Monday, June 08, 2009

316. இளைய தளபதி அரசியலுக்கு வர்ராராமே ... வரட்டும் ..

*
Roger Federer முந்தா நாள் ராத்திரி பார்த்தேன். யாரோ Mathiue அப்டின்னு ஒருத்தரோடு ஆடி முதல் செட் போச்சு; ஆனா ரெண்டாவது செட்டில் நல்லா அடிச்சி ஜெயிக்கிறது மாதிரி வந்ததும் நான் படுக்கப் போய்ட்டேன். தல ஆட்டம் முன்னால் போல இல்ல. கடைசிவரை தேறுவாரா? மாட்டார்னு நினைக்கிறேன். ஜோகோவிச் போயாச்சி ... இவரு எப்படியோ?

=========================================

எப்படியோ, Roger Federer அதுக்குப் பிறகு ஜெயிச்சிட்டார். ஆனா கடைசி வரை வருவாரான்னு நினச்சிக்கிட்டு உக்கார்ந்து பார்த்தா, நாடலும் ரொம்ப தடுமாறுகிறார். முதல் செட் அவுட். ரெண்டாவதில தேறி இருக்கார். ஆனாலும் முதல் இரு செட்டுலயும் lead-footed Nadal! பார்ப்போம்.

=========================================

நம்ம சினிமா சண்டைக்காட்சி எடுக்கிற ஆளுகளுக்கு மட்டும் ஒரே ஒரு வார்த்தை. அந்த matrix, crouching tiger மாதிரி படங்கள் வந்தாலும் வந்தாச்சு, நம்ம தமிழ்ப் படங்களில் நம்ம தலைகள் ஒரு அடி அடிச்சா எதிர்த்தரப்பு மக்கள் எல்லோரும் எப்படியும் காத்தில பறந்து போய் ஒரு முப்பது நாப்பது அடி தள்ளி்ப் போய் விழுகுறாங்க. என்ன ஸ்பீடு'ப்பா!

இந்த கயிறு கட்டி இழுக்குறதை நிப்பாட்டி நிஜமா சண்டைக் காட்சி மாதிரி எடுக்கப் படாதா?
ப்ளீஸ் ...!

==========================================


நம்ம இளைய தளபதி அரசியலுக்கு வர்ராராம்ல. இந்த மாதம் அவரது பிறந்த நாளில் புதுக் கட்சி ஆரம்பிக்குதாம். அப்டின்னா, அநேகமாக, 2011-ல் அவருதான் பிரதமரு .. அடச்சீ .. முதல்வரு்.

நல்லாத்தான் இருக்கும்.

இப்ப பாருங்க நெப்போலியன் மந்திரிப் பதவில இருக்கிறவரை நடிக்க மாட்டேன்னுட்டார். அதெல்லாம் ஒரு நெஞ்சழுத்தம்தான். அதுமாதிரி நம்ம ஈனா தானாவும் வந்திருவாரோன்னு சிலருக்குப் பயம். அந்தப் பயத்தில அவரு அரசியலுக்கு வரக்கூடாது என்றாங்க. ஆனா, பாருங்களேன் .. தலைவர் கட்சி ஆரம்பிக்கிறார்; பதவியைப் பிடிக்கிறார்; அதுக்குப் பிறகு பாருங்களேன். தமிழ்நாடு பூராவும் ஒரே 'கில்லி' ஆட்டம்தான். இவருக்கு ஏதாவது புதுப்பட்டம் கொடுக்கணும்; 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' இல்லை. வேற என்ன கொடுக்கலாம். யோசிக்கணும். அந்த வேலையும் நிறைய இருக்கு.

