

Einstein, therefore, invites religion to join forces with science so as to work together to become positive forces in improving the lot of humanity. They, in fact, “need” each other in this quest as “science without religion is lame, religion without science is blind.”[xxv] But to do so religion must first of all free itself from the “dross” of anthropomorphism and embrace and teach a religiosity that is free of fear and hope in the afterlife and focus instead on liberating humanity from fears and egocentric cravings and desires.

Jayabarathan said...

Science & Religion to Einstein

In January 1951, Einstein stressed the importance of religion in a letter to the Ethical Culture Society. Ethics, according to Einstein, need to be given special emphasis, as science alone cannot save us. (xxvi)

He then proceeds to condemn society’s focus on developing an “intellectual attitude often solely to the practical and factual” which has produced an “impairment of ethical values.” (xxvii)

And which has “come to lie like a killing frost upon human relations.” [xxviii]

The cultivation of this very important element is not to be left to science but to religion that is free of superstition. Religion should therefore be an important part of education, though it, unfortunately, according to Einstein, is receiving “too little consideration” [xxix] Einstein refers to this reality as a “sin of omission” and concludes with the warning that without a religion-based “’ethical culture’ “...there is no salvation for humanity.”(xxx)

Jayabarathan said...

Science & Religion to Einstein


In January 1951, Einstein stressed the importance of religion in a letter to the Ethical Culture Society. Ethics, according to Einstein, need to be given special emphasis, as science alone cannot save us. (xxvi)

He then proceeds to condemn society’s focus on developing an “intellectual attitude often solely to the practical and factual” which has produced an “impairment of ethical values.” (xxvii) And which has “come to lie like a killing frost upon human relations.” [xxviii]

The cultivation of this very important element is not to be left to science but to religion that is free of superstition. Religion should therefore be an important part of education, though it, unfortunately, according to Einstein, is receiving “too little consideration” [xxix] Einstein refers to this reality as a “sin of omission” and concludes with the warning that without a religion-based “’ethical culture’ “...there is no salvation for humanity.”(xxx)

Jayabarathan said...

Einstein Categorizes three stages of Cosmic Religion. That is all. He wants a combination of Cosmic Religion & Cosmic Science to work together for the betterment of an ethical world Society.


/// the third and highest stage: the “cosmic religion” stage, “which knows no dogma and no God conceived in man’s image.” ///

தருமி said...

//கற்பனை மெய்ப்பாடு" என்பதை ஒருவகை metaphysics என்று சொல்லலாம். "சிந்திப்பு மெய்ப்பாடு" என்று அதற்குப் பொருள்.விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் முதலில் கற்பனை மெய்ப்பாடாக இருந்து பின்னால் சில் நிரூபிக்கப் பட்டவை. //

is it then 'hypothesis'?

Jayabarathan said...

அன்பு நண்பர் தருமி

ஆம் அப்படியும் ஆங்கிலத்தில் அதைக் குறிப்பிடலாம். விஞ்ஞானத்தின் கடைசி படிகள் எல்லாம் "சித்தாந்த விளக்கங்கள்" தான் அல்லது "சித்தாந்த மெய்ப்பாடுகள்" தான்.

சி. ஜெயபாரதன்

கையேடு said...

ஆர்வமுடன் தொடர வைக்கும் உரையாடல்.

மணிகண்டன் said...

***
ஆர்வமுடன் தொடர வைக்கும் உரையாடல்.
***

கையேடு, உண்மைய சொல்லுங்க. பின்னூட்டம் முழுசா படிசீங்களா ? இல்லாட்டி scroll பார் யூஸ் பண்ணினீங்களா ?

இந்த மாதிரி தான் மெய்ஞானம், metaphysics, +ve energy, -ve energy ன்னு என்னோட நண்பன் ஒருத்தன் பேசிக்கிட்டு இருந்தான். கடைசில கோவைல உள்ள த்யான லிங்க கூட்டத்துல சாமியார் ஆயிட்டான். அவன எப்படியாவது மீட்டுக்கிட்டு வந்துடலாம்ன்னு அடிக்கடி அங்க போனேன். எல்லாரும் கூட்டா சேர்ந்து என் கிட்ட இதே மாதிரியே தான் பேசிகிட்டு இருந்தாங்க. எங்கடா அவன திருப்பி கூப்பிட வந்தா, நமக்கு torture கொடுக்கறாங்களேன்னு தப்பிச்சு ஓடி வந்துட்டேன். அவங்கள பொறுத்த வரைக்கும் அது ஒரு effective defensive mechanism. என்னால தான் handle பண்ண முடியல. ஓடி வந்துட்டேன். அதுக்கு பிறகு வருடத்துக்கு ஒரு முறை போய் அவன் கிட்ட பேசிட்டு வருவேன். 9 வருஷம் ஆச்சு. அவனும் நல்லா தான் இருக்கான். நானும் நல்லா தான் இருக்கேன். என்ன, ரெண்டு பேரும் காமன்னா புரிஞ்சத மட்டும் தான் பேசிக்குவோம்.

அதுலேந்து இந்த மாதிரி உரையாடலா பாத்தா டர்ர்ர்ர்ர்ர் ஆயிடுவேன். அவ்வளவு பயம்.

ஆனா இப்போ கொஞ்ச நாளா திருப்பி தைரியமா படிக்க ஆரம்பிச்சு இருக்கேன் ! தருமி சார் என்னைய சாமியார மாத்தமாட்டாருன்னு ஒரு நம்பிக்கை தான்.

தருமி said...

கலிலியோவை நீங்கள் ஒரு கிறித்துவராகப் பார்ப்பதில் எனக்கு ஏதும் மறுப்பில்லை. ஆனால் நிச்சயமாக என்னால் அதை ஒப்புக் கொள்ள முடியாது. அவருக்குக் கிறித்துவமதத்தலைமையிலிருந்து கிடைத்த 'வெகுமதி;களுக்கும் பிறகு அவர் எந்த அளவு 'விசுவாசியாக' இருந்திருப்பார் என்பது என்னளவில் ஒரு கேள்விக்குறியே.

அண்ணாதுரையைப் பற்றி சொல்ல என்னிடமேதும் இல்லை. அவரை வைத்து பெரியாரின் கருத்துக்களை எதற்கு எடை போடுகிறீர்கள்? பெரியாரின் கருத்துக்களைத் தனித்துப் பார்ப்பதே சரி.

//கடவுள் நம்பிக்கை இல்லாத சில இந்திய அல்லது தமிழ் விஞ்ஞானிகள் பெயரைக் குறிப்பிடுங்கள்.//
உங்களைப் போல் எல்லோரையும் நினைக்கிறீர்களோ? என்னளவில் நிறைய பேர் உண்டு. எல்லாம் நாம் பார்க்கும் பார்வையின் கோணங்கள். அதோடு, let me repeat (with some modification)"There would be proportionately more atheistic scientists than atheistic truck drivers."

தருமி said...

//"மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி" //

நீங்கள் காட்டியிருக்கும் ஐன்ஸ்டைனின் மேற்கோளில் "மாபெரும் ஒளிமயமான ஆதிசக்தி" எங்கே?

//Einstein Categorizes three stages of Cosmic Religion//
i dont think so; he categorises religions into three; and the third and higher level of religion is the COSMIC RELIGION which does NOT have a personal god. to quote again: “which knows no dogma and no God conceived in man’s image.”

அவர் சொல்லும் cosmic religion stands in another plane above all the mundane relgions we are following or taking about.

இவைகளே என் புரிதலும், நம்பிக்கையும்.

தருமி said...

மணிகண்டன்,
நீங்க சொன்னமாதிரியான விஷயங்களையா நான் பேசிக்கிட்டு இருக்கிறேன். அந்த மாதிரி விஷயங்களே வேண்டாம்; மதங்களே வேண்டாம்; மனிதங்களே போதுமென்பதல்லவா என் கட்சி. சாமியாராக வேண்டாம்; மனிதர்களாக இருப்போம்; அதுபோதும் என்பதல்லவா என் கட்சி.

என் பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையை வாசியுங்களேன்.

தருமி said...

Jayabarathan says ...

Dear Dharumi,

People like Periyar who did not believe in the great creator & his magnificient creative Universe, cannot become real Scientists.

My point of view : Periyar is NOT a creative person rather a destroyer. Look at all of his Disciples in D.K & D.M.K, ADMK, . . . . & other creative genius of his products.

Regards,
Jayabarathan

தருமி said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அவர் ஒரு கற்பனாவாதியல்ல.

அவர் நீங்கள் சொல்வது போல் ஓர் அறிவியல் விஞ்ஞானி அல்ல.

ஆனால், அவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அடிமைப் படுத்தும் மதங்களிலிருந்து மனதை விடுவிக்க முயற்சித்த ஒரு சீர்திருத்தவாதி.

கடவுளை மறுப்பதலேயே ஒருவனை 'destroyer' என்றழைப்பது சரியல்ல; மிகத்தவறான ஒன்று. i strongly object that.

தருமி said...

Jayabarathan says ...

Dear Dharumi,
Here is one article on Galileo & God

http://michaelcaputo.tripod.com/galileoandgod/

Jayabarathan

தருமி said...

அன்புள்ள ஜெயபரதன்,

தொடுப்புக்கு நன்றி. நீங்கள் சொல்லியுள்ள அந்த Michael Caputo யாரென்று பார்த்தீர்களா? Michael served in the Christian ministry ....
போதகர் அவர். அவர் கலிலியோவைப் பற்றிப் பேசினால் எப்படி, என்ன பேசுவார்?

ஒன்று செய்யுங்கள். நான் Caputo-வை வாசித்தது போல் நீங்கள் தயை செய்து கீழே தந்துள்ள தொடுப்பையும் வாசித்துப் பாருங்கள். அந்த பெரும் விஞ்ஞானிக்காக மிகவும் பரிதாபப்படத்தான் வேண்டியதிருக்கும்.
The Trial of Galileo
by Doug Linder (2002)

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

தருமி said...
விக்கிப் பீடியாவிலிருந்து சில வரிகள் இங்கே:

...he spent the remainder of his life under house arrest, and where he later became blind ...

Galileo died on 8 January 1642 at 77 years of age. The Grand Duke of Tuscany, Ferdinando II, wished to bury him in the main body of the Basilica of Santa Croce, next to the tombs of his father and other ancestors, and to erect a marble mausoleum in his honour. These plans were scrapped, however, after Pope Urban VIII and his nephew, Cardinal Francesco Barberini, protested.

பாவம் அந்த அறிஞன்! இறந்த பிறகும்கூட மதத்தலைமை அவனுக்குரிய மரியாதையைத் தர மறுத்திருக்கிறது.

இன்னொன்றும் நினைவில் கொள்ள வேண்டும். அன்று அவன் காலத்தில் கிறித்துவ மதாச்சாரியார்களை வெளிப்படையாக எதிர்த்து வாழ முடியாது என்பதுதான் உண்மை. அதனாலேயே he made compromises in revealing and asserting his scientific truths. he had to budge to religious pressure.

தருமி said...

ஐயாமார்களே!

இங்கு போடும் பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்புப் பக்கத்தில் வர மாட்டேனென்கிறதே ... ஏனிந்த ஓரவஞ்சனை?

யாருக்காவது காரணம் தெரிந்தால் சொல்லித் தாங்களேன்.

கையேடு said...

உரையாடலைப் பெரிதும் திசை திருப்ப விரும்பவில்லை..
ஆனால், பெரியாரை சமூக விஞ்ஞானியாக நோக்க முடியாதா/கூடாதா??
அவரது சிந்தனைகள் ஏற்புடையதா என்பது பிரிதொரு விவாதம்..

//திரு.மணிகண்டன் scroll பண்ணிதான் பின்னூட்டங்களைப் படிச்சேன்/இட்டேன்.. :))

கையேடு said...

சென்ற பின்னூட்டத்தில் விட்டுப்போனது..

அறிவியலும் ஒரு வகையில் பல "destruction"களைச் செய்திருக்கிறதுதானே. அப்படியானால் ஐன்ஸ்டீன் கூட destroyer தானே. இல்லை இந்த "destroyer" எனும் வார்த்தைக்குப் பின்னிருக்கும் எனது புரிதல் போதாதா?

மணிகண்டன் said...

40 பின்னூட்டத்துக்கு மேல தாண்டிடுச்சுன்னா தமிழ்மணம் முகப்பு பகுதில வராது சார்.

மணிகண்டன் said...

சார், உங்க பதிவு எல்லாம் படிச்சு இருக்கேன் சார் !!!

நான் சொல்ல வந்தது இந்த பின்னூட்ட உரையாடல் பத்தி தான். கீழ்வருவன போல்.

***
i dont think so; he categorises religions into three; and the third and higher level of religion is the COSMIC RELIGION which does NOT have a personal god. to quote again: “which knows no dogma and no God conceived in man’s image.”

அவர் சொல்லும் cosmic religion stands in another plane above all the mundane relgions we are following or taking about.
***
இப்ப புதுசா வரும் பல ஆன்மிக சாமிகளும் இது மாதிரி தான் பேசறாங்க !!!!

meta physics, cosmic religion :- இந்த மாதிரி terminology எல்லாம் படிச்சா டர்ர்ர்ர்ர்ர் ஆயிடுது எனக்கு. ஆனா அது உங்க தப்பு கிடையாது.

தருமி said...

Dear Dharumi,

I have read several articles on Galileo. He might have hated the Catholic Bishops & their views on Earth-centered Sytem but not the Bible or Christianity.

http://jayabarathan.wordpress.com/2006/12/29/galileo/ [My Science Article on Galileo]

Regards,
Jayabarathan

தருமி said...

அன்பு நண்பர் தருமி,

தமிழகத்தின் பெரியார் தி.க. வில் எந்த ஒழுக்க நெறியும் இல்லாததால் அவரது பிரதான சீடர் அண்ணாத்துரை முதன்முதலில் "கடமை, கன்ணியம், கட்டுப்பாடு" என்னும் தாரக மந்திரத்தைக் கொண்டு வந்து விலகி தி.மு.க. உண்டாக்கினார். அண்ணாவுக்குப் பிறகு அந்த மந்திர நெறிகள் காணாமல் போயின. ஐன்ஸ்டைன் அவ்வித ஒழுக்க நெறிகள் இல்லாமல் போனதைத்தான் குறிப்பிடுகிறார்.

பெரியாரின் சீடர்கள்தான் மெய்யாகப் பெரியாரைப் பிரதிபலிக்கிறார். சாக்ரெடிஸ் ஞானியின் சீடர்களைப்
பார்த்தால் சாக்ரெடிஸ் யாரென்று சொல்லி விடலாம்.

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++

தருமி said...

Dear Dharmi,

Here are the facts about Galileo & God.


//// At times the Bible uses figures of speech to simplify concepts which “…had been inserted into the Bible for the sake of the masses, Galileo insisted, to aid their understanding of matters pertaining to their salvation. In the same way, biblical language had also simplified certain physical effects in Nature, to conform to common experience.”[vii]
Galileo saw both the truths of Scriptures and the truths of nature as having been derived from the same source: God; therefore, one could not contradict the other. “Holy Scripture and nature, are both emanations from the divine word: the former dictated by the Holy Spirit, the latter the observant executrix of God’s commands.” Thus, “…no truth discovered in Nature could contradict the deep truth of the Holy Writ.” [viii] Furthermore, Galileo held that the primary aim of Scriptures was not to reveal scientific truths but “…to worship God and save souls.[ix]

The proper understanding of Scriptures required proper illumination from God, thus Galileo turned to God in prayer for the ability to understand the spiritual truths of the Bible. “I trust the infinite goodness of God may direct toward the purity of my mind a small amount of His grace that I may understand the meaning of His words.”[x]

The human mind was according to Galileo one the greatest of God’s achievements. “ When I consider what marvellous things men have understood, what he has inquired into and contrived, I know only too clearly that the human mind is a work of God, and one of the most excellent.” Yet the potential of the human mind “. . . is separated from the Divine knowledge by an infinite interval.” [xi]

In His mercy, God, on occasion, chooses to reveal a new insight to someone He chooses, thus augmenting the knowledge revealed to humanity. “One must not doubt the possibility that the Divine Goodness at times may choose to inspire a ray of His immense knowledge in low and high intellects, when they are adorned with sincere and holy zeal.”[xii] Galileo saw himself as the recipient of some such great truths and expressed gratitude to God for being the first to have the revelation. “I render infinite thanks to God, for being so kind as to make me alone the first observer of marvels kept hidden in obscurity for all previous centuries.”[xiii]

He often mused on what he saw as the stunning manifestations of God’s creative wisdom as with birds and their ideal design for flight and fish and their perfect design for swimming in water:

“God could have made birds with bones of massive gold, with veins full of molten silver, with flesh heavier than lead and with tiny wings . . . He could have made fish heavier than lead, and thus twelve times heavier than water, but He has wished to make the former of bone, flesh, and feathers that are light enough, and the latter as heavier than water, to teach us that He rejoices in simplicity and facility.”[xiv]

His observations and meditations on God’s wonders led him to the following conclusion: “To me the works of nature and of God are miraculous.”[xv]

In his later years Galileo had to confront the deterioration of his vigor and vitality and the loss of health and his eyesight. But his worst and most painful loss was the loss of his beloved daughter, Maria Celeste, who had been this greatest comfort and solace throughout his most difficult and trying years. In spite of all his tribulations, his faith in God remained firm and unshakeable. Galileo believed strongly that all human suffering had meaning and had to be welcomed with courage and resignation, knowing that God allows all for the benefit of believers.

“Whatever the course of our lives, we should receive them as the highest gift from the hand of God, in which equally reposed the power to do nothing whatever for us. Indeed, we should accept misfortune not only in thanks, but in infinite gratitude to Providence, which by such means detaches us from an excessive love of Earthly things and elevates our minds to the celestial and divine.”[xvi ////
++++++++++++++++++

Jayabarathan said...

நண்பர் கையேடு,

ஆம். சில விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன் உட்பட அழிவியல் மேதைகளே. அணுசக்தி அழிவு சக்தியாய் ஆகலாம். ஆக்க சக்தியாக மாறலாம். விஞ்ஞானத்துக்கு ஆக்க முகம் அழிவு முகம் என்று இருமுகங்கள் உள்ளன.

ஆனால் ஐன்ஸ்டைன் செய்த அழிவு வேலைகளை விட அவரது ஆக்க வினைகள் மிக மிக மேலானவை. ஜப்பானில் அணுகுண்டு விழுந்த நாளைத் தன் "இருண்ட நாளாகக்" கூறிப் பின்னால் கண்ணீர் விட்டார். வயோதிக காலத்தில் வல்லரசுகளின் அணு ஆய்வுச் சோதனைகளை நிறுத்தப் பாடுபட்டார்.

சி. ஜெயபாரதன்.

வால்பையன் said...

//தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவைகளை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி.//


மறுக்கா கூவிக்கிறேன்!!!!!!!!!!...

வால்பையன் said...

//இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை.//

உண்மை தான்!
என்னிடம் பேசும் பலர் இதை சொல்லியிருக்கிறார்கள்!

பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லையாம்(சிறிதாக இருக்குமோ)

மூட நம்பிக்கையில் நாட்டம் இல்லையாம்(எது தான் சரியான நம்பிக்கை)

கோவிலுக்கு செல்வது மன திருப்திக்கு(இங்கிருந்து திருப்பதிக்கு செல்வது செலவு செய்த மன திருப்தியா)

வால்பையன் said...

//INSANITY. //

இதற்கு மட்டும் தமிழாக்கம் ப்ளீஸ்

கையேடு said...

திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு,

இந்த ஆபத்தை எழுதும் போதே யூகித்தேன் (குறிப்பாக ஐன்ஸ்டீன் குறித்து எழுதும் போது). "destruction" என்பதனை புறவயமான அழிவாக நான் பயன்படுத்தவில்லை, மனித குலத்தின் நம்பிக்கைகள் குறித்த "destruction" என்றே பயன்படுத்த விரும்பினேன்.

ஐன்ஸ்டீன் ஆக்கப்பூர்வமான சமூக மேம்பாட்டில் பங்குகொண்டவர் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. மேலும், அவரது கண்டுபிடிப்பு இப்படியான அழிவிற்குப் பயன்பட்டதில் அவருடைய வருத்தங்களையும் வெளிப்படையாக பதிவு செய்திருப்பதால், அக்கண்ணோட்டத்தில் அவரை குற்றம் சாட்டவில்லை. பல நம்பிக்கைகளைத் தகர்த்தவர் என்று குறிப்பிட விரும்பினேன்.

அறிவியலின் ஆக்க முகம் அழிவு முகம் இரண்டையும் கருத்துத் தளங்களிலேயே வைத்து உரையாடினேன்.

அறிவியலின் புற அழிவுகள் பற்றிய பார்வையில், இந்த குறிப்பிட்ட இடுகையில் உரையாடுவதில் எனக்கு உடன்பாடும்/ஆர்வமும் இல்லை.

வால்பையன் said...

//ரொம்ப ஆச்சரியமா இருக்கு .. இந்தப் பதிவுப்பக்கமே யாருமே வரலையா .. இல்ல வந்துட்டு பேசாம போய்ட்டாங்களா .//

இதற்கு 298ன்னு நம்பர் போட்டிருந்தாலும் அதற்கு முன் எழுதிய பதிவாக ரீடர் காட்டுகிறது! அதனால் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம்

வால்பையன் said...

//அப்துல் குத்தூஸ் said...

//ஒண்ணுமே புரியலையே'ப்பா//

எப்படி புரியுமப்பா... எப்படி புரியும்?

உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சாய்ஸ்ல விட்டுட்டு போறிங்க. அப்புறம் எப்படி மத்தவர்களிடம் மட்டும் உங்களின் கேள்விக்கு பதில் எதிர்பார்க்கின்றீர்கள்?//

நீங்கள் கேள்வி கேட்பது இருகட்டும், முதலில் இவர் கேட்ட எல்லா கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்களா?

வால்பையன் said...

//"மதத்தை திட்டும் / அல்லது எதித்து கேள்வி கேட்கும் அல்லாரையும் சவுதி அரேபியாவுக்கு அனுப்புங்கப்பா !!"

ப்ளைட் சார்ஜு ரொம்ப ஆவும்னா அண்டை நாட்டு தாலிபான் கிட்டயோ புதிசா மதம் மாறின முஸ்லீம்கிட்டையோ புடிச்சு குடுத்தா போச்சு :-)//

இது மதம் மற்றும் கடவுள் என்ற பொது பெயரையே சந்தேகப்படும் பதிவு,
தனியாக இன்ன மதம் என்ற சாடமாட்டார் தருமி.

வால்பையன் said...

//நிறைய கருத்ஸை வழிமொழியறேன்.
எல்லாத்தையும் இல்ல :-)//

ஆரம்பத்தில் நம்ப கஷ்டமாக தான் இருக்கும்! நீங்களே யோசித்து பாருங்கள் புரியும்!

வால்பையன் said...

//கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.//

”கடுகு” மனிதனால கடவுள காண முடியாதுன்னா உண்மையான கடுகு எதை காணும்!
அது என்ன மனிதனுக்கு மட்டும் கடவுள்!

வால்பையன் said...

//"கற்பனை மெய்ப்பாடு" என்பதை ஒருவகை metaphysics என்று சொல்லலாம். "சிந்திப்பு மெய்ப்பாடு" என்று அதற்குப் பொருள்.விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் முதலில் கற்பனை மெய்ப்பாடாக இருந்து பின்னால் சில் நிரூபிக்கப் பட்டவை.//

”கடவுள் என்று ஒன்று இல்லை” என்ற எங்கள் சிந்திப்பு மெய்ப்பாடும் உண்மையென நம்ப உங்களுக்கு உள்ள தயக்கம்?

தருமி said...

insanity = மனப்பிறழ்வு; பைத்தியக்காரத்தனம்

தருமி said...

//அது என்ன மனிதனுக்கு மட்டும் கடவுள்!//

இதைப்பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். ஒரு மேற்கோள்: If triangles have god, it would be a mega-triangle.

நான் அதைக் கொஞ்சம் மாற்றி: எருமை மாடுகளின் கடவுள் ஒரு பெரிய எருமை மாடாகத்தான் இருக்கும்.

மனிதன் தன்னைப் போலவேதான் தன் கடவுளைப் 'படைக்க' முடியும்.

தருமி said...

வால்ஸ்,
லேட்டாக வந்தாலும் 'லோடோடு" - நிறைய எண்ணிக்கைகளோடு - வந்திட்டீங்க ..
நன்றி

தருமி said...

கையேடு,
உங்கள் கேள்வியை நான் புரிந்து கொண்டிருந்தேன். இருப்பினும் விளக்கத்திற்கு நன்றி.

பெரியாரை destroyer என்று கூறியிருப்பதும் மிகவும் சரியே. தமிழில் 'கட்டுடைத்தல்' என்ற நல்லதொரு சொல் உண்டே. அதற்கு மிகவும் பொருத்தமானவர் பெரியார்.

புனிதமாகக் கருதியவைகளின் மீது நமக்கெல்லாம் ஒரு புதிய பார்வையைக் கொடுத்து, பழமையை உடைத்த destroyerதானே அவர்.

தருமி said...

சி. ஜெயபாரதன் கேட்கிறார் ..

நண்பர்களே

தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன, கடவுள் ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார்.

எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம், எந்தக் கடவுள் இதுவரைத் தமிழ் நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?


சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++++

வால்பையன் said...

//எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம், எந்தக் கடவுள் இதுவரைத் தமிழ் நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?//

இப்போ நாங்க மனுசனா இருக்கோமே!

தருமி said...

//தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன, கடவுள் ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார்.//

இரண்டு விஷயத்திற்கு நன்றி.

1. 'தந்தை' என்ற அடைமொழியை பயன்படுத்தியமைக்கு. (நான்கூட அதைப் பயன்படுத்துவதில்லை!)
2. அவரது சேவையை நீங்கள் ஒத்துக் கொண்டமைக்கு.

நீங்கள் கேட்பது மிகவும் சரி://எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம், எந்தக் கடவுள் இதுவரைத் தமிழ் நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?//

இது யார் தவறு?

இதையே நீங்கள் சொல்லும் கடவுளர்களையோ, தூதுவர்களையோ பார்த்தும் கேட்கலாமே. கிருஷ்ண பரமாத்வாவும், ஏசுவும், முகமதும் இத்துணை சொல்லியும் மனிதன் புனிதனாகி விட்டானா, என்ன?

தருமி said...

இன்னொன்றும் சொல்லணுமே. ஜெயபாரதன், நீங்கள் எப்படியோ; நான் இன்று ஒரு கணினியின் முன் உட்கார்ந்துகொண்டு உங்களுக்குப் பதில் சொல்ல முயற்சிக்கும் நிலையில் இருப்பதில் நிச்சயமாக பெரியாருக்கும் ஒரு பெரும்பங்குண்டு.

தருமி said...

ஜெயபாரதன் சொல்கிறார்:

மனித குலத்தில் பெரும்பான்மையான மனிதர் மனித நேயத்துடன் உலகில் இருப்பதற்கு ஏசுவும், நபியும், புத்தரும், வள்ளுவரும் காரணம் என்பது என் கருத்து.

பைபிளும், குர்ரானும், கீதையும், குறளும் இல்லாமல் வேறு நீதி புகட்டும் நூல்கள்
தந்தை பெரியார் எழுதியிருக்கிறரா ?

தருமி said...

//மனித குலத்தில் பெரும்பான்மையான மனிதர் மனித நேயத்துடன் உலகில் இருப்பதற்கு ஏசுவும், நபியும், புத்தரும், வள்ளுவரும் காரணம் என்பது என் கருத்து. //

என் கருத்து: மதங்களே இன்று மட்டுமல்ல என்றுமே மனிதநேயத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதுகிறேன். வரலாறு சொல்லும் உண்மை இது. மதங்களின் பெயரால், அவரவர் கடவுளர்கள் பெயரால் ஆரம்பித்த மனிதநேயமற்ற கொடூரங்கள் நின்ற பாடில்லை.

தருமி said...

//பைபிளும், குர்ரானும், கீதையும், குறளும் இல்லாமல் வேறு நீதி புகட்டும் நூல்கள்
தந்தை பெரியார் எழுதியிருக்கிறரா ?//

கேள்வியே கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றுகிறது. நூல் எழுதுவதை ஒரு அளவு கோலாக வைத்திருக்கிறீர்கள் போலும்!! நன்று!

ஆயினும் அவரும் நீதிகள் பற்றி, நீதி புகட்டும் விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்; பேசியிருக்கிறார்.

Thekkikattan|தெகா said...

ஆஹா தருமி,

இப்படி ஒரு பெரிய திரைப்படம் ஓடிக்கிட்டு இருந்துருக்கு என் கண்ணில தட்டுப் படவில்லையே!

பின்னூட்டங்களில் நிறைய விசயத்தை உடைச்சு காமிச்சு சில விசயங்களை பல பேர் பார்க்கிற மாதிரி செஞ்சிருக்கீங்க. நீங்க கலீலியோவைப் பற்றி மைக்கேல் எழுதியதாக திரு ஜெயபாரதன் கொடுத்த விசயங்கள் எப்படி biased/skewed பார்வையாக இருக்க முடியும் என்பதனை விளக்கியிருந்தது, இந்த இடத்தில் மிக்கப் பொருத்தம்.

கலீலியோ ஏதோ ஒரு விதத்தில் உயிர் பிழைத்து கிடக்கவாவது தான் பிறந்து, அதனூடாக வளர்ந்த மதத்தை மத தீவிரவாதிகளுக்காகவாவது இன்னமும் நம்புவதனைப் போன்று நடித்தாவது இருந்திருக்க வேண்டும், அது ஒன்றே உயிரை தக்க வைக்க ஒரே வழியென்றால் அங்கு என்ன கூறுவதற்கு இருக்கிறது? நாம் அந் நிலையிலிருந்தால் எந்த நிலையை எடுப்போம்? இங்கு பெரியார் அந்த tabooவை நம் சமூகத்தில் உடைத்தெறிந்துருக்கிறார், இல்லையா?

மற்றொரு விசயம் இங்கே பேசப் பட்டிருப்பது - இந்தியாவில் உள்ள அனைத்து விதமான productive scientists, professors, scholars எல்லாரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை. அப்படியே இருந்தாலும் இதனை உளவியல் ரீதியாக அலச முன் வரும் பொருட்டு நிறைய விசயங்கள் வெளி வரலாம். ஓரளவிற்கு நான் புழங்கிப் பார்த்த வரையில் என் வழியில் சந்திக்க நேர்ந்த அவ் அறிஞர்கள் "இயற்கையின்" பிரமாண்டத்தின் முன்னால் தன்னை மிகச் சிரியவனாகவும், அதனில் தன் இருப்பின் சிறப்புணர யோசிக்கும் தருவாயில் எல்லா சக மனிதரையும் நேசிக்கும் மனிதராக பரிணமித்தவர்களாகத்தான் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பெரியாரைப் பொறுத்தும் ஒரு வார்த்தை இன்று பேசா பொருளையும் பேச வைத்து, ஃப்ரீ சிந்தனைக்கு (பேசினா கண்ண குத்தாதுப்பான்னு... ) வித்திட்ட வகையில் பெரும் வெற்றிதானே அவர் ஈட்டியது.

இன்னொன்னும் சொல்லிக்கிறேன், ஏன் ஒவ்வொரு பெரும் பெரும் விஞ்ஞானியும் தன்னோட வாழ்வின் விழிம்பில் விஞ்ஞான வளர்ச்சியை மேலும் கூட்டுவதற்கேனும் இந்த கடவுள் கான்செப்டிற்கு ஒரு கமா(,) வைத்து விட்டு செல்கிறார்களோ ;-), தருமி!

Jayabarathan said...

நண்பர் தருமி,


தந்தை பெரியாரைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள்:

1. தமிழரிடையே இருந்த மூடப் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டினார். ஆனால் அவர் கையாண்ட முறைகள் கடூரமானவை. பிள்ளையார் சிலையை உடைத்தல், கம்ப ராமாயண இலக்கியத்தை எரித்தல், திருக்குறளைப் பார்ப்பனர் நூல் என்று இகழ்தல், தமிழைக் காட்டுமிராண்டிகள் மொழி என்று அவமானப் படுத்தல், பார்ப்பனத் தமிழரை எல்லாவற்றுக்கும் காரணமாகத் திட்டுவது, கடவுளை நம்புவோரை எல்லாம் "முட்டாள்" என்று பட்டம் கொடுப்பது. இவை அநாகரீகச் செயல்கள். இவை அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்.

2. இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்காது பெரியாரும் அவரது சீடர்களும் எதிர்த்து வேலை செய்தார்கள். இந்திய சுதந்திர தினத்தைத் "துக்க தினமாகக்" கொண்டாடிய பகுத்தறிவாளி பெரியார் !!! பெரியாருக்கு இந்தியப் பாராளு மன்றக் குடியாட்சி முறையில் நம்பிக்கை இல்லாமல் போனது.

3. நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லை தெரியாத "திராவிட நாடு" பிரிவினைக்குத் திட்டமிட்டுத் தோல்வி யடைந்தவர்.

4. மகள் வெளியே என்று கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.

5. நாலாவது காரணத்தால் சீடர்கள் குருவை விட்டுப் பிரிந்து அவருக்கு எதிராய் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலர் பாக்களின் வரிகளை கூறிவந்தார்.


சி. ஜெயபாரதன், கனடா

Jayabarathan said...

மதங்களைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள் : நான் ஒரு மதவாதி விஞ்ஞானி அல்லன். இந்துவாயினும் பிற மதத்தாரைச் சகோதரராய் மதிப்பவன். அதாவது நான் ஒரு மதச் சகிப்பாளி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சகிப்புத்தனம் ஆகியவற்றை விடுதலை இந்தியாவில் ஏற்றுக் கொள்பவன்.


http://en.wikipedia.org/wiki/Major_religious_groups [உலக மதங்களைப் பற்றி ஓரிழை]

World Population: 6,706,993,152 (6.7 பில்லியன்) (July 2008 est.)

The Christian Science Monitor, in a 1998 article "Top 10 Organized Religions in the World," provides a listing of the largest "organized religions":[4]

# Religion Number of Adherents

1
Christianity 1.9 billion
2 Islam 1.1 billion
3 Hinduism 781 million
4 Buddhism 324 million
5 Sikhism 19 million
6 Judaism 14 million
7 Bahá'í Faith 6.1 million
8 Confucianism 5.3 million
9 Jainism 4.9 million
10 Shinto 2.8 million

Other major religions, not found on the above lists, are:

Chinese traditional (including Taoism and Confucianism): 394 million
Tribal religions (Shamanism, Animism): roughly 300 million
African traditional and diasporic (including Vodou): roughly 100 million[5]
Juche (North Korean state ideology): 19 million
Cao Dai: 4 million
Tenrikyo: 2 million
Neopaganism: 1 million
Unitarian Universalism: 800,000
Rastafarianism: 600,000
Scientology: 500,000
++++++++++++++

The world's principal religions and spiritual traditions may be classified into a small number of major groups or world religions. According to the 2005 survey of Encyclopædia Britannica, the vast majority of religious and spiritual adherents follow Christianity (33% of world population), Islam (20%), Hinduism (13%), Chinese folk religion (6.3%) or Buddhism (5.9%). The irreligious and atheists make up about 14%, and about 4% follow indigenous tribal religions.

A number of classical "world religions" (including Sikhism, Judaism, Bahá'í, Jainism, Shinto and others) are each followed by under 0.5% of the world's population; they are sometimes considered world religions in terms of cultural significance and historic recognition, but are not deemed to be "major religious groups" due to their size.

++++++++++++++++++++++++

The Universal (80% - 20%) Theory

கடந்த 4000 ஆண்டுகளாக [பழைய ஏற்பாடு மோஸஸ் முதலாக] மதப்போர்கள், இனப்போர்கள், குழுப்போர்கள் பல நடந்து வந்துள்ளன. இப்போதும் மதப்போர்கள், இனப்போர்கள், ஜாதிப்போர்கள் மாநிலப் போர்கள் பல நடக்கின்றன. எதிர்காலத்திலும் நடக்கும் அவை. இப்போர்கள் எப்போதும் நிறுத்தம் அடையா !!!

ஆனால் இந்த மத, இனப் போர்கள் நடந்தாலும் மதங்கள் அழிய வில்லை. அவற்றை அழிக்கவும் முடிய வில்லை. காரணம் மதம் என்பது மனிதக் குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட ஓர் அழியா ரசம்.

ஆனால் இந்த மதப்போர்களை உண்டாக்குவோர் சமூகத்தில் உள்ள 20% (சுமார்) அடிப்படை மூர்க்க வர்க்கத்தினர். மீதியுள்ள 80% மதத்தார் அடிப்படை வன்முறை மூர்க்கரால் இன்னல் அடைகிறார். இந்த 80% மதத்தார் பொதுவாக மனித நேய முள்ளவர். அவர்கள்தான் விடாமல் மதங்களைக் கடைப்பிடித்து வருகிறார்.

கற்கால காட்டுமிராண்டிகளைத் தற்கால நாகரீக மாந்தராய் ஆக்கியவை மதங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு. உலக இனங்களை இணைக்கும் உன்னத சக்தி வாய்ந்தவை மதங்கள் என்று பண்டித நேரு கூறுகிறார். வெறும் பகுத்தறிவு வாதங்கள் மட்டும் மக்களை இணைக்க முடியாது. உதாரணம் தி.க, திமுக, அதிமுக போன்ற பெரியாரின் சின்னா பின்னமான சந்ததிகள்.

பைபிள், குர்ரான், பகவத் கீதை போல் உன்னத ஒழுக்க நெறி மதநூல்களே உலக இனங்களை இதுவரை ஒன்று சேர்த்து வைத்துள்ளன.

மதங்கள் மாந்தரைப் பிரிக்கும் சக்தி போல் தெரிந்தாலும் அவை மக்களை ஒன்றாய்ப் பிணைப்பவை. அதாவது மதங்கள் "பிரிக்கும் பிணைப்புகள்." Another example of your Oxymoron Theory.


சி. ஜெயபாரதன், கனடா.

Jayabarathan said...

நண்பர் தருமி,

[ //அது என்ன மனிதனுக்கு மட்டும் கடவுள்!//

இதைப்பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். ஒரு மேற்கோள்: If triangles have god, it would be a mega-triangle.

நான் அதைக் கொஞ்சம் மாற்றி: எருமை மாடுகளின் கடவுள் ஒரு பெரிய எருமை மாடாகத்தான் இருக்கும்.

மனிதன் தன்னைப் போலவேதான் தன் கடவுளைப் 'படைக்க' முடியும். ]

++++++++++++++

நான் படித்த நூல்களில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று படித்தவன். தன்னைப் படைத்த கடவுளையும், சக்தி, ஆத்மா, உயிர் என்றால் என்ன என்று ஆழ்ந்து ஆராயும் தன்மை உள்ளவன் என்று அறிந்தேன்.

எருமை மாடுகள் கடவுளைப் பற்றிச் சிந்திக்கும் என்று நான் படித்ததில்லை.

கடவுளுக்கு விளக்கம் இதுதான் :

God is Omnipotent - எல்லாம் வல்லது கடவுள்
God is Omnipresent - எங்கும் நிறைந்தது கடவுள்
God is Omniscient - எல்லா ஞானமும் உள்ளது கடவுள்

இந்தக் கடவுளை மனிதா படைத்தான் ? கடவுள் எப்படி இருக்கும் என்று மனிதன் கற்பனையில் கண்ட மெய்ப்பாடு.

சி. ஜெயபாரதன்.

தருமி said...

ஜெய்பாரதன்,

DID EINSTEIN CHANGE HIS MIND ABOUT GOD'S EXISTENCE?

Recently a British newspaper announced that a letter by Einstein had been sold which contained “new revelations” about Einstein’s views on God, the Bible and the Jews. In this letter the famous physicist reportedly wrote to the Jewish philosopher, Eric Gutkind the following: “... The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish

Jayabarathan said...

நண்பர் தருமி,

நான் இட்ட அதே இழையில் இந்தக் கருத்து உள்ளது. ஐன்ஸ்டைn வாலிப வயதில் கூறிய இந்தக் கருத்தைப் பின்னால் அவர் மாற்றிக் கொண்டு மதம், விஞ்ஞானம் இரண்டும் மக்களுக்குத் தேவை என்று அவர் கூறியதும் அதில் உள்ளன.

சி. ஜெயபாரதன்.

கோவி.கண்ணன் said...

//கற்கால காட்டுமிராண்டிகளைத் தற்கால நாகரீக மாந்தராய் ஆக்கியவை மதங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு. உலக இனங்களை இணைக்கும் உன்னத சக்தி வாய்ந்தவை மதங்கள் என்று பண்டித நேரு கூறுகிறார்.

பைபிள், குர்ரான், பகவத் கீதை போல் உன்னத ஒழுக்க நெறி மதநூல்களே உலக இனங்களை இதுவரை ஒன்று சேர்த்து வைத்துள்ளன.
//

கற்காலத்தில் இருந்தே அதாவது வரலாறுகள் தொடங்கும் காலத்தில் இருந்தே மதங்கள் இருப்பதால் ஜெயபாரதன் ஐயா மதங்களால் மனிதம் தழைத்ததாக நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன். மனிதனை கற்காலத்திற்கு இட்டுச் செல்வதாகத் தான் இன்றும் மதங்கள் செயல்பட்டுக் கொண்டூ இருக்கின்றன, இந்த 21 ஆம் நூற்றாண்டுகளிலும் கூட பெண்கல்வியைப் பற்றியோ பெண்களை சமமாக நினைக்கும் படியோ எந்த மதமும் வழியுறுத்தவில்லை, ஆணும் பெண்ணும் சமம் என்பதாக எந்த மதமும் சொல்லிக் கொடுக்கவில்லை. மதங்களில் இருக்கிறதே என்று சொல்லுவீர்கள், ஆனால் அதனை எத்தனை பேர் செயல்படுத்தி இருக்கிறார்கள் ? 21 ஆம் நூற்றாண்டுவரை பெண்கல்வி என்பதை அனைத்துலகும் கேள்விபட்டதில்லை என்பதாகத்தானே இருந்தது. தமிழ்சூழலில் ஒரு ஒளயாரைப் போன்று இலக்கியம் ஏற்றிய பெண்களை உலக வரலாற்றில் அந்தகாலத்தில் தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டும், காரணம் மதங்கள். உலக இனங்களை மதங்கள் இணைக்கிறது என்பது வெறும் தோற்றம் தான், ஏனெனில் மதங்கள் இனங்களைத் தாண்டி வழியுறுத்தப்பட்டு பரவி இருப்பதால் தெரியும் ஒரு தோற்றம் மட்டுமே. இன்றும் கூட ஒரே மதத்தில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் ஒன்றை ஒன்று குறை சொல்லிக் கொண்டு இருப்பதால் தான் அவற்றின் வண்டவாளங்கள் நமக்கு வெளிச்சமாக கிடைக்கிறது. மதநூல்கள் அனைத்துமே மனிதர்களை மூளைச் சலவை செய்வதைத் தான் நோக்கமாக கொண்டு அவ்வாறே செயல்படுகின்றன. உலகில் முன்னெங்கிலும் இல்லாத அளவுக்கு பக்கத்துவீட்டு மாற்று மத நண்பர்களிடம் கூட நம்பிக்கை இன்றிப் போனதற்குக்காரணம் மூளை சலவையாக புகுத்தப்பட்ட மதநூல்களின் கருத்துக்களே.

//வெறும் பகுத்தறிவு வாதங்கள் மட்டும் மக்களை இணைக்க முடியாது. உதாரணம் தி.க, திமுக, அதிமுக போன்ற பெரியாரின் சின்னா பின்னமான சந்ததிகள். //

பெரியார்கருத்துக்கள் மட்டுமல்ல, உலகில் எந்த ஒரு கருத்துக்களும் அதன் தேவை முடிந்ததும் நீர்த்துப் போகும் இதுவே நியதி, அப்படி இல்லை என்றால் அதை அடிப்படை வாதம் என்றே சொல்லுவர்.

கோவி.கண்ணன் said...

//கடவுளுக்கு விளக்கம் இதுதான் :

God is Omnipotent - எல்லாம் வல்லது கடவுள்
God is Omnipresent - எங்கும் நிறைந்தது கடவுள்
God is Omniscient - எல்லா ஞானமும் உள்ளது கடவுள்//

எல்லாம் வல்லது கடவுள் - இது கூட காலம் காலமாக நம்பப்படும் வெறும் கூற்றுதான். இதற்கு சான்றுகள் எதுவுமே கிடையாது, தன்னால் முடியாது கடவுளால் முடியும் என்கிற நம்பிக்கையே அக்கூற்றிற்கான காரணம். இதற்கு நாத்திகர்கள் கூறுவது, 'கடவுளால் தன்னால் தூக்க முடியாத கல்லை உருவாக்க முடியுமா ? அப்படியே உருவாக்கினால் அதனை அவரால் தூக்க முடியுமா ?' இந்த கேள்விக்கு விடையே கூற முடியாது.

எல்லாம் வல்லக் கடவுள் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள் கூறும் மதங்களை படைத்திருக்க முடியுமா ?

//God is Omnipresent - எங்கும் நிறைந்தது கடவுள் //

இது கீழான பக்தியின் வெளிபபாடு என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும், மரம், பாம்பு, பல்லி, எலி ஆகியவற்றை வழிபடுவதற்குக் காரணம் கூறும் போது கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற கூற்றை வைத்து அதனை ஞாயப்படுத்தினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்றால் நீங்களும் நானும் வேறெல்ல என்பதாகும், உண்மையில் நாமும் நீங்களும் வேறு வேறு. என்னை எவரும் கிள்ளினால் எனக்குத்தான் வலிக்கும். கடவுள் எங்கும் இருக்கிறான், உன்னிடத்திலும் இருக்கிறான், என்னிடத்திலும் இருக்கிறான் என்று இஸ்லாமியரிடம் சொல்லிப் பாருங்கள், நீங்கள் இணைவைத்தீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுவீர்கள்.

God is Omniscient - எல்லா ஞானமும் உள்ளது கடவுள் - ஒரு கனனியை இயக்கும் திறண், ஞானம் கடவுளுக்கு உண்டா ? இருக்காது என்றே சொல்ல முடியும், ஏனெனில் கணனி மனிதனின் கண்டுபிடிப்பு, உருவாக்கம்.

தருமி said...

ஜெயபாரதன்,
ஒரேயடியாக மதம் வேண்டாமென்று நானும் கூறவில்லை. யார் யாருக்கு எதுவரை மதங்களின் தேவையுள்ளது என்ற என் கருத்தை இங்கே காணலாம்.

தருமி said...

//உலக இனங்களை இணைக்கும் உன்னத(!!??) சக்தி வாய்ந்தவை மதங்கள் //

இனங்களை இணைத்தது சரி; ஆனால் அதன் "உன்னதத்தை' நித்தம் நித்தம் தரிசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

அதென்னவோ, ஏன் எப்படி என்று தெரியவில்லை. தனிமனித ஒழுக்கத்திற்காகப் படைக்கப்பட்ட மதங்கள் இப்போது இனத் துவேஷத்திற்கான காரணிகளாக மாறி, இனங்களுக்கு எதிராக இனங்கள் இருக்கும் அழிவு நிலைக்குக் கொண்டுவந்து விட்டன என்பதே பெரிய சோகம்.

ஜெயபாரதன்,
நீங்கள் சொல்லும் omniscience etc... எல்லாம் காலாவதியாகிப் போன விஷயங்கள்... very much self contradictory and self defeating points என்பது என் கருத்து. கோவியும் நல்ல விளக்கங்கள் கொடுத்துள்ளார்.

அவருக்கு நன்றி.

Jayabarathan said...