அதோட நம்ம ஈனா தானாவை நம்பி இருக்கேன் இன்னொரு விஷயத்துக்கும். இவர் வர்ர வேகத்தைப் பார்த்தா அப்படியே நம்ம தனுஷ், சிம்பு, விஷால், பரத் .. இன்னும் பலர் .. இப்படி பலரையும் தன் கட்சிக்கு வரவழைச்சிக்குவார். அப்படியே இல்லைன்னா கூட இவங்க எல்லாரும் தனிக் கட்சி ஆரம்பிச்சிருவாங்க. நான் நினைக்கிறேன், தனுஷ், சிம்பு ரெண்டுபேரும் தனித் தனிக் கட்சிதான். அதான் நல்லா இருக்கும். எப்படியோ நாடு நல்லா இருக்கப் போகுது.

எப்படா இவங்க எல்லாரும் தனிக் கட்சிகள் ஆரம்பிப்பாங்க; நாடு முன்னேறும்னு ஒரு துடிப்போடு இருக்கேன்.

பொறாமைப் படாதவங்க எல்லாரும் ஒரே அணியில் இருப்போம்; வாருங்கள்.

===========================================

நாடல் பாவம் ... ஐந்தாம் முறை தொடர் வெற்றிக்கான வாய்ப்பு போச்சு. ரெண்டு பேருடைய பேட்டி சண்டை நல்லாத்தான் இருந்திச்சி ...

============================================

இப்போ மயிலில் வந்த ஜோக்:
What is confidence????

A hypothetical situation where 20 CEOs board an airplane and are told that
the flight that they are about to take is the first-ever to feature
pilotless technology: It is an uncrewed aircraft. Each one of the CEOs is
then told, privately, that their company's software is running the
aircraft's automatic pilot system. Nineteen of the CEOs promptly leave the
aircraft, each offering a different type of excuse.

One CEO alone remains on board the jet, seeming very calm indeed. Asked why
he is so confident in this first uncrewed flight,

he replies :

"If it is the same software that is developed by my company's IT systems department, this plane won't even take off." !!!!

That is called Confidence!!!


=========================================
8.6.09

பெடரர் ஜெயிச்சாச்சு. எல்லா ஸ்லாம்களிலும் வெற்றி. சாம்ப்ராஸின் 14 வெற்றிக் கோப்பைகளுக்கு ஈடு கொடுத்தாச்சி. இன்னைக்கு அழுகை ரொம்பவே. நிறைய பாய்ண்டுகள் drop shots-ல கிடைச்சிது.
எதிர்ப் போட்டியாளர் சோடர்லிங் -போட்டி ஓரளவு நல்லா இருந்தாலும் - நல்ல பேட்டி கொடுத்தார்;

==========================================

லியாண்டர் ப்யாஸ் மறுபடி ஒரு ஸ்லாம் வெற்றி. முதல் செட்டில் கண்ணில் நல்ல அடி. அந்த செட் போக, அடுத்த இரண்டிலும் வெற்றி. முதலில் ஓடி பழைய பார்ட்னர் நவரத்திலோவாவிற்குப் பார்த்தது நல்லா இருந்திச்சி. ஆனாலும் ப்யாஸ் தன் பார்ட்னரைத் தூக்க முயற்சித்தது எதுக்கு? :)

==============================================

டென்னிஸ் முடிஞ்ச பிறகு "நீயா நானா?" பார்த்தேன். வயசான பெற்றோர், இளம் பிள்ளைகள் இவர்களுக்குக்கேயான ஒரு உரையாடல்.

ஏன் வயசானவங்க (?) எல்லாரும் இப்படி 'அழுது வடியிறாங்க'? ஒருவேளை வயசாயிரிச்சின்னா அப்படித்தானிருக்குமோ? தெரியலை!

இதுக்குத்தான் ஒழுங்கா நான் முன்பே சொன்னது மாதிரி 192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY*** இருக்க வேண்டியதுதானே!

===================================================



*

29 comments:

Muthu said...

தலைவரே நடால் காலி. ஆனால் அண்ணன் பெடரர் நடாலை வென்று பெறாத இந்த கோப்பை வேணாண்கறாராமே?

உண்மைத்தமிழன் said...

வீட்ல ரொம்ப ப்ரீயா இருக்கீங்கன்னு நல்லாத் தெரியுது..

அதுக்காக இப்படியா..?