நண்பர் தருமி,

/// அதென்னவோ, ஏன் எப்படி என்று தெரியவில்லை. தனிமனித ஒழுக்கத்திற்காகப் படைக்கப்பட்ட மதங்கள் இப்போது இனத் துவேஷத்திற்கான காரணிகளாக மாறி, இனங்களுக்கு எதிராக இனங்கள் இருக்கும் அழிவு நிலைக்குக் கொண்டுவந்து விட்டன என்பதே பெரிய சோகம். ///

நான் கூறிய (80%--20%) நியதிப்படி ஆம், நீங்கள் மேலே குறிப்பிட்டது உண்மை. எந்த உலக ஏற்பாடுகளிலும் சுமார் 20% கோளாது மனிதர் இருப்பார். 80% மனிதர் மனித நேயமுடன் இருப்பார். சகட்டு மேனிக்கு எல்லோரையும் மதம் காட்டுமிராண்டிகளாக உருவாக்கி உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் தேவை.

///// நீங்கள் சொல்லும் omniscience etc... எல்லாம் காலாவதியாகிப் போன விஷயங்கள்... very much self contradictory and self defeating points என்பது என் கருத்து. ////

மதங்கள் யாவும் நாலாயிரம் வருடங்களாக இன்றுவரை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாகப் பெருகி வந்துள்ளன, வருகின்றன.

பெரியாரின் தீவிரச் சீர்திருத்தக் கொள்கைகள்தான் காலாவதியாகிக் கொண்டி ருக்கின்றன !!! மதங்கள் பாறைகளில் வேரூன்றி உள்ளன !!!

நான் மதங்களைப் பற்றிய புள்ளி விபரங்களைப் பாருங்கள்.

சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

நண்பர் தருமி,

//உலக இனங்களை இணைக்கும் உன்னத(!!??) சக்தி வாய்ந்தவை மதங்கள் //

\\\ இனங்களை இணைத்தது சரி; ஆனால் அதன் "உன்னதத்தை' நித்தம் நித்தம் தரிசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்! \\\


இந்த மதப்போர்களை உண்டாக்குவோர் சமூகத்தில் உள்ள 20% (சுமார்) அடிப்படை மூர்க்க வர்க்கத்தினர். மீதியுள்ள 80% மதத்தார் அடிப்படை வன்முறை மூர்க்கரால் இன்னல் அடைகிறார். இந்த 80% மதத்தார் பொதுவாக மனித நேய முள்ளவர். அவர்கள்தான் விடாமல் மதங்களைக் கடைப்பிடித்து வருகிறார்.

சகட்டு மேனிக்கு எல்லோரையும் குற்றவாளிகளாய் எடைபோடுவது ஒரு பிரச்சனையை முழுமையாக நோக்காமல் நுனிப் புல் மேய்ந்து நியாயப் படுத்துவது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

//உலக இனங்களை இணைக்கும் உன்னத(!!??) சக்தி வாய்ந்தவை மதங்கள் //

\\\ இனங்களை இணைத்தது சரி; ஆனால் அதன் "உன்னதத்தை' நித்தம் நித்தம் தரிசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்! \\\

கொல்கத்தாவில் உன்னத மனித சேவை செய்த அன்னை தெரிஸாவும் குஷ்ட ரோகிகளுக்கு ஆஃப்பிரிக்கா லாம்பிரைனில் சிகிட்சை செய்த ஆல்ஃபர்ட் சுவைஸரும் கிறித்துவ மதத் தொண்டர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த மதப்போர்களை உண்டாக்குவோர் சமூகத்தில் உள்ள 20% (சுமார்) அடிப்படை மூர்க்க வர்க்கத்தினர். மீதியுள்ள 80% மதத்தார் அடிப்படை வன்முறை மூர்க்கரால் இன்னல் அடைகிறார். இந்த 80% மதத்தார் பொதுவாக மனித நேய முள்ளவர். அவர்கள்தான் விடாமல் மதங்களைக் கடைப்பிடித்து வருகிறார்.

சகட்டு மேனிக்கு எல்லோரையும் குற்றவாளிகளாய் எடைபோடுவது ஒரு பிரச்சனையை முழுமையாக நோக்காமல் நுனிப் புல் மேய்ந்து நியாயப் படுத்துவது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி, கோவி. கண்ணன்


//// carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.\\\\

//// எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம். ////

மனிதன் பிறக்கும் போது மூர்க்கர் மத்தியிலே பிறந்தால் மூர்க்கனாகிறான். நல்லவர் மத்தில் பிறந்தால் நல்லவனாகிறான். அந்த Raw Material நிலையில் இருப்பவன் மனிதன். தற்போதுள்ள வெறும் பள்ளிப் படிப்பு மட்டும் மனிதனைக் கலாச்சார நாகரீக மனிதனாக மாற்றாது. இதுவரை மாற்றவில்லை.

"காரட் ஏற்பாட்டின்படி" சொர்க்க லோகம், நரக லோகம் என்று பயங்காட்டி மதங்கள் ஒழுக்கம் புகட்ட வில்லை என்றால் மனிதன் ஒருநாளும் ஒழுக்க நெறி கற்றுக் கொள்ளப் போவதில்லை. நமது கல்வி முறை மனிதனை மனித நேயனாக மாற்ற முடிய வில்லை. காரணம் அதில் தண்டிப்பு முறைகள் கிடையா !!! படியாதவனும் மூர்க்கனாக இருக்கிறான். படித்தவனும் மூர்க்கனாக இருக்கிறான். விடுதலை நாட்டில் காவல் துறையும், நீதித் துறையும் கடைசியில் அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது.

இங்குதான் உலக மதங்கள் நற்சேவை புரிய வாய்ப்புள்ளன. புத்தர், ஏசு, முகமது நபி, விவேகானந்தர் போன்ற மதக் குருமார்கள் தமக்குக் கீழிருக்கும் பைபிள், குர்ரான், கீதை, குறள்
ஆகிய அறநெறி நூல்கள் மூலம் உலக அமைதி நிலைநாட்ட வசதிகள் வழிமுறைகள் உள்ளன.

மதக் குறைபாடுகளைக் காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள மதக் குருமார்கள் முன்வர வேண்டும். மதம் ஒரு மனிதக் கருவியே. அதை ஆக்க வழிகளுக்குப் பயன் படுத்த குருமார் சமூகத்தில் பங்கேற்க வேண்டும். பெரியார் போல் பாமரரை "முட்டாள்" என்று திட்டி வெறுப்பூட்டி இந்தக் காலத்தில் மக்களுக்கு அறநெறிகள் புகட்ட முடியாது.

அரசியல்வாதிகள், பள்ளி ஆசிரியர்கள், அறிஞர்கள், அனுபவ முதியவர் யாரும் மனித நேயப் பணிகள் எங்கும் செய்வதில்லை !


சி. ஜெயபாரதன்.

பாலா said...

அடேங்கப்பா, இங்க பெரிய படமே ஓடிட்டு இருக்கே! :-)

தருமி சார்.. கலக்கறீங்க! வாழ்த்துகள்!

எனக்கு ஒரேயொரு டவுட். இந்த ‘சாமி’க்கு வக்காலத்து வாங்கறவங்க எல்லாம் ஏன் எப்பவும் எதோ ‘PhD' படிச்ச ரேஞ்சுக்கு கூடவே அறிவியலையும் இழுக்கறாங்க?

அந்த மாதிரி ஃபேன்சியா வார்த்தைகளை போட்டா, நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம் வாயை பொத்திக்குவோம்னு தானே?

கூடவே... ஐன்ஸ்டைன், நியூட்டன், Black Hole, White Hole-ன்னு வேற பேச ஆரம்பிச்சிடுவாங்க.

நமக்கு அதெல்லாம்.. எதோ சுவத்துல இருக்கற ஓட்டையை பத்தி பேசறாங்களோன்னு நினைச்சி, அடுத்து பேசாம விட்டுடுறோம்.

யோவ்..! கடவுளை காட்டுங்கய்யான்னா... தூண், துரும்பு, அண்டம், பெருவெளி-ன்னு ஆரம்பிச்சிடுறாங்க. கடவுள் எங்கயான்னா.. காத்து எங்கன்னு திருப்பி கேக்கறாங்க. அப்புறம் இந்த OmniPrest, மாருதிப்ரெண்ட்-ன்னு வேற!

அய்யோ.. சாமி... கடவுளே..., உன்னோட பக்தர்கள் கிட்ட இருந்து என்னையும், தருமி சாரையும் காப்பாத்து...!

கடவுள் என்ற காரணியே.. மதத்தின் பைல்ஸ் (மூலம்). இந்த பைல்ஸ், மதத்தை நம்பும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் கழிவை வெளியேற்றும் போது, ‘ரத்தம்’ வரும்... வந்தே தீரும். இன்னும் அடிச்சிகிட்டு சாகட்டும்.

நீங்க அடிச்சி ஆடுங்க சார்! :)

Jayabarathan said...

நண்பர்களே !

கிணற்றுத் தவளைக்கு மேலே தாவி வந்து கிணற்றுக்கு வெளியே உள்ள ஒளிமயமான உலகம் தெரியாது.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போய் உள்ளதாகத் எண்ணிக் கொள்ளுமாம்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு"

என்று வள்ளுவர் இம்மாதிரிக் கிணற்றுத் தவளைகளைப் பற்றிக் கூறுகிறார்.

சி. ஜெயபாரதன், கனடா

வால்பையன் said...

ஜெயபாரதன் ஐயா!

நீங்களும் நானும் வெளியில் தான் இருக்கிறோம்! எங்களை கிணற்று தவளைகள் என்று குறை சொல்லும் முன்னர் உங்களையும் திரும்பி அதே கேள்வியை கேட்டு பாருங்கள்!

இந்த கடவுள் மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் சொல்லும் அதே வாதம் உங்களுடயது! அதாவது நீங்கள் நல்லவர்கள், உத்தமர்கள். ஆனால் நாங்கள் நல்லது கெட்டது தெரியாத மூடர்கள் அப்படி தானே!

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும் என்று உங்களுக்கு எப்படி தெரியும். நீங்கள் பூனையாக இருந்து பார்த்தீர்களா?

மனுச பயலுகள பத்தி பேசுங்க சார்!

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//கிணற்றுத் தவளைக்கு மேலே தாவி வந்து கிணற்றுக்கு வெளியே உள்ள ஒளிமயமான உலகம் தெரியாது.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போய் உள்ளதாகத் எண்ணிக் கொள்ளுமாம்.
//

இது யாரை மனதில் வைத்துச் சொன்னீர்களோ தெரியாது. இருப்பினும் மொத்தமாக மத மறுப்பாளர்களை மனதில் வைத்துக் கூறியதாகக் கொண்டு .....

வால்பையன் சொன்னது போலவே பல மத நம்பிக்கையாளர்கள் இதே போன்று என்னிடமும் சொல்லியதுண்டு; அதிலும் அதிகமாகக் கிறித்துவ நண்பர்கள் இன்னொன்றும் சொல்வார்கள்: 'கடவுளை அறிந்து கொண்டதால் நாங்கள் எவ்வளவு மனச் சந்தோஷத்தோடு இருக்கிறோம்.'

என்னைப் பொறுத்தவரை அவர்களோ நீங்களோ சொல்வதெல்லாமே perspective சம்பந்தப்பட்ட சிந்தனைகள். எனக்கு மன நிம்மதி, சந்தோஷம் இருக்கிறதா இல்லையா என்று அந்த நண்பர்களுக்கு எப்படித் தெரியும்? வாழ்க்கையில் வரும் சந்தோஷம், துக்கம், நிம்மதி .. இவை எல்லோருக்கும் பொதுதானே.

நீங்கள் சொல்லியதில் 'கிணற்றுத் தவளை'களை எடுத்துக் கொள்வோமா?
நானொரு கிணற்றுத் தவளை என்று கொண்டால், at least நான் இரண்டு கிணறு பார்த்த தவளை - பிறப்பினால் ஊட்டப்பட்ட கிறித்துவமதத்திலிருந்து வெளியே வந்தேன். (எந்த மதத்திலிருந்தும், அதுவும் ஆபிரஹாமிய மதங்களிலிருந்து வெளியே வர தனி தைரியம் வேண்டும்; அந்த அளவு மனித மனங்களில் பயமேற்படுத்தும் கொள்கைகள் அங்கே. இன்று மயிலில் வந்த ஒரு குரான் வசனம் அதைச் சொல்லும்: "'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.' ( 4:56)" - what a sadism!!)
என் 'தாய்மத'த்திலிருந்து வெளி வந்தபின் ஓரளவு 'சுற்றியும்' பார்த்தேன்; மதங்களின் மேல் நான் கொண்ட புரிதலால் இன்று மத & கடவுள் மறுப்பாளனாக இருக்கிறேன்.

ஆனால் நீங்கள் பிறப்பினாலும், இளவயதிலேயே ஊட்டப்பட்ட கற்பிதங்களினாலும் இன்னும் அந்த ஒரே "கிணற்றை" மட்டும் பார்த்தவராகத்தானே இருக்கிறீர்கள்.

இரண்டில் எந்த "தவளை" better?

ஒரே கிணற்றுக்குள் இருந்தவர் எப்படி இரண்டு கிணறும் இன்னும் கொஞ்ச சொச்சமும் பார்த்தவனை நோக்கி 'பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போய் உள்ளதாகத் எண்ணிக் கொள்ளுமாம்' என்றெல்லாம் சொல்ல முடியும்; கூடும். தவறாக இல்லையா?
இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் நான் எனக்காக ஏற்படுத்திக்கொண்ட 'பத்துக் கட்டளை'களில்(Ten Commandments) எனது இரண்டாவது கட்டளையே இதைப் பற்றியதுதான். அந்தக் கட்டளை சிரமேற்கொண்டு, நான் என் கண்களைத் திறந்து பார்த்தமையால்தான் நான் மதங்களிலிருந்து வெளியே வந்தேன்.


வள்ளுவரும் சரியாகத்தானே சொல்லிச் சென்றுள்ளார்.

நம் 'மலர்களில் எது அதிக நீட்டம் உள்ளது'? என்று கொஞ்சம் அலசிப் பாருங்களேன் ..உங்கள் தீர்ப்புக்கே அதை விட்டு விடுகிறேன்.

மதங்களிலிருந்து வெளியே வந்து, மனித நேயத்தில் நுழைந்து பாருங்கள். அப்போது தெரியும் நீங்களே சொல்லியுள்ள 'வெளியே உள்ள ஒளிமயமான உலகம் எவ்வளவு அழகு; அகலம்; ஆழம் என்று.

நான் திளைக்கிறேன். உங்களையும் அழைக்கிறேன்.

வால்பையன் said...

//நான் திளைக்கிறேன். உங்களையும் அழைக்கிறேன். //

நான் வழிமொழிகிறேன்

Jayabarathan said...

//// அந்த மாதிரி ஃபேன்சியா வார்த்தைகளை போட்டா, நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம் வாயை பொத்திக்குவோம்னு தானே?

கூடவே... ஐன்ஸ்டைன், நியூட்டன், Black Hole, White Hole-ன்னு வேற பேச ஆரம்பிச்சிடுவாங்க.

நமக்கு அதெல்லாம்.. எதோ சுவத்துல இருக்கற ஓட்டையை பத்தி பேசறாங்களோன்னு நினைச்சி, அடுத்து பேசாம விட்டுடுறோம். ///

இப்படித்தான் கிணற்றுத் தவளைகள் பேசும்.

ஐன்ஸ்டைனைப் பற்றி யாரெல்லாம் பேசினோம் ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர்களே !

மதங்களைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள் : நான் ஒரு மதவாதி விஞ்ஞானி அல்லன். இந்துவாயினும் பிற மதத்தாரைச் சகோதரராய் மதிப்பவன். அதாவது நான் ஒரு மதச் சகிப்பாளி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சகிப்புத்தனம் ஆகியவற்றை விடுதலை இந்தியாவில் ஏற்றுக் கொள்பவன்.

21 ஆம் நூற்றாண்டில் ஆம் மதச் சீர்திருத்தங்கள் தேவை. ஆனால் குறைபாடுகளைக் குருமார் நிவர்த்தி செய்யாமல், மதத்தை ஒழிப்போம் என்று சமூகப் புரட்சியாளர் தடியுடன் முற்படுவது நிகழக் கூடிய சம்பவம் இல்லை !!!

உலகப் பிரச்சனைகள் வெறும் விஞ்ஞானத்தில் மட்டும் தீரக் கூடியவை அல்ல. மதங்களும், விஞ்ஞானம் இணைந்துதான் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மேதை ஐன்ஸ்டைன் கூறுகிறார். அதுவே எனது கருத்தும்.

சி. ஜெயபாரதன்

தருமி said...

திருடத்தெரியாதவன் தலையாரி வீட்ல போய் ஒளிஞ்சானாம் அப்டின்னு சொல்லுவாங்க; உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நீங்க சொல்றது //'குறைபாடுகளைக் குருமார் நிவர்த்தி செய்யாமல்,..// அப்படித்தானிருக்கு. பாதிப் பிரச்சனையே "புத்தகங்களை"க் கையிலெடுத்துத் திரியும் அந்தக் குருமார்களால்தானே. நீங்கள் மதச் சீர்திருத்தங்களுக்கு அவர்களை அழைக்கிறீர்கள். பாலுக்குக் காவலாக பூனைகளையா கூப்பிடுவது! உங்கள் மதங்களைச் சீர்திருத்த வேண்டியதுள்ளது என்று மத நம்பிக்கையாளர்களிடம் சொல்லிப் பாருங்கள் .. எங்கள் புத்தகம் கடவுளின் வார்த்தைகள் என்பதுதான் அவர்களது தாரக மந்திரம். மதச்சீர்திருத்தம் என்பது அத்தைக்கு மீசை முளைக்கிற கதைதான்.

//மதங்களும், விஞ்ஞானம் இணைந்துதான் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் //

சமூகப்பிரச்சனைகளைத் தீர்க்க விஞ்ஞானமல்ல, அதன் பலனை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் அரசியலே முக்கியமானது. அந்த அரசியலும், மதமும் எப்படி ஒரு deadly comb என்று எனது பழைய பதிவில் கூறியுள்ளேன். கொஞ்சம் எட்டிப் பாருங்கள்.அதில் சொன்னஒரு முக்கியமான விஷயம்:
தெய்வத்தின் வார்த்தைகள்' நமக்குள் பிளவுகளை வளர்க்க மட்டுமே பயன்படும். மனித ஒற்றுமை, மனித நேயம் எல்லாமே பின் தள்ளப் படும்.

தருமி said...

அப்துல் குத்தூஸ்,
////ஒண்ணுமே புரியலையே'ப்பா//

எப்படி புரியுமப்பா... எப்படி புரியும்? //

இப்பதிவு ஒரு விவாத மேடையாகக்கூடிய கருப்பொருளைக் கொண்டிருந்தும் யாரும் களத்தில் குதிக்கவில்ல்லையே என்ற காரணத்தால்தான் "ஒண்ணுமே புரியலையே'ப்பா" என்று சொல்லியிருந்தேன். காலம் தாழ்த்தி நடந்தாலும் ந்ல்ல ஒரு ஆரோக்கியமான விவாதம் நடந்து வருகிறது. இப்போது புரிகிறதா ஏன் அப்படிக் கேட்டேன் என்று. நீங்க என்னடான்னா, சாய்ஸ்ல உடச்சொல்லீட்டீங்களே ... !

Jayabarathan said...

நண்பர் தருமி,

புத்தர், விவேகனந்தர் போன்றோர் இந்து மதத்தைச் செப்பணிட்டார். மார்டின் லூதர் கிறித்துவ மதத்தைச் சீர்திருத்தினார்.

அரசியல் அறிஞர் என்றாலே வஞ்சகர், லஞ்சகர், அஞ்சுபவர் என்று பொருள். 45 ஆண்டு காலமாகப் பெரியாரின் சீடர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார் அவர்கள் தமிழகத்தில் என்ன செய்தார்கள் என்று பட்டியில் இடுங்களேன்.

தெய்வத்தின் வார்த்தைகள் என்றால் என்ன ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

உலகெங்கும் தமிழகம் உட்படச் சமூகக் கலாச்சாரமும், பின்பற்றும் மதமும் இரண்டறக் கலந்துள்ளன. இரண்டில் ஒன்றை எப்படி நீக்க முடியும் ? மக்களின் உதிரத்தில் ஓடுவது கலாச்சாரம்.

சீர்திருத்தம் அடையும் மதங்கள் 21 ஆம் நூற்றாண்டில் மக்களை நேய மனிதராய் ஆக்க முடியும் என்பது என் கருத்து.

ஒழுக்க நெறியில்லாத அரசியல் வாதிகள் அடிப்படை மதவாதிகளை விடக் கொடுமையானவர்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

பெரியாரின் சீடர்களே! நண்பர்களே !

தமிழகத்தில் ஒரு ஜாதி அல்லது ஒரு மதத்தை எப்படி ஒழிப்பது என்பதற்கு 10 அல்லது 20 கருத்துக்களை எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.

எந்த ஜாதியை முதலில் ஒழிப்பது அல்லது எந்த மதத்தை முதலில் ஒழிப்பது என்றும் குறிப்பிடுங்கள்.

தமிழகத்தில் மட்டும் இவற்றை ஒழித்தால் போதுமா ? அல்லது தமிழகம் ஒட்டிக் கொண்டுள்ள இந்தியா பூராவும் இவை ஒழிய வேண்டுமா ?

உலகெலாம் தமிழர் பரவி யுள்ளதையும் மறந்து விடாதீர்கள்.

சி. ஜெயபாரதன், கனடா


சி. ஜெயபாரதன், கனடா

வால்பையன் said...

//இப்படித்தான் கிணற்றுத் தவளைகள் பேசும்.

ஐன்ஸ்டைனைப் பற்றி யாரெல்லாம் பேசினோம் ?//

நான் ஒன்பதாவது தான் படித்திருகிறேன்.
எனக்கு ஐன்ஸ்டீன் என்ன சொன்னாருன்னு தெரியாது. ஆனா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
அப்ப நான் கடல் தவளையா?

வால்பையன் said...

//21 ஆம் நூற்றாண்டில் ஆம் மதச் சீர்திருத்தங்கள் தேவை. ஆனால் குறைபாடுகளைக் குருமார் நிவர்த்தி செய்யாமல், மதத்தை ஒழிப்போம் என்று சமூகப் புரட்சியாளர் தடியுடன் முற்படுவது நிகழக் கூடிய சம்பவம் இல்லை !!!//

மத சீர்த்திருத்தமா? எதுக்கு?

நாங்க மதமே வேண்டாங்கிறோம். அதில சீர்திருத்தமா! மனிதத்தின் குறைபாடு தான் மதமே! சீர்த்திருத்தப்பட வேண்டியது மனிதமே!

வால்பையன் said...

//உலகப் பிரச்சனைகள் வெறும் விஞ்ஞானத்தில் மட்டும் தீரக் கூடியவை அல்ல. மதங்களும், விஞ்ஞானம் இணைந்துதான் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மேதை ஐன்ஸ்டைன் கூறுகிறார். அதுவே எனது கருத்தும்.//

இங்கே எதுக்கு ஐன்ஸ்டைன் வர்றார்.

ஐம்பது வயதுக்கு மேல் ஒரு மனிதன் வாழ்வது வேஸ்ட்ன்னு ஐன்ஸ்டைன் சொன்னா ஐம்பது வயசுல்ல செத்து போயிறுவிங்களா?

சரி எது உலக பிரச்சனை?
சொல்லுங்க மதம் இல்லாமலே தீர்க்கிறோம்!

இல்ல இப்போ இருக்குற பொருளாதார பிரச்சனையை மதத்தை கொண்டு தீருங்கள் பார்ப்ப்போம்

வால்பையன் said...

//பெரியாரின் சீடர்களே! நண்பர்களே !//

அப்படி யாரும் இங்கு இல்லை!
பெரியாரை குருவாய் ஏற்று கொள்வது கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவதும் ஒன்று

வால்பையன் said...

//தமிழகத்தில் ஒரு ஜாதி அல்லது ஒரு மதத்தை எப்படி ஒழிப்பது என்பதற்கு 10 அல்லது 20 கருத்துக்களை எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம். //

எதுக்கு பத்து இருபது கருத்துகள்!

சாதியிம் மதமும் எதுக்கு அது என்ன சமூகத்துக்கு செய்யுதுன்னு ஒரே ஒரு கேள்வி உங்களையே நீங்க கேட்டு பாருங்க தெரியும்

வால்பையன் said...

//எந்த ஜாதியை முதலில் ஒழிப்பது அல்லது எந்த மதத்தை முதலில் ஒழிப்பது என்றும் குறிப்பிடுங்கள்.//

இதிலிருந்து தான் ஆரம்பிக்குது!
சண்டைகளும் மோதல்களும்!

எல்லா குப்பைகளையும் ஒண்ணா போட்டு எரிக்க வேண்டியது தானே!

வால்பையன் said...

//தமிழகத்தில் மட்டும் இவற்றை ஒழித்தால் போதுமா ? அல்லது தமிழகம் ஒட்டிக் கொண்டுள்ள இந்தியா பூராவும் இவை ஒழிய வேண்டுமா ?

உலகெலாம் தமிழர் பரவி யுள்ளதையும் மறந்து விடாதீர்கள்//

எங்களுடய கொள்கை முதலில் நாங்கள் சுத்தமாவது!

அதே போல் நீங்களும் சுத்தமாகுங்கள்
உலகம் தானாக சுத்தமாகும்!

வால்பையன் said...

//புத்தர், விவேகனந்தர் போன்றோர் இந்து மதத்தைச் செப்பணிட்டார். மார்டின் லூதர் கிறித்துவ மதத்தைச் சீர்திருத்தினார். //

செப்பணிட என்ன தவறுகள் இருந்தது?
இப்போது மட்டும் ஒழுங்கா இருக்கா?

அன்றைய மனிதன் எதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டி கட்டாய படுத்தபட்டான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை பின்பற்றவில்லையென்றால் அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள்!

தன்னையே கடவுளாக அறிவித்து கொள்ளும் அதிகாரம் அரசனுக்கு மட்டும் தான் இருந்தது. அவன் சொன்னால் மக்கள் கேட்டே ஆக வேண்டும்.

இவ்வாறு தான் கடவுளும் மதமும் உருவாகியது! உங்கள் விஞ்ஞானம் அதற்கு முலாம் பூசி சிலையாக்கி வைத்தது.

வால்பையன் said...

//45 ஆண்டு காலமாகப் பெரியாரின் சீடர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார் அவர்கள் தமிழகத்தில் என்ன செய்தார்கள் என்று பட்டியில் இடுங்களேன்.//

அவனும் திருடுகிறான், நானும் திருடுவேன் கதை மாதிரி இருக்கு!

விவேக் முதலில் ராஜாராம் மோகன் ராய் சிஷ்யர். ஏன் ராமகிருஸ்னரிடம் வரவேண்டும்.

பெரியார் கொள்கைகளை பேசி திரிபவர்கள் எல்லோரும் அவருக்கு பாலோயர்கள். அவர்களுக்கு சுய சிந்தனை ரொம்ப கம்மி!

சரியான நேர்கோட்டில் வாதம் கூட செய்ய தெரியாதவர்கள்!

ஏற்கனவே சொன்னது தான்!

பெரியார் சொன்னார் என்பதற்காக பின்பற்றுபவர்கள் ஒருவிதத்தில் மத அல்லது தனி உருவ வழிபாடுகள் கொண்டதற்கு சமம்.

Jayabarathan said...

நண்பர் வால்பையன்,

முதலில் நீங்கள் யார் என்று மெய்யான பெயருடன் கேள்வியைக் கேளுங்கள். தர்க்கமிடலாம். இப்படிப் பயந்து போய் பெயர் சொல்ல அஞ்சிக் கொண்டு முகமூடி அணிந்து கல்லைத் தூக்கிப் போட்டு ஓடாதீர்கள் ?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று எல்லாருக்கும் தெரியும் !!!

சி. ஜெயபாரதன்.

தருமி said...

ஜெயபாரதன்,
வால்ஸ் தன்னோட புகைப்படமே போட்டு தானே எழுதுகிறார்.புனைப்பெயரோடு எழுதுவதில் தவறென்ன? ஒரு வேளை உண்மையான பெயர்தான் வேண்டுமென்றால் அவர் இயற்பெயர்: அருண்.வேறு விவரம் ஏதும் வேண்டுமானாலும் கொடுப்பார். சொல்லப்போனால் தேவைக்கதிகமாகவே தன்னை வெளியே காண்பித்துக் கொள்பவர்தான் அவர்.

தருமி said...

//புத்தர், விவேகனந்தர் போன்றோர் இந்து மதத்தைச் செப்பணிட்டார். //

இந்து மதத்தில் நான் காணும் பெரும் இழிவு சனாதன தர்மம். நீங்கள் சொல்லும் புத்தரும் விவேகானந்தரும் செப்பனிட்டபின் இந்த இழிவு ஒழிந்து விட்டதா?

//மார்டின் லூதர் கிறித்துவ மதத்தைச் சீர்திருத்தினார். //

அதன்பின் தான், அதுவரை மேல்மட்டத்தில் மட்டும் இருந்த பிளவுகள், எல்லா மட்டத்திலும் பரவின. vertical problems என்று மட்டுமிருந்தது இப்போது vertical and horizontal problems ஆக மாறியதென்னவோ மார்டின் லூதர் கிங்-க்குக்குப் பிறகுதானே.

//45 ஆண்டு காலமாகப் பெரியாரின் சீடர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார் அவர்கள் தமிழகத்தில் என்ன செய்தார்கள் என்று பட்டியில் இடுங்களேன். //

சின்ன வயதில் என் அப்பா பேசி நான் கேட்டதும், இப்போது நீங்கள் பேசுவதும் ஒன்றாக இருக்கிறது. என் அப்பா பேசியதற்குரிய காரணம் புரிகிறது. அதுவரை அரசியல்வாதிகள் எல்லோருமே மேல்தட்டு மக்கள்; பணம், படிப்பு எல்லோருக்கும் இருந்தது. பின் வந்த திராவிடக் கட்சிக்காரர்கள் சாமான்யர்கள். அந்தக் காலத்து படித்த மக்களுக்கு அது ஒரு தாங்க முடியாத காரியமாக இருந்ததே காரணம்.

சரி விடுங்கள்... பட்டியல் கேட்டிருக்கிறீர்கள். அதற்கென்ன தந்துவிட்டால் போச்சு. ஏற்கெனவே நண்பர் ஜோ அவர்கள் தந்திருக்கிறார்கள். அங்கே போய் பார்த்துவிடுங்கள், ப்ளீஸ்!

தருமி said...

//தெய்வத்தின் வார்த்தைகள் என்றால் என்ன ?//

கிறித்துவத்தில் முதல் கட்டளை: நானே உனக்குக் கடவுள்; என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை.

இஸ்லாமியத்தில்: அல்லாதான் கடவுள். அவருக்கு இணையாக யாரையும் கொள்ளக் கூடாது.

நீங்கள் சொல்வது போல், நீங்கள் ஒரு மதச்சகிப்பாளியாக இருக்கிறீர்கள்.இருந்தாலும் எல்லா மதமும் எனக்குச் சமம் என்கிறீர்களே, அது இங்கே இந்தக் கட்டளைகளுக்கு முன் எடுபடுமா?

தருமி said...

//ஒழுக்க நெறியில்லாத அரசியல் வாதிகள் அடிப்படை மதவாதிகளை விடக் கொடுமையானவர்.//

இல்லை இல்லை.. முழுமையாக எதிர்க்கிறேன். அரசியல்வாதி ஒரு பொய்,புனை, முக்கியமாய் சுருட்டு (!)ஏமாற்று என்றுமட்டும் தான் இருப்பார்கள். நீங்கள் சொல்லும் அடிப்படை மதவாதிகள் ஆன்மா, புண்ணியம், பாவம் என்று இல்லாத பல சொல்லி, அடுத்த வாழ்க்கைக்கு உன்னைத் தயார் படுத்துகிறேன் என்று சொல்லி நம் லோகாதய மற்றும் ஆன்மிக விசயங்கள் என்று நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் கூட கன்ட்ரோல் செய்பவர்களாச்சே ..!

தருமி said...

//மதங்களும், விஞ்ஞானம் இணைந்துதான் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மேதை ஐன்ஸ்டைன் கூறுகிறார்//

ஐன்ஸ்டீன் உங்களுக்கு மிகவும் பிடிக்க காரணம் புரிகிறது. ஆனால் வாசிக்கும்போது என் கண்களுக்கு அவர் தரும் தோற்றம் உங்களுக்குக் கிடைக்கும் தோற்றத்திலிருந்து முற்றும் மாறுபட்டு அல்லவா இருக்கிறது. நீங்கள் ஐன்ஸ்டீன் பற்றிச் சொல்பவைகளை நானும் வாசிக்க ஆவலுள்ளவனாயிருக்கிறேன்.

தருமி said...

//இந்த கடவுள் மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் சொல்லும் அதே வாதம் உங்களுடயது! அதாவது நீங்கள் நல்லவர்கள், உத்தமர்கள். ஆனால் நாங்கள் நல்லது கெட்டது தெரியாத மூடர்கள் அப்படி தானே!//

வால்ஸ்,
இந்த எண்ணம் எல்லா மத நம்பிக்கையாளர்களிடம் இருப்பதாகவும் ஆனால் அறிவியல் சோதனைகள் நடத்தி இதைத் தவறென நிருபித்ததைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொடரில் (6-ம் அத்தியாயம்) இன்னும் நாலைந்து பகுதிகளுக்குப் பிறகு தரப் போகிறேன். தொடர்ந்து வாசித்துவந்து அதையும் வாசியுங்கள்.

ஜெயபாரதன்,
உங்களையும் அதை வாசிக்க சிறிது காத்திருக்க வேண்டுகிறேன். அல்லது ஒன்று செய்யுங்கள். இந்தப் புத்தகத்தின் 254-267 பக்கங்களை மட்டும் வாசித்து விடுங்கள்.

Jayabarathan said...

நண்பர்களே,

பகுத்தறிவுத் தந்தை பெரியார்தான் கடவுளை நம்புவோரை எல்லாம் முட்டாள்கள் என்று 75 ஆண்டுகளாக முத்திரை யிட்டவர். பதிலுக்கு ஒருவர் கூட பெரியாரை மூடர் என்று தாக்கியதில்லை.


சி. ஜெயபாரதன்

தருமி said...

என்ன சொல்ல முயல்கிறீர்கள்?

நான் ஒன்றும் பெரியாரைத் தெய்வமாக்குபவனில்லை. அவர் மீது அவர் செய்த சில பணிகளுக்காக மரியாதை உண்டு. அவ்வளவே. ஆனால், உங்களுக்கு ஐன்ஸ்டீனின் மேல் ஒரு fixation-ம் பெரியார் மேல் obsession-ம் இருப்பதுபோல் தெரிகிறது!

நான் பேச வந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தால் நல்லதென்று நினைக்கிறேன்.

Jayabarathan said...

நண்பர் தருமி

அதே போல் உங்களுக்கு பெரியார் மீது fixation-ம் ஐன்ஸ்டைன் மீது obsession-ம் உள்ளன.

உரையாடும் போது இவைகள் உதிரி போல் தெரிந்தாலும் இவற்றைப் பேசு இவற்றைப் பேசாதே என்று வரம்புகள் தேவையா ? கடவுள், மதம் என்று நாம் வாதிடும் போது பெரியார் தலையும், ஐன்ஸ்டைன் தலையும் உருளத்தான் செய்யும். நமது தர்க்க ஆரம்பமே ஐன்ஸ்டைன் பெயரில்தான் ஆரம்பமானது நண்பரே ! மறக்க வேண்டாம் அதை !

சி. ஜெயபாரதன்

தருமி said...

//இவற்றைப் பேசு இவற்றைப் பேசாதே என்று வரம்புகள் தேவையா ?//

தேவையே இல்லைதான்.

நான் சொல்றது அப்படியே பதிவு பற்றிய விஷயத்தைப் பற்றியும் பேசுவோமா என்பதுதான்.

Thekkikattan|தெகா said...

ஆஹா, இப்படித்தான் கலந்துரையாடல் இருக்க வேண்டும். எவ்வளவு விசயங்கள்!

பொதுவாக ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் பொருட்டு எடுக்கப்படும் முடிவிற்கே அவ்வளவு சாம்பில்கள் தேவைப்படும் பொழுது, எப்படி ஒற்றைச் சாளரத்தின் வழி இந்த அகண்ட பிரபஞ்ச சூத்திரத்தையும் தான் அறிந்து கொண்டதாக அதுவும் கால்களில் தனக்குத்தானே (மதம் என்ற)சங்கிலியிட்டுக் கொண்டு காண முடியும்?

அதனின்று விலகி இவ் உலகத்தின் அனைத்து பிரச்சினைகளின் "மூலம்" எங்கிருந்து தோன்றியது என்ற அடிப்படை கேள்வியையே கேக்க முடியும்.

அதற்கு குறைந்தது இரண்டு "கிணறு"களாவது அனுபவப் பட்டிருக்க வேண்டுமல்லவா, சாம்பில் சைஸ் ரீசனபிலாக இருக்க.

கிணறுகள் பார்க்க "பயம்" களைதல் அவசியம். பயம் களைய தேடலும், தெளிவும், உழைப்பும் மிக அவசியம். எல்லாவற்றுக்கும் நான் நினைக்கிறேன் மனித உளவியல் ரீதியில் தேடிப்பார்த்தால் காரண, காரியங்கள் அறிய முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

சுய சிந்தனைக்கு வழி வகுத்துக் கொண்டாலே "வெள்ளத்தணைய காம்பை நீட்டலாம்."

மனிதன் காலம் தோறும் தன்னை வளர்த்துக் கொள்ளவும், எல்லோரையும் நேசிக்கவும் சுய அலசல் இருந்தாலே போதும், குழந்தைக்கு அந்தப் பக்குவம் இல்லாததால் "சாமீ, பூச்சாண்டிகள் - கண்ணை குத்திவிடும் கதைகள் தேவைப்படலாம்."

Thekkikattan|தெகா said...

திராவிட அரசியல் கட்சிக்காரர்கள் எல்லா இடங்களிலும் நிகழும் சாக்கடைத் தனங்களில் ஊறித் திளைத்தாலும், மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு நல்ல விசயங்களும் மக்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதற்கு "ஜோ" பதிவில் லிஸ்ட் அவுட் பண்ணியிருக்கும் விசயங்களே சான்று.

மேலும் வட இந்தியாவில் அதிக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், விசயங்கள் பளிச்சென பிடிபடும்.

வோட்டாண்டி said...

//பகுத்தறிவுத் தந்தை பெரியார்தான் கடவுளை நம்புவோரை எல்லாம் முட்டாள்கள் என்று 75 ஆண்டுகளாக முத்திரை யிட்டவர். பதிலுக்கு ஒருவர் கூட பெரியாரை மூடர் என்று தாக்கியதில்லை.

தாக்கினார்கள்..பேச்சற்று போவார் என்றார்கள்.. போட்டு தள்ள பரிகார பூஜை எல்லாம் நடத்தினார்கள்..மேலும் மேலும் நாங்கள் முட்டாள்கள் என்றே இதன் மூலம் உலகிற்க்கு எடுத்துரைத்தார்கள்

//பெரியாரின் தீவிரச் சீர்திருத்தக் கொள்கைகள்தான் காலாவதியாகிக் கொண்டி ருக்கின்றன !!! மதங்கள் பாறைகளில் வேரூன்றி உள்ளன !!!

சீர்திருத்தம் என்பது பெரியாரின் சொத்து அல்ல.. அந்த கொள்கைகள் காலாவதி ஆனால் அது பெரியாரின் தோல்வி அல்ல.. மனிதனின் தோல்வியே..

//பிள்ளையார் சிலையை உடைத்தல், கம்ப ராமாயண இலக்கியத்தை எரித்தல்,

அவர் பக்கத்துக்கு வீட்டு பிளையார் சிலையை உடைக்கவில்லை.. சொந்த காசில் வாங்கி உடைத்தார்.. நீங்களும் பெரியார் சிலை ஒன்று வடித்து அதை உடையுங்கள்.. தவறில்லை..

//இந்திய சுதந்திர தினத்தைத் "துக்க தினமாகக்" கொண்டாடிய பகுத்தறிவாளி பெரியார் !!!
இந்தியா பிரிக்க பட்டு பல லட்சம் உயிர்கள் மடிந்த தினத்தை..சுதந்திரம் என்ற ஒன்று இதுவரை எந்த மூலை முக்கிலும் இல்லாத போது.. கொண்டாடுபவரை தான் நீங்கள் கேட்க வேண்டும் எங்கே சுதந்திரம் என்று ?

//நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லை தெரியாத "திராவிட நாடு" பிரிவினைக்குத் திட்டமிட்டுத் தோல்வி யடைந்தவர். //
தமிழனை இரண்டாம் தர குடிமகனாக 1965 il (இன்றும் மறைமுகமாக) கருதிய போது மொத்த தமிழகமே தனி நாடு கேட்டது!! தோல்வியும் அடைந்தது..ஆனால் அதன் காரணங்கள் சரியானவையே..

//மகள் வெளியே என்று கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.//
கரணம் காமம் இல்லை..சொத்து சேர வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடீர்கள்.. என்ன செய்ய..தத்து மகுளுக்கு சொத்துக்கள் போய் சேராது என்று அந்த காலத்தில் சட்டம் இருந்தது..அதனால் தான் சட்டப்படி (மட்டுமே) மனைவி ஆக்கினார்..

வோட்டாண்டி said...

//தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன, கடவுள் ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார்.

எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம், எந்தக் கடவுள் இதுவரைத் தமிழ் நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?//

அவர் ஒருவர் எவ்வளவு மதங்களையும் ஜாதிகளையும் handle பண்ண முடியும் ?? முடிஞ்ச அழவு வேர (கடவுளையும், பார்பனர்களையும் ) குறி வைத்தார்.

//Periyar is NOT a creative person rather a destroyer//
ஆமாம். சமூக அநீதிகளை ஒழிக்க பாடுபட்டவரை அழிப்பான்" என்று சொல்வது தான் சிறந்தது

//Look at all of his Disciples in D.K & D.M.K, ADMK"
கடவுளின் பெயர் கொண்டு இயங்கும் BJP, இஸ்லாம் தீவிரவாத இயக்கங்கள், ராம (வானர) சேனைகள்..இவங்கள விட என்னத்த பெருசா செஞ்சிடாங்க..என்ன மசூதிய இடிக்கல.., டாஸ்மாக் பக்கமா நடந்து போன பொண்ணுங்கள விரட்டி விரட்டி அடிகல. அப்பறம் எங்கயும் வெடி குண்டு வைகலை.. இதெல்லாம் செய்றவங்க கடவுள் பெயர் கொண்டு இயங்குராங்களே??

பெரியார் சில இடங்களில் தோற்றதாகவே வைத்து கொள்வோம் .. அனால் அது அவரது தவறு அல்ல..
2000 வருடமாக ரத்தத்தில் இரண்டற கலந்த மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க ஒரு பெரியார் பத்தாது . இதை தான் விவேக் ஒரு படத்தில் கதறி இருப்பார்..
200 பெரியார் இல்லை .. 400 பெரியார் வந்தாலும் முடியாதுடா.." என்று..

மாசிலா said...

மற்றவர்களை மன்னிக்க தெரியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள், ஈவிரக்கமற்றவர்கள், உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், சுதந்திரமாக சிந்திக்க தெரியாதவர்களே மத விரும்பிகள்.
மிக நல்ல பதிவு. தேவையான கருத்துக்கள். நன்றி.

வால்பையன் said...

//தேவைக்கதிகமாகவே தன்னை வெளியே காண்பித்துக் கொள்பவர்தான் அவர். //

ஆமாங்க எங்க எங்க மச்சம் இருக்குன்னு கூட சொல்லுவேன்!

மற்ற விபரங்கள் தருமி அய்யாவே சொல்லிட்டாரே!

வால்பையன் said...

//பகுத்தறிவுத் தந்தை பெரியார்தான் கடவுளை நம்புவோரை எல்லாம் முட்டாள்கள் என்று 75 ஆண்டுகளாக முத்திரை யிட்டவர். பதிலுக்கு ஒருவர் கூட பெரியாரை மூடர் என்று தாக்கியதில்லை.//

நான் பெரியாரை மூடர் என்று சொல்ல வரவில்லை! காரணம் பெரியாரின் வாழ்க்கையும், நடத்தையும் நான் நேரில் இருந்து பார்க்கவில்லை!
ஆனால் பெரியாரை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள்!
”மதவாதிகளை” போன்ற மூடர்கள்.

தருமி said...

மாசிலா,
உங்கள் பட்டியலை நான் மறுக்கிறேன்.கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எல்லோரும் கெட்டவர்களில்லை என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு நம்பிக்கையாளர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்றோ தீயவர்கள் என்றோ சொல்ல முடியாதல்லவா? நீங்கள் சொல்லிய //சுதந்திரமாக சிந்திக்க தெரியாதவர்களே மத விரும்பிகள். // என்பதனை சுதந்திரமாக சிந்திக்க மறுப்பவர்களே மத விரும்பிகள் என்று மாற்றலாமென நினைக்கிறேன்.

தருமி said...

வோட்டாண்டி,
உங்கள் கருத்தில் பலவும் நான் ஏற்கெனவே சொன்ன என் சில கருத்துக்களோடு ஒட்டியே உள்ளன.

//கடவுளின் பெயர் கொண்டு இயங்கும் BJP, இஸ்லாம் தீவிரவாத இயக்கங்கள், ராம (வானர) சேனைகள்..இவங்கள விட என்னத்த பெருசா செஞ்சிடாங்க..//

சரியா சொன்னீங்க....

தருமி said...

வால்ஸ், ஜெயபாரதன்,

நீங்கள் இருவருமே பெரியாரை ஒரே கோணத்திலதான் பார்க்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

அவரைப் பற்றிய என் கோணம் சிறிதே மாறுபட்டது.

தருமி said...

ஜெயபாரதன்,
உங்களது சில பின்னூட்டங்களை இங்கு இடுவதற்குப் பதில் என் முகவரிக்கு அனுப்பி விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் அவைகளை c & P செய்ய வேண்டியதாகி விடுகிறது.
இதோ இன்று வந்த பின்னூட்டம்:

ஜெயபாரதன் சொல்வது:

to வோட்டாண்டி

நண்பரே

நீங்களும் முகமூடி போட்டு ஏன் தர்க்கம் செய்கிறீர்கள் ?


/// மகள் வெளியே என்று கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.//

/// கரணம் காமம் இல்லை..சொத்து சேர வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடீர்கள்.. என்ன செய்ய..தத்து மகுளுக்கு சொத்துக்கள் போய் சேராது என்று அந்த காலத்தில் சட்டம் இருந்தது..அதனால் தான் சட்டப்படி (மட்டுமே) மனைவி ஆக்கினார்.///

++++++++++

பெண்ணைத் திருமணம் செய்வது முக்கியமாகச் சந்ததி விருத்திக்கும் இல்லறத் துணைக்கும். பகுத்தறிவுப் பெரியார் ஒருவர்தான் உலக வரலாற்றில் இப்படி வேடிக்கையான சொத்துத் திருமணம் செய்து ஒரு வாலிபப் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்தவர் !!! தனது பொன்னையும், பொருளையும், புகழையும் காட்டி ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை நாசாமாக்கியவர்.

அதை வெறுத்து அவரது பிரதான சீடரான அண்ணாத்துரையும் அவரது தம்பிமார்களும் பெரியாரை விட்டு விலகிப் போனதும் வரலாற்று முதன்மை யாகும்.


சி. ஜெயபாரதன்

தருமி said...