ஏதோ ஷரபோவா, சானியா மிர்சான்னா பார்த்தாலாவது கண்ணுக்கு இதமா இருக்கும்..

இதைத்தான் போய் பார்க்கணுமா..?

முருகா..! இந்தப் பெரிசுக்கு நல்ல புத்தியைக் கொடு..!

தருமி said...

முத்து,
போன வருஷம் நினச்சது நடந்தது. இந்த வருஷம் நடால் போனது ரொம்ப்வே வருத்தமா இருந்துச்சி. அதுவும் ஜெயிச்ச அந்த ரெண்டாவது ஆட்டத்திலேயே தலைவர் அங்க இங்கன்னு ஓடலை. ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சி. ஆனாலு ஒரு ரிக்கார்டு போச்சு.

இது பெடரருக்கு நல்லதா கெட்டதா?

தருமி said...

//ஏதோ ஷரபோவா, சானியா மிர்சான்னா பார்த்தாலாவது கண்ணுக்கு இதமா இருக்கும்..//

ஐவனாவிச் தோத்தது எம்புட்டு கஷ்டமா போச்சுன்னு என்னத்த சொல்றது. எல்லாம் நம்ம முருகன் படுத்துற பாடுதான்.

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

ஈனா தானாவ ஈனா வானாவா ஆக்காம விடமாட்டீங்க போல.

தருமி said...

ஏதோ நாம் அப்படி ஆகாம இருந்தா சரி.

nila said...

நாட்ட குட்டிச் சுவரு ஆகுறதுக்கு இருக்குறவங்க போதாதுன்னு இவரு வேறே வராராமா??? எதுக்கு இந்த வேண்டாத வேலை

தருமி said...

நிலா,

என்னங்க இது ஒரு நல்ல விஷயம் நடக்க விடமாட்டேங்கிறீங்களே!

KARTHIK said...

எது எப்படியோ
பைனலுக்கு போகப்போரது நடாலும் ரோஜரும் தான்.
ஜெயிக்கப்போரது தல ரோஜர்தான் :-))

Narayanaswamy G said...

இந்த வில்லு படத்துல ஒரு வசனம்....

அல்லக்கை லேடி 1 : இவரு சூப்பர்மேனா இல்லை ஸ்பைடர்மேனா.....

அல்லக்கை லேடி 2 : இல்லைடி.....போக்கிரிமேன்!!

தருமியாரே...இந்த போக்கிரிமேன் பட்டம் செட் ஆகுமா பாருங்க....

தருமி said...

நடால்தான் வீட்டுக்கு "குளிக்க" போய்ட்டாரே.........

Narayanaswamy G said...

சிம்பு முதல்வரானால் என்ன நடக்கும்??

தருமி said...

//சிம்பு முதல்வரானால் என்ன நடக்கும்??//

என்னவாகும்? ம்ம்..ம்.. எல்லா துறைக்கும் அவர் மட்டுமே அமைச்சர். ஆக மந்திரி சபை கூட்டம்னா அவர் மட்டும் உக்காந்து தனியா பேசிக்கிட்டே இருப்பார் - அப்பப்ப கை விரல்கள் மட்டும் சுத்திக்கிட்டு இருப்பார்....... நல்லா இருக்குல்ல ...

Narayanaswamy G said...

அப்போ நம்ம தாடியார்???
சிம்புவின் தமக்கை, தமையன்?

தருமி said...

//அப்போ நம்ம தாடியார்???
சிம்புவின் தமக்கை, தமையன்?//

ஒண்ணும் புரியலையே'யப்பா!

இப்பவே கண்ணக் கட்டுதே ....!

Narayanaswamy G said...

http://www.rolandgarros.com/en_FR/news/photos/2009-05-29/200905291243592306555.html

இத பாருங்க.....இதுல ஏதோ ஒரு இந்திய அழகு ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி தெரியலை?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஓட்டுப் போட நாலு இனா வானாக்கள் இருக்கிற வரை யார் வேணாலும் கட்சி தொடங்கலாம்.வாழ்க ஜனநாயகம்.

nila said...