மன்னிக்கணும் ஜெயபாரதன். உங்கள் பெரியார் புராணம் போதுமென்றே நினைக்கிறேன். பெரியாரையும், ஐன்ஸ்டீனையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்வோமென்கிறேன். இல்லை அவர்கள்தான், அதிலும், பெரியார்தான் எனக்கு main course என்கிறீர்கள். பிரச்சனை என்னவென்றால் பதிவுக்குப் பொருந்தி வராத விஷயங்கள் அவை. பெரியாரின் தனிமனித குறைகளையோ, அவரது திருமண வாழ்க்கையையோ நான் என் பதிவின் பொருளாகக் கொள்ளவில்லையே!

ஒன்று செய்யலாம்; பெரியாரைப் பற்றிய விவாதங்களை இந்த என் பதிவில் வேண்டுமானால் தொடரலாமே!

இங்கே இந்தப் பதிவின் பொருளடக்கத்திற்கான விவாதங்களை மட்டும் நடத்தலாமா? please ...

வோட்டாண்டி said...

//பெண்ணைத் திருமணம் செய்வது முக்கியமாகச் சந்ததி விருத்திக்கும் இல்லறத் துணைக்கும்.

என் நிறுத்திடீங்க.. வீட்டு வேலை செய்ய..சமைக்க..துணி துவைக்க..ஆசைகள தணிசிக்க..
ஒரு comma போட்டு வைங்க.. இப்பதான் புரியுது குழந்தை பிறக்கவில்லைன ஏன் ஆண்கள்(அது ஆண் மேலய குறை இருந்தாலும்) இன்னொரு திருமணம் பண்ணிகிராங்கனு தெரியுது.. சந்ததி விருத்தி ஆவணும்ல

//தனது பொன்னையும், பொருளையும், புகழையும் காட்டி ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை நாசாமாக்கியவர். //
அப்படி பெரியார் திருமணம் பண்ணாட்டி மணியம்மை வேறு ஒருவரை திருமணம் பண்ணிக்கிற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை.. பெரியார் திருமணம் செய்வதற்கு முன்பும் பின்பும் பெரியாருக்கு ஒரு செவிலியகவே அவர் செய்யல்ப்பட்டார்..

ஒண்ணு சொல்ல உட்டீங்க..ஐயோ பாவம் அன்னை தெரசா..நோய் நோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடம் sympathy(பரிதாபம்) உருவாக்கி அவரை social servicela ஈடுபட வச்சிடாங்க.. இல்லன அவங்க திருமணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பாங்க..

வாங்க நம்ப தருமி ஐயா சொன்ன பெரியார் பற்றிய பதிவுலையே நம்ப விவாதத்த தொடருவோம். அங்கயும் இந்த பின்னூட்டத்த போட்டு வைக்கிறேன்..

பின்குறிப்பு: wednesday படத்தில் நாயகன் இறுதிவரை பெயரை கூற மாட்டார். காரணம் பெயரின் மூலம் அவரது மதம் தெரிந்து விடும்.. அப்பறம் அதை வைத்து அரசியல் செய்வார்கள்.. இதே காரணத்தினால் தான் நான் முகமூடி அணிந்திருக்கேன்..

Jayabarathan said...

நண்பரே,

ஈ.வே. ராமசாமி நாயக்கரே தன் பெயரை மறைக்காமல், மாற்றாமல் தைரியமாய் தான் இந்து மதத்திலிருந்து விலக வில்லை என்றும் இஸ்லாமிய மதத்தில் சேர விரும்ப வில்லை என்றும் கூறியவர்.

அன்னை தெரேஸா வேலைக்கு வைத்துக் கொண்ட எல்லாப் பெண்களும் அநாதைகள். கள்ளப் பிள்ளைகள் என்று "கண்ணிய" ஆண்கள் யாரும் கலியாணம் செய்ய ஏற்றுக் கொள்ளப்படாதவர்.

சி. ஜெயபாரதன்

தருமி said...

Oof ... I am exasperated !!

வோட்டாண்டி said...

விடமாடீங்க போல இருக்கு..
சரி பெரியார் திருமணம் பண்ணிகிட்டது தவறுன்னு ஒரு வாதத்துக்கு வச்சிப்போமே..

தசரதன் 100 பெண்கள திருமணம் பண்ணிகிட்டது, கிருஷ்ணர் 48(சரியான கணக்கு எந்த புரானதுலையும் இல்ல) பெண்கள திருமணம் பண்ணிகிட்டது.. முருகர் leftla ஒண்ணு rightla ஒண்ணோட இருக்குறது.. நபிகள்(இது எனக்கு 100% சரியாய் தெரியல) எட்டு வயது பொண்ண திருமணம் பண்ணிகிட்டது..
இதெல்லாம் பார்த்து tension ஆவத நீங்க பெரியார மட்டும் பார்த்து என் டென்ஷன் அவுறீங்க..

பி.கு: ஈ.வே.ரா பெயர வெளில்ல சொன்னதுக்கு அந்த காலத்துல மூஞ்ச மூடிட்டு மேடைல பேச முடியாதது ஒரு காரணமா இருக்கலாம்.. அல்லது முகமூடி இல்லாமல் செயல்பட அவருக்கு தில் இருந்திருக்கலாம். தனிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள துணிச்சல் இருந்திருக்கலாம்.. இவை எதுவுமே எனக்கு இல்லை..நான் ஒரு கோழை (சந்தோஷமா?).. மேலும் நான் ஒண்ணும் பெரியாரின் சீடன் அல்ல.. அவரின் பல கருத்துகளில் எனக்கும் உடன்பாடு கெடயாது..
புராணத்துல ஒரு ராஜாவோ.. தளபதியோ ஒன்றுக்கு மேற்பட்ட பொண்ணுங்கள திருமணம் பண்ணிகிரத கேட்டு.. அந்த புராணத்தின் நாயகனையே தெய்வமாக கருதி.. உயிரற்ற கல்லுக்கு அவரது பெயர் குடுத்து..அந்த கல்லுக்கு பால், நெய் அபிஷேகம் எல்லாம் செஞ்சிட்டு.. இந்த பக்கமா வந்து ஈ.வே.ரா வயசுல சிறிய பொண்ண கல்யாணம் பண்ணிகிடார்னு நீங்க சொல்றத கேட்டா.. கைபுள்ளை கட்டதுரை கிட்ட அடிவங்குனதுக்கு அப்பறமும்..ஊருக்குள்ள வந்து நான் பெரிய ரவுடின்னு உதார் விடுற மாதிரி இருக்கு...

என்ன சின்ன புள்ள தனமா இருக்கு??

ஓகை said...

//Oof ... I am exasperated !!//

தருமி ஐயா, நலமா? இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.

கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில் ஐன்ஸ்டினின் மேற்கோளோடு பதிவு ஆரம்பிக்கிறது. அவரை துணைக்கழைத்ததின் நோக்கம் அறிவின் சிகரத்தை தொட்டவர்களும் கடவுளை ஏற்காதவர்கள் என்று வலியுறுத்துவதர்க்காகத்தான் என்று புரிந்து கொள்கிறேன்.

நாத்திகர்களால் விஞ்ஞானிகளாக ஆக முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது. நாத்திகர்களின் உலகம் இன்று இப்போதிருக்கும் எல்லாவற்றுடன் முடிந்து போகிறது. நிரூபிக்கப்படாதவைகள் உண்மைகள் இல்லை என்கிற நிலையை நாத்திகர்கள் எடுக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டை ஒரு போதும் விஞ்ஞானிகள் எடுப்பதில்லை. நாத்திகர்களைப்போல் கடவுளும் சார் கோட்பாடுகளும் பொய் என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக விஞ்ஞானிகளை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. உங்கள் கருத்தென்ன?

வால்பையன் said...

//நாத்திகர்களால் விஞ்ஞானிகளாக ஆக முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது. //

நாத்தீக தன்மையால் தான் ஒருவரால் விஞ்ஞானியாகவே மாற முடிகிறது.

உதாரணம் என்ன தான் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கடவுள் என்ற மாயையை உடைக்க யாரும் தயாராக இல்லையே!

பொருள் கண்டுபிடிப்பது மட்டும் விஞ்ஞானம் இல்லை

வால்பையன் said...

கடவுள் என்னும் மாய மரத்தில் ஒரு இலையை கிள்ளி போட்டவர் பெரியார்!
நான் அதை வேரோட வெட்ட கோடாலியோடு வந்திருக்கிறேன்!
சும்மா சும்மா பெரியாரை பற்றி பேசி என்னை அவமான படுத்தாதீர்கள்

தருமி said...

வாருங்கள் ஓகை .. நாளாயிற்று .. நலம்தானே.

ஐன்ஸ்டீனின் மேற்கோளுக்கான காரணம் நீங்கள் சொன்னதாகத்தானிருக்கணும்.
ஆனால் அடுத்த வரியில் //நாத்திகர்களால் விஞ்ஞானிகளாக ஆக முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது.// என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டுமே கொஞ்சம் self contradictory ஆக இல்லையா? ஐன்ஸ்டீனும் ஒரு பெரிய அறிவியல் விஞ்ஞானி தானே. அங்கேயே உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டதே.

//நாத்திகர்களின் உலகம் இன்று இப்போதிருக்கும் எல்லாவற்றுடன் முடிந்து போகிறது. // இல்லாத ஒன்றான 'ஆன்மா'வைப் பொறுத்தவரை மட்டும் இது சரி. பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றா சொல்கிறீர்கள்?

//நாத்திகர்களைப்போல் கடவுளும் சார் கோட்பாடுகளும் பொய் என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக விஞ்ஞானிகளை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.//

விஞ்ஞானிகளை மத, கடவுள் நம்பிக்கையாளர்களாக என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. Richard Dawkins-ன் இந்தப் புத்தகத்தில் இதைப் பற்றியும் எழுதியுள்ளார்.

எனக்கு யாரோ அனுப்பித்தந்த ஒரு கட்டுரையின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்கும். அதை தனியாக save செய்யாமல் விட்டு விட்டேன். இப்போது அதை எனது electronic jungle-ல் காணாமல் போட்டு விட்டேன்.

Jayabarathan said...

நண்பரே

//// தசரதன் 100 பெண்கள திருமணம் பண்ணிகிட்டது, கிருஷ்ணர் 48(சரியான கணக்கு எந்த புரானதுலையும் இல்ல) பெண்கள திருமணம் பண்ணிகிட்டது.. முருகர் leftla ஒண்ணு rightla ஒண்ணோட இருக்குறது.. நபிகள்(இது எனக்கு 100% சரியாய் தெரியல) எட்டு வயது பொண்ண திருமணம் பண்ணிகிட்டது ////

கழுதை எது ? குதிரை எது ? கோவேறு கழுதை எது என்று ஆறறிவுடன் ஆராயத்தான் மனிதன் பிறந்துள்ளான்.

பெரியார் பகுத்தறிவுத் தந்தை. தசரத மன்னன், கிருஷ்ணன், முருகன், சாலமன், டேவிட், நபி நாயகம் இவர் அனைவரும் பெரியாரின் பூர்வீகப் பகைவர். பெரியார் கொள்கைப் பட்டியலில் முட்டாள் என்று பெயர் வாங்கியவர்.

பகுத்தறிவுப் பெரியாரும் அவர்களும் ஒன்றா ? இதிகாசக் கடவுள்கள், புராண மன்னர்கள், மதத் தலைவர் ஆகியோரைப் பெரியாருக்குச் சமமாக ஒப்பிட்டு அவரது பெயரில் நீங்களே கரியைப் பூசுகிறீர்கள் !

கிழவர்-குமரி வேடிக்கைத் திருமணங்கள் உலகெங்கும் இகழப் படுகின்றன !!! அவ்விதம் ஒரு பகுத்தறிவுத் தந்தை செய்ததை அவரது பிரதான சீடர் அண்ணாத்துரை முதல் ஆயிரம் தம்பிமார் வெறுத்த போது நீங்கள் ஆதரவு அளிப்பது வியப்பாக உள்ளது !!!!

இப்படித்தான் டாக்டர் அம்பேத்காரும் இந்து மதத்தையும், பிராமணரையும் வாழ்நாள் பூராவும் திட்டிக் கொண்டு இறுதியில் அவரும் ஒரு பிராமணப் பெண்ணை மணந்து கொண்டார்.

சி. ஜெயபாரதன்

ஓகை said...

//ஐன்ஸ்டீனின் மேற்கோளுக்கான காரணம் நீங்கள் சொன்னதாகத்தானிருக்கணும். ஆனால் அடுத்த வரியில் //நாத்திகர்களால் விஞ்ஞானிகளாக ஆக முடியுமா என்ற ஐயம் எனக்கிருக்கிறது.// என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டுமே கொஞ்சம் self contradictory ஆக இல்லையா? ஐன்ஸ்டீனும் ஒரு பெரிய அறிவியல் விஞ்ஞானி தானே. அங்கேயே உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டதே.//

self contradictory வரவில்லையே!. நான் ஐன்ஸ்டினை ஒரு நாத்திகர் என்று நம்பவில்லை. நாத்திகர்களின் கடவுள் விளக்கம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கடவுள் இல்லை என்பதாகவே இருக்கும். கடவுள் இல்லை என்பதை சுற்றி வளைத்து சொல்லமாட்டர்கள். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்களா என்ற விவாதத்துக்கே இடமிருக்காது. பெரியார் தெள்ளத்தெளிவாக கடவுள் இல்லை என்று சொல்கிறார். ஆனால் ஐன்ஸ்டின் என்ன சொல்கிறார்,

//In 1931 Einstein published an article in the magazine Forum and Century titled, “The World as I See It.” ...

“A knowledge of the existence of something we cannot penetrate, our perceptions of the profoundest reason and the most radiant beauty, which only in their most primitive forms are accessible to our minds it is this knowledge and this emotion that constitute true religiosity; in this sense and in this sense alone, I am a deeply religious man.”...//

இப்படி சொல்பவரை எப்படி நாத்திகராக சேர்த்துக் கொள்வது?

//குறுக்கிக் கூறவேண்டுமானால் ..: to the end of his days Einstein rejected the view of a “personal God” in the Judeo-Christian tradition and continued to embrace the view of that God is a creative mind that manifests Itself in the wonders of nature.//

இப்படிப் பட்டவரை எப்படி நாத்திகராக சேர்த்துக் கொள்வது?

நடராஜன்.

ஓகை said...

// //நாத்திகர்களின் உலகம் இன்று இப்போதிருக்கும் எல்லாவற்றுடன் முடிந்து போகிறது. // இல்லாத ஒன்றான 'ஆன்மா'வைப் பொறுத்தவரை மட்டும் இது சரி. பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றா சொல்கிறீர்கள்? //

"இல்லாத ஒன்றான ஆன்மா" என்பது உங்கள் திட்டவட்டமான முடிவு, இல்லையா! இப்படி முடிவு செய்துவிட்டால் தேடலக்கு இடமே இல்லை என்று ஆகிவிடுகிறதே. சந்திரசூரியரும் நட்சத்திரங்களும் நம்மைச் சுற்றி வருகிறதை கண்கூடாகக் கண்டபின்னும் பூமிதான் சுற்றுகிறதா என்ற ஆராய்ச்சி தேவையில்லாமல் போய்விடுகிறதே! எந்த முன்முடிவுக்காகவும் ஆராய்ச்சியை நிறுத்துபவனின் உள்ளிருக்கும் விஞ்ஞானி இறந்துவிடுகிறான் அல்லவா? கேள்வியும் தேடலும் பிறப்பிக்கிற விஞ்ஞானி அவை இருக்கும் வரையிலேயே விஞ்ஞானியாக இருக்கிறான் அல்லவா?

பிரபஞ்ச உண்மைகளைப் பேசுபவர்களில் யாரும் கடவுள் அல்லது கடவுள் சார்ந்த எல்லா ஆய்வுகளையும் நிறுத்திவிடலாம் என்று சொல்வார்களா?

நடராஜன்.

ஓகை said...

//Richard Dawkins-ன் இந்தப் புத்தகத்தில் இதைப் பற்றியும் எழுதியுள்ளார்.

எனக்கு யாரோ அனுப்பித்தந்த ஒரு கட்டுரையின் முழு நோக்கமே உங்கள் கேள்விக்கான பதிலாக இருக்கும். அதை தனியாக save செய்யாமல் விட்டு விட்டேன். இப்போது அதை எனது electronic jungle-ல் காணாமல் போட்டு விட்டேன்.//

எனக்கு உதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் எனக்கு தேடல் இருக்கிறது.

ஓகை said...

//இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை.//

கடவுள் மறுப்பாளர்களாகத் தெரியும் பலர் உண்மையில் அப்படியில்லை என்பதைக் கண்டிருக்கிறோம்.

ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர் நம்பிக்கையாளர்களைப் போல் நடிக்கிறார்கள் என்று இந்தக் கூற்று சொல்கிறது.

நம்பிக்கையாளர்களுக்கு தம் நம்பிக்கையின் மேலுள்ள ஐயங்களையே நம்பிக்கையின்மையாக இக்கூற்று கொள்கிறதோ?

Jayabarathan said...

நண்பர் தருமி,

மீண்டும் இதைக் குறிப்பிடுகிறேன். விஞ்ஞானி ஐன்ஸ்டைனின் மதக் கடவுள் பற்றி அறிய ஓரளவு ஆன்மீக உணர்வும், விஞ்ஞான அறிவும் தேவை. பெரியாரது கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் ஆன்மீக விஞ்ஞானிகள் யாவரும் முட்டாளாகத் தெரியும்.

ஐன்ஸ்டைன்தான் பிண்டமும் சக்தியும் ஒன்று, ஒன்றிலிருந்து ஒன்று மாறக் கூடியது என்னும் ஆன்மீகச் சித்தாந்தத்தை கணித ரூபமாக மெய்ப்பித்தார்.

In January 1951, Einstein stressed the importance of religion in a letter to the Ethical Culture Society. Ethics, according to Einstein, need to be given special emphasis, as science alone cannot save us. (xxvi)

He then proceeds to condemn society’s focus on developing an “intellectual attitude often solely to the practical and factual” which has produced an “impairment of ethical values.” (xxvii) And which has “come to lie like a killing frost upon human relations.” [xxviii]

The cultivation of this very important element is not to be left to science but to religion that is free of superstition. Religion should therefore be an important part of education, though it, unfortunately, according to Einstein, is receiving “too little consideration” [xxix] Einstein refers to this reality as a “sin of omission” and concludes with the warning that without a religion-based “’ethical culture’ “...there is no salvation for humanity.”(xxx)

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

மீண்டும் இதைக் குறிப்பிடுகிறேன். விஞ்ஞானி ஐன்ஸ்டைனின் மதக் கடவுள் பற்றி அறிய ஓரளவு ஆன்மீக உணர்வும், விஞ்ஞான அறிவும் தேவை. பெரியாரது கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் ஆன்மீக விஞ்ஞானிகள் யாவரும் முட்டாளாகத் தெரியும்.

ஐன்ஸ்டைன்தான் பிண்டமும் சக்தியும் ஒன்று, ஒன்றிலிருந்து ஒன்று மாறக் கூடியது என்னும் ஆன்மீகச் சித்தாந்தத்தை கணித ரூபமாக மெய்ப்பித்தார்.

In January 1951, Einstein stressed the importance of religion in a letter to the Ethical Culture Society. Ethics, according to Einstein, need to be given special emphasis, as science alone cannot save us. (xxvi)

He then proceeds to condemn society’s focus on developing an “intellectual attitude often solely to the practical and factual” which has produced an “impairment of ethical values.” (xxvii) And which has “come to lie like a killing frost upon human relations.” [xxviii]

The cultivation of this very important element is not to be left to science but to religion that is free of superstition. Religion should therefore be an important part of education, though it, unfortunately, according to Einstein, is receiving “too little consideration” [xxix] Einstein refers to this reality as a “sin of omission” and concludes with the warning that without a religion-based “’ethical culture’ “...there is no salvation for humanity.”(xxx)

சி. ஜெயபாரதன்

கோவி.கண்ணன் said...

//பெரியார் பகுத்தறிவுத் தந்தை. தசரத மன்னன், கிருஷ்ணன், முருகன், சாலமன், டேவிட், நபி நாயகம் இவர் அனைவரும் பெரியாரின் பூர்வீகப் பகைவர். பெரியார் கொள்கைப் பட்டியலில் முட்டாள் என்று பெயர் வாங்கியவர்.

பகுத்தறிவுப் பெரியாரும் அவர்களும் ஒன்றா ? இதிகாசக் கடவுள்கள், புராண மன்னர்கள், மதத் தலைவர் ஆகியோரைப் பெரியாருக்குச் சமமாக ஒப்பிட்டு அவரது பெயரில் நீங்களே கரியைப் பூசுகிறீர்கள் !

கிழவர்-குமரி வேடிக்கைத் திருமணங்கள் உலகெங்கும் இகழப் படுகின்றன !!! அவ்விதம் ஒரு பகுத்தறிவுத் தந்தை செய்ததை அவரது பிரதான சீடர் அண்ணாத்துரை முதல் ஆயிரம் தம்பிமார் வெறுத்த போது நீங்கள் ஆதரவு அளிப்பது வியப்பாக உள்ளது !!!!

இப்படித்தான் டாக்டர் அம்பேத்காரும் இந்து மதத்தையும், பிராமணரையும் வாழ்நாள் பூராவும் திட்டிக் கொண்டு இறுதியில் அவரும் ஒரு பிராமணப் பெண்ணை மணந்து கொண்டார்.

சி. ஜெயபாரதன்//

இந்தக் கருத்து ஏற்புடையதே இல்லை. வழக்கம் போல் பதில் சொல்லத் திணறுபவர்கள் பெரியாரின் தனிமனித செயல்களை 'பகுத்தறிவு' எனக்கட்டமைக்க முயல்வர், அதைத்தான் ஜெயபாரதன் ஐயாவும் செய்திருக்கிறார். உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள் பெரியார் சொன்னதைக் கேட்டோ, பெரியாரின் வழியையோ பின்பற்றவில்லை. அந்தந்த பகுதிகளில் இருக்கும் மூட நம்பிக்கைக் ஏற்றவாறு பகுத்தறிவு கொள்கைகள் பேசப்படும், இதில் பொதுவானது இறை மறுப்பு மட்டுமே. கிழவர் - குமரி திருமணம் வள்ளித் திருமணத்திலே உள்ளது தானே ? பெரியார் செய்தால் தவறு முருகன் செய்தால் தெய்வீகமோ ? தருமி ஐயாவின் கேள்விகளும் பதிவின் பொருளும் வேறு, இங்கு தேவையற்று திராவிடத்தையும், பெரியாரையும் பற்றி இகழ்வது பதிவில் தொடர்பில்லாமல் இருக்கிறது.

நாத்திகம் என்றாலே உங்களுக்கு பெரியார் மட்டுமே நினைவு வந்தால் போலி சாமியார்கள், காட்டுமிராண்டித்தனம், பழமை வாதம் இவற்றை ஏன் நாத்திகர்கள் இறை நம்பிக்கையாகப் பார்த்து தூற்றக் கூடாது ?

Jayabarathan said...

மதங்களைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள் : நான் ஒரு மதவாதி விஞ்ஞானி அல்லன். இந்துவாயினும் பிற மதத்தாரைச் சகோதரராய் மதிப்பவன். அதாவது நான் ஒரு மதச் சகிப்பாளி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சகிப்புத்தனம் ஆகியவற்றை விடுதலை இந்தியாவில் ஏற்றுக் கொள்பவன்.


http://en.wikipedia.org/wiki/Major_religious_groups [உலக மதங்களைப் பற்றி ஓரிழை]

+++++++++++++++++++++++++

World Population: 6,706,993,152 (6.7 பில்லியன்) (July 2008 est.)

The Christian Science Monitor, in a 1998 article "Top 10 Organized Religions in the World," provides a listing of the largest "organized religions":[4]

# Religion Number of Adherents

1
Christianity 1.9 billion
2 Islam 1.1 billion
3 Hinduism 781 million
4 Buddhism 324 million
5 Sikhism 19 million
6 Judaism 14 million
7 Bahá'í Faith 6.1 million
8 Confucianism 5.3 million
9 Jainism 4.9 million
10 Shinto 2.8 million

Other major religions, not found on the above lists, are:

Chinese traditional (including Taoism and Confucianism): 394 million
Tribal religions (Shamanism, Animism): roughly 300 million
African traditional and diasporic (including Vodou): roughly 100 million[5]
Juche (North Korean state ideology): 19 million
Cao Dai: 4 million
Tenrikyo: 2 million
Neopaganism: 1 million
Unitarian Universalism: 800,000
Rastafarianism: 600,000
Scientology: 500,000
++++++++++++++

The world's principal religions and spiritual traditions may be classified into a small number of major groups or world religions. According to the 2005 survey of Encyclopædia Britannica, the vast majority of religious and spiritual adherents follow Christianity (33% of world population), Islam (20%), Hinduism (13%), Chinese folk religion (6.3%) or Buddhism (5.9%). The irreligious and atheists make up about 14%, and about 4% follow indigenous tribal religions.

A number of classical "world religions" (including Sikhism, Judaism, Bahá'í, Jainism, Shinto and others) are each followed by under 0.5% of the world's population; they are sometimes considered world religions in terms of cultural significance and historic recognition, but are not deemed to be "major religious groups" due to their size.

++++++++++++++++++++++++

சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

//Chinese traditional (including Taoism and Confucianism): 394 million
Tribal religions (Shamanism, Animism): roughly 300 million
African traditional and diasporic (including Vodou): roughly 100 million[5]
Juche (North Korean state ideology): 19 million
Cao Dai: 4 million
Tenrikyo: 2 million
Neopaganism: 1 million
Unitarian Universalism: 800,000
Rastafarianism: 600,000
Scientology: 500,000 //

முட்டாள்கள் ஜாஸ்தியா தான் இருக்காங்க..
இத தான் எங்க ஊரு பக்கம் சொல்லுவாங்க
ஊரே அம்மணமா சுத்திட்டு இருக்குறப்ப. கோவணம் கட்டிட்டு இருக்கவன் தான் முட்டாள்னு ...

Jayabarathan said...

நண்பர் கோவி.கண்ணன்

தந்தை பெரியார் கடவுளை நம்புவோரை 75 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டாள் என்று திட்டி வந்தவர். பெரியாரும் அம்பேத்காரும் செய்து கொண்ட முரண்பாட்டுத் திருமணத்தை எப்போது பகுத்தறிவாளர் "தவறு" என்று ஒப்புக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் மெய்யான அறிவாளிகள்.

பெரியாரை எடைபோட்டுத் திறனாய எல்லாருக்கும் உரிமை உண்டு நண்பரே. கோபப்படாதீர்கள்

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே !

21 ஆம் நூற்றாண்டில் கிறித்துவம், இஸ்லாம், இந்து, பௌத்தம் என்னும் பேராற்றல் படைத்த நான்கு பெரிய மதங்களின் ஆணிவேர்கள் ஆழமாய்ச் சென்று கிளைகளும், விழுதுகளும் உலகில் பெருகி வருகின்றன. குறைபாடுள்ள மதங்களைத் திருத்த முடியும்.

ஜாதிகள் அழிந்தாலும் மதங்களை மட்டும் யாராலும் அழிக்க முடியாது.

பூனை தன்னிரு கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருளாகி விடாது. இந்த உலக வாழ்வின் மெய்ப்பாடு (Reality of Life) என்பது என் கருத்து.

சி. ஜெயபாரதன்

தருமி said...

ஜெயபாரதன்,

அப்பாடா, இப்பதான் பதிவு தொடும் விஷயங்களுக்குள் வந்திருக்கிறீர்கள்! நன்றி ..

//குறைபாடுள்ள மதங்களைத் திருத்த முடியும்//

ஹா ... i will call it a joke. An empty wishful thinking ........

//ஜாதிகள் அழிந்தாலும் மதங்களை மட்டும் யாராலும் அழிக்க முடியாது.//

மிகச்சரியா சொன்னீங்க .. நூத்துக்கு நூறு சரி.

//பூனை தன்னிரு கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருளாகி விடாது. //

அதே மாதிரி யாராவது ரெண்டு மூணு பேரு கண்ணை திறந்திர்ரதால எல்லோருமே திறந்துருவாங்கன்னும் சொல்ல முடியாதுதான்.

Jayabarathan said...

நண்பர் தருமி,

//குறைபாடுள்ள மதங்களைத் திருத்த முடியும்//

/// ஹா ... i will call it a joke. An empty wishful thinking ........ \\\

இது திக்குத் தெரியாத ஒரு முடத்துவப் பதில் நண்பரே. எந்த ஒரு பதிலிலும் ஒரு திசை தெரிய வேண்டும்.

கடவுள் தந்த விழிகளைத் திறந்தால் ஒளி தெரியும் !!!

சி. ஜெயபாரதன்

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...

நண்பரே !

21 ஆம் நூற்றாண்டில் கிறித்துவம், இஸ்லாம், இந்து, பௌத்தம் என்னும் பேராற்றல் படைத்த நான்கு பெரிய மதங்களின் ஆணிவேர்கள் ஆழமாய்ச் சென்று கிளைகளும், விழுதுகளும் உலகில் பெருகி வருகின்றன. குறைபாடுள்ள மதங்களைத் திருத்த முடியும்.

ஜாதிகள் அழிந்தாலும் மதங்களை மட்டும் யாராலும் அழிக்க முடியாது.

பூனை தன்னிரு கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருளாகி விடாது. இந்த உலக வாழ்வின் மெய்ப்பாடு (Reality of Life) என்பது என் கருத்து.

சி. ஜெயபாரதன்//

மதங்களை ஒழிக்க முடியும் என்பதற்கு ஒரு மதம் தோன்றி பெரும் வளர்ச்சி பெருவதே சாட்சி, அதற்கு நூற்றாண்டுகள் ஆகலாம், பழைய மதம், புதிய மதம் என்பதாக இருக்கும். அண்ணாவின் மாஜிக் கடவுள்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள், டைகிரிஸ் பெயர் இன்னும் வரலாற்றில் இருக்கிறது, எந்தந்த கடவுள் கொள்கைக்காக அவனைக் கொன்றார்களோ, அந்த (மதக்)கொள்கைகளெல்லாம் தற்பொழுது இல்லை.

கோவி.கண்ணன் said...

// Jayabarathan said...

நண்பரே !

21 ஆம் நூற்றாண்டில் கிறித்துவம், இஸ்லாம், இந்து, பௌத்தம் என்னும் பேராற்றல் படைத்த நான்கு பெரிய மதங்களின் ஆணிவேர்கள் ஆழமாய்ச் சென்று கிளைகளும், விழுதுகளும் உலகில் பெருகி வருகின்றன. குறைபாடுள்ள மதங்களைத் திருத்த முடியும். //

இதை ஆணிவேர், வளர்ச்சி என்று எப்படிச் சொல்கிறீர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 100 பேர் ஒரு மதத்தில் இருந்தால் அந்த 100ன் வாரிசுகள் 1000 மாக ஆகி, 200 பேருக்கு ஒரு மதம் என்கிற வெட்டுகணத்தில் பிரித்துக் கொண்டு இருக்கின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப மதம் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை இருக்கிறது, எந்தகாரணத்திற்கு பகுத்தறிவு நாத்திக கொள்கைகள் உருவானதோ, அதன் காரணங்கள் அப்படியே தானே இருக்கிறது. இத்தனை நூற்றாண்டுகளில் எந்த ஒரு மதமும் இறைவனைக் காட்டியதே இல்லை, நிறுவனங்களாகத்தான் செயல்பட்டு வருகின்றன, மதங்களைப் போன்று நாத்திக நிறுவனங்கள் இதுவரை எதுவுமே கிடையாது. தனிமனித சிந்தனைகளால் உருவாகுவது நாத்திகம், இதற்கு தனிப்பட்ட மனிதர்கள் யாருமே சொந்தம் கொண்டாடிவிட முடியாது. குறைபாடுள்ள மதங்கள் நாத்திகக் கருத்துகளால் தான் ஓரளவு திருந்தி இருக்கின்றன.

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்


கடவுளைப் பற்றி எனது கருத்துக்கள் :

இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் தோன்றிய ஒளிமந்தை காலாக்ஸிகள், அவற்றில் உதித்த கோடான கோடி விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், அவற்றில் ஒன்றான நூதனப் பூமியிலே படைக்கப் பட்ட மனிதர், உயிரினம், பயிரினம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்போம். அவை உண்டாகச் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

சீராக இயங்கி வரும் நமது பரிதி மண்டலம், அதில் ஒன்றான பூமியின் இயற்கை அமைப்புகள் யாவும் படிப்படியாக உண்டாகச் சுமார் 4.7 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன.

பிரமிக்கத் தக்க இத்தகைய மகத்துவப் படைப்புகள் "தொப்பென" மந்திர சக்தியில், மாயமாக, மர்மமாக இங்கே தாறு மாறாய் விழவில்லை. (In the logically & orderly formed Structure of the Universe, there are No Miracles or Witchcraft. Look at Darwin's Theory of Life's Evolution)& Newton's Theory of Gravity. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு (Under The Cause & Effect Theory).

பிரபஞ்ச நிகழ்ச்சிகளை சுருக்கமாய் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று மனிதன் செய்யக் கூடியவை. அடுத்தது மனிதனால் செய்ய முடியாதவை.

மனிதன் 20 ஆம் நூற்றாண்டில் நிலவில் தடம் வைத்து மீண்டான். இதுவரை செய்த வினைகளில் அதி உன்னத தீவிரச் செயல்.

ஆனால் அதே மனிதனால் அண்டக் கோள்களை உண்டாக்க முடியாது. ஈர்ப்பச் சக்தியை ஆக்கிக் கோள்களைப் பம்பரமாய் ஆட்ட முடியாது. இருக்கும் சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் அண்டத்தையோ, பிண்டத்தையோ, சக்தியையோ படைக்க முடியாது. எல்லாம் வல்ல ஏதோ ஒன்று நமக்காக மழையை உண்டாக்குகிறது. காற்றை நமக்கு வீசுகிறது. குளிர்காலத்தில் நீரைப் பனியாக்கித் துருவங்களில் சேமித்து வைக்கிறது ! கடல் நீரை மழை நீராய்ப் பெய்ய வைக்கிறது.

மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது. ஊழ், இறை, வாலறிவன், உலகியற்றியான் என்று வள்ளுவர் கூறுகிறார். இயற்கை, கடவுள், காலக் குயவன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம்.

அதாவது நாம் அறிய வேண்டியது :

1. மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது.

2. கடவுள் செய்யக் கூடியதை மனிதனால் செய்ய முடியாது.

இந்த ஊழ் நியதியை புரிந்து கொண்டால் கடவுள் எது மனிதம் எது என்பது புரியும்.

கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.

கடவுளை மனிதன் காண முடியுமா ?

கருவுக்குள் இருக்கும் சிசு தன்னை வளர்த்து வரும் தாயை எவ்விதம் காண முடியாதோ அவ்விதம் மனிதன் தன்னைப் படைத்த கடவுளைக் காண முடியாது என்று இரவீந்திரநாத் தாகூர் கூருகிறார். பிள்ளை பெரிதாகி வெளியே பிறக்கும் போதுதான் தாயைக் குழந்தை அடையாளம் காண்கிறது.

ஆனால் மனிதன் தான் அடைபட்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து விடுதலையாகி வெளியே நின்று தனியே கடவுளைக் காண முடியாது.


சி. ஜெயபாரதன், கனடா

Saturday, March 14, 2009 8:45:00 PM

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்

கீதையும், இந்துமத அடிப்படையான அறம், பொருள், இன்பம் என்னும் குறளும், குர்ரானும், பைபிளும் பல்லாயிரம் ஆண்டுகள் எப்படி நீடித்து வருகின்றன என்று சொல்லுங்கள். அன்ணாத்துரையின் எழுத்துக்கள் எல்லாம் எங்கே பயன்படுகின்றன ?

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

/// நிறுவனங்களாகத்தான் செயல்பட்டு வருகின்றன, மதங்களைப் போன்று நாத்திக நிறுவனங்கள் இதுவரை எதுவுமே கிடையாது. தனிமனித சிந்தனைகளால் உருவாகுவது நாத்திகம், இதற்கு தனிப்பட்ட மனிதர்கள் யாருமே சொந்தம் கொண்டாடிவிட முடியாது. குறைபாடுள்ள மதங்கள் நாத்திகக் கருத்துகளால் தான் ஓரளவு திருந்தி இருக்கின்றன. ///

பெரியாரின் நூறு மூதாதையருக்கு முன்னே தமிழகத்தில் "சித்தர்கள்" என்னும் செந்நெறிப் புலவர்கள் இந்து மதத்தைச் செம்மைப் படித்தினார்.

ஓர் உதாரணம் :

நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணத்துச் சொல்லும் மந்திரம் ஏனடா ?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையும் அறியுமோ ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

நியூட்டனின் முதல் நியதிப்படி "ஓர் அண்டம் நிலைத்து நிற்கும் அல்லது சீராக நகரும் அதை ஓர் உந்து சக்தி தள்ளாத வரையில்"

பிரபஞ்சத்தில் அனைத்து காலாக்ஸி ஒளிமந்தைகளும், விண்மீன்களும், அண்டக் கோள்கள் சீராகவும், விரைவாகவும் நகர்கின்றன. காரண-காரிய நியதிப்படி ஏதோ ஓர் உந்து சக்தி தள்ளாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நகர ஆரம்பிக்க வில்லை.

அந்த மகாசக்தியை "இயற்கை" என்று சொன்னானும் சரி "கடவுள்" என்று சொன்னாலும் சரி அது ஓர் மூலசக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

நியூட்டனின் முதல் நியதிப்படி "ஓர் அண்டம் நிலைத்து நிற்கும் அல்லது சீராக நகரும் அதை ஓர் உந்து சக்தி தள்ளாத வரையில்"

பிரபஞ்சத்தில் அனைத்து காலாக்ஸி ஒளிமந்தைகளும், விண்மீன்களும், அண்டக் கோள்கள் சீராகவும், விரைவாகவும் நகர்கின்றன. காரண-காரிய நியதிப்படி ஏதோ ஓர் உந்து சக்தி தள்ளாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நகர ஆரம்பிக்க வில்லை.

அந்த மகாசக்தியை "இயற்கை" என்று சொன்னானும் சரி "கடவுள்" என்று சொன்னாலும் சரி அது ஓர் மூலசக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

//// 21 ஆம் நூற்றாண்டில் கிறித்துவம், இஸ்லாம், இந்து, பௌத்தம் என்னும் பேராற்றல் படைத்த நான்கு பெரிய மதங்களின் ஆணிவேர்கள் ஆழமாய்ச் சென்று கிளைகளும், விழுதுகளும் உலகில் பெருகி வருகின்றன. ////

கிறித்துவ மதம் உண்டாவதற்கு முன்னே இந்தியாவின் பௌத்த மதவாதிகள் புத்தமதத்தை ஆசியா வெங்கணும் பரப்பினார். அதற்குப் பிறகு சுமார் 300 ஆண்டுகள் கழித்து கிறித்துவமதம், அதற்குப் பிறகு 500 ஆண்டுகள் கழித்து இஸ்லாமிய மதம் பரவி % வீதம் அதிகரித்து அவற்றின் கிளைகள் உலகெங்கும் பரவியதை என்ன வென்று சொல்ல வருகிறீர்கள் ?

பிரிட்டீஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைய வில்லை என்றால், இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி நீங்களும் நானும் மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருப்போம்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்

Religious Growths are on Exponential Paths & not on a straight line as you have shown.

S. Jayabarathan

தருமி said...

jayaharathan,

//இது திக்குத் தெரியாத ஒரு முடத்துவப் பதில் நண்பரே. //

தமிழ் புரியவில்லை; 'முடத்துவப் பதில்' என்றால் என்ன?

//எந்த ஒரு பதிலிலும் ஒரு திசை தெரிய வேண்டும்.//

ஓ! திசை காட்டவேண்டுமோ?
////குறைபாடுள்ள மதங்களைத் திருத்த முடியும்//
என்று சொன்னதற்கு ஏன் அதை ஜோக் என்று சொன்னேன்; அதற்கு விளக்கம் தேவை என்று நீங்கள் சொன்னதாகக் கொண்டு அதற்கு என் பதிலைத் தர முயல்கிறேன், நண்பரே!

எந்த மதங்களிலுள்ள குறைபாடுகள் நீங்கி விட்டன சொல்லுங்கள்? யாரால் திருத்த முடியும் சொல்லுங்கள்?

நீங்கள் சொல்லியுள்ள 4 பெரு மதங்களில் கிறித்துவத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு "அரசியல்" மாற்றம் ஏற்பட்டது. அதை திருத்தம் என்று கொள்ள முடியாது; ஏனென்றால் அன்று சொன்ன குறைகள் எதுவும் நீங்கவில்லை; ஆனால் மதம் இரண்டுபட்டது மட்டுமே நடந்தது.

இந்து மதத்தில் இருந்த சதி, குழந்தை கல்யாணம், விதவை நிலை - குறைந்துள்ளன என்பது உண்மையானாலும் இவை மதத் தொடர்பானவைகள் என்பதை விடவும், சமூக, கல்வி தொடர்பானவைகளே என்பதே உண்மை.

புத்தத்தில் கடவுளாக ஆக்கப்பட்டு விட்ட புத்தர் இன்னும் கடவுளாகவே இருக்கிறார். மாற்றமென்ன?

இஸ்லாமில் 1400 ஆண்டுகளாக மாற்றமென்பதே இல்லை என்பதே அவர்களது strong point.

பின் எப்படி மதங்களில் மாற்றம் வரும் என நம்புகிறீர்கள்?

தருமி said...

கோவி கண்ணனுக்குத் தனியாகத் தலைப்பிட்டு சில பின்னூட்டங்கள் இட்டுரிக்கிறீர்கள்; அவரும் வருவாரென நினைக்கிறேன். நானும் அதில் ஓரிரு விஷயங்களைப் பற்றி ...

//கீதையும், இந்துமத அடிப்படையான அறம், பொருள், இன்பம் என்னும் குறளும், குர்ரானும், பைபிளும் பல்லாயிரம் ஆண்டுகள் எப்படி நீடித்து வருகின்றன என்று சொல்லுங்கள். அன்ணாத்துரையின் எழுத்துக்கள் எல்லாம் எங்கே பயன்படுகின்றன ?//

பேசுவது மத நூல்கள் + திருக்குறள். இதில் அண்ணாத்துரைக்கு வேலை என்ன? எதற்கு உங்களது இந்த இடைச்செருகல்?

தருமி said...

//பெரியாரின் நூறு மூதாதையருக்கு முன்னே தமிழகத்தில் "சித்தர்கள்" என்னும் செந்நெறிப் புலவர்கள் இந்து மதத்தைச் செம்மைப் படித்தினார்.//

இங்கு எதற்கு பெரியார் வருகிறார்? இதற்காகத்தான் உங்களுக்கு அவர் மேல் ஒரு obsession என்றேன்.

//நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?..//
என்றெல்லாம் சித்தர்கள் பாடிச்சென்ற பின்பு மதங்களில் என்ன மாற்றம் வந்துவிட்டன?

//காரண-காரிய நியதிப்படி ஏதோ ஓர் உந்து சக்தி தள்ளாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நகர ஆரம்பிக்க வில்லை. //

சரி, ஏதோ ஒரு உந்து சக்தி இருக்கிறது. ஆனால் அதை ஏன் ஒரு ஆணாக / கோபம் நிறைந்த / வெட்கப்படும், / ரோஷப்படும் / தண்டனை(stick) அல்லது 'பரிச'ளிக்கும்(carrot)நீதிபதியாக / ...இன்னும் என்னெவெல்லாமுமாக அந்த சக்தி உருமாறியது; உங்கள் பாவ புண்ணியங்களை எப்போது எடை போட்டு பார்த்து நியாயத்தீர்ப்பளிக்கிறது? இன்னும் என்னென்னவோ வேலைகள் எல்லாமே கற்பிக்கபடுகின்றவே அந்த சக்திக்கு .. ஏனிப்படி?

Jayabarathan said...

நண்பர் தருமி,

/// அண்ணாவின் மாஜிக் கடவுள்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள், டைகிரிஸ் பெயர் இன்னும் வரலாற்றில் இருக்கிறது, எந்தந்த கடவுள் கொள்கைக்காக அவனைக் கொன்றார்களோ, அந்த (மதக்)கொள்கைகளெல்லாம் தற்பொழுது இல்லை. ///

கோவி. கண்ணன் கொண்டு வந்த "அண்ணா" எப்படி உங்களுக்குத் தெரியாமல் போனது ? தர்க்கத்தில் யாரைக் கொண்டு வரக்கூடாது என்று நிபந்தனை இடப் போகிறீர்களா ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

நீங்களும், கோவி கண்ணனும் மதம் கடவுளைப் பற்றிய விஷயத்தில் இன்னும் எலிமெண்டரி பள்ளியில்தான் இருக்கிறீர்கள் ! மெட்டா பிசிக்ஸ் நிலையில் விஞ்ஞானக் கல்லூரிப் படிப்புக்கு நீங்கள் இன்னும் வரவில்லை. நான் எழுதியவை மெட்டா பிசிக்ஸ் !

அதைத்தான் "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

பெரியார், அண்ணாத்துரை பெயர்கள் வந்தால் நீங்கள் ஏன் அவலப் படுகிறீர்கள் ? அவரது பெயர்கள் வராமல் மதம், கடவுள் பிரச்சனைகளைத் தர்க்கம் செய்ய இயலாது. அவரை வைத்துத்தான் நான் மற்றவரை அளப்பு செய்கிறேன்.

சி. ஜெயபாரதன்

கோவி.கண்ணன் said...

//

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்


கடவுளைப் பற்றி எனது கருத்துக்கள் :

இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் தோன்றிய ஒளிமந்தை காலாக்ஸிகள், அவற்றில் உதித்த கோடான கோடி விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், அவற்றில் ஒன்றான நூதனப் பூமியிலே படைக்கப் பட்ட மனிதர், உயிரினம், பயிரினம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்போம். அவை உண்டாகச் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

சீராக இயங்கி வரும் நமது பரிதி மண்டலம், அதில் ஒன்றான பூமியின் இயற்கை அமைப்புகள் யாவும் படிப்படியாக உண்டாகச் சுமார் 4.7 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன.

பிரமிக்கத் தக்க இத்தகைய மகத்துவப் படைப்புகள் "தொப்பென" மந்திர சக்தியில், மாயமாக, மர்மமாக இங்கே தாறு மாறாய் விழவில்லை. (In the logically & orderly formed Structure of the Universe, there are No Miracles or Witchcraft. Look at Darwin's Theory of Life's Evolution)& Newton's Theory of Gravity. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு (Under The Cause & Effect Theory).

பிரபஞ்ச நிகழ்ச்சிகளை சுருக்கமாய் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று மனிதன் செய்யக் கூடியவை. அடுத்தது மனிதனால் செய்ய முடியாதவை. //



உங்கள் அறிவியல் பதிவுகளை அடிக்கடிப் படிப்பதுண்டு, ஆனால் அதையெல்லாம் இறை சக்தியாக முடிச்சுப் போட்டுப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புதிய தகவல்.

//மனிதன் 20 ஆம் நூற்றாண்டில் நிலவில் தடம் வைத்து மீண்டான். இதுவரை செய்த வினைகளில் அதி உன்னத தீவிரச் செயல். //



கூடவே இது பற்றி எந்த புராணம் இதிகாசம், மதக் கொள்கைகள் எதிலும் குறிப்பிடப் படவில்லை என்றும் சொல்லி இருக்கலாம், அதாவது மனிதன் நிலாவுக்குச் செல்ல முடியும் என்கிற கற்பனை அல்லது தகவல்.