//நிலா,

என்னங்க இது ஒரு நல்ல விஷயம் நடக்க விடமாட்டேங்கிறீங்களே!//


எதுங்க நல்ல விஷயம்..... முதல்ல அவர தன வேலைய ஒழுங்கா செய்ய சொல்லுங்க... நாலு ஹிட் படம் சேர்ந்தார் போல முதல்ல குடுக்கட்டும்.. அப்புறம் அரசியலுக்கு வரட்டும்... ஏற்கனவே சுரண்டி சுரண்டி ஒன்னும் இல்லாம போய் கிடக்கு... இதுல மக்களை அடி முட்டாள்கள் ஆகுறதுக்கு கங்கணம் கட்டிக்கிட்டு ஆளாளுக்கு வந்துடுறாங்க ....

தருமி said...

நிலா,

//..நாலு ஹிட் படம் சேர்ந்தார் போல முதல்ல குடுக்கட்டும்...//

அது வேண்டாம்னுதானே இம்புட்டும் ..!

கார்த்திகைப் பாண்டியன் said...

நடால் தோத்தது ஒரே பீலிங்க்ஸ்.. நீங்க இந்த நேரத்துல ஈனா தானா முதல்வரானால்னு பதிவு போட்டு மனுஷன ஏன் பயமுறுத்துறீங்க ஐயா?

வால்பையன் said...

//இந்த கயிறு கட்டி இழுக்குறதை நிப்பாட்டி நிஜமா சண்டைக் காட்சி மாதிரி எடுக்கப் படாதா?//

நிஜமாவெல்லாம் சண்டை கிடையாது!

ஒரே சொறுவு அம்புட்டு தான் மேட்டர்!
பரவாயில்லையா?

ப்ரியமுடன் வசந்த் said...

ஐய்யா வணக்கம்ம்

தலைவர கிண்டல் பண்ணுறதுல எவ்வளவு சந்தோஷம்......

தருமி said...

பிரியமுடன் .. வசந்த்,

//தலைவர கிண்டல் பண்ணுறதுல எவ்வளவு சந்தோஷம்......//

தலைவரா?
கிண்டலா?
என்னங்க இது? இப்படி சொல்லீட்டீங்க. அவரு 'மேலே...' வரணும் அப்டின்ற நல்ல மனசோடு சொல்றதில்லைங்களா இது?

:)

கோவி.கண்ணன் said...

//இப்ப பாருங்க நெப்போலியன் மந்திரிப் பதவில இருக்கிறவரை நடிக்க மாட்டேன்னுட்டார். அதெல்லாம் ஒரு நெஞ்சழுத்தம்தான். //

இல்லாவிட்டாலும் யாரும் கூப்பிடுவதில்லை. :)

Narayanaswamy G said...

//அவரு 'மேலே...' வரணும் அப்டின்ற நல்ல மனசோடு சொல்றதில்லைங்களா இது?//

அவரு இத்தோட "மேலே" போகட்டும்......

தருமி said...

கோவி,
//
இல்லாவிட்டாலும் யாரும் கூப்பிடுவதில்லை. :)//

இன்னும் குறையலை ...

வோட்டாண்டி said...

avar naalu padam hit kudutha irukkura konja nanja tamil cinemavum alinjidum..

visayakaanth cinemavula nadikiradha niruthuvarundra nambikaila dhaan avara m.l.a.va aakunom..

dalabadhi P.M aana nadikiradha niruthiduvennu sonna naan dhaan avarukku modhala vote poduven..

aandava 2011ku inum rendu varsham dhaan baaki irukku

கட்டபொம்மன் said...

//எப்படா இவங்க எல்லாரும் தனிக் கட்சிகள் ஆரம்பிப்பாங்க; நாடு முன்னேறும்னு ஒரு துடிப்போடு இருக்கேன்.//

வெளங்கும் தமிழ்நாடு

கட்டபொம்மன்
kattapomman.blogspot.com

S. Ramachandran said...

நன்றி.தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

Post a Comment