//ஆனால் அதே மனிதனால் அண்டக் கோள்களை உண்டாக்க முடியாது. ஈர்ப்பச் சக்தியை ஆக்கிக் கோள்களைப் பம்பரமாய் ஆட்ட முடியாது. இருக்கும் சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் அண்டத்தையோ, பிண்டத்தையோ, சக்தியையோ படைக்க முடியாது. எல்லாம் வல்ல ஏதோ ஒன்று நமக்காக மழையை உண்டாக்குகிறது. காற்றை நமக்கு வீசுகிறது. குளிர்காலத்தில் நீரைப் பனியாக்கித் துருவங்களில் சேமித்து வைக்கிறது ! கடல் நீரை மழை நீராய்ப் பெய்ய வைக்கிறது. //



ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதும் தத்துவம் தான். படைப்பு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? ஒரு இயக்கம் அது சிறிய இயக்கமாக இருந்தாலும் சரி பேரியக்கமாக இருந்தாலும் சரி, அதில் நடப்பது (நுட்பமான மாற்றம்) நம் ஆறாவது அறிவுக்கு இன்னும் அது பற்றிய அறிதல் எட்டவில்லை என்பதற்காக அவையெல்லாம் இறைச் செயல் என்று கற்பிதம் செய்து கொள்ள முடியுமா ? குழந்தை பெருவது கூட ஒருகாலத்தில் இறைச் செயலாகத்தான் கருதப்பட்டது, சீரான உடல் நிலையில் இருக்கும் ஆண் பெண் குழந்தைப் பெற்றுக் கொள்வது இறைச் செயலா ? அல்லது உடலில் இருக்கும் சில குறைபாடுகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலை, ஆனால் அதே போன்று குறைகளை இக்காலத்தில் அறிவியல் மூலமாக சரி செய்து டெஸ்ட் ட்யூப் பேபி செய்து கொடுக்கிறார்களே ? இதுவும் இறைச் செயலா ? அண்டத்தையும் பிண்டத்தையும் மனிதன் மாற்றவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் ? மழை வருவது இயற்கைச் சுழல் சுழற்சி, இதற்கும் இறை சக்திக்கும் என்ன தொடர்பு ?நான் முன்பு ஒரு இடுகையில் கேட்டு இருந்தேன். எண்ணற்ற கோள்களையும், கேலக்சிகளையும் படைத்த இறைவன் உயிரினம் வாழ தம்மாத்துண்டு பூமியை போனால் போகட்டும் என்று படைத்தானா ? மற்ற கோள்கள், கேலக்சிகள் எல்லாம் வேஸ்டாக படைக்கப்பட்டது என்று ஒருவர் சொன்னால் அதை எப்படி மறுப்பீர்கள் ? மழை காற்று மட்டுமே அதிசயம் இல்லை, தகுந்த பாதுகாப்பு இன்றி எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவருடன் உறவு கொண்டால் அவருக்கும் அந்நோய் தொற்றிக் கொள்ளும், இது அதிசியமா ? ஆண்டவன் செயலா ? நான் அதை இயற்கையில் நடைபெரும் சேர்க்கையின் விளைவு என்று தான் சொல்லுவேன்.



//மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது. ஊழ், இறை, வாலறிவன், உலகியற்றியான் என்று வள்ளுவர் கூறுகிறார். இயற்கை, கடவுள், காலக் குயவன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம். //

மேலேயே பதில் சொல்லிவிட்டேன், எல்லாவற்றையும் ஆறாவது அறிவு, அல்லது அறிவியலோ, ஆண்மிகமோ அதில் அடக்க முயற்சித்து விடை கூற இயலவில்லை என்றால் அதை இறைச் செயலாக கட்டமைப்பது புத்தர் காலத்திற்கு முன்பே இருந்தே நடந்து வருவது தான்.



//அதாவது நாம் அறிய வேண்டியது :

1. மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது.//



முதலில் கடவுள் என்ன செய்கிறார், அதை அவர் தான் செய்தார் என்று உறுதி படுத்துவது யார் என்ற விளக்கம் தேவை. இவை உங்கள்/பலரது ஊகம் தான்

//2. கடவுள் செய்யக் கூடியதை மனிதனால் செய்ய முடியாது. //



மேற்கண்ட அதே பதில்

//இந்த ஊழ் நியதியை புரிந்து கொண்டால் கடவுள் எது மனிதம் எது என்பது புரியும். //



மேற்கண்டவற்றிக்கு சரியான விடை சொல்லுங்கள், கடவுளை நான் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆடு, அது தான் அனைத்தையும் செய்கிறது என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா ? ஆடா ? அதுவும் கண்ணுக்கு தெரியாத ஆடா ? அதற்கு இறை சக்தி உண்டா என்றெல்லாம் கேட்கமாட்டீர்களா ?

இறைக்கு என்ன டெபனேசன் ? உறுதியான டெபனேசன் இருந்தால் நானோ, நீங்களோ, தருமி சாரோ விவாதம் செய்ய தேவையே இருக்காது

//கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.//



அதைத்தான் கடவுள் மனிதனின் கற்பனை என்று தருமி சொல்லுகிறார். :) ஒரு விந்தனுவில் ஏழு தலைமுறையின் பதிப்பு இருக்கிறது. கடவுள் மனிதனைப் படைத்தாரா ? விந்தனுவைப் படைத்தாரா ? மனிதன் படைப்பு பற்றி எந்த மதமும் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை என்பதே உண்மை. கடைசியாக பரிணாமக் கொள்கையைக் கொண்டு வந்து ஒட்ட வைக்கிறீர்கள். பரிணாமக் கொள்கையே தவறு என்று நிரூபனம் செய்யப்பட்டால் வாதமே அடிபட்டுவிடுமே. ஏனெனில் பரிணாமம் என்பது கொள்கை மட்டுமே நிரூபனம் செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இல்லை

//கடவுளை மனிதன் காண முடியுமா ?

கருவுக்குள் இருக்கும் சிசு தன்னை வளர்த்து வரும் தாயை எவ்விதம் காண முடியாதோ அவ்விதம் மனிதன் தன்னைப் படைத்த கடவுளைக் காண முடியாது என்று இரவீந்திரநாத் தாகூர் கூருகிறார். பிள்ளை பெரிதாகி வெளியே பிறக்கும் போதுதான் தாயைக் குழந்தை அடையாளம் காண்கிறது. //



ஐயா, நீங்கள் தாகூரின் கவிதைகளை நன்றாக மொழிப் பெயற்பிங்க, திண்ணையில் படித்திருக்கிறேன். தாகூர் போன்றே ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் சொல்லுகிறார்கள், பக்தியின் தொடர்பில் இருப்பதால் அது வேறொரு பக்தியாளரின் டெபனேசனுக்கு முற்றிலும் எதிராக இருந்தாலும், இரண்டுமே சரி என்று நாம் மண்டையை ஆட்டிக் கேட்போம்.

//ஆனால் மனிதன் தான் அடைபட்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து விடுதலையாகி வெளியே நின்று தனியே கடவுளைக் காண முடியாது.


சி. ஜெயபாரதன், கனடா
//

முதலில் கடவுள் என்கிற டெபனேசனை 10 விழுக்காடாவது மனிதன் ஒழுங்காக 'வடிவமைக்கட்டும்' அதன் பிறகு கடவுளைக் காணமுடியுமா ? இல்லையா ? என்பதை ஆராய முடியும்.

கடவுளுக்கு 1000 கைகள் இருப்பதாக செய்தி பரப்பப் பட்டால் 999 கையோடு வரும் ஒருவரை கடவுள் இல்லை என ரிஜெக்ட் பண்ணிடுவாங்க :)

கோவி.கண்ணன் said...

//

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்


கடவுளைப் பற்றி எனது கருத்துக்கள் :

இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் தோன்றிய ஒளிமந்தை காலாக்ஸிகள், அவற்றில் உதித்த கோடான கோடி விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், அவற்றில் ஒன்றான நூதனப் பூமியிலே படைக்கப் பட்ட மனிதர், உயிரினம், பயிரினம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்போம். அவை உண்டாகச் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

சீராக இயங்கி வரும் நமது பரிதி மண்டலம், அதில் ஒன்றான பூமியின் இயற்கை அமைப்புகள் யாவும் படிப்படியாக உண்டாகச் சுமார் 4.7 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன.

பிரமிக்கத் தக்க இத்தகைய மகத்துவப் படைப்புகள் "தொப்பென" மந்திர சக்தியில், மாயமாக, மர்மமாக இங்கே தாறு மாறாய் விழவில்லை. (In the logically & orderly formed Structure of the Universe, there are No Miracles or Witchcraft. Look at Darwin's Theory of Life's Evolution)& Newton's Theory of Gravity. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு (Under The Cause & Effect Theory).

பிரபஞ்ச நிகழ்ச்சிகளை சுருக்கமாய் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று மனிதன் செய்யக் கூடியவை. அடுத்தது மனிதனால் செய்ய முடியாதவை. //



உங்கள் அறிவியல் பதிவுகளை அடிக்கடிப் படிப்பதுண்டு, ஆனால் அதையெல்லாம் இறை சக்தியாக முடிச்சுப் போட்டுப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புதிய தகவல்.

//மனிதன் 20 ஆம் நூற்றாண்டில் நிலவில் தடம் வைத்து மீண்டான். இதுவரை செய்த வினைகளில் அதி உன்னத தீவிரச் செயல். //



கூடவே இது பற்றி எந்த புராணம் இதிகாசம், மதக் கொள்கைகள் எதிலும் குறிப்பிடப் படவில்லை என்றும் சொல்லி இருக்கலாம், அதாவது மனிதன் நிலாவுக்குச் செல்ல முடியும் என்கிற கற்பனை அல்லது தகவல்.

//ஆனால் அதே மனிதனால் அண்டக் கோள்களை உண்டாக்க முடியாது. ஈர்ப்பச் சக்தியை ஆக்கிக் கோள்களைப் பம்பரமாய் ஆட்ட முடியாது. இருக்கும் சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் அண்டத்தையோ, பிண்டத்தையோ, சக்தியையோ படைக்க முடியாது. எல்லாம் வல்ல ஏதோ ஒன்று நமக்காக மழையை உண்டாக்குகிறது. காற்றை நமக்கு வீசுகிறது. குளிர்காலத்தில் நீரைப் பனியாக்கித் துருவங்களில் சேமித்து வைக்கிறது ! கடல் நீரை மழை நீராய்ப் பெய்ய வைக்கிறது. //



ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதும் தத்துவம் தான். படைப்பு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? ஒரு இயக்கம் அது சிறிய இயக்கமாக இருந்தாலும் சரி பேரியக்கமாக இருந்தாலும் சரி, அதில் நடப்பது (நுட்பமான மாற்றம்) நம் ஆறாவது அறிவுக்கு இன்னும் அது பற்றிய அறிதல் எட்டவில்லை என்பதற்காக அவையெல்லாம் இறைச் செயல் என்று கற்பிதம் செய்து கொள்ள முடியுமா ? குழந்தை பெருவது கூட ஒருகாலத்தில் இறைச் செயலாகத்தான் கருதப்பட்டது, சீரான உடல் நிலையில் இருக்கும் ஆண் பெண் குழந்தைப் பெற்றுக் கொள்வது இறைச் செயலா ? அல்லது உடலில் இருக்கும் சில குறைபாடுகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலை, ஆனால் அதே போன்று குறைகளை இக்காலத்தில் அறிவியல் மூலமாக சரி செய்து டெஸ்ட் ட்யூப் பேபி செய்து கொடுக்கிறார்களே ? இதுவும் இறைச் செயலா ? அண்டத்தையும் பிண்டத்தையும் மனிதன் மாற்றவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் ? மழை வருவது இயற்கைச் சுழல் சுழற்சி, இதற்கும் இறை சக்திக்கும் என்ன தொடர்பு ?நான் முன்பு ஒரு இடுகையில் கேட்டு இருந்தேன். எண்ணற்ற கோள்களையும், கேலக்சிகளையும் படைத்த இறைவன் உயிரினம் வாழ தம்மாத்துண்டு பூமியை போனால் போகட்டும் என்று படைத்தானா ? மற்ற கோள்கள், கேலக்சிகள் எல்லாம் வேஸ்டாக படைக்கப்பட்டது என்று ஒருவர் சொன்னால் அதை எப்படி மறுப்பீர்கள் ? மழை காற்று மட்டுமே அதிசயம் இல்லை, தகுந்த பாதுகாப்பு இன்றி எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவருடன் உறவு கொண்டால் அவருக்கும் அந்நோய் தொற்றிக் கொள்ளும், இது அதிசியமா ? ஆண்டவன் செயலா ? நான் அதை இயற்கையில் நடைபெரும் சேர்க்கையின் விளைவு என்று தான் சொல்லுவேன்.



//மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது. ஊழ், இறை, வாலறிவன், உலகியற்றியான் என்று வள்ளுவர் கூறுகிறார். இயற்கை, கடவுள், காலக் குயவன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம். //

மேலேயே பதில் சொல்லிவிட்டேன், எல்லாவற்றையும் ஆறாவது அறிவு, அல்லது அறிவியலோ, ஆண்மிகமோ அதில் அடக்க முயற்சித்து விடை கூற இயலவில்லை என்றால் அதை இறைச் செயலாக கட்டமைப்பது புத்தர் காலத்திற்கு முன்பே இருந்தே நடந்து வருவது தான்.



//அதாவது நாம் அறிய வேண்டியது :

1. மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது.//



முதலில் கடவுள் என்ன செய்கிறார், அதை அவர் தான் செய்தார் என்று உறுதி படுத்துவது யார் என்ற விளக்கம் தேவை. இவை உங்கள்/பலரது ஊகம் தான்

//2. கடவுள் செய்யக் கூடியதை மனிதனால் செய்ய முடியாது. //



மேற்கண்ட அதே பதில்

//இந்த ஊழ் நியதியை புரிந்து கொண்டால் கடவுள் எது மனிதம் எது என்பது புரியும். //



மேற்கண்டவற்றிக்கு சரியான விடை சொல்லுங்கள், கடவுளை நான் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆடு, அது தான் அனைத்தையும் செய்கிறது என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா ? ஆடா ? அதுவும் கண்ணுக்கு தெரியாத ஆடா ? அதற்கு இறை சக்தி உண்டா என்றெல்லாம் கேட்கமாட்டீர்களா ?

இறைக்கு என்ன டெபனேசன் ? உறுதியான டெபனேசன் இருந்தால் நானோ, நீங்களோ, தருமி சாரோ விவாதம் செய்ய தேவையே இருக்காது

//கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.//



அதைத்தான் கடவுள் மனிதனின் கற்பனை என்று தருமி சொல்லுகிறார். :) ஒரு விந்தனுவில் ஏழு தலைமுறையின் பதிப்பு இருக்கிறது. கடவுள் மனிதனைப் படைத்தாரா ? விந்தனுவைப் படைத்தாரா ? மனிதன் படைப்பு பற்றி எந்த மதமும் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை என்பதே உண்மை. கடைசியாக பரிணாமக் கொள்கையைக் கொண்டு வந்து ஒட்ட வைக்கிறீர்கள். பரிணாமக் கொள்கையே தவறு என்று நிரூபனம் செய்யப்பட்டால் வாதமே அடிபட்டுவிடுமே. ஏனெனில் பரிணாமம் என்பது கொள்கை மட்டுமே நிரூபனம் செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இல்லை

//கடவுளை மனிதன் காண முடியுமா ?

கருவுக்குள் இருக்கும் சிசு தன்னை வளர்த்து வரும் தாயை எவ்விதம் காண முடியாதோ அவ்விதம் மனிதன் தன்னைப் படைத்த கடவுளைக் காண முடியாது என்று இரவீந்திரநாத் தாகூர் கூருகிறார். பிள்ளை பெரிதாகி வெளியே பிறக்கும் போதுதான் தாயைக் குழந்தை அடையாளம் காண்கிறது. //



ஐயா, நீங்கள் தாகூரின் கவிதைகளை நன்றாக மொழிப் பெயற்பிங்க, திண்ணையில் படித்திருக்கிறேன். தாகூர் போன்றே ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் சொல்லுகிறார்கள், பக்தியின் தொடர்பில் இருப்பதால் அது வேறொரு பக்தியாளரின் டெபனேசனுக்கு முற்றிலும் எதிராக இருந்தாலும், இரண்டுமே சரி என்று நாம் மண்டையை ஆட்டிக் கேட்போம்.

//ஆனால் மனிதன் தான் அடைபட்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து விடுதலையாகி வெளியே நின்று தனியே கடவுளைக் காண முடியாது.


சி. ஜெயபாரதன், கனடா
//

முதலில் கடவுள் என்கிற டெபனேசனை 10 விழுக்காடாவது மனிதன் ஒழுங்காக 'வடிவமைக்கட்டும்' அதன் பிறகு கடவுளைக் காணமுடியுமா ? இல்லையா ? என்பதை ஆராய முடியும்.

கடவுளுக்கு 1000 கைகள் இருப்பதாக செய்தி பரப்பப் பட்டால் 999 கையோடு வரும் ஒருவரை கடவுள் இல்லை என ரிஜெக்ட் பண்ணிடுவாங்க :)


//Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

நியூட்டனின் முதல் நியதிப்படி "ஓர் அண்டம் நிலைத்து நிற்கும் அல்லது சீராக நகரும் அதை ஓர் உந்து சக்தி தள்ளாத வரையில்" //


Closed Loop, பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அதாவது நீர் - ஆவி - மேகம் - மீண்டும் நீர் இதில் உந்து சக்தி எது ? எது எதுவாக மாறுகிறது, எது முதலில் "தோன்றியது ?"


என்னைப் பொருத்த அளவில் இயற்கையில் / பேரியக்கத்தில் நடக்கும் அனைத்துமே Closed Loop சுழற்சிதான்,



//பிரபஞ்சத்தில் அனைத்து காலாக்ஸி ஒளிமந்தைகளும், விண்மீன்களும், அண்டக் கோள்கள் சீராகவும், விரைவாகவும் நகர்கின்றன. காரண-காரிய நியதிப்படி ஏதோ ஓர் உந்து சக்தி தள்ளாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நகர ஆரம்பிக்க வில்லை. //


உந்து சக்தி அல்லது விசை என்று சொல்லலாம். ஆற்றல் மாறாக் கோட்பாட்டின் படியே இயங்குகின்றன. அதை ஏதோ ஒரு உந்து சக்தி என்று ஏன் சொல்லனும் ? ஒட்டுமொத்தமாக முழுப் பிரபஞ்சங்களில் இருக்கும் விசை எப்போதும் இருப்பவையே. அது உண்டாக்கப்பட்டது, இறைச் சித்தத்தினால் தோன்றியது என்றால் அவை நிராகரிக்கக் கூடியதே.

//அந்த மகாசக்தியை "இயற்கை" என்று சொன்னானும் சரி "கடவுள்" என்று சொன்னாலும் சரி அது ஓர் மூலசக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது.

சி. ஜெயபாரதன்//


எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்க, எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை, இங்கே விவாதிப்பது மதம், மதத்தின் வழி சொல்லப்படும் /காட்டப்படும் இறைவன் பொய் மற்றும் கற்பனை என்பதே. நாத்திகர் எவரும் இயற்கையே பொய், இயக்கம் பொய் என்கிறாரா ? அதற்கு உருவகம் கொடுத்து இறைவனாக்கவில்லை. அதன் மூலம் வெட்டிக் கொண்டு சாகவுமில்லை

கோவி.கண்ணன் said...

//

Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்


கடவுளைப் பற்றி எனது கருத்துக்கள் :

இந்தப் பிரபஞ்சத்தையும் அதில் தோன்றிய ஒளிமந்தை காலாக்ஸிகள், அவற்றில் உதித்த கோடான கோடி விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், அவற்றில் ஒன்றான நூதனப் பூமியிலே படைக்கப் பட்ட மனிதர், உயிரினம், பயிரினம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்போம். அவை உண்டாகச் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்தன.

சீராக இயங்கி வரும் நமது பரிதி மண்டலம், அதில் ஒன்றான பூமியின் இயற்கை அமைப்புகள் யாவும் படிப்படியாக உண்டாகச் சுமார் 4.7 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன.

பிரமிக்கத் தக்க இத்தகைய மகத்துவப் படைப்புகள் "தொப்பென" மந்திர சக்தியில், மாயமாக, மர்மமாக இங்கே தாறு மாறாய் விழவில்லை. (In the logically & orderly formed Structure of the Universe, there are No Miracles or Witchcraft. Look at Darwin's Theory of Life's Evolution)& Newton's Theory of Gravity. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு (Under The Cause & Effect Theory).

பிரபஞ்ச நிகழ்ச்சிகளை சுருக்கமாய் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று மனிதன் செய்யக் கூடியவை. அடுத்தது மனிதனால் செய்ய முடியாதவை. //

உங்கள் அறிவியல் பதிவுகளை அடிக்கடிப் படிப்பதுண்டு, ஆனால் அதையெல்லாம் இறை சக்தியாக முடிச்சுப் போட்டுப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புதிய தகவல்.

//மனிதன் 20 ஆம் நூற்றாண்டில் நிலவில் தடம் வைத்து மீண்டான். இதுவரை செய்த வினைகளில் அதி உன்னத தீவிரச் செயல். //

கூடவே இது பற்றி எந்த புராணம் இதிகாசம், மதக் கொள்கைகள் எதிலும் குறிப்பிடப் படவில்லை என்றும் சொல்லி இருக்கலாம், அதாவது மனிதன் நிலாவுக்குச் செல்ல முடியும் என்கிற கற்பனை அல்லது தகவல்.

//ஆனால் அதே மனிதனால் அண்டக் கோள்களை உண்டாக்க முடியாது. ஈர்ப்பச் சக்தியை ஆக்கிக் கோள்களைப் பம்பரமாய் ஆட்ட முடியாது. இருக்கும் சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் அண்டத்தையோ, பிண்டத்தையோ, சக்தியையோ படைக்க முடியாது. எல்லாம் வல்ல ஏதோ ஒன்று நமக்காக மழையை உண்டாக்குகிறது. காற்றை நமக்கு வீசுகிறது. குளிர்காலத்தில் நீரைப் பனியாக்கித் துருவங்களில் சேமித்து வைக்கிறது ! கடல் நீரை மழை நீராய்ப் பெய்ய வைக்கிறது. //

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதும் தத்துவம் தான். படைப்பு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? ஒரு இயக்கம் அது சிறிய இயக்கமாக இருந்தாலும் சரி பேரியக்கமாக இருந்தாலும் சரி, அதில் நடப்பது (நுட்பமான மாற்றம்) நம் ஆறாவது அறிவுக்கு இன்னும் அது பற்றிய அறிதல் எட்டவில்லை என்பதற்காக அவையெல்லாம் இறைச் செயல் என்று கற்பிதம் செய்து கொள்ள முடியுமா ? குழந்தை பெருவது கூட ஒருகாலத்தில் இறைச் செயலாகத்தான் கருதப்பட்டது, சீரான உடல் நிலையில் இருக்கும் ஆண் பெண் குழந்தைப் பெற்றுக் கொள்வது இறைச் செயலா ? அல்லது உடலில் இருக்கும் சில குறைபாடுகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலை, ஆனால் அதே போன்று குறைகளை இக்காலத்தில் அறிவியல் மூலமாக சரி செய்து டெஸ்ட் ட்யூப் பேபி செய்து கொடுக்கிறார்களே ? இதுவும் இறைச் செயலா ? அண்டத்தையும் பிண்டத்தையும் மனிதன் மாற்றவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் ? மழை வருவது இயற்கைச் சுழல் சுழற்சி, இதற்கும் இறை சக்திக்கும் என்ன தொடர்பு ?நான் முன்பு ஒரு இடுகையில் கேட்டு இருந்தேன். எண்ணற்ற கோள்களையும், கேலக்சிகளையும் படைத்த இறைவன் உயிரினம் வாழ தம்மாத்துண்டு பூமியை போனால் போகட்டும் என்று படைத்தானா ? மற்ற கோள்கள், கேலக்சிகள் எல்லாம் வேஸ்டாக படைக்கப்பட்டது என்று ஒருவர் சொன்னால் அதை எப்படி மறுப்பீர்கள் ? மழை காற்று மட்டுமே அதிசயம் இல்லை, தகுந்த பாதுகாப்பு இன்றி எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவருடன் உறவு கொண்டால் அவருக்கும் அந்நோய் தொற்றிக் கொள்ளும், இது அதிசியமா ? ஆண்டவன் செயலா ? நான் அதை இயற்கையில் நடைபெரும் சேர்க்கையின் விளைவு என்று தான் சொல்லுவேன்.

//மனிதன் செய்ய இயலாததை எல்லாம் ஏதோ ஒன்று செய்கிறது. ஊழ், இறை, வாலறிவன், உலகியற்றியான் என்று வள்ளுவர் கூறுகிறார். இயற்கை, கடவுள், காலக் குயவன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம். //

மேலேயே பதில் சொல்லிவிட்டேன், எல்லாவற்றையும் ஆறாவது அறிவு, அல்லது அறிவியலோ, ஆண்மிகமோ அதில் அடக்க முயற்சித்து விடை கூற இயலவில்லை என்றால் அதை இறைச் செயலாக கட்டமைப்பது புத்தர் காலத்திற்கு முன்பே இருந்தே நடந்து வருவது தான்.


//அதாவது நாம் அறிய வேண்டியது :

1. மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது.//

முதலில் கடவுள் என்ன செய்கிறார், அதை அவர் தான் செய்தார் என்று உறுதி படுத்துவது யார் என்ற விளக்கம் தேவை. இவை உங்கள்/பலரது ஊகம் தான்

//2. கடவுள் செய்யக் கூடியதை மனிதனால் செய்ய முடியாது. //

மேற்கண்ட அதே பதில்

//இந்த ஊழ் நியதியை புரிந்து கொண்டால் கடவுள் எது மனிதம் எது என்பது புரியும். //

மேற்கண்டவற்றிக்கு சரியான விடை சொல்லுங்கள், கடவுளை நான் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆடு, அது தான் அனைத்தையும் செய்கிறது என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா ? ஆடா ? அதுவும் கண்ணுக்கு தெரியாத ஆடா ? அதற்கு இறை சக்தி உண்டா என்றெல்லாம் கேட்கமாட்டீர்களா ?
இறைக்கு என்ன டெபனேசன் ? உறுதியான டெபனேசன் இருந்தால் நானோ, நீங்களோ, தருமி சாரோ விவாதம் செய்ய தேவையே இருக்காது

//கடவுள் படைப்புகளில் ஒன்றான "கடுகு" மனிதன் கடவுளைக் காண முடியாது ! காட்ட முடியாது ! கணிக்க முடியாது ! கற்பனை செய்து கொள்ளத்தான் முடியும் உணர்ச்சி மூலம்.//

அதைத்தான் கடவுள் மனிதனின் கற்பனை என்று தருமி சொல்லுகிறார். :) ஒரு விந்தனுவில் ஏழு தலைமுறையின் பதிப்பு இருக்கிறது. கடவுள் மனிதனைப் படைத்தாரா ? விந்தனுவைப் படைத்தாரா ? மனிதன் படைப்பு பற்றி எந்த மதமும் சரியான விளக்கம் அளிக்கவே இல்லை என்பதே உண்மை. கடைசியாக பரிணாமக் கொள்கையைக் கொண்டு வந்து ஒட்ட வைக்கிறீர்கள். பரிணாமக் கொள்கையே தவறு என்று நிரூபனம் செய்யப்பட்டால் வாதமே அடிபட்டுவிடுமே. ஏனெனில் பரிணாமம் என்பது கொள்கை மட்டுமே நிரூபனம் செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று இல்லை

//கடவுளை மனிதன் காண முடியுமா ?

கருவுக்குள் இருக்கும் சிசு தன்னை வளர்த்து வரும் தாயை எவ்விதம் காண முடியாதோ அவ்விதம் மனிதன் தன்னைப் படைத்த கடவுளைக் காண முடியாது என்று இரவீந்திரநாத் தாகூர் கூருகிறார். பிள்ளை பெரிதாகி வெளியே பிறக்கும் போதுதான் தாயைக் குழந்தை அடையாளம் காண்கிறது. //

ஐயா, நீங்கள் தாகூரின் கவிதைகளை நன்றாக மொழிப் பெயற்பிங்க, திண்ணையில் படித்திருக்கிறேன். தாகூர் போன்றே ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் சொல்லுகிறார்கள், பக்தியின் தொடர்பில் இருப்பதால் அது வேறொரு பக்தியாளரின் டெபனேசனுக்கு முற்றிலும் எதிராக இருந்தாலும், இரண்டுமே சரி என்று நாம் மண்டையை ஆட்டிக் கேட்போம்.

//ஆனால் மனிதன் தான் அடைபட்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து விடுதலையாகி வெளியே நின்று தனியே கடவுளைக் காண முடியாது.


சி. ஜெயபாரதன், கனடா
//

முதலில் கடவுள் என்கிற டெபனேசனை 10 விழுக்காடாவது மனிதன் ஒழுங்காக 'வடிவமைக்கட்டும்' அதன் பிறகு கடவுளைக் காணமுடியுமா ? இல்லையா ? என்பதை ஆராய முடியும்.

கடவுளுக்கு 1000 கைகள் இருப்பதாக செய்தி பரப்பப் பட்டால் 999 கையோடு வரும் ஒருவரை கடவுள் இல்லை என ரிஜெக்ட் பண்ணிடுவாங்க :)


//Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்,

நியூட்டனின் முதல் நியதிப்படி "ஓர் அண்டம் நிலைத்து நிற்கும் அல்லது சீராக நகரும் அதை ஓர் உந்து சக்தி தள்ளாத வரையில்" //

Closed Loop, பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அதாவது நீர் - ஆவி - மேகம் - மீண்டும் நீர் இதில் உந்து சக்தி எது ? எது எதுவாக மாறுகிறது, எது முதலில் "தோன்றியது ?"

என்னைப் பொருத்த அளவில் இயற்கையில் / பேரியக்கத்தில் நடக்கும் அனைத்துமே Closed Loop சுழற்சிதான்,


//பிரபஞ்சத்தில் அனைத்து காலாக்ஸி ஒளிமந்தைகளும், விண்மீன்களும், அண்டக் கோள்கள் சீராகவும், விரைவாகவும் நகர்கின்றன. காரண-காரிய நியதிப்படி ஏதோ ஓர் உந்து சக்தி தள்ளாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நகர ஆரம்பிக்க வில்லை. //

உந்து சக்தி அல்லது விசை என்று சொல்லலாம். ஆற்றல் மாறாக் கோட்பாட்டின் படியே இயங்குகின்றன. அதை ஏதோ ஒரு உந்து சக்தி என்று ஏன் சொல்லனும் ? ஒட்டுமொத்தமாக முழுப் பிரபஞ்சங்களில் இருக்கும் விசை எப்போதும் இருப்பவையே. அது உண்டாக்கப்பட்டது, இறைச் சித்தத்தினால் தோன்றியது என்றால் அவை நிராகரிக்கக் கூடியதே.

//அந்த மகாசக்தியை "இயற்கை" என்று சொன்னானும் சரி "கடவுள்" என்று சொன்னாலும் சரி அது ஓர் மூலசக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது.

சி. ஜெயபாரதன்//


எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்க, எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை, இங்கே விவாதிப்பது மதம், மதத்தின் வழி சொல்லப்படும் /காட்டப்படும் இறைவன் பொய் மற்றும் கற்பனை என்பதே. நாத்திகர் எவரும் இயற்கையே பொய், இயக்கம் பொய் என்கிறாரா ? அதற்கு உருவகம் கொடுத்து இறைவனாக்கவில்லை. அதன் மூலம் வெட்டிக் கொண்டு சாகவுமில்லை



//Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,


கிறித்துவ மதம் உண்டாவதற்கு முன்னே இந்தியாவின் பௌத்த மதவாதிகள் புத்தமதத்தை ஆசியா வெங்கணும் பரப்பினார். அதற்குப் பிறகு சுமார் 300 ஆண்டுகள் கழித்து கிறித்துவமதம், அதற்குப் பிறகு 500 ஆண்டுகள் கழித்து இஸ்லாமிய மதம் பரவி % வீதம் அதிகரித்து அவற்றின் கிளைகள் உலகெங்கும் பரவியதை என்ன வென்று சொல்ல வருகிறீர்கள் ? /


மதம் பரவியது என்றால் நாத்திகரிடம் பரப்பினார்களா ? நேற்று ஒரு கடையில் உணவு அருந்துகிறீர்கள், இன்னிக்கு வேறொரு கடை வழியாக செல்லும் போது வாசனை மூக்கை துழைக்கிறது, நேற்று சாப்பிட்ட உணவின் சுவை எதுவும் நினைவு இல்லாமல், புதிய கடையில் நுழைந்துவிடுகிறீர்கள். இதில் பரவல் என்பதை எங்கே சொல்வது, இடமாற்றம், மனமாற்றம் அவ்வளவுதான்

//பிரிட்டீஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைய வில்லை என்றால், இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி நீங்களும் நானும் மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருப்போம்.

சி. ஜெயபாரதன்

Tuesday, April 07, 2009 8:37:00 PM//

சிரிப்பாகத்தான் வருகிறது ஐயா, பிரிட்டீஷ்காரனில் ஒருவரும் இஸ்லாமியர் இல்லை என்று நம்புகிறீர்களா ? மதம்பரவலுக்கு உலமெங்கும் ஒரே காரணம் தான் அது 'அரசியல்', 'இறை நம்பிக்கை' உடையவர் எவருமே மதம் மாறத் தேவை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ? நாத்திகர்களும் மதம் மாறுவது இல்லை :)

சீனர்களிலும் கூட இஸ்லாமியர்கள் உண்டு, அவர்கள் வாளாலோ, வில்லாலோ மாற்றப்படவில்லை.

தருமி said...

//தர்க்கத்தில் யாரைக் கொண்டு வரக்கூடாது என்று நிபந்தனை இடப் போகிறீர்களா ?//

அய்யோடா! உங்களுக்குப் போய் நிபந்தனையா? அதெல்லாம் இல்லை. நீங்கள்தான் //அவரது பெயர்கள் வராமல் மதம், கடவுள் பிரச்சனைகளைத் தர்க்கம் செய்ய இயலாது// என்று சொல்லி உங்கள் reference point அவர்கள்தான் என்று சொல்லிவிட்டீர்களே! நானும் அதைத்தான் obsession என்றேன். அதோடு, //அவரை வைத்துத்தான் நான் மற்றவரை அளப்பு செய்கிறேன்.// என்றும் சொல்லிவிட்டீர்கள். பிறகு என்ன, தொடருங்க...

எனக்கு அண்ணாதுரையின் மேல் பெரிய விருப்போ, வெறுப்போ கிடையாது. பெரியார் - நிச்சயம் சில நல்ல சமூக மாற்றங்களுக்கு அவர் ஒரு காரணம் என்ற ஆழமான எண்ணமுண்டு.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//நீங்களும், கோவி கண்ணனும் மதம் கடவுளைப் பற்றிய விஷயத்தில் இன்னும் எலிமெண்டரி பள்ளியில்தான் இருக்கிறீர்கள் ! //

சரி ..! எப்படியோ மழைக்காகவாவது பள்ளிக்கூடம் போன கேசுகள்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

//மெட்டா பிசிக்ஸ் நிலையில் விஞ்ஞானக் கல்லூரிப் படிப்புக்கு நீங்கள் இன்னும் வரவில்லை. நான் எழுதியவை மெட்டா பிசிக்ஸ் ! //

மெட்டா பிசிக்ஸ் அப்டின்னா எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஒப்புத்துக்கிறேன். நான் B.E. (Hons), P.Eng. [Nuclear] மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிக்கலைங்க. ஒண்ணரை டிகிரி நான் .. கோவியும் அதுமாதிரிதான் ஏதாவது சிறுசா வச்சிருப்பார்னு நினைக்கிறேன். ஆமாங்க திருவள்ளுவர் சரியாத்தான் 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்'னு சொல்லியிருப்பார். அவருக்குத் தெரியாதா, என்ன?

எனக்கு நிச்சயமா நீங்க சொன்ன பல விஷயங்கள் எட்டாதவைதான். ஆனாலும், கடைசியா, முத்தாய்ப்பா, //காரண-காரிய நியதிப்படி ஏதோ (உங்களுக்கே என்னன்னு தெரியலை..?!) ஓர் உந்து சக்தி தள்ளாமல் பிரபஞ்சத்தில் எதுவும் நகர ஆரம்பிக்க வில்லை.

அந்த மகாசக்தியை "இயற்கை" என்று சொன்னானும் சரி "கடவுள்" என்று சொன்னாலும் சரி அது ஓர் மூலசக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது.// என்று சொல்லியுள்ளீர்களே அந்த முடிவுரை மீதுதான் என் கேள்வியை வைத்தேன்.

//சரி, ஏதோ ஒரு உந்து சக்தி இருக்கிறது. ஆனால் அதை ஏன் ஒரு ஆணாக / கோபம் நிறைந்த / வெட்கப்படும், / ரோஷப்படும் / ...இன்னும் என்னென்னவோ வேலைகள் எல்லாமே கற்பிக்கப்படுகின்றவே அந்த சக்திக்கு .. ஏனிப்படி?// என்று கேட்டிருந்தேன்.(இதனாலேயே, கடவுள் மனிதனின் படைப்பு என்கிறேன்.)

அது ஏன் என்று மீண்டும் என் கேள்வியை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன், நண்பரே!

தருமி said...

//பிரிட்டீஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைய வில்லை என்றால், இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி நீங்களும் நானும் மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருப்போம்.//

இருந்தா இருந்திட்டுப் போறோம். நீங்க தான் மத சகிப்பாளியாச்சே .. பிறகு என்ன இப்படி சொல்றீங்க?

தருமி said...

jayabarathan,

ஐன்ஸ்டீனைப் பற்றி நிறைய கூறிவிட்டீர்கள். அவர் ஒரு மத நம்பிக்கையாளர்தான் என்ற உங்கள் நம்பிக்கையைக் கூறிவிட்டீர்கள். அவரைப் பற்றி இப்புத்தகத்தில் இருக்கும் சில பகுதிகளையும், இன்னொரு மேற்கோளை மட்டும் உங்கள் பார்வைக்கு:(எல்லோருமே physics-ஓடு தொடர்புள்ளவர்கள்; அதனால் என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா புரியும்):

Carl Sagan put it well: ".....if by "God" one means the set of physical laws that govern the universe, then clearly there is such a God. This God is emotionally unsatisfying ..... it does not make much sense to pray to the law of gravity". (pp41)

Einstein was using "God" in a purely metaphorical, poetic sense. So is Stephen Hawking, and so are most of those physicists who occasionally slip into the language of religious metaphor.

Let me sum up Eisteinian religion in one more quotation from Eisnstein himself: "To sense that behind anything that can be experienced there is something that our mind cannot grasp and whose beauty and sublimity reaches us only indirectly and as a feeble reflection, this is religiousness. In this sense I am religious." (pp40)

வால்பையன் said...

//பெரியாரும் அம்பேத்காரும் செய்து கொண்ட முரண்பாட்டுத் திருமணத்தை எப்போது பகுத்தறிவாளர் "தவறு" என்று ஒப்புக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் மெய்யான அறிவாளிகள்.//

உலகிலுள்ள நாத்திகர்கள் எல்லாம் பெரியாரை தான் பின்பற்றுகிறார்கள் என்பது போல் உள்ளது உங்கள் பேச்சு!

பெரியாரின் சீடரான தமிழ் ஓவியாவின் பதிவில் நான் செய்த வாதத்தை இங்கே வைக்கிறேன்.
கடவுள் மறுப்பாளன் யாரையும் பின்பற்றுவதையும் தவறென்று தான் சொல்லுவான்

தமிழ் ஓவியாவின் பதிவு!

Salahuddin said...

//பிரிட்டீஷ்காரன் இந்தியாவுக்குள் நுழைய வில்லை என்றால், இந்துமத இந்தியா இஸ்லாமிய கஜினிஸ்தானாக மாறி நீங்களும் நானும் மொட்டை அடித்துத் தொப்பியுடன் முஸ்லீமாக இருப்போம்.//

திரு. ஜெயபாரதன் தவறாக புரிந்து வைத்திருக்கிறார். சுமார் அரை நூற்றாண்டுகாலமாக மொகலாயர்கள் இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆண்டிருக்கிறார்கள். ஆனால், அன்றும் இன்றும் முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மையினர்தான். மொகலாயர்கள் இஸ்லாமை பரப்புவதற்காக இந்தியாவிற்கு வரவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்திலும் இஸ்லாமை பரப்புவது அவர்கள் நோக்கமாக இருந்ததில்லை. இந்தியாவை ஆண்ட மற்ற மன்னர்களைப் போல இவர்களின் நோக்கமும் நாடு பிடிப்பதாகவே இருந்தது. மற்ற மன்னர்களுக்கும் இவர்களுக்கும் இருந்த ஒரே வித்தியாசம் இவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பது மட்டும்தான். ஆனால் அவர்களின் ஆட்சி முஸ்லிம்களின் ஆட்சியாக இருந்ததேயொழிய இஸ்லாமிய ஆட்சியாக இருந்ததில்லை.

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்,

///நியூட்டனின் முதல் நியதிப்படி "ஓர் அண்டம் நிலைத்து நிற்கும் அல்லது சீராக நகரும் அதை ஓர் உந்து சக்தி தள்ளாத வரையில்" //

/// Closed Loop, பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அதாவது நீர் - ஆவி - மேகம் - மீண்டும் நீர் இதில் உந்து சக்தி எது ? எது எதுவாக மாறுகிறது, எது முதலில் "தோன்றியது ?"

(காரணம் வெப்பசக்தி)

+++++++++++++++

/// என்னைப் பொருத்த அளவில் இயற்கையில் / பேரியக்கத்தில் நடக்கும் அனைத்துமே Closed Loop சுழற்சிதான், \\\

பிரபஞ்ச இயக்கங்கள் எல்லாம் சுற்றியக்கம் (Cyclic Process) என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சுற்றியக்கமில்லாத ஒருபோக்கு இயக்கம் (Uni-directional Process), (Open-ended Process) நிறுத்தம் அடையும் இயக்கம் (Culminating Process), மீளா இயக்கம் (Irreversible Process) போன்ற பல்வேறு இயக்கங்களும் உள்ளன.

ஓர் உதாரணம்.

"எண்டிராப்பி" (Entropy) என்னும் "வெப்பத் தளர்ச்சி" (பிரபஞ்ச வெப்ப இழப்பு) ஒருபோக்கு இயக்கம். அது மீளா இயக்கமும் ஆகும்.


சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே கோவி. கண்ணன்,

///ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதும் தத்துவம் தான். படைப்பு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? ஒரு இயக்கம் அது சிறிய இயக்கமாக இருந்தாலும் சரி பேரியக்கமாக இருந்தாலும் சரி, அதில் நடப்பது (நுட்பமான மாற்றம்) நம் ஆறாவது அறிவுக்கு இன்னும் அது பற்றிய அறிதல் எட்டவில்லை///

சரியாகச் சொல்லிவிட்டீர்கள். ஏ-1 பதில்.
++++++++++++++

/// குழந்தை பெருவது கூட ஒருகாலத்தில் இறைச் செயலாகத்தான் கருதப்பட்டது, சீரான உடல் நிலையில் இருக்கும் ஆண் பெண் குழந்தைப் பெற்றுக் கொள்வது இறைச் செயலா ? அல்லது உடலில் இருக்கும் சில குறைபாடுகளால் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலை, ஆனால் அதே போன்று குறைகளை இக்காலத்தில் அறிவியல் மூலமாக சரி செய்து டெஸ்ட் ட்யூப் பேபி செய்து கொடுக்கிறார்களே ? ///

1. சிசு தாய் வயிற்றில் எப்படி உண்டாகிறது ? எப்படி வளர்கிறது ?

தாயின் கர்ப்பப் பையில் தாயின் கட்டுப்பாடின்றித் தானாக நிகழ்கிறது. தாயின் ஆத்மா அல்லது உயிர் சிசுவை உண்டாக்குகிறது, ஊட்டுகிறது. 10 மாத டைமர் இயங்கிப் பிள்ளையாகப் பிறக்கிறது. தாயின் ஆத்மா (உயிர்) இல்லாவிட்டால் சிசு உண்டாகாது. செத்தவள் வயிற்றில் ஏன் சிசு உண்டாவதில்லை ?

உயிர் என்றால் என்ன ? ஆத்மா என்றால் என்ன ? சொல்லுங்கள் !! உயிரை யார் அளிக்கிறார் ? டாக்டரா ? உயிர் எங்கே போகிறது ? உயிர் எப்படிச் சிசுக்குள் நுழைகிறது ?

2. டெஸ்ட் டியுப் பேபி எப்படி உண்டாகிறது ? டெஸ்டு டியூப் பேபி டாக்டரின் பையிலோ, கையிலோ, ஆய்வகத்திலோ உண்டாக வில்லை.

அதற்கு முதலில்

1. தாயின் கருப்பை தேவை

2. தாயின் ஆத்மா அல்லது உயிர் தேவை

அன்னையின் கட்டுப்பாடில் நிச்சயம் டெஸ்ட் டியூப் சிசு உண்டாவில்லை ! M.D. படித்த டாக்டர் டெஸ்ட் டியூபில் சிசுவை உண்டாக்க வில்லை.


சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

Einstein was using "God" in a purely metaphorical, poetic sense. So is Stephen Hawking, and so are most of those physicists who occasionally slip into the language of religious metaphor.

Let me sum up Eisteinian religion in one more quotation from Eisnstein himself: "To sense that behind anything that can be experienced there is something that our mind cannot grasp and whose beauty and sublimity reaches us only indirectly and as a feeble reflection, this is religiousness. In this sense I am religious." (pp40)

மிகச் சிறந்த பதில் நண்பரே

சி.ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் கோவி கண்ணன்

/// கடவுளுக்கு 1000 கைகள் இருப்பதாக செய்தி பரப்பப் பட்டால் 999 கையோடு வரும் ஒருவரை கடவுள் இல்லை என ரிஜெக்ட் பண்ணிடுவாங்க :) ///

விஞ்ஞானிகள் இப்படிக் கேட்கமாட்டார்

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

Definition of God.

All the things a Man could see are REAL. Real things can come only from a real source. As per the Cause & Effect Theory all the real creations could only be created by a Real Cosmic Designer.

S. Jayabarathan

மங்கை said...

தருமி சார்...எதுக்கு வம்புன்னு நம்ம விஷ்யத்தை மட்டும் பேசீட்டு போயிடலாம்னு முடிவு...

//ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை.///

இதுல ஃபிட் ஆகறனோ?..:-))

//அவர்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தவில்லை. பதிலாக, "மதச் சுதந்திரம்" என்பதே வழக்கின் அடிப்படையாக எடுக்கப் பட்டது; வழக்கும் வெற்றி கண்டது.//

இது இன்னைக்கும் தொடர்ந்து நடந்துட்டு தான் இருக்கு.. மதத்தின் பேர்ல பல தடுப்பு நடவடிக்கைகளை முடக்கிட்டு இருக்காங்க...it is a real challenge for programme implementers..

இப்போ சமீபத்துல போப் ஆண்டவர் ஆணுறை பத்தி பேசப்போய் அவரையே பதம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க

Jayabarathan said...

நண்பர் கோவி கண்ணன்

/// கடவுளுக்கு 1000 கைகள் இருப்பதாக செய்தி பரப்பப் பட்டால் 999 கையோடு வரும் ஒருவரை கடவுள் இல்லை என ரிஜெக்ட் பண்ணிடுவாங்க :) ///

இது குதர்க்கம் !!! தர்க்கமில்லை !!!

சி. ஜெயபாரதன்

வஜ்ரா said...

Just for a small clarification.

Unlike Hindu religions Christianity, particularly, in India is very aggressive in converting and enroll people who visit church (the catholic variety) and have a record of those baptized by them.

The atheist movement in brittan has created a flutter by requesting its members to get De-baptized from the church.
Brittons seek de-baptization

Could you try and convince yourself or your family members or members of fellow bloggers with whom you meet at bloggers meet to De-baptize themselves ?

«Oldest ‹Older   1 – 200 of 311   Newer› Newest»

Post a Comment